நாங்களும் படைத்தோம் வரலாறு

என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியும். தலித் சமூகத்தைச் சேர்ந்தவள் நான். என் அம்மாவுக்கு எழுதப்படிக்கத் தெரியாது. கொங்கண் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமம்தான் என் பூர்வீகம். என் அப்பா ஆறாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். என் கிராமத்திலிருந்தவர்களோ அவர் பெரிய படிப்பு படித்திருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் ஆறாம் வகுப்பு படித்திருந்தாலே போதும், வேலை கிடைத்துவிடும். எனவே அவர் ஓர் ஆசிரியராக இருந்தார். அத்துடன் எங்கள் இனத்தில் நடைபெறும் திருமணங்களை முறைப்படி நடத்தி வைப்பார்.

ஊர்மிளா பவாரின் இரண்டு சிறுகதைகள்

அப்பா அந்த நாளைய ஸ்கூல் மாஸ்டரானதால் ‘அடி’ மாஸ்டராகவே திகழ்ந்தார். ஏதோ அடிப்பார் என்றில்லை. அடிக்க ஆரம்பித்தார் என்றால் தன்னையே மறந்துவிடுவார். எங்கள் ‘வாடி’யில் அவர் ஒருவர்தான் படித்தவர். எவ்வளவு படித்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள்? ஏழாம் கிளாஸ் வரை.