நான் விரும்புவது

மழையும், வெயிலும், அவற்றின் பற்றாமையும்
ஓர் அத்திப்பழத்திலோ அல்லது ஆப்பிளிலோ
உறைவது போல்
என் வாழ்க்கை என்னுள் வசிக்கவேண்டுமென
நான் விரும்புகிறேன்

டிஸம்பர் ’72ல் ஓர் அந்திப்பொழுது

இரண்டு போலீஸ்காரர்கள் தம் இடுப்பிலிருந்த துப்பாக்கிகளை வெளியே எடுத்து காளைகளின் அருகே மெதுவாகச் சென்றனர். பாதுகாப்பான தூரத்தில் தெருவில் முட்டியிட்டுக் குனிந்து உட்கார்ந்தனர். பொதுமக்கள் மூச்சைப் பிடித்துக்கொண்டு காத்திருந்தனர். கூட்டத்தில் யாரோ கத்தினார்கள்: ஏய், அது மஹாதேவக் கடவுளின் காளை – அவற்றைக் கொல்வதில் என்ன பலன்? இன்னொருவன் பதில் சொன்னான்: ஆனால் அவை கம்யூனிஸ்ட் காளைகள் – அவற்றைக் கொல்வது பாவமில்லை!

ஆத்மஜன்

சிற்றுண்டி நேரத்தில் நான் கேரம் ஆடிக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் ஆபீஸ் நேரத்துக்குப்பின் பொழுதுபோக்கு அறைக்குள் நுழைவது சாத்தியமில்லாமல் போயிருந்தது. சற்றே தாமதமாய் வீடு சென்றாலும் சுப்தி நச்சரிப்பாள்- நான் இந்த வீட்டில் ஒரு கைதி போலிருக்கிறேன், நீங்கள் கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்…

காதலும் அந்த பைத்தியக்காரனும்

அந்தப் பெண் மல்லி சித்தப்பாவிடம் அவர் அனைத்துப் பறவைகளையும் விடுவித்தால்தான் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் எனச் சொல்லியிருந்தாள். அவரிடம் நான்கு காதற்கிளிகள் மட்டுமே எஞ்சி இருந்தன. மூன்று மஞ்சள் ஒரு நீலம். ஆனால் இதைப் படத்திலிருந்து உங்களால் சொல்ல முடியாது. அவை எல்லாம் கருப்பு வெள்ளை.

குருவி

எல்லாம் கச்சிதமாய் நேர்த்தியாய் இருக்கவேண்டும் சதாசிவனுக்கு. வீடு பளபளவென்று மின்னவேண்டும், தேடினாலும் சின்ன தூசிக்கூட தென்படக்கூடாது. பொருட்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருந்தால் அவை அந்தந்த இடத்தில் இருக்கும் என்பது அவனுடைய சட்டம். தொலைப்பேசி இடதுகையால் எட்டும் இடத்திலேயே இருக்கவேண்டும். அதிலிருந்து ஓரடி இடம் விட்டு சின்ன அலமாரி. இடதுகோடி மூலையில் சின்னதாய் பேனாக்களுக்கான ஸ்டாண்டு. அது ஒரு இஞ்ச் கூட நகர்ந்திருக்கக்கூடாது. அப்புறம் திவான், சோபா. டீப்பாய், பேப்பர் எல்லாம் அளவு எடுத்து கோடுபோட்டு வைத்தது போல அதனதன் இடத்தில் இருக்கவேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை…

பால்வழி குற்றத் தடுப்பு

பேராசிரியர் மங்கை நடராஜன் நியுயார்க் மாநிலத்தின் சிடி யுனிவர்ஸிடி பல்கலை அமைப்பில் ஒரு அங்கமான, புகழ் பெற்ற, ஜான் ஜேய் காலேஜ் ஆஃப் க்ரிமினல் ஜஸ்டிஸ் என்ற கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்புக்கு இயக்குநராக இருக்கிறார். இந்தக் கட்டுரை, ஐக்கிய நாட்டுச் சபையின் 12ஆவது பேரவையில் குற்றத் தடுப்பும், குற்றத்துக்கு நீதியும் ஆகிய கருதுபொருளில் நடந்த கருத்தரங்கில் ஆற்றிய ஒரு உரையின் அண்மையான தழுவலாக எழுதப்பட்டது.