இது வேற லெவல்…!

சமீபகாலங்களில் எனக்கொரு சந்தேகம். உங்களுக்கும் இருக்கலாம். தமிழில் வார்த்தைகளுக்கு அத்தனை பஞ்சம் ஏற்பட்டுவிட்டதா என்பதே அது. சந்தேகம் சும்மா வரவில்லை. பல நாட்களாக, பல பேரிடம் பேசும் பொழுது சட்சட்டென்று இந்த எண்ணம் வந்து போகும். எதனால் என்று கேளுங்கள்… ஒரு நண்பரிடம் அவர் சென்று வந்த பயணம் “இது வேற லெவல்…!”

மூன்று நாய்கள்

இப்படியாகத்தான் அந்தத் தெருவை நாய்கள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. அவற்றின் ஆளுகைக்கு கீழ் தெருவின் ஒழுங்கு கொண்டுவரப்பட்டது. சீரில்லாமல் இருந்த நிர்வாகத்தைச் சரிசெய்ய முற்பட்டு, பல்வேறு முன்னேற்றச் சரத்துகளைத் தயாரித்து வைத்திருந்ததை இப்பொழுது வசதியாக மறந்தன. நேரக்கட்டுப்பாடு விதித்தன, இரவு நாய்களுக்கும், காலை மனிதனுக்கும் என பிரிக்கப்பட்டது.