வெறும் மேலதிக கொண்டாட்டங்களுக்கான இசையை கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு. சங்கீதம் வாயிலை திறந்து வைத்துக்கொண்டு அரவைணைக்க தயாராக இருக்கும் தருணத்தில் விலகிவிட்டிருக்கிறேன். நமது நம்பிக்கையில் சில தத்தளிப்புகளை உருவாக்குகிறது. பழகிய சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கிறது. கற்பனையின் எல்லை என்று நீ வகுத்தது அடிப்படை தவறு . மேலும் விஸ்தரி என்ற அறைகூவல்.
Tag: இசை
கல்கோனாக்கள் கரைவதில்லை
‘தூங்கு..தூங்கு..பாலா நீ..’ என்ற எருமைக்குரல் காதில் நுழைந்து மூளையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தேன் நிலக்கோட்டைக்கும் மதுரைக்கும் நடுவே. சரியாக காதுக்கு நேரே ஒலிபெருக்கிக்குழாய். என் தூக்கத்தைக் கெடுத்த அந்தப் பாடகன்(பாதகன்?) யார் என்று பார்ப்பதற்குள் பேருந்து ஊரைக்கடந்து விட்டது. சர்ச்சில் ஒரு விழா. சர்ச்சை வைத்துத்தான் “கல்கோனாக்கள் கரைவதில்லை”
“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”
ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””
‘காற்றோவியம்’ – இசைக் கட்டுரைகள் தொகுப்புக் குறித்து
கிரியின் இந்தத் தொகுப்பு மேற்கத்திய செவ்வியல் இசைக்கு தமிழில் நல்ல அறிமுகமாக இருக்கிறது. நான் குறிப்பிட்ட முன்னறிமுகமும் , சிறு பயிற்சியும் மேற்கத்திய செவ்வியல் இசை கேட்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இந்தத் தொகுப்பில் கண்டிப்பாகக் கிடைக்கும். ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் அவர் கொடுத்திருந்த சுட்டிகள் அவர் பேசும் பொருளை உடனடியாகக் கேட்டு ரசிக்க மிகவும் உதவியாக இருந்தன…
மூதாதையின் கவிதை
நம்மிடையே உள்ள இரண்டாயிரம் வருடங்களின் புகழ் பெற்ற கவிதைகள் இசைவடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக ஆறு சங்கப்பாடல்கள் இசைவடிவம் பெற்று ’சந்தம்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பது இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. இப்பாடலகளுக்கு இசையமைத்தவர் திருவாரூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இசையமைப்பாளர். ராஜன் சோமசுந்தரம். மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரியின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாகாணத்தில் உள்ள டர்ஹாம் சிம்பொனியின் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் குழு இத்தொகுப்புக்கு பின்ணனி இசை அளித்துள்ளது.
தொல்வெளியிலிருந்து தொடரும் இசை- பாகம் 3
“எங்க குடும்பமே இசைக் குடும்பம் தான். நாங்க எல்லோரும் ‘ப்ராடிஜீஸ்’. ஆனா இவ்வளவு தூரம் முன்னுக்குக் கொண்டு வரதுக்கு எவ்வளவு பாடுபட்டிருக்கேன் தெரியுமா? என் கம்பெனியோட டர்ன் ஓவர் இப்போ ஃபைவ் க்ரோர்ஸ். நான் ஆரம்ப நாள்ல அவ்வளவு கஷ்டப் பட்டேன். அப்ப ஒரு முடிவு பண்ணேன். இந்த மாதிரி டாலண்ட் உள்ள பசங்களுக்குத் தான் முன்னுரிமை. இங்க டாலண்ட் ப்ரமோஷன்னு ஒரு ப்ரோக்கிராம் இருக்கு. உங்க பையனைப் பொறுத்த மட்டில ஆரம்பப் பாடம்லாம் தேவையில்லை. அந்தப் ப்ரோக்ராம்ல போட்டுடுங்கோ. பத்தாயிரம் ரூபா. பீஸைக் கட்டிடுங்கோ” என்று கூறி விட்டு நகர்ந்து விட்டார்.
“பையன் இன்னும் வளரலியே சார். இன்னும் கொஞ்சம் மெச்சூரிடி இருந்தாத் தேவலயில்லையா. . . . . . ” என்று நான் இழுத்தேன்.
“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. சங்கீதத்திலேயே மூழ்கியிருக்கறவா அப்படித்தானிருப்பா. அவன் வயசுக்குத் தேவையான மெச்சூரிடி நிறைய இருக்கு. மத்ததெல்லாம் தானா வந்துரும் என்றார்.
கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 1
ரஃபி என்கிற புயல் திலீப் குமார், ஷம்மி கபூர் முதலிய சூப்பர் ஹீரோக்களுக்குப் பாடும் குரலாகையில் ராஜ் கபூருக்கு முகேஷும், தேவானந்துக்கு கிஷோரும் என்று பொருந்திப் போய் விட்டது. தலத் முகம்மதும், ஹேமந்த் குமாரும் மங்கிப் போகையில் ராஜ் கபூருக்கும், பால்ரஜ் சஹானிக்கும் பின்னணி பாடிய மன்னா டே அசரீரியாகவும், நகைச்சுவை நடிகர்களின் குரலாகவும் ஆகி விட்டார். ராஜேஷ் கன்னா என்கிற சூப்பர் ஸ்டாரின் வருகை மேதை கிஷோர் குமாரை முன்னணிக்குக் கொண்டு சென்று பிறரைப் பின்னுக்குத் தள்ளிய போதும் மன்னா டே இருந்தார்.
திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்
திருவையாறு இசைக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வரான Dr.ராம.கெளசல்யா தான் இசைக்கல்லூரியில் பயின்ற அனுபவங்களையும், அக்கால இசைச்சூழலையும் சொல்வனம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். “எல்லா ராகமும் இப்படித்தான். ஸ்வரஸ்தானம் என்பது ஒரு அடையாளம்தான். ராகம் தேவதை. அதன் ஸ்வரூபத்தை நினைத்துப் பாடவேண்டும். எந்த ஸ்வரஸ்தானத்திற்கும் ஒரு ராகத்தில் நிரந்தரமாக இடம் கிடையாது.”