கொல்லி

நீ தப்பிச்சி ஓடினதுக்கு அப்பறம் வேல்ராஜ விட்டானுக. ஆனா உன்ன எங்கிருந்தாலும் பிடிக்காம விடமாட்டேன்னு அந்த ஆளு துடிக்கிறான். மனு குடுக்க வந்த கூட்டத்துல நீ அவன் சட்டய புடிச்சது அவனுக்கு அவமானமாயிட்டு. காக்கி மேல கை வச்சிட்டான் இனி அவன் செத்தான்டான்னு சொன்னான்.

ஓ கங்கரே!!!

“வேணா நாங்க பிடிச்சிக்கிறோம்” என ஆணும் பெண்ணும் மாட்டைப் பிடித்துக்கொள்ள மாடு திமிறிக் கொண்டிருந்தது. தாத்தா அதன் கண், சுவாசம், நாக்கு மற்றும் உடம்பைப் பாரத்துக்கொண்டிருந்தார். திமிறிய மாட்டை அந்த முறுக்கேறிய கைகளும் கால்களும் பிடித்துக்கொண்டிருந்தன. கால்களில் சகதியோ, தொழியோ, சிமெண்டோ வெள்ளையடித்திருந்தது.