வெந்துயர்க் கோடை

படிக்கையில் சிரிப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. இவ்வளவு உக்கிரமான காதல் எப்படி பிரிவில் முடிந்தது. அவ்வளவு கறாரானதா வாழ்க்கை? இது என்ன இப்படியெல்லாம் மனதை உழட்டிக்கொள்கிறேன். நான் பாட்டுக்கு நெட்ஃப்லிக்ஸில் எதாவது ஸாம்பி படம் பார்த்துக்கொண்டிருப்பேன். இவனால் வாழ்க்கையை பற்றியெல்லாம் யோசிக்கவேண்டியாகிவிட்டது. மாதவை நேரில் பார்த்து இரண்டு வருடம் இருக்கும். மைசூரில் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறான். ஊர் பக்கம் வருவதே இல்லை. சென்னைக்காவது வா என்றாலும் வருவதில்லை.

யானை வெரூஉம்

எட்ஜ் சாம்பியனாக இருந்த போது என் அப்பாவுக்கு கல்கத்தாவிற்கு மாற்றல் வந்தது. நாங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தோம். எனக்கு மீசை லேசாக அரும்பியிருந்தது. ஆக அழ முடியாது எனும் கட்டாயம் வேறு. என் அக்கா வெஸ்ட் பெங்காலில் படித்தவள் ஒரு வருடமாகத்தான் தமிழ்நாட்டில் இருக்கிறாள். குடும்பமே கல்கத்தா திரும்பும் குதூகலத்தில் இருந்தது. நான் பேசிப்பார்த்தேன். ஒரு பயனும் இல்லை. வாழ்க்கை இனித்துக்கொண்டே இருக்கக் கூடியதல்ல என்பது அந்த காலத்தில்தான் அறிமுகமானது. என்னை ரயிலேற்றிவிட பிலுக்கோண்டு மட்டும்தான் வந்திருந்தான்

உள்ளிருத்தல்

‘கல்யாணத் தரகு விசுவநாதன் இருக்கானே அவன்தான் போற போக்குல சொல்லிட்டு போனான் ‘என்ன சோம சுந்தரம்.. ராஜா வீட்டு கல்யாணத்துக்கும் நானே புடவ குடுக்குறேன்னு கேக்க வேண்டிதானே’ ன்னு, அன்னக்கி ராத்திரி எனக்கு தூக்கமில்ல. பொரண்டு பொரண்டு படுக்குறேன். காலைல விடியிறப்ப முடிவு பண்ணேன் ‘போயி கேட்டுர்ரதுன்னு. என்ன நடக்கும். விதி பெருசா ஓடிட்டு இருக்கு. யார எங்க தள்ளும் யாருக்குத் தெரியும்.  பாறைல மோதுமா இல்ல அப்டியே தூக்கி கரைல போடுமா யாருக்குத் தெரியும். காலைல குளிச்சு கோயிலுக்குப் போய் அப்பா காசி விசுவநாதா நீதான் கதீன்னு கும்பிடு போட்டு நேரா அரண்மனைக்கு நடந்தேன். இப்ப வேணா அவங்க ராஜாவ இல்லாம நாட்ட ஆளாம இருக்கலாம். ஆனாலும் ராஜ வம்சம் தானே. பணிவா போய் நிக்கிறேன். நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் அவருக்கு. தயங்கித் தய்ங்கி கேக்குறேன். கேட்டா நம்ப மாட்ட மணி. உடனே ஒத்துக்கிட்டார். அறுபத்திரெண்டு புடவ வேணும்னு சொல்றார்.

திருக்கூத்து

அந்த கோயில்ல பூசன பண்ணின பண்டாரங்களால வாய்மொழியா சொல்லப்பட்ட கதைகளும் பாடல்களும்தான் பண்டார நூலா இன்னக்கி இருக்கு. அந்த நூல தொகுத்தவர் சின்னப் பண்டாரம். அவர் அந்த நூலுக்கு இட்ட பெயர் திருநடம். ஆனா பண்டார நூலுங்குற பெயர்தான் நெலச்சிருக்கு. அந்த நூல் பெருவெள்ளங்களப் பத்தி பேசுது. மொத்தம் நூற்றியெட்டு தடவ அங்க வெள்ளம் வந்து ஊர நீர் சூழ்ந்திருக்கு. ஒவ்வொரு முறையும் உச்சிகால பூஜையோட மழை வலுத்து வாரங்களுக்கு தொடர்ந்திருக்கு.

படைத்தல்

அன்று கண்விழித்தபோது தன்னுள் ஒரு உதயம் நிகழ்வதாய் உணர்ந்தாள். இரவின் வீச்சு இன்னும் ஓயாத புலரி ஒரு பண்டிகையின் அதிகாலை நோக்கி விடிவதாய் தோன்றியது. தூக்கமின்மை களைப்பு என எல்லா சோர்வையும் மறைத்துவிடும் ஒரு மாயக்கம்பளம் என அக்காலை இப்பூமியின் மீது அவ்வூரின் மீது அவ்வில்லத்தின் மீது விரிக்கப்படுவதாய் பட்டது. முகம் விழும் சிகையைக் கோதி காதோரம் விட்டாள். அகம் முகம் மலர எழுவது அவளுக்கே ஆசையாய் இருந்தது. நீரள்ளி குளிர் உணர உணர முகத்தில் வீசிக்கொண்டாள்.மூக்கு நுனி தாடை என திரண்டு சொட்டும் நீர், ஒவ்வொரு அசைவுக்கும் ஒட்டி ஒலி எழுப்பும் வளையுடன் மெல்ல ஆடி நோக்கினாள். மகிழ்வான முகம் பூரித்திருந்தது. உதயமேதான்.

திருநடம்

ஒரு வழியாக ஏரி தன் நூறாண்டுத் தாகத்தை மேலெல்லாம் நீர் வழிய அருந்தி முடித்து ஓய்ந்தது. நீர் ஏரிக்கரைக்குள் அடங்கியது. எங்கும் சேறாய்க்கிடந்து பின் காய்ந்து வெடித்து மண்ணானது. ‘வீட்டுச் சமையல் ஆரம்பிக்கலாம்’ என மீத அரிசி பிரித்துக் கொடுக்கப்பட்டது. எல்லாம் தன்னிலை மீண்ட நாளில் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு சிறுவன் ஊருக்குள் வந்தான். சிவன் கோயிலில் பண்டாரத்துடன் ஒட்டிக்கொண்டான். பண்டாரம் அவனுக்கு இரண்டு வெள்ளத்தின் கதைகளையும் சொன்னார். திருவாசகம் பாடிக்கொண்டே அங்கு வளர்ந்தான் சின்னப் பண்டாரம்.

பூரணம்

காந்தி ஒரு சிறு மேடையில் கண்மூடி அமர்ந்திருக்க அவர் முன் மூன்று பெண்கள். அவர்கள் முன் இரண்டு மைக். காந்தி கண் மூடியிருப்பதிலும் அப்பெண்கள் வாய் திறந்திருக்கும் விதத்திலும் அது பஜனையின் போது எடுக்கப்பட்ட படம் எனத் தெரிந்தது. இரண்டு பெண்கள் கண்ணாடி அணிந்திருந்தனர். மூன்றாவதாக இருக்கும் பெண்ணை பார்த்ததும் சிறு அதிர்ச்சி. எதிர்பாராத கணத்தில் ஒன்று அறிவுக்கு வெளிச்சமாவதன் அதிர்வு. பாட்டியேதான். அம்மாவின் அம்மா. எனக்கு ஒன்பது வயதானபோது பாட்டி இறந்து போனாள். அப்போது பதிந்த ஒரு மென் ஞாபகத்தை வைத்துக்கொண்டு எப்படி பாட்டியின் இள வயது புகைப்படத்தை இனங்கண்டேன் எனத் தெரியவில்லை