”…சூரியனைச் சுற்றிய ஒன்பது கிரகங்களின் விசைகள் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு, சமன்படும் இடங்களில்தான் ஒவ்வொரு கிரகத்தின் இருப்பும் சாத்தியமாகிறதா? சமன்படுதலும், சமரசமும்தான் குடும்பமென்கிற ஒருங்கிணைப்பின் மையமா?” சிந்தனையில் ஆழ்ந்திருந்த ப்ரீத்தியின் முகம் சட்டென ஒளிர்ந்தது.
Tag: அறிபுனை
சந்தா
நெற்றியையும் புருவங்களையும் சுருக்கி அவனைப் பார்த்து,”ஆனால் பார் நான் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.”
“என்ன மாதிரியான பகடி இது? அதுதான் அனைவருக்கும் வாழ்வுரிமை சந்தா இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதே. உயிர் வாழ்வதிலோ உணவு உண்பதிலோ என்ன பெரிய இம்சை வந்துவிடப் போகிறது?”
குருடு
“சந்தேகி. சந்தேகித்தலே அறிதலெனும் தேரின் வடம். தேர் நகர்வது சக்கரத்தினால். நகர்த்தப்படுவது அதன் வடத்தினால் தான்” என்றார் கிழவர்.
அவன் உச்சிவானில் எழுந்த கதிரவனின் அலைகள் ஆற்று நீரில் நெளிவதைச் சற்று நேரம் பார்த்தான். பின்னர் கேட்டான். “நான் இப்போது உங்களைக் காண்கிறேன். நீங்கள் என்முன் அழிந்தழிந்து தோன்றுகிறீர்களா என்ன?’
“ஆம்” என்றார் குரு. “‘உனக்கு தெரியும் நான்’ என்பது, உன் புலன்களின் வழியே உன் அறிதலாகி நீ உருவகிப்பது. ‘உனக்கு தெரியும் நானும்’, ‘உலகிற்குத் தெரியும் நானும்’ வேறுவேறானவை. உன் அறிதலை வைத்து இவ்வுலகிற்கும் அதுவே ‘நான்’ என என்னைப் பொதுமைப்படுத்துவது உன் வறட்டு ஆணவம் மட்டுமே” என்றார் குரு.