எக்ஸ் :அப்ப, ஜன நாயகம் படுத்துருதில்ல. அப்பன், ஆத்தா, மகன், மகள், மருமகங்க, பேரன், பேத்தி, மச்சினன், நாத்தானாருன்னு குடும்ப நாயகம்தான நாடு பூரா நடக்குது.
வொய் : எல்லா ஸ்டேட்லயுமா அப்டி நடக்குது?
எக்ஸ் : அதுவாய்யா கேள்வி? முக்காவாசி அப்படித்தான் நடக்குது. வொறவுமுறயில கண்ணாலம் கட்டி சொத்த பெருக்கறமாரி, நாட்ட இவனுங்களே கூறு போட்டுக்குறாங்க. இத விட நீதிபதிகள அமத்தறதுல கூட சொந்த பந்த நீக்குப் போக்கு நடக்குது.
Tag: அரசியல்
வீடு
“ஆமா… நீதான் ஒன் மருமகன் பேச்ச நம்பணும்…” என்றாள் ஜூலி. அம்மாவிடம் அவள் அப்படி விட்டேற்றிதாகப் பேசினாலும் ‘ஒரு வேளை டேனியலு செயிச்சு வூடுவேண்டிக் குடுத்துட்டாருன்னா…” என்றொரு ஆசை ஜூலியின் மனதில் துளிர்க்கத்தான் செய்தது. அதற்காக ஸ்டீபன் சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டு சும்மாவா இருக்க முடியும்? ஆம்பளைகளை அவ்வப்போது சத்தம்போட்டு அடக்கி வைத்தால்தானே குடும்பம் ஒழுங்காக ஓடும்? இதெல்லாம் ஜூலிக்குத் தெரியாதா என்ன?