அணு ஆற்றலின் அரசியல்

ஃபூகுஷீமா அணு உலை விபத்து நடந்து ஓராண்டு இந்த வாரம் பூர்த்தியாகிறது. இக்கட்டத்தில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது : நாசமடைந்த அணு உலைகள் காற்று, நிலம், நிலநீர் மற்றும் கடல் நீரில் கதிர்வீச்சைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அணு உலை எரிபொருள் மேலும் உருகுவதைத் தடுப்பதற்காக டெப்கோ குளிர்விக்கும் அமைப்புகளைச் சீர்திருத்தி, அணு உலைகளைச் சுற்றிப் பாதுகாக்கும் புதிய தடுப்புச் சுவர்களை எழுப்பி விட்டதென்பது உண்மைதான். ஆனால், இந்தக் குளிர்விக்கும் அமைப்புகளும் தடுப்புச் சுவர்களும் எளிதில் பழுதடையக் கூடியவையாகவும் பல குறைகளோடும் இருப்பதால் அவற்றால் கதிர்வீச்சு வெளியே கசிவதையும் சரிவரத் தடுக்க முடியவில்லை