பனி இறுகிய காடு

This entry is part 1 of 2 in the series பனி இறுகிய காடு

வெறித்த கண்கள், நடுங்கும் கால்கள், தூக்கமின்மை வளர்வதை கண்டு சுவாதி அழைத்து வந்திருந்த டாக்டர் சோதித்துவிட்டு, “பிபி 180க்கு அதிகமா இருக்கு, நரம்புத் தளர்ச்சி அதிகமாயிடுச்சு பாப்போம்” என்பது மட்டும் காதில் விழுந்தது. கண்களைத் திறக்க முடியாத வலி. ஆனால் கண்கள் நிலைத்த ஒரு சொல்போல ஆகிவிட்டிருந்தன. பயந்த முகத்தின் அப்பட்டமான அதிர்வு நிலைத்திருக்கும் கண்கள். கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அது யாரோ என்று நினைத்திருந்தான். கொஞ்ச “நேரம் தூங்குடா வைத்தி” என்று கூறிக் கொண்டிருந்தான் சுந்தரம். தன் ஒன்று விட்ட சகோதரன் அவன் என்பதை அவன் உள்ளம் அறிந்திருக்கவில்லை. லேசான தடுமாற்றத்துடன் நின்றிருந்த அவன் கதவைப் பிடித்துக் கொண்டு மெல்ல வெளியேறினான்.

பனி இறுகிய காடு

This entry is part 2 of 2 in the series பனி இறுகிய காடு

அக்காவு யோசித்த முகத்துடன் இன்னைக்கு “இன்னிக்கு அவரு ஊருக்கு போறாரு” என்றான் மெதுவாக. புரிந்துக் கொண்டவர் போல தலையசைத்து “உள்ள உட்காருங்க” என்று சொல்லிவிட்டுச் சென்றார். இரவின் சாயல்கள் பெருகிவரும் நேரம், பெரிய உருண்டை பல்பு உயரத்தில் எரிந்தது. அதன் வெளிச்சம் மஞ்சள், இளம்சிவப்பு நிறங்களை வெளிப்படுத்தின. உள்ளே வந்த போது மாறியிருந்தார். கழுத்து மணிகளின் ஓசை மிக மெல்லியதாக வைத்தியின் உள்ளத்தில் ஒலித்தது. அவ்வோசையை பின் தொடர்ந்தால் அவர் கைவேலைகளின் வேகத்தை அறியமுடியும். கண்களை மூடிக் கொண்டான் வைத்தி. முழுமையான இருள் பிரதேசம். அவன் இருப்பது அவனுக்கே தெரியவில்லை