பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும்.
Series: தெய்வநல்லூர் கதைகள்
Tamil Stories – Village Incidents
தெய்வநல்லூர் கதைகள் – 2
பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார்.
தெய்வநல்லூர் கதைகள்- 3
ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் நாங்கள் ஆறாம் வகுப்புக்கு நேரு நடுநிலைப்பள்ளிக்கு மாறினோம். துவக்கப் பள்ளியில் படித்ததில் எங்களுடன் இருந்தவர்கள் மூன்று பேர்தான். சிலர் நேரடியாக மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்குப் போய்விட்டனர். ஆறாம் வகுப்பு போனதும் நாங்கள் எங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்கும் முடிவினை ஒத்த மனதுடன் ஒருமிக்க எடுத்து புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டோம். அவர்களை இணைக்கையிலேயே நாங்கள் எங்கள் அனுபவ மூப்பினை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டோம் என்றும் இணைப்பு உறுதிமொழியாகக் கொடுத்திருந்தோம்