புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்

This entry is part 1 of 23 in the series புவிச் சூடேற்றம்

இதில் விந்தையான விஷயம் என்னவென்றால், ஏழை நாடுகள், இது என்னவோ பணக்கார நாடுகளின் சதி மற்றும் பிரச்சனை என்று நினைக்கின்றன. உண்மையோ முற்றிலும் வேறு. இது பூமி சம்பந்தப்பட்டது. இதில் மனிதனால் உருவாக்கப்பட்ட பணம், நாடு, எல்லைகள் இவற்றுக்குப் பங்கே கிடையாது. பணக்கார ஸ்வீடன் நாட்டையும் ஏழை பங்களாதேஷையும் வேறுபடுத்திப் பார்க்காத பிரச்சினை இது. சொல்லப் போனால், ஏழை நாடுகளை அதிகமாகப் பாதிக்கவல்ல ஒரு பிரச்சனை இது.

பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?

This entry is part 2 of 23 in the series புவிச் சூடேற்றம்

ஆர்க்டிக் பகுதிகளில் ஜூன் மாதத்தில் கடல், பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கும். செப்டம்பர் மாதம்தான் இங்கு அதிகமாகப் பனி உருகும். மீண்டும் அக்டோபர் கடைசியிலிருந்து உறையத் தொடங்கும். 1967 முதல் 2018 வரை, ஜூன் மாதப் பனியுறைப் பகுதி குறைந்துகொண்டே வந்துள்ளது. 1967–ல் இருந்த உறைந்த பகுதியிலிருந்து, 2018–ல் நாம் இழந்த பனியுறைப் பகுதி 2.5 மில்லியன் சதுர கி.மீ. இது சாதாரண இழப்பன்று. இது இந்தியாவின் நிலப்பரப்பில் 76%-திற்குச் சம்மானது!இந்த இழப்பைப்பற்றி எவரும் கவலைப்படுவதில்லை. ஆனால் ஏன் கவலைப்படுவதில்லை?

புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3

This entry is part 3 of 23 in the series புவிச் சூடேற்றம்

நதிகளின் வண்டல்படிவுகள் (sediment deposits) , பயிர்கள் செழிக்க மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அணைகள், நீர்பாசனத்திற்கு உதவினாலும், அதன் மிகப் பெரிய பின்விளைவு வண்டல்படிவுகளில் கை வைப்பதுதான்.

பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்

This entry is part 4 of 23 in the series புவிச் சூடேற்றம்

காற்றுமண்டலத்தின் ஒவ்வொரு அடுக்கையும் வைத்துப் பார்த்தால், நம்முடைய நிலத்தளவு வெப்பம் சராசரி -15 டிகிரியாக இருக்க வேண்டும். எப்படி 15 டிகிரியானது? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கிய காரணம், உலகின் மிக முக்கிய சூடேற்றும் வாயுவான நீராவி. மேகங்கள் (நீராவி) நம் பூமி, உறையாமல் இருக்க முக்கிய காரணம்.

புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5

This entry is part 5 of 23 in the series புவிச் சூடேற்றம்

மனிதனின் மிகப் பெரிய தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவு உற்பத்தி செய்வது. நிலத்தில் உள்ள நீரில் 70% விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உணவில் 25% முதல் 30% வரை, பயனில்லாமல் போகிறது. குறிப்பாக, சமைத்த உணவு, பயனில்லாமல் போவது சுற்றுச்சூழலுக்கு நல்லது அல்ல. அதிலிருந்து உருவாகும் மீதேன் போன்ற வாயுக்கள் மேலும், புவி சூடேற உந்துகின்றன

மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்

This entry is part 6 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்

விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்

This entry is part 7 of 23 in the series புவிச் சூடேற்றம்

செயற்கை கோள் தரவுகள் மூலம், இந்தியா, சைனா, தென்கிழக்கு ஆஸ்ட்ரேலியா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில், பசுமை நிலங்கள் அதிகரித்துள்ளன. இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? இந்த நாடுகளில், காடுகள், விவசாயத்திற்காக அழிக்கப்படுகின்றன. அதே போல, செயற்கை கோள் தரவுகள் மூலம், வடக்கு ஐரோப்பா, ஆசியா, தென் மேற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் காங்கோ நதி டெல்டா பகுதி, இவை யாவும் பாலைவனமாகி வருகிறது. பசுமைப் பகுதிகள், காடுகளை அழிப்பதால் அதிகமாவதால், இன்றைய தரவு சரியாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், 1970 –க்கு முன், அமெரிக்க தென் மேற்குப் பகுதிகள் பசுமையாக இருந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8

This entry is part 8 of 23 in the series புவிச் சூடேற்றம்

புவிச் சூடேற்றத்தால், நிலம் வறண்டு, தாவரங்கள் காய்ந்து, தீ பரவ அதிக சூழல் தோன்றுகிறது. முன்னம், நதிகள் பகுதியில் பார்த்ததை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். வழக்கத்தைவிட முன்னதாக வந்த வசந்த காலம், முன்னமே முடிவதால் நீள்கிற கோடைப் பருவ காலத்தால், நதிகள் நீரின்றி ஆகி, காடுகளை வறண்ட நிலமாக்கிவிடுகின்றன. வறண்ட காடுகள், தீ பரவத் தோதானதாக மாறிவிடுகின்றன.

புவிச் சூடேற்றம்- பகுதி 9

This entry is part 9 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடலில், நம் முந்தைய அட்டூழியங்களின் தாக்கங்கள் யாவும் வெப்பமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. தேக்கி வைத்த வெப்பம், முதலில் வெளி வந்தால்தான் குளிர்வதற்கு சந்தர்ப்பம் இருக்கும். கடந்த 50 ஆண்டு கால தொல்லெச்ச பொருட்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டால், 2100 ஆம் ஆண்டு வரை, குளிர்வதற்கான வாய்ப்பே இல்லை. பூமி, நாம் தொல்லெச்ச பயன்பாடு எல்லாவற்றையும் நிறுத்தினாலும், தொடர்ந்து 2100 –ஆம் ஆண்டு வரை வெப்பமாகிக் கொண்டே போகும். அடுத்த 80 ஆண்டுகள் பொறுப்பாக நாம் இருந்தால், 2100 –க்குப் பிறகு, பூமி குளிர வாய்ப்பு இருக்கிறது.

விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10

This entry is part 10 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடந்த ஐம்பது ஆண்டுகளாக, புவிச் சூடேற்றம் பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், பெரிதாக, இந்த உலகம் எதையும் மாற்றவில்லை. மாறாக, தொல்லெச்ச எரிபொருட்களுக்கு மேலும் அடிமையாகிக்கொண்டே வந்துள்ளது. விஞ்ஞானிகளின் பார்வையில், நேரம் சற்று கடந்துவிட்டாலும் இன்று தொடங்கி மனித இனம் தன்னைக் காப்பற்றிக் கொள்ளமுடியும்வ்

மறுசுழற்சி விவசாயம்

This entry is part 11 of 23 in the series புவிச் சூடேற்றம்

• அறுவடைக்குப் பின், நிலத்தை தரைமட்டம் ஆக்கத் தேவையில்லை
• ஒரு பயிரை அறுவடை செய்த பின், இன்னொரு பயிரை விதைக்க வேண்டும்
• விவசாய நிலம் சிறியதாக இருந்தால், பக்கத்து நிலச் சொந்தக்கார்ர்கள், தங்களுக்குள் ஒரு பயிர் ஏற்பாட்டைச் செய்து கொண்டால், அது மண் வளத்திற்கு நல்லது
• கால்நடைகள் அவசியம். கால்நடைகள், இயற்கை உரத்திற்கு உதவுவதோடு, அவற்றின் கால்கள் மூலம், நிலத்தில் வாழும் சின்ன உயிரினங்களுக்கு பலவகைகளில் உதவுகின்றன.

புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்

This entry is part 12 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்த 150 ஆண்டுகளில், 8 மிகப் பெரிய எரிமலை வெடிப்புகள் விஞ்ஞானிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. எரிமலை வெடிப்பினால், கரியமில வாயு அதிகமாகிறது என்றால், இரண்டு வெடிப்பிற்கு இடைப்பட்ட காலத்தில், பூமி குளிரவேண்டும் அல்லவா? அப்படி நிகழவில்லை. மாறாக, பூமியின் சராசரி வெப்பம், கடந்த 150 ஆண்டுகளாக, சீராக உயர்ந்து வருகிறது. மனித நடவடிக்கைகள்தான் இதற்கு காரணம் என்பது தெளிவாகிறது.

புவி சூடேற்றம் பாகம்-13

This entry is part 13 of 23 in the series புவிச் சூடேற்றம்

50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. உயிர்கள் தழைத்தன என்பதை எதை வைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தொல்லெச்ச எரிபொருள்கள் உருவாவதற்குக் காரணமே, அந்த காலங்களில் மறைந்த உயிர்களே!

புவி சூடேற்றம் பாகம்-14

This entry is part 14 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடந்த 60 ஆண்டுகளாக, புதுப்பிக்க்கூடிய சக்தி உருவாக்கம் பற்றிய ஆராய்ச்சி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இந்த ஆராய்ச்சியை முன்னே செல்ல விடாமல் தடுப்பது என்னவோ தொல்லெச்ச எரிபொருள் நிறுவனங்கள். சூரிய ஒளியை, காற்றின் ஆற்றலை, மற்றும், புவிவெப்ப சக்தியைப் பயன்படுத்தும் முயற்சிகள், நாளுக்கு நாள் செயல்திறன் கூடிக் கொண்டே வருகிறது

பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்

This entry is part 15 of 23 in the series புவிச் சூடேற்றம்

–ல், ஒரு மில்லியன் மாணவர்கள் ஒரே நாளில், பருவநிலை மாற்றம் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிளர்ச்சி செய்தனர். இவர்களது கிளர்ச்சி, அரசியல் தலைமையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். ..2019 –ல், ஒரு மில்லியன் மாணவர்கள் ஒரே நாளில், பருவநிலை மாற்றம் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கிளர்ச்சி செய்தனர். இவர்களது கிளர்ச்சி, அரசியல் தலைமையை நடவடிக்கை எடுக்கத் தூண்டுமா என்பது ஒரு கேள்விக்குறிதான். சில நாட்களுக்கு சமூகத்தில் வயதானவர்கள் சற்று தர்மசங்கடப்பட்டுவிட்டு, பிறகு அவரவர் தொல்லெச்ச எரிபொருள் காரில் ஏறி, வேலையைப் பார்க்கச் சென்று விடுவது நம் சமூகத்தின் சாபக்கேடு. இவர்களது கோரிக்கைகள் என்ன?..தொல்லெச்ச எரிபொருள்கள் 100% குறைக்க வேண்டும்
தொல்லெச்ச எரிபொருள் தயாரிப்பாளர்களுக்கான மானியம் நிறுத்தப்பட வேண்டும்
எல்லா சக்தியும் புதுப்பிக்கக்கூடிய சக்தியாக மாற வேண்டும்.

அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?

This entry is part 16 of 23 in the series புவிச் சூடேற்றம்

நம்பிக்கையூட்டும் பூச்சுற்றல் அல்ல இது. இவர் சொல்லும் புள்ளி விவரங்கள் மற்றும் தீர்வுகள், இரண்டையும் இந்தப் பகுதியில் பார்ப்போம். என் அனுபவத்தில், முதன்முறையாக, ஒரு ஆவணப்படத்தைப் பல முறை பார்த்ததோடு, உட்கார்ந்து குறிப்புகளும் எடுத்துக் கொண்டேன். இந்தக் கட்டுரைக்காக அதைச் செய்தேன் – ஆவணப்பட இயக்குனராக அல்ல!

நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?

This entry is part 17 of 23 in the series புவிச் சூடேற்றம்

நல்ல வேளையாக, சில கிழ விஞ்ஞானிகள் இந்த விஷயத்திலும் விஞ்ஞான ரீதியில் உதவ முன் வந்துள்ளார்கள். குறிப்பாக, யோகான் ராக்ஸ்ட்ரோம் (Johan Rockstrom) என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, மற்ற பல விஞ்ஞானிகளுடன் கடந்த 40 வருடங்களாக ஆராய்ச்சி செய்து, தங்களது முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பருவநிலை மாற்றத்திற்காக, ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிப்பவர்கள், இந்தப் பகுதியை அவசியம் படிக்க வேண்டும்.

உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?

This entry is part 18 of 23 in the series புவிச் சூடேற்றம்

இன்று தயாரிக்கும் சிடிக்கள் எங்கு போகும்? இன்றைய செல்பேசிகள் எங்கு போகும்? இந்தச் சிந்தனை அவசியம் எழ வேண்டும். ஒரு தயாரிப்பை வடிவமைக்கும் பொழுது, அதன் வாழ்நாள் முடிந்தவுடன், எப்படி மறுபயன்பாட்டிற்கு உதவும் என்பதையும் தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். கடந்த 300 வருடங்களாக நாம் இதைச் செய்யத் தவறி விட்டோம். இன்று, ப்ளாஸ்டிக், அனல் மின் நிலையம், மின்னணுவியல் சாதனங்கள், அணுமின் நிலையம் என்று எல்லாவற்றிலும், இந்தக் கழிவுப் பிரச்சினை, நம்மை கதிகலங்க வைக்கிறது.

புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19

This entry is part 19 of 23 in the series புவிச் சூடேற்றம்

ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த சில கட்டுரைகளை வாசித்தால், உங்களது இந்தக் குழப்பம் முற்றிலும் குறையும். அதற்கு முன்னர், சில விஷயங்களை இந்த உலகப் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20

This entry is part 20 of 23 in the series புவிச் சூடேற்றம்

மின்சக்தி உற்பத்தியில் கரி மிகவும் மலிவான மூலப்பொருள். பல நாடுகள், கரியை நம்பிய நாடுகள். அனல் மின் நிலையங்களை மூடினால், தகுந்த மாற்று அமைப்பு உருவாக்குவது மிகவும் கடினமான விஷயம். உதாரணத்திற்கு, சமீப இந்திய மின்சார விரிவாக்கம், பெரும்பாலும், இயற்கை வாயுவை மூலமாகக் கொண்டது. சைனா, இன்னும் தன்னுடைய ராட்சச கரி சார்ந்த மின் நிலையங்களை மூடத் தொடங்கவில்லை. சொல்வது எளிது. ஆனால், செய்வது மிகவும் கடினம். நீர், காற்று மற்றும் சூரிய ஒளி குறைந்த பகுதிகள், அணு மின் நிலையம் ஒன்றே வழி. இதற்கான முதலீடு அதிகம்

புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21

This entry is part 21 of 23 in the series புவிச் சூடேற்றம்

நாம் எவ்வளவு முயன்றாலும், இந்த விஷயத்தில், இயற்கையைப் போன்ற அளவை நம்மால் எட்ட முடியாது – அது ஒரு 4 பில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னேற்றப்பட்ட விஷயம்! இயற்கையின் இந்த அருமையான சேவையைக் குலைத்த நம்மால், அதற்கு உதவவும் முடியும். முதல் காரியமாக, இயற்கையிடம் மிஞ்சியிருக்கும் கரியமில வாயு உள்வாங்கும் அளவை மேலும் குறைக்க மாட்டோம் என்று ஒவ்வொரு மனிதனும் நினைக்க வேண்டும். இன்னொரு யதார்த்தையும் நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மனிதர்கள், நிலப் பிராணிகள். கடல் நமது வீடல்ல. அதனால், 17% உள்வாங்கும் கடலுக்கு உதவுவதை விட 24% சதவீதம் உள்வாங்கும் நிலத்திற்கு மேலும் உதவுவது நமக்கு சாத்தியம்!

புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22

This entry is part 22 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும், காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை ரசாயன முறைகளில் உள்வாங்கி, பூமிக்கடியில் புதைக்கும் முயற்சிகள். சில தொழில்நுட்பங்கள், தாங்கள் உருவாக்கிய கரியமில வாயுவைக் கொண்டு, மற்ற பயன்களுக்கு உதவுவது. இதனால், கரியமில வாயு தேவைப்படும் தொழில்கள், இயற்கையை அழிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உலகில் ஏராளமாக விற்கும் குளிர்பானங்கள் கரியமில வாயுவைக் கலந்துதான் விற்கின்றன!

விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரை

This entry is part 23 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய நாட்களில், புனைப் பெயரில் எழுதலாமா என்ற ஒரு எண்ணமும் இருந்தது. ஆனால், இன்று விஞ்ஞானத் திரித்தல்களைப் பற்றி வியாபாரங்கள் கவலப்படுவதே இல்லை என்ற அளவிற்கு இந்த நோய் பரவி விட்டதால், அதைக் கைவிட்டேன்.  இந்தக் கட்டுரைத் தொடரில் உள்ள சில விஷயங்கள் சிலருக்கு நெருக்கமாகப் புரிய வாய்ப்புண்டு, மற்றவை, வாசகர்களின் வாழ்க்கையில் கட்டுரை சார்ந்த நிகழ்வைச் சந்தித்தால், அக்கட்டுரையுடன் ஒரு தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு. டால்கம் பவுடர் திரித்தல்கள் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்த வாசகர், எனக்கு, தனிப்பட்ட முறையில், பவுடரைப் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டு விடுவதாக எழுதியிருந்தார். இப்படி எழுதிய இத்தனை கட்டுரைகளை வாசித்த வாசகர் சிலருக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால், அதை இந்த கட்டுரைத் தொடரின் உண்மையான வெற்றியாக நினைக்கிறேன்.