பானுகூல் சமையலறை ராகங்கள்

இசையுலகின் கந்தர்வன் ஆன குமார் கந்தர்வ் அவர்களின் இல்லத்தில் சுருதியும் லயமும் ஒன்றிணைந்து இனிய இசையை வழங்குவது போல், பல்வேறு கலாச்சார ருசிகளும் பல வகை செய்முறைகளும் சேர்ந்து நாவுக்கினிய, ருசியும் மணமுமான உணவும் செய்யப்பட்டது. செவிக்கினிய இசையும் வயிற்றுக்கான அறுசுவை உணவும் ஊடும் பாவும் போல இணைந்து உறவாடின. இதோ, குமார் கந்தர்வ் அவர்களின் மகள் கலாபினீ அதைப் பற்றி சுவைபடக் கூறுகிறார்:

எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்

ஒரு மகத்தான இசை கலைஞனை பற்றி எழுதுவது ஒரு சிக்கலான காரியம். முதலில் அவரின் இசையை எழுத மொழி நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்படி இருந்தாலும், எல்லாம் எழுதி முடித்த பிறகும் நாம் எதுவும் எழுதவில்லை என்று தோணும். மன்சூர் போன்ற மேதைகள் தங்கள் ஆன்மாவை இசையில் கலந்ததை எப்படி வார்தைகளால் வர்ணிக்க முடியும்?