நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்?

இன்றைய உருவத்தை அடைவதற்கு முன்னரும்கூட அட்டவணைகள் ‘ஒத்திசைவுகளும், வேறுபாடுகளும்’ கொண்டு பயன்பாட்டில் இருந்தன. பக்கங்களில் எண்கள் அச்சிடப்படத் தொடங்கிய காலத்தில் இவைகள் ஒரு நிலைப்பை அடைந்தன.

இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்

இனம் மதம் என்ற நிலையிலிருந்தும் உயர்ந்து எழும்பிய லால் தேத் போன்ற ஞானிகள் வாழ்ந்த நிலம் காஷ்மீரம். அக்கமகாதேவியைப்போல் உடைகளைக் களைந்து ஞானப் பாடல்களை இசைத்த சிவ பக்தை லால் தேத். பல வகைகளில் இன்றும் அவர் வாழ்க்கையும் பாடல்களும் நமக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கின்றன. எல்லோருமே லால் தேதை தங்களுடையவர் என்று உரிமை கொண்டாடுகின்றனர். லால் தேதை மதமாற்றம் செய்து அவர் ஸூஃபி கருத்துக்களால் கவரப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுவதன் காரணம் எழுநூறு அண்டுகளுக்குப் பின் இன்றும் நம் வாழ்க்கையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும்…

மகரந்தம்

1. அச்சுப் பத்திரிகைகளின் அந்திம காலமா இது?
2. போக்குவரத்துச் சந்தடியால் நரம்பு இழி நோய் வருமா?
3. காற்றாலை மேடைகளின் அதிசய உடன் விளைவுகள்

வாக்கு தவறாமை

“நீங்க குடுத்த காசுக்கு தென்ன மரச்சின்னத்துல ஒரு குத்து” என்று வாக்குச்சீட்டுகளில் சின்னத்தின் மேல் முத்திரையிட்டு பெட்டியில் போடும் தேர்தல் முறையை நாம் கடந்துதான் வந்திருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வந்தபின்பும் தோற்ற கட்சிகள் ஒரு தேய்ந்த ரெக்கார்டை ஓட்டுகின்றன. “எந்த பட்டன் அமுக்கினாலும் ஒரே கட்சிக்கு ஓட்டு விழும்படிச் செய்துவிட்டார்கள்” இந்தக் கூற்று எந்த அளவு சாத்தியம், அந்த வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு இயங்குகிறது. கொஞ்சம் பார்க்கலாம்.

சிரியாவும் இன்ன பிறவும்…

ஏராளமான முஸ்லிம்கள் மிச்சிகன், மின்னியாபொலிஸ் போன்ற பகுதிகளில் பெருமளவிற்குக் குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது என்பது வலதுசாரி அமெரிக்கர்களை எரிச்சலில் தள்ளியிருக்கிறது… உலகில் வஹாபிய சுன்னி இஸ்லாமியத் தீவிரவாதம் பரவக் காரணமாயிருக்கிற சவூதி அரேபியா பிற இஸ்லாமிய பிரிவுகளைச் சேர்ந்த ஷியா, அல்லாவைட் போன்றவர்கள் வாழும் இராக்கிய, இரானிய, குர்து, சிரிய நாடுகள் மீது பயங்கரவாதத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா அதனைத் தடுக்க முயலாமல் அவர்களுக்கு மறைமுகமாக உதவுகிறது என்னும் குற்றச் சாட்டிற்கு அமெரிக்கா இன்றுவரை பதிலளிக்கவில்லை. மானுடகுலம் இதுவரை கண்டிராத குரூரத்துடன் நடந்து கொள்ளும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் ரஷ்ய தாக்குதல்களால் சிதறடிக்கப்படுகையில் அதனை ஆதரிக்காமல் எரிந்து விழும்…

இணைய உரையாடல் – ஆள் குறைப்பு, ஐ.பி.எம்.

இது ஐபிஎம் மில் உலகெங்கும் உள்ள பிரச்சினையா அல்லது அமெரிக்கா அல்லாத இடங்களில் உள்ள பிரச்சினையா? இதில் என்ன அளவு மிக்க உயர் கல்வி பெற்றவர்களின் ஆதிக்கம் உள்ளது? நேற்று உயர்கல்வித் தகுதி பெற்றவர்களின் தகுதிகள் இன்று பயனற்றவையாக ஆகும் நிலை பல துறைகளில் பல தொழில் முகங்களில் ஆகி விட்டது. காட்டாக கெமிகல் ஃபிஸிக்ஸ் அல்லது ஆர்கானிக் கெமிஸ்ட்ரி என்ற துறைகளில் முனைவர் பட்டம் வாங்கியவர்கள் இன்று கிட்டத்தட்ட வேலைக்காகாதவர்களாகப் பல கெமிகல் நிறுவனங்களிலும், மருந்துதயாரிப்பு நிறுவனங்களிலும் பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் குறுக்கு வெட்டாக இருக்கும் பல இன்றைய தொழில் நுட்பத்துறைகளுக்குப் பக்கவாட்டிலோ, மேல் நோக்கியோ தாவ வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான் – மறுவினை

சொல்வனத்தில், “அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்” என்று சுந்தர் வேதாந்தம் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர், அதில் இருந்த சில கருத்துக்களைக் குறித்து என்னுடைய கருத்துக்களையும் கேட்டார். அப்படித் தான் நான் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுந்தர் அவர்கள் விரிவாகவும், விறுவிறுப்பாகவும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றார். அதற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், சுந்தர் அவர்களின் கட்டுரை, சட்டம் பற்றியது. அதில் சில முக்கியமான கருத்துப் பிழைகள் உள்ளதால், அதனை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது.

எழுத்துரு வாதம், பிரதிவாதம் – ஒரு விவாதம்

உருவகமாக கிரியாஉக்கி மூலம் ரசாயணத்தின் அகங்களை கொப்பளிக்க வைக்கும் அறிவியல் முறையை சொல்லலாம். இங்கே அந்த கிரியாஉக்கி ஒருநோக்கு படைத்த மெய்மையை வந்தடையும் இலக்கை கொண்ட சிந்தனையாளர்களின் தர்க்கமே. இந்த பகுத்தறிதலால் இதர நலிந்தக் கருத்துக்கள் நிராகரிக்கப்படுகின்றன. இது தான் இந்த முறையின் இயல்பு. அப்படி மெலிந்த தன் கருத்துக்களை நிராகரிக்கப்பட்டு தர்க்கம் ஒருவரை கடந்து செல்ல முற்படும் பொழுது அவர் இதை தனிப்பட்ட தோல்வியாகவோ, அவமானமாகவோ, தாக்குதலாக எடுத்துக் கொள்வது, அதனால் பிறர் மீது தனிப்பட்ட முறை தாக்குதல் நடத்தி அவரையும் நிலைகுலையச் செய்து தர்க்கத்திற்கே பங்கம் விளைவிப்பது, போன்றவை இந்த அறிதல் முறையின் மிகப் பெரிய கவனச் சிதறல். சில மாதங்களுக்கு முன் எழுந்த எழுத்துரு விவாதம் தமிழகத்தின் சிந்தனைத் தளங்களில் தன் அருவருப்பான முகத்தை வெளிக்காட்டியது.

இணைய உரையாடல் – ஆண்பார்வை

பெண்களின் மனோநிலைகள், சமூக நிலைகள், பெண்ணியம் என்ற கருத்தியலால் ஏற்பட்ட மாறுதல்கள், பாதிப்புகள் போன்றவற்றைப் பற்றி உரையாடினோம். இலக்கியத்தில் மட்டுமல்லாது அன்றாட வாழ்விலும் ’ஆண் பார்வை’ என்பது என்னவொரு உபாதை, அது கரிப் பிசின் போல எல்லாவற்றையும் குறைப்படுத்துகிறது என்ற ஒரு கருத்து பற்றியும் பேசி இருக்கிறோம்.

பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?

பேய் பிசாசுகள் மனிதர்கள் இல்லை என்பது திண்ணம். அவைகளை உலகில் அநேகர் தினநிகழ்வாய் பார்க்காதிருக்கையில், நான் பார்த்தேன் என்றால், அது அசாத்தியமான நிகழ்வு. அதற்கான நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும். இதுவரை நமக்குக் கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் அவ்வளவு அசாத்தியமானது அல்ல என்று நிரூபிக்கமுடிகிறது. பேய் பிசாசுகளை பார்த்ததற்கான தருணங்களை வேறு எளிய காரணங்களால் விளக்கமுடியும் என்று தெரிகிறது.