ஐன்ஸ்டீனும் எடிங்டனும்

முழுத் திரைப்படத்தையும் விஞ்ஞானத்தில் ஆர்வமுள்ளவர்கள் அவசியம் பார்க்க வேண்டும். ஃபேஸ்புக்கில் லைக் போட்டு, டிவிட்டரில் குறுஞ்செய்தி அனுப்பும் இன்றைய இளைஞர்கள், இந்தத் திரைப்படத்தின் 56;54 முதல் 58;11 வரையாவது அவசியம் பார்க்க வேண்டும். என் பார்வையில் நூறு பெளதிக வகுப்புகளுக்கு சமம். இந்த 77 நொடிகள்! ஐன்ஸ்டீனைப் பற்றி ஆறு சுயசரிதப் புத்தகங்கள் படித்த என்போன்றவர்களை உட்கார்ந்து இப்படிக் கட்டுரை எழுத வைத்தக் காட்சி அது. இக்காட்சியைப் பிறகு அலசுவோம்.

சகல கலா ஆசார்யர் – வித்வான் எஸ்.ராஜம் ஆவணப்படம்

எஸ்.ராஜம் கர்னாடக சங்கீதத்தின் ஒப்பற்ற கலைஞர், ஓவியர், சங்கீதக் களஞ்சியம் என பல முகங்கள் கொண்டவர் என்றாலும், நமது பாரம்பரியக் கலையின் கடைசி ஆன்மா என அவரது ஆவணப் படத்தைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியது. கலையின் அணையாத கங்கு கலைஞர்களின் ஆத்மார்த்தமான ஈடுபாட்டில் அடங்கியுள்ளது. அது என்றும் நீடித்திருக்கும் பெரும் தீ. காலகாலத்துக்கும் கலையின் எண்ணிலடங்கா முகங்களை உயிர்ப்போடு வைத்திருப்பது கலைஞர்களால் மட்டுமே சாத்தியம்.

மதப்பிளவும் தேசப்பிரிவினையும்

சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.

வரலாற்றோடு ஒரு ஒப்பந்தம்: வாக்னரும் நானும்

இசை வரலாறை வாக்னருக்கு முன் வாக்னருக்குப் பின் எனப் பிரித்ததில் பீத்தாவன் போல முதன்மையான சிம்மாசனத்தில் இசை உலகம் அவரை வைத்துள்ளது. அதே சமயம், இஸ்ரேல் நாட்டில் அவரது இசையை ஒளிபரப்புவதற்கு தடை உள்ளது. சொல்லப்போனால் யூத இனத்தினர் அனைவருக்கும் வாக்னர் மிகப் பெரிய எதிரி. அவரது இசையை வீட்டில் கேட்பதற்கு கூட பல யூத குடும்பங்கள் அனுமதிப்பதில்லை. அதிகமாக ரசிக்கப்படும் இசையைக் கொடுத்த அவரை அதே அளவு மக்கள் வெறுக்கக் காரணம் என்ன?

மை விலேஜ் இஸ் பம்பை – விவரணப்படம்

பெருநகரங்களில் வசிப்பவரா நீங்கள்? அரக்கப் பறக்க வேலைக்குச் செல்பவரா? நெரிசல் ஏற்படுத்தும் கூட்டத்துடன் பேருந்துகளிலும், ரயிலிலும் பயணம் செய்பவரா? சுற்றிப் பார்க்க மட்டுமே ஓரிரு தினங்கள் வருபவராக இருந்தாலும் பரவாயில்லை. நிச்சயம் இதுபோன்ற விளம்பரங்கள் உங்களின் கவனத்திற்கு வந்திருக்கும். ஒரு மின்னல் பார்வையில் அந்த கருப்பு வெள்ளை விளம்பர ஒட்டிகளை கடந்து சென்றிருப்பீர்கள்!

புனர்ஜனி – ஆவணப்படம் (மலையாளம்)

பெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .

உள்ளம் கவர்ந்த உள்வேலை

இந்த ஊழலின் விளைவுகளை இன்றும் உலகம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட உலகப் பொருளாதாரச்சரிவால், குறைந்தபட்சம் 1.5 கோடி பேர் மீண்டும் வறுமைக்கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டுள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. பல கோடி மக்கள் உலகெங்கும் வேலை இழந்து தவிக்கிறார்கள். ஆனால் அதற்காக ஒரு நிதி நிறுவனத் தலைமை அதிகாரி கூட இன்றுவரை சிறை செல்லவில்லை. இதைக் குறித்து அழகாக விளக்குகிறது ‘Inside Job’ என்ற விவரணப்படம்.