அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்

அறிமுகம் “கடும் போட்டிகள் கொண்ட விளையாட்டுகளுக்கு அழகு என்பது ஒரு குறிக்கோள் அல்ல, ஆனால் உச்சப்பட்ச விளையாட்டுப் போட்டிகள் மனித அழகின் மிகச் சிறந்த ஆடுகளம். இதை தோராயமாக போருக்கும் வீரத்திற்கும் உள்ள தொடர்போடு பொருத்திப் பார்க்கலாம்” டேவிட் பாஸ்டர் வாலஸ் அமெரிக்க விளையாட்டுக்கள் உண்மையில் இன்றைய அமெரிக்காவை “அமெரிக்கக் கால்பந்து – ஒரு மத அனுபவம்”

சிவன் ஆடிய களம்

எண்பதுகளின் முற்பகுதியில் இந்திய கிராமங்களுக்குள் டிவி நுழையாத காலம். நகரத்தில் வசதியான சில வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை டிவி இருந்தன. வேகமாய் பெருகிய ஜனத்தொகையும் வேலையில்லா திண்டாட்டமும் சமூகத்தின் பிரதான பிரச்னையானதால், கிரிக்கெட் பற்றிய புரிதலோ விவாதங்களோ மக்களிடம் அப்போது இருக்கவில்லை

தேவை ஒரு தங்கம்

ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டிகள் பன்னாட்டுக் குத்துச்சண்டைக் கூட்டமைப்பில் நடந்த போட்டிகளில் ஆறு முறைகள் தங்கம் வென்ற மேரி கோமின் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அந்தப் போட்டிகளில் அதிகப் பதக்கங்களை வென்ற நாடுகளின் வரிசையில், ரஷ்யா சீனாவுக்கு அடுத்து இந்தியாவுக்கு மூன்றாம் இடம். ரஷ்யா 60 பதக்கங்களைம், சீனா “தேவை ஒரு தங்கம்”

நன்றி இந்தியா, நல்லிரவு (ப்ரிஸ்பேனிலிருந்து)

அஜிங்க்ய ரஹாணேயின் புன்னகைக்கு நன்றி. இந்த தொடரின் ஆன்மாவுடன் ஒன்றிணைந்த புன்னகை அது. ஆட்ட வர்ணணையாளர்கள் இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்தையும் முரட்டுத்தனத்தையும் குறித்து உரக்க குரல்கள் எழுந்துகொண்டிருந்த போது ரஹாணே புன்னகைக்க மட்டுமே செய்தார். பின் வென்றார்.

இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?

50, 20-ஓவர்களென ஒரு நாளைக்குள் கதை முடிந்துவிடும் வகையான வெள்ளைப்பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் உலகில் பிரபலமாகிவிட்ட காலமிது. லட்சோபலட்சம் ரசிகர்களின் கவனம் பெரிதும் இந்தப்பக்கம் இருப்பதால், கிரிக்கெட்டின் மூலமும் பணம்பார்க்க ஆசைப்படும் கார்ப்பரேட் ஸ்பான்சர்களின் பார்வையும் இங்கேதான். வருமானமின்றி கடை ஓட்ட முடியுமா என்ன? கிரிக்கெட்டின் சர்வதேசத் தலைமை “இந்திய கிரிக்கெட்டிற்கு இரட்டைத் தலைமை சரியானதா?”

மண்டை பத்திரம்!

விதி மாற்றம்தான் என்ன? ஆட்டத்தின் பொழுது ஒரு வீரருக்கு தலையிலோ கழுத்திலோ அடிபட்டால் அணியின் மருத்துவர் அந்த வீரரை சோதித்து அவருக்கு தாற்காலிக மூளை அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்ய வேண்டும். அப்படி அதிர்ச்சி உண்டாகி இருக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக மாற்றாள் ஒருவரை அணியில் சேர்க்க மேட்ச் ரெபரியிடம் வேண்டலாம். அந்த மாற்றாள் அடிபட்ட வீரருக்கு ஒத்த திறமை உள்ளவராக இருக்க வேண்டும்.

பிறழ்வச்சத்தின் ஆரங்கள்: டலிலோவின் ஹோம் ரன்

“நீங்கள் பாஸ்டன் வந்து எத்தனை காலம் ஆகிறது?”: அப்போதுதான் அறிமுகமாகிப் பழகிக் கொண்டிருப்பவர்கள் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போதும் கேட்கும் தவிர்க்க முடியாத இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நான் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளும் கட்டத்தை நெருங்கி விட்டது என் ஆயுள். ஆம், எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது, நான் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தும் பல நாட்களாகிவிட்டன.

அமெரிக்கத்தனங்கள் பலவற்றின் அறிமுகங்கள் போலவே என் ஷ்லாக்பல்வுஸ்ட்ஸைன் ஞானோதயமும் (Schlagballewusstsein, பேஸ்பால்-ஓர்மை, ஜான் அப்டைக் உருவாக்கிய சொல்) பாஸ்டன் ரெட் சாக்ஸ்களுக்கும் நியூ யார்க் யான்கீஸ்களுக்கும் இடையே அமெரிக்கன் லீக் சாம்பியன்ஷிப் சீரிஸில் கடும் போட்டி நிலவிய அந்தப் பித்தேறிய ஆண்டுகளின் பாஸ்டன் நகரில்தான் தோன்றியது. 1999ஆம் ஆண்டு ஏழாவது ஆட்டத்தின் எட்டாவது இன்னிங்ஸில் ரெட் சாக்ஸ் எதிர்பாராத வகையில் பிட்டுக்கொண்டபோது துவங்கி (யான்கீஸ் அந்த ஆண்டு பதினொன்றாவது ஆட்டத்தின் பிற்பகுதியில் தொடரை வென்றார்கள்), அடுத்த ஆண்டு மூன்று ஆட்டங்கள் பின்தங்கி இருந்த ரெட் சாக்ஸ் அதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பான வெற்றிகள் பெற்று முன்னிலையடைந்தபோது வலுப்பெற்று, விமோசனமே கிடையாது என்று நினைத்துக் கொண்டிருந்த “பாம்பினோவின் சாபம்” முடிவுக்கு வரும் வகையில் 2004ஆம் ஆண்டு இறுதியில் வர்ல்ட் சீரிஸ் வென்றபோது உச்சம் தொட்டது. அவை வீரம் சொறிந்த நாட்கள், யான்கீஸ், ரெட் சாக்ஸ் அணிகளுக்கிடையே நிலவிய பகைமையை விவரிக்க ஒரு நவீன ஹோமர் பிறந்து வர வேண்டும்.

ஐபிஎல் -10 : க்ரிக்கெட் கோலாகலம்

200, 230 என்றெல்லாம் அணிகளின் ஸ்கோர்கள் தவ்விய கதைகளைப் பார்த்தால் போதுமா? நூறுக்கும் கீழே அணிகள் நொறுங்கிவிழுந்த ஐபிஎல்-இன் அபத்தக்கதைகளைப் பார்க்கவேண்டாமா? போனவருடம் கீழ்வரிசையில் இருந்த பஞ்சாப் இந்தவருடம் முதல் நாலுக்குள் வரக் கடும் முயற்சி செய்தது. மும்பைக்கெதிராய் 230 போட்டுக் கலக்கிய இந்த அணி, டெல்லியையும் ஒருகை பார்த்தது

பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்

ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வான்கர் பாலு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனைப் புள்ளிவிவரங்களே சாட்சி. … 1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வான்கர் பாலு. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

பாராலிம்பிக் வீரர்கள்

மனித உடலின் சாத்தியங்கள்தான் எத்தனை, எத்தனை? உடல் குறைகள் ஆர்வமும் ஊக்கமும் நிறைந்து ததும்பும் உள்ளத்தை அடக்கிவிட முடியாது என்பதற்கு ரியோவில் நடந்த பாராஒலிம்ப்க்ஸ் ஓர் உதாரணம். செயற்கை காலுடன் எத்தனை வேகமாக ஓடுகிறார், ஒற்றைக் கை இல்லாமல் கடுமையான நீச்சல் போட்டி, ஒற்றைக்காலால் உயரம் தாண்டுகிறார். சக்கர “பாராலிம்பிக் வீரர்கள்”

காலாவதியாகிவிட்டதா டெஸ்ட் கிரிக்கெட்?

அக்டோபரில் வரவிருக்கும் ஐசிசி மீட்டிங்கில், டெஸ்ட் கிரிக்கெட்டிற்கான உலக சேம்பியன்ஷிப் பற்றிப் பிரஸ்தாபிக்கப்படும் எனத் தெரிகிறது. அதாவது, ஐசிசி தரவரிசைப்படி, உலகின் முதல் இரண்டு இடங்களில் உள்ள டெஸ்ட் அணிகள் சேம்பியன்ஷிப்பிற்காக, ஒரு நடுநிலை மைதானத்தில் (neutral ground) மோதவேண்டும்; இந்த சேம்பியன்ஷிப் போட்டி இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படவேண்டும் என ஒரு திட்டம் வலம் வந்துகொண்டிருக்கிறது. இப்போது இருப்பதைப்போலவே இரு நாடுகளுக்கிடையே நடத்தப்படும் டெஸ்ட் தொடர்பற்றிய தேதிகள், ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் போர்டுகளே பேசித் தீர்மானித்துக்கொள்ளலாம் எனப் பொதுவான கருத்து நிலவுகிறது. அதாவது, இரு தரப்பு டெஸ்ட் மற்றும் பிறவகைக் கிரிக்கெட் தொடர் விஷயத்தில் ஐசிசி மூக்கை நுழைக்கவேண்டிய அவசியம் இல்லை. ஐசிசி உறுப்பினர்-நாடுகள், டெஸ்ட் கிரிக்கெட்டை புதுப்பிக்க, மேலும் புதிய யோசனைகளை சொல்லக்கூடும்.

மகரந்தம்

இது அறிவுலகத்தை நோக்கிய விமர்சனம். தற்போது இணையத்திலும் தமிழ் இலக்கிய கலை பண்பாட்டு சூழலிலும் புழங்கும் பெரும்பான்மையான சிந்தனையாளர்கள் படிக்க வேண்டிய சிறு கட்டுரை. விமர்சனமாக எடுத்துக்கொள்ளும் சிந்தனையாளர்கள் மறுப்புத் தெரிவிக்கலாம். அப்படி தெரிவிக்கும் தோறும் இந்த கட்டுரைக்கு வலு சேர்க்கும்படியாக அமைந்துவிடும் என்பதுதான் நிதர்சனம்.

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்: புதிய பயிற்சியாளர் – புதிய பாதை

ஐந்து வருடங்கள் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்தின் ஜான் ரைட் அறிமுகப்படுத்திய buddy system என்று அழைக்கப்பட்ட, ஒரு பௌலர்- ஒரு பேட்ஸ்மன் என ஜோடி, ஜோடியாகப் பந்துவீச்சு, பேட்டிங் எனப் பயிற்சி செய்தலை கும்ப்ளே மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளார். அதே சமயம், நெட்-பயிற்சியை உன்னிப்பாகக் கவனித்து இந்திய வீரர்களுடன் அவர்களது பேட்டிங் செய்யும் முறை, பௌலிங் ஆக்‌ஷன் போன்றவைகளில் ஏதேனும் குறை தெரிந்தால், மாற்றம் தேவைப்பட்டால் அதுபற்றி அவர்களுடன ஒன்றுக்கு ஒன்றாய் பேசி, கவனத்தைக் கொணர்கிறார். தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் அவர்களை முறையே பௌலிங் அல்லது பேட்டிங் செய்யவைத்துக் கூர்ந்து கவனிக்கிறார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் தீராத பிரச்சினைகள்; இந்திய அணியின் டூர் சர்ச்சைகள்

இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில், ஜிம்பாப்வே போன்ற வலிமையற்ற அணியுடன் மோத நேர்கையில், எதிரணிகள் பொதுவாக, திறமைகாட்டுகின்ற ஆனால் சர்வதேச அனுபவமற்ற வீரர்களை சோதிப்பதற்காக அணியில் சேர்ப்பது வழக்கம். அதைத்தான் இந்திய கிரிக்கெட் போர்டும் செய்தது. அதே சமயத்தில் ஜூலை-ஆகஸ்டில் வரவிருக்கும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 4 -மேட்ச் டெஸ்ட் தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அதனால், கிட்டத்தட்ட ஓய்வின்றி இந்தியாவுக்காகத் தொடர்ந்து விளையாடிவரும் அனுபவ வீரர்களுக்கும், அத்தகைய தொடருக்குமுன் போதிய ஓய்வு கொடுப்பது உத்தமம் என நினைத்திருக்கவேண்டும்.

வினைத்திட்பம் + மனத்திட்பம் = லெப்ரான் ஜேம்ஸ்

எல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.

விம்பிள்டனை எதிர்நோக்கி

இன்று தர வரிசையின் முதல் பத்தில் இருப்பவர்களில், 25 வயதுக்குக் கீழே இருப்பவர் ஒரே ஒருவர்தான். முதல் ஐந்து வீரர்கள் அனைவரும் 28 வயதைக் கடந்தவர்கள். மூன்றாம் இடத்தில் இருக்கும் பெடரருக்கு வயது 34.. ப்யான் போர்க் 11 கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வென்று ஓய்வு பெற்றபோது அவருக்கு வயது 26 தான் என்பதைப் பார்க்கும்போது இன்று டென்னிஸ் எவ்வளவு தூரம் வயதானவர்களின் விளையாட்டாகிவிட்டது என்பது தெரியும். அதனாலேயே அதன் பிரபல்யமும் சற்று குறைந்து விட்டிருக்கிறது என்றும் தோன்றுகிறது. 16 வயதில், விம்ப்ள்டனும் 19 வயதில் அமெர்க்க ஒபனும், தன் 20 வயதிற்குள் மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று விட்ட பெக்கர், சாம்பிராஸ், போர்க் போன்ற இளம் வீரர்கள் இன்று எங்கே?

டி—20 கிரிக்கெட்: இந்தியா–ஜிம்பாப்வே தொடர், 2016

இரு அணிகளும் ஆளுக்கொன்றாக வென்றிருந்ததால் தொடர் வெற்றிக்கான மூன்றாவது போட்டி ரசிகர்களிடையே உற்சாகத்தைக் கிளப்பியிருந்தது. இந்த முறை ஜிம்பாப்வே டாஸ் வென்று இந்தியாவை உள்ளே இறக்கியது. துவக்க வீரர் மந்தீப் சிங் மலிவாக வெளியேற கே.எல்.ராகுல் அருமையாக ஆரம்பித்தார். ஆனால் வேகப்பந்து வீச்சாளர் மட்சிவாவின் வெளியே சீறிய ஒரு பந்தை க்ராஸ்-பேட் செய்ய முயன்று தமது ஸ்டம்ப்பின் மீதே திருப்பிவிட்டு தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு பெவிலியன் திரும்பினார். வந்ததும் வராததுமாய் இல்லாத ரன்னுக்காகக் குடுகுடுவென ஓடிய மனிஷ் பாண்டே நேரடித் த்ரோவில் ரன் அவுட்.

முகமது அலி

இன்றைக்கு ‘கதம்பத் தற்காப்புக் கலை’களில் (Mixed Martial Art) வீரர்கள் வீசத் துடிக்கும் நங்கூரக் குத்தின் (Anchor punch) பிதாமகன் முகமது அலி. கிட்டத்தட்ட தலையில் கொட்டுவது போன்ற பாவனையில் நேராக வீசப்படும் குத்து. முதன்முதலில் இந்தக் குத்தினை முகமது அலியிடமிருந்து தாடையில் வாங்கி வீழ்ந்தவர் சன்னி லிஸ்டன். ஆண்டு 1965. எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதான தோற்றத்தை உண்டாக்கி எதிரியை அழைத்து, எதிரி தாக்குவதற்கு வந்தவுடன் அதிவேகமாக எதிரியைத் தாக்கி வீழ்த்தும் வியூகம் இது. இந்த வீச்சில் முகமது அலி, அவரேகூட தனது குத்து இத்தனை வேகத்தில் வீசப்பட்டிருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை, காரணம், தான் குத்தினை வலக்கரத்தால் வீசிய பின் தனது எதிராளி …

அழிக்க வந்த போலி காருண்யம்

தென் இந்தியா முழுக்கசுற்றி வந்திருக்கிறேன். இந்திய மாட்டினத்திலேயே கர்நாடக ஹள்ளி கலைகள் போல அழகும் கம்பீரமும், ராஜாம்சமும் பொருந்திய காளைகளை நான் பார்த்ததில்லை. காங்குராஜ், கென்வாரி, சாகிவால், ஒங்கோல், நகோரி போன்ற இந்திய மண்ணுக்கே உரிய காளைகளோடு ஒப்பிட்டே இதை முன் வைக்கிறேன். புலிக்கு ஆனைமலையிலும் சத்தியமங்கலத்திலும் சரணாலயம் ஏற்படுத்தி விட்டாரகள். அழிந்து வரும் இந்த அபூர்வ காளை இனங்களுக்கு விளங்கு நேய ஆர்வலர்கள் மாற்று ஏற்பாடேனும் செய்து வைத்திருக்கிறார்களா? சாத்தியம்தானா? புலி, சிறுத்தை, செந்நாய்களுடன் இந்த பசுவினம் வாழ்ந்து விடுமா? காட்டை விட்டுப் பிரிந்து 3000 ஆண்டுகள் ஆகிவிட்டன. மனிதனை நம்பி மேய்ச்சல் செய்கின்ற இனமாக சங்க காலத்திற்கு முன்பிருந்தே ஆகி விட்டது. கர்நாடகத் துளு மக்களின் பாரம்பரிய சேற்று காளை விரட்டான ‘கம்பளா’ என்ற எருமை விளையாட்டுக்கு அங்கீகாரம் அளிக்கிறது நீதிமன்றம். விவசாய தமிழ் மனங்களின் தொப்புள்கொடி உறவிலிருந்து பிரிக்கிற சட்டம் வருமானால் வீட்டு விலங்கான இந்த இனங்கள் அழிவது உறுதி. மாடுகள் துள்ளிக் குதித்து ஓடவில்லை என்றால் மூக்கடைப்பு வந்து அவதிப்படும்.
பிரசித்தி பெற்ற ஸ்பெயின் காளை சண்டையல்ல, கணத்தில் குத்தி வீழ்த்துவதற்கு. தோற்றாலும் வென்றாலும் மாடுகள் வீட்டிற்கு வந்ததும் குளிக்க வைத்து தாடையை அணைத்துக் கொஞ்சுவர். அலுப்பு அகல ஒற்றைச் சாக்கை மடித்துப் போட்டு முதுகு தேய்த்து விடுவர். அவர்களுக்கு மாடு ஒரு பிள்ளை. நீங்கள் கி.ரா.வின் ‘குடும்பத்தில் ஒரு நபர்’ கதையை …

சேவாக் ⊕ முல்தானின் சுல்தான்

சிறந்த மட்டையாளராக ஆவதற்கு இள வயதிலிருந்தே பயிற்சியாளர்கள் மட்டையாளர்களை. V யில் ஆடச் சொல்லுவது வழக்கம். இந்த V என்பது,மட்டையாளரின் காலடியில் தொடங்கி, மிட் ஆன், மற்றும் மிட் ஆப்.என்ற நிலைகளுக்கு இரு கோடுகள் போட்டால் வருவது. பந்தை இந்த V க்குள் மட்டுமே செலுத்தி ஆட முயற்சிக்கும் போது பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஆட்டமிழக்கும் வாய்ப்புகள் குறையும் என்பதே அதன் அடிப்படைக் கோட்பாடு. ஆனால் தனிச் சிறப்புவாய்ந்த சேவக் போன்ற மட்டையாளர்களுக்கு இது பொருந்தாது. அப்படிச் சொல்லும்போது இதையும் சொல்ல வேண்டும்; சேவாக்கிற்கும் ஒரு V உண்டு…

ஆறு நொடி ஆட்டங்கள்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பார்க்கும்போது சில தருணங்கள் எப்போதும் மனதில் நிற்கும். பாகிஸ்தானின் மிகச் சிறந்த மட்டை வீரர்களில் ஒருவர் என்று கருதப்படும் ஜாவேத் மியன்தாத், மரபை மீறிய நடவடிக்கைகள் கொண்டவராகத் தெரிய வந்தவர் என்பதால் ஒரு அளவு பாகிஸ்தானிலும், வேறு பல நாடுகளிலும் பிரபலமானவர். இவர் “ஆறு நொடி ஆட்டங்கள்”

குறைவழுத்த மண்டலம்: ஊதி பெரிதாக்கும் அமெரிக்கன் ஃபுட்பால்

சியாட்டில் quarterback ரஸ்ஸல் வில்சன் பந்தைத் தன் இன்னொரு வீரரை நோக்கித் தூக்கி எறிந்தார். சரியாகத்தான் எறிந்தார். ஆனால் பந்தைப் பிடிக்க முயன்ற சியாட்டில் வீரரின் பின்னால் இருந்து பேட்ரியட்ஸ் வீரர் மால்கம் பட்லர், மின்னல் வேகத்தில் பாய்ந்து எதிராளியின் பந்தைப் பிடித்துவிட்டார். மியாண்டாட் இறுதிப் பந்தில் சிக்ஸர் அடித்ததற்கு ஈடு இது. சியாட்டில் ரசிகர்கள் மொத்தமும் உறைய, பேட்ரியட்ஸ் ரசிகர்கள் நடுவே மால்கம் பட்லர் தெய்வமானார். தொலைக்காட்சியில் வர்ணனையாளர்களால் நம்பவே முடியவில்லை. கைக்கு அருகில் வெற்றி இருந்தபோது எந்த முட்டாள் ரஸ்ஸல் வில்சனுக்குத் தூக்கி எறிய ஆணைக் கொடுத்தது என்பதுதான் அடுத்த இரண்டு நாட்களுக்குப் பேச்சு.

வி ராம்நாராயணன் – ஒரு முதன்மை மனிதனின் கிரிக்கெட் நினைவுகள்

நான் கவனித்த தமிழ்நாடு- ஐதராபாத் ஆட்டங்களில் தமிழகத்தின் தோல்விக்குக் காரணமான ஒரு பந்து வீச்சாளர் வி.ராம்நாராயண். தமிழ்நாட்டுக்கு வெங்கட்ராகவனும், வி.வி. குமாரும் என்றால், கர்நாடகத்துக்கு பிரசன்னாவும், சந்திரசேகரும். ஆனால், ஹைதராபாத்துக்கு என்றால் என் நினைவில் வி.ராம்நாராயண் மட்டும்தான். கர்நாடகத்தின் பிரசன்னா, சந்திரசேகர் போன்ற ஜாம்பவான் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு தண்ணி காட்டிவிடும் தமிழக மட்டையாளர்களான வி. சிவராமகிருஷ்ணன், டி .ஈ. ஸ்ரீநிவாசன், ஜப்பார் ஆகியோர் ஏனோ ராம்நாராயணிடம் பதுங்கினர். அப்போது அவர் ஒரு இடதுகை சுழல் பந்து வீச்சாளர் என்றே நினைத்திருந்தேன்.

பை பை MSD

எம். எஸ். தோனி டெஸ்ட் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதில் ஆச்சரியப்பட பல காரணங்கள் உண்டு. ஒருதொடரின் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தன் கடைசி ஆட்டத்துக்கு பின்னால் நடந்தபத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்றி மூச்சு கூடவிடவில்லை. மைதானத்தைச் சுற்றிய சம்பிரதாயமானஓட்டமோ (lap of honour). சொற்பொழிவோ, கண்ணீர் மல்கிய விடைபெறுதலோ இருக்கவில்லை. செய்தியாளர்களுக்கென விடுவிக்கப்பட்ட ஒரு அறிவிப்பு மட்டுமே. இந்த முடிவின் தருணம் மற்றும் காரணங்களைப்பற்றி நாம் விவாதிக்கலாம். அவரது உடல் சோர்ந்துவிட்டதா அல்லது அவரது மனதுக்குப் போதும் என்றாகி விட்டதா?

சின்னச்சின்ன சிந்தனைச்சோதனைகள்

ஒரு கிராமத்தில் சில நூறு ஆண்கள் வாழ்வதாகக்கொள்வோம். அதில் பலர் தங்கள் முகத்தை தாங்களே சவரம் செய்து கொண்டு விடுகிறார்கள். மற்றவர்கள் சவரம் செய்துகொள்ள அதே கிராமத்தில் வாழும் நாவிதரை நாடுகிறார்கள். கிராமத்தில் இருப்பவர் ஒரே ஒரு ஆண் நாவிதர்தான். அவர் தனக்குத்தானே சவரம் செய்து கொள்கிறார். இப்போது நாவிதரிடம் சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும், தாங்களே சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும் பிரித்தால், நாவிதரை எந்த அணியில் சேர்க்க வேண்டும்?

ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்கள்

“சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களுக்குத் தடையாய் இல்லாமல் இருந்திருந்தால் மொரோக்கோவில் பல பெரிய பெண் விளையாட்டு வீராங்கனைகள் உருவாக்கியிருப்பார்கள்” என்றார் . “பலரும் 13 வயதில் தொடங்கி 18 வயதில் நிறுத்திவிடுகிறார்கள் ஏனெனில் இது பெண்களுக்கானதல்ல என அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.” என்றார்.

மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா?

மார்கஸ் பன்னிரெண்டாம் வகுப்பு முடியும் போது அவருடைய பள்ளி ஆலோசகரிடம் செல்கிறார். அவருடைய ஆலோசகரும், “கல்லூரியில் என்ன படிக்கப் போகிறாய்? என்னவாகப் போகிறாய்?” என வினவுகிறார். இவரோ, “எனக்கு கணினி விளையாட்டு ரொம்பப் பிடிக்கும்! எனவே அவற்றை எழுதப் போகிறேன்!” என சொல்கிறார். பள்ளி ஆச்சாரியரும் அவருக்குத் தெரிந்த நல்ல வார்த்தையெல்லாம் சொல்லி அந்த வழியில் சென்றால் உருப்பட மாட்டாய் என உபதேசித்து அனுப்பியிருக்கிறார்.

ஸச்சின் எனும் ஆச்சரியம்

பித்துப் பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான (egg and bacon )டை கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, பெண்கள் கிறீச்சிடுவதை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின் அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும்?…’

இறுதியில் உறுதி – எம்.எஸ்.தோனி

இது கிரிக்கெட் ஆட்டமில்லை; போக்கர் விளையாட்டு. M.S.தோனி மிகவும் அமைதியாய், அலட்டிக்கொள்ளாமல் அசாத்திய தந்திரத்துடன் இருந்தார். ஏமாற்றினார், ஏமாற்றிக் கொண்டே இருந்தார். ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்துகொண்டிருக்கையிலும் அபாயத்தை அதிகரித்துக்கொண்டு போனார். தன் அதிருஷ்டத்தின் மேல் சவாரி செய்து, ஒரு ரன் அவுட்டிலிருந்து பிழைத்து, இஷாந்த் ஷர்மாவுடன் இரண்டு அபாயகரமான குழப்பங்களிலிருந்து தப்பித்து கடைசியில் ஆட்டத்தை முடித்தார்.

ஊடகங்கள் ஆடும் கிரிக்கெட்

இதுதான் இன்றைய கிரிக்கெட் பற்றிய செய்திகளின் பெரிய முரண்பாடு. இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சதா சர்வகாலமும் காமிராக்களின் ஒளியில் இருக்கிறர்கள். ஓட்டல் லாபிகள், ஏர்போர்ட்டுகள், பார்ட்டிகள், சிறப்பு விற்பனை விழாக்கள், ப்ராக்டீஸ் நேரம் என்று எங்கு பார்த்தாலும் நிருபர்களும் விசிறிகளும் அவர்களை மொய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கவனமாய் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு அடியும், சறுக்கலும் கவனிக்கப்பட்டு சிரத்தையுடன் செய்தியாக்கப்படுகிறது.

விளையாட்டு, வினை, வினாக்கள்

இதையெல்லாம் விட பெரிய விஷயம்: இது தனித்த சம்பவம் அல்ல. மூன்று ஆட்ட வீரர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தப்பித்துவிட்டார்கள். ஒரு கூடையில் சில அழுகிய ஆப்பிள்கள் என்ற கதை இல்லை இது, பெரிய பனிப்பாறையின் நுனி என்கிற கதை. இதை BCCI நிர்வாகமும் மேலிடமும் உள்வாங்கிக்கொண்டால், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எளிது.

உழைப்பாளி எறும்பு : செதேஷ்வர் பூஜாரா

(பூஜாரா) சிரமம் எடுத்து ஆடுபவரோ இல்லை. அவரிடம் கள்ளத்தனமும் இல்லை, அடாவடியும் இல்லை.. அவரிடம் இருப்பது ஒரு முழுமை. இவரை ஆட்டம் இழக்கச் செய்வது எதிர் அணிக்குக் கஷ்டமான வேலை. லீக் மேச்சுகளின் வழக்குப்பேச்சில் சொன்னால் அவர் ஒரு ‘திடமான’ பேட்ஸ்மன்., ‘த்த்த்த்த்த்த்த்………..திடம்” இந்தப் பதம் எத்தனை நீளமாகிறதோ அவ்வளவு கவனம் செலுத்தப்படவேண்டியவர் அவர் என்று அர்த்தம்.

ஐ பி எல், கூடைப்பந்து மற்றும் கேலிக்கூத்து முரண் புதிர்

ஐ பி எல் என்பது கிரிக்கெட்டா? டி 20 என்பது கிரிக்கெட்டா? இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்.அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா? யாரேனும் கிரிக்கெட் என்பதை உங்களுக்கு வரையறுத்தார்களா?

ராஹுல் திராவிட் – முடி துறந்த டெஸ்ட் சக்ரவர்த்தி

ராஹுல் திராவிடின் ஓய்வினால் இந்தியா நம்பர் 3 பேட்ஸ்மேனை மட்டுமே இழந்திருக்கிறது, இந்திய கிரிக்கெட்டின் தூதுவரை இழந்து விடவில்லை. இந்திய கிரிக்கெட்டின் தூதுவர் என்று நான் அவரைச் சொன்னதன் காரணம் புரிய, சமிபத்திய ஆஸ்திரேலியத் தொடரின் போது அவர் நிகழ்த்திய பிராட்மேன் உரையை நீங்கள் முழுவதுமாகக் கேட்கவேண்டும். இன்றைய தேதியில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலதரப்பட்ட முகங்களை இந்த அளவுக்குத் துல்லியமாக எந்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் முன்வைக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.

சென்னையில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்

இது நடந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்றைக்கு கிரிக்கெட் உலகில் முதலாம் இடத்தில் இருக்கும் இந்தியா, இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமான ஒரு திருப்புமுனை தொடர் ஒன்று உண்டு. இந்தியாவில் 2001ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் தொடர்தான் அது. இந்தியாவே பார்த்திராத, ஒரு புதிய கேப்டனாக கங்குலி உருப்பெற்றார். ஒரு போராடும் இந்தியாவை, பணியாத இந்திய அணியை உருவாக்கியதில் கங்குலியின் பங்கு அதி முக்கியமானது.

காமன்வெல்த்: கோலாகலமாய் முடிவுறும் குழப்பம்

பளுதூக்கும் போட்டியில் தங்கம் வாங்கிய ரேணு பாலா வீடு திரும்ப எந்தவித போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரக் காத்திருப்புக்குப்பின் ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தார். இந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் தங்கள் திறமையை நிரூபித்து வரும் இந்திய வீரர்களின் மன உறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

நவீன கால கிரிக்கெட் – விளையாட்டல்ல

இந்த ஊழல் விவகாரங்கள் இத்தோடு களையப்பட்டுவிடுமா என்றால் இல்லை என்பதுதான் சோகமான நிதர்சனம். கிரிக்கெட் இப்போது இருக்கும் தன்மையில் தொடர்ந்து விளையாடப்படுமானால் இந்த பிரச்சனைக்கு முடிவு கிடையாது. கிரிக்கெட்டின்சூழமைப்பே முற்றிலுமாக மாறிவிட்ட நிலையில் ஆட்டத்தின் விதிகளும் தன்மைகளும் அப்படியே இருப்பதில் என்ன நியாயம்?

காமன்வெல்த்: கல்மாடி கட்டும் மண்மாடி

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஏற்பாட்டில் தாமதம், பெரும் அளவிலான ஊழல், குளறுபடிகள் என்று கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி இருக்கும் சுரேஷ் கல்மாடியின் லீலைகளையும் விளையாட்டை வெறும் பொழுதுபோக்கு என்று மட்டும் இல்லாமல் வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டு உண்மையான அர்ப்பணிப்போடு உழைக்கும் சாந்தி போன்ற ஏழை விளையாட்டு வீரர்களின் நிலையையும் ஒருமுறை நினைத்துப்பாருங்கள். ரத்தக்கண்ணீர் வரும். இத்தனை செலவு செய்து தன் பெருமையை நிலைநாட்டிக்கொள்ளும் இந்திய அரசு, இந்த செலவில் ஒரு சிறு சதவீதத்தை நம் விளையாட்டு வீரர்களின் நலனுக்கு செலவிட்டால் கூடப்போதும். எவ்வளவோ சர்வதேசப் பெருமைகளை நாம் ஈட்டிக்கொள்ள முடியும். மிகப்பெரும் மனிதவளம் உள்ள இந்தியா, ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் என்றாவது முதல் பத்துக்குள் வர முடிந்ததா?

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2010

20-20ல் உலகக்கோப்பை வெல்லுவோமா மாட்டோமான்னு இந்தியா முழுவதும் காலைல காபி குடிச்சதுல இருந்து இரவு படுக்கையை போடற வரை பேசிக்கொண்டிருக்க, சத்தமேயில்லாம நம்மூரு விசுவநாதன் ஆனந்த் வெற்றிகரமா தன்னோட செஸ் உலக சாம்பியன் பட்டத்தை மற்றொரு முறை தக்க வச்சிட்டிருக்கார். இன்னுமொரு இரண்டு வருஷத்துக்கு ஆனந்த்தான் சேம்பியன். ஒரு டோர்னமென்ட்லயும், இரண்டு மேட்சிலயும், அதுவும் இரண்டு பெரிய ஆட்களுக்கு எதிரா விளையாடி ஜெயிச்ச ஆனந்தின் இந்த உலக சேம்பியன் பட்டம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டது.

ஆனந்த்-40 – ஒரு ரசிகானுபவம்

ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும்.

பதிமூன்றாம் எண்ணும், உற்சாக நம்பிக்கைகளும்

சிறுவயதிலிருந்து தொடர்ந்து அழுத்தி உந்தப்பட்டு, பிராபல்யத்தை நோக்கிப் பயணிக்கும் ஒவ்வொருவருமே சந்திக்கும் மனவலியை அகாஸி சந்தித்திருக்கிறார். இதே மனவலியை நாம் இப்போது தொலைக்காட்சிகளில் நடைபெறும் பாட்டுப்போட்டிகள், நடனப்போட்டிகள் வழியாக நம் குழந்தைகள் மீதும் சுமத்திக் கொண்டிருக்கிறோம். வெற்றிபெற்ற குழந்தைக்குக் கிடைக்கும் பிராபல்யம், பணம், விளம்பரங்கள் வழியாக ஒவ்வொரு குழந்தை மீதும் நாம் ஒரு பெரிய பாறாங்கல்லைப் போன்ற மன அழுத்தத்தை வைத்துக் கொண்டிருக்கிறோம்.

111

சமீபத்தில் மறைந்த நடுவர் டேவிட் ஷெபர்ட் குறித்த கட்டுரை இது: டேவிட் ஷெபர்ட் தன் சிறுவயதில் கிராமத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவருக்கும் இந்த ‘நம்பிக்கை’ ஏற்பட்டிருக்கிறது. நெல்சன் நம்பரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் நீங்க வேண்டுமென்றால் செய்ய வேண்டிய பரிகாரம், பேட்டிங் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பது.