வலி

ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.

ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு

தமிழில்: வே. சுவேக்பாலா Ph.D வைரஸ் இயற்கையிலிருந்தா? அல்லது மனிதனின் தவறால் தோன்றியதா? நியூயார்க்கர் என்ற அமெரிக்க இதழில் (12/10/2021) வந்த கட்டுரையின் தமிழாக்கம் – புரிதலுக்காக மிகச்சிறிய அளவில் (கருத்தாக்கம் மாறாமல்) மாறுதல் செய்யப் பெற்றுள்ளது.  2019 ஆம் ஆண்டின் இறுதியில், முதன்முதலில் கொரோனா வைரஸ் தோன்றியதாக “ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு”

செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2

This entry is part 27 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தை நாம் உட்கொண்டால், மூளை குழம்பிவிடுகிறது. ‘ஏராளமான சர்க்கரையை உண்கிறான் இந்த மனிதன்.’ இதைச் சமாளிக்க நிறைய கணையநீரை (insulin) உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் அளவுக்குக் கணையநீர் தேவையில்லை. இதனால், அநாவசியமாக உணவைக் கொழுப்பாக மாற்றுகிறது. இதனாலேயே, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள்

ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?

வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்? ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் “ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?”

மெய்நிகர் நோயாளிகள்

கணினிகள், மருத்துவர்களின் சிறப்பிடத்தைப் பெற்றுவிடும் என்று கூறப்பட்டிருப்பதை மெய்ப்பிப்பதுபோல் ஒவ்வொரு நாளும் புது கணினிச் செயல்முறைகள் வெளிவந்து மிகத் துல்லியமாக நோயையும் அதன் வீரியத்தையும் அதற்கான சரியான தீர்வுகளையும் கண்டறிந்து கையாள உதவுகின்றன.

வலிதரா நுண் ஊசிகள்

வளர்ந்து வரும் பத்து தொழில் நுட்பங்கள்-2020 என்ற அறிமுகக் கட்டுரையைச் சென்ற இதழில் பார்த்தோம். ஒவ்வொன்றாக அவற்றை விரிவாக இப்போது பார்க்கலாம். திரைப்படங்களில் தந்தையின் அன்பைக் காட்டும் விதமாக ஒரு காட்சி இடம் பெறும். அவரது குழந்தைக்கு மருத்துவர் ஊசி போடுவார்; இவர் கண்களில் நீர் திரளும். இன்றும் “வலிதரா நுண் ஊசிகள்”

தீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்

சுமார் பத்து ஆண்டுகள் முன்பு இந்தியாவில் சற்றேறக்குறைய 32,000 பெண்கள் மகப்பேற்றின்போது ஓர் ஆண்டில் இறந்தார்கள். முதன்மை தாய் சேய் நல மருத்துவமனையும் 2018-ல் அரசாங்கம் கொண்டுவந்த 18 மாத மருத்துவச்சிப் பயிற்சியும் இந்த நிலையைச் சற்று மாற்றி இறப்பைக் குறைத்தன. இருந்தும் போக வேண்டியதென்னவோ வெகு தூரம்.

கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா?

இன்றைய உலகம் நடுக்கத்தோடு உச்சரிக்கும் நோயின் புனை பெயர் கோவிட் -19. முழுப்பெயர் கொரோனா வைரஸ் 2019. கொரோனாவுக்கு ஏன் அஞ்சவேண்டும்? ஏனெனில்  அதன் போக்கில் விட்டுவிட்டால் உலக மருத்துவக் கட்டமைப்பு நொறுங்கிவிடும். எனவே தான் உலக சுகாதார நிறுவனம் (WHO ) முதற்கொண்டு எல்லோரும் பதறிப்போய் இருக்கிறார்கள். “கல்லீரல் நோய்கள் & 2022 வரைக்கும் சமூக விலக்கா?”

யோகாப்பியாசம்: நன்மை, தீமைகள்

ஆஸ்டியோபதி மருத்துவ மன்றத்தின் யோகத்தைப் பற்றிய அறிக்கையில் குடும்பநல மருத்துவரும் குந்தலினி யோகத்தில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளருமான நெவின் சொல்வதாவது யோகப்பயிற்சியின் முக்கிய அம்சம் உடலைத் திடப்படுத்துவதும் உடலையும் மனதையும் ஒருங்கிணைப்பதுதான் என்கிறார். மேலும் ஆஸ்டியோபதி மருத்துவத்தில் வியாதி வருமுன் தடுக்கும் முறைகளுக்கே முக்கியத்துவம் என்றும் யோகப்பயிற்சியும் அதையே வலியுறுத்துகிறது என்கிறார்.

விண்வெளி மருத்துவம்

நீண்ட நாள் பயணத்தில், புவியீர்ப்பு சக்தியின்மையால், திரவங்கள் உடலின் வெளிப்பா கத்தில் தங்காமல் உடற்மையத்தையும் தலைநோக்கியும் செல்கிறது. இதனால் முக வீக்கமும் தலை வலியும் ஏற்படலாம். சில நாட்களில் இத்திரவம் சிறுநீராக வெளியேறுவதாலும் பசியின்மையாலும் உடல் எடையும் உடல் நீரளவும் குறைகிறது ஆனால் இம்மாற்றங்கள் இதயத்துடிப்பையோ இதய ஓட்டத்தையோ பாதிப்பதில்லை

நூறாண்டு! நூறாண்டு! பலகோடி நூறாண்டு!

இந்து சாஸ்திரம் மனிதர்களின் ஆயுட்காலத்தை 100-120 வருடங்களாக கணித்திருக்கிறது என்பது இதன் மூலம் தெரிகிறது. காஸ்ட்கோ நிறுவனத்தின் மாத சஞ்சிகை, 105 வயதான ஒருவர் 97 வயதான மனைவியுடன் மாதம் ஒரு முறை அவர்களுடைய அரிசோனா மாநிலக் கிளை உணவுக்கூடத்தில் புசிக்கிறார்கள் என்று சிரித்த முகத்துடன் உள்ள அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஒரு குஜராத்தி அன்பரை ஐடகோ மாநிலத்தில் சந்தித்தபோது அவர் அவர் சமீபத்தில் கலிஃபோர்னியாவிலிருந்து அம்மாநிலத்திற்குக் குடியேறியுள்ளதாக கூறினார். ஏனென்று நான் வினவியதற்கு அவர் கூறிய பதில் என்னை வியப்படைய வைத்தது.

செவித் திறனிழப்பு

தமிழகத் திருமணங்களில் காதைப் பிளக்குமளவில் ஒலிபெருக்கிப் பெட்டிகளை அமைப்பது சம்பிரதாயமாகிவிட்டது. இதனால் செவித்திறனிழப்பை அடைந்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையின் தெருக்களில் வாகனங்களின் ஹார்ன் சத்தம் ஓய்வதேயில்லை. சினிமா கொட்டகைகளிலும், கலையரங்குகளிலும், சில சமயம் வீடுகளிலுமே காதை மந்தப்படுத்தும் அளவு சத்தம் நிரம்பியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்களும் மணிக்கணக்கில் இயந்திரங்களின் சத்தத்தில் இயங்க வேண்டியுள்ளது. தீது விளைவிக்கும் சத்தம் உரோம உயிரணுக்களை நேரடியாகவும் வேறு வழிகளிலும் தாக்குகிறது.

வாழ்வின் இறுதிக் காலங்களில் பிறரைச் சார்ந்திருத்தல்

முதியோர்களின் எண்ணிக்கை இவ்வாறு கூடிக்கொண்டே போவது தொடர்ந்தால் இதனுடைய விளைவுகள் இம்முதியோரைப் பேணும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நவீன சமுதாயத்தில் முதியோர்களிடையே விவாகரத்தும், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போவதால் இவர்களைச் சிறிதளவே சார்ந்திருக்கும் முதியோர்களின் நிலைமை எல்லா நாடுகளிலுமே கடினமாகி வருகிறது….உறவினரல்லாத, பண வசதியற்ற முதியோர்களின் நிலை மிகவும் கடினமான ஒன்று என்பது மட்டுமல்லாமல் சமுதாய சமத்துவமின்மைக்கு முக்கிய மேற்கோளாகவுமாகிறது. அதே சமயம், முதியோரைப் பேணிக் காக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்புமுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. 

நரம்புத் தூண்டல்- மருத்துவ சாதனங்களும் சாதனைகளும்

மின்முனைகளை மூளையின் உட்பாகங்களின் பதிப்பது வலிப்பு, ஸ்கிட்ஸஃப்ரீனியா போன்ற வியாதிகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவும். சில மூளைபகுதிகளைத் தூண்டினால் வலியுணர்வைத்  துண்டிக்கலாம் என்பது  தற்செயலாக தெரிய வந்தது. அதன் பின் தலாமஸ்  எனும் மூளைப் பகுதியின் பல பாகங்களில் மின் நுனியை பொருத்துவதின் மூலம்  மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத, நீண்ட காலமாகத் தொடரும் வலியைக் குறைக்க முடியும் என்பது தெரிந்தது. … பார்க்கின்சன் வியாதியினால் ஏற்படும் நடுக்கத்தை செரிப்ரல் பெடன்க்குள் எனும் கீழ்ப்பாகத்தை வெட்டுவதின் மூலம் குறைக்க முடியும்.  ஒரு சமயம் இவ்வறுவை சிகிச்சையை கூப்பர் எனும் அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் செய்து கொண்டிருக்கும்போது  சிக்கலேற்பட்டு  தலாமஸ் பகுதி பாதிக்கப்பட்டது. அதனால் சிகிச்சை முடியுமுன்னரே நிறுத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த பின் அப்பிணியாளரின் கை நடுக்கமும்  இறுக்கமும் முற்றிலும் குணமானது தெரிய வந்தது.

உடல் தடிப்பு- தவிர்ப்பும் நிவர்த்திப்பும்

40லிருந்து 60 வயது உள்ளவர்களிடையே மாதத்தில் ஒரு நாளாவது 10 நிமிடங்கள் விரைவாக நடப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமே என்ற ஒரு அறிக்கை. இருந்தும், சிறிதளவு எடையிழபபிறகும் பலன்கள் உள்ளன 5% எடையிழப்பு இன்சுலினுடைய தாக்கத்தை அதிகரிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. ஒரு வருடத்தில் 8.6% எடையிழப்பை அடைந்தவர்களிடம்,இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மூன்று மாதத்திய சர்க்கரை அளவு ஆகிய எல்லாமே குறைந்து காணப்படுகிறது. சர்க்கரை வியாதிக்கான அறிகுறிகள் உள்ள நபர்கள் 2.8 வருடங்களில் 5.6 கிலோ எடையை குறைத்தால் சர்க்கரை வியாதி ஏற்படுவதை 58% குறைக்க முடிகிறது. இவர்களை 10 வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், மீண்டும் எடை கூடினாலும்,இவ்வியாதி 34% குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

மைட்டோகாண்ட்ரியாவும் உங்களின் அம்மாவும்

மைட்டோகாண்ட்ரியா என்பது செல்லின் ஒரு நுண்ணுறுப்பு ஆகும். இது செல்லுக்குத் தேவையான ஆற்றலைத்தருவதால் இதை ‘செல்லின் ஆற்றல் நிலையம்’ என்கிறோம். இவை செல்லின் சைட்டோபிளாசத்தில் விரவிக்காணப்படுகின்றன. மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டே உண்கிறோம்; தூங்குகிறோம்; சிந்திக்கிறோம்; நேசிக்கிறோம்… அவை எங்கிருந்து வருகின்றன? எப்படி உருமாறுகின்றன? எவ்வாறு நோயைக் கண்டுபிடித்து உங்களை ஆரோக்கியமாக “மைட்டோகாண்ட்ரியாவும் உங்களின் அம்மாவும்”

இந்திய மருத்துவத்தின் அடுக்குகள் 

இந்திய மருத்துவம் என அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகள் என்று ஆயுர்வேதத்தையும் சித்த மருத்துவத்தையும் கூறலாம். இந்த கட்டுரையின் பேசுபொருள் ஆயுர்வேதத்தை அடிப்படையாக கொண்டதாக இருந்தாலும் சித்த மருத்துவத்திற்கும் பொருந்தும். இன்றைய காலகட்டங்களில் மரபான ஆயுர்வேதம், நவீன ஆயுர்வேதம், வணிக ஆயுர்வேதம், தன்னார்வத் தேர்வாக பின்பற்றப்படும் வீட்டு உபயோக ஆயுர்வேதம் என பொதுவாக ஆயுர்வேதம் நான்கு தளங்களில் புழக்கத்தில் உள்ளன என கூறலாம் என்கிறார் மானசி திரோத்கர்.

ஆரோக்கியத்திலும் நோயிலும் குடல் நுண்ணுயிர் சமூகத்தின் பங்கு

தாய்ப்பாலின் வழியாகவும் முதற் சொட்டிலிருந்தே இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் குழந்தையின் குடலில் அடைக்கலமாகின்றன. எவ்வாறு இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் தாய்ப்பாலை வந்தடைகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.. இத்தாய்ப்பாலில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னெவென்றால் இதில் கலந்துள்ள ஆலிகோசாக்கரைட் எனும் நம்மால் செரிக்க முடியாத சர்க்கரையாகும். வெகு நாட்கள் வரை குழந்தைக்கு தேவையில்லாத இச்சர்க்கரை தாய்ப்பாலில்எதற்காக உள்ளது என்ற கேள்விக்குச் சமீபத்தில்தான் சரியான விடை கிடைத்தது. இதுதான் குழந்தையின் குடலைச் சேரும் நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாகும். தாய்ப்பாலில் குழந்தை வளர்ப்புக்கு வேண்டிய எல்லா பொருட்களும் அடங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் நோயின்றி வளர்வதற்கு வேண்டிய நுண்ணுயிர்க் கிருமிகளும் (ப்ரோபயாட்டிக்ஸ்) அவற்றுக்குத் தேவையான உணவும் (ப்ரீபயாட்டிக்ஸ்) அடங்கியுள்ளது என்பதை நினைத்தால் இயற்கை அன்னைக்குத் தலை வணங்காமல் இருக்க இயலவில்லை. 

இந்தியர்களுக்கு மாரடைப்பு அதிகம் வருகிறதா?

இதய ரத்தக்குழாய் மாற்றுவழி சிகிச்சை – இ.ர.மா.சி. இது மாரடைப்பிற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சை. மற்ற இனத்தவர்களை விட இந்தியர்களிடையேதான் இவ்வியாதி அதிகமாகவும் உக்கிரமாகவும் உள்ளது.

சில கொழுப்புவகைகள் பிற இனத்தவர்களை விட இந்தியர்களிடம் அதிக அளவில் சேருவதால் சிறுவயதிலேயே சர்க்கரை வியாதி ஏற்பட காரணமாயுள்ளது. மேலும் இந்தியர்களிடையே இருதயத்தை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சியில் ஈடுபாடு உள்ளவர்கள் ஒரு சிலரே. வருடத்திற்கு 60,000 இந்தியர்கள் இச்சிகிச்சையை பெறுகிறார்கள். அமெரிக்காவில் இச்சிகிச்சையின் எண்ணிக்கை கடந்த பத்து வருடங்களில் முப்பது சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் காரணம் அறுவை சிகிச்சை இல்லாமல் குறுகிய ரத்த குழாய்களை விரிவுபடுத்தும் முறைகளும் (ஆன்ஜியோபிளாஸ்டி ) உட்குழாய்களை (ஸ்டென்ட்) பொருத்துவதும் புழக்கத்தில் வந்துள்ளதே ஆகும். அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களின் இதயம் எவ்வாறு இயங்குகிறது என்ற கேள்வி வாசகர்களிடையே எழலாம்.

 உப்பும் உடல் நீரும்

உணவில் உப்பு அதிகரித்தால் ரத்த அழுத்தம் உள்ளவர்களின் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது என்பது உண்மையானாலும், இது அருந்திய நீரின் அளவு உடலில் அதிகரித்தலாலும்   இருக்கலாம் என்பதை மருத்துவர்கள் நினைவிற் கொண்டால் ரத்த அழுத்த மாத்திரையை அதிகரிப்பதற்கு பதிலாக இந்த நீரை சிறுநீரகங்கள் மூலமாக வெளியேற்றும் மாத்திரையை அதிகரிக்க இயலும். மேற்சொன்ன எனது மருத்துவ நண்பரின் ரத்த அழுத்தத்தைக் குறைத்தது நீரையும் உப்பையும் சேர்த்து வெளியேற்றும் மருந்தேயாகும் என்பதை இங்கே  நினைவில் கொள்ள வேண்டும். நீர் வீக்கத்தை தடுக்க வைத்தியர்கள் பிணியாளர்களின் தினசரி எடை அதிகரிப்பு, ஒரு கிலோவிற்கு மேல் சென்றால் நீரை வெளியேற்றும் மருந்தை அதிகரிக்கச் சொல்வது வழக்கமாய் உள்ளது. இது சிறந்த நிவாரணம். ஏனென்றால் அதிக அளவு உப்பு உணவில் சேர்ப்பது தொடர்ந்து நீடித்தால், இரண்டாவது வாரத்தில் எடை குறைய வாய்ப்பு இருப்பதால் அது நீர் வீக்கம் அதிகரித்திருப்பதை மறைத்து விடலாம்.

நீங்கள் டொக்டரா அல்லது நான் டொக்டரா: மருத்துவர்களும் மாற்றுக் கற்பனைகளும்

டொக்டர்கள் வெறும் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியப்படையினராக குறுக்கப்பட்ட அவலம் நேர்ந்தது. அவர்களுடைய அரசியல் தலையீடு இப்போது வெறும் சம்பள உயர்வுக்கான ஆர்பாட்டங்களாக அல்லது வேலை நிறுத்தங்களாக சுருங்க ஆரம்பித்தன. அவை அந்த தேசங்களின் நவ தாராளவாத அரசுகளுக்கு (Neo Liberal Nations) ஒரு புறத்தில் சுகாதாரத்துறையை தனி உடைமையாளர்களுக்கு விற்பதற்கும் மறுபுறத்தில் அரச மருத்துவ நிறுவனங்களின் ஆதிக்கக் கட்டுடைப்பைத் தீவிரப்படுத்தவும் வழி கோலின… தன்னுடைய நிறுவனத்தின் தேவைக்காக அரசை இயக்கி சொந்த இலாபமீட்டலுக்காக முழுத் தேசத்தின் நலத்தையும் பணயம் வைக்கும் நவ தாராளவாதம் அல்லது பணமுதன்மை கலாச்சாரம் கல்வி,சுகாதாரம் இந்த இரண்டையும் இலவசமாக வழங்குவதை மிகப் பெரும் நஷ்டங்களாகப் பார்க்கிறது.

கற்கால உணவும் தற்கால மனிதர்களும்

ஆதி கால மனிதர்கள் உட்கொண்ட பொட்டாசியம் உப்பின் அளவு 15000 மில்லிகிராம் என்று தெரியவரும்போது, நமது உணவில் பொட்டாசியம் வெகுவாகக் குறைந்து விட்டது என்று தெரிகிறது. மேலும் நமது உணவில் சோடியம் குளோரைடு என்று சொல்லப்படும் சாதாரண உப்பின் அளவு பொட்டாசியத்தை விட மூன்று மடங்காக அதிகரித்து உள்ளது. ஆதிவாசிகள் உப்பை மிகக் குறைந்த அளவே உபயோகித்துள்ளனர். அவர்கள் உணவில் பொட்டாசியம், உப்பைவிட ஏழு மடங்கு அதிகமாக இருந்திருக்கிறது. இதற்கு காரணம் ஆதி மனிதர்களின் உணவில் பிரதானமாக இருந்தவை காய்,கனி, பச்சையிலை, கிழங்கு வகைகளே. இவையெல்லாவற்றிலும் பொட்டாசியம் சத்து மிக அதிகம் உப்புச் சத்து மிகக் குறைவு. தற்போதைய உணவு இதற்கு எதிர் மாறு…..
எடை அதிகரிப்பு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, சிறுநீரகக் கல், எலும்புத்தேய்வு போன்ற நீண்ட நாள் வியாதிகளுக்கு உப்பு அதிகமாகவும் பொட்டாசியம் குறைந்தும் உள்ள தற்கால உணவிற்கு பெரும் பங்கு உள்ளது. ..
பொட்டாசியம் சேர்க்கை ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது; பொட்டாசியம் குறைவது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது என்பதை பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிப்படுத்தியுள்ளன.

இந்தியர்களின் மரபணு வரைபடம் (ஜீனோமிக் மாப்பிங்)

எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் லாபத்தை எதிர் நோக்கியே தொடங்கப்படுகிறது. குளோபல் ஜீனும் இதற்கு விதிவிலக்கல்ல. மக்கள் தொகை, புற்று நோய் புள்ளி விவரம், புதிய மருந்துகளை கண்டு பிடிப்பதற்காக ஒதுக்கப்படும் நிதி போன்றவைகளை கணக்கிட்டு இந்தியா புற்று நோய் மருந்து தயாரிப்பிற்காகவும், புற்று நோய் நிவாரரணத்திற்காகவும் வருடத்திற்கு 1.9 பில்லியன் டாலர் செலவழிக்கும் என்று இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் எதிர்பார்கின்றனர். இத்துடன், சீனா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளையும் சேர்த்துக் கொண்டால் ஒதுக்கப்படும் தொகை எட்டு பில்லியன் டாலருக்கும் மேலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் வருடத்திற்கு 14 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

பார்வையற்றவர்களுககு கிட்டுமோ பார்வை

ஆப்டோஜெனெடிக்ஸ் என்பது மரபணு சிகிச்சையை சேர்ந்தது. முதலில் ஒளியை உணரச்செய்யும் புரதங்களை உற்பத்திசெய்யும் கடற் பாசியிலிருந்து பிரித்தெடுத்த மரபணுக்கள் நுண்ணிய கிருமிகளில் அடைக்கப்பட்டு கண்ணினுள் ஊசியின் மூலம் செலுத்தப்படுகிறது. இந்த மரபணுக்கள் கங்கிளியான் உயிரணுக்களையே ஒளி வாங்கிகளாக மாற்றி அமைக்கின்றது. பிறகு இந்த நோயாளிகள ஒரு நவீன கண்ணாடியை அணிகிறார்கள். இக்கண்ணாடி முதலில் உருவத்தை புகைப்படம் எடுத்து பின் அவ்வுருவத்தை மிகப்பிரகாசமானதாகவும் சிவப்பு நிறமுள்ளதாகவும் மாற்றி உயிரணுக்களால் அடையப்பட்டு அதை சுலபமாக உணரவும் வழி செயகிறது. இம்முறையை கண்ணிழந்த குரங்குகளிடமும் எலிகளிடமும் செயல் படுத்தி வெற்றியடைந்துள்ளதாக ஜென்சைட் முதல்வர் அறிவித்துள்ளார்.

மருத்துவம் – அறிவும் அதிகாரமும்

தடுப்பு மருந்துகளால் பிள்ளைகள் இறந்து போயின என்கிறார்கள். இது மாதிரி பீதியைக் கிளப்ப நிறைய பேர் இருக்கிறார்கள். குழந்தைகள் இறந்தது தடுப்பு மருந்துகளால் மட்டுமே என்று ஆதாரப்பூர்வமாக நிறுவ முடியுமா? கேட்டால் இவர்களே‌ மூடி மறைக்கிறார்கள் என்கிறார்கள். இவை எதுவுமே நிரூபிக்கப் படவில்லை. எல்லாமே தமிழ் கூறும்‌ நல்லுலகம் நன்கு அறிந்த ’நம்பகமான வட்டாரங்கள்’ (ரிலையபிள் சோர்ஸ்) சொன்ன கதை. இதனால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை பிரம்மாண்டமானது. தரவுகள் ரீதியாக இதை நாம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். இதன்மேல் நம்பிக்கையின்றி தடுப்பு மருந்துகள் போட்டுக்கொள்ளாமல் இருந்த ஆட்களையும் இந்த herd immunity என்னும் குழும நோயெதிர் திறன் காப்பாற்றி வந்திருக்கிறது.

இதயமா? நுரையீரலா?

இதயத்தின் மேல் சொல்கிறேன் என்று சத்தியம் செய்வதும் ஒரு வழக்கமாகவே இருக்கிறது. இந்திய பண்பாட்டில் இதயத்திற்கு உள்ள அளவிற்கு நுரையீரலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பஞ்ச தசி போன்ற வேதாந்த நூல்கள் பஞ்ச பூதங்களில் ஒன்றான பிராணன் என்று சொல்லப்படும் வாயுவையே தலைசிறந்ததாக சொல்கிறது. புராணங்களோ வாயுவை பகவானாகவே சித்தரிக்கிறது. அனுமநும் பீமனும் வாயு புத்திரர்கள் என்று தெரியாதவர் ஒரு சிலரே. யோக முறையில், பிராணாயாமம் என்று சொல்லப்படும் மூச்சுக்கட்டுப்பாடு மிகவும் இன்றியமையாதது. யோக நூல்களில், பிராணனை ஐந்தாக பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி வேலை தரப்படுகிறது.

மகரந்தம்

உலகெங்கும் பரவியுள்ள ஒரு மத அமைப்பு இந்தியருக்கு அனேகமாக அதன் இயல்பெயரால் தெரிய வந்திராது. மார்மன் இயக்கம் என்பது தொடர்ந்து அமெரிக்காவில் பரவி வருகிறதோடு, அமெரிக்காவின் பெரும் நிதிநிறுவனங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் என்று பற்பல தொழில் அமைப்புகளையும் ஆள்கின்றது. இதன் கணக்கு வழக்குகள் சாதாரணருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் ஊடகங்களுக்குமே எட்டாத ரகசியங்கள். இதன் சில ரகசியங்கள் இப்போது புலப்படத் துவங்கி உள்ளன. கார்டியன் பத்திரிகை இந்த மார்மன் கிருஸ்தவ இயக்கம் எப்படிப் பல பெருநகரங்களில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறது, அமெரிக்காவின் சில மாநிலங்களில் மார்மன் கிருஸ்தவர்களுக்காகத் தனிநகரங்களையே கட்டத் திட்டமிடுகிறது என்பதை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சுக்கு 2012 ஆம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 35 பிலியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்களும் நிலங்களும் சொந்தமானவையாக இருந்தனவாம். ஆண்டொன்றுக்கு இந்தச் சர்ச்சின் உறுப்பினர்கள் தம் வருட வருமானத்தில் 10% த்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை.

குளக்கரை

பறவைகளைக் கொன்று உண்பதற்கான பிராணிகள் என்றோ, அழகு என்று பார்த்துப் படமெடுக்க உதவுவன என்றோ, ரொமாண்டிக் பாடல்கள்/ இரக்கவுணர்வுப் பாடல்கள் என்பனவற்றை எழுத உதவுவன என்றோ மனிதர் பல வகைகளில் அவற்றைப் பார்க்கிறார்கள்… வனவிலங்குகளை அழிப்பதைப் பெரும் சாதனையாகக் கருதிய மூடர்கள் அமெரிக்க அதிபர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இப்படிப் பல கண்டங்களில் வன விலங்குகளின் பேரழிவுக்கு வழி செய்த ஆட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. … விமானங்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல உருப்பெருத்து பிரும்மாண்டமான உலோகக் கூண்டுகளாக மாறி வருகின்றன. இவை மேலெழவும், கீழிறங்கவும் ஏராளமான நிலப்பரப்பு தேவைப்படுவதோடு, அந்த நிலப்பரப்பில் மரங்கள் செடிகொடிகள் ஆகியன அழிக்கப்பட்டு பறவைகளுக்கு இருக்கும் இருப்பிடங்களும், அவை உணவு தேடும் நிலங்களும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன.

மூச்சுக்காற்று வெறும் காற்றாகும்போது

பெரும்பாலான பள்ளி நாட்கள் அரிசோனா நகரத்தில் கிங்க்மான் எனும் சிறிய பாலைவன பள்ளத்தாக்கில் கழிகிறது.. மற்ற மருத்துவர்களின் குழந்தைகள் போலவே தந்தையுடன் சேர்ந்து களித்த நேரம் சிறிதளவே என்ற சோகம் ஒரு புறம் இருக்க இவருடைய தாய், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்க்கும் மேல் ஓர் படி போய் தன பள்ளியிலேயே கல்லூரி பாடங்களை தனக்கு மட்டுமன்றி மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களை கற்பிக்க வற்புறுத்தி பள்ளியின் கல்வி தரத்தையே உயர்த்திய அதிசயத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். Stanford பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியமும் உயிரிய லும் இளங்கலை கல்லூரியில் பயில்கிறார்

விழுப்பம் தரும் கொழுப்பு

கற்காலத்தில் மனிதர்கள் மலைகளிலும், குகைகளிலுமே வாழ்ந்தனர். வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சி, காய்கள்,கிழங்குகள்,விதைகள்,கொட்டைகள் போன்றவையே அவர்களின் உணவாக இருந்தது. அதாவது நிறைய கொழுப்பும், புரோட்டீனும், குறைவான கார்போஹைட்ரேட் உள்ள உணவுமுறை.நெருப்பை உருவாக்க கற்றுக்கொண்ட பின்னரே தங்கள் உணவை நெருப்பில் சுட்டு உண்ண ஆரம்பித்தனர். பின்னர் சமவெளியில் வாழத்துவங்கிய காலகட்டத்தில்தான் கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து நிரம்பிய புல் உணவுகளான நெல் மற்றும் தானியங்கள் மனிதர்களின் உணவில் இடம்பெற ஆரம்பித்தது. இதன் அடிப்படையில்தான் பேலியோ டயட் என்கிற சித்தாந்தம் அமைகிறது.

சித்த மருத்துவம்- தமிழரின் சிறப்பு அடையாளம்

வர்மம்(life centers in the human body),, இரசவாதம்(Alchemy -Study of transmutation of elements, forerunner of modern chemistry and pharmacology), , காயகல்பம் (procedures of rejuvenating the entire human system and ultimately produces immortality), ஓகக் கலை(Eight divisions of YOGA), சிறப்பான நோய் கணிப்பு முறைகள் (நாடி, சிறுநீர் பரிசோதனைகள் உள்ளடக்கிய எண்வகை பரிசோதனை முறைகள் – Eight unique type of diagnostic parameters, ), மணிக்கடை நூல் -The wrist portion just proximal to the hand is measured with a rope and health condition of a patient is ascertained based on the actual measurement by the patient’s finger), சிறப்பான மருந்துகள் ( முப்பு, கட்டு, களங்கு, சுண்ணம், குரு குளிகை ), சிறப்பான வெளிப்புற மருத்துவ முறைகள் (External medical applications), சரக்குவைப்பு (Art of preparing naturally available salts, minerals and other materials artificially) போன்ற சிறப்புகள் பலவற்றை உள்ளடக்கிய தனித்துவம் சித்த மருத்துவ முறைக்கு உண்டு.

அரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்

கிராமங்கள் தோறும், கண் சிகிச்சை முகாம்கள் அமைத்து, இந்த தொழில் மாதிரியின் நுகர்வோரான ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களின் கண் திறன் பரிசோதிக்கப் பட்டு, அறுவை சிகிச்சை தேவைப் படும் நோயாளிகள் பிரிக்கப் பட்டு, இலவசமாக, அரவிந்த மருத்துமனைக்கு, ஒப்பந்தப் பேருந்துகளில் அழைத்து வரப்படுகிறார்கள். கிட்டத் தட்ட ஒரு நாளைக்கு 900-1000 அறுவைச் சிகிச்சைகள் நடத்தப் படுகின்றன. ஒரு வருடத்துக்கு கிட்டத் தட்ட 3 லட்சம் அறுவைச் சிகிச்சை செய்கிறார்கள்.
 
இதன் மிக முக்கியப் பயன் – மிகக் குறைந்த செலவு. அமெரிக்காவில் 1700 டாலர் செலவு பிடிக்கும் இந்த அறுவை சிகிச்சைக்கு (1.15 லட்சம் ரூபாய்), இந்தியாவில் தனியார் மருத்துவமனையில் 25 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும் இந்தச் சிகிச்சைக்கு, அரவிந்த் செலவழிக்கும் தொகை 30 டாலர்கள் (2000 ரூபாய்) மட்டுமே. அதுவும், பணம் செலுத்தும் நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்பட்டு, ஏழை மற்றும் கீழ் நடுத்தர மக்களுக்கு இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வளவு குறைவான செலவிலும், இலவசத்திலும் சிகிச்சை அளித்த பின்பும் அரவிந்த குழுமம் லாபகரமாக இயங்குகிறது என்பது உலக அதிசயங்களுள் ஒன்றுதான். இவ்வளவு குறைந்த செலவு எனில், தரம் குறைந்த சிகிச்சையோ?

கருவிகளின் இணையம் – அணியப்படும் கருவிகள்

அணியப்படும் கருவிகளே, கருவிகளின் இணையம் என்ற தொழில்நுட்பத்தின் மிகப் பெரிய தூதுவனாக இன்று உள்ளது. அத்துடன், நிறையப் பணம் இருப்பவர்கள், அலட்டிக் கொள்ள உதவும் ஒரு நுட்பம் என்ற கருத்தையும் பரவ உதவியதும், இக்கருவிகளே. ஆனால், குழந்தைத்தனத்தைத் தாண்டி, இக்கருவிகள் மிகவும் முக்கியமான விஷயங்களுக்குப் பயன்படும்படி பல புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. உடல்நிலைத் தகுதியை (physical fitness) அளக்கவும், விளையாட்டில் உயர்வுபெற உதவவும், தொழில்களில் வேலைக்குப் பயன்படவும், நோயாளிகளுக்குப் சிகிச்சைகளைப் பராமரிக்கவும், உடல் ஊனமுற்றோருக்கு உதவுவதாகவும் பரிமளிக்கும் கருவிகளைப் பார்ப்போம்.

கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும்

விந்து உயிரி வெளிவரும் வாஸ் டிஃபரென்ஸ் எனப்படும் குழாயை , தற்போது புழக்கத்தில் இருக்கும் அறுவை சிகிக்சை முறையில், சிறிய அளவில் வெட்டிவிடுகிறார்கள். இதனால் விந்துஉயிரி வெளியேறாத நிலையில் ஆணின் விந்துப் பையிலேயே அழிந்துவிடுகிறது. மீண்டும் கருத்தரிக்க வேண்டினால், அந்த ஆணின் விந்துக்குழாயை ஒட்ட வைக்க வேண்டும். இதில் சில மருத்துவ சிக்கல்களும், உளவியல் சிக்கல்களும் இருக்கின்றன.

உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 5

குப்பியில் அடைத்து திரவ வடிவில் விற்கப்படும் நுண்ணுயிரிகளின் ஆற்றல் கேள்விக்குரியவை. வர்த்தகரீதியில் ஏதோ ஒரு பிராண்ட் பெயரில், சக்தி, சமந்தா, சத்தியம், ஆச்சி, பேச்சி என்று விற்கப்படுகின்றன. உள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் பற்றிய விபரம் இருக்காது. ரசாயன நுண்ணூட்டங்களான போரான், தாமிரம், துத்தநாகம் போன்றவை கலக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பயிருக்கு எந்த நுண்ணுயிரி தேவை என்ற விபரம் இல்லாமல் இருக்கும். பணம் உள்ளவர்கள் விளம்பரத்தை நம்பி வாங்கிச் செல்லலாம்.

உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 4

அபினி விஷயம் இன்னும் விஸ்தாரமானது. சுருங்கக் கூறினால், கஞ்சாவுடன் ஒப்பிட்டால் அபினி சித்த-ஆயுர்வேத-யுனானி மட்டுமல்ல அலோபதியிலும் பயன்படும் அற்புத மூலிகை. இதன் விஞ்ஞான பெயர் பபாவர்சோம்னிஃபெரம். ‘சோம்னி’ என்ற லத்தீன் சொல்லுக்கும் ‘சோம’ எனும் சம்ஸ்க்ருத சொல்லுக்கும் தொடர்பு இருக்கலாம். “சோமபானம்” என்பது அபினியா? கஞ்சாவா? இதற்கு ரிஷிகள்தான் பதில் சொல்லவேண்டும். அபினிஸ் செடியில் விளைவது போஸ்த்தக்காய். போஸ்த்தக்காய் முற்றினால் கசகசா விதைகள் கிட்டும். கசக்சா இந்திய சமையல் ருசிக்கு அரும்பங்கு ஆற்றுகிறது. கசகசா இல்லாமல் குருமா செய்ய முடியாது. கசகசாவும் மருந்து. லாகிரி வஸ்து அல்ல.

டாக்டருக்கும் பெப்பே ! மருந்துக்கும் பெப்பே !

சின்னஞ் சிறுசாக இருப்பதால் பாக்டீரியாவை ஏதோ அற்பக் கிருமி என்று எண்ணிவிட வேண்டாம். ஆண்டி பயாடிக்குகளை சமாளிக்க அது செய்யும் தந்திரங்களைப் பார்த்தால், சில சமயம் நம்மை விட அதற்கு மூளை அதிகமோ என்று சந்தேகம் ஏற்படுகிறது. தன்னைத் தானே உரு மாற்றிக் கொள்ளும் வல்லமை அதற்கு உண்டு. அதன் மரபீனிகளில் தற்செயலாக நடக்கும் ரைபோஸோம் மாற்றங்களால் ஏதாவது ஒரு பாக்டீரியாவிற்கு மருந்து எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுகிறது. அப்படியே விட்டால் தானாகவே செத்து மடிந்துவிடும். ஆனால் நாம் அதை வடிகட்டிப் பிரித்து வளர்த்து ஊர் ஊராகப் பரப்பி நாமே அதை சூப்பர் கிருமியாக மாற்றிவிடுகிறோம்.

மருத்துவர் இல. மகாதேவன் – பிஷக் உத்தமன் (மருத்துவர்களில் தேர்ந்தவன்)

நவீன உடற்கூறியல், உடலியங்கியல், நோயறிதல் போன்ற அறிவியல் துறைகளில் அபார திறமை கொண்ட அதே வேளையில் பாரம்பரியமான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவ முறைகளிலும் அபார தேர்ச்சி கொண்ட ஆளுமைகள் இன்று இந்திய அளவில் வெகு சிலரே இருக்கக்கூடும். பெரும்பாலான நவீன மருத்துவர்களிடத்தில் பாரம்பரிய மருத்துவம் பற்றி மிகப் பிழையான கற்பிதங்கள் மட்டுமே இருக்கின்றன. இப்பக்கத்தில் ஆண்டிசெப்டிக் லோஷன் கொண்டு கை கழுவுவதுகூட ஆயுர்வேதத்தை அழித்துவிடும் எனக் கருதும் தூயவாதிகள். எவ்வகையிலான எளிய தர்க்கத்துக்கும்கூட ஆயுர்வேதம் உட்படுத்தப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.

சரக சம்ஹிதை

சரகர் கவிமனமும் உள்ளுணர்வும், தத்துவ நாட்டமும் கொண்ட ஆசான் அதன் காரணமாகவே சரகர் பிற ஆயுர்வேத ஆசான்களிடமிருந்து வேறுபடும் நுட்பமான தருணங்கள் பல உண்டு. சரகர் எனும் சொல் சர எனும் சம்ஸ்க்ருத வேர்சொல்லில் இருந்து உருவானது, சர என்றால் அலைந்து திரிந்தல் (சரியான சொல் நடமாட்டம், வழிதல் ) என பொருள் கொள்ளலாம், நாடெங்கும் தேசாந்திரியாக அலைந்து திரிந்ததால் அமைந்த காரணப்பெயர்தான் சரகர்.

சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள்

1983-லேயே மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் வசிக்கும், பேரி மார்ஷல் (Barry Marshall) என்ற டாக்டர், பல வகையான வயிற்றுப் புற்றுநோய்க்கும் மற்றும் பெரும்பாலான வயிற்றுப் புண்களுக்கும் Helicobar pylori என்னும் பாக்டீரியம்தான் காரணம் என்று கண்டுபிடித்து விட்டார். இது மிகவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக கருதப்பட்டதால், சோதித்து உண்மை தெரிந்த பின்னரும், அறிஞர்களின் ஒப்புதல் பெற 10 ஆண்டுக்காலம் ஆனது. உதாரணமாக, அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட், 1994 வரை, இக்கருத்தை அங்கீகரிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில், சில ஆயிரம் அல்ஸர் நோயாளிகள் அநியாயமாக மடிந்திருப்பார்கள் என்று மார்சல்,1993-ல் Forbes பத்திரிக்கை நிருபரிடம் கூறியிருக்கிறார்.

புற்றுநோய் சிகிச்சை: கனவு நனவானது

கடந்த சில வருடங்களில், முன்னேறிய நாடுகளில், குழந்தைப் பருவ புற்றுநோயாளிக்கான மருத்துவ வசதிகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் 70 முதல் 90 சதவீத குழந்தைப் பருவ புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 40,000 முதல் 50,000 நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50 முதல் 60 சதவீத புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்கின்றனர்.