ஓரிகமியால் மடிந்த கண்ணாடி பொருட்களை உருவாக்கும் புதிய நுட்பம்

புதுமையான பொருட்களின் கலவையுடன் நிலையான ஒரு 3D பிரிண்டரில் பல்வகை கண்ணாடிப் பொருட்கள் அச்சிட முடியும்.  சிக்கலான சிலிக்கா கண்ணாடி வடிவமைக்க பொதுவாக 1000° C க்கு மேல் சூடாக்க வேண்டும்.  அச்சிடலின் போது இத்தகைய‌ வெப்பமடைவதைத் தவிர்க்க, சூரிச்சில் உள்ள சுவிஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் குணால் மசானியா, ஆண்ட்ரே ஸ்டுடார்ட் மற்றும் குழுவினர், ஒரு கண்ணாடி செய்முறையை உருவாக்கினர். அதில் கனிம கண்ணாடி முன்னோடிகளுடன், ஒளி-பதிலளிக்கக்கூடிய கரிம கலவைகள் உள்ளன

மாற்றாரை மாற்றழிக்க

ஓனிடா டி வியின் விளம்பர வாசகம் ‘அக்கம் பக்கத்தோர் பொறாமை கொள்வார்கள்; உடமையாளருக்கோ மகிழ்ச்சி’ நம் அருமை நண்பன் சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் நமக்குத் தொல்லை தந்து கொண்டேயிருக்கிறது. அதனுடைய வேவுக் கப்பல் இந்தியப்பெருங்கடலில், நமது கால் சுண்டு விரலான ஸ்ரீலங்காவை கடன்களாலும், வணிகத்தாலும் கட்டுப்படுத்தி, நயவஞ்சகமாக அதன் “மாற்றாரை மாற்றழிக்க”

நம் வீட்டைத் திரும்பிப் பார்த்தல் – EarthRise

“இந்த சித்திரம் மிகவும் அமைதியானது, அதே சமயத்தில் மூச்சை இழுத்துப்பிடிக்க வைப்பது. ஒரு கொந்தளிப்பான ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்டது. அது ஒரு கிறிஸ்மஸ் ஈவ் நாள், ஆனால் அங்கிருந்து (நிலவில், அத்தனை தொலைவிலிருந்து) வியட்நாமில் ஒரு கோரமான போர் நடந்துகொண்டிருக்கிறது அல்லது ஐரோப்பாவைப் பனிப்போர் பிளவுபடுத்துகிறது என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய மாட்டீர்கள். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் அல்லது பாபி கென்னடியின் படுகொலைகளை நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.
அந்த தொலைவிலிருந்து, மானுடர்கள் கண்களுக்கு புலப்படாதவர்கள், நகரங்கள், நாடுகள் மற்றும் தேசிய எல்லைகளும் கூட. இன, கலாச்சார, அரசியல், ஆன்மீக ரீதிகளாக நம்மைப் பிரிக்கும் எதுவும் இச்சித்திரத்தில் இல்லை. இதில் நாம் காண்பது, ஒரு குழைவான கிரகம் பிரபஞ்சத்தின் தனிமையில் இருப்பதை மட்டுமே.

புவிக்கோளின் கனிமவளம்

This entry is part 7 of 7 in the series பூமிக்கோள்

இந்த மூன்றாவது கோளில் (புவி ) என்ன அதிசயம்? அதன் உடன் பிறப்புகளின் வளர்ச்சிப் பாதையை விட்டு விலகி வியத்தகு முறையில் பிரிந்து செல்வது ஏன் ? தண்ணீர் தான் காரணம் என்பது உங்கள் இனிய அழகிய அனுமானம்.
நீரில்லாத கோள்களில் உருவாக முடியாத பல்வேறு புதிய கனிமங்கள் இக்கோளில் உருவாக முடிகிறது. …இங்குள்ள அபரிமிதமான கால்சியம் கார்போனேட் (கால்சைட் என்னும் கனிமம் ) பெரும்பாலும் கோளில் வாழ்ந்த உயிரினங்கள் உருவாக்கியது எனத் தோன்றுகிறது. நீங்கள் எப்போதாகிலும் உயிரினப் பயன்பாடு இல்லாத கால்சைட் உருவாதலைக் கண்டிருக்கலாம். …இவ்வளவு கால்சைட் பாறைகள் உருவாகத் தேவையான உயிரினங்களை சாத்தியமாக்கியது இங்குள்ள பெருங்கடல்களே என்று நீங்கள் அனுமானிக்கிறீர்கள்.

அறிவுடைப் புதுப்பொருள்

இந்த இரு பரிமாண மின் பகுப்பிகள் பல்வகையான கரைப்பான்களில் (solvents) தங்கள் அணுக்களைக் கரைத்துக்கொள்ளும் ஆற்றலுடையவை. வெளிப்புற நிலைகளான வெப்பம், பிஹெச் (pH-potential of Hydrogen) ஆகியவற்றைக்கொண்டு இந்தப் புதுப்பொருளின் அமைப்பு முறைகளை மாற்றமுடியும் என்பதால், குறிப்பிட்ட உடல் பகுதிக்கு மட்டுமே எடுத்துச் செல்லப்படவேண்டிய மருந்துகளை மிகத் துல்லியமாக அங்கேயே உட்செலுத்த முடியும்.

மனச் சோர்வைக் குணப்படுத்தும் மேஜிக் காளான்கள்

மிதமானது முதல் கடுமையானது வரையான பெரும் மன அழுத்தச் சீர்குலைவுகளுக்குச் சைலோசிபின்னுடன் உளவியல்சார் சிகிச்சை முறைகளையும் இணைத்து சிகிச்சை அளிக்கும்போது, இரண்டு டோஸ் சைலோசிபின் மருந்து, பொதுவான மனச்சோர்வு முறிமருந்தான எஸ்சிடாலொப்ரம் (escitalopram) அளவுக்குச் சம ஆற்றல் உடையதாகத் தோன்றுகிறது என்று இரண்டாம் கட்ட மருத்துவ முயற்சியில் எட்டப்பட்ட முடிவுகள் கூறுகின்றன.

கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி

படிம (fossil) எரிபொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுக்கு 50 பில்லியன் டன் கரிமம் வளிமண்டலத்தில் சேர்கிறது. ஆனால் கரிமக் கவர்வுக் கருவிகளால் பிரித்தெடுக்க முடிவது சொற்பமே, ஈரிலக்க டன்கள் அளவைத் தாண்டாது. இருப்பினும் பசுங்குடில் வாயு உமிழ்வுக் குறைப்பினால் மட்டுமே புவி வெப்பமாதலைத் தடுத்து நிறுத்திவிட முடியாதாகையால் கரிமக் கவர்வும் தொடர வேண்டும் என்கிறார், கண்காட்சியின் நெறியாளர் வார்ட் (Ward).

புலம்பெயரும் பவளப்பாறைகள்

பவளப்பாறைகள் பாறை வகைகளில் ஒன்றல்ல. சில வகைக் கடலினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் சில உயிரினங்களின் தொகுப்புகளுமே பவளப்பாறைத் திட்டுகளாகின்றன. இவை வெறும் சுண்ணாம்புத் திட்டுகள் மட்டுமே.

கற்றலொன்று பொய்க்கிலாய்

இளைய பாரதத்தை வரவேற்றுப் பாரதி ‘கற்றலொன்று பொய்க்கிலாய்’ எனப் பாடுகிறார். புகழ்பெற்ற, இந்தியாவிலுள்ள அல்லது வெளிநாட்டில் பணி செய்யும் இந்திய அறிவியலாளர்கள், மனித வள மேம்பாட்டுத்துறை வல்லுனர்கள் போன்றவர்களை இன்ஃபோசிஸ் கௌரவித்திருக்கிறது. டிசம்பர் 2, 2020 அன்று  நிகழ்நிலை நிகழ்வின்மூலம் அறுவருக்கும் தங்கப்பதக்கம், விருது மற்றும் பணமுடிப்பு $100,000  “கற்றலொன்று பொய்க்கிலாய்”

மகரந்தம்

அமெரிக்க நகரங்களின் இன்றைய நிலைமை என்ன? நியூ யார்க்கில் சொகுசு அடுக்ககக் குடியிருப்பில் இருந்த பணக்கார மாணவர்கள், அதிகச் சம்பளம் பெறும் இளம் தொழில் வல்லுநர்கள் மற்றும் நகரில் இரண்டாவது வீடு வைத்திருப்போர் நகர மையங்களை விட்டகன்றனர் அல்லது செலவுகளைக் குறைத்துக்கொண்டனர். சொகுசு வீட்டு வாடகை கடந்த ஆண்டைவிட 19% குறைந்தது. அவற்றின் தேவையும் குறைந்தது.

ஜிகா வைரஸ்

(குறிப்புகள்: கோரா) கொசு என்றதும் ஞாபகத்துக்கு வருவது கும்பகோணத்துக் கொசுக்கடி. இது என் சொந்த அனுபவமன்று. 1993-ல் சாகித்திய அகாடெமி பரிசு பெற்ற எம். வி. வெங்கட்ராம் (1920-2000) ‘பைத்தியக்காரப் பிள்ளை‘ என்ற தன் சிறுகதையில் கும்பகோணம் கொசுக்கடி பற்றிக் குறிப்பிடுகிறார். கொசுவைக் குறிக்கும் கொதுகு மற்றும் நுளம்பு “ஜிகா வைரஸ்”

செவ்வாய் கோளில் குடியேறலுக்கான கட்டுமானப் பொருட்கள்

ஒரு மில்லியன் குடியிருப்புகளை உருவாக்கத் தேவையான கட்டுமானப் பொருட்களை புவியில் இருந்து எடுத்துச் செய்வதற்குப் பெருஞ்செலவு செய்யவேண்டியிருக்கும். அது இயலாத காரியம். உள்ளூரில் கிடைக்கும் மண், ஜல்லிகளை கட்டுமானப் பொருட்களாக உபயோகித்துக் கட்டடம் எழுப்பும் தொழில்நுட்பம் அங்கே உருவாக வேண்டும். இதற்காக நாசா முப்பரிமாண அச்சு உறையுள் பரிசுப் போட்டியை (3-D printed Habitat Challenge) அறிவித்திருக்கிறது.

அகத்திலிருந்து ஐந்தாம் நிலைப் பொருள்

ஒரு சிறு கிருமி, உலகம் முழுதும் பரவிப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், வீட்டிலிருங்கள்’ என்று அரசுகள் கட்டளையிடுகின்றன, வேண்டிக்கொள்கின்றன, மீறுபவர்களைத் தண்டிக்கின்றன. வீட்டில் முடங்கும் ஆண்களைப் பற்றி, பெண்களுக்கென இச்சமூகம் நிர்ணயித்துள்ள வேலைகளை, அவர்கள் செய்ய நேரிடுவதைப் பற்றிப் பல கிறுக்குத்தனமான கேலிகளாலும், கிண்டல்களாலும் சமூக “அகத்திலிருந்து ஐந்தாம் நிலைப் பொருள்”

மகரந்தம்

மனிதனை பற்றிப் பொதுவாக எதுவும் சொல்லச் சொன்னால் “மனிதன் மகத்தான சல்லிப் பயல்”என்றுதான் சொல்வேன் – இந்த எதிர்மறை வார்த்தைகளை உதிர்த்தவர் ஜி. நாகராஜன் (1929-1981) என்னும் தமிழ் எழுத்தாளர். மெத்தப் படித்த மேதைகள் சிலரும்கூட மனிதனைப் பற்றிய எதிர்மறைக் கருத்துக் கொண்டவர்கள்தாம்.

மகரந்தம்

1811-ல் வெளியான பிரபலமான புதினம் Sense and Sensibility. ஆசிரியர் ஜேன் ஆஸ்டின். மூன்று பகுதிகள் கொண்ட இப்புதினம் 19-ஆம் நூற்றாண்டின் செவ்விலக்கியமாகக் கருதப்படுகிறது . அன்றிருந்த நடுத்தர மக்களின் வாழ்க்கையையும் காதலையும் அங்கதமும் நகைச்சுவையும் கலந்து விவரிக்கிறது. இப்புதினத்தின் ஒரு பாத்திரமான எட்வர்ட் பெர்ரார்ஸ் ஒரு வேலை இல்லாப் பட்டதாரி . வேலைக்குப் போகும் அவசியமும் இல்லாதவர். அவர் ஒரு பெரும் பணக்காரரின் தலைமகன். இருந்தாலும் வேலைக்குப் போகாமல் இருந்து விட்டதற்கு வருந்துபவர். காலம் கடந்தபின், தான் சேர்ந்திக்கக் கூடிய வேலைகளை நினைத்துப் பார்க்கிறார். தரைப்படை, கடற்படை, தேவாலயம், வக்கீல் என்கிற நான்கு வேலைகளில் ஏதாவது ஒன்று கிடைத்திருக்கலாம் என்றும், எதுவுமே அவருக்கு திருப்தி தந்திருக்காது என்றும்

மகரந்தம்

உலகின் ஜனத்தொகையில் 17% கொண்டுள்ள நம் நாட்டிலுள்ள புதுப்பிக்கக் கூடிய நீர் வளங்கள் உலகில் உள்ளதில் வெறும் 4 விழுக்காடு. இங்கே ஒரு புதிரான முரண்பாட்டையும் சொல்லியாகவேண்டும். உண்மையில் இந்தியா நீர்ப்பிரச்னை இருக்கக் கூடாத நீர்-மிகை நாடு. இங்கே தேவைக்கு மேல் மழை பெய்கிறது. மத்திய நீர் ஆணையத் தகவல்படி, நம் தேவை ஆண்டுக்கு 3000 பில்லியன் கன மீட்டர் மழை ; ஆனால் தேவையை விட 1000 பில்லியன் கன மீட்டர் அதிகமாக (அதாவது ஆண்டுக்கு 4000 பில்லியன் கன மீட்டர் ) மழை பெய்கிறது . ஆனால் இதில் 8% மட்டுமே நேரடி உபயோகத்துக்குக் கிடைக்கிறது. மீதி நிலத்தடிக்கும் கடலுக்கும் ஓடி விடுகிறது.

மகரந்தம்

எறும்பு, கரையான், தேனீ போன்ற பூச்சியின சமூகங்கள் வெளிப்படுத்தும் அறிவார்ந்த பண்புகள் தேன்கூடு/ திரள் நுண்ணறிவு ( hive intelligence/swarm intelligence ) எனப்படுகிறது. கணிப்பிய நுண்ணறிவு (computational intelligence) என்னும் கணினித் துறையின் உட்புலமாக விளங்கும் திரள் நுண்ணறிவுத் துறையில், உயிரிய அமைப்புகளின் கணித மாடல்களைப் பரிசோதிக்க ரோபோட் திரள்களைப்(swarm of robots ) பயன் படுத்திப் பல நுண்ணறிவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..

மகரந்தம்

2012-ல் நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற சோதனையில் கண்டறிப்பட்ட ஹிக்ஸ்-போசான் துகளுக்குக் ‘கடவுள்-துகள்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஹிக்ஸ் என்பது பீடர் ஹிக்ஸ் என்பவரையும், போசான் என்பது நமது சத்யேந்த்ர நாத் போஸையும் குறிக்கும். போசான்களைப் பற்றி மிகத் தெளிவாக மிகவும் முன்னதாக ஆய்வு செய்து அடிப்படைகளை அமைத்தவரின் பெயர் பின்னர் வருகிறது-மேலும் குவாண்டம் துறையில் நடைபெற்ற ஆய்வுகளுக்காக நோபல் பரிசுகள் பலருக்குக் கிடைத்துள்ளன -ஆனால், இவருக்குக் கிடைக்கவில்லை.

மகரந்தம்- குறிப்புகள்

எல்லாம் வானத்தில்தானா, பூமியில் இல்லையா என்பதற்கும் இராமானுஜனிடத்தில் விடை கிடைக்கிறது. இயந்திரக் கற்றல், தகவல் தேற்றங்கள், குறியீட்டு முறைகள், டிஜிடல் தொடர்புகள், அவற்றில் தவறுகளைத் திருத்தும் குறியீடுகள், தரவுகளை அடக்கிக் குறுக்கல், நெட்வொர்க், சமிக்ஞை வெளியீடுகளைப் படித்தல், கணிணியின் சங்கீதம் (ஐ ம்யூசிக்கில் அவரது உள்வெளித் துணையிடம்-சப்-ஸ்பேஸ்) டி. என். ஏ மற்றும் புரதங்களைத் தொகுத்தல் என எங்கும் எதிலும் இவர் கணிதம் செயல்படுகிறது.

குளக்கரை

ஆபத்து அதிகமானதால் லாபம் அதிகமாவதில்லை. ஆபத்துகளைத் தாண்டி தப்பித்தால் சில சமயம் சிரஞ்சீவித்தனத்துக்கான குளிகை கிட்டுமோ என்னவோ. இந்த எழுத்தாளர் குழந்தை வளர்ப்பைப் பற்றித்தான் எழுதுகிறார். மிகச் சாதாரணமான தலைப்பு. ஆனால் எதிர்த் திக்கில் போய்ப் பார்க்கும் கட்டுரை இது. துவக்கத்திலிருந்தே
எதிர்.

மகரந்தம்: #மீ டூ இயக்கம்: பெண்கள் நிலை

ஹாலிவுடில் என்ன ஆனால் என்ன, என்னை அதெல்லாம் பாதிக்காது என்பது ஏராளமானவர்களின் அணுகலாக இருக்கும். அப்படிக் கருதினால் உங்களுக்குத் தெரியுமா, நீங்கள் எல்லாரும் எத்தனை பிழை செய்கிறீர்கள் என்று? உங்கள் வீடுகளுக்குள்ளும் ஊடகங்களிலும் வெளியாகி எங்கும் மக்களுக்கு ‘கேளிக்கை’யாகக் கிட்டுவன எல்லாம் இந்த ஹாலிவுடின் தயாரிப்புகள்தாம். அவை உங்கள் வாரிசுகளின் மனங்களை எல்லாம் வளைத்துத் தம் மதிப்பீடுகளை அவர்களிடம் பதிக்கின்றன.  உங்கள் பெண்களின் உடல் வடிவு, ஆண்களின் உடல் வடிவு ஆகியவை குறித்த பொது எதிர்பார்ப்புகள், சமூக உறவுகளில் நம் நடத்தைகள், எதிர்பார்ப்புகள், உறவுகளின் நியதிகள் என்று என்னென்னவோ ஹாலிவுட் படங்களால் மாற்றி அமைக்கப்படுகின்றன என்று தொடர்ந்து விளக்குகிறார்.  ஹாலிவுடின் தயாரிப்புகளைப் பார்க்க மறுக்கச் சொல்லி நம்மிடம் வாதிடுகிறார்.

மகரந்தம்

உலகில் உள்ள எண்ணற்ற எண்கள் அத்தனையையும் கூட்டினால் என்ன வரும்? -1/12 என்று விடை வரும். இதைச் சொன்னவர் நம் ஊர் ராமானுஜனாக இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? இதென்ன கணக்கு என்று விளங்கவில்லை, ஆனால் மார்க் டாட்ஸ் என்பவர் மீடியம் இடுகையொன்றில் “1 + 2 + 3 + ⋯ + ∞ = -1/12” என்ற ராமானுஜன் கூட்டுத்தொகை சமன்பாடு குறித்து விளக்கமாக எழுதியிருக்கிறார்

மகரந்தம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள், நாம் யார் என்பதற்கான அடையாளம் நம் முகம்தான். ஆனால் விபத்துகளில் முகம் முற்றிலும் சேதப்பட்டவர்கள் நிலை இதுவரை ஒன்றும் செய்ய முடியாததாக இருந்து வந்தது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாய், இன்று முகத்தை முழுதாகவே தானம் பெற்று மாற்றியமைக்கும் சிகிச்சை வந்து விட்டது. இது வரை நாற்பது பேர் முகம் மாற்று சிகிச்சை பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சை குறித்து மனதைப் பிசையும் புகைப்படங்களுடன் ஒரு கட்டுரை இங்கிருக்கிறது. . இதில் தொடர்புடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள், தாதியர் என்று அனைவைரையும் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது. கருணை மிக்க ஒரு சமூகம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்தாலும்,

மகரந்தம்

அடுத்து என்ன வரப் போகிறது? மனித இனம் தாக்குப் பிடிக்குமா? நம் குடும்பம் எப்படி வரப் போகும் பிரளயத்தில் இருந்து தற்காத்து காப்பாற்றிக் கொள்ளும்? இதுதான் பெரும் பணக்காரர்களின் கவலை + கேள்வி. இதற்கான விடைகளையும் நடக்கவிருக்கும் சாத்தியங்களையும் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari), தன்னுடைய அடுத்த புத்தகமான 21 Lessons for the 21st Century-இல் ஆராய்கிறார். இந்தப் புத்தகம், அவரின் முந்தைய நூல்களான Sapiens: A Brief History of Humankind, மற்றும் Homo Deus: A Brief History of Tomorrow-வின் தொடர்ச்சியாக இருக்கிறது.

மகரந்தம்

21 ஆம் நூற்றாண்டில் உலக சமுதாயம் பெரும் கருத்துக் குழப்பங்களில் சிக்கிக் கொண்டு தள்ளாடி நடை போடுகிறது. ஆனால் மறுபடி மறுபடி கனவு வியாபாரிகள் தம் உதவாக்கரைப் பொருட்களை விற்பதை நிறுத்தவில்லை. ஆய்வுகள், அறிவியல், தொழில் நுட்பம், தத்துவக் கிளர்ச்சி என்று பல பெயர்களில், புதுப்புது உடுப்புகளணிந்து அவர்கள் உலவுகிறார்கள். இங்கே கொடுக்கப்படும் ஒரு செய்தி அத்தகைய வியாபார முயற்சிகளில் ஒன்றா, இல்லை உண்மையான தகவலா என்பதைத் தீர ஆராய்ந்தால்தான் நம்மால் அறிய முடியும். ஆனால் இங்கு இதைக் கொடுக்க ஒரு காரணம், இந்தக் கனவு எப்படியெல்லாம் மறுபடி மறுபடி தளிர்க்கிறது என்பதைக் காட்டத்தான்.

மகரந்தம்

இயற்பியலாளர்களில் மிகவும் பிரபலமான ஸ்டீபன் ஹாக்கிங் இறந்துவிட்டார். அவரைப் பற்றிய அஞ்சலிக்கட்டுரைகள் குவிந்த வண்ணம் இருக்கையில் அவரது இருபது ஆண்டுகால துணையாகவும் அவரது இயக்கத்துக்குக் காரணமாகவும் இருந்த தொழில்நுட்பங்களை இங்கு காணலாம். இருபது வயதில் தசைநரம்பு சிக்கல் நோயினால் பாதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மெல்ல நலிந்து வந்த அதே சமயத்தில் தொழில்நுட்ப சாத்தியங்களினால் அவரது ஆராய்ச்சிகளும், ஆசிரியர்பணிகளும் இடையறாது நடந்து வந்திருக்கின்றன. இந்த நோய் தாக்கிய பின்னான  இருபது வருடங்களில் அவரால் கை விரல்களைக் கொண்டு சிறு அசைவுகளைச் செய்ய முடிந்திருக்கிறது. சக்கர நாற்காலியோடு பிணைக்கப்பட்டிருந்தாலும் அதனுடன் பொருத்தப்பட்ட கணினியின் துணையோடு கட்டைவிரல் அசைவுகளைக் கொண்டு தனது ஆய்வுக்கட்டுரைகளையும், உரைகளையும் தயாரித்தார்.

மகரந்தம்

ஒரு துகளையும் அதன் குணத்தையும் இரு வேறு நிகழ்தகவுகளாக மாற்ற முடியுமா? இருவேறு பாதை பிரியும் இடத்தில் நிற்கும் ஒருவன் ஒரு வழியையும் அவனது குணங்ங்கள் மற்றொரு வழியையும் தேர்ந்தெடுக்க முடியுமா? துகள்கள் அப்படி செய்ய முடியும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அப்படி ஹிக்ஸ் துகளின் அடிப்படை குணத்தை மாற்றியமைத்து அதிகடத்தியை (super conductor) உருவாக்க முடியுமா

மகரந்தம்

நாம் படிப்பது அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பது அனைத்தையும் நினைவில் வைத்திருப்போமா? சிலருக்கு முடியலாம். ஏன் அவர்களால் முடிகிறது எனும் ஆய்வில் ஈடுபட்டவர்கள், நினைவுக்கும் மனித இயல்புக்கும் இடையேயான இடைவெளியைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி பார்ப்பவரால் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு என்ன பார்த்தோம் என நினைவுபடுத்த முடியாதாம். சிலர் அடுத்தடுத்து படிக்கும் புத்தகங்களுக்கு இடையே குழப்பிக்கொள்வதும், மீண்டும் படித்ததை அலசுவதற்கு நேரமில்லாமல் இருப்பதும் படித்ததை மறப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன. மனப்பாடமாகப் படித்தால் மட்டும் போதாது அதை எழுதிப்பார்க்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கப்பட்டவரா நீங்கள்?

மகரந்தம்

காஷ்மீர் பகுதியில் கிடைத்த ஒரு பாறை ஓவியம் அகழ்வாராய்ச்சியாளர்களை ஆச்சர்யப்படுத்தியதோடு மட்டுமல்லாது வானவியலாளர்களையும் திகைக்க வைத்துள்ளது. பொதுவாக பாறை ஓவியங்களின் வயதைக் கண்டுபிடிப்பது சிரமமான ஒன்று. கார்பன் டேட்டிங் முறையில் உள்ள சிக்கல்களைத் தாண்டி அவற்றின் வயதை அறிவது கடினம். ஒரு வீட்டில் சுவருக்குப் பின்னே இருந்த இந்த ஓவியத்தைக் கண்டுபடித்த அகழ்வாராய்ச்சியாளர்கள் அதில் இரு பிரகாசமான ஒளி பொருந்திய விண்மீன் வடிவங்களைக் கண்டனர்.

மகரந்தம்

18-19 ஆம் நூற்றாண்டுகளில் அடிமை முறையை பெரும் ஆர்ப்பரிப்புடன், கிருஸ்தவத்தின் நம்பிக்கையோடும் கைக் கொண்டிருந்த தென் மாநிலங்கள் இந்தக் கருப்பின மக்கள் தம் இரும்புப் பிடியிலிருந்து தப்பி தொழில் பேட்டைகளுக்கு வட/ மத்திய மாநிலங்களுக்குப் போனதை இன்னமும் பெரும் நஷ்டமாகக் கருதுகிற அரசியலையே தம் மாநிலங்களில் ஆட்சியில் அமர்த்துகிறார்கள். தெற்கு மாநிலங்கள் மைய அரசுக்கு எதிராகப் பிடித்த கொடி (கான்ஃபெடரேட் கொடி என்று அழைக்கப்படுவது) இன்னமும் ஏராளமான தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் சின்னம்,, தனியார் மட்டுமல்ல மாநில அரசுகளே கூட இந்தக் கொடியை பற்பல நகரங்களில், தலை நகரங்களில், ஏன் நீதி மன்றங்களில் கூட ஏற்றிப் பறக்க விடுவதைத் தம் பெரும் சாகசமாகக் கருதும் அவலம் இன்னும் தொடர்கிறது.

அப்படி இருக்க இந்த மாநிலங்களுக்கு முன்னாள் அடிமை முறையிலிருந்து தப்பிய கருப்பினத்தவர் மறுபடி திரும்பும் அவலம் நேரக்காரணம் உலக முதலியமும், அமெரிக்க முதலியமும் தம் நலனை மட்டுமே கருதும் அற்பத்தனம்தான். இன்று பல தென் மாநிலங்களில் நகரங்களில் கருப்பின மக்கள் பெருகி விட்டது அம்மாநிலத்து அரசியலில் சில சிக்கல்களையாவது ஏற்படுத்துகிறது.

மகரந்தம்

கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் உள்ள பல்கலையில் ஒரு வகுப்புக்குப் பாடம் நடத்தும் பேராசிரியர் ஒருவர் ‘Desire, Sexuality and Gender in Asian American literature’ என்ற தலைப்போடு ஒரு வகுப்பை நடத்துகிறார்…..வகுப்பு ஆசிய அமெரிக்க இலக்கியத்தில் பால் விருப்பம், பாலடையாளம், பால் பாகுபாடு ஆகியன எப்படிக் கையாளப்படுகின்றன என்பதை விவாதிக்கிறது….பேராசிரியரின் ஒரு முக்கிய உத்தி. மாணவர்களைத் தமது எதிர்காலத் துணை பற்றி அவர்களுக்கு என்ன எதிர்பார்ப்புகள் உண்டு என்று ஒரு பட்டியல் தயாரிக்கச் சொல்கிறார். அவற்றை அவர்களிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். பிறகு அவர்களின் பெற்றோர்களைத் தொலைபேசியில் அழைத்து பெற்றோர்களின் எதிர்பார்ப்பின் படி மாணவர்களின் துணைகள் எப்படி இருப்பது நல்லது என்று அறியச் சொல்கிறார். அந்தக் குணாம்சங்களைப் பட்டியலிட்டு வாங்கிக் கொள்கிறார். இந்த இரு பட்டியல்கள் பற்றிய தம் கருத்துகளை மாணவர்கள் வகுப்பில் பகிர்கின்றனர்.

மகரந்தம்

டாலர் இருந்தாலே போதும். 130 நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்ய உதவும் கடவுச்சீட்டைப் (பாஸ்போர்ட்) பெறலாம். செயிண்ட் கிட்ஸ் போன்ற கரிபியன் தீவுகள் தம் நாட்டின் கடவுச் சீட்டுகளை விற்கின்றன. மால்டா, மாண்டெநெக்ரோ போன்ற யூரோப்பியச் சிறு நகர அரசுகளும் இதில் இறங்கியுள்ளன. அமெரிக்காவே அரை மிலியன் டாலர் முதலீட்டுக்கு குடியிருக்க வழி செய்கிறதாம். இராக்கியர்கள், லிபியர்கள், சீனர்கள், மாஸ்கோவியர்கள் இன்னும் பற்பல நாடுகளின் மக்களுக்கு உதவும் மசை. அமெரிக்கர்கள் கூடப் பல நாடுகளில் நுழைய இந்த மாற்று கடவுச் சீட்டுகளைப் பயன்படுத்துகிறார்களாம். குஷ்னரும் சீன பிலியனேர்களும் இந்தத் திட்டத்தைத்தான்…

மகரந்தம்

1. அச்சுப் பத்திரிகைகளின் அந்திம காலமா இது?
2. போக்குவரத்துச் சந்தடியால் நரம்பு இழி நோய் வருமா?
3. காற்றாலை மேடைகளின் அதிசய உடன் விளைவுகள்

மகரந்தம்

எட்வர்ட் மன்ச் வரைந்த அதிபுகழ் பெற்ற ஓவியமான அலறல் (ஸ்க்ரீம்). அதைக் குறித்து அவர் இவ்வாறு தனது கையேட்டில் எழுதுகிறார்: ‘என்னுடைய இரு நண்பர்களுடன் சாலையில் நடந்தேன். சூரிய அஸ்தமனம் ஆனது. ஆகாயம் ரத்தநிறமானது. மனச்சோர்வு என்னைத் தொட்டதை உணர்ந்தேன். என் நண்பர்கள் என்னைவிட்டு முன்னே நகர்கிறார்கள். என் மார்பில் திறந்த காயம் இருப்பதை போல் பயம் கவ்விக் கொண்டது. சோர்வாக கைப்பிடியில் தளர்ந்தேன். கருப்பும் நீலமும் கலந்த மலையிடைக் கடல் நுழைவழி தெரிந்த நகரத்தின் மேகங்களில் இருந்து ரத்தம் சொட்டி உதிர அலை அடித்தது. இயற்கையினூடே மாபெரும் அலறல் துளைத்து வந்தது.’ அந்த ஓவியத்தைப் பார்த்தால் யாரோ அலறுவதை சித்தரிப்பது போல் இருக்கும். ஆனால், அந்த ஓவியம் தான் மட்டுமே கேட்ட ஓலத்தை, மற்றவர்களுக்குக் கேட்கக் கிடையாத அலறலைக் குறிக்கிறது. அது போல் புத்தாக்கங்களைக் கொணர கொஞ்சம் சித்தம் கலங்கியிருக்க வேண்டுமோ என எண்ணும் கட்டுரை

மகரந்தம்

மூன்று இதயங்களை தன்னகத்தே வைத்திருக்கிறது. அதில் நீலமும் பச்சையும் கலந்த ரத்தம் ஓடுகிறது. மென்மையான தோல் கொண்டதால் மெல்லுடலிகள் வகையைச் சேர்ந்தவை. தமிழில் பெரிய கணவாய். எட்டு கால்கள் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் ஆக்டோபஸ். எத்தனை கால் இருந்தால் என்ன… பிரச்சினைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொண்டு தீர்த்து வைப்பதில் அறிவாளி. மனிதர் மட்டுமே கருவிகளைக் கொண்டு தன் திறமையை பன்மடங்காக்கும் வித்தை தெரிந்தவர் என்பதை தவிடுபொடியாக்கும் நுண்ணறிவாளர். ஆனால், மனிதர் போலவே ஏமாற்றவும் தெரிந்த மிருகம். அதைத் தவிர தன் நகையுணர்வை வேறு வெளிபடுத்துகிறது. விலங்கு போல் ஒலியெழுப்பும்/பேசும் கலையை அறிந்திருக்கிறது. ஒரு வேளை நமக்குள்ளேயே உலாவும் வேற்றுக்கிரக வாசியோ?

மகரந்தம்

தபால் ஓட்டுக்கள் என்ற உடன் ஓட்டுக்கள் எண்ணும் நாளில் முதலில் எண்ணப்படுபவை அவை என்பதுதான் நம் நினைவுக்கு வரும். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகணத்தில் இப்படித் தபால் மூலம் ஓட்டளிப்போர் வீடுகளில்த், அரசியல் பேசத் தடைவிதிக்கும் சட்டமுன்வரைவு ஒன்று பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. டெக்ஸாஸ் செனேட்டில் மெஜாரிட்டி மூலம் நிறைவேற்றபட்ட இந்த முன்வரைவு தற்போது டெக்ஸாஸ் பிரதிநிதிகளின் சபைக்குச் சென்றுள்ளது. 

மகரந்தம்

மிஹிர் சென்னைப் போல யோசிப்பவர்கள் ஸ்வீடனிலும் சிலர் உண்டு. ஸ்வீடனில் கொஞ்சம் இடது சாரித்தனமும், கொஞ்சம் ஃபாசிசமும், கொஞ்சம் பழமை வாதமும், கொஞ்சம் அடாவடி/ தத்தாரி நாகரீகம். அங்கு வ்யூவர்டோன்யோ (Övertorneå) என்ற ஒரு சிறு நகரில், பொழுது போகாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போல இருக்கிறது. ஆனால் சும்மா இருப்பதை விரும்பாத மிஹிர்சென் கோஷ்டி போலவும் இருக்கிறது. அதனால் ஒரு போட்டி வைக்கலாம் என்று யோசித்து அதன்படி, உலக சாம்பியன்ஷிப் விருது வழங்கும் போட்டி ஒன்றை நிறுவி இருக்கிறார்கள். அந்த ஊரில் கோடையில் கொஞ்சம் கொசுக்கள் மண்டுமாம். அந்தக் கொசுக்களை யார் அதிகமான எண்ணிக்கையில் பிடித்துக் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இந்த விருது கிட்டும்.

மகரந்தம்

சமீபத்தில் வெளியான ‘ஒண்டர் உமன்’ என்கிற திரைப்படத்தை ஒட்டி அமெரிக்கன் ஸ்காலர் பத்திரிகை இந்தக் கட்டுரையைப் பிரசுரித்திருக்க வேண்டும். உளவியலாளரான விலியம் மார்ஸ்டன் இந்தப் பாத்திரத்தை உருவாக்கி முதல் புத்தகத்தை வெளியிடக் காரணமாக இருந்தவர். ஒரு பெண் பாத்திரம் ஏன் அவசியம், அந்தப் பாத்திரத்துக்கும் இதர சூப்பர் ஹீரோ பாத்திரங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன, 1940களிலேயே இந்தத் தேவையை உணர்ந்து அவர் ஏன் இப்படி ஒரு பாத்திரத்தை மையமாகக் கொண்ட காமிக் புத்தகங்களை உருவாக்க முயற்சி செய்தார் என்ற விவரங்களை இந்தக் கட்டுரை கொடுக்கிறது. விலியம் மார்ஸ்டனும் பெண்களைப் பற்றி யோசிக்கையில் இதரரிடம் அன்பாக இருத்தல், பராமரிப்பில் கவனம் செலுத்துதல், இனிமையாகப் பழகுதல் என்ற சில குணங்களை முன்வைக்கிறார் என்று ஒரு குற்றச் சாட்டு இருக்கிறது.

மகரந்தம்

ஜெர்மனியில் பண்டைக்காலத்து உப்புப் படிவங்கள் நிலத்தடியில் இருப்பனவற்றில் மின் சக்தியைச் சேமித்து வைக்க முயற்சி செய்கிறார்களாம். உப்புப் படிவங்கள் மீது ஏராளமான நீரைச் செலுத்தி அவற்றைக் கரைத்து அவற்றூடே பெரும் குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். தரைக்குக் கீழே அரைமைல் தூரத்தில் இந்தக் குகைகள் உள்ளன.  உபரி மின் சக்தியைப் பயன்படுத்தி காற்றை அழுத்தத்துக்கு உள்ளாக்கி அதை இந்தக் குகைகளில் சேமிக்கின்றனர். மின்சக்தி உற்பத்தி குறைந்து விட்ட நேரத்தில் குகைக்குள்ளிருக்கும் அழுத்தத்துக்குட்பட்ட காற்றை வெளிப்படுத்தி அதை நிலவாயுவை எரிக்கப் பயன்படுத்தி மின் சக்தியைத் தயாரிக்கிறார்கள். அழுத்தத்தில் இருந்து விடுபடும் காற்று ஆக்ஸிஜனை எரிவாயுவுக்குச் செலுத்துவதில் திறன் அதிகம் உள்ளது என்பதால் இது பயனுள்ள முறையில் மின்சக்தியைச் சேமிக்க உதவுகிறது. 

மகரந்தம்

தமிழில் சாதாரணமாக நாம் காணுவது எழுத்தாளர்களுக்கு இருக்கும் அதீத தன் முக்கிய உணர்வு. சிறு திருத்தங்களையோ, அல்லது எழுத்தில் காணப்படும் குறைகளையோ சுட்டினால் ஒன்று காட்டமாகப் பதில் எழுதுவார்கள், இல்லையெனில் பிறகு எழுதிக் கொடுக்க முன் வரமாட்டார்கள். தமிழில் பதிப்பிக்கப்படும் பெருவாரி புத்தகங்களைச் சரிவர பதிப்பு வேலைக்கு உட்படுத்திப் பிரசுரிப்பது கூட நடப்பதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் நன்கு பிரபல்யம் கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் மீள் பிரசுரம் ஆகையில் அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் நிறையப் பிழைகளோடு காணப்படுகின்றன.

மகரந்தம்

யாரோ ஒரு ‘புரட்சியாளர்’ சொன்னாராமே, ‘த மீக் ஷல் இன்ஹெரிட் த எர்த்’ என்று. அதைக் குறித்து யோசித்திருக்கிறவர்களுக்குத் தோன்றி இருக்கலாம். இந்த வாக்கியம்தான் என்னவொரு கனமான அர்த்தங்களை உள்ளே மறைத்திருக்கக் கூடும் என்று. … எல்லாப் போர்களிலும், நெஞ்சு நிமிர்த்தித் தீரனாகச் செல்லும் அப்பிராணிகள் முதல் கட்டக் கொலை வீச்சில் அனேகமாகக் கொல்லப்பட்டு விடுவார்கள். த மீக், அதாவது தயங்கித் தயங்கிச் செல்லும் மிச்சப் பிராணிகள் கடைசியில் என்ன எஞ்சுகிறதோ அதைத் தம்முடையதாகக் காணலாம் என்று ஓர் அர்த்தம் இதில் கொள்ள முடியும். இறுதிக் கணக்கில் திமிங்கிலம் கடலை ஆள்வது போலத் தோன்றினாலும், அதன் இருப்பே ப்ளாங்டன் போன்ற நுண்ணுயிர் பல்கிப் பெருகுவதில்தான் இருக்கிறது.

மகரந்தம்

விமானியில்லாத விமானங்களை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தபோது இந்த எண்ணம் உதித்து இருக்கிறது: அவற்றை உண்ண ஏற்றவையாக மாற்றி அமைத்திருக்கிறார்கள். எங்கெல்லாம் பேரழிவு தாக்குகிறதோ, எங்கு பசி வாட்டுகிறதோ, எப்பொழுது போர் மூள்கிறதோ, அப்போது இந்த விமானியில்லா விமானம் விண்ணில் செலுத்தப்படும். பஞ்சப் பகுதிகளில் தானாகவே இறங்கும். உடனை அதற்குள் இருப்பதையும் அந்த விமானத்தையும் பிய்த்து பங்கு போட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். இறைச்சியும் தேனடைகளும் உலர் காய்கறிகளும் கொண்டு இந்த விமானம் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. களப் பணியாளர்கள் இந்த டிரோன் வெறும் கண்துடைப்பு என்று…

மகரந்தம்

2016 என்பது உலகம் பூராவுமே கடும் வெப்பம் நிறைந்த வருடமாக இருந்ததாக உலக தட்ப வெப்ப மானிகளைக் கவனிக்கும் அமைப்புகள் சொல்கின்றன. அமெரிக்காவில் பொதுவாக மேற்குக்கரை மாநிலங்களில் சிலவற்றில் நல்ல உஷ்ணம் உள்ள இடங்கள் நிறைய உண்டு. கலிஃபோர்னியா என்னும் மாநிலம் கடந்த சில வருடங்களாக மழை இல்லாது, குளிர் காலத்தில் உயர மலைகளில் பனியும் பொழியாததால் நீர்ப்பஞ்சத்தில் சிக்கி இருந்தது. அதுவும் தென் கலிஃபோர்னியா பகுதிகள் பாலைநிலங்களை விளை நிலங்களாகவும் வசிப்பிடங்களாகவும் ஆக்கிக் கட்டப்பட்ட பகுதிகள். இந்த இடங்களில் வெப்பமும் கூடுதலாக இருந்து, தண்ணீர்ப்பஞ்சமும் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் 2016 இன் இறுதியில் கலிஃபோர்னியாவில் நல்ல மழை. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில அணைகள் உடைப்பேடுத்துப் பெரும் நிலப்பகுதிகள் ஆபத்தில் சிக்கும் என்றெல்லாம் பயப்படும் அளவு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த நல்ல திருப்பம் அதிகம் நாள் தாக்குப் பிடிக்காது, மறுபடி கோடை வந்து விடும். கடும் வெப்பம் தாக்கும்

மகரந்தம்

உலகெங்கும் பரவியுள்ள ஒரு மத அமைப்பு இந்தியருக்கு அனேகமாக அதன் இயல்பெயரால் தெரிய வந்திராது. மார்மன் இயக்கம் என்பது தொடர்ந்து அமெரிக்காவில் பரவி வருகிறதோடு, அமெரிக்காவின் பெரும் நிதிநிறுவனங்கள், ஹோட்டல்கள், வங்கிகள் என்று பற்பல தொழில் அமைப்புகளையும் ஆள்கின்றது. இதன் கணக்கு வழக்குகள் சாதாரணருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் ஊடகங்களுக்குமே எட்டாத ரகசியங்கள். இதன் சில ரகசியங்கள் இப்போது புலப்படத் துவங்கி உள்ளன. கார்டியன் பத்திரிகை இந்த மார்மன் கிருஸ்தவ இயக்கம் எப்படிப் பல பெருநகரங்களில் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறது, அமெரிக்காவின் சில மாநிலங்களில் மார்மன் கிருஸ்தவர்களுக்காகத் தனிநகரங்களையே கட்டத் திட்டமிடுகிறது என்பதை வெளியிட்டுள்ளது. இந்த சர்ச்சுக்கு 2012 ஆம் ஆண்டின் கணக்குப் படி சுமார் 35 பிலியன் டாலர்கள் மதிப்புள்ள கட்டிடங்களும் நிலங்களும் சொந்தமானவையாக இருந்தனவாம். ஆண்டொன்றுக்கு இந்தச் சர்ச்சின் உறுப்பினர்கள் தம் வருட வருமானத்தில் 10% த்தைக் கொடுக்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை.

மகரந்தம்

சில ஓவியங்களைக் காட்டி ஆங்கிலம், பிரஞ்சு இரு மொழிகளிலும் அவற்றைக் கதைப்படுத்தச் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் பெண்கள் சாதனையாளர்களாய் இருந்தார்கள், வன்முறை மிகுந்திருந்தது, பெற்றோர் வசை பாடப்பட்டார்கள், குற்றவுணர்வு தவிர்க்கப்பட்டது; பிரஞ்சு மொழிக் கதைகளில், மூத்தவர்கள் அதிகாரம் செலுத்தினார்கள், குற்றவுணர்வு நிறைந்திருந்தது, சமவயதினர் வையப்பட்டனர். இதே போன்ற ஒரு ஆய்வை இதே ஆய்வாளர் பின்னர் ஜப்பானிய அமெரிக்கர்களிடம் மேற்கொள்கிறார். “என் விருப்பங்கள் என் குடும்பத்தினரின் விருப்பங்களுடன் முரண்படும்போது…” என்ற வாக்கியத்தை ஜப்பானிய மொழியில் நிறைவு செய்தவர்கள், “மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது,” என்றும், ஆங்கில மொழியில் நிறைவு செய்தவர்கள், “நான் நினைத்ததைச் செய்கிறேன்,” என்றும் முடித்தார்களாம்!

மகரந்தம்

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் 130 மில்லியன் ஹெக்டர் காடுகள் இந்தோனேஷியாவில் அழிக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமும் எட்டு புட்பால் திடல் அளவுக்கான காடு சாம்பலாகிறது. கிடைத்த ஒவ்வொரு சதுர அடியும் புது நகரங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் உருவாகியுள்ளன. காட்டுத்தீயை உருவாக்குவதே மிகச் சுலபமாக தரிசு நிலங்களாகவும், கட்டிடங்களாகவும் மாற்றுவதற்கான சுலபமான வழி எனக் கண்டுகொண்டிருக்கும் அரசும் தனியார் மையங்களும் காட்டுத்தீயில் குளிர்காய்கிறார்கள்.

மகரந்தம்

புகைப்படங்களில் வேண்டிய பலவிதமான மாற்றங்களை செய்ய மென்பொருட்களுக்குக் குறைவில்லை. அதேபோல காணொளிகளில் எடிட்டிங் செய்து மாற்றங்களை உருவாக்க முடியும். கைப்பேசியில் கூட இந்த மாற்றங்களைச் செய்ய முடிவதால் பொழுதுபோக்குக்காக பலரும் படங்களை எடிட் செய்து வலைத்தளங்களில் பகிர்வதை பார்த்து வருகிறோம். ஆனால், ஒலித் துண்டுகளை எடிட் செய்து கொலாஜ் போல ஒன்று உருவாக்குவது சவாலாகவே இருந்துவந்தது. இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு சில ஒலித்துண்டுகளை மாற்றம் செய்யலாம் ஆனால் மொழிக்கும் ஒலிக்கும் இருக்கும் தொடர்பை எடிட் செய்யமுடியாது. அடோபி எனும் மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் பிராஜெக்ட் வோக்கோ எனும் மென்பொருள் வழியில் ஒலிக்கும் மொழிக்கும் …

மகரந்தம்

அரிஸ்டாட்டலின் காலம்தொட்டு மனிதனின் சிந்தனை இயல்புகளை பதிவு செய்யத் தொடங்கியிருந்தாலும் நாம் விலங்குகளின் இயல்பிலிருந்து எத்தனை தூரம் விலகி இருக்கிறோம் என்பதைக் காட்டும் தொகுப்பாக அது இருந்து வந்திருக்கிறது. சகஜீவனான மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளக்கூட சரியான கருவிகள் இல்லாத மனிதனுக்கு விலங்குகளுக்கு பசி, தூக்கம், வலி போன்ற எந்த உணர்வுகளும் கிடையாது என அறிந்துகொள்ள பலகாலம் ஆனது என்பதில் அவ்வளவாக ஆச்சர்யம் இல்லை. வவ்வாலாக ஒருவன் மாறினால் அவனது சிந்தனையில் எவ்விதமான மாற்றங்கள் நடக்கும்? இன்றைய காலத்தில் நாம் விலங்குகளின் அரிதான பல நடத்தைகளைப் பற்றிப் படிக்கிறோம் – கால் உடைந்த ஒட்டகத்தைப் ரெண்டு நாட்கள் பார்த்துக்கொண்ட யானை, பல வருடங்கள் பிரிந்திருந்த மனிதனை அடையாளம் கண்டுகொள்ளும் சிங்கம், டால்ஃபின்களின் தன்னலமற்ற செயல்கள் போன்றவற்றை எளிய அறிவியல் கொண்டு விளக்க முடியுமா?

மகரந்தம்

உலக பலவான்களான வளர்ந்த நாடுகள் , முன்னெப்போதுமில்லாத வன்முறையையும் அழிவையும் உருவாக்கி இருப்பதாக இந்தக் கட்டுரை ஆசிரியர் குற்றம் சாட்டுகிறார். இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. கடந்த நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் பெரிய ஆக்கிரமிப்புகள் மற்றும் கலவரங்களுக்கு மத்தியில் ஓரளவு தனது சுயத்தைத் தக்கவைத்து பிரிவினைவாதிகள் ஊடுருவ முடியாத நிலமாகவே சிரியா இருந்து வந்திருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஆதிக்க சக்திக்கு பலப்பரிட்சைக் களமாக இருந்துவரும் சிரியா உள்நாட்டு கலவரங்களால 2011 ஆம் ஆண்டு முதல் பேரழிவை சந்தித்துவருகிறது.

மகரந்தம்

சிதார் மேதை ரவிஷங்கரின் மற்றொரு ஆபரா வெளியீடு அடுத்த வருடம் லெஸ்டர் நகரில் அரங்கேற்றமாகும் எனும் விவரத்தைக் குறிப்பிடும் இந்தக் கட்டுரை அவரது முதல் ஆபரா நிகழ்வு 2012 ஆம் வருடம் ராயல் ஃபெஸ்டிவல் ஹால் என்று வழங்கப்படும் லண்டனின் இடதுகரை வளாகத்தில் நிகழ்ந்ததைக் குறிப்பிடத் தவறியிருக்கிறது. அந்த நிகழ்வை நாம் சொல்வனத்திலும் கட்டுரையாக வெளியிட்டோம்.