இவ்வளவு சொல்கிறோமே… மோகனாங்கிக்கு தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் என்ற இடம் எளிதில் கிடைத்துவிடவில்லை. பொதுவாகவே ஈழத்தவரின் தமிழ் இலக்கியப் பணிகளுக்குக் கிடைக்க வேண்டிய முறையான இடம் கிடைப்பதில்லை என்பது இன்றும் உண்மை. சி.வை.தா ஒருவர் போதுமே! அவர் இல்லையென்றால் தொல்காப்பியம் ஏது! கலித்தொகை ஏது! பல நூல்களைக் கண்டெடுத்த அந்த மாமேதையைப் பற்றி தமிழுலகம் பேசுகிறதா!
Category: புத்தக அனுபவம்
சிலையும், கல்லும் – நூல் விமர்சனம்
தங்கத்தின் மாற்றினை அறிவதற்கு. ஆசாரி. உரைகல் என்று ஒன்று வைத்திருப்பார். கிரிதரனின் வசம் அந்தக் கல் வந்திருக்கும் போலிருக்கிறது. முதல் கட்டுரை நாம் கொண்டாடும் ஜெயகாந்தன் எழுதிய ஒரு மனிதன் ஒரு வீடு, ஒரு உலகம். வாசனையைக் கொண்டு, பூவை அறிவது போல, நம்மை நேரடியாக பாதிப்பது, ஒரு எழுத்தின் மூலம் எழுத்தாளனை நாம் அறிந்துகொள்வதே. ஹென்றி என்ற. கதாபாத்திரம், புனைவின் பிடிகளுக்குள் கட்டுப்படாதவன். அவனது சமநிலை. ஆச்சரியப்படுத்தும் ஒன்று. ஜெயகாந்தன் சொல்லும் மிகச்சிறப்பான ஒரு அவதானிப்பை கிரி சொல்கிறார். மனிதன் என்பவன், சமூகத்தின் விளைச்சல் இல்லை. அவன் சுயமான எண்ணங்களைக் கொண்டவன்
உயரும் : சுரேஷ் பிரதீப்
திருமணமாக வேண்டிய வயதில், படித்துக்கொண்டோ அல்லது வேலையிலோ இருக்கும் மணமாகாத இளம்பெண்கள் தோழிகளின் திருமணத்திற்கும் அவர்களின் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில்.போக வேண்டுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போராட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பது இயல்பு
மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்
ஷெர்லாக் ஹோம்ஸின் தீவிர வாசிப்பின் பின்னணியில் சில குற்றப் புனைவுகளையும் சமைக்கத் தவறுவதில்லை காலத்துகள். ஆனால் அதற்கான களம், பின்புலம் என்றெல்லாம் மெனக்கெடாமல், ஒருவித அங்கத நடையில் எழுதி திருப்தியடைந்து கொள்கிறார். இடையே, இலக்கிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் எழுத்தாளனும் இடம்பெறத் தவறுவதில்லை. ஃபோர்ஹேவின் (Jorge Louis Borges) பாதிப்பில், தன் குறுநாவலில் எழுதும் கனவின் பாதிப்பில், அதிலிருந்து வெளிப்பட்டு ஒரு சிறுகதையை எழுதிவிட்டுப் போகிறார்
மூத்த அகதி – நாவல் – வாசு முருகவேல்
சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, மெல்ல அதை விருந்தினர் விடுதியாக மாற்றிய விளக்கத்திலிருந்து கதை துவங்குகிறது. அந்த விடுதியில் தங்கிச் செல்வோர் அனைவரும் வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்கள். இந்த விளக்கத்தினிடையே வெளிநாடு வாழ் ஈழத் தமிழர்களால் நிறைந்து காணப்படும் அந்த விடுதியில், அவர்களில் இலங்கைத் தமிழர்களும் இருப்பார்கள் என வார்த்தைகளில் சிறிய வேறுபாட்டைக் காட்டிக் கடக்கிறார்.
பேச்சினும் எழுத்து ஆகச்சிறந்தது
அதீதத்தின் ருசி கிராமத்து வாழ்வியலை அவர்களின் மன உணர்வுகளோடு கலந்து புலம்பலை புறந்தள்ளி வாழ்வை வார்த்தைகளின்றி அவதானிக்கச் செய்து மன அமைதியோடு அமர்ந்து மண்ணை தன் மனதிற்கு ஏற்றவாறு மாற்றி அதற்கும் ஒரு ருசியை கொடுத்த மகத்துவத்தை உணர்த்தும் ஆழமானதொரு சிறுகதை. பெண்களின் அக உணர்வுக்குள் சலிப்பு, இயலாமை, அவமானம் எல்லாவற்றையும் அண்டவிடாமல் நுட்பமானதொரு மன வடிவை கட்டமைத்து பிரபஞ்சத்தை தன் உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டதொரு உணர்வைத் தரும் அதீத்தின் ருசி பெண்களின் பேராளுமையை பறைசாற்றுகிறது.
மனதில் புதைந்த காயம்பட்ட மிருகம் !
தனிப்பட்ட மனிதர்களின் பொறுப்போ, அல்லது திருமணம் என்கிற அமைப்பில் இருக்கக் கூடிய மௌடீகமோ, அந்தத் தம்பதிகளுக்குள் ஒரு விலகல் நேர்ந்து அவர்கள் தேமேயென்று வாழ்கிறார்கள். அவன் வெளியூருக்கு சென்ற சுதந்திரமான ஒரு நாளில் அவள் இணையத்தில் நுழைய, ஒரு மற்றொரு ஆளுடன் சுவாரஸ்யம் பூக்கிறது. அதில் அவள் திளைக்கிறாள். ஒரு ஓரத்தில் குற்ற உணர்ச்சிகளுக்கான ரெடிமேட் பதில்களும் உண்டு.
உலகில் ஒருவன் – தொப்புள்கொடி அறாத குழந்தை
சிறுவனின் பார்வையில் இருந்து பெரியவர்களைப் பற்றி, பெரியவர்களின் வாழ்வைப்பற்றி பெரிதும் பேசும் இக்கதையை வாசிக்கும் நாம் பெரியவர்களின் பார்வையில் சிறுவனாகவும், சிறுவனின் பார்வையில் பெரியவர்களாகவும் தோற்றம்கொள்ளும் மாற்றமும் மாயமும் நாவல் முழுவதும் நிகழ்துகொண்டே இருப்பது , வாசிப்புக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.
இரு மதிப்புரைகள்
வெறும் இருபத்தியைந்து அத்தியாயத்தில் எல்லாவற்றையும் சுருக்கி ஒரு தேர்ந்த மிலிடரி ஆபிசரின் ஆணைப் போல் எழுதியிருக்கிறார். வாழ்வின் துயரங்களை அனுபவிப்பவன் அதற்கான காரணங்களை மட்டும் வைத்துக் கொண்டு என்ன செய்வது? அதனால் குற்ற உணர்ச்சியே இல்லாமல் பரபரவென்று விரிகின்றக் கதை அதே வேகத்தில் முடிந்து விடுகிறது.
அனைத்துக்கும் சாட்சியாக நாம்
ஒவ்வொரு காலகட்டமும் ஏதோரு விதத்தில் அதன் சாராம்சத்தை தன்னுள் ஒளித்து வைத்துள்ளது. பாரதியாரின் படைப்புகளை வாசிக்கும் ஒருவர் அரசர் காலத்தில் இருந்து ஜனநாயகக் காலம் அடைந்த தாவலின் சித்திரத்தை கண்டு கொள்ள முடியும். உலகலாவிய புது சிந்தனைகளை முன்வைத்துப் பேசிய முதல் தமிழரின் படைப்புகள் என்பதையும் உணர முடியும். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில் எழுதிய வ.வே.சு ஐயர் அவர்கள் காலனிய ஆட்சியால் தொலைந்து போன பண்பாட்டுச் செல்வங்களை மீட்டுப் பேசத் தேவையான சிந்தனைகளை முன்வைக்கும் படைப்புகளை உருவாக்கினார். இருவரும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் ஒரு வேளை தமிழில் நவீனத்துவமும் பின்நவீன நவ காலனிய யுகமும் ஒரே சமயத்தில் முதிர்ச்சி அடைந்திருக்கும்
தமிழ்ப் பெண்கவிதைவெளி
இத்தொகுதியில் ஒரு சில கவிதைகளைத் தவிர ஏனைய கவிதைகளின் மைய விசயமாக பெண் இருக்கிறாள். ஆனால் இந்தப் பெண்ணை அவளின் அன்றாட வாழ்வோடு பொருத்தி அவளது பல்வேறு பரிமாணங்களை, அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். இந்தப் பகிர்வு பாசாங்குகளற்றது. சராசரியான ஒரு பெண் அனுபவிக்கக்கூடிய உடல், உள காயங்களிலிருந்து எழுவது
புதுவெளிச்சம்
இக்கதைகள் பரப்பும் நிறங்கள் வெவ்வேறாக இருந்தாலும், அவை நிச்சயமாய் ஒளிர்தலைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொகுப்பின் அயல்நிலம் சார் கதைகள் பெரும்பாலும் தமிழ்ச் சிறுகதை உலகத்துக்குப் புதியவை. அவை தங்களை, கதையை மொழிந்து வெளிப்படுத்திக் கொள்ளும் விதம் அபூர்வமானவை. கதையிடைவரும் அந்நிய நிலப்பரப்பின் மொழியும், நிலக்காட்சிகளும் வசிப்பவரின் மனதை வசீகரப்படுத்துபவை.
‘குரவை’ நூல்– வாசிப்பு அனுபவம்
இந்த நாவலை, _”பன்முக நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டு வரும் அத்தனை கலைஞர்களுக்கும்”_ சமர்ப்பித்துள்ள நூலின் ஆசிரியர், _”தஞ்சை வட்டாரத்தில் மரபார்ந்த கலையான கரகாட்டம் உள்ளிட்ட கலைகள் நீண்ட நெடுங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. அது ஒரு காலத்தில் உன்னத கலையாக இருந்தது. காலப்போக்கில் அது தனது அழகியலை இழந்து வெறும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட ஒரு நிகழ்ச்சியாக சுருங்கிவிட்டது. அந்த கலையில் திறன்மிக்க கலைஞர்களாக இருந்தவர்கள் காலச்சூழலில் அடையாளமற்று போனார்கள். அவர்கள் குறித்து நான் தொடர்ந்து பதிவு செய்து வந்தாலும், ஒரு நீண்ட கலை மரபுக்கு அவர்கள் ஆற்றி வந்த கலை சேவையை போற்றும் வகையில் இந்த நாவலை எழுதத் தொடங்கினேன்”_ என்று இந்த நாவல் எழுதத் தொடங்கியதற்கான நோக்கத்தை எழுத்தாளர் கூறுகின்றார்.
இயற்கையின் கலகம்
Nature’s Mutiny (இயற்கையின் கலகம் ) என்னும் இந் நூலின் போக்கில் பழக்கப்படாத கடுங்குளிர் காலநிலை என்ற பாடத்தைக கடந்தும் கணிசமான தூரம் பயணிக்கிறோம். . புவி முன்பை விட குளிரடைந்தது என்று நிச்சயமாக அறிந்துள்ளோம்: முந்திய கால வெப்பநிலைகளை மதிப்பிடுவதற்குரிய பல்வகை நுணுக்கங்கள்- எடுத்துக் காட்டாக ஐஸ் உள்ளகங்கள்(ice cores) மற்றும் மர வளையமுறை, (tree rings method)-மூலம் அதற்கான ஆதாரம் காண முடியும். மேலும் கடிதங்கள், நாட்குறிப்புகள், விளக்கப் பேருரைகள் (sermons) ,மது உற்பத்தியாளர்களின் பதிவுகள் போன்ற பற்பல வடிவங்களில் குளிர் தாக்கம் குறித்த விரிவான கையெழுத்து வர்ணனைகள் உள்ளன.
நீர்ப்பறவைகளின் தியானம்
பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன். அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தது என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன். “இடம் பெயர்தல்” பேய்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்பது துப்பறியும் பாணி கதை என விதிவிதமான கதை கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.
எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும் படமும்
அதன் ஏழு மணி நேரத்தின் ஒவ்வொரு நிமிடமும் கவர்ந்திழுக்கக்கூடியது. என் வாழ்நாள் முழுவதும் ஒவ்வொரு வருடமும் இதைப் பார்த்தாலுங்கூட அது எனக்கு நிறைவையே அளிக்கும்” – என்று சூசன் சாண்டாக் எப்போதோ கூறியது காரணமேயின்றி தோன்றி, அந்த நேர்த்தியான படத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.
பின்கட்டு
இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும்
கம்பெரலிய நாவலின் தொடர்ச்சியாகவே கலியுகய அமைக்கப்பட்டுள்ளது. நாவலில் மார்ட்டின் விக்கிரமசிங்க வரைந்து காட்டும் அழுத்தமான சமூகச்சித்திரம் சமூகவியல் தன்மையுடனும் சமூக மாற்றம் குறித்த நுண் அவதானங்களுடனுமான ஒரு அழுத்தமான ஆவணமாக கலியுகயவை மாற்றிக் காட்டுகிறது.கம்பெரலியவின் மையக்கதாபாத்திரங்களான கசாறுவத்தே முகாந்திரம்-மாத்தறை அம்மையார் தம்பதியினர் மற்றும் அவர்களது பிள்ளைகளான அனுலா, நந்தா, திஸ்ஸ மருமகன் பியல் போன்றோரைச் சுற்றி கதை நகர்கிறது.
தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
எதுவும் குற்றமே இல்லை என்று எண்ணுபவர்களுக்குக் குற்றவுணர்ச்சி எழும் சாத்தியங்கள் இல்லை. இருப்பின் சமகாலச் சிக்கல் என்று இருண்மைகளை ஒரு கரிய இறகென சூடிக்கொண்டு விடுதல் எளிய இலக்கியத் தந்திரம். அந்த பாசாங்கைக் கீறி ஓர் ஒற்றையடிப்பாதையை தேடிக்கொண்டு உள்மனக்குரலுக்கு பதில் சொல்ல முடியுமா என்று தேடுபவன், அர்த்தமுள்ள மனிதனாக முயல்கிறான். இதை அவன் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்விருப்பப்படி ஒருவர் எப்படிவேண்டுமானாலும் நடக்கிறேன் என்று பயணிப்பது அவரவர் சுதந்திரம். அவரவர் தேர்வு. ஆனால் யாரோ எப்போதோ நடந்த ஏதோ ஒரு பாதையின் வழியாகவே அவர்கள் செல்லநேர வேண்டி இருப்பதில், தெரிவுகள் குறைவு.
கலாஸ்ஸோவை வாசித்தல் – பாகம் I
எழுத்தாளன் முடிக்கும் இடத்தில் வாசகன் துவங்குகிறான். வெளிப்படையான விஷயத்தைப் பெரிதுபடுத்துகிறாய் என்று ஒருவர் முரண்படலாம், ஆனால் இந்த விஷயத்தில் இப்படிச் சொல்வது ஒன்றும் அவ்வளவு மோசமான தேய்வழக்கல்ல.
சிவகாமி நேசன் என்னும் இனிமை
பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கன்னட பக்திக் கவிஞரான அக்கமகாதேவி சிவனை நினைத்து எழுதிய வசனங்களை எழுத்தாளர் பெருந்தேவி மொழிபெயர்த்துள்ளார். அவை ‘மூச்சே நறுமணமானால், என்ற நூலாக வெளிவந்திருக்கிறது. நூற்றி இருபது வசனங்கள் கொண்ட இந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. பெருந்தேவியின் மீளுருவாக்கம் அர்த்தத்தை மட்டும் முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் “சிவகாமி நேசன் என்னும் இனிமை”
நீலகண்டப் பறவையைத் தேடி
மஞ்சள் பூ பூத்திருக்கும் சிறு கடுகுச் செடி முதல் பேராலமரம் வரை நிலத் தாவரங்களும், நதிப்படுகையின் கோரைப்புல் முதல், ஏரியின் ஆழத்தில் உள்ள கிழங்குக் கொடிகள், நாணல் வரையான நீர்த்தாவரங்களும் கதைக்குப் பங்களிக்கின்றன. அது போன்றே எலி, தவளை முதலான சிறு விலங்குகளிலிருந்து யானை போன்ற பெருவிலங்கு வரை பல்வேறு விலங்குகளும் நாவலெங்கும் இடம் பெற்று கதையோட்டத்திற்கு உதவுகின்றன. சிறு மின்மினிப்பூச்சிகள், வயல் நீரில் வட்டமிடும் சிறு நீர்ப்பூச்சிகள், ஜிஞ்ஜி போன்ற குளிர், பனி இரவுகளில் ஒலியெழுப்பும் பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள், பறவையை முழுங்கும் பானசப்பாம்பு போன்றவை கதை நெடுக நடமாடுகின்றன.
புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
ஆசிரியரின் முதல் கதையும் அவரது சொந்த அனுபவத்தை வைத்து எழுதியதும் என்று சொல்லப்பட்ட ‘விடிவு’, தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. நண்பர்கள் பைக்கில் செல்லும்பொழுது, ராஜா என்பவன் லாரியில் அடிபட்டு இறந்துவிடுகிறான். அவன் சடலத்தை இறந்தவன் வீட்டில் ஒப்படைக்கும்பொழுது எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்பதை சஸ்பென்சாக வைத்து, கதை நகர்கிறது. ஏமாற்றுபவன், திருடன், காமக்கண்ணோடு பார்ப்பவன், சொல்வதொன்று செய்வதொன்று என்று நடமாடுபவர்கள், அப்பாவிகள் இருக்கும் கதைகள் உள்ள தொகுப்பில், மானுடத்தில் அன்பு மிச்சமிருக்கிறது என சொல்ல ஒரு எளிமையான கதை.
ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
இலங்கையில் இனப் பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாகப் பரிணமித்த பின்னர் அது ஈழ இலக்கியத்தின் ஒட்டுமொத்த ஆன்மாவிலும் பிரதிபலிக்கத் தொடங்கியது. கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் நாடகம் என இலக்கியத்தின் எல்லா வடிவங்களுமே இன முரண்பாட்டையும், போர் அரசியலையும் பற்றியே அதிகம் பேசத் தொடங்கின. அந்தப் பண்பேற்றம், குறித்த “ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்”
பூமுள் கதைகள் – கமலதேவியின் குருதியுறவு நூலை முன்வைத்து
இத்தொகுப்பை வாசிக்கத் தொடங்கும்போதே ஈர்ப்பது இதன் மொழி. ஒருவித மாயத்திரை விரிக்கும் புகை மூட்டம்போல. இல்லையில்லை, அது போன்ற வெம்மையில்லை. பனிமூட்டம்போல மென் தண்மையுடன் தழுவி மயக்குகிறது.
யசோதராவின் புன்னகை
என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”
பொன்னுலகின் வேடிக்கைகள்
ஆங்கிலேய காலனியாதிக்கத்திற்குப் பிறகான சுதந்திர இந்தியாவிலும் ஹிப்பி இயக்கத்தின் மிதமான தாக்கம் எதிரொலித்தது. மிக எளிய வடிவில் அது நம்மை வந்தடைந்தது எனலாம். அதன் தீர்க்கமான தர்க்கங்களும் ஏட்டளவில் தேங்கிவிட்ட வாழ்க்கைக் கோட்பாடுகளும் நமது சூழலுக்கேற்ப வேறு முகமூடிகளை அணிந்துகொண்டன.
“கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்”
ரா கிரிதரன் பேட்டி ரா. கிரிதரனின் அம்மா ஊர் திண்டிவனம். அப்பாவுக்கு புதுச்சேரி. புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பட்டப்படிப்பு. அதன்பின் தகவல் தொழில்நுட்பத்தில் எம்.டெக். படிப்பு. சென்னை, பெங்களூர், பூனா போன்ற நகரங்களில் வேலை செய்தபின் 2006 ஆண்டு முதல் இங்கிலாந்து வாசம். ““கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்””
நூல் அறிமுகங்கள்
டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார்.
பாகீரதியின் மதியம் – விமர்சனம்
நாவலின் நடை தாண்டவராயன் கதையைப்போலவே, நீண்ட நீண்ட வாக்கியங்கள் வழி பயணப்படுகிறது. வாசிக்கத் துவங்குகையில் முதலில் கொஞ்சம் தடுமாறி, இழுத்துப் பற்றுகையில், கடற்கரை குதிரைச் சவாரி போன்று மிதமான வேகத்தில் சென்றபடி துவங்கிய இடத்திற்கே திரும்பவந்து, மீண்டும் வெவ்வேறுப் பாதைகள் பற்றி முற்றிலும் புதியதோர் கனவினைக் கண்டு நீண்டுக்கொண்டே சென்ற ஒரு முடிவில்லாதப் பயணம்.
கல்லும் மண்ணும்
பாரத தேசத்தின் ஆன்மிகக் கலாச்சார ஊற்றுகளில் முக்கியமான ஒன்றான தமிழ் மண்ணின் மிகச் சாதாரண, பொருளாதாரம், அந்தஸ்து, அதிகாரம் முதலியவற்றில் கடைக் கோடிப் படியில்கூட இராத சாமானிய மக்களிடம் இந்த மண்ணின் ஆன்மிக தரிசனம் தத்துவ வார்த்தைகளாக மட்டுமன்றி, உண்மையான வாழ்வை வழிநடத்திச் செல்லும் உணர்வாகவும் இருந்த காலம் இக்கதை நிகழும் நேரம்.
நகரத்தில் இப்போதும் இரவு
பழைய தேவாலயக் கட்டடங்களின் சீரழிவுக்குப் புறாக்களின் கழிவுகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்த ஊரில் இருக்கும் பாதிரிமார்கள், விலைமதிப்பில்லாத தேவலாயக் கட்டடங்களின் அழிவுக்குக் காரணமாக இருக்கும் புறாக்களை கூண்டோடு அழிப்பதற்கு ஒரு விசித்திரமான உபாயத்தைக் கைக்கொள்கிறார்கள். பாதிரியார்கள் பருந்துகளை வளர்த்து, அவற்றைப் புறாக்களுக்கு எதிராக ஏவிவிடுகிறார்கள். கொலைத் தொழில் ஒன்றையே குறியாகக் கொண்டு வளர்ந்த பருந்துகள், புறாக்களைக் கொன்றொழிப்பதைப் பொலான்யோ, கதையின் போக்கில் மிக நுணுக்கமான வகையில் விவரிக்கிறார்.
தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு
ஓசையற்ற வாக்கியங்களை நினைவுகள் சன்னமாக ஒலிக்கிறது-பொலான்யோ குத்தெதிர் கோணங்கள் இது புத்தகம் வெளியான போது வந்த அறிமுக விமர்சனம்: “பொலான்யோவின் எல்லாவிதமான கிறுக்கல்களும் அச்சாகிறது. எனவே, ஜிகினா தோரணம் போன்ற இந்த 56 ஒட்டுகளை, ஒன்றாகக் கோர்த்து “வெளிறிய நீலம்” என்னும் தலைப்பில் பிரதியாக்கி இருக்கிறார்கள். 1980களின் பார்சிலோனாவில் “தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு”
கைச்சிட்டா – 3
அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”
நண்பனா, வாதையா?
தேய்வழக்காகப் போயிருக்க வேண்டிய ஒரு கதையை இப்படித் தடம் மாற்றி, ஆனால் இதே போன்ற கதைகளின் பல அம்சங்களைக் கைவிடாமல் கதையில் நுழைத்து, சாமர்த்தியமாக நயாகரா மீது கட்டிய கயிற்றின் மேல் நடந்திருக்கிறார் ஸிக்ரிட் நூன்யெஸ். நாய் என்பது கயிற்றில் நடப்பவருக்கு மிக உதவியாக இருக்கும் விரித்த குடை, அல்லது கையில் நிலைப்பைக் கொடுக்க வைத்திருக்கும் நீண்ட கம்பு. சோகத்தில் இவர் மூழ்காமல் இருக்க உதவும் மிதவை அந்த நாய். நாவலின் விசித்திரம் என்னவென்றால் ஒரு சாவின் சோகத்திலிருந்து மீள்பவர் சாகத் தயாராகும் இன்னொரு ஜீவனால் தேறி வருவதுதான்.
உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள்
மூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான். சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது. வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத்திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள்.
ஒரு எழுத்தாளரின் ஆதர்சங்கள், விவரணைகள் மீது கூர்ந்தநோக்குடன்
ஜெர்மானிய எழுத்தாளர் ஸீபால்ட் வகைப்படுத்த இயலாப் புத்தகங்களைப் படைத்துள்ளார். புனைவு, பயணம், மெல்லிய மறைதலுடன் சொல்லப்பட்ட சுயசரிதை மற்றும் புதிரான குறிப்பற்ற புகைப்படங்கள் என்று பலவற்றைக் கலந்து மறைந்து கொண்டே இருக்கும் மனித அனுபவத்தின் சுவடுகளை மீட்டெடுக்கும் தனது படைப்புகளில் பயன்படுத்தினார்.
வெளிச்சமும் வெயிலும் – சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்
சிவா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயர் எழுத்தாளர் திரு.ஜெயமோகன் அவர்களின் இணையதளம் மூலம் அறிமுகமானது. அவரது ஒரிரு கதைகளை இணைய இதழ்களில் முன்பே வாசித்ததும் உண்டு. 2019-ம் ஆண்டின் மே மாதத்தில் ஜெயமோகன் அவர்களின் தளத்தில், “லண்டன் தமிழ் இலக்கிய குழுமம்” துவக்கவிழா குறித்த அழைப்பிதழைக் கண்டேன். அதிலே, ராய் “வெளிச்சமும் வெயிலும் – சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்”
உரக்க ஒலித்த பெண் குரல்
1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் “உரக்க ஒலித்த பெண் குரல்”
பனைமரமே, பனைமரமே
இலக்கிய எழுத்தாளர்கள், விமர்சகர்கள், கே. என். ராமச்சந்திரன் போன்ற தரமான இலக்கிய வாசகர்கள் இவர்களுடன் தொடர்பு ஏற்பட்ட பிறகு நான் படிக்காமல் விட்ட எழுத்தாளர்கள் பற்றிப் பேச்சு வரும்போது ஹெப்ஸிபா ஜேசுதாசன் பற்றியும் பேசியிருக்கிறோம். நான் பெண் எழுத்தாளர்கள் பற்றிய ஆராய்ச்சியை 1974 இல் தொடங்கியபோது “ஹெப்ஸிபா ஜேசுதாசனை மறந்துவிடாதே” என்று நினைவு படுத்தினார் வெங்கட் சாமினாதன். புத்தம் வீடு நாவலை மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். இடையில் அது பற்றி சி.சு.செல்லப்பா கூறியதையும் எங்கேயோ படித்திருந்தேன்.
நீளாவுடன் நீளும் பயணம்
மேக் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும் ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும் கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா? எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதை
குடுமியில் சிக்கிக்கொண்ட மோக இழைகள்
பாகீரதியின் மதியம் பிரம்மாண்டமான கித்தானில் பல விஷயங்களுக்குக் கால வெளி வரம்பில்லாமல் புராணக் கதைகள் போலவே நேர்க்கோட்டில் அல்லாமல் வட்டமாகச் சென்று சொல்லப்படும் கதை. கதையும் அதனுடன் வரும் உப கதைகளும் அவற்றினின்றும் பிரியும் எண்ணங்களும் எண்ணங்களிலிருந்தும் வழிந்தோடும் கருத்துச் சொட்டுகளும் அவற்றைப் பிரிக்கும் ஒற்றை இரட்டை அடைப்புக் குறிகளும் என்று ஒரு சிக்கலான வடிவத்தில் பலரின் மோகம் பற்றிய கதையைச் சொல்கிறது. (இந்த மோகத்தை இங்கு மோகம் என்று பெண்-ஆண் மோகமாக மட்டுமே குறிப்பிடுவது ஒரு வசதிக்காகத்தான். கதையில் மொழி, இனம், நிலம், கலை என்று பல மோக வடிவங்கள் உள்ளன. பெண்-ஆண் மோகம் இவற்றை எல்லாம் உள்ளடக்கியதாகவும் அவற்றை மீறியதாகவும் இருக்கிறது என்பதை விளக்கிவிடுவது நல்லது). இந்த முயற்சியில் தன் வாகனமான எலியின் மேல் அமர்ந்துகொண்டு
மண்ணாசை
வளரும் பருவத்தின் பல வருடங்கள் கோயமுத்தூரில் என் அம்மாவழிப் பாட்டி-தாத்தா வீட்டில் கழிந்திருந்தது. அம்மாவின் குழந்தைப் பருவம் கோவில்பட்டியில். அதனால் கோவில்பட்டி அவர் நினைவுகளில் ஒரு பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது. இந்த இரு மண்ணும் ஏதோ ஒருவகையில் எனக்குரியவை என்றொரு உணர்வுப் பிணைப்பு என்னுள் இருந்தது. இருக்கிறது. அதனால்தான் கொங்கு நாட்டைச் சேர்ந்த மண்ணின் நாயகி நாகம்மாள் என்னைப் பாதிக்கிறாளா என்று யோசித்தேன். ஆழ்ந்து யோசித்தபோது அது மட்டுமல்ல காரணம் ….
முத்தத்தின் சுவை – வாசிப்பனுபவம்
மரத்திலேயே கனிந்த கனிகள் சுவையானவை என்றாலும் பறவைகள் தேர்ந்தெடுத்து கொத்திய கனிகள் இன்னும் சுவையானவை.அதை சுவைத்தவர்கள் அறிவார்கள்.அதுபோலவே சிறுபிள்ளைகளுக்கு மூத்தவர்கள் சொல்லும் கதைகளும்.அதனாலேயே குழந்தைகள் பெரும்பாலும் சிலகதைகளை மீண்டும் மீண்டும் “அந்தக்….கதை…சொல்லு” என்று கேட்பார்கள்.அந்த கதைசொல்லி தாத்தாக்களும் பாட்டிகளும் நம் உறவாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஆனால் அவர்களே ஒரு சமூகத்திற்கான முன்னவர்கள்.
மேலாண்மை பொன்னுசாமியின் ‘பாட்டையா’ என்ற கதை ஊருக்கே தாத்தாவான கதைசொல்லியைப் பற்றியது.ஒவ்வொரு கிராமத்திலும் அப்படி ஒருவர் இருப்பார் அல்லது இருந்தார்.அவரை “காந்திகாலத்தில பெறக்கவேண்டிய மனுசன்,” என்ற ஒரே வாக்கியத்தில் அலட்சியமாகவும் பெருமையாகவும் ஊருக்குள் சொல்வார்கள்.எங்கள் ஊரில் என்பால்யத்தில், இந்தக்கதையில் வரும் அரிஞ்சர் பாட்டையா போன்ற பாலுப்பிள்ளைதாத்தா எனக்கும், என்அய்யாவுக்கும், ஊரில் சிலருக்கும் கதைசொல்லியாக இருந்தார்.
சாய்ந்துகொள்ள வசதியான பாதங்கள்- வாசிப்பனுபவம்
வாழ்க்கைக்கு துணையாக ஒருமரம் போதும் என்று அடிக்கடித் தோன்றும். முதுகை சாய்த்துக்கொள்ள, அப்படியே கால்நீட்டி கிட்டத்தட்ட படுத்துக்கொள்ள, இலைகளின் சலசலப்புச் சத்தத்தில் அப்படியே உறங்கிப்போக, வெயிலில் நடக்கையில் பின்புறமிருந்து தலைக்கு மேல் விரியும் அம்மாச்சியின் முந்தானையைப்போல நிழல் கவிய நின்றிருக்கும் ஒற்றை மரம் போதும் என்ற ஆசுவாசத்தை, ஒருவரை இன்னொருவரில் கண்டுகொள்ள, பதின்வயதின் புரிந்து கொள்ளமுடியாத பாழ்தனிமையில் விடுதிவாழ்வில் இத்தகைய வெளிச்சத்தை இலக்கியமன்றி எனக்கு எதுவும் தந்திருக்க முடியாது என்று நினைக்கிறேன்.
ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.
லொரான் பினேவின் ‘தி செவன்த் ஃபங்க்சன் ஆஃப் லாங்க்வேஜ்’ அல்லது ஷெர்லாக் ஹோம்ஸ் போல் துப்பறிகிறார் பார்த்.
ருஷ்ய மொழியியலாளர் ரொமன் யேகப்ஸன் ஏற்கனவே விவரித்துள்ள ஆறு செயற்பாடுகள் போக இரகசியமான ஏழாவது மொழிச் ‘செயற்பாடு’ குறித்து அந்த ஆவணம் விவரிப்பதாக நம்பப்படுகிறது. எவரொருவர் அதில் மேதமை பெறுகிறாரோ, அவருக்கு ‘வலியுறுத்தல்’ ஆற்றல்களை அளிக்கவல்ல செயற்பாடு அது என்பதால் பல சிந்தனையாளர்களும் பிரெஞ்சு அரசியல் வட்டத்தின் சக்திவாய்ந்த உறுப்பினர்களும் அதைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக, எண்பதுகளில் நிலவிய பிரெஞ்சு இலக்கியச் சூழலிற்குள் விளையாட்டுத்தனம் கலந்த அரைத் தீவிர பயணம் துவங்குகிறது (பார்த், ஃபூக்கோ, சொலேர்ஸ், ஜூலியா கிரெய்சிஸ்தெவா, தெரீதா, லகான் என்று பிரெஞ்சு விமரிசன மரபின் முக்கிய பிரமுகர்கள் பலர் இந்த நாவலின் பாத்திரங்களாய் இடம் பெறுகின்றனர்).
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி!
இயற்கையின் மீதான ஆர்வம், இந்திராகாந்தியின் இளமைப்பருவத்திலேயே துவங்குகிறது. அடிப்படைப் பாடங்கள் தந்தை நேரு தன் மகள் இந்திரா ப்ரியதர்ஷினிக்கு எழுதும் கடிதங்களில் இருந்து துவங்குகின்றன. 1930 ஆம் ஆண்டு, மௌரிஸ் என்பவர் எழுதிய “தேனியின் வாழ்க்கை வரலாறு” புத்தகத்தைப் பரிசாக அனுப்புகிறார். இது போலப் பல புத்தகங்களை அவர் மகளுக்காக அனுப்பிக் கொண்டேயிருக்கிறார். கமலா நேருவின் தம்பியும், இந்திராவின் தாய்மாமனுமான கைலாஸ் நாத் கௌல், ஒரு உயிரியல் ஆய்வாளர்.
மரிலின் ராபின்சனின் 'ஹவுஸ்கீப்பிங்' அல்லது வீடு பேறடைதல்
அம்மாவின் தற்கொலை ரூத் மற்றும் அவளது சகோதரி லூசில்லில் அக மையத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றிடத்தை விட்டுச் செல்கிறது. நாவல் அடுத்தடுத்த கட்டங்களை அடையும்போது இவர்கள் இருவரும் தம் உள்ளத்தின் வெறுமையை இட்டு நிரப்பிக் கொள்ள தமக்கேற்ற வெவ்வேறு உத்திகளை மேற்கொள்கின்றனர். ஒரு வகையில், இழப்பின் மீதான தியானமாய் ‘ஹவுஸ்கீப்பிங்’கை நினைத்துக் கொள்ளலாம், அதிலும் குறிப்பாய், அம்மாவின் இழப்பு மீதான தியானம், என்று. மேற்குலக இலக்கிய மரபு அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான பிளவை (‘கிங் லியர்’), மகனுக்கு அம்மாவுக்கும் இடையிலான பேதத்தை (‘ஹாம்லட்’/ ‘ஈடிபஸ்’) மகத்தான துன்பியல் நாடகங்களாகத் தொகுத்துக் கொண்டிருக்கின்றது என்றாலும், “அம்மா-மகள் நேசம் மற்றும் ஆனந்தத்துக்கு, நிலையான அங்கீகாரம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை”, என்று (அட்ரியன் ரிச் சொற்களில்) சொல்லலாம் என்பதால் ‘ஹவுஸ்கீப்பிங்’கின் இந்தக் கூறு விமரிசகர்களால் முன்னோடியான ஒன்றாய் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.
ஒரு துளி ஒரு நதி ஒரு கடல்
ஓஷோவின் உரைகளை, அவரது குரலில், அறையின் மென்வெளிச்சத்தில், கண்களை மூடி நெடுநேரம் கேட்டுக்கொண்டிருப்பது என் வழக்கம்; அந்த அற்புதமான பரவச மணித்துளிகள் என்னில் உண்டாக்கும் நெகிழ்வு, மாற்றம், சலனம், உணர்வு, போதை… வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு முன்னிரவில் படிப்பறையின் விளக்கை அணைத்துவிட்டு ஓஷோவின் ஏதோ ஓர் உரையைக் கண்களை மூடிக் கேட்டுக்கொண்டிருந்தேன். நேரம் கடப்பதை அறிந்திருக்கவில்லை; ஒன்றிரண்டு மணிநேரம் ஆகியிருக்கலாம். அந்த குரல் மனதை என்னவோ செய்திருந்தது. கண்கள் பனித்திருந்தன. உரையின் முடிவில் ஓஷோ “உங்கள் காதருகில் அந்தப் பெருங்கருணை தென்றலாய் மிக மெல்லிய ஒலியோடு கடந்துசெல்கிறது; உங்களுக்குக் கேட்கிறதா?” என்று கேட்டு “இன்றைக்கு இது போதும்” என்று முடித்தார். அவ்விருட்டிலேயே, அதன்பின்னான அமைதியில் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தேனோ தெரியவில்லை.