இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
Category: புத்தகப் பகுதி
ஜராசந்தர்கள்
உலகக் கணினிக்குற்ற ஆயுதங்களின் வர்த்தகம் பற்றிய பெர்ல்ராத்தின் இப்புத்தகம் தெளிவாகவும், தூண்டும் வகையிலும் புலப்படாத இந்த எதிரிகளைப் பற்றிப் பேசுகிறது. இதன் தலைப்பு சற்று அதீதமோ என்று நினைத்தாலும், இக்கருவிகள் செய்யக் கூடுவன பற்றிய புரிதலினால், அவ்வாறு சொல்ல முடியவில்லை.-முக்கியக் கட்டுமானங்களான அணு ஆலைகள், மின்னாற்றல் நிலையங்கள், தொழிற் சாலைகளிலுள்ள காப்பான்கள், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடுகள், நீர் மேலாண்மை மற்றும் விநியோகம் போன்றவற்றை குறைந்த செலவில் தாக்கவும் அதிக சேதத்தினை ஏற்படுத்தவும் கொந்தற்கருவிகளால் முடியும். பேரழிவு ஆயுதங்களை விட அதிக தாக்கத்தை இவை ஏற்படுத்தும். இவைகளுக்கான சந்தை, துடிப்போடு செயல் படுகிறது- கண்களுக்கு அப்பாற்பட்டு, செல்வம் படைத்தவருக்குத் தேவையெனில் இந்தச் சேவையை இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்று சிறப்பாக செய்து கொடுத்து… இவர்களின் சந்தையின் இலக்கணம் இது தான். இதில் சுநீதி, அநீதி என்பதெல்லாம் இல்லை.
புக்கர் பரிசு – பரிந்துரைகள்
தலைமைச் செயலகம்
மூளைக்கும், மனதிற்கும் வேற்றுமைகள் இருக்கிறதா? மனதின் ஒரு பகுதி மூளையா அல்லது மூளையின் ஒரு பகுதி மனமா? மனம், சித்தம், புத்தி இவைகளின் தள எல்லைகள் என்ன? இவற்றிற்கான அறுதியான பதிலை தெளிவாக அறிந்திருக்கிறோமா? சைவர்கள் ‘நினைவை’ ஆகாய அம்சம் என்றும், நினைவும், காற்றும் இணைவது ‘பாய் மனம் அல்லது பேய் மனம்’ என்றும், நினைவும் தீயும் புத்தி என்றும், நினைவும் நீரும் சித்தம் என்றும், நினைவும், நிலமும் அகங்காரமென்றும்…
வங்கச் சிறுகதைகள்: அறிமுகம்
அங்கிருக்கும் வேலையாட்களிடம் தனக்கு ஒரு வேலை வேண்டும் எனக் கேட்கிறான். அவர்கள் அந்தப் படகின் சாரங்கியிடம் அவனை அழைத்துக் கொண்டு போகின்றனர். சாரங்கியோ மிகவும் கறாறான, கண்டிப்பான பேர்வழி. அவன் நசீமிற்கு வேலை போட்டு கொடுப்பதாகச் சொல்கிறான். ஆனால் சம்பளம் இல்லை. வெறும் உணவு மட்டும்தான். உடுத்த துணி கூட கிடையாது. அங்கிருக்கும் வேலையாட்கள் எல்லோரும் சாரங்கியால் அடிமைகள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். நசீமின் நிலையும் அதுவே.
வி. ராமஸ்வாமி: நேர்காணல்
1. உங்கள் பின்னணி பற்றி கொஞ்சம் பகிர்ந்துகொள்ள முடியுமா? நீங்கள் எப்போது வங்க இலக்கியத்தை வாசிக்கத் தொடங்கினீர்கள்? நான் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றேன், அதன் பிறகு கல்கத்தாவின் வீடற்றவர்களின் வீட்டு உரிமைகளுக்காக சமூக செயற்பாட்டில் என்னை நான் அமிழ்த்திக் கொண்டேன். உயர்நிலை வகுப்பு, கல்லூரி, பட்ட மேற்படிப்பு “வி. ராமஸ்வாமி: நேர்காணல்”
தமிழில் வங்க எழுத்துகள்
தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படைப்புகளும் படைப்பாளர்களும் வெள்ளை உறை (வங்க நாவல்): மோதி நந்தி – லக்ஷ்மி நாராயணன் (சாகித்திய அகாடெமி) மணி மகேஷ் (வங்காள பிரயாண நூல்) : உமா பிரசாத் முகோபாத்தியாய் – எஸ். கிருஷ்ணமூர்த்தி (சாகித்திய அகாடெமி) சாம்பன் (வங்க நாவல்) : சமரேஷ் “தமிழில் வங்க எழுத்துகள்”
அறிவுசார் மனிதர்கள்: மனிதகுலத்தின் சுருக்கமான வரலாறு
மூன்று புரட்சிகளின் வாயிலாக மனிதர்களின் வரலாற்றை அறிவியல் முறையில் அறிவுசார் மனிதர்கள் (‘ஹோமோ சேபியன்ஸ்’) பார்க்கிறது. யுவால் நொவா ஹராரி எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அறிவாற்றல் புரட்சியிடமிருந்து தன் நூலைத் தொடங்குகிறார். பிறகு 12,000 வருடங்களுக்குமுன் நிகழ்ந்த விவசாயப் புரட்சி பற்றிச் சொல்கிறார். இறுதியாக 500 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த விஞ்ஞானப் புரட்சியை, உருவரைக் கோடுகளின் மூலம் காட்டுகிறார். இன்றைய மனிதர்களையும், நம்முடைய கோளையும், இன்றைய நிலையில் உருவாக்கியவை இந்த மூன்று புரட்சிகள்.
தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல்
‘The Savage Detectives’ 54 கதைசொல்லிகளின் கதையாடல் “நான் ஒரு தோல்வியுற்ற கவிஞன். ஒரு வேளை ஒவ்வொரு நாவாலாசிரியனும் முதலில் கவிதையையே எழுத முயற்சிக்கிறான், அவனால் முடியவில்லை என்பதை உணர்ந்தபின் சிறுகதையை முயற்சிக்கிறான். அதுவே கவிதைக்குப் பிறகு சவாலான வடிவம். அதிலும் தோல்வியுற்ற பிறகு மட்டுமே அவன் நாவலை “தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல்”
கைச்சிட்டா – 4
வீட்டில் இருந்து வேலை பார்ப்பதில் ஜன்னலோர வாசமும் அண்டை அயல் நடப்புகளும் நிறையக் காணக் கிடைக்கின்றன. நான் உட்காரும் இடத்திற்கு வெளியே உள்ள கொல்லைப் புறத்தில் இரண்டு தனித்தனி ஜோடிப் பறவைகள் கூடு வேறு கட்டியிருக்கிறது. ‘கபாலி’ படத்தில் சிறையில் இருந்து வெளியே வரும் ரஜினி கதாபாத்திரம் சொல்வது போல், “அதப் பறக்க விடுங்கடா… அதுதான் அதன் இயல்பு” என மரக்கிளைகளுக்கு நடுவே கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கும். அந்தக் குருவிகளும் பட்சிகளும் உட்கார்ந்து கூட்டம் கூடி இரையைக் கொத்திக் கொண்டு காணாமல் போவது நாள் முழுக்க கணினி சந்திப்புகளில் அடைபட்டிருக்கும் எனக்கு உவகையைத் தரும். சிறகடிக்கும் ஜீவன்கள் குறித்த நூல்களைத் தேடினேன். சற்றே இன்ப ஆச்சரியம். அமெரிக்காவில் அதிகமாக விற்கும் நூல்..
கைச்சிட்டா – 3
அ) A Case of Exploding Mangoes ராஜ்ஜியங்களின் தலைவர்கள் கொல்லப்படுவது என்பது எண்பதுகளில் சர்வ சாதாரணம். எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதத் 1981இல் தீர்த்துக் கட்டப்பட்டார். அதே ஆண்டில் பங்களாதேஷ் நாட்டின் ஜனாதிபதி ஜியா உர் ரெஹ்மான் அரசியல் காரணங்களுக்காக ஆட்கொலை செய்யப்பட்டார். 1984ல் இந்திரா “கைச்சிட்டா – 3”
கைச்சிட்டா – 2
அமெரிக்காவில் பாதகமான விஷயங்களைச் சொல்வதற்கு முன் இரண்டு நல்ல நடவடிக்கைகளைச் சொல்லிவிடுவார்கள்; அதன்பின் மாற்றம் தேவைப்படும் விஷயத்தை நாசூக்காக முன் வைப்பார்கள்; அதன் பின் முத்தாய்ப்பாக “நன்றாக வேலை செய்கிறாய்!” என்னும் சம்பிரதாயச் சொற்றொடரோடு பேச்சை முடிப்பார்கள். இதற்கு பர்கர் அணுகுமுறை எனப் பெயர் வைத்திருக்கிறார்கள். இரண்டு ரொட்டிக்கு நடுவே கோழிக்கறி அடைபட்டிருப்பது போல் இரண்டு பக்கமும் அசத்தல் குணநலன்களைச் சொல்லி, நடுவில் குற்றங்களைச் சொல்லுதல் மாண்பு. பிரான்ஸில் இப்படி எல்லாம் சுற்றி வளைக்காமல் நேரடியாகக் கோழிக்கறியில் இறங்குகிறார்கள். “இது உன்னிடம் சரியில்ல! இப்படி நடந்தால் வேலை போயிடும்!” எனச் சொல்லிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள்.
கைச்சிட்டா
இந்தப் பகுதியின் குறிக்கோள்கள்:
1. சுருக்கமாகச் சில புத்தகங்களை அறிமுகம் செய்வது; அறிமுகம் செய்த பதிவுகளைப் பகிர்வது.
2. ஆங்கிலமோ, தமிழோ, மொழியாக்கமோ (அல்லது) கதையோ அபுனைவோ கிளாசிக்கோ – எல்லாவற்றிலும் ஒன்றைப் படித்தீர்களா எனக் கேட்டுப் பதறச் செய்வது.
3. உங்களிடமிருந்து இலவசமாக நூல்களைப் பெறுவது (அல்லது) பழைய விமர்சனங்களைப் புதுப்பிப்பது.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
ஆனால் காலம் போகப் போக, இலக்கிய வரலாற்றின் முரணியக்கத்தை உக்கிரமாக உணர்ந்து கொள்வதால், மற்றவர்களின் ஒட்டுமொத்த படைப்புத் தொகைக்கும் உங்களுக்குமான தொடர்பை சமாளிக்க உங்களுக்கு பல விழிப்புணர்வுகள் தேவைப்படுகின்றன. இலக்கியத்திற்கும், ஆசிரிய மற்றும் எழுத்துப் பணிக்கும் இருக்கும் தொடர்பைப் பொருட்படுத்துவதற்கான விழைவிற்கும் மேலும் மேலும் அடிமையாகி விடுகிறீர்கள். அப்பட்டமாகச் சொல்ல வேண்டுமானால், ஆரம்ப காலகட்டத்தில் சாத்தியப்பட்ட சில குறிப்பிட்ட விஷயங்கள் இனிமேலும் சாத்தியப்படுவதில்லை.
விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்
போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.
கேதார்நாத் சிங் கவிதைகள்
தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”
செக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி
அருமை மூக்கு
கால் கட்டை விரலுக்கிடையில்
திணிக்கப்பட்டிருந்தால்
உன் காலையல்லவா
நீ முகரவேண்டும்!
சுல்தானாவின் கனவும் மாணிக்கக் கல்லும்
”அடையாளங்களை ஒன்றிணைத்தல், வேற்றுமைகளைக் கோத்தல்” என்ற தலைப்பில் அருமையான ஒரு கட்டுரை எழுதிய பர்நீதா பாக்சி பிறகு அதை டில்லியில் 2004இல் நடந்த மொழிபெயர்ப்பு குறித்த ஒரு கருத்தரங்கில் மீண்டும் படித்தார். மறைக்கப்பட்ட பெண்கள் சரித்திரத்தை மீளுருவாக்கம் செய்வதைப் பற்றியும் கல்வித் துறையில் அதன் முக்கியத்துவம் பற்றியும் கூறும்போது பெண்கள் ஆவணக்காப்பகமான ஸ்பாரோவின் செயல்பாடுகளின் அடித்தளமாய் இருக்கும் சில கருத்துக்களைக் கூறினார். பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சரித்திரத்தில் உள்ள பெண்கள் இப்போது நாம் மீட்டெடுத்துக்கொண்டிருக்கும் புத்துருவாக்கும் மிகவும் சிக்கலான, சிந்தனையைத் தூண்டும் பாரம்பரியத்தின் ஒரு பகுதியானவர்கள். இவர்கள் வாழ்க்கை, அதை ஒட்டிய தரவுகள் …
மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம்
அதிக அளவு விதவைகள் இருந்ததும் சென்னை மாகாணத்தில்தான். மாதர் மறுமண இயக்கம் மேற்கொண்ட மற்ற அச்சு முயற்சிகளைவிடக் கூடுதலான ஓர் அச்சு முயற்சி தேவைப்பட்டது என்று உணர்ந்து, அதனால் பிறந்த அச்சு முயற்சிதான் மாதர் மறுமணம் . 1936 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஒன்றரை அணா விலையில் வெளிவந்த முதல் இதழின் அட்டையில் காந்தி இருந்தது. பத்திரிகைக்கு நல்ல கவனத்தைத் தந்திருக்க வேண்டும். காரணம் முதல் இரண்டு இதழ்களும் உடனடியாக விற்றுப்போயின
இறந்த காலம்
ஜனவரியில் வெளிவரவுள்ள ‘ இறந்த காலம்’ நாவலிலிருந்து… ஒர் அத்தியாயம் சைகோன், கொஷன்ஷீன் (இந்தோ சீனா) – ஸ்ரீமுக வருடம் தை மாதம் 21ந்தேதி (1934ம் வருடம், ஜனவரிமாதம் 15 ந்தேதி) சிரஞ்சீவித் தம்பி சதாசிவத்திற்கு, தமக்கை வேதவல்லி எழுதிக்கொண்டது. இவ்விடம் என் கணவரும், பிள்ளைகளும் ஷேமம். “இறந்த காலம்”
மகரந்தம்
நாம் படிப்பது அல்லது தொலைக்காட்சியில் பார்ப்பது அனைத்தையும் நினைவில் வைத்திருப்போமா? சிலருக்கு முடியலாம். ஏன் அவர்களால் முடிகிறது எனும் ஆய்வில் ஈடுபட்டவர்கள், நினைவுக்கும் மனித இயல்புக்கும் இடையேயான இடைவெளியைப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். தொடர்ச்சியாகத் தொலைக்காட்சி பார்ப்பவரால் சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு என்ன பார்த்தோம் என நினைவுபடுத்த முடியாதாம். சிலர் அடுத்தடுத்து படிக்கும் புத்தகங்களுக்கு இடையே குழப்பிக்கொள்வதும், மீண்டும் படித்ததை அலசுவதற்கு நேரமில்லாமல் இருப்பதும் படித்ததை மறப்பதற்குக் காரணமாக அமைந்துள்ளன. மனப்பாடமாகப் படித்தால் மட்டும் போதாது அதை எழுதிப்பார்க்க வேண்டும் எனச் சொல்லி வளர்க்கப்பட்டவரா நீங்கள்?
வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்
ஜெர்மானிய- இட்டாலிய நகைமுரண்களுக்கிடையேதான் எத்தனை வேறுபாடு. உலகை கறாராக எடுத்துக் கொள்ள மறுப்பதனாலேயே அதை ஸ்வேவோ கறாராக வரையறுக்கிறார்; அனைத்தையும் மிக லேசாகவே அவர் கையாளுகிறார். இறுதியில் மிக அபத்தமாக தொனிக்கும் ஒரு விஷயத்தைக் கொண்டு மிக முக்கியமான ஒன்றைப் படைப்பதற்காக மான் உலகை கனத்த கவனிப்புடன் அணுகுகிறார். அவருடைய மிக மென்மையான தொடுதல்கூட கன்றலை விட்டுச் செல்லும் திறன் படைத்தது. ஒரு அடாவடியனின் தாக்குதல் விட்டுச் செல்லும் கன்றல் அல்ல, டாக்டரின் தடுப்பூசியால் உண்டாகும் கன்றலைப் போல. என்னுடன் பணியாற்றும் நவோமி லெபோவிட்ஸ் ஸ்வேவோவைப் பற்றி அற்புதமாக எழுதியிருக்கிறார்.
வில்லியம் கெல்லி- கலைஞனும் காலமும்
கதையின் துவக்கத்தில், ஆப்பிரிக்கன் என்று அழைக்கப்படும் ஒரு ராட்சத மனிதன், அடிமைக் கப்பலில் வந்திறங்குகிறான். அவன் கையில் ஒரு குழந்தை இருக்கிறது. அவன் கட்டி வைக்கப்பட்டிருக்கும் சங்கிலியை இருபது பேர் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் நகருக்குள் கொண்டு செல்லப்பட்டு விற்கப்படுகிறான். அடிமையான அடுத்த கணமே அவன் தன்னைக் கைப்பற்றியவர்களை தான் பூட்டப்பட்டிருக்கும் சங்கிலிகளைச் சுழற்றி வீழ்த்துகிறான், அவனை ஏலமிடட்வனைச் சிரச்சேதம் செய்கிறான் (அந்தத் தலை ஒரு பீரங்கிக் குண்டு போல் கால் மைல் காற்றில் பறந்தது, இன்னொரு கால் மைல் தரையில் குதித்தோடி, யாரோ ஒருவன் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு குதிரையின் காலில் மோதி அதை ஊனமாக்கி நின்றது, என்று இது விவரிக்கப்படுகிறது).
வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள்
ஒரு புனிதருடன் தனது பெயரை பகிர்ந்து கொண்டிருப்பவர். ரெல்க, வாலெரி, ஃபிளோபெர் ஆகியோருடன் எழுத்துக்கலையின் ஒரு துருவத்தின் உச்சப் பிரதிநிதி இவர். அவருடையது முழுமையான அர்ப்பணிப்பு. அது அவர் இருப்பிற்கு அடிக்கடி பங்கம் விளைவித்தது. அனேகமாக நாமெல்லோருமே சமரசம் செய்து கொள்பவர்கள். அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கும், தொழிலாளர் சச்சரவுகளை தவிர்ப்பதற்கும், மணவாழ்க்கையை தக்கவைத்துக் கொள்வதற்கும், போரில் பங்கெடுக்காமல் தப்பிப்பதற்கும் நமக்கும் இச்சமரசங்கள் தேவைப்படுகின்றன. கொள்கைகளும் கறைபடுகின்றன , துணிகளைப் போல் அவற்றையும் அடிக்கடி நாம் கழுவிச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். ஷேக்கர்களைப் போல் பல விஷயங்களை கேளிக்கை, பயனற்ற அலங்காரம் அல்லது பகட்டு என்று கருதியதால் அவர், மினிமலிஸ்ட் என்று நாம் அழைக்கும் ஒரு சுருக்கவாதி. மேலும், சந்தேகமில்லாமல் அவர் சொல்வதே சரி.
சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம்
‘தான் எந்த வீட்டுக்கு சொந்தம்’ என்று சாவித்திரியை யோசிக்க வைத்தது.
தனியே படுத்து அசை போடுகிறாள். கண் தெரியாத மாமியார்… தடவித் தடவி நடக்கிறாளாமே! கணவன் செத்துவிட்டால் மாட்டுப்பெண் என்ற கடமையும் செத்து விடுமா? கிருஷ்ணமூர்த்தி இருந்தால் இப்படி நடப்போமா? புது இடம் என்று நாம் சங்கோஜப் படக் கூடாதென்று எத்தனை அரவணத்த ஜென்மம் அவள்!
பாராட்டுவதைக் கூட செல்லமாகச் செய்த அந்த வீட்டுக் கடமையில் இருந்து நான் நழுவுகிறேனா? சாவித்திரி கண்ணீரால் தலையணையை நனைக்கிறாள்.
குவெம்புவின் படைப்புலகம்
”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,
”கடவுளின் பெப்பர்மெண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்”
என்று எளிமையாகக் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.
”நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே”
மகரந்தம்
ஜெர்மனியில் பண்டைக்காலத்து உப்புப் படிவங்கள் நிலத்தடியில் இருப்பனவற்றில் மின் சக்தியைச் சேமித்து வைக்க முயற்சி செய்கிறார்களாம். உப்புப் படிவங்கள் மீது ஏராளமான நீரைச் செலுத்தி அவற்றைக் கரைத்து அவற்றூடே பெரும் குகைகளை உருவாக்கி இருக்கிறார்கள். தரைக்குக் கீழே அரைமைல் தூரத்தில் இந்தக் குகைகள் உள்ளன. உபரி மின் சக்தியைப் பயன்படுத்தி காற்றை அழுத்தத்துக்கு உள்ளாக்கி அதை இந்தக் குகைகளில் சேமிக்கின்றனர். மின்சக்தி உற்பத்தி குறைந்து விட்ட நேரத்தில் குகைக்குள்ளிருக்கும் அழுத்தத்துக்குட்பட்ட காற்றை வெளிப்படுத்தி அதை நிலவாயுவை எரிக்கப் பயன்படுத்தி மின் சக்தியைத் தயாரிக்கிறார்கள். அழுத்தத்தில் இருந்து விடுபடும் காற்று ஆக்ஸிஜனை எரிவாயுவுக்குச் செலுத்துவதில் திறன் அதிகம் உள்ளது என்பதால் இது பயனுள்ள முறையில் மின்சக்தியைச் சேமிக்க உதவுகிறது.
மகரந்தம்
தமிழில் சாதாரணமாக நாம் காணுவது எழுத்தாளர்களுக்கு இருக்கும் அதீத தன் முக்கிய உணர்வு. சிறு திருத்தங்களையோ, அல்லது எழுத்தில் காணப்படும் குறைகளையோ சுட்டினால் ஒன்று காட்டமாகப் பதில் எழுதுவார்கள், இல்லையெனில் பிறகு எழுதிக் கொடுக்க முன் வரமாட்டார்கள். தமிழில் பதிப்பிக்கப்படும் பெருவாரி புத்தகங்களைச் சரிவர பதிப்பு வேலைக்கு உட்படுத்திப் பிரசுரிப்பது கூட நடப்பதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் நன்கு பிரபல்யம் கொண்ட ஆசிரியர்களின் புத்தகங்கள் மீள் பிரசுரம் ஆகையில் அந்தப் புத்தகங்களைப் பார்த்தால் நிறையப் பிழைகளோடு காணப்படுகின்றன.
அறிதெளிவின் எழுச்சியைக் குறித்து
மேற்கத்திய தத்துவம் இரண்டரை ஆயிரம் ஆண்டுகள் ஆன முதிர் துறை. ஆனால், அதில் பெரும்பாலானவை தொடர்பற்ற இரு பெரும் அலைகளாக ஆர்ப்பரிப்புகளாக எழுந்தவை. ஒவ்வொரு எழுச்சியும் நூற்றைம்பது ஆண்டுகள் நீடித்தது. அறிதல் என்னும் கனவு (The Dream of Reason) என்னும் நூலை ஆந்தனி காட்லீப் 2000ஆவது ஆண்டில் பிரசுரித்தபோது, அதில் கிரேக்க தத்துவவியலாளர்களான சாக்ரடீஸ், ப்ளேட்டோ, அரிஸ்டாடில் போன்றவர்களின் சிந்தனைகளைக் கொண்டு, மேற்கத்தியத் தத்துவத்தின் முதல் ஆர்ப்பரிப்பை விளக்குகிறார். சமீபத்தில் காட்லீப் அறிதெளிதல் என்னும் கனவு: நவீன தத்துவத்தின் எழுச்சி (The Dream of Enlightenment: The Rise of Modern Philosophy) என்னும் நூலை வெளியிட்டிருக்கிறார். அது வட யூரோப்பில் எழுந்த மதப்போர்களையும், கலிலியோவிய அறிவியலின் உதயத்தையும் முன்வைத்து மேற்கத்திய தத்துவத்தின் கதையைச் சொல்கிறது.
மூச்சுக்காற்று வெறும் காற்றாகும்போது
பெரும்பாலான பள்ளி நாட்கள் அரிசோனா நகரத்தில் கிங்க்மான் எனும் சிறிய பாலைவன பள்ளத்தாக்கில் கழிகிறது.. மற்ற மருத்துவர்களின் குழந்தைகள் போலவே தந்தையுடன் சேர்ந்து களித்த நேரம் சிறிதளவே என்ற சோகம் ஒரு புறம் இருக்க இவருடைய தாய், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்க்கும் மேல் ஓர் படி போய் தன பள்ளியிலேயே கல்லூரி பாடங்களை தனக்கு மட்டுமன்றி மற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர்களை கற்பிக்க வற்புறுத்தி பள்ளியின் கல்வி தரத்தையே உயர்த்திய அதிசயத்தையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். Stanford பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியமும் உயிரிய லும் இளங்கலை கல்லூரியில் பயில்கிறார்
குழப்பவாதக் குரங்குகள் கட்டுரை – மறுவினைகள்
வீட்டில் யாருமில்லையென்றால், ரெண்டு பீர் பாட்டிலுடன், ஒரு நல்ல திரைப்படத்தை டி.வி.டியில் பார்த்தபின் அதனைக்க்குறித்து சிந்தனை செய்யும்போது குழப்பவாதக் குரங்குகள் மனதுள் குதித்து ஆர்ப்பரிக்கும் பாருங்கள். அப்போதும் இது போன்ற உணர்வுகள் சாத்தியம்.. குதர்க்கமாகவோ, கிண்டலாகவோ சொல்லவில்லை. சாத்திய இழைகளை சிந்திக்கிறேன். … சிலிக்கான் பள்ளத்தாக்கின் மீது சிலருக்கு ஒரு காட்டம் இருக்கும். எப்படி, மும்பையிலிருந்து அமெரிக்கா செல்ல விசா கிட்டாதவர், ஊராய்யா அது? என்று பேசுவது போல,
முப்பத்தெட்டு மேதைகள்
ஒருநாள் உடல்நலமில்லாத சமயத்தில் தம்பியை அழைத்து கோவிலுக்குச் சென்று உடல்நலமில்லாத செய்தியைத் தெரிவிக்கும்படியும், சொற்பொழிவைக் கேட்பதற்குத் திரண்டிருந்தவர்கள் ஏமாற்றமடையாமல் இருக்கும்பொருட்டு ஒன்றிரண்டு பாடல்களைப் பாடிவிட்டு வரும்படியும் சொல்லி அனுப்பிவைத்தார். தம்பியும் அப்படியே செய்தான். இரண்டு பாடல்களை மனமுருகும் வகையில் பாடினான். பாட்டைப் பதம்பிரித்து, நன்றாகப் புரியும்படி அவன் பாடிய விதம் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால் அவர்கள் அவனிடம் அப்பாடல்களுக்குப் பொருள் சொல்லும்படி கேட்டுக்கொண்டார்கள். அவனும் பாடல்களின் பொருளை விரிவாகச் சொல்லத் தொடங்கினான்.
நெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’
தான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி.
பண்பாட்டு விமர்சனம்: வெ.சா.வை சாக்காக வைத்து சில சிந்தனைகள்
இங்கே சமூக விமர்சனம் என்பது சாதி விமர்சனம் என்ற அளவிலேயே குறுகிப் போனதுதான். சாதி விமர்சனம் என்பது அந்தந்த சாதியைச் சார்ந்த அறிவுஜீவிகளாலேயே செய்யப்படும்போது அதன் நம்பகத்தன்மை அதிகமாகும். உண்மையில் வெ.சா. ‘வசனம்’ எழுதிய ‘அக்கிரகாரத்தில் கழுதை’ சம்ஸ்காராவை விட வீச்சு அதிகம் கொண்டது. ஆனால் நாடகமா, திரைக்கதை வசனமா, புனைகதையா என்ற உருவத்தெளிவு இல்லாததாலும், வெ.சா.வுக்கே அப்படைப்புக் குறித்துப் பெருமிதம் இல்லாமலிருந்ததாலும் அது வெகுமக்கள் தளத்திற்கு போய்ச்சேரவில்லை. பெரியாரின் தத்துவவெளி சிறிதாக இருந்தாலும் அவரது தீவிரமான பிரச்சாரம் மூலமும், விசுவாசமான தொண்டர்கள் மூலமும் மக்களை வேகமாகச் சென்றடைந்தார் என்பதை கவனிக்க வேண்டும். இதில் இன்னும் சில விஷயங்கள் இருக்கின்றன. மொழி இங்கே அரசியல்வாதிகளின் கைப்பாவையாக இருக்கிறது. இரண்டாவது பொதுவெளி அறிவுஜீவிகளுக்கும், கல்விப்புல அறிவு ஜீவிகளுக்கும் இடையே காணப்படும் மிகப்பெரிய இடைவெளி.
மாற்றங்களின் திருப்புமுனையில்…
எஸ். பொன்னுத்துரை மட்டக்களப்பிலிருந்து சென்னைக்கு வந்திருந்தபோது, தற்செயலாக நானும் சென்னையிலிருந்தேன். செல்லப்பா வீட்டில் அவர் முன்னிலையில் நான் பொன்னுத்துரையும் விவாதித்துக் கொண்டிருந்தோம். இரண்டு விஷயங்கள்: ஒன்று இலங்கையில் தமிழர் போராட்டம்; மற்றது பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த டேபிள் ஃபான். அது art-ஆ அல்லது craft-ஆ என்று எங்களுக்குள் பட்டிமன்றம். எங்களுக்குள் முதல் படிவமைப்பு art. பின்னர் அது லஷக்கணக்கில் தயாரிக்கப்பட்டது craft என்றேன் நான். எஸ். பொ. என்ன சொன்னார் என்பது என் நினைவில் இல்லை. ஒரு கட்டத்தில் செல்லப்பா “போதுமே, நீங்கள் இரண்டு பேரும் பேசியது. இனி இலக்கியம் பேசலாம் கொஞ்சம்” என்று கடிந்து கொண்டார். எதற்காகச் சொல்ல வந்தேன் என்றால்…
மார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல்
மார்க்ஸின் சித்தாந்தம் ஒரு காலக் கட்ட வளர்ச்சியின் சிறைக்குள் அகப்பட்ட ஒன்று. இது மாக்ஸுக்கு மாத்திரம் நிகழும் துரதிருஷ்டம் அல்ல. மனித சமுதாய வளர்ச்சியில், அறிவு விஸ்தாரத்தில், விஞ்ஞானப் பெருக்கத்தில், எந்த சித்தாந்தத்திற்கும் ஏற்படும் நிகழ்வு, இது. மார்க்ஸின் சித்தாந்தம் மனித சமுதாயத்தின் ஒரு துணுக்கில் ஒரு காலகட்டத்தில், ஒரு புறவாழ்வு அம்சத்தின் ஆராய்வில் பெற்ற சில முடிவுகளை விஸ்தரித்துப் பெற்ற பிரபஞ்ச நிர்ணய அமைப்பு. அதன் பிறப்பிடமான பொருளாதாரத்திலேயே அதன் முடிவுகள் செலாவணி அழிந்தது, குறையாகாது. அதுவே, அதன் நிறையும் ஆகும். அதிலேயே அதன் லட்சிய பூர்த்தியும் ஆகும். ஒரு நோக்கில், எந்நிகழ்ச்சிகள், அநீதி முறைகள், மார்க்ஸின் பொருளாதார சமுதாய நோக்குக்குக் காரணமாகவிருந்தனவோ, அம்முறைகளும் நிகழ்வுகளும் அழியக் காரணம், மார்க்ஸின் சித்தாந்தப் பிறப்புதான்.
வாசிப்பதற்கான அவகாசம்
நவீன தகவல் அமைப்புகளை நாம் எப்படி கையாள்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட நியூரோசயன்ஸ் துறையின் ஆய்வுகள் உதவுகின்றன. பிற அனைத்தையும்விட புதிய தகவல்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் மனித மூளைகள் உருவாகியிருக்கின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது- சில ஆய்வுகள், சோற்றுக்கும் சம்போகத்துக்கும் அளிக்கும் முக்கியத்துவத்தைவிட அதிக முக்கியத்துவத்துவத்தை மூளை புதிய தகவல்களுக்கு அளிப்பதாகச் சொல்கின்றன.
நூல் அறிமுகம் மற்றும் நாஞ்சில் நாடன் அவர்களுக்குப் பாராட்டு விழா.
இடம்: சிருஷ்டி மஹால் கங்கா யமுனா திரையரங்கு எதிரில், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் பில்டிங் டாடாபாத் 8வது வீதி கோவை – 641 012. நாள்: 18.07.2015 சனிக்கிழமை காலை 9:30 மணி
எழுத்தும் மருத்துவமும்
மருத்துவம் பார்த்தலின் உச்ச கணங்களும் எழுத்துப் பணியின் உச்ச கணங்களும் எனக்கு ஒன்றே போலிருக்கின்றன. அவற்றின் கடின கணங்களும் நகைச்சுவை கணங்களும்கூட ஒன்றே போல்தான் இருக்கின்றன, பலமுறை அத்தகைய கணங்கள் ஒரே சமயத்தில் நிகழ்வதும் உண்டு. மருத்துவம் தனக்கென ஓர் அதிகாரம் உண்டென எத்தகைய புறக்குறிகளால் கோரிக்கொண்டாலும்- வெள்ளை அங்கிகள், “உள்ளே வராதே” என்று எழுதப்பட்ட பெயர்ப்பலகைகள் கொண்ட இடைவழிகள், வலுவற்ற பல்வகை அதிசயங்கள் குறித்த உறுதிமொழிகள்-, இன்னும் தன்னிலை இழக்கவில்லையெனில், மருத்துவர்கள் பலகாலும் திக்குத் தெரியாதிருப்பவர்கள்தான், அல்லது, தொலைந்துபோனத்தனம் கொண்டவர்கள். எழுத்தாளர்கள் குறித்தும் இப்படிச் சொல்வது உண்மையாக இருக்கும்
மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றி
வருடாவருடம் சென்னையில் இப்போது நடக்கும் புத்தகக் கண்காட்சியில் ஏராளமான புத்தகங்கள் விற்பதாகவும் செய்தி நமக்குக் கிட்டுகிறது. அவை அனேகமாக இலக்கியப் புத்தகங்கள் இல்லை என்பதுதான் நமக்கு எளிதில் புரியாத ஒரு விஷயம். இத்தனைக்கும் தமிழில் இன்றும், நேற்றும் எழுதிய இலக்கியாளர்கள் அப்படி ஒன்றும் புத்தியைக் கலக்கும் தீவிரம் கொண்ட எழுத்தை எழுதி வாசகர்களை அயர்த்துபவர்கள் இல்லை. ஒரு ஜேம்ஸ் ஜாய்ஸ், சாமுவெல் பெக்கெட், யூஜீன் இயானெஸ்கோ, ஃப்லோபேர் அல்லது கார்ல் ஓவெ க்னௌஸ்கார்ட் போல இயல்பான வாசிப்பைச் சவாலாக ஆக்கித் தருபவர்கள் தமிழ் எழுத்தாளர்களிடையே மிக மிகக் குறைவு. அவர்களில் 90% போல மிகவும் சுலபமாக அணுகக் கூடிய நடையும், வாசகர்களுக்குப் பரிச்சயமான எதார்த்த உலகின் பல பண்பாட்டுச் சூழல்களைக் கொண்டும், கதை மாந்தரைக் கொண்டும்தான் இந்த இலக்கியங்களைப் படைத்திருக்கின்றனர். இவற்றிலிருந்து இப்படி அன்னியப்பட்டு நிற்க…
காப்காவின் நாய்க்குட்டி (நாவல்)
ஒரு திறந்த வெளியில் மீண்டும் மனித சமுத்திரத்தில் விழுந்திருக்கிறாள். உயர்த்திப் பிடித்த சுருக்கிய குடைகள். சீருடைபோன்ற ஒற்றை வண்ண மழைக் காப்பு ஆடைகள். பிள்ளைகளுடன் வந்திருக்கிற தவிப்புடன் பொறுப்புமிக்க தம்பதிகள். இளம் காதலர்கள். தோழிகள். நண்பர்கள். அல்லது இவை எதுவுமே அற்ற மனிதக் கலவை. அபூர்வமான உடையணிந்து இசைக்கச்சேரி அல்லது நாடக விளம்பரத்திற்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்த முகங்களுக்கிடையில் நடந்தபோது தன்னை ஒர் இம்ப்ரஸனிச ஓவியமாக உணர்ந்தாள்
காணிக்கை
புத்தகத்தின் முதல் பக்கங்களில், நூலாசிரியரின் ‘காணிக்கை’கள் காணக்கிடைக்கும். தன்னுடைய புத்தகத்தை எழுத உதவியதற்காக சிலரை, அந்தப் பக்கத்தில் கௌரவிப்பார்கள். சிலர் மனைவிக்கு நன்றி வழங்கி இருப்பார்கள். அந்த மாதிரி 30 சுவாரசியமான டெடிகேஷன்களை இங்கேப் பார்க்கலாம்.
நனவுதேசம்
வழக்கமான நூலில் இருந்து மாறுபட்ட ஒரு நூலின் வழி சிங்கப்பூர் என்ற தேசத்தை அறிந்து கொள்ள வைத்த இந்த ஐம்பது கட்டுரைகளையும் வாசித்து முடிக்கும் போது எப்படி ஷாநவாஸிற்கு மட்டும் இப்படியான நண்பர்கள் கிடைக்கிறார்கள்? அண்டை வீட்டுக் காரர்கள் உள்ளிட்ட எவரிடமும் இணக்கமாகப் பழகவும், அவர்களுக்குள் இருக்கும் அறிந்திராத – அறிய வேண்டிய தகவல்களை அடையாளம் காணவும், வாங்கவும் இவரால் மட்டும் எப்படி முடிகிறது? என்ற இரண்டு கேள்விகள் மிஞ்சுகிறது!
நாஞ்சில் நாடனின் ‘கம்பனின் அம்பறாத்தூணி’
காரைக் குடியில் பழனியப்பா—மீனாட்சி அறக் கட்டளை சார்பாக அவர் நடத்திய ஆய்வுச் சொற்பொழிவே ”கம்பனின் அம்பறாத்தூணி” எனும் தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. முதலில் இந்நூல் கம்பராமாயண நயங்களை வியந்தோதும் நூல் அன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கம்பனின் நயங்களைப் பலவகைகளில் எடுத்துக் கூறியும் அவனது நூலைப் பல வழிகளில் ஆய்ந்தும் எண்ணற்ற புத்தகங்கள் தமிழில் வெளிவந்துள்ளன. ஆனால் நாஞ்சில் நாடனின் இந்நூல் அவற்றினின்று முற்றிலும் மாறுபட்டதாகும்.
அண்ட் ஸ்டில் தி எர்த் – ஒரு வாசிப்பனுபவம்
சமையலறையிலிருந்த உங்கள் மனைவி எப்போது காணாமல் போனாளென்றும் உங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் வீடு முழுதும் ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்டருக்கிறது. உங்களுக்குப் பசிக்கிறது. ரெப்ரிஜரேட்டரில் எருமைப்பால் அல்லது பசும்பால் இருக்க வாய்ப்பில்லை. கடைகளில் தாய்ப்பால் மட்டுமே விற்கிறார்கள். சிந்தடிக் கோதுமை மாவு, செயற்கை வெண்ணெய் கலந்து சிந்தடிக் கேக் சாப்பிடலாம். ஆனால் சமையலறையில் பிணநாற்றம். உங்களுக்கு முடிவெட்டும் நாவிதரைச்சேர்த்து மொத்தம் நான்கு பிணங்களிருக்கின்றன. ராணுவ அதிகாரி மூன்று பிணங்கள்தானென்று வாதிடுகிறார்.
படிப்பு அறை – ‘தாத்தாவும் பேரனும்': ‘டோட்டோ-சான்’ – பகுதி 2
இப்படி ஒருவர் இருக்கிறார், இப்படி ஒரு புத்தகத்தை அவரால் எழுத முடிகிறது என்பனவும் மகிழ்ச்சியைக் கூடுதலாக்குகின்றன. நம்மில் எத்தனை பேரால் நம் துவக்கப்பள்ளி வருடங்களை நினைவு கூர முடியும்? அதுவும் அவற்றை விரிவாக, வண்ணங்களோடு, தம் ஆசிரியை, ஆசிரியர்கள் பற்றிய வருணனைகளோடும் அவர்கள் நம்மோடு நடத்திய பல உரையாடல்களின் சாரத்தோடு நினைவு கூர முடியும்? நம்மில் பலரும் தம் துவக்கப் பள்ளி ஆசிரியர்களைப் பெயரோடு நினைவு வைத்திருப்போம், ஆனால் அவர்கள் நம் வாழ்விற்குக் கொடுத்த கொடை என்ன என்பதை அத்தனை விவரமாகச் சொல்லத் தெரியாதவர்களாகவே அனேகமாக இருப்போம்.
புத்து மண்
“பத்து நாளா இங்க வர்ரதுக்கு போலீஸ் தொந்தரவு இருந்துச்சு. யாரையும் இந்த பில்டிங் பக்கமே உடலே. எங்கபோகணும்.”
“செத்துப்போன பையன் இருந்த ரூமுக்கு..”
“அது ரெண்டாம் மாடியாச்சே.”
“ஆமா.. அதெப் பாக்கணும்ன்னு வந்தேன்.”
“போயிருவிங்களா.”
அலகுடை நீலழவர் – பெருமாள் முருகனின் 'ஆளண்டாப் பட்சி'
“நான் செத்துப்போனா ரெண்டு நாளு வெச்சிருந்து ஊருல இருந்து ஆளெல்லாம் வரட்டுமின்னு இந்தக் காட்டுக்குள்ளயே என்ன பொதச்சுடுங்க, வெள்ளாமைக்கு எருவாயி வெருசா வெருசம் பயிராகவும் செடிகொடியாவும் மொளச்சு வந்து உங்க முகம் பாத்துக்கறன்”
'அருந்தவப்பன்றி' – சுப்பிரமணிய பாரதி
1896ஆம் ஆண்டு எட்டையபுர சமஸ்தானத்தின் ஆசுகவியாக இருந்த பாரதி தனது பதவியிலிருந்து விலக நேர்கிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம் என்றாலும், சின்ன சங்கரன் கதையில் பாரதியே விளக்குவதுபோல, ஜமீனின் சின்னத்தனமான வாழ்வின் மீதான ஒவ்வாத்தன்மையே அவரை அங்கிருந்து துரத்தியிருக்கிறது. சரசப் பாட்டுகளும், விடலை துணுக்குகளும், சித்தம் கலங்கச் செய்யும் லேகியங்களும் தன்னை கீழ்மையை நோக்கித்தள்ளுவதை பாரதி உணர்ந்திருக்கிறார். தேச விடுதலை, மனித சமத்துவம், பெண்ணுரிமை எனும் உயரிய சிந்தனைகளைப் பேணுவதற்கு ஜமீன் சரியான இடமல்ல என்பதால் நிரந்தர ஊதியத்துக்கு உத்தரவில்லாத ஆசிரியர் பணியை ஏற்றுக்கொண்டார். தனது முழுமையை அங்கும் அவர் அடையவில்லை என்பதனால் மனவிரக்தியுடன் காசிக்குச் சென்றார்.
இரண்டு விரல் தட்டச்சு
பொதுவாக, புனைகதைகளைப் புனைக்கதைகளாகவே கருதுவதுதான் எக்காலத்திற்கும் ஏற்றது. புனைக்கதை அரை நிஜத்தைத்தான் கூறுகிறது. அரை நிஜம் நிஜமாகாது. ஆனால் புனைக்கதையின் ஒரு தனிக்குணமான அந்த அரைநிஜம்தான் புனைக்கதைக்கு உயிரூட்டுகிறது.