கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி?

நானும் அப்படித்தான் 2018 -ல், நினைத்தேன். இன்னும் சில ஆண்டுகளில், நம்முடைய வண்ணப்படங்களை உலகெங்கும் தரவிறக்கம் செய்து, இந்தத் தொழிலில் நாம் பெரிதாக கவனம் செலுத்தலாமே! குறைந்தபட்சம், விலையுயர்ந்த லென்சுகள் மற்றும் காமிரா உபகரணங்களை வாங்கலாமே! இப்படி கனவுகளோடு ஆரம்பித்ததுதான் என் வண்ணப்பட வியாபாரப் பயணம். நடுவில் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் பற்றியதே இக்கட்டுரைத் தொடர்.

ஆஷ்விட்ஸை நோக்கி

எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலி நாட்டின் ஃப்ளோரென்ஸ் நகரத்தில் இருந்து நிர்மூலமாக அழிக்கப்படுவதற்காக ஆஷ்விட்ஸ் நகரத்திற்கு யூதர்கள் அனுப்பப்பட்டார்கள். அந்த நிகழ்வை மறக்கக் கூடாது என்பதற்காக இத்தாலிய அரசாங்கம் வருடந்தோறும் அதே ரயில் பயணத்தை நடத்துகிறது. இத்தாலிய மாணவன் இந்த வருடம் அந்தத் தொடர்வண்டியில் பயணித்து வரலாற்றின் சுவடுகளைப் “ஆஷ்விட்ஸை நோக்கி”

அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்

தன் பதினொன்றாம் வயதில் ஷெரி ஜான்ஸன் என்பவர் வன்கொடுமைக்கு உள்ளானார். அதனால் கருவுற்றார். அதன் பின் தன்னை வல்லுறவு செய்தவனுக்கே மணம் முடித்து வைக்கப்பட்டார். இந்தப் பழக்கத்தை மாற்ற இப்போது தன் கதையை சொல்லி போராடி வருகிறார் ஷெரி ஜான்ஸன். அமெரிக்காவில் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து “அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்”

தீமை, சட்டங்களுக்குள்

தீமை என்றால் என்னவென்பதும் அது எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். போதுமான முன்னுதாரணங்களை வரலாறு, அண்மைய வரலாறும் இன்றைய வரலாறும்கூட, அளிக்கிறது. ஆனால் இன்று நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சித்தரிக்க, அதன் மீது மீண்டும் ஒரு முறை நாம் நம் பார்வையைச் செலுத்துவது பயனுள்ளதாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது- பார்ப்பது என்ற சொல்லை உள்ளபடியே அதன் நேரடிப் பொருளில் இங்கு பயன்படுத்துகிறேன்.

தீமை என்பது குறித்த சிந்தனை தொன்மையானது, சமயங்கள் எல்லாவற்றின் முதல் சில அடிப்படை விதிகளில் தீமையை எவ்வாறு எதிர்ப்பது என்பது அடக்கம்.

இங்கு நாம் ரான் ஹவீவ் எடுத்துள்ள இந்த ஒளிப்படத்தைப் பார்க்கலாம்: நாம் எதைக் காண்கிறோம்?

புது தில்லியின் மைனா

ஒரு கோணத்தில் உலகம் சுருங்கித்தான் போயிருக்கிறது. மொத்த உலகிலும் வெப்ப தட்ப நிலை காலச் சுழற்சியோடு நம்பத்தக்க விதங்களில் மாறி வருவது என்பது கேள்விக்குரியதாகி இருக்கிறது. இது மனிதரின் பற்பல செயல்களின் கூட்டுத் தாக்கத்தால் மாறியது என்று ஒரு சாராரும், இல்லை இதுவும் தற்செயல்/ இயற்கையான மாறுதல்தான் என்றும் “புது தில்லியின் மைனா”

இந்தியாவின் முகங்கள்

ஜோஷுவா க்ளக்ஸ்டைன் (Joshua Gluckstein) இந்தியா நெடுக பயணித்திருக்கிறார். சந்தித்தவர்களில் சிலரை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார். கோட்டோவியமாக இந்தியர்களின் முகங்களை அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு தெரியுமாறு பதிந்திருக்கிறார்.

வைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்

மாஸ்கோவில் இருந்து 8,500 கி.மீ. (5,200 மைல்கள்) கிழக்கே மிர்னி நகரம் இருக்கிறது. இங்கே உள்ள வைரச் சுரங்கத்தை 1956ல் ருஷியா கண்டுபிடித்தது. சோவியத் யூனியன் காலத்தில் இங்கே வெளியூர் ஆட்கள் யாரும் உள்ளே வர முடியாது. மிர்னிக்குள் ரஷியர்கள் நுழைவதற்கே சிறப்பு விசா வாங்க வேண்டும். 2001ல் “வைரச் சுரங்கத்தின் எச்ச சொச்சங்கள்”

ஒற்றைமரம் (கொலுக்குமலை பயணம்)

வாகனத்தின் மூலம் (ஜீப்) கொழுக்குமலை செல்ல வேண்டுமாயின் கேரளாவின் சூரியநல்லி வழியாகத்தான் சென்றடைய முடியும். ஏறகனவே சிறு சிறு மலையேற்ற அனுபவமும் எங்களுக்கிருந்தால் போடியிலிருந்து மலைப்பாதை வழி நடந்து செல்ல முடிவாயிற்று. எழத்தாழ 5000 அடி உயரத்தை 20 + கிலோமீட்டரில் நடந்து கடப்பதில் , அசல் சவால் அதன் கடும் ஏற்றமும், சரிவும் கொண்ட பாதைதான். காட்டுமாடு, செந்நாய், முள்ளம்பன்றி பற்றிய பயமும் சுமந்து மலையேற உடல் மட்டுமல்ல கொஞ்சம் மன திடமும் தேவை. திடீரென பிளவுறும் பாதைகளில் சரியான பாதையை தெரிவு செய்வது முக்கியம். உயரம் கடக்க சில மணி நேரங்களிலேயே அவ்வளவு குளிரிலும் கால் துவள, நாவறலத் தொடங்கியது, ஆங்காங்கே பழம் , தண்ணீர் கொண்டு சக்தி மீட்டு எங்கள் நடை தொடர்ந்தது.

வனங்களில் ஒரு தேடல் …

நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை நைரோபி நேஷனல் பார்க் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு சிறு பாறையில் ஒரு சிறிய பறவை ஒன்றைப் பார்த்தேன். மீன் கொத்திப் பறவை என்று ஞாபகம். அதை காரில் உட்கார்ந்து கொண்டே ஃபோகஸ் செய்ய முயற்சித்தேன். அது அசைந்து கொண்டே இருந்ததால் ஃபோகஸ் பண்ண முடியவில்லை. வருவது வரட்டும் என்று காரை விட்டு இறங்கி மிகவும் மெதுவாக என்னுடைய ட்ரைபாடை செட் பண்ணினேன். என்னுடைய நேரம், அது என்னுடைய கார் இருந்த இடத்தில் இருந்து முன்னே சென்று கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் அது கொஞ்ச நேரம் உட்கார்ந்தது போல் இருந்தது. மறுபடியும் ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தேன். அப்போது லேசாக உஸ் உஸ் என்று ஒரு சப்தம் கேட்டது. முதலில் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. நான் தொழிலே கண்ணாயிரம் என்றிருக்க மறுபடியும் உஸ் உஸ் என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டது . பாம்பு ஏதேனும் அருகில் வந்து விட்டதோ என்று ஒரு நிமிடம் பயந்து போய் திரும்பினேன்.

உயிர் பெற்றெழச் செய்யும் பெண்கள்

பெண்கள் தினத்திற்காக கார்னெகி கவுன்சில் தங்களுடைய பேட்டிகளின் தொகுப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். சிங்கப்பூர் முதல் சொமாலியா வரை உலகெங்கும் மாற்றத்திற்கு வித்தாக உள்ளவர்களையும் அவர்களின் பேட்டியையும் இங்கே காணலாம்.

மைசூர்ப் பட்டணத்து மல்லர்கள்

குஸ்திக் கலை மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு காலத்தில் தாம் மல்லராக இருந்ததாகப் பிறரிடம் சொல்லிக்கொள்வது அவருக்கு அவமானமாக இருந்தது. தன்னுடைய கம்பீரமான கலைவடிவம் ஒன்றை மறந்துவிட்டு, தளுக்கு நிறைந்த நகரமாக இன்று தன்னைக் காட்டிக்கொள்ளும் மைசூரில், நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் ஒருவரிடம் நான் பேசிய சந்தர்ப்பம் அது.