படகில் இருந்தவர்கள் பல கோணங்களில் தங்களை படம்பிடித்து கொண்டிருந்தார்கள். சியாமீஸ் இரட்டையர்கள் போல, தோள்கள் சேர்ந்து, தலைகள் ஒட்டி, மேல்தட்டின் தடுப்பு கம்பிகளின் மீது அமர்ந்து செல்ப்பீ எடுத்து கொண்டிருந்தது ஒரு வடக்கத்திய ஜோடி. நீரில் படிந்த அவர்களின் நிழல்களை கூட புகைப்பட சட்டத்திற்குள் கொண்டு வர சாய்ந்தும், நிமிர்ந்தும், நெளிந்தும் நடத்திய நடனம் வயிற்றில் புளியை கரைத்தது.
Category: பயணக்கட்டுரை
ஆழி
ஹிமாலயம் என்பது இந்தியாவின் மேற்கு வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு பகுதி வரை சுமார் 2400 கிமீ பரப்பளவில் விரிந்திருக்கும் அற்புத சாம்ராஜ்ஜியம். வானம் தொட்டு நிற்கும் பனிமலைத் தொடர்களாலும் ஆழமான பள்ளத்தாக்குகளாலும் நிரம்பிய பூலோக சொர்க்கம். சுமார் அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இந்து மகா சமுத்திரத்தில் அமிழ்ந்திருந்த “ஆழி”
காசி
காசியில் இறந்து கங்கையில் எரியூட்டப்பட்டால் சொர்கத்திற்குச் செல்லலாம் என்ற நம்பிக்கை உள்ளது. “மணிகர்ணிகா படித்துறையில் இறந்தவர்களின் சடலம் வந்து கொண்டே இருக்கும். சதா பிணங்கள் எரிந்து கொண்டே இருக்கும். ஆற்றில் சடலங்கள் மிதக்கும்” என்று முன்பு கதை கதையாகச் சொல்வார்கள். இப்பொழுது அப்படியில்லை. மின்சார எரியூட்டி வந்தபிறகு படித்துறைகள் சுத்தமாகி உள்ளது. ஆனாலும் படிகளில் மரக்கட்டைகள் குவிந்திருந்தன.
மனதை லேசாக்கிய மலேசியப்பயணம்
முதலில் முருகன் கோவில், அதற்குப்பக்கத்தில், விநாயகர், சிவன் அம்பாள் என்றிருக்கும் தனிக்கோவில், பெருமாளுக்கென தனி கோவில், நெஞ்சில் இராமனை சுமந்தபடியிருக்கும் ஆஞ்சநேயர் என்று இந்த கோவில் வளாகம் மெல்ல மெல்ல, பலகோவில்களில் கூட்டமாக மாறி இருக்கிறது.வாசலில் பல மலர்மாலைகள் விற்கும் கடைகளையும், லட்டு, ஜிலேபி, முறுக்கு என விற்கும் பணியாரக்கடைகளையும், இளநீரை சீவித்தரும் கடைகளுமாக அடிவாரம் எப்போதும் போல பரபரப்பாக இருந்தது.
ரிஷிகேஷ்
விடுதியிலிருந்து கங்கைக்கரையோரம் முழுவதும் செல்லும் நீண்ட நடைபாதைக் குப்பைகள் இன்றி நன்கு பராமரிக்கப்பட்டுள்ளது. பெரிய பெரிய மரங்கள். ஆற்றங்கரை படிக்கட்டுகளின் ஓரம் சிறு கோவில்கள் அந்தச் சூழலை மேலும் ரம்மியமாக்க, நடைபாதையின் நடுநடுவே வரும் செங்குத்தான படிகளில் மேலேறினால் சிறிய, குறுகிய தெருக்களில் பெரிய வீடுகள்! அதிர்ஷ்டசாலிகள்! தினமும் புண்ணிய நதியைத் தரிசிக்கும் பாக்கியவான்கள்! வீடுகளைக் கடந்தால் பிரதான ‘வீரபத்ர’ சாலை. இருபுறமும் மரங்கள். ஏகப்பட்ட மருந்தகங்கள், பல்பொருள் கடைகள், விடுதிகள், புழுதியைக் கிளப்பிக் கொண்டுச் செல்லும் எலெக்ட்ரிக் ரிக்க்ஷா…
பத்ரிநாத் – ரிஷிகேஷ்
பத்ரிநாத்தில் உடலை ஊடுருவும் அதிகாலை குளிர் நாங்கள் எதிர்பாராத ஒன்று! இதற்கு கேதார்நாத்தே தேவலை என்று நினைக்க வைத்து விட்டது. கிட்டத்தட்ட கேதார்நாத் உயரத்தில் தான் பத்ரிநாத்தும் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த விடுதியின் மாடி அறையில் இருந்து பனிபடர்ந்த மலைகள் கதிரவனின் பொற்கதிர்களால் ஜொலிக்கும் தரிசனமும் கிடைக்க.. ஆகா! பார்க்குமிடங்களெல்லாம் பரமாத்மா. கண்ணெதிரே நீலகண்ட மலையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தது. இதோடு ‘சார்தாம்’ கோவில்கள் யாத்திரை முடிந்தாலும் அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான ‘மனா’, புனித நதி சரஸ்வதி, பஞ்ச பிரயாகைகளைத் தரிசனம் செய்யாமல் யாத்திரை முழுமை பெறாது என்பதால் அங்குச் செல்ல தயாரானோம்.
குப்தகாசி – பத்ரிநாத்
கங்கோத்ரி, யமுனோத்ரி பகுதிகளில் இருந்த மலைப்பகுதி போலன்றி ‘பச்சைப்பசே’லென மலைத்தொடர்கள் கண்களுக்கு இதமாக காட்சியளித்தது. இந்தப் பிரதேசத்தை ‘மினி ஸ்விட்ஸர்லாந்து’ என்று அழைக்கிறார்கள். பனிக்காலத்தில் பனிச்சறுக்கு செய்ய பயணியர்கள் அதிகம் வரும் இடம் என்றும் தெரிந்து கொண்டோம். நாங்கள் நின்றிருந்த மலை மீதிருந்து எதிரே ‘நந்தா தேவி’ மலைச்சிகரங்களை வெண்பஞ்சு மேகங்கள் உரசிச் செல்லும் காட்சி மனதைக் கொள்ளை கொண்டது.
கேதார்நாத்
மேடுகளைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு குடியிருப்புக் கட்டடங்களும் கடைகளும் இருந்தது. அங்கிருந்து கோபுர தரிசனம்! ‘சிவசிவ’ என்று கைகூப்பி வணங்கினோம். அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்! “பார்த்தீங்களா! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்!” என்று அவர்களுடைய மற்ற குழுவினரையும் சந்தித்துப் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டோம். நினைத்தபடி சித்தன் குடியிருக்கும் மலையில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தோம்! வார்த்தைகளால் சொல்லிட இயலாத பேரானந்த பெரு அனுபவம் அது!
உத்தரகாசி -குப்தகாசி
இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.
கங்கோத்ரி
வலது புறம் துள்ளியோடும் பாகீரதி ஆற்றுக்கு அரணாக பச்சைப்பசேலென இமயமலை. மலையின் ஈரம் காயாத சாலைகளில் பயணித்துக் கொண்டிருந்தோம். வெயிலைப் பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. நடுநடுவே சாலைகளில் உடைப்பு ஏற்பட்டிருந்ததால் எதிரே வரும் வண்டிக்கு வழியை விட்டு நகர்வதில் சிரமம் இருந்தது. இத்தகைய சூழலை அனுபவமிக்க ஓட்டுனர்கள் மிக அருமையாக கையாளுகிறார்கள். பைக்கில் பவனி வரும் கூட்டம் இந்த யாத்திரையில் அதிகம் காண முடிந்தது. எப்படித்தான் இப்படிப்பட்ட சாலைகளில் ஓட்டுகிறார்களோ என்று அதிசயித்தோம். சில இடங்களில் சாலைகளை நன்கு விரிவாக்கம் செய்திருக்கிறார்கள்.
உத்தரகாசி
பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.
யமுனோத்ரி
யமுனா நதிப் பாலத்தைக் கடந்து யமுனோத்ரிக்குச் செல்லும் வழியில் வழியில் ‘கருட கங்கா’ என்று கிளை நதி ஒன்று வருகிறது. கோடைக்காலத்தில் பனி படர்ந்து அழகாக இருக்கும் பகுதி நாங்கள் சென்றிருந்த பொழுது நதியாக ஓடிக் கொண்டிருந்தது. தூரத்திலிருந்தே தெரியும் ஆசிரமங்களில் தங்கும் வசதிகளும் இருக்கிறது. கோவிலை அடைத்தாற்போல தெரியும் நீல வண்ண கட்டடங்களும் அழுக்குத் தார்ப்பாய்கள் போர்த்திய குடில்களும் குப்பை மூட்டைகளும் திருஷ்டிப்பொட்டாக கண்களை உறுத்தியதில் வருத்தமாக இருந்தது. எத்தனை ரம்மியமான இடத்தில் இருக்கிறது இந்த புண்ணியத்தலம்! ஏனோ நமக்குக் கோவிலைப் பற்றின அக்கறையோ அந்தச் சூழலைக் காக்க வேண்டிய பொறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை. யாரிடம் சென்று முறையிடுவது? திருந்த வேண்டியது நாம் தானே?
சிவன்ன சமுத்திரம்
இந்தக் கோவிலில் இன்னொரு ஆச்சரியமும் உண்டு. இங்கே சிற்பிகளின் பெயர்களை சிற்பங்களின் அடியிலேயே பொறித்து கவுரவப் படுத்தியிருக்கிறார்கள். ஏறக்குறைய 800 வருடங்கள் கழித்து பெங்களூரிலிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் தங்களின் கருப்புக்கண்ணாடிகளை நெற்றியின் மேல் உயர்த்தி வைத்து, நகப்பூச்சு மின்னும் விரலால் கற்களில் பொறித்திருக்கும் கன்னட லிபியை வருடி, பாலேயா, சவுடேயா, நஞ்சைய்யா, என்ற இந்த சிற்பிகளின் பெயர்களை வாய் விட்டு உச்சரித்ததைப் பார்த்த பொழுது இது அந்த மகத்தான கலைஞர்களுக்கு நாம் செய்யும் சிறு மரியாதை என்று என் மனதில் பட்டது.
பர்கோட்
முதன்முதலாக யமுனை ஆற்றைக் கடந்து செல்ல பச்சை வண்ணம் அடித்த பாலம் ஒன்றில் ‘கடகட’ சத்தத்துடன் கடந்து மழையால் துவம்சம் செய்யப்பட்ட சாலைகளில் பயணம். மலைராணி முந்தானை சரியச் சரிய, யமுனை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, சிறு நகரத்தைக் கடந்து மீண்டும் மலையில் பயணம். சுற்றிலும் பசுமை போர்த்திய மலைகள். இப்பவோ எப்பவோ என்று காத்துக் கிடக்கும் கருமேகங்கள். ‘நௌவ்கான்’ என்ற ஊரில் சாலையோரத்தில் ஒரே ஒரு தேநீர்க்கடையை அம்மா, அப்பா, மகன் என்று மூவர் நிர்வகிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் விலை. சாப்பாடும் தயார் செய்து தருகிறார்கள். அப்பா டீ போட, அம்மா சமையலையும் மகன் கடைக்கு வருபவர்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
காசி தமிழ் சங்கமம் பேரானந்த அனுபவம்
அழகான கங்கையில் சூரிய உதயத்தை பார்த்தபடி முன்னோர்களை நினைத்து குளித்து வழிபட்டோம். அங்கிருந்து காஞ்சி சங்கர மடத்தில் தேநீர், பிஸ்கட் அளித்தனர் அங்கு வெங்கட்ரமண கனபாடிகளைப் பார்த்து பேசி அறிமுகம் செய்து கொண்டோம். பாரதி நான்கு வருடங்கள் மூன்று மாதங்கள் வாழ்ந்த சிவமடம் கிருஷ்ண சிவன்- குப்பம்மாள் இல்லம் சென்றோம். அங்கு விரைவில் ஒரு நூலகமும் பாரதி சிலையும் அமைவதற்காக கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. கே. வி. கிருஷ்ணன் அவர்களின் மகன், மகள் ஆகியோரை பார்த்துப் பேசினேன். கோவில் அருகில் உள்ள பாரதி சிலையை தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் பராமரித்து வருகிறார்கள்.
தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்
“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!
கங்கா தேசத்தை நோக்கி
இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். “கங்கா தேசத்தை நோக்கி”
சிதைந்த நகரமும் சிதையாத் தொன்மங்களும்
கிருஷ்ண தேவ ராயர் காலத்திலேயே ஏறக்குறைய இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்த தலைநகரம் சில நாட்களிலேயே இடுகாடானது; போர்துகீச யாத்ரி டாமிங்கோ பேஸ் விஜயநகரில் நாட்டியம் ஆடும் பெண்கள் கூட செல்வ செழிப்போடு இருந்தனர் என்று குறிப்பிட்ட அளவிட இயலாத செல்வம் சூறையாடப்பட்டது; சிற்பங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதோ என்று ஐயப்படும் அளவிற்கு செதுக்கப்பட்ட பல கோவில்கள் இடித்து நொறுக்கப்பட்டன. இருநூற்று ஐம்பது வருட காலம் தென் இந்தியாவிற்கு ஒரு அரணாய் இருந்த சாம்ராஜ்யத்தை பேரிருள் கவ்வியது.
காலக் கணிதம்
உலகின் மிகப் பெரிய கல்கட்டுமான சூரியக்கடிகாரம் ஜெய்ப்பூரில் உள்ளது. இது யுனெஸ்கோவால் உலகக் கலாசாரச் சின்னமாகப் பாதுகாக்கப்படுகிறது. ஜந்தர் மந்தர் என்ற அழகான பெயரில் இயங்கும் இது, முன்- நவீன வானக்கண்காணிப்பகங்களில், துல்லியமாகக் கிரகங்கள் மற்றும், விண்ணகப் பொருட்களின் இயக்கங்களை கணிப்பதற்கும், அறிவதற்கும் உலகத்தில் சிறந்த ஒன்று என யுனெஸ்கோவும், மற்ற வானியலாளர்களும் பாராட்டுகின்றனர். 4609 ஏக்கரில் 19 வானியல் கண்காணிப்புக் கருவிகள் உள்ள ஜந்தர் மந்தர் 1729-ல் கட்டப்பட்டது.
துவாரகையில் இருந்து மீரா
நான் இதே துவாரகையில் கிரிதாரியுடன் கலந்தேன். எத்தனை உயிரோட்டத்துடன் அவன் கோயில் அமைந்திருக்கிறது! கடல் மட்டத்திலிருந்து நாற்பதடி உயரத்தில் கோமதி ஆற்றங்கரையில் மேற்குத் திசை நோக்கி எழுந்துள்ள இந்தக் கோயில் முதலில் கண்ணனின் பேரனால், கண்ணன் வசித்த ‘ஹரி நிவாசை’ கோயிலாக்கிக் கட்டப்பட்டது. ராப்டி தேவியின் (முதல் கட்டுரையில் வந்த பெண்) கணவரைப் போரில் வென்ற முகம்மது பெகேடா தான் இந்தக் கோயிலையும் இடித்து அழித்தார்.
சிவன் ஆடிய களம்
எண்பதுகளின் முற்பகுதியில் இந்திய கிராமங்களுக்குள் டிவி நுழையாத காலம். நகரத்தில் வசதியான சில வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை டிவி இருந்தன. வேகமாய் பெருகிய ஜனத்தொகையும் வேலையில்லா திண்டாட்டமும் சமூகத்தின் பிரதான பிரச்னையானதால், கிரிக்கெட் பற்றிய புரிதலோ விவாதங்களோ மக்களிடம் அப்போது இருக்கவில்லை
நவகைலாயங்கள்
நவ திருப்பதிகளுள் ஒன்றான ‘அருள்மிகு மகரநெடுங்குழைக்காதன்’ திருக்கோவிலுக்கு வந்து சென்ற இனிய நினைவுகளுடன் தென்திருப்பேரையில் நவ கைலாய புதன் ஸ்தலத்தில் வண்டியில் காத்திருந்தோம்…
அழகான கோவில் பிரகாரம். அரசமர பிள்ளையார். நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் அலங்கரிக்க பெரிய கோவில் மதிற்சுவர்கள். கோவில் திறந்தவுடன் உள்ளே சென்று விட்டோம். ஏழாவது கைலாய தலத்தில் தாமரை பீடத்தின் மேல் கைலாச நாதர். அம்மன் அழகிய பொன்னம்மை தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். நவக்கிரகங்கள், முருகன் சந்நிதிகளும், கொடி மரமும் பலி பீடமும் உண்டு. நவ கைலாயங்களில் இரண்டாவது பெரிய கோவில்.
..அருகே அங்கன்வாடி அரசுப் பள்ளியில் வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாக வெள்ளந்தி குழந்தைகள் கூட்டமாகச் செல்லும் ஆடுகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாசலில் நின்றிருந்தார்கள். மழையைக் கண்டதும் அகவும் மயில்கள் அந்த இடத்தை மேலும் அழகாக்கிக் கொண்டிருந்தன.
பாஸ்னியக் காப்பி
‘யானைகளின் யுத்தத்தில் அழிவது எறும்புகளே’ என ஒரு சொலவடை உண்டு. அதேபோல அமேரிக்கா – சோவியத் ரஷியா வல்லரசுகளுக்கு இடையேயான பலப்பரீட்சை பெரும்பாலும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிறிய நாடுகளின் யுத்தங்கள் வாயிலாக வெளிப்பட்டது. இந்த ‘கோல்டு வார்’ அல்லது மறைமுக பனிப்போரில் சிக்காமல் இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா மற்றும் இந்தோனேஷியா ஆகிய வளரும் நாடுகள் தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் கூட்டமைப்பே “கூட்டு சேரா இயக்கம்”.
தடக் குறிப்புகள் -2
“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”
நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.
“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”
இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.
தடக் குறிப்புகள்
“சாதாரண மக்களை” பேட்டி எடுத்து, அவற்றை ஒரு டேப் ரிகார்டரில் பதிவு செய்வது நோக்கம். அதன் மூலம் நாட்டின் மாநகர்கள், சிறு நகரங்கள், மற்றும் தொலை தூரங்களில் கிடக்கும் இடங்களின் “பின்னலிணைப்பை”ப் புரிந்து கொள்வது மேம்படும். அமெரிக்கா என்பது என்ன? நம்மை அமெரிக்கர்கள் என்று அழைத்துக் கொள்வதன் அர்த்தம்தான் என்ன? மானியத் தொகையை என் வாழ்வின் அடுத்த ஓரிரு வருடங்களை அமெரிக்காவுக்கான “தேடலில்” செலவிடப் போகிறேன் என்று நான் சொன்னபோது, அந்த மேஜையின் ஒரு கோடியில் அமர்ந்திருந்த ஒருவர் (ஏளனமாக) தன் கண்களை மேல்நோக்கிச் சுழற்றியதை நான் பார்த்தேன். இன்னொருவர் சிரிக்கவும் செய்தார்.
காருகுறிச்சியைத் தேடி… (3)
செவல்ல நடந்த கல்யாணக் கச்சேரி நினைவுக்கு வருது. அண்ணாச்சி கல்யாணத்துல வாசிக்கறாங்கன்னா முதல்லையே அதை நடத்தறவங்ககிட்ட கேட்டுக்குவாங்க. தூரத்துல இருந்து வரவங்களுக்கு சாப்பாடு போட முடியுமா-னு தெரிஞ்சுகிட்டு, முடியாத சூழல்ல அவாளே ஏற்பாடு பண்ணிடுவாங்க. செவல்ல நடந்த கல்யாணத்துல, “அதெல்லாம் யாரு வந்தாலும் பார்த்துக்கலாம்”-னு கல்யாண வீட்டுக்காரங்க சொல்லி இருக்காங்க. கச்சேரி முடிஞ்சதும் அவங்க சொன்ன மாதிரி நடந்துக்கலை. ரசிகர்களைக் கொஞ்சம் மரியாதைக் குறைவா நடத்திட்டாங்க. அண்ணாச்சிக்கு அதைப் பார்த்துட்டு சரியான கோவம். உடனே சந்திர விலாஸுக்குச் சொல்லி அத்தனை பேருக்கும் தன் செலவுல சாப்பாடு ஏற்பாடு செஞ்சாங்க. அப்புறம் எவ்வளவு கெஞ்சியும் கல்யாண வீட்டுல சாப்பிட மறுத்துட்டாங்க.
காடு
நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.
காருகுறிச்சியைத் தேடி…
“ஏழாம் திருநாளைக்கு…”, என்று சொல்ல ஆரம்பித்துப் பேசமுடியாமல் திக்கி நிறுத்தினார் அந்தப் பெரியவர். அவர் வாயிலிருந்து வார்த்தை வராமல் நின்றதும் அவர் உடலில் ஓர் அலை எழுந்தது. வயிற்றிலிருந்து எழுந்த அந்த அலை, மார்பில் படர்ந்து, கழுத்தில் ஏறி, அவர் தலையைச் சிலுப்பி இறுதியாய் அவர் கைகள் இரண்டையும் உதறச் செய்யவைத்து அடங்கியது.
காடு
பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும் கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் “காடு”
தேடியபின் பறப்பது
கல்லூரிக்கு வெளியே நடைசெல்லத் தொடங்கியிருந்தேன். கல்லூரிக்குள் நடைசெல்வது அபத்தம். பின் கேட்டின் வழியாக வெளிவந்து இடது பக்கம் திரும்பியபோதுதான் கவனித்தேன், சூரியன் வலது பக்கம் இறங்கிக்கொண்டிருக்கிறது. மேற்கு நோக்கி நடந்தால் நகரத்திற்குள் சிறிய வானம் மட்டும் மிஞ்சும். கிழக்கில் இன்னும் கொஞ்சம் நகரம் மீதி இருந்தாலும் விரிந்த வானம் “தேடியபின் பறப்பது”
கைச்சிட்டா – 7
கதையில் வரும் அத்தைகளும் மாமாக்களும் அமெரிக்க முதலியத்தில் திளைந்துக் கொழிக்கும் சித்தப்பா / பெரியப்பாகளும் இஸ்லாம் மீண்டும் தலைதூக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். அக்தரின் பெற்றோர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.
நவ திருப்பதிகள்
மதுரையில் பெரிய கோவில்களுடன் ஒப்பிடுகையில் ஸ்ரீவைகுண்டநாதன் பெருமாள் கோவில் சிறியது தான். கோவிலினுள்ளே இருந்த அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மனதைக் கொள்ளை கொண்டன். விமான கோபுரங்கள் பளிச்சென்று வண்ணக் கலவையுடன் வித்தியாசமாக தெரிந்தன. கோவில் கிணற்றில் நீர் இருந்தது மிகப்பெரும் ஆறுதல். பக்தர்களுக்காக குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே அமைத்திருந்தார்கள். கோடையிலும் கூட்டமான நாள்களிலும் உபயோகமாக இருக்கும். கோவிலைச் சுற்றிக் காண்பித்து சிற்பங்களின் அருமை பெருமைகளை எடுத்துரைக்க யாராவது உதவி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அறிந்திராத தகவல்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைத் தவற விட்டேனோ என்று இன்று நினைக்கத் தோன்றுகிறது.
கன்னிமாரா அரசு அருங்காட்சியகம்- சென்னை
திருஞானசம்பந்தர் மட்டுமல்ல அங்கிருந்த பெரும்பாலான சிலைகள் மெலிந்த தேகம் ஒற்றை உடை பிச்சை பாத்திரம் தலையில் சுருள் முடி வடிவம் கொண்டவையாக இருக்கிறது, இந்திய துணைக்கண்டண்டத்தின் இதுவரையிலான தொல்லியல் அகழ்வு முடிவுகளெல்லாம் நமக்கு ஒன்றை சொல்லியிருக்கின்றன சமணமும் பௌத்தமும் தான் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பிருந்தே வழிபாட்டுக்கட்டிடம், உருவம் வரைதல், புடைப்பு சிற்பம், சிலை ஆக்குதலில் தற்போதைய இந்துமத உருவவழிபட்டு, சிலையாக்க கலாச்சாரங்களுக்கு முன்னோடி.
அமெரிக்காவின் கட்டடங்கள்
அந்தப் பக்கம் கனடாவின் எட்மண்டன் நகரத்தில் துவங்கி இந்தப் பக்கம் அமெரிக்காவின் மில்வாக்கி நகரம் வரை ஊர் ஊராகச் சென்று ஒளிப்படம் எடுப்பது பாரி க்ஃபெல்லர் (Barry Gfeller) என்பவரின் பொழுதுபோக்கு. அவர் மறைவிற்குப் பிறகு அவரின் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நகர நிழற்படங்கள் கிடைத்திருக்கின்றன. சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
ஸஃபாரியின் இறுதி நாள் – ங்கொரொங்கோரொ
சிங்கம் என்னும் பெயருக்குப் பின்னால், கம்பீரமும், பயமும், வேட்டையும் மரணமும் இணைந்திருக்கிறது. ஆனால், உண்மையில் சிங்கம் என்னும் பெரும்பூனையின் வாழ்வு மிகச் சிக்கலானது. அவை தமக்கு எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழ்கின்றன. அதற்குள்ளாகவே, ஆண் சிங்கங்களுக்கு தந்தைமை உரிமைகள் பற்றிய தகராறுகளில், குட்டிகள் கொல்லப்படுகின்றன. பாதி சிங்கக் குட்டிகள் இரண்டாண்டுகளுக்கு மேல் வாழ்வதில்லை. இதையெல்லாம் தாண்டி, தனது எல்லைக்குள் விலங்குகள் சிக்காமல், பசியில் மரிக்கும் சிங்கங்களுமுண்டு. அப்படியானால், சிங்கம் என்னும் விலங்குக்கு ஏன் மனிதருள் இவ்வளவு மதிப்பு? 10000 ஆண்டுகளுக்கு முன்பு, மனிதனுக்கு அடுத்தபடியாக அதிகமாக பூமியில் வாழ்ந்த பாலூட்டி சிங்கம் தான்…
காவிரியிலிருந்து கங்கை வரை – மோட்டார் சைக்கிள் பயணம்
காவேரி தாலாட்டும் பிரதேசம். அழகிய சிறு வயல்களில் நெல்லும், கரும்பும், மல்லிகையும், சாமந்தியும் பாகலும் காவேரி நீரருந்தி மணியாக சோலையாக மலராக காயாக பெருகும் நிலக்காட்சியை பல நாட்கள் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கண்டிருக்கிறேன். பாபநாசத்திலிருந்து ராஜகிரி, கபிஸ்தலம், சுந்தர பெருமாள் கோவில், சுவாமிமலை மற்றும் கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அப்பாவின் ஹீரோ ஹோண்டா சிடி 100 பைக்கில் பெட்ரோல் டேங்க் மேல் அமர்ந்து பயணிப்பேன். செல்லும் ஊர்களைப் பற்றி அவற்றின் வரலாறு பற்றி நாட்டு நடப்புகள் குறித்து அப்பா என்னிடம் ஏதேனும் கூறியபடி வருவார். நான் முக்கியம் என நினைக்கும் விஷயங்கள் குறித்து பேசுவேன். காவேரியில் புதிதாக தண்ணீர் வரும். வெம்மணல் பரப்பின் மீது நீர் பாயும் போது மணல் துகள்களுக்கு இடையே உள்ள காற்று குமிழிகளாக கொப்பளிக்கும். குபுக் குபுக் என்ற சத்தம் பேரோசையாக எழும். ஆற்றில் பள்ளமாக உள்ள பகுதிகளில் நுரைக்கும் புது வெள்ளம் பாய்ந்து சென்று நிரம்பும். சிறு கிராமங்களின் கடைத்தெருக்களில் மக்கள் கூடி நின்றிருப்பர். கொள்ளிடக் கரையில் வெல்லம் காய்ச்சுவார்கள். வெல்லத்தின் மணம் அப்பிராந்தியம் முழுவதும் இருக்கும். அங்கு பணி புரியும் மனிதர்கள் எங்களை இன்முகத்துடன்…
குட்டிப் பாதங்களால் அறிந்த மண்ணில்
மல்லிகாவும், இயலும் இறங்கிப்போய் டீ வாங்கி வந்தார்கள். பகலாயிருந்தால் கடலை மாவு போண்டா பெரிய உருண்டையாய் கிடைக்கும். ராஜலிங்கத்தின் வீடு தாராபுரத்தில்தான் இருந்தது. ஒருமுறை காலேஜ் டூர் போனபோது தாராபுரம் கடக்கும்போது ராஜலிங்கம் வீட்டிற்குப் போனது ஞாபகம் வந்தது. பத்து நிமிடத்தில் பஸ் கிளம்பியது. கொஞ்ச நேரம்தான் கண்ணயர்ந்த மாதிரி இருந்தது. சத்தம் கேட்டு பாதி கண் திறந்து பார்த்த போது, பஸ் ஆரப்பாளயம் ஸ்டேண்டில் நுழைந்துகொண்டிருந்தது.
ஸ்விட்சர்லாந்து : ஸ்வர்க்கத்தில் சில வருடங்கள்
ஜெனீவா ஏரியின் நடுவில், ஏரி ரோன் நதியை (Rhone River) சந்திக்கும் இடத்தில் இருக்கிறது ஜெட் தூ (Jet d’Eeu) – தண்ணீரை 200 கி.மீ.வேகத்தில், 140 மீட்டர் உயரத்துக்குப் பீச்சியடிக்கும் பெரிய water jet-மின்ஃபௌண்டெய்ன். வானில் 33000 அடி உயரத்தில் பறக்கையிலும் கீழே தெரியும் இது. ஜெனீவாவின் அதிபிரபலமான சுற்றுலாப்பகுதி. ஏரியின் கரையோரத்தில் பந்துகளை எறிந்து, பந்துகளோடு பந்துகளாக ஓடும் சிறுவர்கள், சிறுமிகள்; கையில் வாக்-மேன், காதில் இயர்ஃபோன், முகத்தில் ஃப்ளேம்-கலர் காகில்ஸ்(goggles) என உல்லாச நடைபயிலும் நங்கைகள்; விதவிதமான மனிதர்கள். `ஏரிக்கரைமேலே போறவளே பெண்மயிலே..!` என்றெல்லாம் மனம் தமிழ் சினிமா பாட்டை எக்கச்சக்கமாக எடுத்துவிடும்!
ஸெரெங்க்கெட்டி – நாள் ஐந்து
தான்ஸானியா உலகின் மிக அதிகமான யானைகளைக் கொண்ட நாடுகளில் ஒன்று. தந்த வேட்டைக்காக, உலகில் அதிக யானைகளை இழந்த நாடு என்றும் சொல்லலாம். 2009 ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட 1 லட்சம் யானைகள் இருந்தன. இன்று வெறும் 40000 யானைகளே மிஞ்சியுள்ளன என்கின்றன அரசுப் புள்ளி விவரங்கள். இவை பெரும்பாலும் தான்ஸானியாவின் மற்ற 15 தேசியப் பூங்காக்களிலும், வனங்களிலும் அதிக வசிக்கின்றன. சராசரியாக, ஒரு நாளைக்கு 30 யானைகள் தான்ஸானியாவில் தந்தத்துக்காகக் கொல்லப்பட்டிருகின்றன.
ஸெரங்க்கெட்டி நான்காம் நாள்
வண்டி, மீண்டும் சாலையேறி, தட தட தட தட.. பத்து நிமிடங்கள் கழித்து, தூரத்தில் ஒரு ஸஃபாரி வாகனம் நின்று கொண்டிருந்தது.. அதன் மேற்கூரையைத் திறந்து ஒரு சுற்றுலாப்பயணி, தொலைநோக்கியில் பார்த்துக் கொண்டிருந்தார்.. நாங்களும் நிறுத்தி, அண்ணல் நோக்கிய திசையை நோக்கினோம். தொலைவில், அக்கேசியா மரங்களின் குடுமியைக் கொய்து கொண்டிருந்தன சில ஒட்டகச்சிவிங்கிகள்.. முதல் முறை பார்க்கும் போது, ஒரு காட்சிப் பிழையெனத் தோன்றும்.. மரத்தை விட உயரமான விலங்கு
உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா
சோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது! நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே! ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே! நோட்டா இது! ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும்! நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும்! அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே!` என்றார். நல்ல நாடு இது! எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு! – என்று நினைத்துக்கொண்டேன்.
ஸெரங்க்கெட்டியில் மூன்று நாட்கள்
தொலைவிலேயே குன்றுகளென மத்தகங்கள் தென்பட்டன. அந்த இடத்தில் நிலப்பரப்பு கொஞ்சம் சரிந்து, ஒரு நீர்நிலை உருவாகியிருந்தது. 20-25 யானைகள் இருக்கலாம். சாலையில் வாகனம் மெல்லச் சென்றது. சாலையும், அச்சரிவில் இறங்கியது. அந்த நீர்நிலையைத் தாண்டிச் செல்ல ஒரு சிறு பாலம்.. வண்டி மெல்ல இறங்கத் துவங்கியதும், நெடுநெடுவென வளர்ந்திருந்த புல்லின் பின்னால் ஒரு தாய் யானையும் குட்டியும் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு வித்தியாசம் – இங்கே பெண்யானைக்குக் கொம்பிருந்தது. கொஞ்சம் சிறிது. வண்டியை நிறுத்தினார் ஜெர்ரி.. புஸ் புஸ் என மூச்சின் ஒலி மிகத் தெளிவாகக் கேட்டது.. குட்டியானை சமத்துச் செல்லமாக சிறு புட்களை மேய்ந்து கொண்டிருந்தது.. இரண்டும் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்க வில்லை.
பிளவுப் பள்ளத்தாக்கு
மெல்ல மெல்ல வாகனம் மேடேறியது. வெறும் செம்மண் பூமி, மெல்ல அடர்ந்த வனமாகத் துவங்கியது. ஒரு 9:30 மணி வாக்கில் ங்கொரொங்கோரோ க்ரேட்டர் வாயில் தென்பட்டது. அங்கே வாகனத்தை நிறுத்தி, மேலே செல்ல அனுமதிச் சீட்டு வாங்கி வந்தார் ஜெர்ரி. இறங்கி, அந்த அலுவலகத்தைப் பார்வையிட்டோம். மலையேற்றம் துவங்கியது. இடது புறத்தில் ஆழமான பள்ளத் தாக்கு, அதை மூடிய பெரும் மரங்கள் என காட்சி அற்புதம் நம் மேற்குத் தொடர்ச்சி மலைகளை நினைவுபடுத்தியது. பனிமனிதனில், ஜெயமோகன் உருவாக்கிய, பனிமனிதர்கள் வசிக்கும் காடு போல என நினைத்துக் கொண்டேன்.
வனங்களில் ஒரு தேடல் …
நான் இங்கு வந்த புதிதில் ஒரு முறை நைரோபி நேஷனல் பார்க் சென்றிருந்தேன். அங்கிருந்த ஒரு சிறு பாறையில் ஒரு சிறிய பறவை ஒன்றைப் பார்த்தேன். மீன் கொத்திப் பறவை என்று ஞாபகம். அதை காரில் உட்கார்ந்து கொண்டே ஃபோகஸ் செய்ய முயற்சித்தேன். அது அசைந்து கொண்டே இருந்ததால் ஃபோகஸ் பண்ண முடியவில்லை. வருவது வரட்டும் என்று காரை விட்டு இறங்கி மிகவும் மெதுவாக என்னுடைய ட்ரைபாடை செட் பண்ணினேன். என்னுடைய நேரம், அது என்னுடைய கார் இருந்த இடத்தில் இருந்து முன்னே சென்று கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் அது கொஞ்ச நேரம் உட்கார்ந்தது போல் இருந்தது. மறுபடியும் ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தேன். அப்போது லேசாக உஸ் உஸ் என்று ஒரு சப்தம் கேட்டது. முதலில் நான் அதைக் கண்டு கொள்ளவில்லை. நான் தொழிலே கண்ணாயிரம் என்றிருக்க மறுபடியும் உஸ் உஸ் என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டது . பாம்பு ஏதேனும் அருகில் வந்து விட்டதோ என்று ஒரு நிமிடம் பயந்து போய் திரும்பினேன்.
டமன்யாரா, ஸெரெங்கெட்டி, ங்கொரொங்கோரோ
ஆருஷா தாண்டியதும் சாலையோரத்தில் காஃபித் தோட்டங்கள் பயணத்தினூடே வந்தன. ஆஃப்பிரிக்க காஃபி நல்ல தரமான காஃபி. (எத்தியோப்பியக் காஃபிதான் உலகின் சிறந்த காஃபி எனச் சொல்லுகிறார்கள்.. கொலம்பியர்கள் மறுப்பார்கள்). இன்னும் சற்றுத் தாண்டியதும், சாலையோரம் மாடு மேய்க்கும் மஸாய் மாறா என்னும் மக்கள் தென்பட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கறுப்பு சிவப்பு நிறக்கட்டங்களில் பெரும் போர்வைகள் போன்ற ஆடைகள் அணிந்திருந்தார்கள். கையில் கூர்மையான ஆயுதங்கள், அல்லது குறைந்த பட்சம் கோல்கள். இவர்கள் மாடு மேய்க்கும் யாதவர்கள்.. ஆனால், நம்மூர் பிஹாரி யாதவர்களுக்கும், தமிழ் நாட்டுக் கோனார்களுக்கும் இவர்களுக்கும் ஒரு பெரும் வித்தியாசம் உண்டு. இம்மாடுகள் பால், மற்றும் இறைச்சிக்கும் உபயோகப்படுத்தப் படுவதுதான்.
பக்கிரிப் பிள்ளையும் உப்புப் பருப்பும்
தளவாய்ப்பேட்டையில் வாழ்கையில் புரட்டாசி மாதங்களில் விரதம் இருப்போம். காலையில் சோறு குடிக்காமல் பெருமாபாளையம் பெருமாள் கோவிலுக்குப் போய் வந்த பின்பு மதியச் சோத்துக்கு குழம்புக்குப் பதிலாக பருப்பு இருக்கும். பருப்பு எனில் வெறும் பருப்பல்ல. கடுகு, கறிவேப்பிலை கொண்டு தாளிக்கப்படும் அது “உப்புப் பருப்பு” என அழைக்கப்படும். சுடுசோற்றில் உப்புப் பருப்பையும் நெய்யையும் கலந்து (காலை பட்டினிக்குப் பின்பு) கட்டினால் அது அமிர்தம் என அழைக்கப்படும். அந்த உப்புப் பருப்பு வடித்த நீரில் செய்யப்படும் ரசம் – அமிர்த ரசம்.
”எப்படி இருக்கு?” என்றார் வாசி. “அற்புதம்” என்று சொன்னேன். உணவினூடே அவரின் பாட்டனார் (எள்ளா கொள்ளா தெரியவில்லை) தென் ஆப்பிரிக்கா வந்த கதையைச் சொன்னார். “சின்னப் பயனா இருக்கும் போது அவருக்கு யாரோ இங்க வந்தா மண்ணுல மம்பட்டியப் போட்டுத் தோண்டுனா தங்கம் கிடைக்கும் சொன்னாங்கன்னு வந்தாராம்”. உப்புப் பருப்புக்கப்பறம் இது ரெண்டாவது க்ளூ, நெம்ப ஸ்ட்ராங்கான க்ளூ . இனி பொறுப்பதில்லை தம்பீன்னு அந்தக் கேள்வியைக் கேட்டேன். “உங்க சர் நேம் என்ன?”
“கோவேண்டர்” இதற்கு அடுத்த கேள்வி கேட்பது வேஸ்ட் என்றாலும் கேட்டேன் – “எந்த ஊர்?” – “கோயமுத்தூர் பக்கம். ஆனால், என்ன ஊர் என்பது தெரியாது.”
இமயத்துக்கு அருகேவரை ஒரு இனிய பயணம்
வழியெல்லாம் பெருமலைகள் ஆபத்தான பள்ளத்தாக்குகள் என்பதால் வெயிற்காலங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளிடமிருந்து தப்பித்து நிற்கின்றது முன்சியாரி. ஊரை நெருங்கும்போதே தெரிந்துவிடுகிறது, இது உத்தராகண்டிலிருந்தும் தனித்து நிற்கும் பிரதேசம் என்று.
மூன்று சிகரங்கள்
ஏழு பேர் போவதாக முடிவாகியிருந்தது, அதில் ஐந்து பேருடன் நான் ஏற்கனவே ஒரு முறை ஸ்னோடோன் மலை மட்டும் ஏறி இருக்கிறேன். அவர்கள் வேகத்திற்கு முடியாவிட்டாலும் பெரிதாக சிரமபடாமல் மலையேறி முடித்திருந்தேன். நண்பர் பேச பேச லேசாக ஆசை துளிர்த்தது. இம்முறை வேரோரு நண்பர் வண்டி ஓட்ட ஒப்புக்கொண்டுள்ளதால் நான் ஓட்ட வேண்டி இருக்காது, அதுவும் ஒரு கூடுதல் ஈர்ப்பு. இந்நண்பர் குழாமோடு பயணம் செய்வது எனக்கு எப்பொழுதும் உற்சாகம் தரும் இனிய அனுபவமாகவே இருந்துள்ளது, அது இன்னோரு பெரிய உந்துதல் . அரை மணி நேரத்தில் “மூணு மலதான ,ஏறிறுவோம்” என்று சொல்லும் அளவுக்கு தயார்ஆகிவிட்டேன்.
பாரத் தர்ஷன்
வரலாற்றில் அண்ணாஜியைப் போன்றவர்கள் அபூர்வம். அவரை தூரத்திலிருந்து பார்க்க நேர்ந்தால் கூட பெரும் பேறு என எண்ணிக் கொண்டோம். கல்லூரி மாணவர்கள் சிலர் அவரைச் சந்திக்க வந்திருந்தனர். சுவாமி விவேகானந்தரைப் பற்றி அண்ணா பேசிக் கொண்டிருந்தார். அடுத்து எங்களை அனுமதித்தனர். நெடுஞ்சாண்கிடையாக என் முழுதுடலால் அண்ணா ஹசாரேஜி அவர்களை வணங்கினேன். அண்ணாவை வணங்கியவன் என்பதே எனது தகுதி. கண்களில் நீர் நிரம்பியது. மகாத்மாவை நாங்கள் நேரில் பார்த்ததில்லை உங்களுடைய ரூபத்தில் காண்கிறோம் என்றேன். எத்தனை பேர் இதனைச் சொல்லி அவர் கேட்டு சலித்திருப்பார். எவ்வளவு சலித்தாலும் எத்தனை பேர் திரும்ப திரும்ப சொன்னாலும் அது உண்மையல்லவா! எங்கிருந்து வருகிறீர்கள் என…
இறைவனின் இருப்பிடம்
சுன்னி பெரும்பான்மை மக்கள் வசிக்கும் இந்த நாட்டில் பெண்களுக்கு கண்டிப்பாக நிறைய சுதந்திரம் இருக்கிறது. தெருக்களில் சிறுமிகள் சிறுவர்களோடு சேர்ந்து கால் பந்தாடிக்கொண்டிருப்பதை சாதாரணமாக காணலாம். ஹிஜாப் எனப்படும் தலை மற்றும் மார்பை மறைத்து போடப்படும் துப்பட்டா கணிசமான பெண்கள் அணிந்திருந்தனர். பர்தா எண்ணிக்கையில் மிக மிக குறைவு . பள்ளி கல்லூரிகள் கணிசமானவை இரு பாலர் கல்வி நிலையங்கள். எங்கள் விடுதிக்கு முன் இருந்த மருத்துவ கல்லூரி பேருந்து நிலையத்தில் நம்மூரை மிஞ்சும் அளவுக்கு கடலை வறுபட்டு கொண்டிருந்தது. பெண்கள் கார், ஸ்கூட்டர் என பல ரக வாகனங்களில் தனியாக பயணிக்கின்றனர். நான் பார்த்த வரையில் எல்லா விதமான வேலைகளிலும் அவர்கள் ஈடுபடுவது போல்தான் தெரிகிறது.