மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

இந்திய அரசு ‘போஷன் அபியான்’(Poshan Abhiyan) மூலம் குழந்தைகள் நலம், ஊட்டச்சத்து, இளம் தாய்மார்களின் உடல் நலம், அவர்களுக்குத் தேவையான போஷாக்கு போன்றவற்றிற்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ‘கிராம நல சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து நாட்கள்’ தேசியக் கையேடு ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலை நிற்கும் வளர்ச்சி(Sustainable Development Goals) அதன் குறிக்கோள். சுய உதவிக் குழுக்கள், சமூக நல அமைப்புகள், கிராம முன்னேற்ற அமைப்பு, தாய் சேய் நல கேந்திரங்கள், குடும்ப நலம் மற்றும்  வளர்ச்சி, பஞ்சாயத்து சபைகள், நல்ல குடி நீர், சுகாதாரம் மற்றும் கழிவகற்றும் அமைப்புகள்…

பிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள்

1800 க்கும் மேற்பட்ட கிரிப்டோகரன்ஸிகள் இருப்பதாக 2018-ல் வெளிவந்த ஒரு செய்தி தெரிவிக்கிறது. அதில் கிட்டத்தட்ட பாதி பிட்காயின் என்ற வலை நாணயங்கள் (Bitcoin). கிரிப்டோகரன்ஸிகளின் தற்போதைய சந்தை மதிப்பு $1.5 டிரில்லியன். உருவற்ற ஒரு பொருள் (!), கணினியின் நிரலன்றி வேறு ஒன்றுமில்லை, ஆயினும் அதன் மதிப்போ மலைக்க வைக்கிறது.

ஓய்வுக் காலச் சேமிப்பும் அதை அபகரிக்க அரசாங்கம் நடத்தும் போரும்

ஒரு சேமிப்புத் திட்டத்தை ஆரம்பித்து அமெரிக்க மக்களை வலுக்கட்டாயமாக வேலைக் காலத்தில் சேமிக்க வைத்துப்பின் அவர்களது ஒய்வுக் காலத்தில் வட்டியுடன் அச்சேமிப்பைத் திருப்பாமல், பிற்பாடு பங்கேற்பவர்கள் பணத்தை ஒய்வு பெற்றவர்களுக்கு அளிக்கும் ஒரு பான்சி (ponzi) திட்டத்தை அரசாங்கம் நிறுவியது. இத்திட்டம் மற்ற பான்சி திட்டங்களைபோலவே, பங்கேற்பவர்களிடமிருந்து வரும் தொகை ஒய்வு பெற்றவர்களுக்குக் கொடுக்கப்படும் தொகையைவிட அதிகமாக இருக்கும் வரைதான் நடைபெறும்.

ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?

வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்? ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் “ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?”

பரோபகாரம் – நாட்டுக்கு நாடு

This entry is part 5 of 5 in the series பரோபகாரம்

தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.

பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு

This entry is part 1 of 5 in the series பரோபகாரம்

சுமார் 32 வருடங்களுக்கு முன், 1988 வாக்கில் மும்பையில் இருந்து சென்னை (அன்றைய வழக்கில் பம்பாயிலிருந்து மெட்ராஸ்) வருவதற்கான ரயிலைப் பிடிக்க விக்டோரியா டெர்மினஸ் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தேன். நல்ல உடை, ஷூ அணிந்து தலை வாரி, ஷேவ் செய்து கொண்டு பார்க்க டீசண்ட்டாக இருந்த ஓர் இளைஞர் “பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு”

குளக்கரை

இந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது- ஆறு அல்லது எட்டு சதவிகித பணவீக்கம் ஆட்சிகளைக் கவிழ்த்துவிடக் கூடியது என்று நமக்குத் தெரியும். இப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா?- வெனிசூயலாவில் பணவீக்கம் 82,700 சதவிகிதம் என்ற நம்ப முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி, கேரட், அரிசி, ஒரு டாய்லட் பேப்பர் ரோல், ஒரு பார் சோப் வாங்க பணக்கத்தைகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது – இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள்

மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)

1970கள் அல்லது 80களில் வெளிவந்த பல இந்திய திரைப்படங்களில் வில்லன்கள் இந்தியாவுக்குள் தங்கம் கடத்திக் கொண்டு வருபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்த காலத்தில் நாம் அந்த வில்லன்கள் தேசபக்தியில்லாத குண்டர்கள், அவர்களுக்கு சுயநலம்தான் முக்கியம் என்று நினைத்துக்கொள்வது வழக்கம். அப்போதெல்லாம் இந்தியா ஒரு மாபெரும் லைசன்ஸ் “மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)”

ப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்

தொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.
தொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்”

குளக்கரை

செய்தி அமெரிக்க ஆட்சியாளர்களின் அபிமானத்துக்கு உரிய, அந்த ஆட்சியாளர்களின் எஜமானர்கள் என்றே நாம் கருதக் கூடிய ஒரு கூட்டம் பற்றியது.

உலகின் மொத்தச் சொத்துகளில் பாதியை இந்தச் சிறு கூட்டம் தன் கையில் வைத்திருக்கிறது என்று த க்ரெடிட் ஸ்விஸ் வங்கி கணக்கிடுகிறது. உலகத்தில் சுமார் 36 மிலியன் நபர்களே உள்ள இந்த மிலியனேர்கள் உலக மக்கள் தொகையான சுமார் 7600 மிலியன் மக்களில் அரை சதவீதத்துக்கும் கீழான எண்ணிக்கை உள்ளவர்கள். ஆனால் உலகச் சொத்துகளில் 50% இவர்கள் கைவசம் உள்ளது.

தானோட்டிக் கார்கள் – காப்பீடு மற்றும் காப்புப்பிணை

சென்ற பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அலசினோம். அதைவிட மிக முக்கியமான விஷயம் வாகனக் காப்பீடு. தானோட்டிக் கார்களில் காப்பீடு ஒரு மிகப் பெரிய பிரச்னை. சொல்லப்போனால், தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வாகனக் காப்பீடு சமாச்சாரம். வாகனக் காப்பீடு வாகனத்தில் இல்லையேல், உங்களுக்குக் கார் ஓட்டும் உரிமம் இருந்தாலும், நீங்கள் கார் ஓட்டுவது சட்டப் புறம்பான விஷயம். இதற்குச் சட்டப்படி அபராதம் உண்டு. சரி, ஏன் வாகனக் காப்பீட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

உலகமயமாக்கல் – முடிவை நோக்கி?

எழுபதுகளிலும்,எண்பதுகளிலும் உற்பத்தி துறையில் (தயாரிப்பு சந்தை) உலகமயமாக்கல் பெருமளவில் ஏற்பட்டது ; பல மேலாண்மை வகுப்பறைகளில் பகிரப்பட்ட நிகழ்வு – “ஃபோர்ட் கார்களின் கதவுகள் பார்சிலோனாவிலும், குஷன்கள் புடாபெஸ்டிலும்,கியர்பாக்ஸ் பாரீஸின் புறநகரிலும்,ம்யூசிக் சிஸ்டம் ஒசாகாவிலும் தயாரிக்கப்பட்டு, ஷாங்காயில் ஒருங்கிணைக்கப்பட்டு தாய்லாந்தில் காராக விற்கப்பட்டது. இதில் அமெரிக்க பங்கு என்பது எங்கே? இது நாடு கடந்தது – புவியியல் வரம்புகளுக்கு அப்பாற்பட்டது; எனவே உலகளவில் சிந்தியுங்கள் – உள்ளூரளவில் செயல்படுங்கள்” என்று சொன்னார்கள். ’Glocal-க்ளோகல்’ என்ற…

சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா?

சவூதி அரேபிய அரசு தனது நாட்டு பிரஜைகளிடமும், வெளிநாட்டு பிரஜைகளிடமும் எந்த வரியையும் பெறுவதில்லை என்று மார்தட்டிக் கொள்கிறது. அரசு அறிவித்துள்ள வருமானம் என்பது கச்சா எண்ணெய், கச்சா எண்ணெய் சாராத என்ற இரு துறைகள் மூலம் தான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதை ஒருவர் இப்படி புரிந்து கொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிறுவனங்களின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஏற்றுமதி + விற்பனை லாபம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக கச்சா எண்ணெய் சாராத மற்ற தனியார் நிறுவனங்கள் தமது லாபத்தில் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் என்ற அளவில் அதிக பட்சமாகப் புரிந்து கொள்வார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரையில் அரசு தன்னை வரி செலுத்த சொல்லவில்லை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறது. இதைத் தான் சவுதிய அரசும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு வரி எதையும் இந்த ஆண்டு அறிவிக்கவில்லை என்கிறது.

நாணயத்துண்டு – பிட்காயின் ஒரு எளிய அறிமுகம்

நீங்கள் ஒரு ஐம்பதாயிரம் கொடுத்து ஒரு நிலத்தை கிரையம் செய்கிறார்கள். அந்தப்பணத்தை வங்கியில் கட்டுகிறீர்கள். வங்கிகள் என்ன செய்கிறது. பணத்தைக்ககொடுத்தவர் வீட்டு பின்புறத்தில் இந்தப்பணத்தை அச்சிடவில்லை என்று உறுதி அளிக்கிறது. விற்றவர் உங்களிடமும் வேறு ஒருவரிடமும் ஒரே இடத்தை இரண்டு பேரிடம் விற்கவில்லை என்று பத்திரப்பதிவு அலுவலகம் உறுதி அளிக்கிறது. ஒரு பரிவர்த்தனையில் இவை இரண்டும் நிகழ்கின்றன. அமேசானில், ப்ளிப்கார்ட்டில் எல்லாம். பரிவர்த்தனை நிகழ்ந்ததற்கான ஆதாரம். பரிவர்த்தனையின் உண்மைத்தன்மை இரண்டையும் பாதுகாக்கின்றன. இதில் நிறைய ஓட்டைகளும் இருக்கின்றன. ஒரே ஒரு முக்கியமான ஓட்டை என்பது…

பைனரி ஆப்ஷன் எனும் ஒரு புதைகுழி

உலகம் முழுக்க பண பரிவர்த்தனைகள் அதாவது ஒவ்வொரு நாடும், நாட்டு மக்களும் இன்னொரு நாட்டின் கரன்சியினை ஏதோ ஒரு காரணத்திற்கு வாங்குகிறார்கள் அல்லது விற்கிறார்கள். அதை வாங்கும்போதும், விற்கும்போதும் என்ன விலைக்கு போகும் என்பதை தீர்மானிப்பது கடைசியாய் இருக்கும் இரு எண்கள். எடுத்துக்காட்டாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65 ரூபாய் என்பது பேச்சு வழக்கில் நாம் சொல்வது. அதனை பண பரிவர்த்தனையின்போது 65.12864 என்றோ 64.98765 என்றோ இருக்கும். இந்த கடைசி இரு எண்கள் லட்சணக்கணக்கான டாலர்கள் பரிவர்த்தனையின்போது பெரும் வித்தியாசத்தை உண்டாக்கும். இந்த கடைசி இரு எண்களை மட்டும் வைத்து கிட்டத்தட்ட சூதாடுதலே…

மகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்

வழக்கின் நோக்கம், இங்கிலாந்தின் அரசை கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்குத் திருப்பிக் கொடுக்கச் செய்வதுதான். கோஹினூர் வைரத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அந்த வாதங்கள் பொருட்படுத்தத் தக்கனவாக இராது- நம் பார்வையில். ஏனெனில், அதை சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்துதான் பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதே வைரத்துக்கு ஆஃப்கானிஸ்தானும் உரிமை கொண்டாடுகிறது. அது எப்படிஎன்றால், நாதிர்ஷா என்னும் ஈரானிய ஆக்கிரமிப்பாளன் அதை இந்தியாவிலிருந்து பறித்துச் சென்றான், பிறகு நாதிர் ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின்னர், ஆஃப்கன் அரசர் ஒருவர் அதை பர்சியர்களிடமிருந்து பறித்தார். அவர் ஆட்சி வீழ்ந்த போது…

பிட்காயின் 101

பிட்-காயினால் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும். ஒரு துண்டு பீட்ஸா முதல் அதிஆடம்பரமான விலையுயர்ந்த மாட மாளிகை வரை என்ன பொருள் வேண்டுமோ, அதை நீங்கள் பிட்காயினை (bitcoin) விலையாகக் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம். பிட்காயினின் மதிப்பு ஒரு சில டாலரில் துவங்கி ஆயிரக்கணக்கான ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். சில சமயம் பிட்காயின் பற்றிய தகவல்கள் துப்பறியும் நாவல் போல் இருக்கும்; பல சமயங்களில் பிட்காயின் பற்றிய சாத்தியங்களை அறியும்போது மின்சாரத்தைக் கண்டுபிடித்தபோது ஏற்படும் அதிசயம் உண்டாகும். ’தூணிலும் இருப்பான்! துரும்பிலும் இருப்பான்!!’ என இறைவரைச் சொல்வது போல், எங்கெங்கு காணினும் பிட்காயின் என…

முத்ரா மூலமாக நிதிச்சந்தைகளை உள்ளிணைப்பது

சமீப காலகட்டங்களில் வட்டி விகிதங்கள் மெதுவாக இறங்கி வருகின்றன. வங்கிகளிடமிருந்து கடன் பெறும் பெருநிறுவனங்கள் ஆண்டிற்கு 12%க்கும் குறைவான வட்டியில் நிதிகளைப் பெற முடிகின்றன. ஆனால், என்னுடைய பழக்காரியும் காய்கறி விற்பவனும் நாளொன்றுக்கு அரை சதவிகித வட்டியில் கடன் வாங்குகிறார்கள். ஆண்டிற்கு 180% வட்டி கொடுக்கிறார்கள். என்னுடைய பெட்டிக்கடை முதலாளி ரூ. 50,000 என்று கடன் பத்திர ஒப்பந்தம் போட்டு ரூ. 45,000 பெறுகிறார். அதன் பிறகு நாளொன்றுக்கு ஐநூறு ரூபாய் வீதமாக நூறு நாளுக்குத் திரும்ப செலுத்துகிறார். (வருட வட்டி விகிதம் 40 சதவீதத்திற்கு மேல் ஆகும்.) என்னுடைய நாவிதர் சீட்டுப் பணத்தின் மூலம் நான்கு சதவிகிதம் மாதாமாதம் வட்டி கொடுக்கிறார். (வருட வட்டி 48 சதவீதமாகும்.)

பர்மாவின் செட்டியார்கள்

கடனுக்கான வட்டி வந்து சேரவில்லை என்றால், அந்த நிலமும் அதன் விளைச்சலும் கடனுக்கு ஒத்தியாக எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த ஏற்பாட்டிற்கு சட்டத்தின் வழி பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பை அளித்தது. கையில் பணம் இருந்த சீனர்களும், பர்மியர்களும், நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பர்மிய அரிசி வியாபாரத்திற்கு வங்கிக்கடன் வழங்குவதன் வழியாக பர்மிய வணிகத்தில் போட்டி போடத்தொடங்கினர். 1852-இல் 1000 ஏக்கருக்கும் குறைவான நிலமே வேளாண்மை நிலமாக பர்மாவில் இருந்தது. செட்டியார்கள் பர்மாவின் அரிசி வியாபாரத்தில் நுழைந்த அடுத்த 80 வருடங்களில் இது பத்துமடங்கு அதிகரித்தது

உலக வங்கிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்தாயிற்று

உலக வங்கி தேகநலம் சம்பந்தப்பட்ட சில திட்டங்களுக்கான தன் உதவியை நிறுத்தி விட்டதாகவும், அதற்குக் காரணம் அந்தத் திட்டங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் இருந்த ஊழல்தான் என்றும் செய்தி கிட்டியிருக்கிறது. நிதி அமைச்சர் உலக வங்கிக்குத் தன் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு எழுதியிருப்பதாகவும் செய்தி வந்தது. இந்த ஒரு விஷயத்தில் உலக வங்கி கொடுக்கும் அழுத்தம் தேவையானது என்று நாம் ஏற்றாலும், மொத்தமாகப் பார்க்கையில், இந்த நிறுவனத்தின் விதிகளும், முன் நிபந்தனைகளும், உலகளவில் முக்கியமான சக்தியாக எழுந்து கொண்டிருக்கும் நம் நாட்டுக்கு அத்தனை பொருத்தமானதாக இல்லை என்றுதான் கருத வேண்டி இருக்கிறது.