அவர்கள் முகத்தின் வியர்வை

இது வரை பிரபுக்களின் படங்களையும் ராணிகளின் ஓவியங்களையும்தான் அருங்காட்சியக கலைக்கூடங்களில் பார்த்திருப்போம். இப்போது “அவர்கள் முகத்தின் வியர்வை” (“The Sweat of Their Face”) என்னும் கண்காட்சியை ஸ்மித்ஸோனியன் (Smithsonian’s National Portrait Gallery) அமைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளிகள், அடிமை சிப்பந்திகள், ரயில் வேலையாட்கள், எஃகு தொழிலாளிகள் என “அவர்கள் முகத்தின் வியர்வை”

ஜோசியர்கள், அகதிகள் & காந்தி

ஃபிரெஞ்சு புகைப்படக்காரர் ஹென்ரி கார்ட்யெ பிரசன் (Cartier-Bresson) இந்தியாவில் பல்லாணடுகள் செலவழித்திருக்கிறார். இவர் நம் மகாத்மா காந்தியை படங்களாகப் பதிவு செய்தவை உலகப் புகழ்பெற்றவை. காந்தியைத் தவிர ரமண மகரிஷியின் ஆசிரமம், கதகளி குருகுலத்தின் நடனப்பயிற்சி, காஷ்மீரத்தின் இயற்கை, அகமதாபாத் நகரத்தின் சந்து பொந்துகள் எல்லாம் உண்டு. அவற்றை “ஜோசியர்கள், அகதிகள் & காந்தி”

இசை நாடகம் நடக்கும் முன்னே

நியு யார்க் நகரத்தில் இருக்கும் மெட் ஆபரா (Metropolitan Opera House) எவ்வாறு தன்னை தயார் படுத்திக் கொள்கிறது? ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் என்ன நடக்கிறது? யாரெல்லாம் என்ன வேலையை எப்பொழுது செய்கிறார்கள்? இசை நாடகம் துவங்குவதற்கு முன் பின்னணியில் நடக்கும் தயாரிப்புகள் குறித்த வீடியோவை இங்கு பார்க்கலாம்:

ஹிலரி Vs ட்ரம்ப், விவாதங்களின் அரசியல் , ஒரு பார்வை

இது போன்ற விவாதங்களில் முதலில் கவனிக்கப்படும் அம்சம் போட்டியாளர்கள் தங்களை எப்படி வெளிக்காட்டிக் கொள்கின்றனர் அவர்களின் உடல்மொழி எத்தகையது என்பதுதான். இந்த சுற்றில் நிச்சயமாக ஹிலரிதான் வெற்றியாளர். ஆரம்பம் முதல் இறுதிவரை அமைதியான தன்னம்பிக்கை கூடிய புன்னகையுடன் கேள்விகளை, தாக்குதல்களை எதிர்கொண்டார். தன்னுடைய பதில்களை தெளிவாகவும், அதே நேரத்தில் சரியான சந்தர்ப்பங்களில் ட்ரம்ப்பை மட்டம் தட்டுவதிலும் வெற்றிகண்டார். மாறாக ட்ரம்ப் ஆரம்பம் முதலே கடுகடுப்பு முகத்துடனும், பதட்டம் நிறைந்த குரலுடனும் இருந்தார். எதிராளியை பேசவிடாமல் இடைமறித்து பேசியதை யாருமே ரசிக்கவில்லை. இந்தப் போக்கினை ட்ரம்ப் அடுத்த இரண்டு விவாதங்களில் திருத்திக் கொள்வார் என எதிர்பார்க்கின்றனர்.

காலத்தினால்….

இணையப் போராளிகள்!,வெட்டி அரட்டை கும்பல், முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றெல்லாம் பிறரால் அலட்சியமாக எண்ணப்பட்ட இளையஞர்களின் ஆற்றலை இப்பேரழிவு நாம் உணர்ந்து கொள்ள வைத்தது. ட்விட்டர் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் உலவுகையில் நான் எண்ணுவதுண்டு சினிமா கதாநாயகர்களுக்காக இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே, திரையிசையைத் தவிர இளைய சமுதாயத்திற்கு வேறு இசைஞானமே இல்லையே என்றெல்லாம்… ஆனால் சென்னை மழையில் இவர்களின் பெரும் பங்கு என்னைப் போன்றவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியது. ட்விட்டர் பேஸ்புக் மூலம் இவர்கள் மிகத் திறமையாக உதவிகளை ஒருங்கிணைத்தார்கள். இரவும் பகலும் விழித்திருந்து…

ஓவிய வியாபாரியின் கண்காட்சி

மோனே, ரெனாய்ர், டீகாஸ், மானே, பிஸாரோ போன்ற ஓவியர்களின் படைப்புகளை கண்காட்சியாக வைப்பார்கள். ஆனால், இவர்களை எல்லாம் விற்பவரின் கண்காட்சியை ஃபிலடெல்ஃபியாவில் வைக்கிறார்கள். எந்தக் கலைஞருக்குமே முதன் முதல் விற்பனை என்பது முக்கியமானது. அதை சாத்தியமாக்கியவர் பால் டியுரண்ட்-ரூல் (Paul Durand-Ruel). ஆயிரம் மோனெ ஓவியங்கள், 1,500 ரெனாயிர் “ஓவிய வியாபாரியின் கண்காட்சி”

சகலகலாச்சாரியார் எஸ்.ராஜம்

ராஜம் தனது வாழ்க்கையிலேயே இவ்வளவு பதவிசாகவும் நறுவிசாகவும் லலிதமாகவும் நளினமாகவும் எளிமையாகவும் பொறுமையாகவும் இருந்ததை புரிந்துகொண்டால் அவர் பாடலும் சித்திரமும் கேட்காமலே பார்க்காமலே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் லலிதாராமும் காந்தனும் நமக்கு மேலும் புரியவைக்க அவர்கள் எடுத்த ஆவணப்படத்தில் இருந்து ஒரு பகுதியை குறும்படமாகக் காட்டினார்கள். மதுரை மணி அய்யர் அவர்கள் ராஜத்திடம் சொன்னது – “ராஜூ ராகமெல்லாம் குளிச்சுட்டு வர்றமாதிரி சுத்தமா இருக்கணும்.” இதை நினைவூட்டுவது போல் ராஜம் குளித்துவிட்டு துண்டுடன் வருகிறார். ஒரு சுத்த ராகமாக திகழ்கிறார்.