நீ படித்திருப்பாய், என் அப்பாவால் குனிந்து நிமிர்ந்து நீண்டநேரம் நின்று தொழிற்சாலையில் வேலைசெய்ய முடியாது. தினம் எதிரில் தாத்தா வீட்டிற்கு மெதுவாக நடந்து சிரமப்பட்டு மாடிக்கு ஏறுவார். அங்கே கணினியின் முன் அவர் நேரம் போகும். ஆலோசனை என்ற பெயரில் ஓரளவு வருமானம். வெளிவேலை எல்லாவற்றையும் என் அம்மாவே செய்வாள். அதை அடிக்கடி கவனித்த ஒரு ஆள் என் பெற்றோருக்கு இடையில் நெருக்கமான உறவு இல்லை என்று கணக்குப் போட்டுவிட்டான். அவனுடைய பையனுக்கு ட்யுஷன் பற்றிப்பேச என் அம்மாவை ஒரு விடுதிக்கு வரச்சொல்லி அங்கே சந்தித்தான்.”
Category: நாவல்
மிளகு அத்தியாயம் நாற்பத்தாறு
வணிகக் கவிதைகள் தலைப்பை பார்த்ததுமே அவை வர்த்தக கவுன்சிலுக்கு அனுப்பப் பெறும். வர்த்தகக் கவுன்சில் ஏதாவது அனுப்ப வேண்டுமென்றால் கவிதை மன்றம் மூலமாக வணிகக் கவிதை தலைப்பில் நேமிநாதனுக்கும் ரோகிணிக்கும் பூடகமான உருவத்தில் வந்து சேர்ந்து விடலாம். யார் கண்டது? வர்த்தகத் தகவல்கள் பற்றி எழுதிய, வேறு யாருக்கும் புரியாத வணிகக் கவிதைகள் சிறந்த கவிதைகளாகக் கொண்டாடப்பட்டு விருது வழங்கப்படலாம். புரிந்தால் அதென்ன கவிதை?
அதிரியன் நினைவுகள் -14
சமாதான நடவடிக்கைகளுக்குப் பிறகு கிளர்ச்சியின் காய்ச்சல்களைத் தணிக்க வேண்டிய அவசியம். எகிப்தில் அதன் வீரியம் மிகவும் அதிகமாக தெரியவர, கூடுதல் துருப்புகள் வரும்வரைக் காத்திராமல் விவசாய போராட்டக்காரர்களுக்கு அவசரகதியில் வரிவிதித்து அவர்களை அடக்க முயற்சித்தேன். எனது தோழர் மார்சியஸ் டர்போவிடம், அங்கு ஒழுங்கை நிலைநாட்டும்படி கேட்டுக்கொண்டேன், அவரும் அப்பிரச்சனையைச் சற்று கடுமையான சாதுர்யத்துடன் கையாண்டு இட்ட பணியை நிறைவேற்றினார்.
தெய்வநல்லூர் கதைகள் – 1
பரணி அவர்கள் பள்ளி என்பதை விளையாட்டு மைதானமென கருதுபவர். விசித்திரமான விளையாட்டுகளை நிதமும் அரங்கேற்றி மகிழ்வார். பின்னாளில் கிளாடியேட்டர் படம் எனக்கு எந்த வியப்பையும் தராமல் போனதற்கு காரணம் தரணி புகழ் பரணி தான். வகுப்பில் இருவரைத் தேர்வு செய்வார். இருவரும் சண்டை போட வேண்டும். விழும் அடிகளை பரணி கணக்கெடுப்பார். யார் அதிக அடிகள் கொடுக்கிறாரோ அவரே வெற்றியாளர். அவருக்கு பரணியால் பச்சைக் காகிதம் சுற்றிய பத்து பைசா ந்யூட்றின் சாக்லேட்டின் பாதி மனமுவந்து அளிக்கப்படும்.
அதிரியன் நினைவுகள் – 12
மத்தியகிழக்கு பகுதியில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பு எல்லா இடங்களிலும் திடீரென ஒரேநேரத்தில் பரவியது. யூதவணிகர்கள் செலூசியா(Séluicie)வில் வரி செலுத்த மறுத்தனர். சைரீன்(Cyrène) மக்களும் கிளர்ச்சியில் இறங்கினர். விளைவாக கிழைக்கூறுகள் கிரேக்க கூறுகளை துவம்சம் செய்தன. எங்கள் படைதுருப்புகள் முகாமிட்டிருந்த பகுதிவரை எகிப்து கோதுமையைக் கொண்டுவர சாலைகள் இருந்தன, அவற்றை ஜெருசலத்தைச் சேர்ந்த ஜெலட்ஸ்(Zélotes) என்ற கும்பல் துண்டித்தனர். சைப்ரஸில் குடியிருந்த கிரேக்க மற்றும் உரோமானிய குடிகள் பாமர யூதர்களின் பிடிக்குள் சிக்கி, கிளாடியேட்டர் சண்டைகளில் ஒருவரையொருவர் வெட்டிமடியவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாயினர்.
அதிரியன் நினைவுகள் – 11
எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன. யூத மற்றும் அரேபிய தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள் தங்கள் பகுதியைத் துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார், இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல். மன்னருடன் இருந்தவர்களில் சிலரும் விபத்தில் மாண்டிருந்தனர்
உபநதிகள் – மூன்று
என் தங்கை என்னைவிட இரண்டரை வயது சிறியவள். மற்றவர்கள் தாத்தாவின் கவனத்தைப் பிடித்துவைத்ததைப் பார்த்து, தன் பங்குக்கு அவரிடம் என்ன காட்டலாம் என்று யோசித்தாள். மாடியில் தன்னறைக்குப் போய் அவளுடைய கைப்பையை எடுத்துவந்தாள். அதில் ஒரு சிறிய பர்ஸ். அதைத்திறந்து அவள் சேர்த்துவைத்திருந்த டாலர் நோட்டுகளைப் பெருமையுடன் காண்பித்தாள்.
அதிரியன் நினைவுகள் – 8
எனது இராணுவ வெற்றிகள் மன்னர் திராயானைப் போன்ற மாவீரர்களிடத்தில் பகை உணர்வை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. துணிவென்ற மொழியை மட்டுமே உடனடியாகப் புரிந்துகொள்ளக்கூடியவராக அவர் இருந்தார். அதன் சொற்கள் நேரிடையாக அவர் நெஞ்சத்தைத் தொட்டன. என்னைத் தம்முடைய வலதுகையாக, ஏன் கிட்டத்தட்ட ஒரு மகனாகவே கருதினார். அதன் பின்னர் எங்கள் இருவரையும் முழுமையாக பிரிக்கின்ற வகையில் எந்தச் சம்பவமும் குறுக்கிடவில்லை. என்னைப் பொறுத்தவரை, அவரது கருத்துக்களைப் பற்றிய எனது ஆரம்பகால ஆட்சேபணைகளை அவர் இராணுவத்தில் வெளிப்படுத்திய போற்றத்தக்க மேதமையை அறிந்தமாத்திரத்தில் குறைந்த பட்சம் தற்காலிகமாக ஒதுக்கிவைக்க ஆரம்பித்து, பின்னர் மறக்கவும் செய்தேன். கைதேர்ந்த நிபுணர்கள் செயல்படும் விதத்தைக் காண்பதில் எனகெப்போதும் மகிழ்ச்சி.
மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 5
மகளின் தலையை அன்போடு தடவி, குர்தாஸ், பேரனை மடிமீது அமர்த்தி, கொஞ்சி மகிழ்ந்தார். ஜன்கோ அம்மாவை அணைத்துக் கொண்டாள். தனவந்தியும், மகளை ஆரத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டாள். தனவந்தி நீண்ட நேரம் மகளை அணைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து மித்ரோ, “கொஞ்சம் அன்பை மருமகள்களுக்கும் மீதி வையுங்கள் அம்மா” என்று கேலி செய்து சிரித்தாள்.ஜன்கோ சந்தோஷமாக அண்ணிகளையும் தழுவிக் கொண்டாள். சின்ன அண்ணி கண்ணில் படாததைப் பார்த்த ஜன்கோ, “அண்ணி நன்றாகத் தானே இருக்கிறாள் அம்மா? அண்ணியும் கண்ணில் படவில்லை, அண்ணன் குல்ஜாரியும் கண்ணில் படவில்லையே என்று கேட்டாள்.
அதிரியன் நினைவுகள் – 5
ஏதன்ஸ் நகரை அடைந்த மறுகணம் என்னுடைய மனதைப் பறிகொடுத்திருந்தேன்; நானோ, பிறர் சந்தேகிக்கிற விரும்பத்தகாத தோற்றம்கொண்ட மாணவன், அங்கு நிலவிய கலகலப்பான சூழல், வேகமாக பரிமாறிக்கொள்ளப்பட்ட உரையாடல்கள், நீண்ட ரம்மியமான மாலைப்பொழுதுகளில் காலாற நடக்கும் தருணம், வேறெங்கும் அறிந்திராத விவாதங்கள், தர்க்கங்கள், ..அனைத்தையும் முதன்முறையாக அங்குதான் சுவைத்தேன். கணிதம், கலை இரண்டுமே சுழற்சிமுறையில் எனது தேடலுகேற்ப தங்கள்பால் அக்கறை கொள்ளவைத்தன. …மருத்துவர் தொழில் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கும்; அப்பணியின் அடிப்படை அணுகுமுறை, எனது சக்கரவர்த்தி தொழிலுக்கென முயற்சித்துப் பெற்ற அணுகுமுறையை ஒத்திருந்தது.
மிளகு அத்தியாயம் முப்பத்தாறு
வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.
அதிரியன் நினைவுகள் – 4
என் தந்தை, ஏலியஸ் அஃபர் அத்ரியானுஸ்(Aelius Afer Hadrianus) நல்லொழுக்கங்கள் நிறைந்த மனிதர். தேசம், அரசாங்கம் என அவர் உழைத்தபோதும், பலனடைந்தவரில்லை. செனெட் அவையில், அவர் குரல் எடுபட்டதில்லை. வழக்கமாக நம்முடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஆப்ரிக்க பகுதி நிர்வாகிகள் செல்வத்தில் கொழிப்பதுண்டு, ஆனால் இவர் அங்கும் எதையும் சம்பாதித்தவரில்லை. திரும்பிய பின் இங்கும் ஸ்பெயின் நாட்டில் நமது கைவசமிருந்த இட்டாலிகா (Italica) நகராட்சியில் ஓயாமல் உள்ளூர் சர்ச்சைகளைத் தீர்த்துவைத்து சோர்வுற்றதுதான் அவர் கண்ட பலன். இலட்சியங்களற்ற மனிதர், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெரிதாக அனுபவித்தவரில்லை. பெரும்பாலான மனிதர்களைப்போலவே ஆண்டுதோறும் மேலும்மேலும் நிறமிழந்து, இறுதியில் அற்பவிஷயங்களில் வெறித்தனமாக ஒரு முறைமையைக் கையாண்டு தம்மை சிறுமைபடுத்திக்கொண்டார்.
மிளகு அத்தியாயம் முப்பத்தைந்து
கிட்டத்தட்ட இருபது வருஷமாக வந்து போவதால் கொஞ்சம் போல மலையாளம் அவர் நாவில் படிந்து வரும். அது ரெண்டாம் பட்சம். ஒரிஜினல் மலையாளியாக வேட்டியை முழங்காலுக்கு மடித்துக் கட்டியபடி நடக்கவும், தேவையான இடங்களில் மடித்ததை இறக்கி காலில் தடுக்காமல் நடக்கவும் அவருக்குப் பழகி இருந்தது.. தமிழ் நாட்டில் சுற்றுவேட்டி வலது பக்கத்தின் மேல் இடப்பக்கம் படிந்து வரும். கேரளத்திலோ இடப்பக்கத்தின் மேல் வலப்பக்கம் படிந்து வரும். இரண்டு வகையிலும் வேட்டி கட்ட மோதக்குக்குத் தெரியும். வேட்டி மடித்துக் கட்டியபடி ஓடவும் இறக்கி விட்டு முழங்காலில் இருந்து கணுக்காலுக்கு மூட மெல்ல ஓடவும் அடுத்துப் பயிற்சி எடுக்க வேண்டும். இந்தப் பயணத்தில் அதைப் பழகி விடலாம் என்ற நம்பிக்கை உண்டு அவருக்கு.
மித்ரோ மர்ஜானி-அத்தியாயம் 3
தனவந்தியின் நெஞ்சம் நிறைந்து தளும்பியது. எந்நேரமும் யாரைத் திட்டிக் கொண்டும் குறை கூறிக்கொண்டும் இருந்தாளோ, அந்த மருமகள் தான், மாமியாரை விட்டுக் கொடுக்காமல் பக்கபலமாக நிற்கிறாள். தனவந்தி தலையை அசைத்து, ” மருமகள்களே, நான் தவறாக ஏதாவது சொல்லி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். நான் இந்த வீட்டுப் பிள்ளைகளின் அம்மா என்று என்னைத் தவறாகக் நினைத்துக்கொண்டு விட்டேன். நான் வெறும் வேலைக்காரி தான் என்பதை மறந்து விட்டேன். நான் வெறும் வேலைக்காரி மட்டுமே.”
வாக்குமூலம் – அத்தியாயம் 14
எம்.ஜி.ஆர். மன்றத்த ஆரம்பிச்சு வைக்க கே.ஆர். ராமசாமியும், கருணாநிதியும் வந்திருந்தாங்க. ரொம்ப ஒண்ணும் பெரிய கூட்டம் இல்ல. ஏழெட்டுப் பேரு நின்னுருப்பாங்க. கோனாக்கமார் தெருக்கார திருவை அண்ணாமலைதான் அந்த மன்றத்தை நடத்துனாரு. கீழ, தெருவுல ரெண்டு நாற்காலியப் போட்டு கே.ஆர். ராமசாமியவும், கருணாநிதியவும் உட்காத்தி வச்சிருந்தாங்க. கருணாநிதியும், ராமசாமியும் தோள்கள்ல நீளமா நேரியல் மாதிரி துண்டைத் தொங்க விட்டிருந்தாங்க. அயர்ன் கடைக்காரர் அவா பாட்டுக்கு துணிகளைத் தேய்ச்சுக்கிட்டிருந்தாரு. பெரிசா எந்தப் பரபரப்பும் இல்ல. கொஞ்ச நேரம் இருந்துட்டு ரெண்டு பேரும் பொறப்பட்டுப் போயிட்டாங்க.
மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2
மித்ரோ பதில் சொல்ல வாய் எடுப்பதற்கு முன்பாகவே அறை வாசலில் மூத்த கொழுந்தனாரின் நீண்ட நிழல் விழுந்ததை பார்த்து கூச்சமடைந்தாள். முந்தைய இரவின் சம்பவங்கள் நினைவுக்கு வர, கொழுந்தனாரை சீண்டும் விதமாக, துப்பட்டாவை தலையை மறைத்தும் மறைக்காமலும் இழுத்துவிட்டுக் கொண்டு, ” கொழுந்தனாரே! என் ஓரகத்திக்கு நான் ஒருபோதும் சமமாக மாட்டேன் என்பது நன்றாகத் தெரியும். இருந்தாலும்… கொஞ்சம் இந்தப் பக்கமும் உங்கள் பார்வை பட்டால்…..”
மித்ரோ மர்ஜானி – 1
எங்கள் குடும்பத்திற்காக உன்னை பெற்றெடுத்துத் தந்த உன் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டவர்கள்” என்றாள். பிறகு, மருமகளின் கையை வாஞ்சையுடன் தடவி ” மருமகளே, மித்ரோவின் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் உன் கடைசி ஓரகத்தி யின் நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? மனதுக்குள்ளேயே சுருங்கிப் போகிறேன். வந்த எல்லா நல்ல சம்பந்தங்களையும்களையும் விட்டுவிட்டடு, எப்படி இங்கே போய் மாட்டிக் கொண்டேன்? அந்த இடம் அவ்வளவு சரியில்லை என்று சொந்தக்காரர்கள் அரசல் புரசலாக சொன்னார்கள். நான்தான் அவர்கள் வீட்டு ஆடம்பரத்தையும் பகட்டையும் பார்த்து மதி மயங்கிப் போனேன்.
1957-2
பள்ளிக்கூடம் திறந்த முதல்நாள். முதல் படிவத்தின் (இன்றைய கணக்கில் ஆறாம் வகுப்பு) முதல் பாடம், ஆங்கிலம். வகுப்பில் பெரும்பாலோர் சுற்றுவட்டாரத்து கிராமங்களில் இருந்து வந்த மாணவர்கள். அதுவரை காதில் விழுந்த ஒன்றிரண்டு ஆங்கில வார்த்தைகளை மட்டுமே அறிந்த அவர்களுக்கு அம்மொழியின் முதல் அறிமுகம். அதனால் ஆசிரியர் கேட்கிறார்.
மிளகு அத்தியாயம் முப்பத்திமூன்று
மிங்கு, தீபாவளி நேரத்திலே எல்லோரும் சந்தோஷமா இருக்கணும். அந்த நேரத்துக்காவது இல்லே அது போல நேரங்களிலாவது ஸ்கர்ட்டும் ப்ளவுசும் உன்னை மாதிரி குமருகள் உடுத்த ஆசைப்பட்டா, ரொம்பவும் கண்டிக்கக் கூடாது தானே. முழுக்க உடம்பு மூடின உடுப்பு அதெல்லாம்னு மிங்குவுக்கு தெரியும் தானே. அதுவும் துணியும் செய்நேர்த்தியும் மட்டும் தான் போர்ச்சுகீஸ். தைத்து உடுப்பாக்கி தந்தது நம்ம தையல்காரங்க. பிடவை கூட இடுப்பு தெரியும். ஸ்கர்ட் போட்டா முழுசாக மூடி இருக்கும்”.
வாக்குமூலம் – அத்தியாயம் – 13
சபரி மலைக்கிப் போறாங்க. மகர ஜோதி பாக்கப் போறாங்க. எதிர்த்த மலை உச்சியில ஆட்கள், ஜோதி தெரிய வேண்டிய அந்தக் கருக்கல் நேரத்துல, தீப்பந்ததைக் கொழுத்திக் காட்டுதாங்க. அந்த இருட்டுல ஆட்கள் இருக்கது தெரியாது. அந்த நெருப்பத்தான் மகர ஜோதின்னு சொல்லுதாங்கன்னு இவங்க அப்பா சொல்லுதாஹ. மகர ஜோதி அன்னைக்கி எதிர்த்த மலையில என்ன நடக்குன்னு ஆட்கள் போயிப் பாத்திருக்காங்க. அங்க போயிப் பாத்தா இதுதான் நடந்திருக்கு. கடவுள் நம்பிக்கையை வளர்க்கிறதுக்காக, நம்பிக்கை ஏற்படுகிறதுக்காக இதெல்லாம் செய்தாங்கன்னு ரவியோட அப்பா சொல்லுதாங்க. இது நெசமோ, பொய்யோ? யாரு கண்டது? நமக்கு அடியும் தெரியாது, முடியும் தெரியாது.
ஏ பெண்ணே 10
அம்மா வாய் திறக்காமல் மௌனமாக படுத்திருக்கிறார். பேச்சின்மை அம்மாவின் மீது கவிழ்ந்திருக்கிறது. கையில் அணிந்திருந்த வளையல்களை கழற்றி தலையணை அடியில் வைத்து விடுகிறார். போர்த்தியிருந்த போர்வையை பந்தாக சுழற்றி தரையில் வீசி எறிகிறார். தலைக்கு கீழ் இருந்த தலையணையை எடுத்து ஒரு மூலையில் வைத்து விடுகிறார். குஷனை அறையின் வாயிலருகே தூக்கி எறிகிறார். கீழே விரிக்கப்பட்டிருக்கும் படுக்கை விரிப்பை இழுக்க முயற்சித்து, தலையை இடமும் வலமும் சுழற்றுகிறார்.
வாக்குமூலம் – அத்தியாயம் 11
அவ நேத்து வந்திருந்தா. யாரோ கோடாடுன்னு ஒரு டைரக்டர் செத்துப் போயிட்டாருன்னு ரொம்ப வருத்தப்பட்டுப் பேசிக்கிட்டு இருந்தா. நம்ம நாட்டு டைரக்டர் செத்துப் போயிட்ட மாதிரி ரொம்ப ஆத்தாமைப் பட்டா. இவுஹ அப்பாவுக்கும் அவரு செத்துப் போனது சங்கடமாத்தான் இருக்குது போல. அவரோட படங்களப் பத்தி ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நாளைக்கி முன்னாலே ஶ்ரீதர் செத்துப் போனதையும், பாலச்சந்தர் செத்துப் போனதையும் பத்தி நெனச்சுக் கிட்டேன். ஒலகத்துல பொறந்துட்டா சாவுன்னு ஒண்ணு வரத்தானே செய்யும்? எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் செத்துத்தானே போறாங்க? சாவு கிட்ட இருந்து தப்பிக்க முடியுமா?
மிளகு அத்தியாயம் இருபத்தொன்பது
அந்த வீதியில் அழகான பெண்கள் நடந்து போனால் மட்டுமே தலைகள் உயரும். பேரழகியர் பல்லக்கில் போனால் ஒரு நிமிடம் செயல் மறந்து, மெய் மறந்து எல்லோரும் பார்ப்பார்கள். அதி சிறப்பான தெய்வீக ஆரணங்குகள் ஏழு குதிரைகள் பூட்டிய வண்டியில் சூரிய பகவான் போல் கிழக்கிலிருந்து மேற்கே போனால் சாரட்டுக்குப் பின்னே சகல வயதினரும் உன்மத்தம் கொண்டு ஊர்ந்திருக்கலாம்.
ஏ பெண்ணே – 7
எனினும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு அழுத்தமான கோடு கிழிக்கப்பட்டிருந்தது. கடைசி நாட்களில், உன் தாத்தா நோய்வாய்ப்பட்டிருந்த போது, நானும் என் சகோதரிகளும், மாறி மாறிச் சென்று, அவரோடு தங்கி யிருந்தோம். ஆனால் அவர் எப்போதும் குரல் கொடுத்து அழைத்ததென்னவோ தன் மகனைத் தான். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மகன் மீது மட்டும் ஏன் இத்தனை கண்மூடித்தனமான பாசம்!
வாக்குமூலம் – அத்தியாயம் 8
கடவுளை வழிபட பிரார்த்தனை, மந்திரம், சடங்குகள்னு நெறஞ்சு கிடக்குது. கோவில்களும், தேவாலயங்களும், பள்ளிவாசல்களுமா பெருத்துக் கிடக்கு. எல்லா இடத்திலேயும் பிரார்த்தனையோட முணுமுணுப்பு கேக்குது. பாவம் ஜனங்க. இதிலே செத்துப்போன பிறகு நற்கதி அடையணும், சொர்க்கத்துக்குப் போகணும்னு அதுக்காக வேற கடவுள்கிட்டே மல்லாடுகிறாங்க. இத்தனை பில்லியன் ஜனங்களோட ஆசையையும் அவரு எப்படி நிறைவேற்றி வைப்பாரு? அதனாலேதான் ‘மதம் ஒரு அபின்’னு கார்ல் மார்க்ஸ் சொன்னாரு போலிருக்கு.
ஏ பெண்ணே – 6
நீ நிதானமாகவே திரும்பி வா. வீட்டைப் பற்றிய கவலையை விடு. நான் இங்கேயே தான் இருப்பேன். எங்கும் போக மாட்டேன். முடி வெட்டிக் கொள்ள போவதாக இருந்தால், எனக்கும் முடி வெட்டிவிடச்சொல். என் முடி கனமாக இருப்பதால், மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடிவெட்டிக் கொண்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இனி இந்த முடியை பராமரிப்பது கடினம்.
மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு
கைவேலை காட்டமாட்டாள் அவள் விருந்தாளிகளிடம். சந்தோஷமாக கள்ளும் பிராந்தியும் கலந்து அருந்தி ஓவென்று குதித்துக் கூக்குரலிட்டு அனுபவிக்கட்டும். நாளை முதல் தள்ளுபடி விலை, இலவச பானம் அவ்வப்போது. நிச்சயம் வந்து விடுவார்கள். கேட்ட மதுவில் ஒரு சிறு நகக்கண் அளவு ஊமத்தைப் பொடி கலந்து விடுவாள். ஒன்றும் புதுசாகத் தெரியாது. கொஞ்சம் தலை கிர்ரென்று சுத்தலாம் என்று வைத்திய செங்கமலம் சொன்னாள். அரிந்தம் வைத்தியரின் சிஷ்யர்களும் அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வரும் திங்களுக்குள் இந்த வீரர்கள் ஹொன்னாவர் வீதிகளில் போதம் கெட்டு அலைவார்கள்
வாக்குமூலம் – அத்தியாயம் 7
பள்ளிக்கூடம் தொறந்த அன்னைக்கே பரிச்சப் பேப்பர் எல்லாம் தந்திருவாங்க. ஒவ்வொரு பீரியட் ஆரம்பிக்கும்போதும் பக்கு பக்குன்னு இருக்கும். மார்க் கொறைஞ்சா சார்வா பெரம்பால அடிப்பாரு. நான் விஞ்ஞானத்துலயும், தமிழ்லயும் தான் பெயிலாவேன். அண்ணன் எல்லாப் பாடத்துலயும் பெயிலாயிருவான். ஒரு வாரத்துல புராக்ரஸ் ரிப்போர்ட் வந்துரும். பெயிலான பாடத்து மார்க்குக்குக் கீழே செவப்பு மையால கோடு போட்டிருக்கும். அப்பாட்ட கையெழுத்து வாங்கணுமே. வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோயில் தெரு மகராசன், அவன் அப்பா கையெழுத்தை அவனே போட்டு சார்வா கிட்ட மாட்டிக்கிட்டான். ஹெட்மாஸ்டர் அவனை ப்ரேயர்ல கூப்புட்டு அடிச்சாரு. ரொம்பப் பாவமா இருந்துச்சு.
ஏ பெண்ணே – 5
உன்னைப் போன்ற தற்சார்புடைய பெண்ணின் குரல் எதிரொலிக்க, பரந்த ஆகாசமும் விரிந்த பூமியும் தேவை. சிறிய, மதிப்பேதுமற்ற விஷயங்களைப் பொருட்படுத்தாதே. மனதைச் சங்கிலியிட்டு ஒடுக்கிக் கொள்பவர்களின் ஆகாயம், அவர்கள் வரைக்குமே விரிகிறது. அவர்களுடைய ஓட்டமும் அவர்களது வீடு வரைக்குந்தான். வீட்டுக் கணப்பருகிலேயே, சுடச்சுட, ரொட்டிகளைச் சுட்டு மலைபோல அடுக்குவதிலும், வீட்டை ஒட்டியே சிலந்தி வலை பின்னுவதிலுமேயே, அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. கேட்டுக் கொண்டு இருக்கிறாயா, அந்த மாதிரியான வாழ்க்கையிலும் பெரிதாக ஒன்றுமில்லை.
மிளகு அத்தியாயம் இருபத்தாறு
சென்னா பதிலுக்குக் காத்திராமல் சிட்டுக்குருவியாக ஓடிப் போகிறாள். வரதன் புன்முறுவலோடு அவள் வரக் காத்திருக்கிறான். ஐந்து நிமிடம் போனது. பத்து நிமிடம். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள். அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன. யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.
ஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு
என்னை ஏன் முட்டாளாக்கப் பார்க்கிறாய் பெண்ணே. காலையில் என் தலையணையின் கீழே பெப்பர்மிண்ட்களும் சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அவன் தான் இப்படியெல்லாம் யோசிப்பான். நோய்வாய்ப்படாத காலத்திலும் கூட, எனக்காக குளிர்சாதனப்பெட்டியில் சாக்லேட்டுகளை வைத்து விட்டுப் போவான். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்புவதால் உனக்கென்ன லாபம்? பெண்ணே, உன் சகோதரன் வெகுளி. தூய்மையான மனம் படைத்தவன். அவனை வீட்டை விட்டுப் போக விடாமல் செய்திருப்பார்கள். அவன் வெறுத்துப் போயிருப்பான். சல்லடையில் சலித்து கற்களைப் பொறுக்கி எறிவது போல, அவன் மனைவி வீட்டிலிருந்து கொண்டே, அவனைப் பற்றி குற்றங்குறை கூறிக் கொண்டிருந்திருப்பாள்
வாக்குமூலம் – அத்தியாயம் 6
சித்தப்பா வேல பார்த்தது ஶ்ரீவைகுண்டத்துல. இப்போ இதை திருவைகுண்டம்னு சொல்றாங்க. ‘ஶ்ரீ’, ‘ஸ’ இதெல்லாம் கூடாதுன்னு அரசியல் கட்சிக்காரங்க சொல்றாங்க. சமஸ்கிருத எழுத்துகள் வேண்டாம்ங்கிறது நல்ல விஷயம்தான். ஆனா, காலங்காலமா ஜனங்க சொல்லிக்கிட்டு இருக்கிற ஊர்ப் பேருகளை மாத்துறது என்ன ஞாயம்னு தெரியலை. பஸ்ஸை பேருந்துன்னு தமிழ்ப்படுத்தினாங்க. ஆனால் இந்த 2022-ல எத்தனை பேரு பேருந்துன்னு சொல்றாங்க?
வாக்குமூலம் – அத்தியாயம் 5
எனக்கு காவேரி அத்தையோட ஞாபகம்தான் வந்துச்சு. காவேரி அத்தை வீட்டு மாமா வெள்ளந்தாங்கிப் பிள்ளையார் கோவில் தெருவுல இன்னொரு குடும்பம் வச்சிருந்தாங்க. காவேரி அத்தை மூக்கும் முளியுமா நல்லாத்தான் இருப்பா. சமையல் எல்லாம் நல்லா பண்ணுவா. மாமாவுக்குத் தொண்டர் சன்னதியில் புரோக்கர் வேலை. வத்தல், வெங்காயம், சிமெண்ட் இன்னதுன்னு இல்ல. எல்லாத்தையும் லாரி பிடிச்சி வெளியூருக்கு அனுப்புவா மாமா. அதுல கமிஷன் கெடைக்கும். அத்தை – மாமாவுக்கு ஆண் ஒண்ணு பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பிள்ளைக. காவேரி அத்தையைக் குத்தம் சொல்ல முடியாது. கட்டாத்தான் குடும்பம் நடத்துனா.
மிளகு அத்தியாயம் இருபத்தைந்து
விஜயநகரம் என்றாலே விருந்து, பண்டிகை, இனிப்புகள், சிற்றுண்டிகள் என்று ஒரே வட்டத்திற்குள் மறுபடி மறுபடி போய் இணைந்து கொள்கிறதை பரமன் கவனித்தார். அவருடைய மனமும் உடலும் பல நூறாண்டுகள் முன்னால் போயிருக்க, சூழல் அவர் இதுவரை அனுபவித்தே இராத காலத்தில் தொங்கிக் கிடக்கிறது. இந்தச் சூழலுக்கு அவர் எப்படியோ வந்திருக்கிறார். தான் இரண்டு பேராக வாழ்கிறதாக மனம் சொல்ல, புத்தி ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
உணவு, உடை, உறையுள், … – 3
. நடுவில் புல்தரையில் இருந்து பெண்களின் சிரிப்பொலியும் பேச்சுக்குரலும். ஒலிகள் இல்லாத வர்த்தக லோகத்தில் இருந்து பேசும் உலகில் நுழைந்தாள். பெண்களின் கலகல சத்தம் வந்த திசையில் இலைகளின் ஊடே பார்வையை ஓட்டினாள். மஞ்சள் விரிப்புக்குமேல் ஒரு செவ்வக பிரம்புக்கூடை அதைச்சுற்றி மூன்று பெண்கள். ஹிந்தி வார்த்தைகள் என்றாலும் பேச்சு தெளிவாகக் காதில் விழவில்லை. இப்படியொரு காட்சியை அங்கே அதுவரை பார்த்தது இல்லை. கூடையில் என்ன இருக்கும்? அவர்கள் என்ன பேசுகிறார்கள்? பக்கத்தில் போய்ப் பார்ப்பது அநாகரிகம் என ஆவலைக் கட்டுப்படுத்திக்கொண்டாள்.
மிளகு – அத்தியாயம் இருபத்துநான்கு
நான்கு நாள் மழிக்காத தாடியை தெருக்கோடி நாவிதர் கத்தி வைத்து மழித்து, காசு வேண்டாம் என்றது. சோப் பூசிக் குளிக்காமல் வெறும் நீரில் அரப்புப்பொடி கலந்து தேய்த்துக் கொண்டது. விரித்த கைகள் போல் அகலம் அதிகமான தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்து எடுத்து மேலே பொழிந்து கொண்டு குளித்தது. மேலே துர்நாற்றம் இல்லாமல் சன்னமான பூ வாடை. மறக்க முடியாதது எல்லாம். இந்த சவரமும் குளியலும் பிடித்துப் போனது பரமனுக்கு. சோப்பின் முரமுரப்பும் சுத்தமான மேல் தோல் தரும் புத்துணர்ச்சியும் அரப்புப் பொடி தருவதில்லை தான். சோப்புக்கு எங்கே போக இந்த பழைய பாணி ஊரில்?
ஏ பெண்ணே
என் வீட்டு வாயிற் கதவின் சங்கிலிகள் திறந்து விட்டன. கதவைத் தட்டும் சத்தம் கேட்ப தற்கு முன்பாகவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும்! ஆனால், நான்தான் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறேன் பெண்ணே! வியாதி வெக்கை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்! உடலையும் மனதையும், குயவன் சக்கரத்தை சுழற்றி மண்பானையை வனைந்து எடுப்பதைப்போல சுழற்றி விடும். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான உறவை சுக்குநூறாக உடைத்து போடும். ஏன், உடலுக்கே உரித்தான இயற்கையான மணத்தைக் கூட அவை விட்டு வைப்பதில்லை. மருந்துகள் ரத்தத்தில் கலக்கும்போது, உடல் காய்ந்த சருகைப் போல இளைத்து விடுகிறது. என் தலைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை.
வாக்குமூலம் – அத்தியாயம் 3
ஊர் என்றால் வீடுகளும், கட்டிடங்களுமா ஊரு? இல்லை தெருக்களும், ரோடுகளும் ஊரா? இவங்க என்னென்னவோ புஸ்தகங்களைப் படிச்சுப் போட்டு என்னென்னவோ பேசுறாங்க. அவுகளுக்கும் பொஸ்தகம், சினிமா, நாடகம், கதை இதுதான் உலகம்னு ஆயிப் போச்சு. “வேணும்னா நீயும் சினிமாவுக்குப் போயிட்டு வா”ங்கிறாங்க. டி.வி.யில் போடாத படமா? டி.வி.யில் போடாத நாடகமா? ஒண்ணும் மனசுல ஒட்ட மாட்டேங்குது.
மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று
மருது முசாபரை அனுப்பி வைத்து விட்டு, தில்லியில் பகவதிக்கு ஃபோன் செய்ய, அதிகாலைக்கும் முந்திய புலரிப் பொழுதான மூன்றரை மணி தில்லியில். அவளும் அவள் அம்மா வசந்தியும் ராத்திரி சாப்பிடக் கூடப் பிடிக்காமல் காப்பி மட்டும் யாரோ போட்டுத்தரக் குடித்து தில்லியின் அதிகார வம்சத்தை அசைத்து உதவி கேட்டபடி இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. வீடே நண்பர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் வந்து வந்து போய்க்கொண்டிருக்க சந்தடி மிகுந்து இருந்ததாக பகவதி சொன்னாள்.
வாக்குமூலம் – அத்தியாயம் 2- அவன்
அவளுக்கு ஊரோடயே இருக்கணும், நல்லது பொல்லாததுக்கு சொந்த ஜனங்களோட இருக்கணும்னு ஆசை. ஊர்தான் இருக்க விடலியே? பொழைக்க வழி இல்லாமே விரட்டில்லா விட்டுடுத்து. அப்பிடியே வேலை வெட்டி ஏதாவது கெடச்சாலும் படிச்ச படிப்புக்கு கவர்னர் உத்தியோகமா கெடைச்சிரும்?
மிளகு அத்தியாயம் இருபத்திரண்டு
அவர் விமானம் ஏறும்போது கல்பா, மருது இன்னும் மருதுவின் ஆப்பிரிக்க நண்பர்கள், தோழிகள் என்று ஒரு கூட்டமே ஹீத்ரோவ் விமான நிலையத்துக்கு அவரை வழியனுப்ப வந்தது. “போய்த்தான் ஆகணுமா, அதுவும் இந்த சங்கடமான நேரத்திலே?” என்று கல்பா கேட்டாலும், அவளுடைய அப்பா திலீப் ராவ்ஜிக்கும், தம்பி அனந்தனுக்கும் சிறுசிறு பரிசுகள் அடுத்த வாரம் வரும் புத்தாண்டுக்காக பிஷாரடி வைத்தியர் மூலம் தான் அனுப்பி வைக்கிறாள்.
வாக்குமூலம் – அத்தியாயம் 1
நாகலிங்கப் பூவின் வாசனை இத்தனை நெருக்கடி, களேபரத்திலும் மூக்கைத் துளைக்கிறது. திருநெல்வேலியில் காந்திமதி அத்தை இருக்கிற வளவில், பின்னால் வாய்க்காலுக்குப் போகிற முடுக்கில் ஒரு உயரமான நாகலிங்க மரம் நிற்கிறது. பூக்கிற காலத்தில் பூத்துத் தள்ளிவிடும். இளஞ்சிவப்பும் வெள்ளையுமாய் உதிர்ந்து கிடக்கும் பூவை, பூவென்றுகூடப் பாராமல்தான் எல்லோரும் மிதித்துக்கொண்டு போவார்கள். தை மாதம் வாசலில் கோலம் போட்டு சாணிப் பிள்ளையார் பிடித்து பூசணிப் பூவையும், பீர்க்கம் பூக்களையும் அழகாகச் சொருகி வைத்திருந்தால், உச்சியில் வெயில் ஏறுகிறதற்குள் ஏதாவதொரு சாணிப் பிள்ளையாரைப் பூவுடன் சேர்த்து யாராவது மிதித்துவிட்டுத்தான் போகிறார்கள். என்ன செய்ய முடியும்? இதற்கெல்லாம் என்ன செய்ய முடிந்தது?
மிளகு அத்தியாயம் இருபத்தொன்று
பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய உடனடிப் பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே, எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.
மிளகு – அத்தியாயம் இருபது
பிராணிகளின் வகுப்பு என்ற எகானமி கிளாஸ் தான் அரசாங்க அதிகாரிகளுக்கு அனுமதிக்கப்பட்டது. இலவசமாக வந்தால் எக்சிக்யூட்டிவ் கிளாஸ் அதே செலவுக்கு கிடைத்தால் சர்க்காருக்கு ஆட்சேபணை ஏதுமில்லை. இப்போதோ சங்கரன் கேட்காமலேயே மேலேற்றப் பட்டிருக்கிறார்.அவர் உயிர் இருந்தாலும் போனாலும் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை. முன்னாள் அரசுத்துறை காரியதரிசி, மற்றும் அரசு ஆலோசகர். இது போதாது அதிகபட்ச பாதுகாப்பு தர.
மிளகு அத்தியாயம் பத்தொன்பது
நானும் அகல்யாவும் மட்டும் இருந்தவரைக்கும் பம்பாய் பாண்டுப் சால் குடித்தனத்தைத்தான் நடத்திட்டு இருந்தோம். அதுனாலே பெரும்பாலும் மராட்டி தான் பேசினது. கூடவே பம்பாய் இந்தியும். குழந்தைகள் ஏற்பட்டு, ஸ்கூல் போக ஆரம்பிச்சதிலே இருந்து அக்கம் பக்கத்திலும் ஸ்கூல்லேயும் பேசிப் பேசி பசங்களுக்கு வாயிலே மலையாளம் சர்வசாதாரணமாக வந்துடுத்து. நானும் அகல்யாவும் கொஞ்சம் சிரமப்பட்டு ஒரு வழியா மலையாளி ஆகிட்டோம். இன்னும் தமிழ் உச்சரிப்பிலே தான் மலையாளம்.
மிளகு அத்தியாயம் பதினெட்டு
அப்பக்காவும் சென்னாவும் கூட நல்ல நண்பர்கள் ஆனதால் சென்னாவுக்கும் அந்தத் தம்பதிகளுக்கும் இடையில் மிக நல்ல உறவு உலவியது. இப்போது வீராவும் அப்பக்காவும் பிரிந்து இருந்தாலும் சென்னா மறுபடி அவர்கள் ஒன்று சேர இன்னும் முயற்சி செய்கிறாள். மிளகை சென்னாவும் வெல்லத்தையும் சாயம் தேய்த்த கைத்தறித் துணியையும் அப்பக்காவும் இந்த வடக்கு கன்னடப் பிரதேசத்திலிருந்து ஏற்றுமதி செய்வதை ஒருங்கிணைத்து பிரம்மாண்டமாக வியாபாரம் வளர்த்தால் விஜயநகரப் பேரரசு கூட பிரமித்துப் போய் பார்க்கலாமே தவிர வேறேதுவும் செய்ய முடியாது.
மிளகு – அத்தியாயம் பதினேழு
உங்களில் எத்தனை பெயர் உலகைத் துறக்க, உணவுச் சுவை துறக்க, உறவுச் சுமை துறக்க, ஆடை துறக்க மனம் ஒப்புகிறீர்கள்? யாரும் மாட்டீர்கள். மனம் பக்குவப்படும் வரை”.
மிளகு -அத்தியாயம் பதினாறு
தாங்கனீகாவிலே முதல் நாள் ஆபீசுக்குப் போனபோது கட்டை ரெண்டையும் வாசல்லே விட்டுட்டுப் போகணும்னுட்டாங்க. போயிருப்பேன். நாலாவது மாடி. லிப்ட் கிடையாது. உள்ளூர் மகா ஜனங்கள் மாடிப்படி ஏடி இறங்கறது கவர்மெண்ட் கூட தொடர்பு கொள்றதிலே ஒரு அம்சம்னோ என்னமோ, சளைக்காமல் காகிதங்களைத் தூக்கிண்டு ஒரு நாளைக்கு எத்தனை தடவை வேணும்னாலும் படி ஏறுவா.
மிளகு: அத்தியாயம் பதினைந்து
சமணர்கள் ஒரு பூச்சி புழுவுக்குக்கூடத் துன்பம் உண்டாவதைப் பார்க்கவும் சகியார். இரவில் ஊரும் ஜந்துக்கள், பறக்கும் பூச்சிகள் நிறைய இருக்கும், ஆகாரம் பண்ண வாயைத் திறந்தால் உள்ளே போய் இறந்துவிடக் கூடும் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.
மிளகு அத்தியாயம் பதினான்கு
“எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்”.
அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே
முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார்.
“லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ்”.