மிளகு  அத்தியாயம் ஐம்பத்தெட்டு

அது தவறான தகவல் அம்மா, முற்றிலும் தவறானது என்று ரஞ்சனாவிடம் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார் பெத்ரோ துரை. ரஞ்சனா அழ ஆரம்பித்து அழுகையூடே சொன்னாள் – எப்படியோ, நான் சேவை சாதிக்க வேண்டும் என்றால், அப்படி இருந்தால் தான் மகாராணிக்கு ஆபத்து ஏதும் இருந்தால் நீங்கும், என்னுடைய உடல் உங்களுக்கு கிட்டினால் தான் இந்த ஜெரஸூப்பா நிலப் பிரதேசத்துக்கு வரும் இடர் தீருமென்றால், என்னை எடுத்துக் கொள்ளுங்கள்.

 மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு

அடுத்து ஹொன்னாவரில் இந்த சாக்கடை அடைப்பை சீர்செய்ய இருபதாயிரம் வராகன் செலவுக்கு வழி செய்வது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்ற பிரச்சனைகள் நீ சொன்னவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தடுத்து சரி செய்ய முயல்கிறேன். ஆனால், ஒன்று நீ கவனிக்க வேண்டும். 

உபநதிகள் – பதினேழு

This entry is part 17 of 17 in the series உபநதிகள்

கடைசியாக, முந்தைய தினம் அவளுடைய ட்யுக் ப்ராஜெக்ட் அறிக்கைக்கு எதிரான ராஜ் வாரனின் அபிப்ராயம். ‘இலக்கண ஆங்கிலத்தைத் தவிர வேறொரு திறமையும் இல்லாத, ‘டாம்ப்ராம்’ மானஸா’ என்ற தாக்குதலைப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆக்ஸ்ஃபோர்டில் இதழியல் உயர்பட்டம் வாங்கிய ஒருவனுக்கு பல தகவல்ளைச் சேர்த்து கோர்வையாக எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை, அதன் பொருள் பிடிக்காவிட்டாலும், ரசிக்கத் தெரியாதா? 

அதிரியன் நினைவுகள் – 24

This entry is part 23 of 25 in the series அதிரியன் நினைவுகள்

இக்காட்சியை குறைத்து மதிப்பிடாமலிருக்கக் கடுமையாகப் போராடினேன்.  இன்றைக்கும்  எண்ணிப் பார்க்கிறபோது அந்நினைவு எத்தனை வலிமையானது என்பதை உணர்கிறேன். பெரும்பாலான மனிதர்களைக் காட்டிலும் மிகவும்  நேர்மையான மனிதன் நான், எனவே  இம் மகிழ்ச்சிக்கான ரகசிய காரணங்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறேன்: மனதின் செயல்பாடுகள் மற்றும் ஒழுக்கங்களுக்கு மிகவும் ஏற்ற இந்த அமைதி, அன்பின் மிக அழகான விளைவுகளில் ஒன்றாக எனக்குத் தோன்றுகிறது

தெய்வநல்லூர் கதைகள் 11

This entry is part 11 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

அந்தப் புள்ளையும் பாவம்தானல. அவளும் நல்லாப் படிக்க பஸ்ட் ரேங்க்கு புள்ளன்னாலும் பீத்தகாரியா இல்லாம சேக்காளியாத்தான இருந்தா. “ சிவாஜி முதன்முறையாக ஒரு “கேர்ள்க்கு” நிகழ்ந்ததைப் பொருட்படுத்தி வருந்தியது எனக்கு வியப்பாக இருந்தது. இனி நாமும் பிரேம், சிவாஜி போல “கேர்ள்ஸ்”காக யோசித்து வருத்தப்பட வேண்டுமென்று பின்னாட்களில் நாங்கள் பலரும் நினைத்துக் கொண்டதற்கு இச்செயலே அடிப்படை. 

அதிரியன் நினைவுகள் -23

நட்பின் அடிப்படையில் அமைத்துக்கொண்ட எனது சந்திப்புகளில் விலைமதிக்கமுடியாததென்று ஒன்றிருக்குமானால் அது நிகோமீடியாவைச் சேர்ந்த அர்ரியன்(Arrian) என்பவருடன் ஏற்பட்ட சந்திப்பு. சுமார் பன்னிரண்டு வருடங்கள் என்னைக்காட்டிலும் வயதில் சிறியவர், இருந்தும் அந்த இளம் வயதிலேயே அரசியல், இராணுவம் இரண்டுதுறையிலும் சாதித்து தொடர்ந்து தமது கௌவுரவத்தை உயர்த்திக்கொள்ளும்வகையில் பணியாற்றி வந்தார்

மிளகு -அத்தியாயம் ஐம்பத்திநான்கு 

ஜெரஸூப்பாவில் மகாராணி மற்றும் ராஜ குடும்பம் தங்கறது அபூர்வம். மிர்ஜான் கோட்டையில் தான் அவங்க நிரந்தரமான இருப்பு. பிரதானி, அதிகாரிகளும் இங்கே வீடு வச்சிருக்காங்க. ஆனால், ஹொன்னவர்லே இருக்கறதுதான் அதிகம். இன்னொண்ணு மகாராணி மிர்ஜான் கோட்டையில் இருக்கறதால், ஹொன்னாவர்லே இருந்து அது கூப்பிடு தூரம் என்கிறதால் ராணியம்மா அவசரமாகக் கூப்பிட்டு விட்டா உடனே வந்துடலாம். ஆக ஜெர்ஸோப்பாவிலே ஒரு கட்டாயத்தின் பேர்லே பலரும் இருப்பாங்க.

அதிரியன் நினைவுகள் -22

This entry is part 22 of 25 in the series அதிரியன் நினைவுகள்

அந்த முகம் அழகானது, அதில் எவ்வித ஒளிவுமறைவுமில்லை, இருந்தும் அதைப் பற்றி நான் இதுவரை எதுவும் சொல்லாததற்கு, முற்றிலுமாக தன்னை  அவனிடம் இழந்திருந்த மனிதனொருவனின் தயக்கமாக இதனை பார்க்கக்கூடாது. எவ்வளவு தீவிரமாக தேடினாலும், நாம் தேடுகின்ற முகங்கள் நமக்குக் கிடைப்பதில்லை, தப்பிவிடுகின்றன, அப்படித் தேடி  அலுத்து கிடைத்த கணமொன்றில் கண்டதே அவனுடைய முகம்: கருத்தடர்ந்த தலைமுடியின் கீழ் சாய்வாக ஒருதலை, அதில் கண்ணிமைகளுக்கு இசைவாக நீண்டும், வளைந்துமிருக்கும் விழிகள், இளம் முகமோ அகன்று, அவ்விழிகளுக்கென்று அமைந்ததுபோலவும் இருக்கும்

உபநதிகள் – 15

This entry is part 15 of 17 in the series உபநதிகள்

பெர்னியின் திருமண விருப்பத்தை குடும்பத்தில் மற்றவர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாதது மானஸாவுக்கு ஆச்சரியமாக இல்லை. அவள் அப்பாவும் அம்மாவும் மறுத்து எதுவும் சொல்லாவிட்டாலும் அவர்கள் வார்த்தைகளின் தொனியில், ‘இது ஒரு தாற்காலிகக் கவர்ச்சி, ஆறு மாதம் நீடித்தால் பார்த்துக்கொள்ளலாம்.’ அவர்களின் சந்தேகம் எதிர்பார்க்கக் கூடியது தான். பதின் பருவத்திலேயே இன்னும் ஒரு ஆண்டு இருக்கும்போது மானஸாவும் பெர்னியும் கல்யாணத்துக்குப் பதில் தொழில் பாதையை யோசிக்க வேண்டும்.

தெய்வநல்லூர் கதைகள் 10

This entry is part 10 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

முத்து காமிக்ஸ் தவிர ராணி காமிக்ஸ், பூந்தளிர் ஆகியவையும் எங்களால் வாசிக்கப்பட்டன. நாடாக்கமார் தெருவில் இருக்கும் காமராஜ் வீட்டில் பூந்தளிர் வாங்குவதாக நியூஸ் சந்திரன் சொன்ன அன்று மாலையே என்னையும், சிவாஜியையும் அழைத்துக் கொண்டு பிரேம் காமராஜ் வீட்டுக்கு சென்றார். நாங்கள் வாய் பிளந்து நிற்கும் விதத்தில் காமராஜ் அப்பாவும், உள்ளூர் கூட்டுறவு சங்க செயலருமான தங்கப்பாண்டியன் அவர்களிடம் நேரே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டு தனக்கு பூந்தளிர் படிக்கக் கொடுக்குமாறும் தான் பத்திரமாக மூன்று நாட்களில் திருப்பித் தருவதாகவும், பதிலுக்கு காமராஜ் வாசிக்க தன்னிடமிருக்கும் காமிக்ஸுகளையும், அணில் அண்ணாவின் வீரப்பிரதாபன் கதைப் புத்தகங்களையும் படிக்கத் தருவதாகவும் சொன்னார்.

அதிரியன் நினைவுகள் -21

This entry is part 21 of 25 in the series அதிரியன் நினைவுகள்

எனது முன்னிரவு நேரங்களை உடுக்களின் வடிவமாறத்தின் மீதான மனிதப்பார்வையின் போக்கிற்கு அடிக்கடி செலவிட்டபோதிலும்,  வானியல்கணிதம் மற்றும் எரிநட்சத்திர பேருடல்கள் தரும் தெளிவற்ற ஆருடங்களில் எனது ஆர்வத்தைக் கூடுதலாக உணர்ந்தேன். ஆனாலிந்த கிரகங்களின் தன்மையிலமைந்த மனிதர் வாழ்க்கையின் இவ்விநோதமான மாற்றுப்பாதை  பிரச்சினை,  எனது உறக்கமற்ற நேரத்தை அடிக்கடி ஆக்கிரமித்திருந்ததால்; வானியல் கணிதத்திலும், எந்த எரிநட்சத்திரங்களின் பேருடல்கள் தெளிவற்ற ஆரூடங்களை முன்வைத்தனவோ

தெய்வநல்லூர் கதைகள் – 9

This entry is part 9 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

இருவரும் பேசிமுடித்ததும் சில முடிவுகள் உடனே அமுல்படுத்தப்பட்டன. வகுப்பினைக் கவனிக்கும் பொறுப்பு உடனடியாக ஆசிய ஜோதி அணியினருக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது. தெண்டில் அணியினர் அனைவரும் அவரவர் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இனி குறிப்பேடுகளை தேதி வாரியாக  சரி பார்த்து ஆசிரியர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூடுதல் தனிப் பொறுப்பு பிரேமுக்கு ஒதுக்கப்பட்டது. தவறு செய்த மூவருக்கும் அன்று  மாலை பள்ளி முடியும்வரை வகுப்புக்கு வெளியே படிக்கட்டில் நின்று கொண்டேயிருக்கும்படியாக தண்டனை அளிக்கப்பட்டது.      

உபநதிகள் – பதின்மூன்று

This entry is part 13 of 17 in the series உபநதிகள்

என் எலைஸா பாட்டி ஆதிகால வரலாற்றில் கரைகண்டவள். டைபர் நதியில் மிதந்து வந்த இரண்டு அபலைக் குழந்தைகளை ஒரு பெண் ஓநாய் காப்பாற்றி வளர்த்த கதையையும், அதைத் தொடர்ந்த சம்பிரதாய வழக்கங்களையும் அவள் எழுதிய ஒரு கட்டுரையில் படித்தேன். நிஜத்திலும் ஓநாய்கள் ஒன்றுக்கொன்று உதவிசெய்து குட்டிகளுக்கும் முதிர்ந்த பிராணிகளுக்கும் ஆதரவு தருவதையும், ஆணும் பெண்ணும் வாழ்நாள் முழுக்கத் துணையாக இருப்பதையும் அவள் விவரித்து இருக்கிறாள். ஓநாய்களை நம் காதல் வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக ஏற்க வேண்டும் என்ற அவள் அறிவுரையைப் பின்பற்றப் போகிறேன்

மிளகு அத்தியாயம் ஐம்பத்தொன்று

மிட்டாயும், காதில் அடைக்கப் பஞ்சும், விமானம் ரன்வேயில் ஓடி வந்து உயரப் பறக்கும் முன் உபசரிப்பாகக் கொடுத்துக்கொண்டு வந்த ஹோஸ்டஸ் சங்கரன் பக்கம் வந்ததும் ”டாஃபி சார்” என்று கேட்டு பதிலை எதிர்பார்க்காமல் நாலைந்து மிட்டாய்களை அவர் கையில் கொடுத்து நகர்ந்தாள். குட்டிக் குழந்தைகளுக்கு மிட்டாய் உபசாரம் செய்வதுபோல் இருந்தது அது. சங்கரனும் சின்னப் பையனாக அந்த மிட்டாய்களை சட்டைப் பாக்கெட்டில் பத்திரமாக வைத்துக் கொண்டார். 

உபநதிகள் – பன்னிரெண்டு

This entry is part 12 of 17 in the series உபநதிகள்

“நம் குடியிருப்பையே எடுத்துக்கொள்வோம். குப்பைகளை வாரி தெருவை சுத்தம் செய்ய ஒரு ‘மாம்-அன்(ட்)-பாப்’ குழுவே போதும், பெரிய கார்பொரேஷன் அவசியம் இல்லை. கலாவதிக்காக நீ கற்பனை செய்த மென்டல்சன் ஃபார்ம்ஸ் போல பத்து ஏக்கர் சிறு பண்ணைகள் பலரகப் பயிர்களைப் பயிரிட்டு பெரிய தொழிற்சாலை பண்ணைகளைவிட அதிகம் விளைவிக்க முடியும். நோய் தடுப்பு, வெட்டுக்காயங்களுக்குக் கட்டுகள் போன்ற, பல அவசியமான சேவைகளைச் சிறிய அளவில் செய்தால் மருத்துவ செலவைக் குறைக்கலாம்.” 

அதிரியன் நினைவுகள் -19

This entry is part 19 of 25 in the series அதிரியன் நினைவுகள்

அளவிற்பெரிய இச்சிற்பங்கள் ஒரு முகத்தை மிக அருகில் சென்று பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும்.  நீள அகலத்தில்  கூடுதலாகவும்; தனித்த தன்மையுடனும்; கொடுங்கனவில் வருகிற காட்சிகளாகவும், தோற்றங்களாகவும்; உறக்கம் கலைந்தபின்னும் நினைவில் நிற்கும். வடிக்கின்ற உருத் தோற்றங்களில் அப்பழுக்கற்ற பரிபூரணத்தை வேண்டினேன்; சுருங்கச் சொல்வதெனில்,  இருபது வயதில் அகால மரணமடைந்த ஒருவனை அவனுக்கு வேண்டியவர்கள் எந்த அளவில் நேசிப்பார்களோ அந்த அளவில் கடவுளுக்கு நிகரான பரிபூரணம்

அதிரியன் நினைவுகள் -18

This entry is part 18 of 25 in the series அதிரியன் நினைவுகள்

பலனாக, புத்தம்புது மனிதனாக, பிரம்மச்சாரியாக, ஒரு மிகத்தீவிர பிரம்மச்சர்ய உல்லிஸ்(Ulysse)1 ஆக, குழந்தைப்பேறின்றி, மூதாதையரென்று எவருமின்றி, எனக்குள் ஒர் இத்தாக்கியனாக(Ithaque) இருப்பதன்றி வேறு எதையுமே விரும்பாமல் இருப்பதன் நன்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அடுத்து, எந்தவொரு ஊரையும் முழுமையாக நான் சொந்தம் கொண்டாடியதுண்டா என்றால், இல்லை. அத்தகைய உணர்வுக்கு நான் என்றுமே ஆளானதில்லை

மிளகு  அத்தியாயம்  ஐம்பது

ராத்திரி நீங்களும் நானும் வேறு எந்த முக்கியப் பணியும் இல்லாமல் சந்திப்பை வேண்டும் நேரம் வரைத் தொடரலாம். மதுரையில் இருபத்துநாலு மணி நேரமும் ஊர் விழித்திருப்பதும் ஜனங்கள் விழித்திருப்பதும் இயல்பு. சாயந்திரம் ஆறு மணிக்குக் கல்யாணம் நிச்சயம் செய்து, ராத்திரிஒன்பதுக்கு நகைக்கடையில் நகைகளும், ராத்திரி பத்து மணிக்கு கல்யாணப் புடவை, வேட்டி என எல்லாம் வாங்கி, நள்ளிரவுக்கு பழம், தேங்காய் என்று கல்யாணத்துக்கு வருகிறவர்களுக்கு அளிக்க வாங்கி, இனிப்பும், வேறு பலகாரங்களும் வாங்கி காலை ஆறு மணிக்குக் கோவில் பிரகாரத்தில் தாலி கட்டிக் கல்யாணம் வைக்க அனுமதி பெற்று, ஆறரை மணிக்கு மங்கள இசை ஏற்பாடு செய்து காலை ஏழு மணிக்குக் கல்யாணம் நடத்தி விடலாம்

மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது 

போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.

உபநதிகள் – அத்தியாயம்: பத்து

This entry is part 10 of 17 in the series உபநதிகள்

சற்றுத்தள்ளி கோடிட்ட இடத்தில் கலாவதி காரை நிறுத்துகிறாள். இறங்கி மேற்கு வானத்தின் கருமையைப் பார்த்து அவள் முகத்தில் கவலைக் கோடுகள். மனதைத் தேற்றிக்கொண்டு காரில் இருந்து பைகளை எடுத்து நடக்கிறாள். புல்வெளியில் ஏற்கனவே சில கூடாரங்கள் எழுந்து நிற்கின்றன. இன்னும் சில தரையில் உட்கார்ந்து ஓய்வு எடுக்கின்றன. விவசாயிகள் சந்தையில் என்ன வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்க கலாவதி ஒரு சுற்று நடக்கிறாள்.

தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.

அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 25 in the series அதிரியன் நினைவுகள்

நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது

மிளகு  அத்தியாயம்   நாற்பத்தெட்டு   

மறுபடி தண்ணீர்க் குளியல். அடுத்து புது மஞ்சளை விழுதாக அரைத்துப் பூசி மஞ்சள் அபிஷேகம். சுத்தமான நீரால் திருமஞ்சனம் செய்வித்தல் அடுத்தது. ஸ்ரீகோவிலும் பிரகாரமும் சந்தன வாசத்தில் மூழ்கி இருக்க, களப அபிஷேகம் அடுத்து, தொடர்ந்து தூய்மையான தண்ணீரால் மஞ்சனம். அடுத்து மல்லிகை, ஜவந்தி, முல்லை, கனகாம்பரம், ரோஜா மலர்கள் கூடை கூடையாக உயர்த்திச் சொரிந்து ஸ்ரீகோவிலையே பூவிதழ்களாலும் நல்ல மலர் மணத்தாலும் மூழ்கியிருக்கச் செய்து புஷ்பாபிஷேகம். 

உபநதிகள் – 8

This entry is part 8 of 17 in the series உபநதிகள்

தற்போதைய சமுதாய அமைப்பின் உருவாக்கலில் அவள் தாய் கங்காவைப்போல கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒருசிலர் அளவுக்குமேல் பணம் சேர்க்கிறார்களா? அந்த அளவு என்ன? அதை நிர்ணயிப்பது யார்? இயந்திர சமுதாயத்தினால் தான் எங்கோ உட்கார்ந்து யூ.எஸ்.ஸைக் குறைசொல்லும் அவள் கட்டுரைகள் பலருடைய பார்வைக்கு எட்டுகின்றன. அந்த அமைப்பை ஒரே நாளில் இடித்துவிட முடியுமா? அப்படி நிஜமாகவே நடந்தால் அது தன்னைப் பாதிக்காது என்கிற தைரியத்தில் எழுதியிருக்கிறாள். யூ.எஸ்.ஸில் பொருளாதார வளர்ச்சி வேகம் இழந்தால் அதன் பாதிப்பு இந்தியாவிலும் இருக்கும். பி.பி.ஏ. பட்டம் வாங்கியவளுக்கு இதுகூடவா தெரியவில்லை?

மிளகு – அத்தியாயம்  நாற்பத்தேழு 

 அரசவையில் ஸாமரினுக்குத் தொட்டு விடும் தூரத்தில் முப்புரிநூல் தரித்த முதிய ஆலோசகர் நின்றபடி இருக்கிறார். பெத்ரோ போர்த்துகீஸ் மொழியில் சொல்வதை மலையாளத்தில் மொழிபெயர்ப்பதும், ஸாமுரின் மலையாளத்தில் உரைப்பதை போர்த்துகீஸ் மொழிக்கு மாற்றுவதும் ஆலோசகரின் பணிபோல. வெகுவேகமாக மொழியாக்குவதால் வார்த்தைக்கு வார்த்தை சரிதானா என்று சோதிக்க முடியவில்லை. சென்னபைரதேவி அரசவையில் பிரதானி நஞ்சுண்டையா நிதானமாக எல்லோருக்கும் எல்லாம் விளங்கும்படி மொழிபெயர்ப்பார். இந்த ஆலோசகர் எதற்கோ ஓட்டஓட்டமாக ஓடுகிறார். அப்புறம் ஒன்று, இந்த மலையாள பூமியில், எல்லோரும், எப்போதும் வேகமாகத்தான் பேசுகிறார்கள்.

தெய்வநல்லூர் கதைகள்- 3

This entry is part 3 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

ஐந்தாம் வகுப்பு முடிந்ததும் நாங்கள் ஆறாம் வகுப்புக்கு நேரு நடுநிலைப்பள்ளிக்கு மாறினோம். துவக்கப் பள்ளியில் படித்ததில் எங்களுடன் இருந்தவர்கள் மூன்று பேர்தான். சிலர் நேரடியாக மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்குப் போய்விட்டனர். ஆறாம் வகுப்பு போனதும் நாங்கள் எங்கள் நட்பு வட்டத்தை விரிவாக்கும் முடிவினை ஒத்த மனதுடன் ஒருமிக்க எடுத்து புதிய உறுப்பினர்களை இணைத்துக் கொண்டோம். அவர்களை இணைக்கையிலேயே நாங்கள் எங்கள் அனுபவ மூப்பினை அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்த மாட்டோம் என்றும் இணைப்பு உறுதிமொழியாகக் கொடுத்திருந்தோம்

மிளகு அத்தியாயம் நாற்பத்தைந்து

பரமனிடம் பகை பாராட்டி உற்று நோக்கி பாம்பு மாதிரி சீறுகிறாள் – “உமக்கு இங்கிதமே இல்லை. குழந்தையை கூட்டிக்கொண்டு பவுர்ணமி வாவுதினத்தைக் கொண்டாட போயிட்டிருக்கோம். உமக்கு உம்ம பைத்தியக்காரத்தனம் தான் எப்பவும் புத்தி முழுக்க. நீர் பம்பாய், விமானம், அது இது என்று பிரலாபித்திருக்க கூடவே அதை எல்லாம் நடத்தித் தர சீன மந்திரவாதி, அரபு மந்திரவாதின்னு கூட்டிவரச் சொல்லி என் பிராணனை வாங்கறது. நீர் இந்த ஒப்பந்தத்திலே இருக்க வேணாம். இறங்கிப் போம். அருகா, அருகா, சாரட்டை நிறுத்து ஓ அருகா”

மார்க் தெரு கொலைகள் -2

This entry is part 2 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள்

அதிரியன் நினைவுகள் – 13

This entry is part 13 of 25 in the series அதிரியன் நினைவுகள்

பேரரசர் இறுதியாக ஹத்ராவின்(Hatra) முற்றுகையை நிறுத்திக்கொண்டு, யூப்ரடீஸ் நதியைத் திரும்பக் கடக்க முடிவு செய்தார்,  அது நிறைவேறாமலேயே போனது. ஏற்கனவே சுட்டெரிக்கும் வெப்பம், இதனுடன் பார்த்தீனிய வில்லாளர்களின் உபத்திரவமும் சேர்ந்துகொள்ள அவர்கள் திரும்பிய  பயணம் பெரும்சோதனையாக இருந்துள்ளது. ஒரு சுட்டெரிக்கும் மே மாத மாலையில், நான் நகரத்தின் நுழை வாயில்களுக்கு வெளியே, ஓரோண்டஸ்  நதிக்ரையில் நலிவுற்ற நிலையில் பேரரசர், அட்டியானுஸ்,  மற்றும் அரசகுடும்ப பெண்கள் என்கிற  சிறு கூட்டம்  காய்ச்சல், பதற்றம், சோர்வு ஆகியவற்றால் பாதித்திருக்க கண்டேன். மன்னர் திராயான் அரண்மனைக்குத் தான்  குதிரையில் திரும்பவேண்டுமென தெரிவித்தபோதும், அதற்குரிய உடல்நிலையில் அவரில்லை

உபநதிகள் – 6

This entry is part 6 of 17 in the series உபநதிகள்

சிறுகதை முதல் வரியிலேயே சூடுபிடிக்கணும், முக்கால்வாசி இருக்கும்போதே முடிஞ்சிடணும். நீ எழுதினது முழுவதையும் சேர்த்து வச்சுக்கோ! எதிர்காலத்தில உதவும். ஆனா, போட்டிக்கு அனுப்பற கதை சனிக்கிழமை காலையில தொடங்கி நோம் சோம்ஸ்க்கியை ஆதவி மட்டம் தட்டறதோட முடிந்துவிடும். அதாவது கதையின் கால நீளம் இருபத்தியாறு மணி

மார்க் தெரு கொலைகள் – 1

This entry is part 1 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

பகுத்தாயும் திறன் (analytical ability) இருக்குமிடமும், அதன் அங்கம் பற்றியும் அத்தனைத் தெளிவாக அறிய முடியாவிடினும், மண்டை ஓடு மற்றும் மூளைத் திறன் அறிவியல் (Phrenological Science) எடுத்து வைக்கும் சில அடிகள், இருத்தலியலை நம்பச் செய்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. இந்த பகுப்பாய்வுத் திறனை விளக்க முடியலாம், சிந்தனைகளின் அங்கமென வரையறை செய்வது கடினம்; முந்தைய மெய்யியலாளர்கள் சொன்ன இலட்சியத்தின் முக்கிய அங்கமாக இதைக் கொள்ளாவிடினும், இது இயல்பில் அமைந்துள்ள பழைய திறன் எனச் சொல்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன

மிளகு அத்தியாயம் நாற்பத்திநான்கு

அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு  செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே,  நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே.

உபநதிகள் – 5

This entry is part 5 of 17 in the series உபநதிகள்

நீங்க சொல்ற முதல் கட்சியில நான். என் தம்பி இரண்டாவதுல. எதிர்ல அப்பா அம்மா இருக்காங்களே அந்த வீட்டிலதான் நாங்க வளர்ந்தோம். எங்கேயாவது போகணும்னு அப்பா சொன்னா அவன் டக்னு கிளம்பிடுவான். நான் தாத்தா பாட்டிக்குத் துணையா இருக்கேன்னு வீட்டிலயே தங்கிடுவேன். எனக்கு எல்லா வேளையும் வீட்டு சாப்பாடு போதும், அதே அவனுக்கு வாரம் ரெண்டு தடவை ஓட்டல்ல விதவிதமா சாப்பிட்டாகணும். ஆதவி என்னை மாதிரி இருக்கா…” என்று சொல்லும்போதே காரின் ஆட்டத்தில் வினதாவின் கண்கள் மூடிக்கொண்டன. 

மிளகு அத்தியாயம் நாற்பத்திமூன்று

இன்னொரு விசாரணை இழை, லிஸ்பனில் இருந்தபடிக்கே சென்னாவை ஓய்த்து உட்கார வைக்க நிகழக்கூடிய சதி பற்றியது. சக்தி குறைந்த வெடிவெடிப்பில் இருந்து தொடங்க வேண்டும்.  சக்தி அதிகரித்து, நெருப்புப் பற்றி வெடித்ததுமே அடுத்து நிற்கும் ஆளைக் கொல்லும் அதிக அளவு வெடியுப்பு கலந்த வெடிகளை உருவாக்க  வேண்டும். அவற்றை உபயோகப்படுத்திக் கூடுதல் நாசம் விளைவிக்கும் முயற்சிகளை மேலெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் ஏற்படும் அழிவு தான் குறிக்கோள். சிறுவர்களை முன்னால் நிறுத்தி வட்டத்துக்கு உள்ளே செயல்படுகிறவர்கள் அந்தத் தீவிரவாதிகளாக இருக்கக் கூடும் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு, நடக்கக் கூடியது என்ற வகையில் பட்டது. சாட்சியங்களோ ஆதாரங்களோ எதுவும் இல்லாத, தர்க்கரீதியான ஆய்வுமுடிவு.

உபநதிகள் – 4

This entry is part 4 of 17 in the series உபநதிகள்

ந்தக் குறிப்பிட்ட அதிருஷ்டசாலிகளில் மானஸாவும் ஒருத்தி. அத்தினத்தில் வழக்கத்துக்கு முன்பே எழுந்து தூக்கம் வராமல் தவிக்கவில்லை. கோவிலுக்கோ யோகா பயிற்சிக்கோ போகவில்லை. படிப்பின் தீவிரம் குறைந்து பள்ளிக்கூட பருவம் முடிவுக்கு வரப்போகும் காலம் என்பதால் மூளையை வருத்தாத பள்ளிக்கூட நாள். அது முடிந்ததும் நிதானமாகக் காரில் அலெக்கை அழைத்துவந்தாள். ஃப்ளாரிடா சென்றிருந்த அண்டை வீட்டினரின் நாய் அவர்கள் வீட்டில். அதனுடன் சில நிமிடக் கொஞ்சல். உயர்மட்டக் கல்லூரியில் நுழையாவிட்டால் வாழ்க்கை என்னாகுமோ என்ற தவிப்பில் நிறையத் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்ளவில்லை. ஒரேயொரு குக்கி, அரை கோப்பை கொழுப்பு குறைத்த பால்.

அதிரியன்  நினைவுகள் – 10

This entry is part 10 of 25 in the series அதிரியன் நினைவுகள்

ஈரப்பதமான கோடையைத் தொடர்ந்து, பனிமூட்டத்துடன் ஓர் இலையுதிர் காலம், பின்னர் கடுங் குளிர்காலம்.  எனக்கு மருத்துவம் பற்றிய அறிவு தேவைப்பட்டது, முதலில் என்னை நானே குணப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லையோரங்களில் நான் வாழ்ந்த வாழ்க்கை மெல்லமெல்ல  என்னை சார்மேத்தியினர் நிலைக்கு கொண்டு வந்தது: கிரேக்க தத்துவஞானிக்குரிய  குறுந்தாடி, காட்டுவாசிகள் தலைவன் ஒருவனின்  குறுந்தாடியாக மாறியது. டேசியர்களுடன் சண்டையிட்ட நாட்களில் என்னவெல்லாம் கண்டேனோ அவற்றைத் திரும்பவும் நானே வெறுக்கின்ற அளவிற்கு திரும்பக்  காண நேர்ந்தது. நம்முடைய எதிரிகள் தங்கள் கைதிகளை உயிரோடு எரித்தனர்; 

மிளகு-அத்தியாயம் நாற்பத்திரண்டு

மொத்தம் மூன்று சாரட்கள். முன்னால் ஒன்று பாதுகாப்பாகப் பெட்டகத்தில் பணம், துணிமணிகள், உணவு, குடிக்கவும் புழங்கவும் கடகங்களில் தண்ணீர் ஆயுதங்கள் என்று இரண்டு சிப்பாய்கள் காவலிருக்க நகர்ந்து போனது. அடுத்து ராணி பயணம் செய்யும் ராஜரதம் என்ற பெரிய, வசதியான சாரட் நான்கு காவல் வீரர்களோடு நகர்ந்தது. அதன் பின்னால் சற்றே சிறிய இன்னொரு சாரட்,   பல   மருந்துகளோடு வைத்தியனும், அவன் மனைவியும், ராணியின் தாதியுமான   மிங்குவும் அதில் பயணம் செய்து ராணியைத் தொடர்ந்து வந்தார்கள். பின்னால் நான்கு வீரர்கள் குதிரைகளில் சவாரி செய்து மொத்தப் பாதுகாப்பு அளித்தார்கள். 

அதிரியன் நினைவுகள் – 9

This entry is part 9 of 25 in the series அதிரியன் நினைவுகள்

இவ்விவகாரத்தில் வேறு சில விஷயங்களும் இருக்கின்றன:   நானும் தக்க தருணத்திற்கென்று திரைமறைவில் காத்திருக்கும் (நாடக) நடிகன் போல,  முன்பின் தெரியாத ஒரு நபர் உள்ளே பரபரப்புடன் தெரிவிக்கும் சங்கதிகளை,  குறிப்பாக சலசலவென்று பேசுகிற பெண்களின் குரல்களை, வெடிக்கும் கோபத்தை அல்லது சிரிப்பை, சொந்த வாழ்க்கையின் முணுமுணுப்புகளை, மொத்தத்தில் நானிருக்கிறேன் என்பது தெரியவந்த மறுகணம்  அடங்கிப்போகும் ஒலிகளை ஆர்வத்துடன் ஒட்டுக்கேட்பதுண்டு. குழந்தைகள், ஆடைகுறித்த தீராத பிரச்சனைகள்,  பணத்தைப் பற்றிய கவலைகளென, நான் இல்லாத நேரத்தில் பேசப்படும் பொருள் எதுவென்றாலும்  எனக்குத் தெரியக்கூடாத முக்கியமானதொரு விஷயம்

மித்ரோ மர்ஜானி – 9

This entry is part 9 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயின் புலம்பலை கேட்ட மித்ரோவுக்கு இனம் புரியாத பயம் ஏற்பட்டது. அந்தக் காரிருளில், மூடி கிடந்த ஜன்னல்களையும் வெறிச்சோடி கிடந்த வீட்டையும் பார்த்த மித்ரோவின் கண்களில் மின்னல் ஓடியது போன்ற பிரமை ஏற்பட்டது. வெறிச்சோடிக் கிடந்த வீடு, பூதங்கள் வாழும் மயானத்தைப் போலவும், அழுது புலம்பும் தாய், பசி தாகத்தால் தவிக்கும் ராட்சசியைப் போலவும் அவளுக்குத் தோன்றியது.

மிளகு அத்தியாயம் நாற்பத்தொன்று

எல்லோரும் அடுத்தவர் பேசுவதைக் கவனமாகக் கேட்டு,  அழைக்கப்பட்டபோது கருத்து சொன்னார்கள். எல்லோரும் துரதிருஷ்டவசமானது என்பதில் கருத்து வேறுபாடின்றி ஒன்றுபட்டார்கள். விஷமிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்க வேண்டும் என்று கொங்கணியிலும், தெலுங்கிலும், கன்னடத்திலும் திடமாகச் சொன்னார்கள். இன்று சிறிய வெடி, நாளை பெரிய வெடிவெடிப்பு என்றாகலாம் என அச்சப்பட்டார்கள். பிரதானி நஞ்சுண்டய்யா ஜாக்கிரதையாகப் பேசியதாக சென்னபைரதேவி மகாராணிக்குப் பட்டது. எல்லோரும் தான். எதற்குப் பயப்படுகிறார்கள்? எதை மறைக்கிறார்கள்?

உபநதிகள்-2

This entry is part 2 of 17 in the series உபநதிகள்

பதின்பருவத்தின் பின்பாதியில் இருந்த அவர்களுக்கு நாட்டின் வெவ்வேறு ஊர்களில் இருந்து சால்ட்லேக் சிடிக்குத் தனியாகப்பயணம், பலருக்கு முதன்முறையாக. மதியத்திற்குமுன் விமான நிலையத்தில் ஐந்தாறு பேர்களாகச் சேர்ந்து வளாகத்தின் மாணவர் விடுதிக்கு வந்தார்கள். சிறுவயதில் இருந்தே தனி அறையின் சுதந்திரத்திற்குப் பழக்கப்பட்ட மானஸா இன்னொருத்தியுடன் ஒரு அறையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கல்லூரி வாழ்க்கைக்கு ஒத்திகை. மானஸா தன் பெட்டியைத் திறந்து சாமான்களை அவற்றுக்கான இடங்களில் வைத்தபிறகு அவள் அறைத்தோழி நிதானமாக வந்தாள், சிறிய தோள்-பையுடன். 

மித்ரோ மர்ஜானி – 8

This entry is part 8 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தாயும் மகளும் பேசிக்கொண்டே வராந்தாவைக் கடந்து, விருந்தினர் அறைக்கு செல்வதற்காக மாடியில் முதல் படியில் கால் வைத்தனர். வசந்த காலத் தென்றல் அவளை எங்கோ தூக்கிச் செல்வது போல மித்ரோவுக்கு தோன்றியது. ஆசையிலும் மோகத்திலும் படபடத்த நெஞ்சை ஒரு கையால் பற்றிக் கொண்டு, எதிரில் விரிந்த மாடிப்படிகளையும், கணவன் சர்தாரிலால் படுத்திருந்த அறையின் கதவையும்  மித்ரோ மாறி மாறி பார்த்தாள். அம்மாவை லேசாக தொட்டு, “உன் மாப்பிள்ளை எழுந்துவிட்டார் என்றால்,  இந்த மித்ரோவின் கதி அவ்வளவுதான்” என்று பதட்டத்துடன் கூறினாள்.

மிளகு அத்தியாயம் நாற்பது

சென்னா மகாராணி சற்றே முகம் சுளித்தபடி கோவில் படிகளை நோக்கி நடக்கின்றாள். மலர்ந்த வதனமும் நிறைந்த சிரிப்புமாகத்தான் ஜனக் கூட்டங்களை எதிர்கொள்வாள். கைதட்டும் ஜயவிஜயீபவவுமாக அவளை வரவேற்கும் குரல்கள் எங்கே? அவை இருக்கின்றன தான். சென்னா முகம் மலரும் போது அவையும் திரும்பி வரும். வெடி விபத்துகள் காணாமல் போகும்போது அது நடக்கும். வெடிகள் பற்றிய நினைவை கோவில் வாசலில் விட்டுவிட்டு கிருஷ்ணசாமியிடம் சரண் புகுந்திட விசாலமான கோவில் கபாடங்களைத் திறக்கச் செய்து உள்ளே நடந்தாள் சென்னபைரதேவி ராணி. கருவறைக் கதவுகளும் தாந்திரீக சம்பிரதாயத்தில் சார்த்தி வைத்து கிருஷ்ணனை முதுகுப் புறம் மட்டும் காட்டும் இரண்டாவது உத்தர கன்னடக் கோவில் இது.

மிளகு அத்தியாயம் முப்பத்தொன்பது

அவரவர்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டியிருக்கிறது. ராஜகுமாரர் நேமிநாதனுக்கு ஜெருஸுப்பா அரசராக வேண்டும். போர்த்துகீசியர்களோடோ, ஒல்லாந்தியரோடோ சேர்ந்து காசு சேர்க்க வேண்டும். ரோகிணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும். ரோகிணிக்கோ ஒன்று நேமிநாதனோடு முதல் ராணியாக அரசாங்கத்தை நடத்த வேண்டும். ஜெருஸுப்பாவிலும் ஹொன்னாவரிலும் பக்கத்து கிராமங்களிலும் வீடும் மாளிகையும் நிலமும் தன் பெயரில் இருக்க வேண்டும். பரமனைக் கல்யாணம் செய்து கொண்டு நேமிநாதனின் காமக்கிழத்தியாக, புறம்பெண்ணாக இருப்பதில் அவளுக்குக் குற்ற உணர்வு ஏதுமில்லை. பரமனுக்கு இங்கே நடப்பதெல்லாம் எந்த விதத்திலும் அவரைப் பாதிக்காது. ஒரே ஒரு லட்சியம் எப்படியாவது நாக்பூருக்கோ பம்பாய்க்கோ அவருடைய காலத்துக்குத் திரும்பப் போக வேண்டும். அதற்காக என்ன வேணுமானாலும் செய்வார் அவர்.

அதிரியன் நினைவுகள்  – 7

This entry is part 7 of 25 in the series அதிரியன் நினைவுகள்

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்ததொரு சம்பவம் கிட்டத்தட்ட சீரழிக்கும்நிலமைக்கு என்னைத் தள்ளியது. விஷயம் இதுதான், அழகான முகமொன்று என்னை வென்றிருந்தது, இளைஞன் ஒருவனிடம் அன்பின் வசப்பட்டு மிகநெருக்ககமாக இருந்தேன், பேரரசர் திராயான் அவனை அறிந்திருந்தார். ஆபத்தான விளயாட்டு என்றாலும்கூட எனக்கது சுவையான அனுபவம். காலுஸ்(Galus) என்ற பெயரில் மன்னருக்கு ஒரு செயலாளர் இருந்தார், நீண்ட காலமாக மன்னரிடம் எனது கடன்கள் பற்றிய தகவல்களை விவரமாக எடுத்துரைத்தும் வந்தார். இந்நிலையில் என்னுடைய சமீபத்திய நடத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். மன்னரின் கோபம் உச்சத்தை எட்ட என்வாழ்க்கையில் மிகமோசமான தருணம் அது. என்னுடைய நண்பர்கள் சிலர், குறிப்பாக அச்சீலியுஸ், அட்டியாயூனுஸ் முதலானோர் ஒன்றினைந்து எனக்காக வாதிட்டு மன்னரை என்மீது கொண்டிருந்த அந்த அபத்தமான வெறுப்பிலிருந்து மீட்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கு முடிவில் அவர் இறங்கியும்வந்தார்.

மித்ரோ மர்ஜானி – 7

This entry is part 7 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்தி சமையல் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். பாலை சுண்டக்காய்ச்சி, ஊதி அதை ஒரு லோட்டாவில் ஊற்றி, புடவை தலைப்பால் மூடிக்கொண்டு மருமகள் சுஹாகின் அறையை நோக்கி நடந்தாள். ஜன்னல் வழியாக அறையிலிருந்து விழுந்த வெளிச்சத்தை பார்த்து தாயின் மனம் பெரிதும் மகிழ்ந்தது. கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள். கட்டிலில் படுத்திருந்த மருமகளைப் பார்த்து பூரித்துப் போனாள். தளர்ந்திருந்த மேல் சட்டையில் வெளிறிய முகத்துடன் படுத்திருந்த மருமகளை பார்த்ததும், மனதிற்குள்ளேயே இறைவனை கையெடுத்து கும்பிட்டுக் கொண்டாள். மருமகள் சுஹாக்வந்தி மகாராணியை போலல்லவா படுத்திருக்கிறாள்!

அதிரியன் நினைவுகள் – 6

This entry is part 6 of 25 in the series அதிரியன் நினைவுகள்

இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.

மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு

நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும். கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்

மித்ரோ மர்ஜானி 6

This entry is part 6 of 9 in the series மித்ரோ மர்ஜானி

தனவந்திக்கு சர்தாரியின் நினைவு வரவே, ஒரு நொடியில் அவளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் தான் கண்டிப்பாக எதையோ சொல்லி இவளை காயப்படுத்தி இருப்பான்! அன்று கணவனின் அறையில் கேள்வி பதிலாகவும் விசாரணையாகவும் நடந்த நிகழ்ச்சி, ஒரு வேளை தினமும் தொடர்கிறதோ? தன்வந்தி கனிவான குரலில், “மகளே எனக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றுக்கும் என் புத்தி கெட்ட மகன்தான் காரணம். சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, சண்டை போட்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான்!” என்றாள்.இதைக் கேட்ட மித்ரோ, கண்களில் கோபம் கொப்பளிக்க, அடிபட்ட சிங்கம் போல கர்ஜித்தாள்.”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதால் ஒரு பயனும் இல்லை. அம்மாவும் மகனும் சேர்ந்து, என் தோலைச் சீவி, என்னைக் கண்டதுண்டமாக வெட்டி ஊறுகாய் போட்டு விடுவது தானே” என்றாள்.

மிளகு அத்தியாயம் முப்பத்தேழு

”விலை கொஞ்சம் குறைவுன்னாலும் கூடுதல் மிளகு ஏற்றுமதி. அதை அனுப்ப தயார்ப்படுத்த அதிக பேருக்கு வேலை. பயிரிட்டு அறுவடை செய்ய அதிகப் பேருக்கு வேலை. எல்லா வாசனை திரவியங்களுக்கும் இப்படி அதிகப் பேருக்கு வேலை. வெடியுப்பு தயார் செய்ய, அனுப்ப அதேபடி. துணி நெய்ய, சாயம் தோய்க்க, சீராக்கி லிஸ்பன் அனுப்ப அதிகப் பேருக்கு வேலை. அதிகம் வேலை. அதிகம் பணப் புழக்கம். அதிகம் பணம் செலவழிக்க. சேமிக்க. நகை வாங்க. யார் வேணாம்னு சொல்லப் போறாங்க மகாராஜா?”