தன் அந்தரங்கத்தைப் பேண விரும்பும் மனிதர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று 1993-ல் ஸ்டீபன் லெவி (Stephen Levy) ‘வொயர்ட்’டில் (Wired) எழுதிய கட்டுரை : “குறியீட்டு ஆர்வலர்கள் காணும் கனவு- எந்த ஒரு மனிதனும், அது அவனது மருத்துவ நிலையாக இருக்கட்டும், அல்லது கருத்தாக இருக்கட்டும், அவனாக விரும்பினாலொழிய அதைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படக் கூடாது; வலையில் உலவும் தகவல்களைக் கொத்தக் காத்திருப்பவர்களுக்கு அவை புகை மூட்டங்களாகிக் கரைந்துவிட வேண்டும்; உளவுக் கருவிகளே பாதுகாக்கும் கருவிகளாக வேண்டும்.”
Category: தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே
வெப் -3 (Web-3)
க்ரிப்டோவின் கவர்ச்சியால் ஈர்க்கப்படும் தொழில் நுட்ப வல்லுனர்களைத் தக்க வைப்பது பல பெரும் இணைய நிறுவனங்களுக்கு சவாலாக இருக்கிறது. அத்தகைய வல்லுனர்களை இருத்தி வைப்பதற்கும் அவர்கள் இலக்க நாணயக் குழுமங்களில் வேலை தேடிச் செல்லாமல் இருப்பதற்கும், கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை ஒவ்வொரு திங்களன்றும் தன் உதவியாளர்களான பல நிர்வாகிகளுடன் விவாதிக்கிறாராம். கூகுளின் எந்தப் பிரிவில் பணியாற்றுபவர்கள் இந்தக் கவர்ச்சிக்கு உள்ளாவார்கள் என அறிந்து அவர்களுக்கு கம்பெனியின் பங்குகள் சற்று அதிகமாக வழங்கப்படுகிறதாம்.
கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும்
க்ரிப்டோ, அரசின் நிதி மேலாண்மைக்கும், அரசின் நாணயத்திற்கும் விடப்பட்டுள்ள சவால்தான். ஆனால். இத்தகைய க்ரிப்டோ நாணயங்களுக்கு அடிப்படை மதிப்புகொண்ட இணைச் சொத்துகள் கிடையாது. மேலும், முகமறியா வணிகத்தில் அரசு இழக்கும் வரி அதிகம்; முக்கியமான அரசுத் துறைகள் கொந்தர்களுக்குப் பலியாகிச் சந்திக்கும் இழப்புகளும் அதிகம். இதை முறைப்படுத்துவது, நெறிப்படுத்துவது, இதனால் ஏற்படும் சூழலியல் நட்டங்களை எவ்விதம் ஈடுகட்டுவது என்பவை சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச
உலகம் சீன அரசாளர்களை தம் மக்களை அடக்கியாள்வோராகப் பார்ப்பதை மாற்றுவதற்கு சீனா செய்யும் முயற்சிகள் இந்த வலைஒளிகள். இது அயலகத்தில் இருப்போரை சீனாவின் செயல்பாடுகளில் இரக்கமும், ஆமோதிப்பும் கொண்டவர்களாக மாற்றும் ஒரு பெரிய திட்டம் என்றே சொல்லலாம். பல நிழல் கணக்குகள் மூலமாக இத்தகைய வலைஒளி நிகழ்ச்சிகளைப் பெருக்கிக் காட்டுமாறு தன் தூதர்களுக்கும், அரசின் செய்தித் துறையினருக்கும் சீன அரசு கட்டளையிட்டுள்ளது.
மெடாவெர்ஸ் எனும் ‘ஹோல்டால்’
MV சந்தை $800 பில்லியன் என்று ப்ளும்பர்க் ஊடக நிறுவனம் அனுமானித்துள்ளது. MV இப்போதுதான் உருவாகத் தொடங்கியிருந்தாலும், சூட்டிகையான தொழில் நுட்ப நபர்கள் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும், நன்கு வளர்ச்சிபெறக் கூடிய தொழில் தொடங்கு நிறுவனக் குறியீட்டு நாணயங்களில் (Digital tokens of High growth start-ups) வர்த்தகம் செய்பவர்களாகவும் செயல்படுவார்கள். எனவே இதன் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என்று இவர்கள் பந்தயம் கட்டுகிறார்கள்.
பார் சாரதி, பார்(த்த) சாரதியை
“இந்தக் கார்களை ‘தானே முழுதாக இயங்கும் ஒன்று; என்றும், ‘தானியங்கி ஓட்டுனர்’ என்றும் சொல்லக்கூடாது. ஏனெனில், அது மக்களை அவ்வாறே நம்ப வைக்கும். உண்மையில், இவைகள் மனிதர்களின் சக ஓட்டுனர்களே.” என்று சொன்னார் இன்றைய அரோரா (Aurora) கம்பெனியின் நிர்வாக இயக்குனரும், முன்னாள் டெஸ்லா பொறியியல் தொழில் நுட்ப வல்லுனருமான ஸ்டெர்லிங் ஆண்டர்சன்.(Sterling Anderson)
உருவன்று அருவன்று
NFTவலைத் தளங்களில் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் பல முயற்சிகள்- அப்பங்கள் நாய்களாகின்றன, இலான் மஸ்கைக் கலாய்க்கும் மனப்பிறழ்வுப் படங்கள், நிர்வாணமாக உலா வரும் கவர்ச்சிகள். தேவை என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, வாங்க வேண்டும் என்ற ஆர்வம் தூண்டப்படுவதுதானே விளம்பரத்தின் நோக்கம்! கலை விமர்சகர் டீன் கிஸ்ஸெஸ்,(Dean Kissick) ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த NFTஉலகை ‘இளைஞர்களின் பரவசம்’ என்று சொல்கிறார்.
நம்பிக்கை, நாணயம், நடப்பு
டேவிட் பாஸ்டர் வாலசின் (David Foster Wallace) நீர் அறியா மீன்களைப் போல இன்றைய நவீனப் பொருளாதரத்தில் மக்களின் நம்பிக்கை இருக்கிறது. எதுவுமே இருப்பில் கணிக்கப்படுகிறது. ‘ஒரு எலும்புத் துண்டை தன் இனத்திடம் எந்த நாயும் நியாயமான முறையில் பங்கிட்டுக் கொள்வதை நாம் யாரும் பார்த்ததில்லை’ என்று சொன்ன ஆடம் ஸ்மித் ‘நம்பிக்கை என்பது மனிதத்தன்மையின் சிறப்பான அம்சம்’ என்று சொன்னார். நோபெல் பரிசு வெல்வதற்கு சற்று முன்னால் கென்னத் ஆரோ (Kenneth Arrow) நம்பிக்கை என்பது போற்றுதலுக்குரியது, அது சமூகச் சக்கரங்களின் மசகெண்ணய், நல் வளர்ச்சிக்கும், வர்த்தகத்திற்கும் அது இன்றியமையாதது என்றார்.
வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5
பழுதுபார்க்கும் மையங்களுக்குச், சில வரிச் சலுகைகள், முதலில் வழங்கப்பட வேண்டும். இது தொலைநோக்குடன் அணுகப்பட வேண்டும். மறுபயன்பாட்டில் அதிக முதலீடு செய்வதும் இதுவும் ஒன்றே. வருமுன் காக்கும் செயல் இது
சட்டம் யார் கையில் – பகுதி 2
ஒரு சொல்லைத் தனியாகப் பார்க்கக் கூடாது. அதனுடன் தொடர்புடைய வாக்கியத்தின் மற்ற சொற்களோடு சேர்த்துப் பார்க்க வேண்டும். இதுவே இதன் சாராம்சம். உதாரணத்திற்கு, I like to joke என்பது ஒரு வாக்கியம். I like the joke என்பது இன்னொரு வாக்கியம். முதல் வாக்கியம் சுயவிளக்கம். இரண்டாவது வாக்கியம் மற்றவரின் செயலின் தாக்கம். இரண்டிலும் joke என்ற சொல் இருந்தாலும், சுற்றியுள்ள வார்த்தைகளைப் பொறுத்து, அந்த சொல்லின் பொருள் மாறுபடும்.”
ப:. “நீங்க சொன்னவுடன் இதை எப்படி நாம் புரிந்து கொள்கிறோம் என்று வியப்பாக இருக்கிறது. எல்லாம் ஒரு context என்பதை மனித மூளை எப்படியோ புரிந்து கொள்கிறது.”
ஆட்டத்தின் ஐந்து விதிகள் – இறுதிப் பகுதி
ஐந்து விதிகளும் அலிபாபா குகையைத் திறக்கும் மந்திரம் இல்லை. விற்பனையைப் பொறுத்தவரை அப்படி ஒரு மந்திரத்தைக் கண்டுபிடித்தவர் எவருமில்லை. பிறகு இந்த ஐந்து விதிகளும் என்ன செய்யும்? எதற்குப் பயன்படும்?
இந்த விதிகள் விற்பனையை ஒரு வழமைச் செயல் எனும் நிலையிலிருந்து சிந்தனைச் செயல்பாடாக மாற்ற முயல்கின்றன. திறன் சார்ந்த பணிகளைப் போலவே விற்பனையிலும் பணியின்போது திறன் மேலும் மேலும் மெருகேறி கூர்மை கொள்கிறது. ஒவ்வொரு பணியும் திறனின் வெவ்வேறு பரிமாணங்களைக் கோருகிறது.
நம்ம கையில என்ன இருக்கு?
“ஒரு உதாரணம் சொன்றேன் உதய். உங்களது நாள்தோறும் போகிற பாதையில் ஏகமான நெரிசல்னு வைத்துக் கொள்வோம். வேஸ் வைத்திருக்கும் அனைவரையும் புதிய வழியில் அனுப்பினால், புதிய வழியில் நெரிசலாகிவிடும். சரி, பாதி வேஸ் பயன்பாட்டாளர்களை அங்கேயே இருக்கச் செய்து, மற்ற பாதி பயன்பாட்டாளர்களை புதிய வழியில் அனுப்பினால், இரு சாராரும் தங்களுடைய இலக்கை விரைவில் அடைய முடியும், இல்லையா? இதில் உங்களுக்குப் பழைய வழியா அல்லது புது வழியா என்று வேஸ் எப்படி முடிவு செய்கிறது? நீ மெச்சிய வேஸ் எப்படி உன்னை அழைத்துச் செல்லும்?”
இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்
தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”
இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி
மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி”
இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – விளக்கம்/ பயன்கள்
தங்க விஷயத்தை நாம் இங்கு விவாதிக்க மாட்டோம். ஆனால், மற்ற இரண்டு தடைகளுக்கும் வங்கிக் கணக்கு இல்லாமை மிகவும் முக்கிய காரணம். அத்துடன், வங்கிகள் படிவங்களாலேயே (forms) இந்தியர்களை பயமுறுத்தி வந்துள்ளனர். 2014 –ல் தனியார் வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்த அனுபவம் அலாதியானது. நான் இந்தியப் பிரஜையல்லாதது இந்த விஷயத்தை மேலும் சிக்கலாக்கியது. என் வாழ்வில் ஒரே நேரத்தில் ஏறக்குறைய 100 கையெழுத்துக்கள் போட்டது இந்த விஷயத்தில் தான்!
லாப்டாப் கொண்டு உங்கள் கார்களைத் தானோட்டிக் கார்களாக்கலாமா?
படிக்கும் பலருக்குச் சற்றுக் கசப்பாக இருக்கக்கூடும். அதிகக் கம்பித் தொலைப்பேசிகள் சார்ந்த கட்டமைப்பு பெரிதாக இல்லாமல், செல்பேசி தொடர்பியலில் மேற்கத்திய நாடுகளை விட முன்னேறிய இந்தியா ஏன் இந்தத் தொழில்நுட்பத்திலும் முன்னேற முடியாது? விஷயம் தொழில்நுட்பம் சார்ந்தது அல்ல; போக்குவரத்து ஒழுங்கு சார்ந்தது. அத்துடன், பல தரப்பட்ட போக்குவரத்து அமைப்புகள் (ஆட்டோ, பைக், ஸ்கூட்டர், மாட்டுவண்டி, ரிக்ஷா) ஒரே சாலையைப் பயன்படுத்தும் இந்தியாவில், கணினிகள் குழப்பமடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. பல ஆண்டுகள் மேற்குலகில் சோதனைக்குப் பின்னரே இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சோதிக்க முடியும். அப்படியே இந்தத் தொழில்நுட்பம் வந்தாலும், இந்தியாவில், இந்த ஒழுங்கு ஓரளவு உள்ள நெடுஞ்சாலைகளில் மட்டுமே பயன்படும்.
மறுபடியும் ஜென்கின்ஸ்- அதாவது ‘ஒருங்கிணைந்த கட்டமைப்பு’
அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை அமல்படுத்துவார்கள். இரவும் பகலுமாக நான்கு நாட்கள் கூடிப் பேசுவார்கள். ஒரே குழு, பத்து நாட்கள் உட்கார்ந்து நிரல் (coding) எழுதுவார்கள். எழுதியதைச் சரிபார்க்க இன்னொரு பத்து நாட்கள் ஆகிவிடும். போட்டி நிறைந்த இவ்வுலகில் பத்து நாட்கள் என்பது அதிகக் காலம். அதற்குள் வாடிக்கையாளர்களின் தேவையே மாறிப்போய்விடும். காலையில் முடிவெடுத்தால், மறுநாள் காலையில் மாற்றங்களை அமல்படுத்த வேண்டியிருக்கும். போதுமான நேர அவகாசமில்லை என்பதற்காகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அவசர அவசரமாகப் பணியை நிறைவேற்ற முடியாது. குறுகிய காலம் என்பதற்காக நடைமுறைகளை நமக்கேற்றபடி திருத்தியெழுதினால், தரம் குறைந்துவிடும்.
புதியதோர் வானொலி உலகம்
மோடி அரசில், ஆல் இந்திய ரேடியோ , டி.ஆர்.எம் தொழில்நுட்பத்தை, மாறி வரும் சமுதாயத்தின் தேவையாகக் கண்டு, தீவிரமாக அதனை சோதனை செய்து, செயல்படுத்த முயன்று வருகிறது. 2017ல் , டி.ஆர்.எம் தொழில் நுட்பத்தை ஆல் இந்திய ரேடியோ முழுதுமாக செயல்படுத்தும். தற்போது பழக்கத்தில் இருக்கும் அனலாக் முறை ஒலிபரப்பும் தொடர்ந்து செயல்படும். சென்னை, தில்லி வானொலி நிலையங்கள், டி.ஆர்.எம் சேவைக்கெனவே குறிப்பிட்ட அலைவரிசைகளை வைத்திருக்கின்றன. இவை தவிர 23 வானொலி நிலையங்களில் டி.ஆர்.எம் சேவை, சோதனைக் கட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.
கருவிகளின் இணையம் – சமுதாய நோக்கும், போக்குகளும்
பாதுகாப்பு குறித்து சமூகம் கொண்டிருக்கும் சற்றும் பொறுப்பற்ற நோக்கு இன்றைய கருவி இணைய முயற்சிகளை அதிகம் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது .. .. .. இன்றைய புதிய திறன்பேசி (smartphone) மாடல்கள் நுகர்வோர் பயன்பாட்டை மட்டுமே அதிகம் மையமாக்குகின்றன. .. .. .. இதன் தொடர்சியாக, இன்றைய கருவி இணைய முயற்சிகளும், பாதுகாப்பு விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. .. .. .. IPv6 தொழில்நுட்பம் பல கோடி கோடிக் கருவிகளை இணையத்துடன் இணைக்கும் திறன் படைத்தது என்று தொழில்நுட்பப் பகுதியில் பார்த்தோம். அப்படி இணைத்த இணையத்தின் கதி பற்றி ஏதாவது எங்காவது சொல்லப் பட்டதா? மூச்!
கருவிகளின் இணையம் – வாய்ப்புகள் – பகுதி 21
வணிகத் திறனாளர்கள் மற்றும் செயற்கைத் திறனாளர்கள் (business and artificial intelligence specialists) – கருவிகள், மனிதர்களைப் போல இயங்குவதில்லை. இத்துறைகளில் உள்ள நெடுங்காலக் கனவு, சீராக உருவாக்கப்பட்ட தரவுகள். மனிதர்கள், குறைகள் நிறைந்த தரவுகளை உற்பத்தி செய்பவர்கள். அத்தோடு, மனிதர்கள் அரசியல் கைதிகள் – தரவுகள் சொல்வதையும் மீறிச் செயல்படுபவர்கள். இத்தனைக் காலம், மனிதர்களை ஒட்டியே உருவாகிய இத்துறைகள், எந்திரங்கள் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்க வேண்டும். அரசல் புரசலான முன்வைப்புகள் ஒத்து வராது.
கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள்: பகுதி- 20
தரவு நஷ்டப் பாதுகாப்பு (data loss prevention) – எந்த ஒரு கருவி இணைய அமைப்பும், புதிய உணர்விகள் சேர்த்த வண்ணம் இருக்கும் என்று நம்பலாம். புதிய உணர்விகளைச் சேர்த்தவுடன், பழைய கருவிகள் அனுப்பும் தரவுகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கருவி அனுப்பும் தரவும், இன்ன கருவி அனுப்பியது என்று சரியாகச் சொல்லும் வழி இருப்பது அவசியம்
தரவுத் திரள்வுப் பாதுகாப்பு (data aggregation security) – கருவி இணைய உலகில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு விஷயம் இது.