தெய்வநல்லூர் கதைகள் -12

This entry is part 12 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

உள் பிரகார சுற்றுப் பாதை  கருவறை, அர்த்த , முன் மண்டபம் வரையிலான கட்டிடத்தை சுற்றி செவ்வக அமைப்பி‌ல் இருக்க சுற்றுப்பாதை ஓரத்தில் மூன்றடிக்கு  உயர்த்தப்பட்ட நீண்ட தாழ்வாரத் திண்ணைகள் இருக்கும். தாழ்வாரத்துக்கும் மையக்கோவில் கட்டிடத்துக்கும் நடுவேதான் சுற்றுப் பாதை. இந்தத் தாழ்வாரங்களில்தான் நாயன்மார்கள், சப்த மாதர்கள், ஜுரதேவர் ஆகியோர் தெற்கு சுற்றிலும், (தெற்குசுற்று மேற்கை முட்டும் சந்தில் கிழக்கு நோக்கி அமர்ந்திருப்பவர் கன்னி மூல கணபதி)  சோமாஸ்கந்தர் , பஞ்ச லிங்கங்கள், காசி விஸ்வநாதர் – விசாலாட்சி, மகா லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு, ஆகியோரை மேற்கு சுற்றிலும் காணலாம்.

தெய்வநல்லூர் கதைகள் 10

This entry is part 10 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

முத்து காமிக்ஸ் தவிர ராணி காமிக்ஸ், பூந்தளிர் ஆகியவையும் எங்களால் வாசிக்கப்பட்டன. நாடாக்கமார் தெருவில் இருக்கும் காமராஜ் வீட்டில் பூந்தளிர் வாங்குவதாக நியூஸ் சந்திரன் சொன்ன அன்று மாலையே என்னையும், சிவாஜியையும் அழைத்துக் கொண்டு பிரேம் காமராஜ் வீட்டுக்கு சென்றார். நாங்கள் வாய் பிளந்து நிற்கும் விதத்தில் காமராஜ் அப்பாவும், உள்ளூர் கூட்டுறவு சங்க செயலருமான தங்கப்பாண்டியன் அவர்களிடம் நேரே சென்று சுய அறிமுகம் செய்துகொண்டு தனக்கு பூந்தளிர் படிக்கக் கொடுக்குமாறும் தான் பத்திரமாக மூன்று நாட்களில் திருப்பித் தருவதாகவும், பதிலுக்கு காமராஜ் வாசிக்க தன்னிடமிருக்கும் காமிக்ஸுகளையும், அணில் அண்ணாவின் வீரப்பிரதாபன் கதைப் புத்தகங்களையும் படிக்கத் தருவதாகவும் சொன்னார்.

தெய்வநல்லூர் கதைகள் – 9

This entry is part 9 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

இருவரும் பேசிமுடித்ததும் சில முடிவுகள் உடனே அமுல்படுத்தப்பட்டன. வகுப்பினைக் கவனிக்கும் பொறுப்பு உடனடியாக ஆசிய ஜோதி அணியினருக்கு திரும்பக் கொடுக்கப்பட்டது. தெண்டில் அணியினர் அனைவரும் அவரவர் வகிக்கும் பொறுப்புகளிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டனர். இனி குறிப்பேடுகளை தேதி வாரியாக  சரி பார்த்து ஆசிரியர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூடுதல் தனிப் பொறுப்பு பிரேமுக்கு ஒதுக்கப்பட்டது. தவறு செய்த மூவருக்கும் அன்று  மாலை பள்ளி முடியும்வரை வகுப்புக்கு வெளியே படிக்கட்டில் நின்று கொண்டேயிருக்கும்படியாக தண்டனை அளிக்கப்பட்டது.      

தெய்வநல்லூர் கதைகள் – 6

This entry is part 6 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி  முடுகி  தேடுகையில்  திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி  உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.

தெய்வநல்லூர் கதைகள் – 5

This entry is part 5 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

காலாண்டுத் தேர்வு முடிந்து ஒரு திங்களன்று நாங்கள் வகுப்புக்குள் நுழைந்தபோது எங்களுக்கு முதல் அதிர்ச்சி தாக்கியது. அங்கு அறிஞர் அண்ணா அணி என்ற பெயரில் இரண்டு காலண்டர் அட்டைகளை மூங்கில் வரிச்சால் பின்பக்கமாக இணைத்து நீளமாக ஆக்கி முழுவதும் வெள்ளைத்தாளால் ஒட்டப்பட்டு ஒரு பதாகை இருந்தது. அதுவரை வகுப்பில் மூன்று அணிகளே உண்டு. பெண்கள் தரப்பிலிருந்து “ஜான்சிராணி” அணி, பையன்கள் அணியிலிருந்து நாங்களே உருவாக்கி எங்கள் துணை அணியாக நடத்திக்கொண்டிருக்கும் “தமிழன்னை” அணி. முக்கியமான ஆளும் அணியாக எவ்வித எதிர்ப்புமின்றி அதுவரை செயல்பட்டுக்கொண்டிருந்தது எங்களது குழுவான “ஆசியஜோதி நேரு” அணி.

தெய்வநல்லூர் கதைகள் – 2

This entry is part 2 of 12 in the series தெய்வநல்லூர் கதைகள்

பஜாரில் உள்ள பெட்டிக்கடைகளில் இருந்து விற்பனையாகாத அழுகும் நிலைக்கு முந்தைய நிலையை எய்திய பழங்களைச் சேகரித்தல், கிராமத்தின் வீதிமுனைகளில் வீசப்பட்டு சுற்றுப்புறச் சூழலை சீர்கெடுக்கும் பாட்டரி கட்டைகளை மாற்றுப் பயனீட்டும் பொருட்டு சேகரித்தல், உள்ளூர் உணவுப் பொருள் கிடங்கில் தேவைக்கும் அதிகமாக கொக்கி போடப்பட்டு தரையில் கொட்டி “கையாளுதலில் சேதாரம்” என்ற கணக்கில் காட்டப்பட்டு பெருக்கி அள்ளி மலிவு விலையில் அளிக்கப்படும் சீனியைச் சேகரித்தல், உள்ளூர் வெல்லம் காய்ச்சும் பணிமனையில் வெல்ல வட்டைக்குள் இறங்கி வட்டையைச் சுரண்டி  தூள் வெல்லத்தை சேகரித்தல் , மிக முக்கியமாக இம்மூலப்பொருட்களை ஊருக்கு வெளியே மறைவாக இயங்கும் தொழிற்சாலைக்கு கொண்டுவந்து சேர்த்தல் ஆகியவற்றில் சுனா கானா சிறப்பாகப் பணிபுரிந்தார்.

இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள்

இந்து மதத்தின் வேதங்கள், உபனிஷத்துகள், புராணங்கள், இதிகாசங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பிரதிகள் மும்மைப் பொருள்கோள்கள் (interpretation) கொண்டவையாகும். அவையாவன: 1. நேர்ப் பொருள். இது சாமான்யர்களான பக்தர்களாலும், பாமரர்களாலும் கொள்ளப்படுவது. 2. குறியீட்டுப் பொருள். இது பண்டிதர்களால் கொள்ளப்படுவது. 3. தந்த்ரா பொருள்.

உபநதிகள் – 1

This entry is part 1 of 17 in the series உபநதிகள்

ஸ்ரீலங்கா திரும்பிப்போவதைத் தவிர்க்கும் சோதனையில் பகீரதனுக்குக் கடைசிக்கட்டம். குடியேற்ற அதிகாரியுடன் நேர்காணல். குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே அரசாங்கக் கட்டடத்தில் காத்திருந்தார்கள். தனித்துத் தெரியாத சம்பிரதாய ஆடைகள். அவன் நீலநிற கோட் ட்டை பான்ட்ஸில். அவள் முழங்காலுக்கும் தாழ்ந்த கறுப்புப் பாவாடை, வெள்ளை சட்டை, கழுத்தைச்சுற்றி சாம்பல்நிறத் துண்டு. கணவன் மனைவி இருவரும் அவரைத் தனித்தனியே சந்திக்க வேண்டும். அலுவலக அறையில் இருந்து ஒரு பழுப்பு ஆணும் அதிகாரியும் வெளியே வந்தார்கள். அவனை எதிர்கொண்ட பெண்ணும் அவனும் ஏமாற்ற மௌனத்துடன் வெளிவாசல் நோக்கி நடக்க… 

வலி மொஹம்மத் வலி

This entry is part 8 of 12 in the series கவிதை காண்பது

வலி தக்கனி குறித்து எழுத்தாளர் இரா. முருகன் ‘கஜல்’ புத்தகத்தின் முன்னுரையில், //கஜலில் மகாகவியாக விளங்கிய மீர்ஸா காலிப்கூட்த் தன் முக்கியமான இருபது வருடங்களில் உருதுவில் எழுதுவதைத் தவிர்த்து, பாரசீக மொழியிலேயே படைப்பதில் ஈடுபட்டிருந்தார் என்றும், வட இந்தியாவில் உருது கஜல் செழிக்க தென்னிந்தியக் கவிஞர் வலி தக்கனியின் முயற்சிகளும் காரணம் என்று அறியும்போது ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருங்கே ஏற்படுகின்றன// எனக் குறிப்பிடுகின்றார்.

புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22

This entry is part 22 of 23 in the series புவிச் சூடேற்றம்

இந்தத் தொழில்நுட்பங்கள் யாவும், காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை ரசாயன முறைகளில் உள்வாங்கி, பூமிக்கடியில் புதைக்கும் முயற்சிகள். சில தொழில்நுட்பங்கள், தாங்கள் உருவாக்கிய கரியமில வாயுவைக் கொண்டு, மற்ற பயன்களுக்கு உதவுவது. இதனால், கரியமில வாயு தேவைப்படும் தொழில்கள், இயற்கையை அழிக்கத் தேவையில்லை. உதாரணத்திற்கு, உலகில் ஏராளமாக விற்கும் குளிர்பானங்கள் கரியமில வாயுவைக் கலந்துதான் விற்கின்றன!

மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்

புராண இலக்கியவியலர், தேவதத் பட்டநாயக் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார் “ ஏன் பல இந்தியர்களுக்கு மேற்கத்திய மீட்பாளர்கள் தேவையாக உள்ளது? அக்கட்டுரை குழப்பமுடையதாகவும் புராண இலக்கியத்தை அதிகமாக வலியுறுத்துவதாகவும் இருந்தது. அது, இராமாயண மஹாபாரத எழுத்தாளருடைய தொழிலுக்கே உரித்தான அபாயம். எப்படியிருந்தாலும், எவருக்கும் தீங்கு செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல. எனவே, அக்கேள்வி பதிலை எதிர்பார்த்து வைக்கப்பட்டுள்ளது. ஆகவே,,மேற்கத்தியர்கள் நிலைப்பாட்டைப் பற்றிய சில உன்னிப்பான கவனிப்புகளையும் பிறகு எனது நிலைப்பாட்டையும் இங்கு தருகிறேன்.

அஜீஸ் பானு தாராப் வஃபா

This entry is part 6 of 12 in the series கவிதை காண்பது

அஜீஸ் பானுவின் முன்னோர்கள் ஸ்ரீநகரிலிருந்து லக்னோவிற்குக் குடிபெயர்ந்தவர்கள். தங்களுடைய குடும்ப வழமைக்கு மாறாக அஜீஸ் பானுவை மேற்படிப்புக்கு அனுப்பினார்கள். 1929இல் அஜீஸ் பானு லக்னோ பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன் பின்னர் பெண்கள் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

வாக்குமூலம் – அத்தியாயம் 4

ஒரு காலத்திலே ஆனந்த விகடன், கல்கி, குமுதமெல்லாம் வாராவாரம் படிக்கலைன்னா என்னவோ மாதிரியா இருக்கும். இப்போ இந்தப் பத்திரிகைகளைப் படிக்கவே முடியலை. முன்னே தாமரை, கணையாழி மாதிரி சிற்றிதழ்கள் கூடப் படிக்கப் பிடிச்சிருந்திச்சு. இப்போ வருகிற இலக்கியப் பத்திரிகைகளைக் ‘கடனே’ன்னுதான் படிக்க வேண்டியதிருக்கு. சினிமாவும் இப்படித்தான் ஆகிப்போச்சு. ஆரம்பத்திலே ஶ்ரீதரோட நெஞ்சில் ஓர் ஆலயம், அவளுக்கென்று ஒரு மனமெல்லாம் ரொம்பப் பிடிச்சிருந்துது. போலீஸ்காரன் மகளும் அப்படித்தான்.

மிளகு  – அத்தியாயம் இருபத்துநான்கு

நான்கு நாள் மழிக்காத தாடியை தெருக்கோடி நாவிதர் கத்தி வைத்து மழித்து, காசு வேண்டாம் என்றது. சோப் பூசிக் குளிக்காமல் வெறும் நீரில் அரப்புப்பொடி கலந்து தேய்த்துக் கொண்டது. விரித்த கைகள் போல் அகலம் அதிகமான தாமிரப் பாத்திரத்திலிருந்து எடுத்து எடுத்து மேலே பொழிந்து கொண்டு குளித்தது. மேலே துர்நாற்றம் இல்லாமல் சன்னமான பூ வாடை. மறக்க முடியாதது எல்லாம். இந்த சவரமும் குளியலும் பிடித்துப் போனது பரமனுக்கு. சோப்பின் முரமுரப்பும் சுத்தமான மேல் தோல் தரும் புத்துணர்ச்சியும் அரப்புப் பொடி தருவதில்லை தான். சோப்புக்கு எங்கே போக இந்த பழைய பாணி ஊரில்?

உணவு, உடை, உறையுள், … – 2

This entry is part 2 of 3 in the series உணவு, உடை, உறையுள்

இத்தனை ஆண்டுகள் கழித்து எப்படி நேர்ந்தது என்று தெரியவில்லை. ‘ஸ்பெல்டா’வின் வளர்ச்சிக்கு நான் வரைந்த திட்டம் பயனில்லாமல் போகுமோ என்கிற அச்சம், ‘எரேஸ்’ துண்டுகளைப் பயன்படுத்துவோரின் கவனக்குறைவால் நேர்ந்த சில விபத்துகளை வைத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல்கள் தொடுத்த வழக்கு, கவலை இல்லாத எதிர்காலத்துக்கு வழி காட்டியதால் வந்த நன்றி உணர்வு, பழைய நினைவுகளின் தாக்கம், இவை அனைத்தும் கலந்து எனக்குக் கொடுத்த மனக்குழப்பம். அதில் இன்னொன்றையும் சேர்த்துவிட்டேன்.

ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 10 in the series ஏ பெண்ணே

உன்னுடைய தாத்தா, மகனை மௌனமாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு, ‘என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். தொடர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறாள். குதிரையை அடக்கத் தெரியும். அதனால்தான் தன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்றார். உன் தாத்தா பாட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உன் அப்பாவோ பயணம் முழுவதும் இறுக்கமாகவே இருந்தார். சாதாரணமாகச்சொன்ன ஒரு விஷயம், எங்கள் இருவருக்கும் இடைவே, கற்பாறையை போல, வெகுநேரம் நின்றிருந்தது. நடுநடுவே, உன் அப்பா, மிகவும் தீவிரமான குரலில் ‘தன்னை பலப்படுத்தி மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் குதிரை சவாரி மட்டும் தெரிந்திருந்தால் போதாது’ என்றார். பெண்ணே, ஆணுக்கு எப்போதும் ஆதிக்கம் செய்ய வேண்டும். அவனுடைய இடம் எப்போதும் மேலே, கீழே அல்ல. மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்த பிறவியில் நான் ஆணாகப் பிறந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆண், போர் வீரனைப் போல தன் மனைவியையும் குடும்பத்தையும் எப்படி அடக்கி ஆள்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது சிரிப்பதற்கல்ல, மிகவும் ஆழமான விஷயம் பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் இதை அறிவாள்.

கடவுளும் காணா அதிசயம்

இசேவின் கதைகள், யமாதோவின் கதைகள், கொக்கின்ஷு ஆகிய நூல்கள் இவர் கிழக்கு ஜப்பானுக்கு இரண்டு உதவியாளர்களுடன் இடம்பெயர்ந்ததைக் குறிப்பிட்டுள்ளன. ஆனால் இரண்டு காரணங்களுக்காக இவ்விடப்பெயர்வு சந்தேகத்துக்குரியதாகப் பார்க்கப்படுகிறது. தலைநகர் கியோத்தோவிலிருந்து கிழக்கு நோக்கி இன்றைய தோக்கியோ வரை பயணப்பட்டதில் வழியிலுள்ள முக்கியமான இடங்களில் ஒவ்வொரு பாடலைப் புனைந்தார் என இசேவின் கதைகள் குறிப்பிடுகிறது. ஆனால் பாடல்களின் எண்ணிக்கையும் முக்கியமான இடங்களின் எண்ணிக்கையும் பொருந்தவில்லை. இது முதல் காரணம். மேலும், அரச குடும்பத்தில் பிறந்து உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறும் இரண்டே இரண்டு உதவியாளர்களை மட்டுமே அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் பயணம் செய்வார் என்பதும் பொருத்தமாக இல்லை.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?

This entry is part 5 of 9 in the series எங்கிருந்தோ

ஜிந்த் கௌராகிய நான் இந்திய விடுதலையில் எங்கள் பங்கினைப் பற்றிச் சொல்ல வேண்டிய நேரமிது. கண்ணீராலும். செந்நீராலும் வளர்த்த விடுதலையின் விலையை அனைவரும், குறிப்பாக இளைய தலைமுறையினர் அறிய வேண்டும். ஜாலியன் வாலாபாக்கின் சுவர்களில் இன்றும் கூட குண்டுகள் துளைத்த ஓட்டைகளை நீங்கள் பார்க்கலாம். இந்த இடமே தனித்த “தண்ணீர் விட்டோ வளர்த்தோம்?”

வாக்குமூலம் – அத்தியாயம் 3

ஊர் என்றால் வீடுகளும், கட்டிடங்களுமா ஊரு? இல்லை தெருக்களும், ரோடுகளும் ஊரா? இவங்க என்னென்னவோ புஸ்தகங்களைப் படிச்சுப் போட்டு என்னென்னவோ பேசுறாங்க. அவுகளுக்கும் பொஸ்தகம், சினிமா, நாடகம், கதை இதுதான் உலகம்னு ஆயிப் போச்சு. “வேணும்னா நீயும் சினிமாவுக்குப் போயிட்டு வா”ங்கிறாங்க. டி.வி.யில் போடாத படமா? டி.வி.யில் போடாத நாடகமா? ஒண்ணும் மனசுல ஒட்ட மாட்டேங்குது.

மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று

மருது முசாபரை அனுப்பி வைத்து விட்டு, தில்லியில் பகவதிக்கு ஃபோன் செய்ய, அதிகாலைக்கும் முந்திய புலரிப் பொழுதான மூன்றரை மணி தில்லியில். அவளும் அவள் அம்மா வசந்தியும் ராத்திரி சாப்பிடக் கூடப் பிடிக்காமல் காப்பி மட்டும் யாரோ போட்டுத்தரக் குடித்து தில்லியின் அதிகார வம்சத்தை அசைத்து உதவி கேட்டபடி இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. வீடே நண்பர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் வந்து வந்து போய்க்கொண்டிருக்க சந்தடி மிகுந்து இருந்ததாக பகவதி சொன்னாள்.

நீ காத்திருக்கப் பொறுக்கிலேன்

எந்த இடத்தில் எந்தச் சொல்லுக்கு எந்தப் பொருள் என்று எளிதாகப் புரிந்துகொள்ளத்தான் கான்ஜி எனப்படும் சித்திரவடிவச் சீன எழுத்துருக்கள் உதவுகின்றன. சாதாரணமாக まつ என எழுதப்படும் இந்த மட்சு எனும் சொல்லை 待つ என எழுதினால் காத்திருத்தல் என்றும் 松 என எழுதினால் ஊசியிலை மரம் எனவும் பார்த்தவுடனே எளிதாகப் பொருள்கொள்ளலாம்.

புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19

This entry is part 19 of 23 in the series புவிச் சூடேற்றம்

ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன். அடுத்த சில கட்டுரைகளை வாசித்தால், உங்களது இந்தக் குழப்பம் முற்றிலும் குறையும். அதற்கு முன்னர், சில விஷயங்களை இந்த உலகப் பிரச்சினையில் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

சீமாப் அக்பராபாதி

This entry is part 4 of 12 in the series கவிதை காண்பது

புத்தரைக் குறிப்பிடும்போது ‘இந்தியத் திருநாட்டின் முதல் ஒளி’ (சர்-ஜமீன்-ஏ-ஹிந்த் கா இர்ஃபானி-ஏ-அவ்வல் ஹை து) என்கிறார். இந்தியாவில் உன் ‘நினைவுகள் இன்னும் புதிதாக உள்ளன / சீனம் ஜப்பான் திபெத் வரை உன் குரல் எட்டியுள்ளது’ என்பது அந்தக் கவிதையில் இருக்கும் இன்னொரு அடி. தன்னுடைய ஹோலி கவிதையில் சீமாப் விடுதலை வேட்கையையும் இணைத்து எழுதியுள்ளார். ‘என் மடியில் முன்னேற்றம் தன் வண்ணங்களை நிறைக்கட்டும் / என்னுடைய ஹோலியின் வருகையைப் போல் விடுதலையும் வரட்டும்’ (இர்த்திகா கே ரங்க் சே லப்ரீஸ் ஜோலி ஹோ மேரி / இங்குலாப் ஐசா கோயி ஆயே தோ ஹோலி ஹோ மேரி).

உனக்காக உறைபனியில்

அரசவையில் உள்ளோர் மற்றும் உடலுழைப்பு அவ்வளவாகத் தேவைப்படாத பணியைச் செய்து வந்தவர்கள் முழுக்கை கொண்ட உடையையும் விவசாயம், தச்சுவேலை போன்ற பணிபுரிவோர் அரைக்கை ஆடைகளையும் போர்வீரர்கள் போன்ற சண்டையிடுவோர் கைப்பகுதி அற்ற ஆடைகளையும் செய்தொழில் வசதிக்காக அணிந்தனர். அரசவையில் இருந்த முழுக்கை ஆடையோர்க்கு அவர்களின் கைப்பகுதியின் தூய்மை முக்கியத்துவம் பெற்றது. அழுக்காகும் வாய்ப்புகள் குறைவு என்பதால் தனக்கு விதிக்கப்படாத ஒரு பணியைச் செய்தாலொழியக் கைப்பகுதியின் தூய்மை கெடாது எனக் கருதப்பட்டது.

மிளகு – அத்தியாயம் பதினேழு

உங்களில் எத்தனை பெயர் உலகைத் துறக்க, உணவுச் சுவை துறக்க, உறவுச் சுமை துறக்க, ஆடை துறக்க மனம் ஒப்புகிறீர்கள்? யாரும் மாட்டீர்கள். மனம் பக்குவப்படும் வரை”.

இவர்கள் இல்லையேல் – என்னுரை

டோக்ரி மொழியை எட்டாம் பட்டியலில் இணைக்க, மற்ற டோக்ரி கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் ஒருங்கிணைத்து போராடியதில், பத்மா பெரும் பங்காற்றினர். டோக்ரி மொழியை உலக அளவில் கொண்டு செல்வதற்கும், டோக்ரி மொழியை தன் படைப்புகளால் செழுமைப்படுத்துவதிலும், பத்மா ஆற்றிய பங்கு ஒப்பில்லாதது. அதனால்தான், ‘டோக்ரி மொழியின் தாய்’ என டோக்ரி மொழி பேசுபவர்களால் பத்மா பெரிதும் கொண்டாடப்படுகிறார்.

மிளகு: அத்தியாயம் பதினைந்து

சமணர்கள் ஒரு பூச்சி புழுவுக்குக்கூடத் துன்பம் உண்டாவதைப் பார்க்கவும் சகியார். இரவில் ஊரும் ஜந்துக்கள், பறக்கும் பூச்சிகள் நிறைய இருக்கும், ஆகாரம் பண்ண வாயைத் திறந்தால் உள்ளே போய் இறந்துவிடக் கூடும் என்பதால் சூரிய அஸ்தமனத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.

மிளகு அத்தியாயம் பதினான்கு

“எனக்கு வெங்காயம் இல்லாத மசாலாவும் சப்பாத்தியும் ராத்திரி சாப்பாடாக வேண்டும் என்று கோலாலம்பூரில் இருந்து வரும்போதே பதிந்து கொடுத்திருந்தேன். வைத்திருக்கிறார்களா கேள்”.
அறிவு கெட்ட கிழவா, அவனவன் உசிரு போகப் போகுதுன்னு பயந்து போய் இருக்கோம். நீ வெங்காயம் இல்லாம மசாலா கேட்கறே. நாசமாப் போறவனே
முன் வரிசையில் மூன்று புதுமணத் தம்பதிகள் தேன்நிலவு நேப்பாளத்தில் முடித்து தில்லிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள். அதில் ஒரு பையன் எழுந்து நின்று ஹலோ என்று கூப்பிட சங்கரன் பீதியோடு அவனைப் பார்த்தார்.
“லேடீஸ் வாண்ட் பாத்ரூம் யூஸ்”.

மிளகு அத்தியாயம் பதின்மூன்று

உடம்பு வாகு அல்லது ஏதாவது சுரப்பி சம்பந்தப்பட்ட கோளாறாக இருக்கும் என்று நினைத்தபடி சாரதா உபசாரமாகச் சொன்னது இது – ”அந்த உயரத்துக்கு உடம்பு இன்னும் கூட கொஞ்சம் சதை போட்டிருக்கலாம். அமிக்கு என்ன கவலை? முசாபர் நல்லா கவனிச்சுப்பான். அவன் இல்லேன்னாலும் நீயே கவனிச்சுக்க மாட்டியா என்ன?”
”நானாக என்னை கவனிச்சு கவனிச்சுத்தான் இப்படி சதை போட்டுடுத்து. அதுக்கு மேலே சுரப்பி சரியா வேலை செய்யாம சாப்பிடறது எல்லாம் சதையாகிட்டிருக்கு.”

மிளகு – அத்தியாயம் இரண்டு (1596)

விஜயநகரப் பேரரசின் சார்பில் சாம்ராஜ்ய பிரதிநிதி ஹனுமந்த ராயர் மனம் குளிர வாழ்த்தினார்.
“ஒரு குழந்தையைத் தாய் ஆசிர்வதித்து வாழ்த்துவது போல், விஜயநகரப் பேரரசின் சார்பில் வாழ்த்துகிறேன். நாடும் நீயும் எல்லாச் செல்வமும் குறைவின்றிப் பெற்று சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பில் என்றும் பத்திரமாக இருந்து எந்த இடரும் இன்றி நீடூழி வாழ்ந்து நல்லாட்சி தந்திடம்மா. அரியாகவும் அருகனாகவும் விளங்கி எங்கும் நிறை பரப்பிரம்மமான  தெய்வத்தின் பேரருளும், விஜயநகரப் பேரரசர் வெங்கடபதி தேவராயரவர்களின் வழிகாட்டுதலும் பிரியமும் என்றும் உனக்கு உண்டு”.
வயதான பிரமுகரான அந்த விஜயநகரப் பிரதிநிதியின் பாதம் பணிந்து எழுந்து அவரது வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டாள் சென்னபைரதேவி.

விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்

This entry is part 25 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இன்று உயிரினத் தொழில்நுட்பம் வளர்ந்து, அடிப்படையில் மரபணுக்கள் எல்லா உயிரனங்களுக்கும் ஒன்றுதான் என்று தெரிய வந்ததோடு அல்லாமல், அவற்றை எப்படி மாற்றியமைப்பது என்றும் புதிய உத்திகள் வந்துள்ளன. இதன் பயனாகப் பல புதிய வழிகள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

பரோபகாரம் – நாட்டுக்கு நாடு

This entry is part 5 of 5 in the series பரோபகாரம்

தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.

பரோபகாரம் – மஹா உதவல்கள்

This entry is part 4 of 5 in the series பரோபகாரம்

அமேசான் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை 5.75 லட்சம். நிறுவனத்தின் CEO ஜெஃப் பெஸோஸ் அவர்கள் அத்தனை பேருக்கும் தன் சொந்தப் பணத்திலிருந்து இந்த வருடம் தலா ஒரு லட்சம் டாலர் (சுமார் எழுபது லட்சம் ரூபாய்) பொங்கல் போனஸ் கொடுத்தாலும்கூட, அவரது சொத்து 2020 ஆரம்பத்தில் இருந்ததைவிட இன்று அதிகமாக இருக்கும்! காரணம் கொரொனா தாண்டவத்தால் உலகமே தடுமாறிக்கொண்டிருந்த போன வருடம் மட்டும் அவரது சொத்து மதிப்பு அவ்வளவு உயர்ந்திருக்கிறது!

ஆட்டத்தின் 5 விதிகள் – இரண்டாம் விதி

நண்பரின் அப்பாவிடம் நீங்கள் பேச ஆரம்பிக்கிறீர்கள் என்றால் உங்கள் கைப்பேசியில் நேரத்தை நொடிக்கணக்கில் எண்ணத் தொடங்குங்கள். 30 நொடிகளுக்குள் நண்பரின் அப்பா உங்களுக்கான அறிவுரைப் பேச்சிற்குள் நுழைந்து விட்டிருப்பார். சரி, நம் நன்மைக்குத்தானே சொல்கிறார் என்று நினைத்தீர்களானால் பேரன் பேத்திகளை வளர்ப்பது எப்படி எனும் அறிவுரையை பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் ஒன்றரை மணிநேரத்திற்கு சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்?

ஆட்டத்தின் 5 விதிகள் – முதல் விதி

ஆட்டத்தின் முதல் விதியை இன்னும் ஒரு விதமாகப் புரிந்து கொள்வதென்றால் இப்படிச் சொல்லலாம். வாடிக்கையாளரும் நுட்பமும்,புரிதலும், ஆய்தலும் உள்ளவரே

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2

நேரடியாக பேசுவோம். விற்பனை என்பது அடிப்படையில் ஒரு பரிமாற்றச் செயல்பாடு. விற்பனையாளரும், வாங்குபவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிகழ்த்தும் பரிமாற்றச் செயல். இதில் வாய்ப்புகள் அதிகம் இருப்பது வாங்குபவரிடமே. ஏனெனில் ஏற்பு, மறுப்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முடிவு வாங்குபவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விற்பனையாளர் என்ன செய்துவிட முடியும்? வாங்குபவரை ஏற்பினை நோக்கி உந்துவதே அடிப்படையில் விற்பனையாளரின் செயல். இந்த உந்துதலைச் செய்வதில்தான் விற்பனையாளருக்கு எண்ணற்ற வழிமுறைகள் போதிக்கப்படுகின்றன.

ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி?

2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை வரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.

மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)

1970கள் அல்லது 80களில் வெளிவந்த பல இந்திய திரைப்படங்களில் வில்லன்கள் இந்தியாவுக்குள் தங்கம் கடத்திக் கொண்டு வருபவர்களாகச் சித்தரிக்கப்படுவார்கள். அந்தப் படங்களைப் பார்த்து வளர்ந்த காலத்தில் நாம் அந்த வில்லன்கள் தேசபக்தியில்லாத குண்டர்கள், அவர்களுக்கு சுயநலம்தான் முக்கியம் என்று நினைத்துக்கொள்வது வழக்கம். அப்போதெல்லாம் இந்தியா ஒரு மாபெரும் லைசன்ஸ் “மூடிய எல்லைகள் – முடியாத பிரச்சினைகள் (குடிபுகல் – பாகம் 2)”

இந்திய டிஜிட்டல் புரட்சி

இந்திய அரசாங்கத்தின் நோக்கு, நாளொன்றிற்கு, 100 மில்லியன் ஆதார் அடையாளக் கோரிக்கைகளை 5 நொடிகளுக்குள் பதிலளிக்கும் சேவை. இத்தனைக்கும், இந்த 5 நொடிக்குள் நடக்கும் விஷயங்கள் மிகவும் நவீனமான ஒரு தொழில்நுட்பப் புரட்சி… முதலில், UDAI செய்த வேலை – முதல் ஆதார் எண் ஒதுக்குவதற்கு முன், ஆதாருடன் மின்னணு முறையில் எப்படித் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை வெளியிட்டதுதான். பல்லாயிரம், சேவை நிறுவனங்கள் ஆப்பிள் ஆப்ஸ்டோர், மற்றும் கூகிள் ப்ளேஸ்டோரில் ஒரு சின்ன நிரலை உருவாக்கினால், போதும். அந்த நிறுவனத்தின் நுகர்வோர் இந்த நிரல் மூலம் தங்களின் அடையாளத்தை எளிதில் நிறுவனத்துடன் சரி பார்த்துக் கொள்ளலாம்.

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்

இந்தியர்கள், பொதுவாகத் தொழில்நுட்பத் துறையில் முன்னேறியுள்ளதைப் பற்றிச் சொல்லிக் கொள்வதே சுவாரசியமான விஷயம்.  ஒவ்வொரு முறை இந்தியா வரும் பொழுதும் இப்படிப்பட்ட விஷயங்கள் காதில் விழுவதுண்டு. “இன்ஃபோஸிஸ் – ல வேலைக்குச் சேர்ந்து, அமெரிக்கா போய், கல்யாணமாகி அங்கேயே செட்டில் ஆகிட்டானாம். அதான் உங்க ஊர் பக்கத்தில் இருக்கும் “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – அறிமுகம்”

தானோட்டிக் கார்கள் – போக்குகள் மற்றும் எதிர்காலம்

இந்தத் தொழில்நுட்பம் எப்படி நம் சமூகங்களைப் பாதிக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. ஆயினும், இன்று நமக்குத் தெரிந்த போக்குகள், சவால்களை வைத்துச், சில யூகங்களை முன் வைக்க முடியும். இதில் எத்தனை யூகங்கள் உண்மையாகும் என்று சொல்வது கடினம். நம்முடைய இந்தப் போக்கு பற்றிய யூகங்களைச் சில ஐந்து ஆண்டுகள் வாரியாகப் பிரித்துப் பார்த்தால், சற்று தெளிவு பிறக்கலாம். இதில் சொல்லியுள்ள யூகங்கள் ஒரு ஐந்து ஆண்டு இடைவெளியிலிருந்து அடுத்த ஐந்தோ அல்லது பத்தாண்டு இடைவெளிக்கோ நடைமுறை பிரச்னைகளைச் சார்ந்து மாறலாம்.

பருவகாலப் பரவலியலும் தொழில்நுட்பவியலும்

லட்சகணக்கான ‘ஸ்டொமாடா’ (க்ரேக்க மொழியில் ‘ஸ்டோமா’என்றால் ‘வாய்’) என கூறப்படும் இலைத்துளைகள் மூலம் மரங்கள் கூட, மாறும் சுற்றுசூழலின் விளைவுகளைப்பற்றி பல உண்மைகளைக் கூறுகின்றன. நீர் ஆவி, கரியமில வாயு, மேலும் பிராணவாயு ஆகிய எல்லாமே இந்தத் துளைகள் வழியே இலைகளுக்குள்ளும் வெளியேயும் செல்கின்றன, அதன் மூலம் பிழைத்திருப்பதை ஒரு சவாலாக ஆக்குகின்றன….ஆனால் ஆன்ட்ரூவும் ட்ரெவரும், …மற்றொரு கட்டுரையில், கரியமிலவாயு அதிகரித்துள்ள போது, ஹார்வர்ட் காட்டின் மரங்கள், சிகப்பு ஓக் உள்பட, கூடுதலான செயல் திறனுயுடன் செயல்படுகின்றன என்பதைப் பதிவு செய்திருக்கிறார்கள். வேண்டிய கரியமிலவாயுவை உட்கொள்ள தங்களது இலைத்துளைகளை அவ்வளவு விரிவாகவோ அல்லது அவ்வளவு அடிக்கடியோ அவை திறப்பதில்லை. அப்படியென்றால் மரங்களால் குறைந்த அளவு நீர் உபயோகித்து வேண்டிய அளவு அல்லது தேவைக்கு மேலான அளவு உணவு தயாரிக்கமுடிகிறது என்றாகிறது.

குழந்தைக்கு சொல்லிக் கொடுப்பது போல் கம்ப்யூட்டருக்கு சொல்லித் தருவது எப்படி?

காரில் பயணம் செய்யும் பொழுது, இளையராஜாவின் பாடல்களில் அவருக்கு ஒரே குழப்பம். எந்தப் பாடலை எஸ்.பி.பி. பாடுகிறார், எந்தப் பாடலை யேசுதாஸ் பாடுகிறார் என்று எவ்வளவு முறை தெளிவுபடுத்தினாலும், அவருக்குச் சரிவரப் பிடிபடவேயில்லை. பத்து நாட்களுக்குப் பின் இந்தியா சென்று விட்டார். அவருக்குப் பழைய இந்திப் பாடல்கள் மிகவும் பிடிக்கும், மன்னாடே, ஹேமந்த் குமார் பாடல்களை யூடியூபில் கேட்ட வண்ணம் இருப்பார். எனக்கு, எந்தப் பாடல் மன்னாடே பாடியது, எது ஹேமந்த் பாடியது என்று அந்தப் பத்து நாட்களும் குழப்பம். இருவருக்கும் இசை மீது ஈர்ப்பு இருந்தும், ஒருவருக்குச் சட்டென்றுத் தெரிந்த குரல்கள், இன்னொருவருக்குப் பிடிபடவில்லை. ஏன்? எனக்கு, கேட்கும் மொழி இந்தி என்றும், அவருக்கு நான் இசைக்கும் பாடல்கள் தமிழ்ப் பாடல்கள் என்றும் தெரியும். ஆனாலும், இருவருக்கும் மொழி, இந்தச் செயலுக்கு உதவவில்லை…. அவரது மூளையும், என்னுடைய மூளையும் வெவ்வேறு முறையில் செயல்படுகிறது. இதை வேறு விதமாகவும் சொல்லலாம். அவருடைய மூளையும், என்னுடைய மூளையும், வெவ்வேறு முறைகளில், பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன.

’தானோட்டிக் கார் ஐபேடுக்குச் சக்கரம் வைத்தது போன்றது’

மேற்குலகில், சாலையில் ஒரு விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட இரு வாகனங்களும் (இரு வாகன விபத்து என்று கொள்வோம்) அங்கேயே நிறுத்திவிட்டு, போலீசாரை வரவழைக்க வேண்டும். விசாரணை நடத்திய போலீஸ் அலுவலர், தன்னுடைய அறிக்கையின் நகலை இரு வாகன உரிமையாளருக்கும் கொடுத்து விடுவார். யார் மீது தவறு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும், வாகனச் சேதத்தை, தவறுக்கேற்றாற் போல, சம்பந்தப்பட்ட ஒரு வாகன உரிமையாளரின் காப்பீடு நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். இதற்கு முக்கியமான ஆதாரம், போலீசாரின் அறிக்கை. இந்த அறிக்கையைக் கூர்ந்து கவனித்தால், கவனி – சீரமை – முடிவெடு – செயலாற்று என்னவென்று எளிதில் புரிந்துவிடும்.

நவம்

செலாவணி ஆகிப் போன பண்டைத் தமிழ்ச் சொல் மவ்வல். இன்றைய தமிழ் சினிமாப் பாட்டில் செல்லுபடி ஆகிறது. அங்காடி தமிழ் சினிமாப் பெயராகிறது. பனுவல் புத்தகக் கடையின் பெயராகிறது. பழம் சொற்கள் பலவற்றையும் பரணில் போட்டு விட்டோம் என்பதனால் அவை உயிரற்றவை ஆகிவிடாது என்றும். நாவல் எனும் சொல்லுக்கு நவ்வல் என்பது மாற்றுச் சொல். நவ்வார் எனும் சொல்லுக்குப் பகைவர் என்று பொருள் உண்டு. பெண்மானைக் குறிக்க நவ்வி என்று சொன்னோம். நவ்வி என்றால் மரக்கலம் என்றும் பொருள். நாவாய் என்றாலும் மரக்கலம். நய்யா என்றால் இந்தியில் மரக்கலம். Navy எனும் சொல்லையும் நீங்கள் பரிசீலிக்கலாம். நவ்வு என்றால் முழுதாக நம்புதல் என்றும் பொருள். இந்தப் பின்புலத்தில் இந்தக் கட்டுரைக்கு நவம் என்று தலைப்பு வைத்தேன். உண்மையில் எண்கள் சார்ந்து இஃதென் ஒன்பதாவது கட்டுரை. நவம் என்ற சொல்லுக்கு முதற்பொருள் புதுமை. புதுமையை novel என்பர் ஆங்கிலத்தில். நாவல் என்பதோர் இலக்கிய வடிவம் என்பதும் அறிவோம். அதனால்தான் …

தானோட்டிக் கார்கள் – தானியக்க வரலாறு

திடீரென்று தானோட்டிக் கார்கள் ஒன்றும் முளைத்து விடவில்லை. பல திரைப்படங்கள் மற்றும் விஞ்ஞானக் கதைகள் இவற்றைப் பற்றிக் கடந்த 60 ஆண்டுகளாகக் கற்பனை செய்து வந்துள்ளன. ஹாலிவுட் திரைப்படமான ஸ்பீல்பர்கின் Back to the Future, Minority Report (2002) திரைப்படங்களில், கார் தானே செலுத்திக் கொள்ளும். அதே போல, Total Recall (1990), Demolition Man, I Robot (2004), The Car (1967) போன்ற ஹாலிவுட் திரைப்படங்களும் தானோட்டிக் கார்களை நல்லனவாகவும், கொடுமை எந்திரங்களாகவும் கற்பனை செய்து பொது மக்களின் சிந்தனையைச் செதுக்கியுள்ளன. இந்தக் கட்டுரை சினிமாவைப் பற்றியது அல்ல – எப்படி, படிப்படியாக கார்களில் தானியக்கம் தோன்றியது என்பதைப் புரிந்து கொள்வதைப் பற்றியது

உலகம் சுற்றிவந்தபோது: சோமாலியா

சோமாலி கரென்சிக்கு அப்போதும் அதிக மதிப்பிருந்ததில்லை. ஒரு அமெரிக்க டாலர் வாங்க சுமார் 180-200 ஷில்லிங்குள் தேவை. கடைவீதியில் கட்டுக்கட்டாக சோமாலி ஷில்லிங் நோட்டுகள் பரிமாற்றம் நிகழ்வதைப் பார்த்து ஆரம்பத்தில் மிரண்டிருக்கிறேன். ஒருமுறை அரபுக்கடையில் நிடோ டின் வாங்கிய நண்பர் கோவிந்த் குமார் 20 ஷில்லிங் கட்டுகளில் மூன்றைத் தூக்கி வீசுவதைக்கண்டு பதறினேன். `என்னது! நோட்டை எண்ணாம அப்படியேக் கட்டாத் தர்றீங்களே! ` என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில்: `இங்கே கெடைக்கிற நோட்டு இருக்கே! நோட்டா இது! ஒரே அழுக்கு, புழுதி. எண்ண ஆரம்பிச்சா தும்மல் வரும்! நான் எண்றதில்ல. கட்டைத் தூக்கிக் கொடுத்திடுவேன். வேணும்னா அவன் எண்ணிக்கட்டும்! அதே மாதிரி கட்டா மீதி கொடுத்தா, எண்ணாம அப்படியே வாங்கிப் பையிலே வச்சிக்குவேன். அடுத்த கடையில தூக்கிக் கொடுக்கவேண்டியதுதானே!` என்றார். நல்ல நாடு இது! எனக்குன்னு செல்க்ட் பண்ணி அனுப்பியிருக்கு இந்திய கவர்மெண்ட்டு! – என்று நினைத்துக்கொண்டேன்.

அறிதலின் பேரிடர்

இந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.

பாதுகாப்புப் பிரச்னைகள்

கருவிகளின் இணையம் பற்றி இத்தனை பகுதிகளிலும் அதன் நல்முகத்தைப் பற்றி எழுதி வந்தவர், எப்படி பல்டி அடித்து இப்படித் தாக்குகிறார் என்று உங்களுக்கு தோன்று முன், முதலிலேயே சொல்லி விடுகிறேன். எல்லா புதுத் தொழில்நுட்பங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பல ஊடகங்கள் அதன் குறைகளை ஆரம்ப நாட்களில் பெரிது படுத்துவதில்லை. பரவலாக அந்தத் தொழில்நுட்பம் பயனில் வந்த பின்புதான் அதன் குறைகள் மக்களுக்குப் புரிய வரும்

கருவிகளின் இணையம் – பொதுப் பயனுடைமை உலகம் – பகுதி 14

தண்ணீரின் அளவு எத்தனை என்று பல அரசாங்கங்கள் பலாண்டுகளாக பதிவுகள் வைத்து வந்துள்ளார்கள். ஆனால், கருவிகள், இந்த நீர் சக்கர மேலாண்மையை இன்னும் நன்றாகக் கட்டுப்படுத்த பல விதங்களிலும் உதவும். அவ்வப்பொழுது, அனைத்து உலக நகரங்களிலும், சில நாட்கள் ஏராளமான குளோரின் வாசம் குடிநீரில் நாம் முகர்ந்திருக்கிறோம். இதற்கு என்ன காரணம்? ஒரு புயலோ, அல்லது பெரு மழையோ பெய்தால், நதி நீர் அல்லது ஏரி நீரின் தூய்மை குறைந்ததை மெதுவாக ஒரு வேதியல் நிபுணர் ஒரு சாம்பிள் எடுத்து, அதை ஒரு ஆராய்ச்சிசாலையில் ஆராய்ந்து, தூய்மை அளவு மோசமாகிவிட்டதைப் பற்றி கதறி (☺), மேலாண்மை உடனே, குளோரின் அளவை அதிகரித்து, நிலமையைச் சமாளிப்பார்கள். இதற்கு சில நாட்களாகி விடுகிறது. இங்குதான் கருவிகள், ஆராய்ச்சிசாலையாய், நதியின் பல நிலைகளிலும் நமக்கு நீரில் எத்தனைக் கரைந்த பிராணவாயு உள்ளது, எத்தனைக் கரைந்த மற்ற ரசாயனங்கள் உள்ளன என்று சொல்லிய வண்ணம் இருக்கும். ஒரு கணினி பயன்பாடு, நீரில் தேவையான ரசாயனங்கள் குறைந்தவுடன், உடனே அறிவிக்கும். எதற்கும் காத்திருக்காமல், சில நீர் சுத்த சமாச்சாரங்களை சரிப்படுத்தி விடலாம். குடிநீர் தரக் கட்டுப்பாட்டிற்கு இது ஒரு மிகப் பெரிய உதவியான விஷயம்.