ஊருக்குள் இருந்தவரை மனத்தில் நிறைந்திருக்கும் கசப்பு, ஆங்காரம், ஏமாற்றம், பழி,வெற்றி, தோல்வி போன்ற சமூகக் கட்டமைப்பிற்குள் உருவாக்கப்பட்டவை அனைத்தும் கரிசல் காட்டுக்குள் நுழைந்ததும் அழிந்துபோய், உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் பிரச்சனைகளான பசியும் எதிரிகளிடமிருந்து உயிர் தப்புதலும் மட்டுமே அன்றாடங்களை நிரப்பி ஆதிமனிதனாக்கிவிடும் நிலையை அப்பட்டமாகச் சொல்லும் கதை.
Category: திரைக்கதை
ஜோஆன் டிடியன்
ஜோஆன் டிடியன் (Joan Didion) என்னும் எழுத்தாளரை, திரைக்கதாசிரியரை, பத்தியாளரை உங்களுக்குத் தெரியுமா? கீழே ஒரு சுருக் அறிமுகம்:
சாய்ராட்- மராத்தி திரைப்படம் பற்றி
மராத்தி மொழி மனதில் பதிய ஆரம்பித்தது. தொலைக்காட்சி சேனல்களின் மராத்தி நாடகங்களும், பென்னின் கார்னிவல் சினிமாவாக புதுப்பிக்கப்பட்ட மோரேஷ்வர் தியேட்டரில் பார்த்த மராத்தி படங்களும் மராத்தியை புரிந்துகொள்ள உதவின. சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி பேச்சுத் தமிழில் இருக்கும் வேறுபாடு போலவே, மராத்தியின் பல்வேறு பேச்சுவழக்குகளின் வித்தியாசம் புரிய ஆரம்பித்தது. உட்கிராமங்களின் பழைய பேச்சு வழக்கிலிருந்து, நகரங்களின் பேச்சு வழக்கு மிகவும் வித்தியாசப்பட்டது. அரசியல் கடைக்கோடி கிராமம் வரை கோலோச்சியது. ஒரே குடும்பத்திற்குள் கலவரத்தை உண்டாக்குமளவுக்கு அரசியல் வேரூன்றியிருந்தது.
சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்
கிளாசிக் பட வரிசையில் “நாயக்” 1966ஆம் ஆண்டு சத்தியஜித் ராய் அவர்களால் வங்க மொழியில் இயக்கப்பட்டு வெளிவந்த கருப்பு வெள்ளை படம். அரிந்தம் முகர்ஜி என்ற மிகப் பிரபலமான வெகுஜன நடிகனின் உள்மனப் போராட்டங்களின் தொகுப்புதான் இந்தப் படம். வங்க மொழியைச் சேர்ந்த உத்தம் குமார் அந்த நடிகர் “சத்யஜித் ராய் என்றொரு பெரும் கலைஞன்”
விதியின் பிழை காண்: இறுதி பாகம்
ராணியின் கனவில் வந்தது போலவே, ஒரு குழந்தையின் சிரிப்புச் சத்தம் கேட்கிறது. பச்சைப் பசேல் என்று செடி கொடிகள். அவற்றின் இடையே உள்ள கல் பாதை தெரிகிறது. மறுபடியும் குழந்தையின் சிரிப்புச் சத்தம். பாதையில் ஒரு வயதுக் குழந்தை ஒன்று நடந்து வருகிறது. தள்ளாடித் தள்ளாடி சிரித்தவாறே வருகிறது. சிரித்தபடி முன்னால் நிமிர்ந்து பார்க்கிறது. பார்த்து விட்டு அப்படியே நிற்கிறது.
விதியின் பிழை காண் – ஆறு
நீங்கள் கண்ணயர்ந்தது எந்த நேரம்?
தென்னதரையன்: தெரியாது. ராணியின் அலறல் கேட்டு விழித்தேன். மூன்றாம் சாமம் இருக்கும்.
தருமன்: ஆமாம். சிறிது நேரத்தில் என்னைக் கூட்டி வந்தார்கள். நான் வந்தவுடன் ராணியை ஒன்று கேட்க வேண்டும் என்று நினைத்தேன்.
விதியின் பிழை காண் – பகுதி 5
அந்தப் பழங்காலக் கோவில் எரிந்து புகைகிறது. அங்கங்கே குள்ளர்களின் சடலங்கள் விழுந்து கிடக்கின்றன. புகையினூடே மூன்று வீரர்கள் நடந்து வருகிறார்கள். வீரர்கள் இரு பக்கமும் பார்த்தவாறே வருகிறார்கள். அவர்களில் முன்னால் வருபவன் அச்சுதன். அந்த வீரர்களில் ஒருவன் முந்திய நாள் நாம் குற்றாலீஸ்வரர் கோவிலில் பார்த்தவன். காட்டில் குள்ளர்களைக் கொடுமை செய்தவன்.
விதியின் பிழை காண் – பகுதி 4
பட்டத்திப் பாட்டி: உன்னிடம் நாலைந்து முறை சொல்ல வந்தேன். நீ இந்தக் காலத்துப் பிள்ளை. பாட்டிகளிடம் தெருவில் நின்று பேச மாட்டாய்.
நாகை: பாட்டி, அவர் என்னிடமே பேச மாட்டேன் என்கிறார். எப்பொழுதும் வீட்டுக்குப் பின்னால் குழி தோண்டிக் கொண்டு இருக்கிறார்.
விதியின் பிழை காண் – பகுதி 3
நாகை : நாமே குழந்தையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தால் என்ன?
தருமன் : எப்படி? என்னிடம் தான் சக்தி எதுவும் இல்லையே? இந்தப் பாட்டியும் தாத்தா கொடுத்த பெட்டியைத் தூக்கிக் கொண்டு போய் விட்டாள்.
சின்னச்சின்ன சிந்தனைச்சோதனைகள்
ஒரு கிராமத்தில் சில நூறு ஆண்கள் வாழ்வதாகக்கொள்வோம். அதில் பலர் தங்கள் முகத்தை தாங்களே சவரம் செய்து கொண்டு விடுகிறார்கள். மற்றவர்கள் சவரம் செய்துகொள்ள அதே கிராமத்தில் வாழும் நாவிதரை நாடுகிறார்கள். கிராமத்தில் இருப்பவர் ஒரே ஒரு ஆண் நாவிதர்தான். அவர் தனக்குத்தானே சவரம் செய்து கொள்கிறார். இப்போது நாவிதரிடம் சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும், தாங்களே சவரம் செய்து கொள்பவர்களை ஒரு அணியாகவும் பிரித்தால், நாவிதரை எந்த அணியில் சேர்க்க வேண்டும்?
விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி 2
அச்சுதன்: அரையா, இங்கே நன்றாகச் சாப்பிட்டுத் தூங்கி வருகிறாய் போலிருக்கிறது?
தென்னதரையன் (முறைத்தவாறே): அச்சுதரே, நான் தூங்கி மூன்று நாட்கள் ஆயிற்று. அரசர் கூடாரத்தில் உங்களைப் போல அடைந்து கிடக்கும் பழக்கம் எனக்கில்லை.
விதியின் பிழை காண் – திரைக்கதை – பகுதி – 1
வருடம் கி.பி.500. தென் தமிழகத்தில் நூறு வருடங்களாக அமைதி நிலவுகிறது. மதுரையை ஆண்ட களப்பிரரும் திருநெல்வேலிப் பாண்டியரும் போரின்றி ஆட்சி செலுத்துகிறார்கள். இரண்டு நகரங்களுக்கும் நடு வழியில் தூங்கி வழிகிறது சாத்தூர் கிராமம்.கிராமத்தின் அருகே உள்ள காட்டில் வனதுர்க்கை கோவில். தன்னுடைய மனைவி மற்றும் ஒரு வயதுக் குழந்தையுடன் அங்கு படையலிட வர இருக்கிறான் பாண்டியன்…