ஜனநாயகத்தின் வழிகள்

இன்று தமிழகம்தான் இந்தியாவிலேயே அதிக போராட்டங்கள் நடைபெறும் மாநிலம். 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் 20,450 கண்டன ஆர்ப்பாட்டங்களும் அடுத்தபடியாக பஞ்சாப் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களில் முறையே 13,059 மற்றும் 10,477 ஆர்ப்பாட்டங்களும் நடந்தது. இவற்றில் கணிசமான அளவிலான போராட்டங்கள், அரசு கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்தே இங்கு நடத்தப்படுகின்றன. தமிழக அரசும் மத்திய அரசும் தமிழக மக்களை கேட்காமலேயே திட்டங்களை அமல்படுத்திடுகின்றன என்றும், அவை தமிழக நலன்களுக்கு எதிரானவை… இப்போது எட்டுவழிச் சாலை, கோவையின் குடிநீர் விநியோகம் தனியார்ப்படுத்துதல் போன்ற திட்டங்கள் மக்களிடம் எந்த கருத்தும் கேட்காமல், மக்களுக்கே தெரியாமல் கொண்டு வரப்படுகின்றன என்றும், இதற்கு முன்கூடங்குளம், மீத்தேன் எரிவாயுத் திட்டம், கெய்ல் குழாய்கள் பதிக்கும் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத் திட்டம், நீட் நுழைவுத் தேர்வு முதலிய பிற திட்டங்களும்…

எம். எல். – அத்தியாயம் 9

“எல்லாக் கட்சிக்காரனும்தான் கூட்டம் போடுதான், போராட்டம் நடத்துதான். இதனாலே ஜனங்களுக்கு என்ன நன்மை? அவன் அவன் ஒழைச்சுச் சம்பாதிக்கான். வேலை பாக்கான். தொழில் செய்தான். இதிலே கட்சிக்காரன் ஜனங்களுக்கு என்ன செய்யக் கெடக்கு?….”

“அப்போ கோபால் பிள்ளை தாத்தா ஜனங்களுடைய பிரச்னைகளைப் பத்திப் பேசினதுக்கு எந்த அர்த்தமும் இல்லியா மாமா?…”

“பேசினா போதுமா? வெறுங்கையாலே மொழம் போட்ட மாதிரிதான். … ஏதோ பதவிக்கு வந்து ஆட்சியப் பிடிச்சாலாவது ஏதாவது செய்யலாம். கம்யூனிஸ்ட் கட்சி என்னைக்காவது பதவிக்கு வந்திருக்கா? வெறும் பஞ்சாயத்து, முனிசிபல் வார்டு கவுன்சிலராவதுக்கே கட்சி ததிங்கிணத்தோம் போடுது… மாப்ளே.. நமக்கு எதுக்கு இந்த அரசியல் எளவெல்லாம்… இதனாலே சல்லிக் காசுக்குப் பிரயோசனம் இல்ல மாப்ளே… நீ போயிக் குளிச்சிச் சாப்புட்டுட்டு கடைக்குப் போ… இதெல்லாம் பேசித் தீரக் கூடிய வெசயமில்லே… நான் கீழே போயி அத்தை கிட்டப் பேசிட்டு வாரேன்..” என்று சோமுவின் தோளில் தட்டிச் சொல்லி விட்டு எழுந்தான்.

நீளும் சாலைகள், பயணங்களும்தான்…

இந்த நூற்றாண்டின் அமெரிக்கப் பெண்கள் பலரும் நன்கு படித்து ஆண்களுக்கு நிகராக நல்ல பதவியிலும், பொறுப்பிலும் இருக்கிறார்கள். அரசியல், கல்வி, கலை, விளையாட்டுத்துறை, மருத்துவம், நீதித்துறை , விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல், விவசாயம் என்று அனைத்துத்துறையிலும் பெண்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும் கூட கடந்த நூற்றாண்டுகளின் நாலாம் தரத்திலிருந்து இரண்டாம் தரத்திற்குத்தான் உயர்ந்திருக்கிறார்களோ என எண்ணிடக்கூடிய வகையில்தான் நிதர்சனங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பல சட்டங்கள் இன்றும் ஆண்களுக்குச் சாதகமாகவே இருந்து வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

வ. உ. சிதம்பரனாரின் சமூக விழிப்புணர்வு

வ.உ.சி. ஒரு முறை சென்னையில் அச்சுக்கூடம் ஒன்றில் சுவாமி சகஜானந்தர் என்ற துறவியைச் சந்திக்கிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அவர் தன்னை “நந்தனார் சமூகத்தினர்” என்று வ.உ.சி.யிடம் அறிமுகம் செய்துகொண்டார். வ.உ.சி. உடனே அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் செல்லும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்வார். சகஜானந்தருக்குத் தமிழ்ப் பயிற்சி ஊட்டினார். அவருக்குத் தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்தார். … சகஜானந்தர் வ.உ.சி. க்கு எழுதிய கடிதத்தில் “சிதம்பரம் என் சற்குருவே” என்று குறிப்பிடுகிறார். மேலும் வ.உ.சி.யைப் பற்றிக் குறிப்பிடும் போது “என்னைத் தன் பிள்ளை போல் வளர்த்தவர்” என்று கூறுகிறார்.

பிரதமர் மோதியின் கலிஃபோர்னிய விஜயமும், டிஜிடல் இந்தியாவும்

ஞாயிறு காலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியப் பிரதமரை அவரது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழைத்து அங்கு ….ஒரு டவுன்ஹால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் 1200 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஏராளமான இளம் தொழில்நுட்ப பொறியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்றனர். …அங்கு மோதியிடம் மார்க் பார்வையாளர்களின் கேள்விகளைக் கேட்டார். ..நாற்பதாயிரத்திற்கும் மேலான கேள்விகள் ..வந்திருந்ததாக மார்க் குறிப்பிட்டார்.
(பதிலில் மோதி), இந்தியாவில் இரண்டரை இலட்சம் பஞ்சாயத்துகள் உண்டு. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அனைத்து பஞ்சாயத்துக்களையும் இழை ஒளியிய வடம் மூலமாக இணைக்க விரும்புகிறோம். ….
1.எண்ணியல் நுட்பமும் அதன் பயன்பாடுகளும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உதவி செய்யக் கூடிய பயன் படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள் –நான் எண்ணியல் நுட்பத்தை சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக…. மக்களை வளப்படுத்த.. அவர்களின் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் வாய்ப்புகளுக்குமான இடைவெளிகளைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன். சமூக ஊடகங்கள் மக்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் மனித மதிப்பீடுகளை மதிக்கும் கருவிகளாக உள்ளன.
2.ஈ-கவர்னன்ஸ்: எண்ணியல் நுட்பம் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது. … மின் – ஆளுகை மூலமாக ஊழலில்லாத, நேரடியான, வெளிப்படையான வேகமான, பொறுப்பான பங்களிப்புள்ள எளிமையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முடியும்.

துயரில் விளைந்த ஜனநாயகம் – போலந்து

சென்ற வார இறுதியில் – சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.

போலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.

ஈரானில் குடிமக்கள் இதழியல்

ஈரானில் நிலைகளைப் பற்றி முப்பதாண்டுகளாக மேம்போக்காவே செய்திகளைக் கொடுத்து வந்த மேலை நாட்டுப் பத்திரிகைகள், டெஹ்ரானில் இன்று ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு என்ன வழிகளில் எழுந்தது என்று கவனிக்கத் தவறி விட்டன. கடந்த ஜுன் மாதம் நடந்த தேர்தலில் மோசடி நடந்து விட்டது என்பதற்காக ஈரானியர்கள் தம் உயிரையும் உடலையும் பேராபத்துக்கு ஆளாக்கி எழுச்சியை நடத்தவில்லை, முப்பதாண்டுகளாகச் சந்தித்த மிருகத்தனம், அவமதிப்பு, மேலும் பெரும் அவலங்கள் ஆகியவற்றுக்கு எதிராகவே போராடுகிறார்கள் என்று எழுதுகிறார் ஈரானியப் பெண்ணியக்க வாதியும், பேராசிரியருமான ஹைதெ தரகாஹி.