உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?

This entry is part 18 of 23 in the series புவிச் சூடேற்றம்

இன்று தயாரிக்கும் சிடிக்கள் எங்கு போகும்? இன்றைய செல்பேசிகள் எங்கு போகும்? இந்தச் சிந்தனை அவசியம் எழ வேண்டும். ஒரு தயாரிப்பை வடிவமைக்கும் பொழுது, அதன் வாழ்நாள் முடிந்தவுடன், எப்படி மறுபயன்பாட்டிற்கு உதவும் என்பதையும் தயாரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் அவசியம் சிந்திக்க வேண்டும். கடந்த 300 வருடங்களாக நாம் இதைச் செய்யத் தவறி விட்டோம். இன்று, ப்ளாஸ்டிக், அனல் மின் நிலையம், மின்னணுவியல் சாதனங்கள், அணுமின் நிலையம் என்று எல்லாவற்றிலும், இந்தக் கழிவுப் பிரச்சினை, நம்மை கதிகலங்க வைக்கிறது.

புவி சூடேற்றம் பாகம்-13

This entry is part 13 of 23 in the series புவிச் சூடேற்றம்

50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. உயிர்கள் தழைத்தன என்பதை எதை வைத்துக் கொண்டு சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. இன்றைய தொல்லெச்ச எரிபொருள்கள் உருவாவதற்குக் காரணமே, அந்த காலங்களில் மறைந்த உயிர்களே!

விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10

This entry is part 10 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடந்த ஐம்பது ஆண்டுகளாக, புவிச் சூடேற்றம் பற்றி விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், பெரிதாக, இந்த உலகம் எதையும் மாற்றவில்லை. மாறாக, தொல்லெச்ச எரிபொருட்களுக்கு மேலும் அடிமையாகிக்கொண்டே வந்துள்ளது. விஞ்ஞானிகளின் பார்வையில், நேரம் சற்று கடந்துவிட்டாலும் இன்று தொடங்கி மனித இனம் தன்னைக் காப்பற்றிக் கொள்ளமுடியும்வ்

புவிச் சூடேற்றம்- பகுதி 9

This entry is part 9 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடலில், நம் முந்தைய அட்டூழியங்களின் தாக்கங்கள் யாவும் வெப்பமாகத் தேக்கி வைக்கப்பட்டுள்ளன. தேக்கி வைத்த வெப்பம், முதலில் வெளி வந்தால்தான் குளிர்வதற்கு சந்தர்ப்பம் இருக்கும். கடந்த 50 ஆண்டு கால தொல்லெச்ச பொருட்களின் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டால், 2100 ஆம் ஆண்டு வரை, குளிர்வதற்கான வாய்ப்பே இல்லை. பூமி, நாம் தொல்லெச்ச பயன்பாடு எல்லாவற்றையும் நிறுத்தினாலும், தொடர்ந்து 2100 –ஆம் ஆண்டு வரை வெப்பமாகிக் கொண்டே போகும். அடுத்த 80 ஆண்டுகள் பொறுப்பாக நாம் இருந்தால், 2100 –க்குப் பிறகு, பூமி குளிர வாய்ப்பு இருக்கிறது.

புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8

This entry is part 8 of 23 in the series புவிச் சூடேற்றம்

புவிச் சூடேற்றத்தால், நிலம் வறண்டு, தாவரங்கள் காய்ந்து, தீ பரவ அதிக சூழல் தோன்றுகிறது. முன்னம், நதிகள் பகுதியில் பார்த்ததை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். வழக்கத்தைவிட முன்னதாக வந்த வசந்த காலம், முன்னமே முடிவதால் நீள்கிற கோடைப் பருவ காலத்தால், நதிகள் நீரின்றி ஆகி, காடுகளை வறண்ட நிலமாக்கிவிடுகின்றன. வறண்ட காடுகள், தீ பரவத் தோதானதாக மாறிவிடுகின்றன.

விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்

This entry is part 7 of 23 in the series புவிச் சூடேற்றம்

செயற்கை கோள் தரவுகள் மூலம், இந்தியா, சைனா, தென்கிழக்கு ஆஸ்ட்ரேலியா மற்றும் பிரேஸில் போன்ற நாடுகளில், பசுமை நிலங்கள் அதிகரித்துள்ளன. இதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? இந்த நாடுகளில், காடுகள், விவசாயத்திற்காக அழிக்கப்படுகின்றன. அதே போல, செயற்கை கோள் தரவுகள் மூலம், வடக்கு ஐரோப்பா, ஆசியா, தென் மேற்கு அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் காங்கோ நதி டெல்டா பகுதி, இவை யாவும் பாலைவனமாகி வருகிறது. பசுமைப் பகுதிகள், காடுகளை அழிப்பதால் அதிகமாவதால், இன்றைய தரவு சரியாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், 1970 –க்கு முன், அமெரிக்க தென் மேற்குப் பகுதிகள் பசுமையாக இருந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்

This entry is part 6 of 23 in the series புவிச் சூடேற்றம்

கடலில் வாழும் உயிரினங்கள், இந்தச் சூடான கடலில் வாழப் பழக்கப்படுத்திக் கொள்கின்றன. இல்லையேல் மடிய வேண்டியது தான். சில சின்ன உயிரனங்கள், பெரியவற்றை விட, மிகவும் பாதிக்கப்படுகின்றன. துருவப் பகுதிகளில் வாழும் krill போன்ற சின்ன உயிரினங்கள், இந்தச் சூடேற்றத்தால், 80% வரை மறைந்து வருகின்றன. இந்தக் கடல் உணவுச் சங்கிலியின் ஆரம்பத்தை, மனிதன், வெற்றிகரமாக அதனருகே கூடப் போகாமல், அறுத்து விட்டான்

புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5

This entry is part 5 of 23 in the series புவிச் சூடேற்றம்

மனிதனின் மிகப் பெரிய தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத் தொகைக்கு உணவு உற்பத்தி செய்வது. நிலத்தில் உள்ள நீரில் 70% விவசாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் உணவில் 25% முதல் 30% வரை, பயனில்லாமல் போகிறது. குறிப்பாக, சமைத்த உணவு, பயனில்லாமல் போவது சுற்றுச்சூழலுக்கு நல்லது அல்ல. அதிலிருந்து உருவாகும் மீதேன் போன்ற வாயுக்கள் மேலும், புவி சூடேற உந்துகின்றன

கரிமக் கவர்வு (Carbon Capture) எந்திரங்கள் கண்காட்சி

படிம (fossil) எரிபொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுக்கு 50 பில்லியன் டன் கரிமம் வளிமண்டலத்தில் சேர்கிறது. ஆனால் கரிமக் கவர்வுக் கருவிகளால் பிரித்தெடுக்க முடிவது சொற்பமே, ஈரிலக்க டன்கள் அளவைத் தாண்டாது. இருப்பினும் பசுங்குடில் வாயு உமிழ்வுக் குறைப்பினால் மட்டுமே புவி வெப்பமாதலைத் தடுத்து நிறுத்திவிட முடியாதாகையால் கரிமக் கவர்வும் தொடர வேண்டும் என்கிறார், கண்காட்சியின் நெறியாளர் வார்ட் (Ward).

உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை

This entry is part 14 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

விஞ்ஞானக் கோட்பாடுகள், பொதுவெளிப் பத்திரிகைகளில் வரும் செய்திகள் போன்றவை அல்ல. கோட்பாடுகள், திறமை பெற்ற சக விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்படவேண்டும், அத்துடன், கோட்பாடுகள் ஊர்ஜிதப்படுத்தத் தகுந்த சோதனை முடிவுகளுடன் வெளிவரவேண்டும். அத்துடன், சில விஞ்ஞான அளவுகளை ஒரு நல்ல கோட்பாடு, கறாரான கணக்கீடுகள்கொண்டு ஊகிக்கவும் வேண்டும்.

விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன

This entry is part 10 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

எல்லாம் சரியாக இருப்பதாகத் தோன்றலாம். இத்தனை நல்ல பொருளாதார நன்மைகளைத் தரும் தொழில்நுட்பத்தில் அப்படி என்ன குறை இருக்கமுடியும்? உலகின் கடந்த 100 ஆண்டு காலத் தொழில் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எண்ணெய் மற்றும் எரிவாயு என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு தொழில்நுட்பத்தின் ஆரம்ப காலங்களிலும் அதனால் விளையும் கெட்ட விளைவுகளை மனித குலம் தவிர்த்தே பார்த்து வந்துள்ளது.

விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்

This entry is part 9 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ரவி நடராஜன் கனடாவின் மிகப் பெரிய தொழில் எது? கோதுமை, கனோலா எண்ணெய் ஏற்றுமதி மரங்கள் மற்றும் காட்டுப் பொருட்கள் (forestry products) கனிமப் பொருளகள் (minerals) மாட்டிறைச்சி (beef) திராட்சை மது (wine) எஃகு (steel) இதில் எதுவுமே கனடாவின் மிகப் பெரிய தொழில் அன்று. இவை “விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்”

பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2

This entry is part 8 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

பக்கத்துத் தெருவில் இருக்கும் நண்பனைச் சந்திக்கப் பெட்ரோல் பைக்கில் செல்லுவது என்பது நமது வழக்கமாகிவிட்டது
இந்தியா போன்ற நாடுகளில், டீசல் எரிபொருள் மற்றும் சமையல் வாயுவிற்கு மானியம் வழங்கப்படுவதால், டீசலில் மற்றும் எரிவாயுவில் இயங்கும் ஊர்த்திகளை மக்கள் அதிகமாக வாங்குகிறார்கள்.
வங்கிகள் மற்ற நிதி நிறுவனங்கள், கார் வாங்கக் கடனுதவி (car loans) மற்றும் குத்தகையைப் (vehicle leases) பெரிதாக நம்பியிருக்கின்றன.
புவி சூடேற்றம் பற்றி வாய் கிழியப் பேசும் அரசியல் தலைவர்கள், பேசி முடிந்தவுடன் தாய்நாட்டிற்கு திரும்பும் முன் அரபு நாட்டு வழியாக எண்ணெய் இறக்குமதி முடிவெடுத்துவிட்டுதான் வருகிறார்கள்.

சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)

This entry is part 6 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, அனல் மின் உற்பத்தியாளர்கள், ஏதோ சதிகாரர்கள் போலத் தோன்றலாம் – என் நோக்கம் அதுவல்ல. இவர்கள் விஞ்ஞானிகள் பார்க்காத சில கோணங்களில், இந்தப் பிரச்சினையை ஆராய்ந்தார்கள் என்பது உண்மை. உதாரணத்திற்கு, ஒரு அனல் மின் அமைப்பில், பல கொதிகலன்கள் இருக்கும். ஒவ்வொரு கொதிகலனையும், ஒரு தொழில்நுட்ப முன்னேற்ற மையமாக மாற்றினார்கள். சின்னச் சின்ன முதலீட்டில், எப்படி மாற்றங்களைக் கொண்டுவருவது என்பதும் இவர்களது வெற்றிச் சிந்தனை.

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை

This entry is part 4 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

1960 –களில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மண்ணியல் விஞ்ஞானி (soil scientist) ஸ்வென் ஓடன் (Sven Oden) தனது நாட்டில் மழையில் அமிலம், அதுவும் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலம் கூடுவதைப் பல்வேறு மண் சோதனைகள் வழியே ஆராய்ந்து ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டார். ..இங்கிலாந்து மற்றும் மேற்கத்திய ஐரோப்பிய அனல் மின்நிலையங்கள் கரியை எரிப்பதால், காற்று வழியாக, ஸ்வீடனின் காற்று மற்றும் மழை மாசுபடுவதை தகுந்த ஆதாரங்களுடன் ஐக்கிய நாடுகள் கருத்தரங்கில் முன் வைத்தார்.

சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்

This entry is part 3 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

ராபர்ட் கெஹோ, சின்சினாட்டி பல்கலைக்கழகத்தில் தன்னுடைய ஆய்வுகளை நடத்தி வந்தார். இவருடைய ஆய்வகம், ஜி.எம்., டூபாண்ட் மற்றும் ஈதைல் நிறுவன அன்பளிப்பில் தொடங்கி, உதவித் தொகையில் இயங்கியது. அத்துடன், ராபர்ட், ஈதைல் நிறுவனத்தின் ஆலோசகர். ஈதைல் நிறுவனத்திற்குச் சாதகமான சோதனை முடிவுகள் தொடர்ந்து வெளிவந்ததன் பின்னணி இதுதான்…. விஞ்ஞானப் பித்தலாட்டத்தின் ஒரு வசீகர ஏற்பாடு இது. ராபர்ட், ஒரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக வெளியுலகிற்குக் காட்சியளித்தார். இதனால், அவரது முடிவுகளுக்கு ஒரு நடுநிலை இருப்பதாக அனைவரும் நம்பினார்கள். இன்றும் இதுபோன்ற ஏற்பாடுகள் உலகப் பலகலைக்கழகங்களில், அதுவும் வட அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஏராளம்.

வேகமாகி நின்றாய் காளி- பகுதி 5

This entry is part 5 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

பழுதுபார்க்கும் மையங்களுக்குச், சில வரிச் சலுகைகள், முதலில் வழங்கப்பட வேண்டும். இது தொலைநோக்குடன் அணுகப்பட வேண்டும். மறுபயன்பாட்டில் அதிக முதலீடு செய்வதும் இதுவும் ஒன்றே. வருமுன் காக்கும் செயல் இது

வேகமாகி நின்றாய் காளி – பகுதி 3

This entry is part 3 of 5 in the series வேகமாய் நின்றாய் காளி!

“ஏன் இப்படி தேவைக்கு ஏற்ப புதிய பாகங்களைச் சேர்ப்பதைக் கடினமாக்குகிறார்கள்?”, என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்பொழுது என்னிடம் எடுத்து வந்து உங்களால் குறைந்தபட்சம் புதிய வன்தட்டைச் சேர்க்க முடிகிறது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அது உங்களால் முடியாது. ஏனென்றால் வன்தட்டை கணினியில் தாய் தட்டோடு (mother board) முழுவதும் சோல்டர் செய்து விடுவார்கள். உங்களது கணினியில் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் வேறு ஒரு புதிய மாடலை வாங்குவதை விட்டால் வேறு வழி இருக்காது” என்றார்.

எவ்வழி நல்லவர் ஆடவர்

வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் அடையும் தட்பவெப்ப இடர்களைப் பற்றி பாகிஸ்தானின் மற்ற பகுதி மக்களுக்குப் புரிதல் இல்லை. மீண்டும் தாக்கும் போலியோவும், காஷ்மீரமும் ஆளுவோரின் மிகப் பெரும் சிந்தனையாக(!) இருக்கிறது.வரும் பத்தாண்டுகளில் நீர்ப் பற்றாக்குறை என்பது நகரங்களில் வாழும் மக்களைப் பாதிக்கும் என்ற உணர்தல் இல்லாமல் மக்கள் இருக்கிறார்கள்.

பருவநிலை மாற்றத்தின் கலங்க வைக்கும் உண்மை

இதுவரை நிகழ்ந்துள்ள உமிழ்வுகள் மட்டுமே உலகளாவிய தட்பவெப்பத்தை தொழில்மயமாவதற்கு முற்பட்ட நிலையோடு ஒப்பிட 1.5°C டிகிரி மேல் உயர்த்த வாய்ப்பில்லை. மனிதனால் ஏற்படும் புவிவெப்ப வாயுக்களின் உமிழ்வு உடனடியாக சூன்யத்தைத் தொட்டால், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 1°C என்ற அளவுக்கு மேல் தொடர்ந்து வெப்பமடைவதுஎன்பது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 0.5°C என்ற அளவே உயரக்கூடும் என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது. அதாவது, நாம் உடனே செயல்பட்டால், நிலைமையைச் சரி செய்யும் தொழில்நுட்பச் சாத்தியம் உண்டு. இதைச் சாதிக்கும் வகையில் வலுவான உலகளாவிய கொள்கைத் திட்டம் எதுவும் இல்லை என்பதே குறை.

மறைந்த நகரங்களும் பருவநிலை மாற்றமும்

ஹங்கேரிக்கு கிழக்கே இருந்த ஸ்டெப் புல்வெளிகளில் வரட்சி ஏற்பட்டபோது வேட்டைக்கார ஹனர்கள் மேற்குத் திசைக்கு தள்ளப்பட்டார்கள், அவர்கள் ரோமானிய பேரரசை அழித்தார்கள். எரிமலைகள் வெடித்தபோது புரட்சிக்கு முந்தைய பிரான்சில் பயிர்ச் சாகுபடி குறைந்தது, பசியால் தீவிரமாய் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆனால் மனித வரலாற்றில் பருவநிலை ஒற்றைக் காரணியாக கிட்டத்தட்ட எப்போதும் இருந்ததில்லை.

பொது யுகம் 2050-ல் நாமறிந்த உலகு அழியுமா? –

இன்று நாம் காணும் உலகம், 2050க்குள் அழிவதற்கான பாதையை 49% தேர்ந்தெடுத்துள்ளது; நான் உயிரோடு இருப்பது துர்லபம், ஆனால் என் குழந்தைகள்?இது நடைமுறை சார்ந்த என் ஈடுபாடு. சிக்கலான, கலவையான சமூகத்திற்க்குத் தேவையான உறு பொருட்களை, அதன் தக்க வைக்கும் விதங்களைக் கருதாமல் நாம் இன்று நுகர்ந்து கொண்டிருக்கிறோம். கடல் சார் உயிரினங்களை நாம் அதிகமாக நுகர்ந்தும், அழித்தும், அவ்வளங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் படிப்பினையற்றும் இருக்கிறோம். வளங்கள் குறைகின்றன, பண்ணைகளும், காடுகளும் குறைகின்றன. மண் வளம், நீர்வளம், விளை நிலம் ஆகியவற்றைத் திறமையாகப் பயன்படுத்தி பாதுகாக்கத் தவறிவிட்டோம். 2050க்குள் ஒரு நல்ல வழியினை நாம் கண்டறியாமல் இப்படியே தொடர்ந்தால் அழிவினை நோக்கி சிலப் பத்தாண்டுகளில் சென்றுவிடுவோம்.

மகரந்தம்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள், நாம் யார் என்பதற்கான அடையாளம் நம் முகம்தான். ஆனால் விபத்துகளில் முகம் முற்றிலும் சேதப்பட்டவர்கள் நிலை இதுவரை ஒன்றும் செய்ய முடியாததாக இருந்து வந்தது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாய், இன்று முகத்தை முழுதாகவே தானம் பெற்று மாற்றியமைக்கும் சிகிச்சை வந்து விட்டது. இது வரை நாற்பது பேர் முகம் மாற்று சிகிச்சை பெற்றுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு மருத்துவ சிகிச்சை குறித்து மனதைப் பிசையும் புகைப்படங்களுடன் ஒரு கட்டுரை இங்கிருக்கிறது. . இதில் தொடர்புடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், மருத்துவர்கள், தாதியர் என்று அனைவைரையும் கையெடுத்துத் தொழத் தோன்றுகிறது. கருணை மிக்க ஒரு சமூகம் என்றால் அது இதுவாகத்தான் இருக்கும் என்று சொல்ல நினைத்தாலும்,

புது தில்லியின் மைனா

ஒரு கோணத்தில் உலகம் சுருங்கித்தான் போயிருக்கிறது. மொத்த உலகிலும் வெப்ப தட்ப நிலை காலச் சுழற்சியோடு நம்பத்தக்க விதங்களில் மாறி வருவது என்பது கேள்விக்குரியதாகி இருக்கிறது. இது மனிதரின் பற்பல செயல்களின் கூட்டுத் தாக்கத்தால் மாறியது என்று ஒரு சாராரும், இல்லை இதுவும் தற்செயல்/ இயற்கையான மாறுதல்தான் என்றும் “புது தில்லியின் மைனா”

நீரின் பாதை

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாநிலம் கடற்கரை ஓரமாக அமைந்திருக்கிறது. அங்கிருக்கும் மியாமி நகரை நீர் கபளீகரம் செய்யுமா என்பதை நேஷனல் ஜியாகிரபிக் இங்கே படம் பிடிக்கிறது. எவர்கிளேட்ஸ் சதுப்பு நிலத்தின் உபரி நீரை பொங்கி வழியாமல் பாதுகாக்க 3,400 கிலோமீட்டருக்கு கால்வாய் வெட்டியிருக்கிறார்கள். இருந்தாலும் அட்லாண்டிக் சமுத்திரத்தின் உப்புநீர், “நீரின் பாதை”

புதிருக்கு விடை தெரியுமா?

பூமியின் தாவரங்களும் விலங்குகளும் மெள்ள மெள்ள அழிந்துகொண்டிருக்கின்றன அல்லது நசிந்துகொண்டிருக்கின்றன என அறிவோம். ஆனால், நம் காடுகள் எந்தப் பகுதியில் அழிக்கப்படுகின்றன என்றும் எந்த நாடுகள் அவற்றை பாதுகாக்கப் போராடுகின்றன என்றும் உங்களுக்குத் தெரியுமா? உங்களின் அறிவை பரிசோதித்துப் பார்க்க ஸ்பீகல் அழைக்கிறது. எடுத்துக்காட்டுக்கு முதல் கேள்வி: கானழிப்பு: “புதிருக்கு விடை தெரியுமா?”

கடல்‌ மத்துகள்

பரிணாமவியலின் தந்தை எனப் போற்றப்படுகிற சார்லஸ் டார்வின். அவரின் கவனிப்பு என்னவெனில் உங்கள் வீட்டுப் பூனை, எலிகளைக் கட்டுக்குள்‌ வைத்திருக்கும். எலிகள் போன்ற கொரித்துண்ணிகள்(rodents) மகரந்தச் சேர்க்கை செய்கிற பூச்சி மற்றும் வண்டுகளின் கூட்டை கலைப்பவை. அப்படி எலிகளின் எண்ணிக்கை‌ கட்டுக்குள் இருக்கிறதெனில் நிறைய மகரந்தச் சேர்க்கை நடக்கும். நிறைய மகரந்தச் சேர்க்கை‌ நிறைய செடிகளை, நிறைய பூக்களை உருவாக்கும். இங்கிலாந்து ஒரு படி‌மேலே போய், வீட்டில் பூனை வளர்த்தல்‌ நாட்டின் வளமான ராணுவத்திற்கு அவசியம் என நம்பினார்கள்.

மனிதமையக் கருத்தாக்கமும் சுற்றுச்சூழல் கேடும்

கடற்படை ராணுவத்தினர்களின் ( குறிப்பாக நீர்மூழ்கி கப்பல்களில் ) ரோந்து கப்பல்களில் பயன்படுத்தப்படும் ஒலி அடிப்படையில் இயங்கும் சோனார் எதிரொலிக்கருவிகளின் அதிர்வெண் அலைவரிசை திமிலங்களின் மூளையில் பல குழப்பங்களையும், தடுமாற்றத்தையும் ஏற்படுத்துகிறது என்பது ஒரு முக்கிய காரணம். … எல்லாவற்றும் மேலாக, மனிதர்களைப்போல் விலங்குகளூக்கும் குறிப்பாக கடல்வாழ் உயிரினங்களூக்கும் தற்கொலை எண்ணம் வருவதுண்டு. கூட்டுத்தற்கொலையாகவும் இருக்கலாம். தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லமுடியும், கடல்வாழ் உயிரினங்களின் இருப்பிடத்தை மாசுப்படுத்தி, நாசம் பண்ணினால், உயிரினங்களும் வேறு வழியின்றி கவுரமாக தன் முடிவை தேர்ந்தெடுத்துக்கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

காலத்தினால்….

இணையப் போராளிகள்!,வெட்டி அரட்டை கும்பல், முதிர்ச்சியற்ற இளைஞர்கள் என்றெல்லாம் பிறரால் அலட்சியமாக எண்ணப்பட்ட இளையஞர்களின் ஆற்றலை இப்பேரழிவு நாம் உணர்ந்து கொள்ள வைத்தது. ட்விட்டர் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் உலவுகையில் நான் எண்ணுவதுண்டு சினிமா கதாநாயகர்களுக்காக இவர்கள் இப்படி அடித்துக் கொள்கிறார்களே, திரையிசையைத் தவிர இளைய சமுதாயத்திற்கு வேறு இசைஞானமே இல்லையே என்றெல்லாம்… ஆனால் சென்னை மழையில் இவர்களின் பெரும் பங்கு என்னைப் போன்றவர்களின் எண்ணங்களை அடித்து நொறுக்கியது. ட்விட்டர் பேஸ்புக் மூலம் இவர்கள் மிகத் திறமையாக உதவிகளை ஒருங்கிணைத்தார்கள். இரவும் பகலும் விழித்திருந்து…

செத்தும் கொடுக்க வைக்கும் சீரிய தொழில்நுட்பம்

ஒரு நாளைக்கு முன்னூறு எரியூட்டுதல்கள் நிகழும் வாரணாசியில் வேண்டிய அளவுக்கு தீவிர எரியூட்டு நிலையங்கள் இல்லாததாலும், ஒரு உடல் எரிய ஏழு எட்டு மணி நேரம் ஆவதாலும், அவசரமாக உடலங்கள் கங்கையில் இழுத்துவிடப்படுகின்றன.
உடல் எரியும் நிலைகளை சற்று நிதானமாகப் பார்ப்போம். உடலில் வெளிப்புறப்பாகங்கள், சில உள்ளுறுப்புகள் 700 டிகிரி செண்டிகிரேடில் எரிந்துவிடுகின்றன.ஆனால், சில பகுதிகள், நீர் , கொழுப்பு நிறைந்தவை எரிய அதிக வெப்பம் தேவை. அவை பகுதி வெந்து, நச்சுப் பொருட்களை 700 டிகிரியில் வெளியிடுகின்றன.எனவே, இருமடங்கு வெப்பநிலையில் உடல் எரிக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இது, கட்டைகளால் எரிக்கப்படும் முறையில் அதிக வெப்பநிலை ,எரிபொருட்களால் பல படிகளில் ஏற்படுத்தப்பட்டுவிடுகிறது. எனவேதான், திறந்தநிலை எரியூட்டுநிலையங்களில் உடல்களின் எரிதல் முழுமையாகிறது. மின்எரியூட்டகங்கள் முதலில் சற்றே தோல்வியடைந்தது இந்த வெப்பநிலைத் தகறாரில்தான்.

சூழல் விழிப்புணர்வில் இரு மைல்கற்கள்

இருபதாம் நூற்றாண்டை விடவும் இருபத்தொன்றாம் நூற்றாண்டில் சூழல்விழிப்புணர்வு தொடர்பான பேச்சுக்கள் அதிகம். சூழல் விழிப்புணர்வு ஊர்வலம், மராத்தான் ஓட்டம், பள்ளிச் சிறுவர்கள் பங்கேற்பு என்று எவ்வளவோ சொல்லலாம். கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எம் எல் ஏ, எம்.பி க்கள், சூழல் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். பற்றாக்குறைக்கு பாரத பிரதமரின் “தூயபாரதம்” கோஷமும் நல்ல பக்கபலம். இவ்வளவு இருந்தும் கூட தூய்மையான குடிநீருக்கு வழியில்லை.

கடலில் எண்ணெய்க் கசிவு

கடலில் எண்ணெய்க் கசிவினால் ஏற்படும் விளைவுகள் என்ன? எண்ணெயில் இருக்கும் எடையில இலேசான பொருட்கள் ஆவியாகி காற்றில் கலந்துவிடும். அல்லது இயற்கையான உருமாற்றம் மற்றும் உயிரியல் தரவீழ்ச்சி (bio degradation) ஏற்பட்டு மறைந்துவிடும். ஆனால் அதிலுள்ள கனமான பொருட்கள் கடலிலேயே தங்கி, கடல் வாழ் உயிரினங்களின் உடலில் எண்ணெய்ப் பூச்சாகப் படிந்து விடுவதால், சுலபமாக நகர முடியாமலும், உணவு தேட முடியாமலும், மூச்சு முட்டியும் பல உயிரினங்கள் மடியும். அதுவும் பெட்ரோலியத்தில் பலவித நச்சுப் பொருட்கள் (toxic components) இருப்பதால் அவற்றை உட்கொள்ளும் உயிரினங்கள் இறந்து போவதொடல்லாமல் புதிய உயிர்கள் பிறப்பதையும் அவை தடுத்துவிடும். இதனால் பல உயிரினங்கள் நாளடைவில் மறைந்து போகும் அபாயம் இருக்கிறது.

வளம் – வாழ்வு – வளர்ச்சி

தற்சார்பு விவசாயம் வளர வேண்டும். ரசாயன உரப்பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் இயற்கை இடுபொருள் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உபரி உரங்களை முழுக்க முழுக்க அரசுத்துறை உற்பத்தி செய்து யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் என்று தனியார் வழங்கலுக்கு மாற்றாக பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற பாக்டீரியா காளான் உரங்களை திரவ வடிவிலோ கரிப்பொடி கலந்தோ விநியோகிக்கலாம்.