முன்னணிப் பெண் விஞ்ஞானிகள்

நேரடிப் பேட்டிகளுக்கு வயதான விஞ்ஞானிகள் கிடைக்காததே இந்தக் கட்டுரையை எழுதும்போது நான் எதிர்கொண்ட முக்கியமான பிரச்சினை. என்றாலும் அவர்களில் இரண்டு பேரோடு பேச எனக்கு அதிர்ஷ்டம் கிட்டி யது. அவர்களின் வாழ்க்கை வரலாறுகளை அலசிப் பார்க்கும்போது, பரந்த இந்திய வானத்தை அழகுபடுத்தும் அற்புத வண்ணங்களின் அழகான வானவில்லை காட்சிப்படுத்தும். இந்த முன்னணி பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கையில் உண்டான மாற்றத்தின் செயல்வகையை அந்த வண்ணங்களில் ஒவ்வொன்றாகக் காணப் போகிறோம். கண்ணாடிக் கூரையை உடைத்து வெளியேறி, தன்முனைப்பான முயற்சிகளால் அவர்கள் தங்களுக்கு மட்டும் வரலாறை உருவாக்கிக் கொள்ளவில்லை; இந்திய சமூகத்தின் சமூகப் புரட்சிப் போக்கில் அவர்கள் சரித்திர காரணகர்த்தாக்களாகவும் ஆனார்கள்.

தனியாய் ஒரு போராட்டம்

முஸ்லிம்கள் தனக்கு அளித்த உதவிகளை பற்றிச் சொல்லிக் கொண்டு வருகையில் கலா அவர்கள் தன்னிடம் கேட்ட பல கேள்விகளையும் பற்றி நினைவுகூர்ந்தார். “நீங்கள்—ஹிந்துக்கள்— ஏன் எங்களை வெறுக்கிறீர்கள்? உங்கள்மேல் எங்களுக்கு எந்தவித வெறுப்பும் இல்லையே?” அவர் அதற்கு முன்பும் அதன் பின்பும் அளித்த—-அவரது இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த— பதிலைத்தான் அப்போதும் அளித்தார். “நாங்கள் உங்களை வெறுக்கவில்லை. மத வேறுபாடுகள் பாராட்டாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான். நாமெல்லாம் ஒன்று. மனிதர்கள் என்ற நிலையில் நாமெல்லாம் சகோதர சகோதரிகள்.”]