போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.
Category: சமூக வரலாறு
பெயோட்டி
சிலர் விசும்பி அழுது கொண்டிருந்தனர். பலர் காலடியில் வேர்கள் வளர்வதை உணர்வதாக கூறினர். அனைவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அதிகாலையில் அனைவரும் அங்கேயே படுத்து உறங்கிக்கொண்டிருந்தனர். தனித்தனியே அந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் நிகழ்வு முடியும்போது ஒரே குடும்பமாகி இருந்தனர்… அத்தனை பேரும் புத்தம் புதிதாக பிறந்தவர்கள் போல் இருந்தார்கள். அந்த கள்ளிப்பசை உள்ளிருந்து நமது ஆணவத்தை வெளிக்கொண்டு வந்துவிடுகிறது
அதிரியன் நினைவுகள் – 11
எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன. யூத மற்றும் அரேபிய தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள் தங்கள் பகுதியைத் துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார், இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல். மன்னருடன் இருந்தவர்களில் சிலரும் விபத்தில் மாண்டிருந்தனர்
மிளகு அத்தியாயம் முப்பத்தெட்டு
நானும் கேலடி அரசரின் ஆதரவைத்தான் முதலில் திட்டமிட்டேன்” என்றான் நேமி. ”எல்லாவற்றுக்கும் அவரை அழைத்து வந்து நடுவில் உட்கார வைத்து தலைப்பாகை கட்டுவது அவருக்கு தன்னைப் பற்றி அதிகமாக ஒரு தோற்றம் மனதில் ஏற்பட வைக்கும். கல்யாண வீட்டிலே மாப்பிள்ளை, சாவு வீட்டிலே பிணம் என்று எல்லா இடத்திலும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். பில்ஜி அரசர் திம்மாஜியும் கேலடி அரசர் போல் நாயக்கர் வம்சம். இளம் வயது. நமக்குச் சென்று பழக எளியவர். தேவை வந்தால் கேலடி நாயக்கரையும் அழைத்துக் கொள்வோம்
இனக்கலவர நினைவுகள்: குமுறும் குரல்கள்
இந்தியாவில் சிலரது உயிருக்கு இன்று மதிப்பில்லை; அன்றாட வாழ்வை இவர்கள் பயத்துடனும் வேதனையுடனும் வெளிக்காட்ட முடியாத கோபத்துடனும்தான் கடத்த வேண்டியிருக்கிறது என்பதுதான் இந்தியாவின் இன்றைய மிகப் பெரிய சோகம்.இந்தப் புத்தகத்தில் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிகழ்ந்தவற்றை நினைவு கூர்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சிலரும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு சம்பவங்களை அலசி ஆராய்ந்து இந்திய வாழ்வின் அடிப்படை என காலங்காலமாகச் சொல்லப்பட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டும் வரும் சிலவற்றை கேள்விக்குள்ளாக்குகின்றார்கள்.
அமெரிக்க பாரம்பரிய மீட்டெடுப்பு
மாண்டேல், அவர் எடுத்துக் கொண்டுள்ள காலத்தை அலசும்போது வழக்கமான ஊகவணிகர்களை (Speculators) கண்டனம் செய்வதை பார்க்கிறோம். உதாரணமாக, இப்புத்தகத்தின் 107ம் பக்கத்தில், எல்ஹானன் வின்செஸ்டர் (Elhanan Winchester) எனும் நியூ இங்கிலாந்து சமய போதகர் தனது “The Plain Political Catechism” என்ற புத்தகத்தின் மூலம் பள்ளிமாணவர்களிடம் ‘பொது நிலங்கள் அங்கு குடியேறியவர்களுக்கு மட்டுமே விற்கப்படவேண்டும். நிலவர்த்தகங்களுக்கும் ஊகவணிகர்களுக்கும் விற்கக் கூடாது’ என போதித்ததை பதிப்பித்துள்ளார்….இவரது புத்தகமும் எவ்வாறு இடத்திற்கேற்ற விலை பிற சமுதாய பிரச்சினைகளை தீர்க்க உதவும் போன்ற கருத்துகளுடன் மல்லாடவில்லை. மேலும், நிலத்தை அதிக விலை கொடுப்பவருக்கு விற்பது வின்செஸ்டர் போன்றவர்கள் அக்கறை காண்பிக்கும் நபர்களுக்கு உதவக்கூடியதாகவும் இருக்கலாம் என்பது போன்ற கருத்திலும் ஆர்வம் காட்டவில்லை.
பாஸ்னியக் காப்பி
‘யானைகளின் யுத்தத்தில் அழிவது எறும்புகளே’ என ஒரு சொலவடை உண்டு. அதேபோல அமேரிக்கா – சோவியத் ரஷியா வல்லரசுகளுக்கு இடையேயான பலப்பரீட்சை பெரும்பாலும் அவர்களால் தூண்டிவிடப்பட்ட சிறிய நாடுகளின் யுத்தங்கள் வாயிலாக வெளிப்பட்டது. இந்த ‘கோல்டு வார்’ அல்லது மறைமுக பனிப்போரில் சிக்காமல் இந்தியா, எகிப்து, யூகோஸ்லாவியா, கானா மற்றும் இந்தோனேஷியா ஆகிய வளரும் நாடுகள் தங்களுக்குள்ளே ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்ளும் கூட்டமைப்பே “கூட்டு சேரா இயக்கம்”.
மதமும், வெறியும் மழலைகளையும் கொல்லும்… ஒரு துயரத்தின் வரலாறு
கிட்டத்தட்ட 160 ஆண்டுகளாக இயங்கிவந்த கிருத்துவ திருச்சபைகளின் உறைவிடப் பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் மீது இந்த மதவெறியர்கள் கொடூரமான பாலியல் வன்முறைகளையும்,கொலைகளையும் ஈவிரக்கமில்லாமல் செய்திருக்கின்றனர்.அதிலும் பூர்வகுடி மக்களின் குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து அவர்களுக்கு கல்வி அளிக்கிறோம் என்கிற போர்வையில், அந்தக் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகளை, வசதிகளைக் கூட செய்து தராமல், கட்டுப்பாடுகள் விதிப்பதாக பல்வேறு பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கியதால் பல குழந்தைகள் சித்திரவதைகளைத் தாங்கமுடியாமல் கொடூரமாக மரணித்திருக்கின்றனர்.
மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
மிக முக்கியமான இன்னொரு விஷயம், சிகரெட் எப்படி ஒருவரை அடிமைப்படுத்துகிறதோ, அதே அளவிற்கு மின் சிகரெட்டும் அடிமைப்படுத்துகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால், சிகரெட் பழக்கத்திலிருந்து நுகர்வோரை விடுவிக்கிறேன் என்று முழங்கி, சந்தைக்கு வந்த மின் சிகரெட்டுகள் இன்னும் அதிக நிகோடினை உடலில் சேர்த்து, மேலும் நுகர்வோரை அடிமைப்படுத்துகிறது.
புத்தெழுச்சி இயக்கத்தின் ஆவணக்காப்பகங்கள்: வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும் -2
இந்த விசாலமான வங்காளத்தின் விவசாயிகளின் குடிசைகளில், அந்த அன்னையின் ஆற்றுப் படிக்கட்டிகளில், நெல் வயல்களில், ஆலமரத்தடி நிழல்களில், அவளுடைய நகரங்களின் மையத்தில், பத்மா ஆற்றின் மணல் கரைகலில், மேக்னா ஆற்றின் அலை உச்சிகளில்- நான் இந்த தேசத்துடைய, மேலும் அதன் மக்களுடைய ஒரு குறிப்பிட்ட வடிவைக் கண்டேன், அதை நான் ஆழமாக நேசித்தேன்… இந்தப் பேரன்பு தந்த ஊக்கம்தான் என்னை இந்தப் புத்தகத்தை எழுதச் செய்தது. .. எனக்கு இன்றைய வரலாறைப் போலவே, பண்டை வரலாறும் உண்மையாகவும், உயிருள்ளதாகவும் இருக்கிறது. அந்த உயிருள்ளதும், உண்மையானதுமான கடந்த காலத்தைத்தான், உயிரற்ற எலும்புக் கூட்டை அல்ல, நான் இந்தப் புத்தகத்தில் கைப்பற்ற முயன்றிருக்கிறேன்.”
வங்காள வரலாறு
750-1144 பாலா (Pala) வம்சத்து அரசினர் பல காலம் வங்காளத்தை ஆண்டனர். தர்மபாலா (770-810), தேவபாலா (810-850) ஆண்ட கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிப்பகுதி மேற்கில் மைய கங்கை பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கில் அஸ்ஸாம் வரை விரிந்தது. மஹாயான பௌத்தம், தாந்திரிகத்தை நோக்கி நகர்ந்தது. தர்மபாலா, பகர்பூரில் (Paharpur) சோமபுரா மஹாவிஹாரைக் கட்டினார். வங்காள தேசத்தில், ராஜ்ஷாஹி (Rajshahi) என்ற இடத்திலும் இந்த மஹாவிஹாரைக் கட்டியவர்
வங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்
வங்காளி என்ற சொல்லுக்கு, ஒரு மொழிக்குழுவின் அடையாளம் என்ற நிலையைத் தாண்டி, ஒரு வசீகரத் தொனியைக் கொண்டு வந்ததற்குக் காரணமாக, 1890-1910 கால இடைவெளியில் வங்காளத்தில் கிளைத்தெழுந்த காலனிய எதிர்ப்பு நோக்கம் கொண்ட, புத்தெழுச்சிக் கற்பனையுடன் உருவான தேசியம் என்ற பெரு நிகழ்வுதான். அதன் உச்சகட்டம், ஸ்வதேஷி இயக்கம் (1905-08) என்று அழைக்கப்பட்ட திரட்சி.
20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்
சூரபுத்திகாரர்களின் புண்ணியத்தால், இந்த உலகத்தில் நிறைய பெரும் ஏரிகள் இருக்கின்றன. அந்தத் தடாகங்களில் குளித்தும் குடித்தும், சிந்தைக்கான நம் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். எனினும், அன்றாடத் தேவைக்கு குழாய்த் தண்ணீர் வசதியாக இருக்கிறது… செய்தித் தாள்கள், துணுக்கு விமர்சனக்கள் போன்ற க்ஷண சாஹித்யங்கள் — குழாய்த் தண்ணீரின் வேலையை செய்கின்றன.
பியர்: கசக்கும் உண்மைகள்
பியரின் கசப்புச் சுவை சர்வதேசக் கசப்பு அலகில் IBU (International Bittering Units) அளவிடப்படும். வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச் சுவையை அளவிட்டு விளம்பரப்படுதுகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு 0 – 1,000 ஆகும், ஆனால் மனிதச் சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும்.
ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?
பிற மத ஸ்தாபகர்களைப்போல் இயேசுவும் தம்மைத் தீர்க்கதரிசியாகவும் கடவுளின் வாக்குறுதியை மக்களுக்கு அறிவிப்பவராகவும் நினைத்தவர். நான் மறுபடியும் உங்கள் ஆயுட்காலம் முடிவதற்குள்ளேயே இறந்துபின் திரும்புவேன் என பலமுறை கேட்போரிடம் கூறியுள்ளார். நடந்தது என்ன? 2000 வருடங்கள் கழிந்தபின்னும் திரும்பிவரவில்லை.
ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?
எல்லா மதங்களும் சரிசமமானவையே; ராம், ரஹீம், அல்லா இவர்கள் எல்லாம் ஒருவரே; ஈஸ்வரன், அல்லா என்பவை ஒரு கடவுளின் பெயர்களே என்று சொல்லிக்கொண்டிருந்த, 1947க்குமுன் கிழக்கு வங்காளத்தில் வசித்த ராமகிருஷ்ண இயக்கத்தின் சந்நியாசிகளும் மற்ற ஹிந்து மத சந்நியாசிகளும் எங்கு குடிபெயந்தார்கள் என்ற கேள்வியையும் ரே எழுப்புகிறார்.
இந்துக்கள் கோழைகளா?
“இந்து ஒரு கோழை; முகம்மதியர் இந்துக்களை அச்சுறுத்துபவர்கள்” இதை 29 மே 1924 இளைய பாரதம் இதழில் எழுதியவர் அஹிம்சாவாதி மகாத்மா காந்தி. இந்துக்களை தட்டி எழுப்ப சொல்லப்பட்டதா அல்லது முகம்மதியர்களை மேலும் ஊக்கமூட்டுவதற்கா என்று தெரியவில்லை ஆனால் ஆசிரியர் இந்துக்களின் பலவீனங்களில் கோழைத்தனம் ஒன்றல்ல என்கிறார்
கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
ஆட்டோ வான் பிஸ்மார்க்தான் ஜெர்மனியில் கிறிஸ்துவ தேவாலயத்திடமிருந்து கல்வியாதிக்கத்தைக் கலாசாரப் போர் (kulturkampf) என்ற பெயரிட்டுப் பறிக்க முயன்று தோல்வியடைந்தார். அதுமுதல், பொருளாதாரத்தைத் தவிர்த்து மற்ற அனைத்து சச்சரவுகளுமே கலாசார யுத்தமாகவே எல்லா நாடுகளிலும் கருதப்படுகிறது. சச்சரவுகள் சிலசமயம் ஒரேவிதமாக இருந்தாலும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதமாக அவற்றை அணுகுகின்றன.
கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு
தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திராவிடப் பேரறிஞர்களால் சொல்லப்படுவது இது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கல்வியறிவு பெற்று உலகம் முழுவதற்கும் பாடம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். தமிழ்நாட்டில் பிராமணர்கள் நுழைந்து தமிழர் கல்வித் திறனைச் சீர் குலைத்தனர். பிராமணர் அல்லாதாரை படிக்கவிடாமல் தடுத்தனர். இன்றும் பல்வகைச் சூழ்ச்சிகளைச் செய்து “கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு”
திருப்பரங்குன்றம்- திருக்கோயில்
மதுரை ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட போது கி.பி. 1792 ஆம் ஆண்டில் திருப்பரங்குன்றம் கோயிலையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவர முயற்சித்தனர். ‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று… வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத்தோம்’ என்ற கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை நீத்தமை அறியப் படும். குட்டியின் செயகையால் ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று கூறப் படுகிறது.
விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்!
வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் காவல் துறையின் அடாவடித்தனத்தையும் நிற பேதத்தையும் மக்கள் உணர்ந்து கருப்பு அமெரிக்கர்களுக்கு அதிக அளவில் வெள்ளை அமெரிக்கர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு பெருகியதும் இப்போராட்டத்தை வழிநடத்திய “Black Lives Matter” இயக்கத்திற்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகும்.
திருமண ஏசல் பாடல்கள்
மரபு வழிப்பட்ட நிலவுடைமை சார்ந்த குடும்ப அமைப்பில் மகளிர்க்கு உரிய பங்கு வரையறுக்கப்பட்டிருந்தது. இல்லத்தரசியர் என்ற பாத்திரத்தை வகிக்கின்ற மகளிரே குடும்ப கௌரவம் குலப்பெருமிதம் போன்றவற்றின் பாதுகாவலராகக் கருதப்பட்டனர். மேலும் குலம், கோத்திரம் பார்த்து நிச்சயம் செய்யப்படுகிற திருமணங்களில் மணமகனும் மணமகளும் முதல் முறையாகச் சந்தித்து விரைவில் அவர்களுக்குள் நெருக்கமான உறவு ஏற்படவேண்டுமெனில் அவர்களுக்கு இடையில் உள்ள மனத் தடைகள் நீங்கினால்தான் அது சாத்தியம். அத்தகைய மனத் தடைகள் நீங்கி இயல்பாகவும் தயக்கமின்றியும் அவர்கள் அந்நியோந்நிய உணர்வை அடைவதற்கு இத்தகைய குழுப்பாடல்கள் உதவிகரமாக இருந்தன.
மகரந்தம்
எறும்பு, கரையான், தேனீ போன்ற பூச்சியின சமூகங்கள் வெளிப்படுத்தும் அறிவார்ந்த பண்புகள் தேன்கூடு/ திரள் நுண்ணறிவு ( hive intelligence/swarm intelligence ) எனப்படுகிறது. கணிப்பிய நுண்ணறிவு (computational intelligence) என்னும் கணினித் துறையின் உட்புலமாக விளங்கும் திரள் நுண்ணறிவுத் துறையில், உயிரிய அமைப்புகளின் கணித மாடல்களைப் பரிசோதிக்க ரோபோட் திரள்களைப்(swarm of robots ) பயன் படுத்திப் பல நுண்ணறிவு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன..
சிலப்பதிகாரத்தின் காலம்
சிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.
மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம்
அதிக அளவு விதவைகள் இருந்ததும் சென்னை மாகாணத்தில்தான். மாதர் மறுமண இயக்கம் மேற்கொண்ட மற்ற அச்சு முயற்சிகளைவிடக் கூடுதலான ஓர் அச்சு முயற்சி தேவைப்பட்டது என்று உணர்ந்து, அதனால் பிறந்த அச்சு முயற்சிதான் மாதர் மறுமணம் . 1936 ஆம் ஆண்டு ஆவணி மாதம் ஒன்றரை அணா விலையில் வெளிவந்த முதல் இதழின் அட்டையில் காந்தி இருந்தது. பத்திரிகைக்கு நல்ல கவனத்தைத் தந்திருக்க வேண்டும். காரணம் முதல் இரண்டு இதழ்களும் உடனடியாக விற்றுப்போயின
இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்
இனம் மதம் என்ற நிலையிலிருந்தும் உயர்ந்து எழும்பிய லால் தேத் போன்ற ஞானிகள் வாழ்ந்த நிலம் காஷ்மீரம். அக்கமகாதேவியைப்போல் உடைகளைக் களைந்து ஞானப் பாடல்களை இசைத்த சிவ பக்தை லால் தேத். பல வகைகளில் இன்றும் அவர் வாழ்க்கையும் பாடல்களும் நமக்குத் தேவையான ஒன்றாகவே இருக்கின்றன. எல்லோருமே லால் தேதை தங்களுடையவர் என்று உரிமை கொண்டாடுகின்றனர். லால் தேதை மதமாற்றம் செய்து அவர் ஸூஃபி கருத்துக்களால் கவரப்பட்டார் என்றெல்லாம் கூறப்படுவதன் காரணம் எழுநூறு அண்டுகளுக்குப் பின் இன்றும் நம் வாழ்க்கையில் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும்…
இரங்கலும் இரங்கல் நிமித்தமும்: ‘பெருங்கடல் வேட்டத்து’
அருள் எழிலன் அவர்களின் ‘பெருங்கடல் வேட்டத்து’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் பேராசிரியர் வஹீதையா கான்ஸ்டன்டைன் அவர்கள் முன்னிலையில், மாலதி மைத்ரி அவர்கள் முன்னெடுத்த கலந்துரையாடலுக்கான திரையிடலில் காணக் கிடைத்தது. இந்த ஆவணத்தின் தனித்தன்மை என முதன்மையாக ஒன்றை சொல்லவேண்டும் எனில் அது இதிலுள்ள காமம் செப்பாது கண்டது மொழியும் தன்மை. இது மீனவ துயர்களை ஊதிப் பெருக்கியோ, அல்லது பரிதாபத்துக்கு உரியவர்களாக காட்டியோ, அதன் வழியே அன்றைய நாளின் ஆளும் வர்க்கச் செயல்பாட்டின் மெத்தனப் போக்கை, இடர் நீக்கப் பணியின் அலட்சியத்தை, உணர்ச்சிச் சுரண்டலாக …
பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?
ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.
ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ
சென்ற மாதத்தில் மட்டும் 2,371 பேர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என்று மெக்சிகோ கருதுகிறது. போதை மருந்து கடத்தல், மாஃபியா ஆள் கடத்தல், அரசியல் அதிகார ஊழல் என்று இந்த வருடத்தில் இருபதாயிரத்திற்கும் மேலான கொலை சம்பந்தமான புகார்களின் மேல் புலன் விசாரணையை நடத்தி வருகிறது மெக்ஸிகோ. செய்தி: “ஒவ்வொரு நாளும் 69 கொலைகள்: மெக்சிகோ”
எம். எல். – அத்தியாயம் 10
“எனக்கு ஆயுதப் புரட்சியிலே எல்லாம் கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை. தெலுங்கானாவிலே என்ன நடந்தது?… ஆயுதப் புரட்சி அது இதுன்னு நம்ம ஜனங்களை வீணா பிரச்னையிலே மாட்டி விடாதீங்க…”
“ஏன் இப்போ எங்க நக்ஸல்பாரியிலே நடந்திருக்கே…”
“அது ஆயுதப் புரட்சியா?… நான் நக்ஸல்பாரியிலே நடந்ததை ஏத்துக்கலை. நிலச் சீர்திருத்தம் நடந்தா அங்கே பிரச்னை சரியாகிரும். அங்கே நடந்தது விவசாயிகளுக்கும் நிலச் சொந்தக்காரர்களுக்கும் மத்தியிலே நடந்த குத்தகை தகராறு,” என்றார் கோபால் பிள்ளை. சாரு மஜூம்தார் உரக்கச் சிரித்தார்.
“மிஸ்டர் கோபால் பிள்ளை, அதை அவ்வளவு எளிதா ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. நீங்க பேசறது உங்க பார்ட்டி லைன். ரொம்ப விவாதிக்க வேண்டிய விஷயம் இது. இந்தியக் கம்யூனிஸ்ட்களாலே ஒண்ணும் சாதிக்க முடியாது. நான் உங்க பார்ட்டியிலே இருந்தவன்தான். யூனியன்லே எல்லாம் ரொம்ப வருஷம் இருந்து அடிபட்டவன். ஒரு கூலி உயர்வுகூட யூனியனாலே வாங்கிக் கொடுக்க முடியல…
ஆடல்
பாலசரஸ்வதி, மயிலாப்பூர் கௌரி அம்மாள் போன்ற பல மகத்தான நடனக் கலைஞர்கள் நடனத்தின் ஆன்மிக உச்சத்துக்கு அதைக் கொண்டுபோயிருந்தாலும், அது “கௌரவ” ஸ்திதியை அடைந்தது ருக்மணிதேவி, கிருஷ்ணய்யர் போன்றவர்களால்தான் என்றுதான் கூறப்பட்டது. கௌரவமான பெண்கள் என்று கருதப்பட்ட தாசி குடும்பத்தைச் சேராத பெண்களும் ஆடலாம் என்ற அளவுக்கு அது மெருகேறியதே தவிர, ஆடலின் அமைப்போ, வெளிப்பாடோ சிறிதும் மாறவில்லை. கடவுள் என்ற மூலம் ஆட்டம் காணவில்லை. “நடனம் ஆடினார்”, “தெருவில் வரானோ”, “கிருஷ்ணா நீ பேகனே பாரோ”, “ஸாமி நின்னே”(வர்ணம்) போன்ற பாடல்கள்தாம் இன்றும் உணர்ச்சிகளை வெளியிடப் பயன்படுபவை. காதலை வெளியிடும் பெண் இன்றும் பால் குடித்தால் வாந்தி வருவதாகவும், குயிலின் கூவல் நாராசமாய் ஒலிப்பதாகவும், ஹம்ஸதூளிகா மெத்தை குத்துவதாகவுமே விரகத்தை வெளியிடுகிறாள். அன்று ஆடப்பட்ட தாசி ஆட்டம் அன்றைய சமூக வர்க்கபேதங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஒரு வர்க்கத்தினருக்காக ஆடப்பட்டது. இன்றைய தாசி ஆட்டம் அல்லது பரதநாட்டியம் சிறிது மாறுதலுடன் குறிப்பிட்ட மேல் வர்க்கத்தினராலேயே ஆடப்பட்டு, அவர்களாலேயே ஆளப்பட்டு, அவர்களாலேயே போற்றப்பட்டும் வருகிறது. சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களுக்கும், பாதிப்புகளுக்கும் உட்படாத ஒரு நபரே இன்றைய ஆடலின் வெளிப்பாட்டுப் பிரதிநிதி. இதனால்தான் இவர்கள் பாதிப்புகள் அற்ற வெறும் ஆட்டக்காரர்களாக (Performers) மட்டும் இருந்து வருகிறார்கள்.
எங்களை ஊசியால் குத்தினீர்களானால்
என்னுடைய இளநிலை வகுப்புக் காலத்தில், இந்தக் கேள்விகளை நான் கேட்கத் துவங்கியபோது, நான் ஒரு முடிவுக்கு வந்தேன். மூடரும் வெறியருமான அந்த நிதி உதவி அலுவலகர் போன்றார் நசுக்கி விடக் கூடியவனாக நான் இருக்க மாட்டேன் என்றும், அதே நேரம் என் பெற்றோரைப் போல எப்போதும் முழுத் தற்காப்பு நிலையிலேயே வாழ்வைக் கழிக்க மாட்டேன் எனவும் முடிவு செய்தேன். மாற்றான் எனும் என் அடையாளத்தை நான் மறைக்கவும் மாட்டேன், நான் எவனில்லையோ அவனாக மாறவும் மாட்டேன். எனக்குத் துன்பம் கொடுக்கும் எழுத்துகளிலிருந்து நான் விலக மாட்டேன், அதே போல மகிழ்ச்சி தரும் எழுத்துகளிலிருந்தும் நான் விலக மாட்டேன். சொல்லப்போனால், பண்பாடு எனும் பெரும் குழப்படியான மேற்கொள்ளலின் மொத்தத்தையும், அது என்னுடைய பிறப்புரிமை என்பது போல எடுத்துக் கொண்டு நுணுகி ஆராய்வேன்.
இந்தப் பிறப்புரிமையை, அதில் எதெல்லாம் கடும் நச்சோ அதையும் சேர்த்தே, பூரணமாக, என்னால் முடிகிற மட்டும் புரிந்து கொள்ள நான் உறுதி பூண்டேன்.
வரலாறும் பொறுப்புணர்வும்
இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஜெர்மனி இழைத்த கொடுமைகள், உக்ரெய்ன் எதிர்கொண்ட கொடூரங்கள், இவற்றின் பின்னணியில் உள்ள
யூரோப்பிய கொள்கைகள், கோட்பாடுகள்- இவை நமக்கு ஏன் முக்கியமாக இருக்க வேண்டும்? யூரோப்பிய மோதல்களின் வரலாற்றை நாம் ஏன் வாசிக்க வேண்டும்? ஜெர்மனியின் பாராளுமன்றத்தில் திமோதி ஸ்னைடர் 20.6.2017 அன்று ‘Germans must remember the truth about Ukraine – for their own sake‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையில் உக்ரெய்ன் விஷயத்தில் ஜெர்மனியின் வரலாற்றுப் பொறுப்பு பற்றி அவர் பேசுகிறார். வரலாற்றுப் பொறுப்பை ஏன் பேச வேண்டும், அதிலும் குறிப்பாக ஜெர்மனிய வரலாற்றுப் பொறுப்புணர்வை ஏன் பேச வேண்டும், என்ற கேள்வியை எதிர்கொள்ளும் ஸ்னைடர் முதலில் ஒரு பொதுப் பார்வையை முன்வைக்கிறார்.
நாடோடிகளுக்குக் குடியுரிமையா? கானலில் நீரூற்றா?
ஒரு இனம் அல்லது மொழியைப் பொதுவாகக் கொண்ட மக்களின் நாட்டரசு உருவான பிறகு, ரோமாக்கள் ஓரம் கட்டப்பட்டார்கள், புதுச் சமூகங்களில் அவர்களுக்கு உறுப்பினர் என்ற உரிமை மறுக்கப்பட்டது, அவர்கள் இருப்பது பொறுத்துக் கொள்ளப்பட்டதே தவிர ஏற்கப்படவில்லை. தனிக் குழுவாக இருப்பதும், தங்கள் மொழிகளையும், பண்பாட்டையும் பாதுகாத்துக் கொள்வதும் அழியாமல் பிழைத்திருக்க அவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள்- உலக வரலாற்றில் அனேகக் குழுக்கள் இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்கின்றனர். ரோமாக்கள் மட்டுமா வேரில்லாத வெளியாட்கள் என்று நடத்தப்பட்டனர்? நாடு-அரசுகளின் காலத்தில் அவர்களின் வரலாறு ஓரளவு யூதச் சமூகங்களின் நிலையை ஒத்திருந்தது. இன்றோ, ரோமாக்களில் பலர் நாடோடிகளாக இல்லாமல், ஒரு நிலப்பரப்பில் தங்கி விட்டிருக்கின்றனர், அந்த நாட்டு அடையாளங்களை ஏற்றுத் தம்மை செக் மக்கள், ஃப்ரெஞ்சு மக்கள், இதாலியர் என்றோ அடையாளம் மேற்கொண்ட போதும், நாடு தடைகளின்றி நடத்தப்படுவதற்கு அவர்கள் ஆபத்து விளைவிக்கிறார்கள் என்ற கருத்தே மேலோங்கி உள்ளது.
உள்ளிருக்கும் எதிரி
இதில் வரலாற்று விசித்திரம் என்ன? முன்பு முஸ்லிம் நாடுகளில் உரிமைகளோடு இருந்த யூதர்கள் இன்று முஸ்லிம் நாடுகளில் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள். குறிப்பாக இஸ்லாமிசத் தீவிர வாதம் யூதர்களை ஒழிக்க வேண்டும் என்றே உலகெங்கும் பிரச்சாரம் செய்கிறது. இதனால் சமீப காலம் வரை துருக்கியில் வசித்த யூதர்கள் கூட வெளியேற முற்பட்டிருக்கின்றனர். முன்பு கிருஸ்தவ நாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டு, கேவலமான நிலையில் வாழ்ந்த யூதர்கள் இன்று அந்நாடுகளில் குறைவான வெறுப்புக்கு நடுவில், அனேகமாக நன்னிலையில் வாழ்கிறார்கள்.
நாம் ஏன் போரிடுகிறோம்
போரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்போ நகரம் “போர்கள் அதீதமான அளவில் செய்யப்படுகின்ற மதுபானக்கடைச் சண்டைகள் அல்ல’ என்று எழுதுகிறார் பார்பரா ஏரென்ரிக். ஃபாரின் அஃபைர்ஸ் மாகஸீன் என்ற இதழில், ஃப்ரான்ஸிஸ் புகுயாமா போர்களுக்கு ஆண்களே முக்கியக் காரணம் என்றும் “ஆக்கிரமிப்பு, வன்முறை, போர், சமூக அடுக்குகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான “நாம் ஏன் போரிடுகிறோம்”
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு
தமிழக வரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான்… பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.
முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் குறித்திருக்கும்.
அலுவல் மொழி என்னும் பிதற்றல்
மொழிகள் தனித்து இயங்குபவை அல்ல. அவை கலாசாரத்தின் உறுப்புகள். உண்மையில், ஒவ்வொரு கலாசாரமும் அதன் மொழியில் தன்னை நேரடியாய் வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்தியாவுக்கு உரிய மொழிகள் 1500க்கும் மேற்பட்டவை என்று சொல்லும்போது அத்தனை கலாசாரங்கள் நமக்கு உரியவை என்று சொல்கிறோம். பல்வகைப்பட்ட மொழி மரபுகள் இத்தனை இந்தியாவில் உள்ள நிலையில் அரசுப்பணிகளையும் அதன் அதிகாரபூர்வ நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்து தேசமெங்கும் மேற்கொள்வது கடினம். மிக எளிமையாய்ச் சொல்ல வேண்டுமென்றால், பொதுப்பண்புகளும் தொடர்புகளும் இல்லாமல் சாதாரண மனிதர்களும்கூட உரையாடிக் கொள்ள முடியாது. குழப்பமே நிலவும். அதிகாரபூர்வ அலுவல் மொழி ஒன்று வேண்டும்…
பெண்ணுரிமை பேசிய முன்னோடி வ.உ.சி
வ.உ.சி. க்கு 1895-ல் முதல் திருமணம் நடந்தது. வ.உ.சி. ராமையா தேசிகர் என்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறார். வ.உ.சி. யின் மனைவியும் தேசிகரை அன்புடன் பராமா¢க்கிறார். அடுத்து, ஊரில் உள்ளவர்கள் ராமையா தேசிகர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று குற்றம் சொல்கிறார்கள். வ.உ.சி. க்கு அவரை வீட்டைவிட்டு அனுப்ப மனமில்லை. மனைவியிடம் ஆலோசனை கேட்க செல்கிறார். வ.உ.சி. பிரச்சினை என்னவென்று கூறுவதற்கு முன்பே அவரது மனைவி வ.உ.சி. முன்பு கூறியதையே பதிலாகக் கூறுகிறார்…
பல்வங்கர் பாலூ – மறக்கப்பட்ட முன்னோடிகளில் ஒருவர்
ஆனால் இவர்களுக்கெல்லாம் முன்னோடியாய் திகழ்ந்த ஒருவர் உண்டு. அவர்தான் பல்வான்கர் பாலு. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தடம் பதித்த முதல் தலித் ஆட்டக்காரர் அவர்தான். ஏன் இவரை முன்னோடி என்றும், சொல்லப் போனால் ஆகச்சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் என்றும் சொல்ல வேண்டும் என்பதற்கு அவரது சாதனைப் புள்ளிவிவரங்களே சாட்சி. … 1876ம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி தார்வாடில் ஒரு தலித் (சாமர் வகுப்பில்) குடும்பத்தில் பிறந்தவர் பல்வான்கர் பாலு. அவரது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாக இருந்தார். அவர் பூனாவின் பார்சி இனத்தவருக்கு சொந்தமான கிரிக்கெட் கிளப் மைதானத்தில் அதன் ஆடுகளத்தை பராமரிக்கும் வேலையில் இருந்ததாகவே அவரைப் பற்றிய முதல் தகவல்கள் சொல்கின்றன. அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு பந்து வீசவும் செய்த பாலுவுக்கு மாதம் 3/- ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
கோட்பாட்டு மோதல்
தீவிரவாதத்தினால் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுதல் நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்களினால் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு மக்கள் குடிபெயர்கின்றனர். இது இப்போது அல்ல. 1914ஆம் வருடம். உலகப் போர் மூள்கிறது. பொருளாதார சித்தாந்தங்களை எல்லோரும் குறைகூற ஆரம்பிக்கின்றனர். அரசாங்கத்திற்கு முழு அதிகாரமும் “கோட்பாட்டு மோதல்”
கடவுளின் வெண்கல கரமும், நீல நிற ஜீன்ஸ்களும்
ஸ்வெட்லான அலேக்சிவிச் சென்ற காலத்து சோவியத்தில் வளர்ந்தவர். தன்னை ஒரு ‘சோவோக்’ என்றே கருதுகிறார். ”அவருடைய பல்குரல் எழுத்துக்கு, நம் காலத்து வேதனைகளுக்கும் துணிவுக்குமான சின்னமாக” 2015 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் அவருடைய ‘Second Hand Time – Last of the Soviets’ எனும் நூலுக்காக கிடைத்திருக்கிறது. 1991- 2013 வரையிலான காலகட்டங்களில் ஸ்வெட்லானா பல்வேறு சோவியத் மனிதர்களை சந்தித்தபடி இருக்கிறார். இந்நூல் அவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பு.
குளக்கரை
உலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா? ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது
வ. உ. சிதம்பரனாரின் சமூக விழிப்புணர்வு
வ.உ.சி. ஒரு முறை சென்னையில் அச்சுக்கூடம் ஒன்றில் சுவாமி சகஜானந்தர் என்ற துறவியைச் சந்திக்கிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த அவர் தன்னை “நந்தனார் சமூகத்தினர்” என்று வ.உ.சி.யிடம் அறிமுகம் செய்துகொண்டார். வ.உ.சி. உடனே அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார். அவர் செல்லும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் அழைத்துச் செல்வார். சகஜானந்தருக்குத் தமிழ்ப் பயிற்சி ஊட்டினார். அவருக்குத் தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்தார். … சகஜானந்தர் வ.உ.சி. க்கு எழுதிய கடிதத்தில் “சிதம்பரம் என் சற்குருவே” என்று குறிப்பிடுகிறார். மேலும் வ.உ.சி.யைப் பற்றிக் குறிப்பிடும் போது “என்னைத் தன் பிள்ளை போல் வளர்த்தவர்” என்று கூறுகிறார்.
செழிப்பை நல்கிய குரூரக் கப்பல்கள்- மணிலா காலியன்கள்
பெர்க்லி வரலாற்றாசிரியர் ஜான் டீவ்ரைஸ், 580 லிருந்து 1795 வரையான காலத்தில் இரண்டு மில்லியன் ஐரோப்பியர்கள் கடல் வாணிபத்தில் ஈடுபட்டார்கள் என்று கணக்கிட்டுகிறார். அவர்களில் 920,412 பேர் உயிர்தப்பி இருக்கிறார்கள். ஐம்பத்துநான்கு சதவிகிதம் கடற்சமாதிதான். டீவ்ரைஸ், ஒவ்வொரு 4.7 டன் பொருட்கள் ஐரோப்பா சேர ஒரு மனித உயிரை பலிகொடுத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார். கூடவே, சென்ற ஒவ்வொரு நாட்டிலும், பல்வேறு வியாதிகளை ஐரோப்பியர்கள் பரப்பி இருக்கிறார்கள், கடும் வன்முறைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். அதனால் ‘கண்டுபிடிக்கப்பட்ட’ வேற்றுநாட்டவர்கள் அடைந்த துயரம் கப்பல் பயணங்களை விட கொடூரமானவை. இந்தத் கொடூரங்களும், பெரும் துன்பங்களும், மாலுமிகளின் உயிர்களுமே நாமிருக்கும் இன்றை உலகத்தைச் செதுக்கியவை.
விவசாயிகளும், நபாப்களும்
1980களின் மத்தியில் இருந்த வருவாய் நிர்வாகப் பணிக்குழுவின் மையக் கோட்பாடுகள் 1800களில் முறையாக்கப்பட்டவையே. அதேபோல, 1970களில் இருந்த கிராமங்களுக்கான நிர்வாகக் கட்டுப்பாடுகளின் அடிப்படை 1810ல் உருப் பெற்று விட்டது. கடைசியாக, நிலங்களைத் தனியார் உடமையாக ஆக்குவது பட்டாக்கள் வழியே நடத்தப்படலாம் என்று ’நவீன’காலக் கருத்தானது 1800களில்தான் நடைமுறைக்கு வந்தது. அதே சமயம், நாம் அடுத்துவருகிற பகுதிகளில் பார்க்கப் போகிறபடி, பண்டைய சமூக அரசியல் அமைப்புகளில், கோட்பாடுகளில், செயல்பாடுகளில் பெரும்பாலானவை 1800கள் வரை கூடப் பிழைத்திருந்தன. உதாரணமாக, “ஜாதி”, “நாட்டார்” நிர்வாக அமைப்பு, தர்மகர்த்தர்கள், அதிகாரம் குறித்த கோட்பாடுகள்…
ஷியாவா? ஸுன்னியா??
ஸுன்னி இஸ்லாமியர்கள் மெஜாரிட்டியாய் இருக்கும் நாடுகளில் ஷியாக்கள் எப்போதும் வறுமைக்கோட்டில் இருப்பார்கள். அவர்கள் மீது வன்முறை ஏவிவிடப்படும். அவர்களை கொலை செய்தலை அரசே நியாயப்படுத்தும். இறைவன் ஒருவனே என்பதை ஏற்றுக் கொண்டுள்ளோம், அதே போல இமாம் ஹுசைனும், இமாம் அலியும் போல முகமது நபிக்கு பின்னர் வந்த 12 இமாம்களை வணங்குவதும் எங்கள் உரிமை, அதை தடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது ஷியாப்பிரிவு இஸ்லாமியர்களின் வாதம். அதற்காக உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம் என்பதே ஷியாக்களின் நிலைப்பாடு. ஏக இறைவனை ஒத்துக்கொள்ளும் ஷியாக்கள் பிற இமாம்களை அல்லாவை வணங்குவது போல…
ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சின் முக்கியத்துவம்
இந்த வருடத்து இலக்கியப் பரிசை பேலாருஸ் நாட்டின் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சுக்குக் கொடுக்க நோபெல் கமிட்டி முடிவு செய்தபோது உலக இலக்கிய மஹா சக்திகளான நாடுகளில் அதிசயிப்பு எழுந்தது. ’ஸ்வெட்லானாவா, யாரது? பேலா- என்ன நாடு அது?” என்றே ஒரு கருத்தாளர் கேட்டாராம், கடைசியாக நோபெல் பரிசை ஒரு அமெரிக்க எழுத்தாளர் வென்றது 1993 இல் (அவர் டோனி மாரிஸன்) என்பதைச் சொல்லி வருந்தியபடி. இங்கிலிஷ் பேசும் உலகில் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் பற்றி மிகவும் கொஞ்சமாகத்தான் தெரிந்திருக்கிறது என்பதும்,
குடிமக்களும் ஆட்சியாளர்களும் – 2
இன்றுவரை இடது சாரிகளில் Parti socialisteம், வலதுசாரிகளில் Les Républicains கட்சியும் (இதற்குமுன்பாக RPR என்றும் UMP என்றும் பெயர் வைத்திருந்தவர்கள்) மாறி மாறி ஆட்சியிலிருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் செல்வாக்கிழந்து நாட்கள் பல ஆகின்றன. ஒரு சில நகராட்சிகளைக் கைப்பற்றுவதோடு அவர்கள் திருப்தி அடையவேண்டியிருக்கிறது. அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொழிற்சங்கங்கள் தற்போதைக்கு ஆறுதல் தருபவையாக உள்ளன. கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகளின் தலமையின் கீழ் அமைச்சராக முடிந்ததெல்லாம் இனி நாஸ்டால்ஜியாவாக அசைபோடமட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கு உதவும்.
'கோக்' அல்லது C17H21NO4
உடைந்த சோவியத் யூனியலிருந்து பணத்திற்கு பதில் ஆயுதங்ளை போதை மருந்துக் குழுக்கள் பெற்றுக் கொள்கின்றன…..இதில் கிடைக்கும் பணம் எப்படி போதைத் தயாரிப்பாளர்களை சேர்கிறது? வங்கிகள் வழியேதான் அதிகம் பணம் பரிமாறப்படுகிறது. முக்கியமாக கரீபியன் வங்கிகள். அங்கு போலி தனியார் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு அவைகள் வழியே பணம் வைப்புத் தொகையாக வைக்கப்படுகிறது. பின் அங்கிருந்து சட்டப்பூர்வமான வழியில் பினாமிகளுக்கு வெள்ளைப் பணமாக மாற்றப்பட்டு போதைத் தயாரிப்பாளர்கள் கைகளில் சேர்கிறது…..இன்னும் ஒருபடி மேலே சென்றால், 2008-ல் நிகழ்ந்தப் பொருளாதார வீழ்ச்சியில் வங்கிகள் திவாலாகாமல் காத்தவை போதை மருந்து கடத்துபவர்களின் மில்லியன்கள் வங்கிகளில் இருந்ததனால் என அதிர்ச்சி தரும் தகவலை ஐநா போதை மற்றும் குற்றப் பிரிவு அலுவலகம் தெரிவிக்கிறது.