தன் பதினொன்றாம் வயதில் ஷெரி ஜான்ஸன் என்பவர் வன்கொடுமைக்கு உள்ளானார். அதனால் கருவுற்றார். அதன் பின் தன்னை வல்லுறவு செய்தவனுக்கே மணம் முடித்து வைக்கப்பட்டார். இந்தப் பழக்கத்தை மாற்ற இப்போது தன் கதையை சொல்லி போராடி வருகிறார் ஷெரி ஜான்ஸன். அமெரிக்காவில் எந்த வயதில் வேண்டுமானாலும் திருமணம் செய்து “அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட குறை வயது கல்யாணங்கள்”
Category: சட்டம்
சவுதி அரேபியாவில் வரி கிடையாது என்பது உண்மையா?
சவூதி அரேபிய அரசு தனது நாட்டு பிரஜைகளிடமும், வெளிநாட்டு பிரஜைகளிடமும் எந்த வரியையும் பெறுவதில்லை என்று மார்தட்டிக் கொள்கிறது. அரசு அறிவித்துள்ள வருமானம் என்பது கச்சா எண்ணெய், கச்சா எண்ணெய் சாராத என்ற இரு துறைகள் மூலம் தான் வருமானத்தைப் பெருக்கிக் கொள்கிறது. இதை ஒருவர் இப்படி புரிந்து கொள்ளலாம். அரசின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த நிறுவனங்களின் மூலமாகக் கிடைக்கப்பெறும் ஏற்றுமதி + விற்பனை லாபம் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். கூடுதலாக கச்சா எண்ணெய் சாராத மற்ற தனியார் நிறுவனங்கள் தமது லாபத்தில் அரசுக்குச் செலுத்தும் கட்டணம் என்ற அளவில் அதிக பட்சமாகப் புரிந்து கொள்வார்கள். சாமானியர்களைப் பொறுத்தவரையில் அரசு தன்னை வரி செலுத்த சொல்லவில்லை என்ற அளவில் மட்டுமே பார்க்கிறது. இதைத் தான் சவுதிய அரசும் வெளி நாட்டு வாழ் மக்களுக்கு வரி எதையும் இந்த ஆண்டு அறிவிக்கவில்லை என்கிறது.
குற்ற நீதியொறுத்தல் முறை
அமெரிக்க நீதி முறை எத்தனை பயங்கரம் என்பது தெரியாதவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் பலர் இந்தியர்களும்/ தமிழர்களும். பழுப்புத் தோலுக்குக் கீழே பல நிறங்களில் மேலும் பல இனக் குழுவினர் காவல் துறையின் கடுமையான பார்வைக்கும், இழி நோக்குக்கும் ஆளாக இருக்கக் கிட்டுவதால், இந்தியரும் சீனரும் இது “குற்ற நீதியொறுத்தல் முறை”
பாதுகாப்புப் பிரச்னைகள்
கருவிகளின் இணையம் பற்றி இத்தனை பகுதிகளிலும் அதன் நல்முகத்தைப் பற்றி எழுதி வந்தவர், எப்படி பல்டி அடித்து இப்படித் தாக்குகிறார் என்று உங்களுக்கு தோன்று முன், முதலிலேயே சொல்லி விடுகிறேன். எல்லா புதுத் தொழில்நுட்பங்களிலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். பல ஊடகங்கள் அதன் குறைகளை ஆரம்ப நாட்களில் பெரிது படுத்துவதில்லை. பரவலாக அந்தத் தொழில்நுட்பம் பயனில் வந்த பின்புதான் அதன் குறைகள் மக்களுக்குப் புரிய வரும்
யு.எஸ் அரசியல் நிலையும், ட்ரம்ப் எனும் விபரீதமும்
யு.எஸ்-ல் காலம் காலமாக நடக்கும் பழமைவாதிகள் vs மிதவாதிகளின் கொள்கைப்போராட்டங்களின் அசிங்கங்கள்தான் ட்ரம்ப் போன்றவர்களை அதிபர் தேர்தலில் போட்டியிடும் நிலையை உருவாக்கியிருக்கிறது. அதிபர் தேர்தல் என்றால் மிக நாகரீகமாகச் சொல்லப்படும் ஒபாமா vs ஜான் மெக்கெய்ன், க்ளிண்டன் vs பாப் டோல் போன்ற போட்டியாளர்கள் இருந்த தளங்களில் ட்ரம்ப் போன்ற அடிப்படை அரசியல் அறிவில்லாதவர்கள் போட்டியிட ஊக்குவித்தது எது? எது இன்று ட்ரம்ப்-ஐ குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராகும் சாத்தியத்தை அளித்திருக்கிறது? ஏன் பல குடியரசு கட்சி ஆதரவாளர்கள் ட்ரம்ப் அதிபர் வேட்பாளராக வேண்டும் என்று விரும்புகிறார்கள்?
மதச்சார்பின்மையும் சோஷலிஸமும்: இந்தியக் கல்வி
குடிமைப் பங்காளர்கள் (Civil partnership)
ஓரிடத்தில் ஒரு ஆணும் பெண்ணும், இணைந்து வாழ்ந்து வந்தால், அதை அந்தப் பகுதியில் இருப்பவர்கள் அவர்கள் இணை என நம்பும் வண்ணம் வாழ்ந்து வந்தால், அப்படி வாழ்ந்து வந்தது தொடர்ந்து சிலகாலமாவது இருந்திருந்தால், அவர்கள் தம்பதியராகவே பார்க்கப்படுவார்கள். அவர்களில் பிரிவு ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு, அதாவது அண்டி வாழ்ந்து வந்தவருக்கு மற்றவர் சட்டப்படி பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த நபர்கள் ஏற்கனவே திருமணம் ஆனவராக இருந்திருந்தால் கூட என சட்டம் சொல்கிறது.(சட்டமானது பலமணத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால், ஏமாற்றப்பட்டு பாதிக்கப்பட்டவருக்கு உதவ முயல்கிறது.)
பெண்ணுக்கெதிராகவா சட்டங்கள்?
இன்றும் பல இடங்களிலும், பெண்ணை முடக்கிப் போட அவளின் பாலினத்தைக் குறிப்பிட்டு அல்லது அதை இழிவு செய்தலே போதுமானதாக இருக்கிறது. தலை எடுக்கும் பெண்ணா…? “அவள் கேரக்டர் சரி இல்லை” என்பதே போல… இப்படியான கருத்துக்களுக்கு பெண்களும் எதிர்வினையாற்றுவதும் இன்னும் நடக்கிறதுதானே?
கூகுள் காப்பியடிக்கிறதா? ஓரக்கிள் வழக்கு
அதாவது தற்காப்புக் கவசம் போல் ஜாவா மொழியைப் பாதுகாக்கப் பயன்படுகிறது. அதாவது, ரஜினி பெயரை வைத்து, அவரின் முகமொழியை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் மட்டுமே “கோச்சடையான்” எடுக்க முடியும். அது எவ்வளவு கேவலமாக இருந்தாலும், அந்த உரிமையை ரஜினி மட்டுமே தன்னுடையப் பிரியப்பட்டோருக்குத் தர இயலும். நானோ, அல்லது கமல்ஹாசனோ ரஜினியை வில்லனாக சித்தரித்து காமெடியனாக்க உரிமை கிடையாது. இதன் மூலம், மைக்ரோசாஃப்ட் போன்ற ஜாவா நசுக்கல் சக்திகளிடமிருந்து மொழியைக் காப்பாற்ற இயலும்.
அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான் – மறுவினை
சொல்வனத்தில், “அமெரிக்கப் பஞ்சாயத்தில் நான்” என்று சுந்தர் வேதாந்தம் அவர்கள் எழுதியிருந்த கட்டுரையைப் படித்த நண்பர் ஒருவர், அதில் இருந்த சில கருத்துக்களைக் குறித்து என்னுடைய கருத்துக்களையும் கேட்டார். அப்படித் தான் நான் இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுந்தர் அவர்கள் விரிவாகவும், விறுவிறுப்பாகவும் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றார். அதற்கு முதலில் என்னுடைய பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், சுந்தர் அவர்களின் கட்டுரை, சட்டம் பற்றியது. அதில் சில முக்கியமான கருத்துப் பிழைகள் உள்ளதால், அதனை சுட்டிக்காட்ட வேண்டியது இன்றியமையாததாக ஆகிவிடுகிறது.
பாலியல் வன்முறை – தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருப்புமுனை
இந்தியாவில், வன்புணர்வுக் குற்றம் குறித்து பெண்கள் புகார் செய்கையில், பெரும்பாலும், குற்றத்துக்கு அவர்களே பொறுப்பு என்று பழி சுமத்தப்படுகிறது. தப்பித் தவறி அந்தப் புகார் செவிமடுக்கப்பட்டாலும், அதிர்ச்சியிலிருந்து அவர்கள் மீண்டு வந்து கொண்டிருக்கையில், வெகு தாமதமாகவே கேட்கப்படுகிறது. மன அதிர்ச்சியிலிருந்தும், உடல் நோவிலிருந்தும் வெளிப்படுவதற்கே மிகுந்த தைரியமும், உளவியல் ஆலோசனை சேவைகளும் தேவைப்படும். வசதியற்ற கீழ்மட்ட சமூகங்களின் பெண்களுக்கு இத்தகைய உதவிகள் கிடைக்க என்ன செய்யப்பட்டிருக்கிறது? அவர்களுக்கு எங்கே போகவேண்டும் என்றும் தெரியாது, தரமான சேவைகளைப் பெறப் பணம் செலவழிக்கவும் இயலாது.