எவ்வளவோ சாதுவாய் என்னை நான் உணர்கிறேன்
என்னோடு நான் உருட்டிக் கொண்டு வரும் சைக்கிள்
என்னை உருட்டிக் கொண்டு வரும் போது-
Category: கவிதைகள்
காற்றினும் கடியது அலர்
மறைத்தாலும் மறையாதது காதல் என்பதால் அதனால் அலர் எழுந்துவிடுகிறது. ஆமாம், அந்தக் காலத்தில் காதலை ஏன் மறைக்க இத்தனை மெனக்கெடுகிறார்கள்? இசேவின் கதைகள் தொகுப்பும் கென்ஜியின் கதைகள் தொகுப்பும் இதற்குத் தரும் விடை காதலர்களுக்கு இடையேயான பதவி வேறுபாடு. காதலர்களில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருக்கும்போது அவரைக் காதலிக்கப் பலர் போட்டியிடுவதுண்டு. அதில் ஏதும் சிக்கல் எழாமலிருக்க மறைத்து வைக்கவேண்டியது அவசியப்படுகிறது.
ஆமிரா கவிதைகள்
சிசு ஜனிக்கிறது
தொப்புள்கொடி அறுபட
சொல்லின் முடிவின்மை சூழ
தாதி அதை/அவனை/அவளை
கையில் ஏந்தி
தாயின் அருகில் கிடத்துகிறாள்
மலரிலிருந்து கனிந்து விடுபட்ட விதையென
அது/அவன்/அவள்
பிறப்பின் தவிப்பை மென்று செரித்து
சர்க்கஸ்
முதல் முறை தவறியது
அடுத்த முறை
வெகு அருகில் சென்று தவறியதும்
அரங்கம் பிரார்த்திக்கத் தொடங்கியது
இம்முறை அவளே பந்தாகி
சுழன்று மேலேறியவுடன்
அரங்கமே திரண்டெழுந்து
கூடையுள் அமர்ந்து
இரங்கியது.
மீச்சிறுவெளி
வெற்றிப் பெற்றவனுக்கு
வலி சிறந்த எடுகோள்
தோல்வியை தோளில் வைத்து
செல்பவனின் கையில் அளவுகோல்
காலத்துள் உறைதல்
தந்தையை இறுகப் பிடித்தபடி
அவன் முதுகில் முகத்தையும், உடலையும்
ஒட்ட வைத்திருக்கிறாள் அச் சிறுமி
காற்று அவள் சிறுமுடியைக் கலைக்கிறது
குட்டை முடியில் சிறகடிக்கும் மயிர்ப்பிசிறுகள்
மென்சாமரமாய் அவன் முதுகை வருடுகிறது
வீதிக்கு அருகில் நீர்நிலையில்
மீனுக்குத் தவமிருக்கும் கொக்கு
ஒரு கணம் திரும்புகிறது
தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
சற்றென்று பெய்யும் கோடை மழையென
நொறுங்கிப் பொலபொலத்துப் போனது
நான் என்னும் வாழ்க்கைஉயிரை மறந்த உடலென என்னால் அவளோடு பொய்யாகச் சிரிக்க முடியவில்லை
ஆமிரா கவிதைகள்
எட்டுக்கால் பூச்சிகளாக
சுவற்றில் ஊரத் துவங்குகின்றன பகல் பொழுதுகள்
பயம்
கருகிய சர்க்கரைப் பாகின் நெடியாக
அறையெங்கும் விரவுகிறது
துயர் கூட்டும் நிலவு
இந்த இலையுதிர்காலம் எனக்கு மட்டுமானது இல்லை என்றாலும்கூட இன்றைய நிலவு ஆயிரக்கணக்கான துயரங்களை என் இதயத்துள் கிளறுகிறது. இந்த எளிய பாடல் சீனமொழிப் பாடல் ஒன்றைத் தழுவி எழுதப்பட்டது என்றொரு கருத்து நிலவுகிறது. இவரது 25 பாடல்களில் பல சீனக் கவிதைகளின் ஜப்பானிய மொழிபெயர்ப்பாக இருக்கின்றன.
மறை
கற்களும் கரைந்து போகும்
இழைகிற நதிநீர் உரசி
சொற்கள் ஏன் தேய்வதில்லை
ஒன்றே பலவாறாகி
வரிசைகள் பலவாய் மாறி
மாயமாய் கிறங்கடிக்கும்..
இரு டம்ளர்கள்
மற்றவர்களின்
மகிழ்வான பொழுதுகளில்
அவர்களுக்குத் தெரிந்திருந்தது,
தங்களின் பொறாமைகளை,
மெல்லிய குசல விசாரிப்புகளில்
முகமூடியிட்டுக் கொள்ள.
குறுங்கவிதைகள்
உன் நிலவைத் தூக்கிக் கொண்டு
நள்யாமம், என் வானைத் தேடுகிறேன்
என் நிலவு காணாமல்.
மௌலானா ஸஃபர் அலி கான்
இந்திய விடுதலைப் போராட்டத்தில் காங்கிரஸ் ஆதரவாளராகவும், பிறகு முஸ்லிம் லீக் ஆதரவாளராகவும் இருந்தவர் மௌலானா ஸஃபர் அலி கான். தன்னுடைய பத்திரிகை ஜமீன்தாரில் விடுதலை வேட்கைக் கருத்துகளை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எழுதியதால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர். இஸ்லாமிய அடையாளங்களுடன், கொள்கைகளுடன் வாழ்ந்த ஸஃபர் அலி கான் இராமனின் புகழ் பாடும் கவிதைகளை எழுதியுள்ளார். அக்கவிதைகள் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை அல்ல என்னும் கருத்து கொண்டவர்.
துயரிலும் குன்றா அன்பு
தூரத்து வடகிழக்குத் திசையில் இருக்கும் ஷினோபு நகரத்தில் மொஜிஜுரி முறையில் வண்ணமிடப்பட்ட பட்டுத்துணியைப் போல் என் உள்ளம் காதலால் கலங்கிக் கிடக்கிறது. ஆனால் அதன் காரணமாகவெல்லாம் நான் உன் மீது வைத்த காதல் மாறிவிடாது.
அல்லாமா இக்பால்
இக்பாலின் ‘இறைவனுக்கு ஒரு கேள்வி’ (ஷிக்வா, புகார்) கவிதை வெளியானபோது அதில் நாத்திகம் ஒலித்தததைக் கண்டு மார்க்க அறிஞர்கள் குழம்பினர். இக்பாலுக்கு இறைவனை நோக்கிக் கேள்வியெழுப்பும் தைரியத்தைக் கொடுத்து எது? எதனால் இக்பால் இப்படி எழுதினார்? என ஐயத்துடன் ‘ஷிக்வா’வை அணுகினர். இக்பாலை இறை எதிர்ப்பாளராகவும் பேசத் தயங்கவில்லை. அதன் பின்னர் ‘கேள்விக்கு பதில்’ (ஜவாப்-ஏ-ஷிக்வா, புகாருக்கு விளக்கம்) கவிதையில் முன்னம் தான் இறைவனை நோக்கிக் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இறைவன் பதில் அளிக்கும் வகையில் எழுதினார். அந்தக் கவிதைக்குப் பிறகு, இக்பாலின் ஷிக்வா, ஜவாப்-ஏ-ஷிக்வா இரண்டும் இஸ்லாமிய இலக்கியத்தில் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகப் பார்க்கப்பட்டது
எனக்கு ஓர் அறிமுகம்
நான் அரசியல் அறிந்தவளல்லள்.
ஆனாலும்
அதிகாரத்தில் அமர்ந்தவர்கள்
அத்தனை பேரின்
பெயர் தெரிந்தவள்தான்.
நேருவில் தொடங்கி
எல்லோர் பெயரையும்
கிழமைகள் போல், மாதங்கள் போல்
என்னால் சொல்ல முடியும்.
நான் ஒரு இந்தியன்;பழுப்பு நிறத்தினள்.
மலபாரில் பிறந்த நான்
பேசுவது மூன்று மொழிகளில்;
எழுதுவது இரண்டில்;
கனவு காண்பதோ ஒன்றில்.
மனிதன்
விழிக்க வேண்டி
மாற்றத்தை நோக்கி வெட்கமில்லாமல்
என் விருப்பத்தின்
சாவியைத் தேடுகிறேன்
முழு இருளில்
எனக்குக் கிடைக்கும்
அர்த்தம் தான் வெளிச்சம்
நித்தியமானவன் – கவிதைகள்
நான் இதுகாறும் பெற்ற அனைத்தையும்
தொலைத்து விட்டு பிச்சைக்காரனாய்
அந்த வானத்தின் கீழ் நின்றேன்
அன்று பூத்த மலரை
என் பழுதடைந்த கண்களால்
நெருக்கமாகப் பார்த்தேன்
கனவுகளை இறைத்த தோட்டத்தில்
நான் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன்
பூனை
சாமர்த்தியமாய்ப்
பதுங்குவதிலும்,
சட்டென்று
பாய்வதிலும்
சன்னமாய் உள்
ஒலிப்பதிலும்,
சுற்றி வளைய வளைய
வருவதிலும்
நினைவுகள்
பூனையிடமிருந்து
வித்தியாசமானவையல்ல-
வ. அதியமான் கவிதைகள்
விதையுறையைக் கீறி
வேர் விட்டதிலிருந்து
நாளிது வரை
இந்த கிழட்டு மரம்
எத்தனைக் கோடி காதம் நடந்திருக்குமோ
அத்தனை தூரம்
நானும் நடக்கிறேன்
என் அடிவயிற்றில் இளைப்பாறும்
ஆயிரமாயிரம் பறவைகளும்
என் கூடவே நடந்து வருகிறது
மணற்காடர் கவிதைகள்
ஒரு கடுகைத் துளைத்து எப்படி
ஏழு கடலைப் புகட்ட முடிந்தது?
ஒரு கடுகைத் துளைக்க முடிந்ததென்றால்
ஏழு கடலைப் புகட்டுவதா பிரமாதம்?
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
எனது நிலையற்ற
நியாயத்தின் உண்மை
நிரூபிக்கப்பட்ட போது
அப்பொழுதுக்கு அப்பொழுதென
சாத்தியத்தில் என் மனம்
வழியை விட
நான் காத்திருக்கும் போது
யாருக்கும் தெரியாமல்
என் மனம் கரைவதை
நான் பார்த்தேன்
முகநாடகம், மேலெழுந்தபோது
அந்தச் செடியின் ஜீவன்
வானம் பார்க்கும் இளமிலைகளில்
தீரா நடனமாடிக்கொண்டிருந்தது
குருத்தொன்று தலையில்
பொங்கியெழத் தயாராய்.
ஓர் அபூர்வ விலங்கு
அதோடு
வாடிக்கையாக வந்து செல்பவர்கள்
போலிஸுடன்
உடன்கட்டை ஏறுதலும்
போலிஸ் சிலரோடு
உடன்போக்கு செல்லுதலுமான
கயமைகளை
ஆழ்ந்தவதானித்துக்கொண்டு
வறியயுண்ணியாகவும்
மிரட்டுண்ணியாகவும்
எழுத்து, மனிதன், நாய்
நான் அந்த எழுத்துக்களின்
மீது அடர்த்தியான இலைகள்
கொண்ட ஒரு மரத்தை வைக்கிறேன்
பிறகு ஒரு தெருவை வைக்கிறேன்
….
இப்பொழுது அந்த தெருவில்
நடந்து சென்ற அந்த மனிதர்கள்
அந்த இரவிலும்
அதற்கு முன் அந்த இருளிலும்
…
திடீரென மழை வரவே
எல்லோரும் நனைந்தார்கள்
எழுதிய காகிதத்தில்
இருந்தவர்களும் நனைந்தார்கள்
வேணு தயாநிதி கவிதைகள்
பனி பூத்து
பனி கொழித்து
உப்பளம் போல்
நிறைந்து விட்ட
நடைபாதையை தாண்டி
சாலையின் ஓரத்தில்
தியானித்து நிற்கும்,
பிடுங்கி
தலைகீழாய் நட்டது போல்
இலையின்றி நிற்கும்
பிர்ச் மரம்.
வ. அதியமான் கவிதைகள்
ஒவ்வொரு
அதிகாலையிலும்
அதிசுத்தமாய்
கழுவி முடிக்கும்
என் கப்பரைக்கு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
எங்கோ ஓர் உலை
கொதிக்கிறது
ஆனந்த் குமார் கவிதைகள்
ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.
சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.
முற்றுப் பெறா புதினம்
மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
உரைகல்; கடந்த வழி -கவிதைகள்
பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா
கசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்
கீழே சிந்திய தேனை
பருக வந்திருக்கும்
எறும்புகளை
பாவம் என்றெண்ணுவதற்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
பொறாமை.
கவிதைகள் – வ. அதியமான்
யசோதா
தேகமெங்கும்
குரல் முளைத்து
கூவி நிற்கிறாய்
கொள்ளும் செவிகள்
திரும்ப வருமென
இடுப்பில் கையூன்றி
உறுதியாய்
காத்திருக்கிறாய்…
கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்
எதுவும் அப்படியே இருப்பதில்லை
காலை மாலை இரவென
விரட்டிய போது
அதில் நான்
சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இப்படியாயின்
ஒரு வயோதிகனின்
அந்தரங்கத்தின் ஆசை
மேலே மிதந்து வந்தது
சிசு, அப்போது, நெடும் பயணி
அதனால் என்ன?
வளையாத வானத்தில்
ஒரு வளைந்த வானவில்லும்
வளைந்த வில்லில்
ஒரு வளையாத அம்பும்
அத்தனை ஆச்சரியம்
ஒன்றுமில்லை காண்!
கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்
தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்
இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்
இடம், தபால்காரன் & மனதின் பாதை
ஒரு நினைவில் தப்பிய மனிதனாகிய நான்
வீணாய் எனது உடலின் சுமையைச் சுமப்பவன்
வழுவாத சலிக்கும் பாதையில் நடப்பவன்
பேசி தீர்த்துக் கொள்வதற்கு
மொழி இல்லாதவன்
நான் எல்லோரையும்
சமாதானம் செய்து கொள்கிறேன்
ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல்
(நித்ய சைதன்ய யதியின் “நோயை எதிர்கொள்ளல்” கட்டுரைக்கு)
என் வேர்கள் பலவீனமானவை
சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூட தெரியாதவை
அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்
நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன
ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு
மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்
கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே இவை உன் கைங்கர்யம்தானா
ராஜா நடேசன் கவிதைகள்
மண்ணில் இருந்து வந்தது
மண்ணுக்கே செல்கிறது
அன்னமிட்ட மண்
எடுத்துக்கொள்கிறது கொடுத்ததனைத்தையும்
உயிர்ப்பிக்க வரும் தேவன்
எடுத்துச்செல்ல ஒன்றும் இல்லை
இறைஞ்சி நிற்கும் கடவுளிடம்
கையளிக்கிறது மண்