ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?

வாட்சன் ஹெல்த் நிறுவனத்தை ஐபிஎம் விற்கப்போகிறது. ஏன் இது தோற்றுப் போனது? மக்கள் தங்கள் செயற்கை நுண்ணறிவு (ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜென்ஸ்) கனவுகளிலிருந்து எழுந்திருக்க வேண்டுமா? இந்தத் தோல்வியிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்? ஐபிஎம் நிறுவனம் தன்னுடைய சிகிச்சை (ஹெல்கேர்) பிரிவைக் கைவிட்டுவிட்டது. இவர்கள் இரு முக்கிய சந்தைகளில் “ஏன் ஐ.பி.எம். வாட்ஸன் ஹெல்த் பின்னடைவு பெற்றுத் தோற்றுப் போனது?”

யார் யார் யார் இது யாரோ?

இக்கட்டுரை முழுதும் ரோபோவால் எழுதப்பட்டது. மனிதர்களே, இன்னமும் பயம் ஏன்? ஜிபிடி-3 (GPT-3) என்ற, சக்தி மிக்க, திறந்த செயற்கை நுண்ணறிவுப் புதிய மொழி உற்பத்தியாளரான (OpenArtificial Intelligence New Lanaguage Generator) ரோபோவிடம், எங்களுக்காகச் சில துண்டங்களிலிருந்து ஒரு கட்டுரை எழுதக் கேட்டுக் கொண்டோம். இடப்பட்ட பணி “யார் யார் யார் இது யாரோ?”

குளக்கரை

இந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது- ஆறு அல்லது எட்டு சதவிகித பணவீக்கம் ஆட்சிகளைக் கவிழ்த்துவிடக் கூடியது என்று நமக்குத் தெரியும். இப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா?- வெனிசூயலாவில் பணவீக்கம் 82,700 சதவிகிதம் என்ற நம்ப முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி, கேரட், அரிசி, ஒரு டாய்லட் பேப்பர் ரோல், ஒரு பார் சோப் வாங்க பணக்கத்தைகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது – இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள்

மகரந்தம்

அடுத்து என்ன வரப் போகிறது? மனித இனம் தாக்குப் பிடிக்குமா? நம் குடும்பம் எப்படி வரப் போகும் பிரளயத்தில் இருந்து தற்காத்து காப்பாற்றிக் கொள்ளும்? இதுதான் பெரும் பணக்காரர்களின் கவலை + கேள்வி. இதற்கான விடைகளையும் நடக்கவிருக்கும் சாத்தியங்களையும் யுவல் நோவா ஹராரி (Yuval Noah Harari), தன்னுடைய அடுத்த புத்தகமான 21 Lessons for the 21st Century-இல் ஆராய்கிறார். இந்தப் புத்தகம், அவரின் முந்தைய நூல்களான Sapiens: A Brief History of Humankind, மற்றும் Homo Deus: A Brief History of Tomorrow-வின் தொடர்ச்சியாக இருக்கிறது.

பொய் ⇒ புளுகு மூட்டை ⇒ புள்ளிவிவரம்

“அனேகமாக எவ்வளவு முறை இவ்வாறு நிகழ்ந்திருக்கிறது?” என வினவுங்கள்: டானியல் கானெமான் சொல்லும் கதையைப் பார்ப்போம். தாங்கள் எழுதும் இந்தப் புத்தகத்தை எழுத எத்தனை நாள் ஆகும் என சக நூலாசிரியர்களிடம் வினாத் தொடுக்கிறார் கானெமான். எல்லோரும் பதினெட்டு மாதங்களிலிருந்து இரண்டரை வருடத்திற்குள் புத்தகத்தை எழுதி முடித்துவிடலாம் என்கிறார்கள். அதன் பிறகு, இதற்கு முன்பு பல்வேறு நூல்களை எழுதிய ஒருவரிடம், “உங்களின் போன புத்தகங்களை எழுத எவ்வளவு நாள் ஆனது?” எனக் கேட்கிறார்.
– பத்தில் நாலு புத்தகம் முற்றுப் பெறவேயில்லை

கணினி எழுதிய திரைப்படம்

செயற்கை நுண்ணறிவு கொண்ட கணினிகள் சதுரங்கம் விளையாடி கிராண்ட் மாஸ்டர்களை ஜெயிக்கின்றன. நீங்கள் கொங்குத் தமிழில் பேசுவதை ஸ்பானிஷ் மொழியில் மொழிபெயர்த்துக் கொடுக்கின்றன. நீங்கள் அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அனுமானிக்கின்றன. அவற்றை சினிமாவுக்கு திரைக்கதை எழுதச் சொன்னால் எப்படி எழுதும்? அதைப் படமாக எடுத்தால் எவ்வாறு “கணினி எழுதிய திரைப்படம்”

ப்ளாக் செயின் – ஓர் எளிய அறிமுகம்

தொகுப்புச் சங்கிலி மிக மிக பாதுகாப்பானது. இது கட்டாயம் மோசடி மற்றும் கையாடலைக் கணிசமாகக் குறைக்கும். தரவுகளில் திருத்தம் செய்வது மிகக் கடினம். மேலும் எல்லா பரிமாற்றங்களும் ஒரே பேரேட்டில் சேமிக்கப்படுகிறது. பரிமாற்றங்கள் இடைத் தரகர்கள் மற்றும் மூன்றாம் தரப்புகளின் தேவையை முழுவதும் இல்லாமல் செய்துவிடும்.
தொகுப்புச் சங்கிலி தொழில்நுட்பம் இன்றுள்ள தொழில்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தும். உதாரணமாக நிதித் துறை, நீதித் துறை, கல்வித்துறை, இசைத்துறை என பல துறைகளில் மாற்றமும் முன்னேற்றமும் வருவதைத் தடுக்க முடியாது.

இந்திய அடுக்கு – எதிர்காலம், சர்ச்சைகள்

தன்னுடைய குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த மேற்கொண்ட முயற்சிகள். இந்திய அடுக்கின் நோக்கம், இந்தியாவை ஒரு வல்லரசாக்குவதல்ல. மாறாக,, அதன் குடிமக்களுக்கு சரியான சந்தர்ப்பங்களை உருவாக்கும் முயற்சி. டாம் ஃப்ரீட்மேன் கூறியது போல, ”இந்திய மக்களின் பேரார்வத்தின் அளவு, ஒரு ஷாம்பெயின் பாட்டிலை 70 ஆண்டுகள் குலுக்கியதற்கு ஈடாகும். இந்த பாட்டில் திறக்கும் பொழுது, வெளிப்படும் வேகம் இவ்வுலகம் கண்டிராதது”

இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி

மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு. முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative). இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய “இந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி”

பிருந்தாவனமும் தகடூர் குமாரனும்

சொந்த ஊர் மீது மாறாத பற்றும், பாசமும் கொண்ட கோபி, தகடூர் என்னும் தர்மபுரியின் பழைய பெயரோடு இணைத்து தன்னை வெளிப்படுத்திக் கொள்வார். குமாரசாமிப்பேட்டையில் அனைவருக்கும் பரிச்சயமான குடும்பம் அவருடையது. கோபியின் தந்தை தணிகாசலம், ஓய்வுபெற்ற ஆசிரியர். திருவள்ளூவர் அறிவகம், அண்ணா அறிவகம் போன்ற பள்ளிகளில் பணியாற்றியிருக்கிறார்.

சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊன்

சொக்குப் பொடி போட்டு கணித்திரை சிறைக்குள் நம்மை அடிமையாக்கி வைத்திருக்கின்றன; ஒரேவிதமான தகவல்களைக் கொடுத்து பொய்களைக்கூட நிஜமென்று நம்ப வைக்கின்றன; நம்மிடையே பிரிவினையை உருவாக்கி, பிழையான சங்கதிகளின் மூலம் வெறுப்பை உருவாக்குகின்றன; வெறும் இதழியல் செய்தித்தாள் அமைப்பை மட்டும், கபளீகரம் செய்தது என்றில்லாமல், தனிமனிதரின் அந்தரங்கம், சுதந்திரம், குடும்பத்தின் நான்கு சுவருக்குள் நடக்கும் பிக்கல்/பிடுங்கல் போன்றவற்றையும் உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன; அரசியலில் மூக்கை நுழைத்து சுதந்திர தேசங்களின் அதிபர் தேர்தல்களில் தகிடுதத்தம் நடக்க வைக்கின்றன; எந்நேரமும் கைபேசிகளின் கறுப்புத் திரையினைப் பார்க்க வைத்து வேறெதிலும் கவனம் செலுத்தவிடாமல் திறன்பேசிகளின் தாசானுதாசர் ஆக்கி வைக்கின்றன…

மதிநுட்ப எந்திரம் – வரமா? சாபமா?

மனிதரை விடத் துடிப்பான எந்திரங்கள் தம்மை விடத் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி அவை மேலும் துடிப்பான எந்திரங்களை உருவாக்கி இவ்வாறாக  படிப்படியாக எந்திரங்களின்  துடிப்பு அம்சம் உயர்ந்துகொண்டே போவது நுண்ணறிவுப் பெரு வெடிப்புக்கோ(intelligence explosion)   அல்லது ஒருமைத் தன்மைக்கோ (singularity) இட்டுச் செல்லும் என்று சிலர் கலக்கம் அடைகிறார்கள். நுண்ணறிவு எந்திரங்கள் வெகு விரைவில் மேன்மேலும் சூட்டிகையாக ஆகி  அவற்றின் மொத்த அறிவுத் தொகுப்பு மனிதர்களால் புரிந்து கொள்ள முடிகிற சக்திக்கு மீறியதாகிவிடும்  என்று அஞ்சுகிறார்கள்.  மேம்பட்ட அறிவும் தொழில் நுட்பமும் கொண்ட எந்திரங்களின் ஆதிக்கத்தில் மனித இனம் அற்ப ஜீவிகளாகி ஒடுங்கி நிற்கும் நிலை வரக் கூடும் என்கிறார்கள்.

தானோட்டிக் கார்கள் – காப்பீடு மற்றும் காப்புப்பிணை

சென்ற பகுதியில் சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் பற்றி அலசினோம். அதைவிட மிக முக்கியமான விஷயம் வாகனக் காப்பீடு. தானோட்டிக் கார்களில் காப்பீடு ஒரு மிகப் பெரிய பிரச்னை. சொல்லப்போனால், தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது வாகனக் காப்பீடு சமாச்சாரம். வாகனக் காப்பீடு வாகனத்தில் இல்லையேல், உங்களுக்குக் கார் ஓட்டும் உரிமம் இருந்தாலும், நீங்கள் கார் ஓட்டுவது சட்டப் புறம்பான விஷயம். இதற்குச் சட்டப்படி அபராதம் உண்டு. சரி, ஏன் வாகனக் காப்பீட்டிற்கு இவ்வளவு முக்கியத்துவம்?

நுண்ணறிவு-2

மூளை சில குறிப்பிடத்தக்க கற்கும் குணங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவது, நாம்  விரைவாகக் கற்கிறோம். பல நேரங்களில் புதிய ஒன்றை அறிந்துகொள்வதற்கு, சில மேலோட்டமான பார்வைகள் அல்லது  விரல்களின் சில தொடுதல்கள் மட்டுமே போதும். இரண்டாவது, கற்றுக்கொள்ளல் என்பதே, படிப்படியாக நிகழ்கிறது. புதிதாக சிலவற்றைக் கற்குமுன், மூளையை மறு  பயிற்சிக்கு உட்படுத்த வேண்டிய அவசியமோ  அல்லது  முன்பு கற்றதை மறக்கவேண்டிய நிர்ப்பந்தமோ இல்லை. மூன்றாவது, மூளைகள் தொடர்ந்து கற்றுக்கொள்கின்றன. திட்டமிட்டும், செயலாற்றியும் உலகில் நடமாடி வரும் வேளைகளில் கூட, நாம் கற்பதை ஒருபோதும் நிறுத்துவது இல்லை. மாறும் உலகிற்கேற்ப மதிநுட்ப அமைப்புகள் (intelligent systems) இயங்க வேண்டுமானால்,  விரைவு, படிப்படியான உயர்வு, எல்லையற்ற நீட்சி ஆகிய மேற்குறிப்பிட்ட   சிறப்பியல்புகள் கொண்ட கற்றல் அவசியம்.

மறுபடியும் ஜென்கின்ஸ்- அதாவது ‘ஒருங்கிணைந்த கட்டமைப்பு’

அப்போதெல்லாம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றங்களை அமல்படுத்துவார்கள். இரவும் பகலுமாக நான்கு நாட்கள் கூடிப் பேசுவார்கள்.  ஒரே குழு, பத்து நாட்கள் உட்கார்ந்து நிரல் (coding) எழுதுவார்கள். எழுதியதைச் சரிபார்க்க இன்னொரு பத்து நாட்கள் ஆகிவிடும். போட்டி நிறைந்த இவ்வுலகில் பத்து நாட்கள் என்பது அதிகக் காலம். அதற்குள் வாடிக்கையாளர்களின் தேவையே மாறிப்போய்விடும். காலையில் முடிவெடுத்தால், மறுநாள் காலையில் மாற்றங்களை அமல்படுத்த வேண்டியிருக்கும். போதுமான நேர அவகாசமில்லை என்பதற்காகச் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல், அவசர அவசரமாகப் பணியை நிறைவேற்ற முடியாது. குறுகிய காலம் என்பதற்காக நடைமுறைகளை நமக்கேற்றபடி திருத்தியெழுதினால், தரம் குறைந்துவிடும்.

நுண்ணறிவு – நூல் அறிமுகம்

ஹாவ்கின்ஸின் அறிமுகச் சான்றுகள், அவரது அபரிமிதமான ஆக்கத் திறனையும் இயல்பான நுண்ணறிவையும் சுட்டிக்காட்டி நம்மை மலைக்க வைக்கின்றன. அவருடைய இந்த புதிய நூலின் (On Intelligence) மதிப்புரைகள் ஒவ்வொன்றும் “ஹாக்கின்ஸ் ஒரு சிறந்த தொழில் முனைவர்; கணினி நிபுணர்; Palm computing, Handspring என்கிற இரு குழுமங்களின் நிறுவனர்” என்ற உயர்த்தும் குறிப்புகளுடன் தொடங்குகின்றன. இவர் Palm Pilot, Treo ஸ்மார்ட் போன் மற்றும் சில சாதனங்களைக் கண்டுபிடித்தவர், “On Intelligence” என்னும் இந்த நூலில், ஹாக்கின்ஸ், “மூளை எவ்வாறு செயல்படுகிறது, நுண்ணறிவு இயந்திரங்களை எவ்விதம் உருவாக்கிக் கொள்ள முடியும்,” என்பன பற்றிய புதிய கோட்பாட்டை அறிமுகப்படுத்துகிறார்

எங்கேயும் எப்போதும் எல்லாமே தானாகவே இயங்கும் – ஜென்கின்ஸ்

உங்களது நிரல், எதில் வேண்டுமானாலும் எழுதப்பட்டதாக இருக்கட்டும். எங்கே, யாரிடம் வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை இயக்கி, முடிவுகளை சரியானவர்களிட்ம் சேர்ப்பிக்கும் அஞ்சலக பணியாளர் பணியைத்தான் ஜென்கின்ஸ் செய்கிறது. இதென்ன கட்டண சேவையா? இல்லை. உரிமம் வாங்கவேண்டுமா? தேவையே இல்லை. முழுவதும் இலவசம். கட்டற்ற சுதந்திரம்! எத்தகைய அடியையும் தாங்கிக்கொண்டு அசராமல், அசுரகதியில் உழைத்துக்கொண்டே இருக்கும் அடிமாடுதான் ஜென்கின்ஸ்.

ஹைப்பர்லூப்: வேகம் தடை இல்லை

எங்கள் ரயில் டெல்லிக்கு 28 மணிநேரம் தாமதமாகச் சென்றது. அந்த 3 நாள் பயணம் ஒருவழியாக முடிந்தபோது எனக்கெல்லாம் வாழ்க்கையே வெறுத்துப் போனது. ஊருக்கு போயி மூணு நாள்ல கடிதம் வரும்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஊருக்கு போகவே மூணு நாளா ? என்ன கொடுமை இது! பிறகு இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல விரைவு ரயில்களில் பயணம் செய்திருக்கிறேன். நம்மூர் கொங்கன் ரயில் பாதையில் 100 கி.மீ வேகம் செல்லும் ரயிலில் பயணித்தேன். ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரிலிருந்து நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டெர்டாம் சென்ற ரயில் 220 கி.மீ வேகத்தில் சென்றது பிரமிப்பாக இருந்தது. பின்னர் பிரான்ஸ், பெல்ஜியம், ஜப்பான் என்று பல நாடுகளில் பயணங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஷாங்காய் நகரின் விமான நிலையத்துக்கு செல்ல அங்குள்ள மக்லேவ் ரயிலில் ஏறினேன். 42 கி.மீ தொலைவு கொண்ட அந்தப் பயணம் வெறும் 6 நிமிடங்களில் முடிந்தது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியையும், அந்த நாட்டின் மீது பொறாமையையும் ஏற்படுத்தியது.

தானோட்டிக் கார்கள் – தொழில்நுட்ப அறிமுகம்

தானோட்டிக் கார்களில் கைகளும், கால்களும் இல்லை. இதனால், ஸ்டீய்ரிங் சக்கரம், பிரேக் மற்றும் ஆக்ஸிலரேட்டர் தேவையே இல்லை. தானோட்டிக் கார்களில் உள்ள கணினிகள் நேரடியாக வேகக் கட்டுப்பாடு, மற்றும் நிறுத்துதல் விஷயங்களைச் செய்துவிடும். சிக்கல் எல்லாம் கண்கள் விஷயத்தில்தான். விவரமாக அடுத்த பகுதியில் பார்க்க போகிறோம் என்றாலும் ஒன்றை இங்குச் சொல்லியாக வேண்டும். சாதாரணக் காய்ந்த சாலையில் தானோட்டிக் கார் செல்வதற்கும், மழை மற்றும் பனிப்பொழிவு சாலையில் செல்வதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளன. இயக்க பெளதிகம் முற்றிலும் வேறுபட்டது. மழை கொட்டும் சாலையில் பயண வேகம் மற்றும் நிறுத்துவதற்கான தூரம் எல்லாம் வேறுபடும். நாம் இதைச் சொல்லிக் கொடுக்காமலே கார் ஓட்டும்பொழுது கடைபிடிக்கிறோம்.

கோரத்தில் மகிழ்ச்சி கொள்பவர் கோர முடிவை அடைவர்

வெஸ்ட் வோர்ல்ட் (தமிழில் மேற்குலகம் என மொழிபெயர்க்கலாம்) என்பது மாயலோகம். அங்கே நீங்கள் அந்தக் கால அமெரிக்காவைப் பார்க்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்திய அமெரிக்கா எப்படி இருந்திருக்கும்? அங்கே தினசரி துப்பாக்கிச் சூடு நடக்கும். சட்டத்தை நீங்கள் கையில் எடுக்கலாம். … ரோபாட்டுகளின் ஆட்சி எப்படி இருக்கும், கோயத் எழுதிய ஃபௌஸ்ட் நாடகத்திற்கும் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம், செயற்கை நுண்ணறிவு குறித்து ஃபிலிப் கே டிக் எழுதிய புதினங்களில் வரும் தடுமாற்றங்கள் எவ்வாறு வெஸ்ட்வோர்ல்ட்-இல் காட்சியாக்கம் ஆகிறது, நச்சுநிரற்கொல்லிகளைத் தாண்டியும் கணினியில் எவ்வாறு மென்பொருள்கள் இரண்டகநிலைக்கு வந்துசேர்கின்றன, ஜூலியன் ஜேன்ஸ் எழுதிய இருண்மை மூளையும் கடவுளின் குரலும் எப்படி உணர்த்தப்படுகின்றன…

மனிதர் ஓட்டாத கார்களில் பயணிக்க நாம் தயாரா?

கார் தயாரிப்பாளர்களுக்கு உதிரி பாகங்கள் செய்யும் நிறுவனங்களான Delphi மற்றும் Continental போன்ற நிறுவனங்கள், எப்படி உணர்விகளைக் கார்களுக்கான கரடு முரடுப் பயன்பாட்டிற்காகத் தயாரிப்பது என்பதில் பல மில்லியன் டாலர்களை செலவு செய்கின்றன. … காப்பீடு நிறுவனங்கள், தானோட்டிக் கார் வந்தால் தங்களுடைய தொழில் என்னவாகும் என்று கவலையில், பல புதிய அணுகுமுறைகளையும் முன் வைத்து வருகிறார்கள். அரசாங்கங்கள் பொதுவாக, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று செயல்படும் அமைப்புகள். ஆனால், பல அமெரிக்க மாநிலங்கள், இவ்வகைக் கார் தயாரிப்பு தன்னுடைய மாநிலத்தில் நிகழ வேண்டும் என்பதால், அவசரமாக, தானோட்டிக் கார்களைப் பொது சாலைகளில் சோதிக்க முந்துகின்றன. இந்தப் புரட்சியில் பெரும் தாக்கத்தைச் சந்திக்கப் போகும் மூன்று வகை அரசாங்க அமைப்புகள் 2016 –ல் வெறும் பேச்சளவில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர்.

தானோட்டிக் கார்கள் – ஒரு பருந்துப் பார்வை

வெறும் 2,500 பேர் வசிக்கும் சின்ன ஊரில் 3 கார் டீலர்ஷிப்கள்! இதுவே அமெரிக்க வாழ்க்கை முறை. கார் என்பது அவ்வளவு முக்கியம் வாய்ந்தது. வட அமெரிக்காவை GM Country என்று சொல்வதுண்டு. கார் இல்லாமல் இங்குக் காலம் தள்ளுவது வெகு சில நகரங்களில் மட்டுமே சாத்தியம். கார்களின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் அனைத்திலும் வட அமெரிக்கப் பங்கு மிகவும் முக்கியமானது.

தகவல் விஞ்ஞானம் – கற்றுக் கொள்ள மற்றும் பயிற்சி வாய்ப்புகள் : பகுதி 3 

தரவின் கதைக்கும் டேடா விஞ்ஞானியின் கதைக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது. உதாரணத்திற்கு, தரவின் கதைப்படி, ஒரு 200 கோடி ரூபாய் முதலீடு செய்து சில வியாபார மாற்றங்கள் நிகழ்த்த வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இந்த 200 கோடி முதலீடு பயனளிக்குமா என்று நிச்சயம் சொல்ல முடியாது; அப்படியே பயனளித்தாலும், எதிர்பார்த்த லாபத்தையோ, செயல்திறனையோ அளிக்கும் என்பதும் சொல்வதற்கில்லை. டேடா விஞ்ஞானியின் கதையாக இருந்தால், அது, அவரது தோல்வியாக பாவிக்கப்படும்

கல்லூரிகளில் வேலை வாய்ப்பு எனும் மாயக் கோமாளித்தனம்

Internship எனும் யுக்தியை இதனினும் கேடுகெட்ட ஒரு ஏமாற்று வேலையாகவேக் கருதுகிறேன். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவர்கள் சேரும் பெரும்பாலான தொழிற்கூடங்களில் பயிற்சியளிப்பதற்கான கட்டமைப்பு இல்லாததனால் எந்த ஒரு தொழில் சார்ந்த அறிவுருத்தலும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே. மாறாக, அவர்களின் அன்றாட பணிகளில் ஏதேனும் ஒரு சிறு முக்கியமற்ற பகுதியை மாணவர்களிடம் கொடுத்துவிட்டு தத்தமது காரியங்களில் இயங்குவதே மாணவர்களின் மூலம் அறியப்படுகிறது. இதனினும் கொடுமை, இதிலும் பணம் பறிக்கப் படுகிறது. பல நிறுவனங்கள் ஆங்காங்கே (பல நகரங்களிலும், நகரின் பல பகுதிகளிலும்) குளிர்சாதன வசதியோடும், ஆடம்பரமான உட்புற வடிவமைப்போடும், சில-பல கணினிகளோடும், மிகவும் சாமார்த்தியமாக கவர்த்திழுக்கக்கூடிய பேச்சுத் திறம் வாய்ந்த முகவர்களோடும் பயிற்சி மையங்கள் என்னும் பெயரில் செயல்படுகின்றன. இவைகள் தொற்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்குமிடையே இடைத்தரகர்களாகவும், தனிப்பட்ட முறையிலும் வேலை வாய்ப்பை பெற்றுத்தருவிக்க செயல்படுகின்றன.

கருவிகளின் இணையம் – சமுதாய நோக்கும், போக்குகளும்

பாதுகாப்பு குறித்து சமூகம் கொண்டிருக்கும் சற்றும் பொறுப்பற்ற நோக்கு இன்றைய கருவி இணைய முயற்சிகளை அதிகம் சர்ச்சைக்கு உள்ளாக்கியுள்ளது .. .. .. இன்றைய புதிய திறன்பேசி (smartphone) மாடல்கள் நுகர்வோர் பயன்பாட்டை மட்டுமே அதிகம் மையமாக்குகின்றன. .. .. .. இதன் தொடர்சியாக, இன்றைய கருவி இணைய முயற்சிகளும், பாதுகாப்பு விஷயங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டன. .. .. .. IPv6 தொழில்நுட்பம் பல கோடி கோடிக் கருவிகளை இணையத்துடன் இணைக்கும் திறன் படைத்தது என்று தொழில்நுட்பப் பகுதியில் பார்த்தோம். அப்படி இணைத்த இணையத்தின் கதி பற்றி ஏதாவது எங்காவது சொல்லப் பட்டதா? மூச்!

கருவிகளின் இணையம் – வாய்ப்புகள் – பகுதி 21

வணிகத் திறனாளர்கள் மற்றும் செயற்கைத் திறனாளர்கள் (business and artificial intelligence specialists) – கருவிகள், மனிதர்களைப் போல இயங்குவதில்லை. இத்துறைகளில் உள்ள நெடுங்காலக் கனவு, சீராக உருவாக்கப்பட்ட தரவுகள். மனிதர்கள், குறைகள் நிறைந்த தரவுகளை உற்பத்தி செய்பவர்கள். அத்தோடு, மனிதர்கள் அரசியல் கைதிகள் – தரவுகள் சொல்வதையும் மீறிச் செயல்படுபவர்கள். இத்தனைக் காலம், மனிதர்களை ஒட்டியே உருவாகிய இத்துறைகள், எந்திரங்கள் உருவாக்கும் தரவுகளை ஆராய்ந்து முடிவுகளை முன்வைக்க வேண்டும். அரசல் புரசலான முன்வைப்புகள் ஒத்து வராது.

கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள்: பகுதி- 20

தரவு நஷ்டப் பாதுகாப்பு (data loss prevention) – எந்த ஒரு கருவி இணைய அமைப்பும், புதிய உணர்விகள் சேர்த்த வண்ணம் இருக்கும் என்று நம்பலாம். புதிய உணர்விகளைச் சேர்த்தவுடன், பழைய கருவிகள் அனுப்பும் தரவுகள் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கருவி அனுப்பும் தரவும், இன்ன கருவி அனுப்பியது என்று சரியாகச் சொல்லும் வழி இருப்பது அவசியம்
தரவுத் திரள்வுப் பாதுகாப்பு (data aggregation security) – கருவி இணைய உலகில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு விஷயம் இது.

கருவிகளின் இணையம் – பாதுகாப்புப் பிரச்னைகள் – பகுதி 19

ஆரம்ப மடிக் கணினி நாட்களில், இவை அலுவலக மற்றும் இணையத்துடன் தொடர்பில்லாமல் இருந்தன. இவை இணையத்துடன் தொடர்பு கொள்ளத் தொடங்கியவுடன், மடிக்கணினியோ, மேஜைக் கணினியோ, எதுவாக இருந்தாலும், இணைய விஷமிகளால், கடத்தப்படும்/தாக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. வெறும் கடவுச் சொல் சமாச்சாரங்கள் உதவாமல் போகவே, எல்லா தொடர்புகளையும் மறைகுறியாக்க முறைகள் மூலம்பாதுகாக்க வேண்டி வந்தது. அடுத்தபடியாக, செல்பேசி, திறன்பேசி போன்ற கருவிகள், இந்தப் பிரச்னையை மேலும் கடினமாக்கின. எளிதில் திருடக் கூடிய விஷயம் இக்கருவிகள். விஷமிகள் கையில் சிக்கினால், பல, மிகவும் அந்தரங்க விஷயங்கள் விஷமியின் கையில் எளிதில் சிக்க, வாய்ப்புகள் உள்ளன.

மெய்நிகர்சனம் (VR)

அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் இத்தொழில்நுட்பத்தின் அற்புத கால கட்டங்கள். அதீத சக்தி கொண்ட கணிணிகள், கைக்கடக்கமாக ஆனால் சக்திவாய்ந்த கைபேசிகள், ஏகமாகசெறிவூட்டப்பட்ட க்ராபிக்ஸ், முப்பரிமாணத் தொழில்நுட்பம், கேமராக்கள் என்று எல்லாம் ஒரே சமயத்தில் கைகூடி வர, சகாய விலையில் இப்போது சிட்டுக்குருவி லேகியம் விற்பதுபோல் ஆளாளுக்கு VR கண்ணாடிகளைச் சந்தையில் இறக்கத் தொடங்கிவிட்டார்கள். நிஜமாகவே அட்டையைப் பயன்படுத்தி சல்லிசாக கூகுள் கார்ட்போர்ட் கிடைக்கிறது. ஸாம்ஸங்கின்VR கண்ணாடி ஆறாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிறது. … ஆக்குலஸ் (Oculus Rift) என்றமெய்நிகர்சனக் கண்ணாடிக் கருவியை உருவாக்கி சமீபத்தில் சந்தையில் விட்டிருக்கிறார் மார்க். இன்றைய தேதிக்கு சந்தையில் இருப்பதில் அதி நவீனமானது ஆக்குலஸ் ரிஃப்ட்.

மெய்நீட்சி (AR): இல்லை, ஆனால் இருக்கு

நீங்கள் வாசிக்கும் செய்தித்தாளில், இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய சொற்பொழிவு பற்றிய கட்டுரை வந்திருக்கிறது என்றால், அந்தக் கட்டுரைக்கு ஒரு QR குறியீடு இருக்கும். அதன் திசையில் உங்கள் நுண்ணறிப்பேசியை காட்டினால் பிரதமரின் சொற்பொழிவு பற்றிய விவாதங்களையோ, அல்லது சொற்பொழிவின் காணொளிக் காட்சியையோ பார்க்கலாம். … மெய்நீட்சி பொதுமக்களிடம் பிரபலம் அடைந்தது தொலைக்காட்சியில் தான். உதாரணமாக கிரிக்கெட் ஒளிபரப்பில் ஹாக்-ஐ (hawkeye) என்றொரு தொழில்நுட்பம் உண்டு. பேட்ஸ்மேனின் காலில் பட்ட பந்து ஸ்டம்ப்பை அடித்திருக்குமா என்று கணிக்க உதவும் தொழில்நுட்பம். பந்து காலில் படும் காட்சியை வைத்துக்கொண்டு, பந்தின் போக்கு (trajectory) எப்படி இருந்திருக்கக்கூடும் என்று வரைபடம் இட்டுக்காட்டும். அந்த வரைபடத்தின் மூலம் பேட்ஸ்மேன் ‘அவுட்’ அல்லது ‘அவுட் இல்லை’ என்று அம்பயர் தீர்ப்பளிப்பார்.

‘அது’கள்

செல்பேசித் திரையில் அரும்பிய தகவலைப் பார்த்துச் சிரித்தாள் ஆஷா. ஓர் இனம் புரியாத சந்தோஷம். ’அது’ அனுப்பிய மின்னஞ்சல். “லட்சுமி, ஸ்டார்ட் ஆயிடு.” என்று ரஜினி காரிடம் பேசிப் பார்த்திருக்கிறோம். கார் நம்மிடம் திருப்பிப் பேசும் காலம் வந்து விட்டது. மிகச் சமீபத்தில் வாங்கிய அவளுடைய கார். அவ்வப்போது தன் நிலவரம் குறித்து மின்னஞ்சலோ, குறுஞ்செய்தியோ அனுப்புகிறது. டயரில் காற்று குறைந்தால் ஆஷாவுக்கும், தலை போகிற பிரச்சனையாயிருந்தால் நேரடியாக சர்வீஸ் டீலருக்கும் தகவல் அனுப்பி விடுகிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் என்றால் இயந்திர மனிதன் என்றே…

மெய்நீட்சி: மேலும் மேலும் மேம்பட்ட மெய்ப்பொருள்

வேலைக்குப் புதிதாகச் சேர்ந்தவர் வண்டிக்கு அருகே ரிப்பேர் செய்ய நிற்கிறானர், அந்த வேலையைச் செம்மையாகச் செய்யத் தெரிந்த வல்லுநர் சிகாகோவிலோ சின்னாளப்பட்டியிலோ தன் கணினி முன் இருக்கிறார். புது சிப்பந்தி கண்ணாடி மாட்டிக்கொள்கிறான். அந்தப் பிம்பம் வல்லுநருக்குத் தெரிகிறது, வல்லுநர் கழட்டவேண்டிய நட்டைத் தன் விரலால் தொட்டுக் காட்டுகிறார். வல்லுநர் விரலைப் புது ஆசாமி கண்ணாடி காட்டுகிறது. புது ஆசாமி அட்ஜஸ்ட்மெண்ட்டைச் செய்கிறான். வல்லுநர் வழிகாட்டுகிறார். இரண்டு நிமிட வேலை இரண்டு நிமிடத்திலேயே முடிகிறது. இப்படி ஒரு கற்பனைக் காட்சியைச் சமீபத்தில் ஒரு மாநாட்டில் பார்த்தபோது, “எப்படி இருந்த நாம” என்பதெல்லாம் நினைவலைகளில் புரள, உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.

நாணயத்துண்டு – பிட்காயின் ஒரு எளிய அறிமுகம்

நீங்கள் ஒரு ஐம்பதாயிரம் கொடுத்து ஒரு நிலத்தை கிரையம் செய்கிறார்கள். அந்தப்பணத்தை வங்கியில் கட்டுகிறீர்கள். வங்கிகள் என்ன செய்கிறது. பணத்தைக்ககொடுத்தவர் வீட்டு பின்புறத்தில் இந்தப்பணத்தை அச்சிடவில்லை என்று உறுதி அளிக்கிறது. விற்றவர் உங்களிடமும் வேறு ஒருவரிடமும் ஒரே இடத்தை இரண்டு பேரிடம் விற்கவில்லை என்று பத்திரப்பதிவு அலுவலகம் உறுதி அளிக்கிறது. ஒரு பரிவர்த்தனையில் இவை இரண்டும் நிகழ்கின்றன. அமேசானில், ப்ளிப்கார்ட்டில் எல்லாம். பரிவர்த்தனை நிகழ்ந்ததற்கான ஆதாரம். பரிவர்த்தனையின் உண்மைத்தன்மை இரண்டையும் பாதுகாக்கின்றன. இதில் நிறைய ஓட்டைகளும் இருக்கின்றன. ஒரே ஒரு முக்கியமான ஓட்டை என்பது…

'சிப்' தொழில்நுட்பம்: பாதையும் செல்திசையும்

மிக நேர்த்தியான ஒரு இந்திரஜாலத்தை சமைக்கும் அளவுக்கு இன்றைய தொழில்நுட்பம் முதிர்ந்திருக்கிறது. ஆனால் அந்த ஒவ்வொரு சாதனத்திற்குள்ளும், அதற்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் மிகச் சிக்கலான ஒரு பிரம்மாண்டமான மின்னணு உலகம் உள்ளது என்பதையும் நீங்கள் அறிந்திருக்கக் கூடும். அந்த உலகத்தின் மென்பொருள் (software) கண்ணுக்குப் புலப்படாதது. வன்பொருளின் (hardware) வெளித்தோற்றம் கண்ணுக்குப் புலப்படக் கூடியது. எந்த மின்னணு சாதனத்தைத் திறந்து பார்த்தாலும், அதன் பிரதான உள்ளுறுப்புகளாக, விதவிதமான மரவட்டைகள் போல அமைதியாக வீற்றிருக்கும் ‘சிப்’களை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்த ‘சிப்’களின் கருஞ்சாம்பல் நிற மூடிக்குள் உள்ள அதிசிக்கலான மின்னணுச் சுற்றுகள் (Electronic circuits) தான் அந்த சாதனத்தின் முக்கியமான வன்பொருள் கட்டமைப்பாக இருக்கின்றன. இன்றைய கணினி யுகத்தின், இணைய யுகத்தின் வளர்ச்சி என்பது சிப் தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சியுடன் இணைந்தே பயணித்துள்ள ஒன்று.

மெய்நிகராக்கம்: ஒரு கணினி வாங்கினால் 100 வாங்கின மாதிரி

ரிச்சி ஸ்ட்ரீட்டிடன் சகல இடுக்குகளிலும் நுழைந்து, கிடைத்த அனைத்து பிட் நோட்டீஸ்களையும் அலசி, ஆராய்ந்து ஒருவழியாக தன்னுடைய லேப்டாப்பை தேர்வு செய்திருந்தார். இன்டெல் பென்டியம் 1.5 பிராசசர், 8 ஜிபி ராம், 1 TB ஹார்ட் டிஸ்க், 2 MP HD வெப்காம், ஹெச்டி கிராபிக்ஸ் கார்ட் என ஏகப்பட்ட அம்சங்களை காட்டி 52 ஆயிரம் ரூபாய்க்கு பில் கிழித்திருந்தார்கள். ‘பேஸ்புக், ஜிமெயில், யுடியூப் பார்க்குற நமக்கெல்லாம் எதுக்குங்க இது?’ என்னும் கேள்விக்கு சரியான பதிலை நண்பரால் சொல்ல முடியவில்லை. நம்முடைய தேவை என்ன என்பதில் யாருக்கும் தெளிவு இருப்பதில்லை. வாங்கி குவிக்கும் வரை யோசிப்பதில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. 300 ஜிபி கொள்ளளவு கொண்ட வன்தட்டில் 30 இயங்குதளத்தை நிறுவி, அதை 3000க்கும் அதிகமானோர் எவ்வித இடையூறும் இன்றி, பயன்பாட்டுக்கு கொண்டுவருவது இன்று சர்வ சாதாரணமாகியிருக்கிறது.

உங்களைப் போல் கணினியை யோசிக்க வைப்பது எப்படி?

நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை.

ஒரு கணிதையின் கதை

இந்த மாதிரி தானியங்கி பேச்சு இயந்திரம் எழுதுவது என்பது ப்ளாகருக்கோ, வோர்ட்ப்ரெஸ் தளத்திற்கோ சென்று வலைப்பதிவு கணக்குத் துவங்குவது போல் ரொம்பவே எளிதானது. வலைப்பதிவை எழுத ஆரம்பிப்பது எப்போதுமே சுளுவான வேலைதான். ஆனால், அதைத் தொடந்து நிர்வகிப்பது, நல்ல தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைப்புகளில் செறிவான கருத்துகளைக் கோர்வையாகக் கொடுப்பது, கொடுக்கும் கருத்துகளால் ஃபாத்வாக்கள் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை கஷ்டமான வேலை.

ஏன் மேகக் கணினியம் & எப்படி மேகத்திரளில் பிணையலாம்?

மேகக்கணிமையின் பயனர்களை நுகர்வோர்கள், வணிகப்பயனர்கள் என்று பிரிக்கலாம் என முன்பே சொல்லியிருந்தேன். இப்பகுதியில் இவ்விருவகைப் பயனர்கள் மேகக்கணிமையை நோக்கி எவ்வாறு நகர்வது என்று கொஞ்சம் பார்க்கலாம். ’நகர்வது’ என்றால்? …மேகக்கணிமையைப் பாவிப்பதென்பது, தெரிந்த ஒரு விஷயத்திலிருந்து தெரியாத ஒன்றுக்குப் போவதுபோலத்தான். அதனாலேயே, இந்த மாற்றம் குறிப்பிடத்தகுந்த ஒரு செயல்பாடாகிறது. இம்மாற்றத்தையே நகர்வு என்று குறிப்பிடுகிறேன்.

கல்வி மற்றும் ஆராய்ச்சி உலகம்: கருவிகளின் இணையம்

கல்வித் துறையில் கருவிகளின் ஆட்சி ஏராளமாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், அது சரியான யூகம் இல்லை. தொழில்நுட்பப் புரட்சிக்கு அடிப்படைக் காரணமான கல்வித்துறையில் அதிகம் தொழில்நுட்பத் தாக்கம் இல்லாதது ஒரு வினோதமான விஷயம். இன்றும் உலகெங்கும் கல்வி வழங்கும் முறை 100 ஆண்டுகளுக்கு முன் இருந்தது போலவே தான் உள்ளது. மேற்குலகு பள்ளிகளில், மற்றும், பலகலைக் கழகங்களில், இன்றுள்ள மிகப் பெரிய போதனை மாறுதல்கள்…

மேகக் கணிமை (Cloud Computing) – 4

உள்கட்டமைப்புச் சேவையில் உங்களது கணிமை வளங்கள்மேல் உங்களுக்கு முழுச் சுதந்தரம் உண்டு. உங்களுக்குத் தேவையான மென்பொருட்கள், செயலிகளை உங்கள் விருப்பத்திற்கேற்ப நிறுவிக்கொள்ளலாம். இச்சுதந்தரத்தின் விலை, பொறுப்பு. இச்செயலிகள் ஏதேனும் மக்கர் செய்தால் நீங்கள்தான் களத்தில் இறங்கவேண்டும். அதேபோல், மென்பொருட்களின் புதிய பதிப்பு வரும்போதோ அல்லது ஏதேனும் பாதுகாப்புப் பிரச்னைகள் வரும்போதோ அதை நீங்கள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும். நல்ல ஐடி ஆட்கள் உங்களிடம் இருப்பது மிகவும் அவசியம்.

மீட்டர் போட்ட ஆட்டோக் கணிமை

அமேசானின் தரவுமையத்தில் ஏதேனும் பெரிய பிரச்னை வந்து அவர்களின் அனைத்துத் துணுக்குகளும் படுத்துவிட்டால்? இது நடப்பதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு என்றாலும் ஒருசில முறை இது நடந்திருக்கிறதுதான். அப்போது உங்கள் நிறுவனத்தில் எத்தனை அசகாய சூரர்கள் இருந்தாலும் அவர்களால் ஆணிகள் ஏதும் பிடுங்க இயலாது. அமேசான் இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வரையில் நீங்கள் தலைசொறிந்து கிடக்கவேண்டியதுதான். அவ்வாறு நடக்கும்போது அவர்கள் எவ்வளவு நேரம் உங்கள் துணுக்கு செயல்படவில்லையோ…

இல்லங்களில் கருவிகள்

சின்னக் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், பெற்றோர்கள், இதைப் பெரும்பாலும் ஒரு அவசியமானத் தேவை என்று நினைக்கிறார்கள். மகப்பேறு விடுமுறை அதிகம் இல்லாமல் தவிக்கும் தாய்மார்கள், பிஞ்சுக் குழந்தைகளை வீட்டில் செவிலித் தாயிடம் (babysitter) விட்டுச் செல்லும் பொழுது, குழந்தையின் நலம் பற்றி அறிய விடியோ மிகவும் உதவுகிறது. இந்த விடியோ காமிராக்கள் ஒவ்வொரு நிமிட நிகழ்வுகளையும் பதிவு செய்வதால், வீட்டுத் திருட்டு முயற்சிகளைத் தடுக்க உதவுகிறது. ஆனால், சமீப காலமாக, சில இணைய விஷமிகள், (internet hackers) தலைகீழாக, இணையம் மூலம், வீட்டில் நடப்பதைக் கண்காணிப்பது, இந்த முறைகளின் பாதுகாப்பின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வளரும் இந்தக் கருவி இணைய முயற்சிகளில், பெரிதும் அடிபடுவது, பாதுகாப்பின்மையற்ற வீட்டுக் கருவிகள்.

இலவசம் இணையச் சமநிலைக்கு ஆபத்தா?

இணையம் என்பதை அத்தியாவசியத் தேவையாகக் கருதும் இந்த மேல்தட்டு மக்கள் கட்டணமின்றி வழங்கப்படும் திட்டங்களையும் எதிர்ப்பதால் அன்றாடம் வேலைசெய்து பிழைக்கும் மனிதர்களுக்கு இணையம் என்பது எட்டாத கனியாகிவிடும். இணையச் சமத்துவம் என்பது மறைமுகமாக இணையத்தளங்களைத் தடுப்பதுதானே தவிர வெளிப்படையாகப் பயன்பாட்டு அடிப்படையில் விலையேற்றுவதல்ல. வெளிப்படைத் தன்மையின்மைதான் இணையச் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற மையப்புள்ளியைவிட்டு வேறுபட்ட கட்டணங்கள்தான் சமத்துவத்தைப் பாதிப்பதாகக் காட்டுவது யாருக்கு லாபம் …

கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம் – 2

நிக்கோலஸ் கார் என்ற அமெரிக்க எழுத்தாளர் கணிமையின் பயன்பாட்டை மின்சக்தியின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டு எழுதிய புத்தகம் மிகவும் பிரபலம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மின் உற்பத்தியாளர்கள் தாம் உருவாக்கிய மின்சக்தியைத் தனித்தனியே பயனர்களுக்கு விற்றுக்கொண்டிருந்தனர். ஆனால் விரைவில் ஒரு பொதுவான மின்தொகுப்பு உருவாகி, மின்சக்தி ஒரு அடிப்படைப் பயன்பாடு ஆனது. மின் அளவிகளின் மூலம் நீங்கள் பயன்படுத்திய சக்தியை அளவிட்டு அதற்கு மட்டுமே நீங்கள் பணம் செலுத்தும் நிலை உருவானது. அதேபோல், கணிமையும் ஒரு தரநிலைப்படுத்தப்பட்ட அடிப்படைப் பயன்பாடாகி, உங்கள் பயன்பாட்டளவின்படி நீங்கள் கட்டணம் செலுத்தும் நிலை வரும் என்பதே காரின் நிலைப்பாடு. இன்று, மேகக்கணிமை அந்நிலையை நோக்கி வெகுவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது.

மகரந்தம்

பச்சை குத்துவது என்பதை சடங்காகவும், மருத்துவக் காரணங்களுக்காகவும், ஓரளவு குடும்ப/ குல அடையாளத்தைத் தொடரும் வகையாகவும் எல்லாம் இந்தியர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அன்பைத் தெரிவிக்கவும், வேடிக்கையாகவும், கலையார்வத்தால் உந்தப்பட்டும் சிலராவது இதைச் செய்து பார்ப்பதும் உண்டு. உலகெங்கும் பல இனக்குழுக்கள், குறிப்பாக பழங்குடி மக்கள் இதைப் பற்பல காரணங்களுக்காகப் பயன்படுத்தி வருகிறார்கள். குழு அடையாளமாக, குழுவுக்குள் சில பதவிகள், அல்லது திறமைகளுக்கான அடையாளங்களைச் சித்திரிக்க இவை பயன்பட்டிருக்கின்றன. இந்தக் கலையின் ஒரு தனித்தன்மை அது அருங்காட்சியங்களில் காட்சிப் பொருளாக வைக்கப்பட முடியாதது. ஆனால் அரும் காட்சியகங்கள் மனிதத் தோலில் வரையப்படும் இந்த ஓவியங்களை, வடிவுகளை வேறெப்படிக் காட்சியில் வைக்க முடியும்? அந்தக் கேள்விக்கான பதிலை …

பிக் டேட்டா: தகவல்களின் விஸ்வரூபம்

அமெரிக்க அதிபரிலிருந்து அடுத்த வீட்டுக்காரர் வரை எல்லோரைப் பற்றியும் உங்கள் கருத்துகளைக் காரசாரமாக ட்விட்டரில் புகுத்தி விடுகிறீர்கள் அல்லவா? அத்தகை ட்வீட்கள் ஒரு நிமிடத்துக்கு 90,000 வீதமாக வருகிறதாம். முழுக் கோட்டாவையும் நீங்கள் உபயோகிக்கவில்லை என்றாலும் ஒரு ட்வீட்டுக்கு 50 – 70 எழுத்துகள் என்ற வீதத்தில் எத்தனை பைட்கள் ஒவ்வொரு நிமிடமும் தோன்றிக் கொண்டிருக்கின்றன – இப்படியெல்லாம் ஜனித்த விஷயங்களைச் சேமித்து வைக்க பிரம்மாண்டமான தகடுகள் தேவைப் படும் என்பது மட்டும் பிரசினை அன்று. இந்தத் தரவுகளை அலசி ஆராய்ந்து அவற்றின் பொருள் காண வேண்டும். யாருக்கு வேண்டும் இந்த விஷயங்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த தகவல்களும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் சில செய்திகளைத் தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கின்றன.

தமிழர்  பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது

பெரும்பாலான கணினி செயலிகள் (programs) ஆங்கிலம் பேசும் சந்தையில் விற்பனைக்காக உருவாக்கப்பட்டதால் மற்ற மொழிகளின் (தமிழ் உட்பட) கலை நயங்களை உட்கொள்ளாமல் செயல்படுகின்றன. இதனால் நாம் இந்த செயலிகளை ஒரு மாற்றான்-தாய் மனப்பாங்குடன் பயன்படுத்துகிறோம். உதரணத்துக்கு Facebook (முகநூல்) தளத்தை ஆங்கிலத்திலும், தமிழிலும் வருமாறு பயன்படுத்துங்களேன். இவை ஒரு செயற்கையான ஒரு மொழிபெயர்ப்பின் இடைமுகத்தையும் எதிர்நோக்கையும் அளிக்கின்றன.

கொடுப்பதெல்லாம் சேமிக்கும் கொண்டல்மேகம்

க்ளவுட். எல்லாரும் இதைப் பற்றிப் பேசுகிறார்கள். புரிந்தோ புரியாமலோ இதைப் பற்றி ஓரிரு வார்த்தைகள் தெரிந்து வைத்திருத்தல் அவசியம் என்று எல்லாருக்கும் படுகிறது. “பேத்தி ஃபோட்டோவை வாட்சாப்புல அனுப்பிடுவான் பையன். அது ஜங்குன்னு க்ளவுட்ல ஏறி என்னோட ஸ்மார்ட்ஃபோனுக்கு வந்துடும்” என்று பெருமிதப்பட்டுக்கொள்ளும் தாத்தா, பாட்டிகளிலிருந்து தொடங்கி எல்லாருக்கும் இந்தக் க்ளவுட் தேவைப்படுகிறது. அதனாலேயே சில குழப்பமான புரிதல்களும், பல புரிபடாத குழப்பங்களும் மலிந்து கிடக்கின்றன. ஃபேஸ்புக்கும் க்ளவுடாம். ஜிமெயிலும் க்ளவுடாம். வாட்ஸாப் க்ளவுடா இல்லையா?

கருவிகளின் இணையம் – கட்டமைப்பு உலகில் கருவிகள்

நாம் உலகின் எந்த நகரத்தில் வாழ்ந்தாலும், காலை வெளிச்சம் வந்தவுடன் எரியும் மின்விளக்குகளைப் பார்த்திருப்போம். சில மின் விளக்குகள் 11 மணி வரை அணைக்கப் படுவதே இல்லை. இந்த மின்சார விரயம் வரிப் பண விரயம் என்றுதான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம், விளக்குகள் பகலொளியைப் பொறுத்து தானே மின்சாரத்தைத் துண்டிக்கும் தொழில்நுட்பம் பல்லாண்டுகளாக உள்ளது. இதை ஒவ்வொரு விளக்கிலும் சேர்க்கத் தேவையில்லை. நகர விளக்குகளைக் கட்டுப்படுத்தும் மின் கட்டுப்பாடு மையத்தில் சேர்த்தாலே போதும். அடுத்தக் கட்ட முயற்சியாக, சில மேற்குலக நகரங்கள் அசைவு உணர்விகளை சோதித்து வருகின்றன. மனித நடமாட்டம்/கார் ஓட்டம் இல்லாத வீதிகளுக்கு ஒளி தேவையில்லை. ஆனால், நடமாட்டம் இருந்தால், உடனே விளக்குகள் உயிர்பெறும். இதனால், இரவில் செலவாகும் மின்சாரத்தின் அளவையும் குறைக்கலாம். ஆனால், நகர் ஒன்றுக்குப் பல்லாயிரம் உணர்விகள் தேவையாவதால், இன்னும் உணர்விகளின் விலை குறையவேண்டும்.

கருவிகளின் இணையம் – பொதுப் போக்குவரத்துத் துறை

ஒரு ரயிலின் எஞ்சினோ அல்லது ஒரு லாரியோ, ஒவ்வொரு மைலுக்கும் பல வகை சூழ்நிலைகளைக் கடக்கிறது. இன்று, இத்தகைய சூழ்நிலைகளின் தரவு நம்மிடம் இல்லை. ஏதாவது ஒரு பாகம் வேலை செய்யாமல் நின்றாலே, என்னவாயிற்று என்று பார்க்கிறோம். இதனால், வருமுன் காக்காமல், பல நாட்கள் பழுது வேலையில் வாகனங்கள் பயனின்றிப் போகின்றன. டிஜிட்டல் உணர்விகள், ஒவ்வொரு மைலுக்கும் 10 மெகாபைட் வரை தரவுகளை (data) ஒரு மேகக் கணினி வழங்கிக்கு (cloud data server) கொடுத்த வண்ணம் இருக்கும், என்று கணிக்கப் பட்டுள்ளது உதாரணத்திற்கு, லாரியின் டயர்களில் டிஜிட்டல் வால்வுகள் சாலையின் தரத்திற்கேற்ப…