குரு

இறந்தவரின் அவோனா தனக்கு குடும்பத்தில் இருக்கும் பிரியமான குழந்தையின் உடலுக்குள் சென்று விடுகிறது. இப்படி அவோனா நுழைந்த குழந்தை நல்ல வேட்டைக்காரராகவும், அள்ள அள்ள குறையாமல் உணவை அளிப்பவராகவும் பின்னாட்களில் இருப்பார் என்றும் நம்பிக்கை உண்டு

வியாகூலத்திற்கான மரபணுவை (Anxiety Gene) அழிப்பது இனி சாத்தியமே!?

வியாகூலக் குறைபாடைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் தற்போதைய மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளின் செயல்திறன் மிகவும் குறைவு. மேலும் பாதிப்புக்கு ஆளானோரில் பாதிக்கும் மேற்பட்டோர், பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை வழிமுறைகளைப் பின்பற்றி, பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்ட பிறகும், போதிய நிவாரணம் கிடைக்கவில்லை என்று ஏராளமான ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

டைபாய்டு மேரி

அச்சமயத்தில் டைபாய்டு இறப்புக்கள் அதிகமாக இருந்ததால் தொற்று வியாதிகளை உடனே ஆராயும் சிறப்பு அதிகாரிகள் இந்த  ஆயிஸ்டர் பே நோய்த் தொற்று விஷயத்தை  கையிலெடுத்துக்கொண்டு ஆராய்ந்தார்கள். எனினும் என்ன காரணத்தினால் தொடர்ந்து 7 பேருக்கு தீவிர டைபாய்டு தொற்று உருவானது என்று கண்டறிய முடியவில்லை. பல பக்கம் தட்டச்சிடப்பட்ட அறிக்கைகள் இந்த மர்ம நோய்த் தொற்றை குறித்து வெளியிடப்பட்டன எனினும்  காரணமென்று எதையும் அவர்களால் குறிப்பிட்டுச்சொல்லமுடியவில்லை

‘நியூமீ’ – பொது ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு திட்டம்

மைஃபிட்னஸ்பால் செயலி மூலம் உங்கள் கலோரி அளவில், எத்தனை சதவிகிதம் கார்போ ஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு உணவுகள் இருக்க வேண்டும் என்று குறிக்கோள்களை நீங்கள் திட்டமிட்டு, நீங்கள் தினமும் உண்ணும் உணவை கண்காணித்தால், மைஃபிட்னஸ்பால் செயலியே (கட்டண பதிப்பு) எந்தந்த உணவில், எவ்வளவு கார்போ ஹைட்ரேட்ஸ், புரதம், கொழுப்பு , நார்ச்சத்து உணவுகள் இருக்கிறது என்பதைத் தெரிவித்துவிடும். வெள்ளை அரிசி, மாவுச் சத்துப் பொருட்களில் கார்போ ஹைட்ரேட்ஸ் அளவு அதிகம். இந்த உணவுகளை உண்ணக்கூடாது என்றில்லை, குறைவாக உண்பது நல்லது.

மூத்தோர்கள்

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் 2.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் மனிதர்கள் உருவானார்கள் என்று இன்றைய அறிவியல் கருதுகிறது. இன்றைய மனிதர்களுக்கு ஒப்புமை சொல்லும் வகையில் ஒத்த, உடல் எழும்பி நேராக நிற்கும் (Homo Erectus) விரைப்பானத் தன்மை கொண்ட வகையினர் அவர்கள். தொன்மையான மனிதர்களின் அழிந்து பட்ட உயிரினம் இந்த ‘ஹோமோ எரெக்டக்ஸ்.’ கிழக்கு ஆப்ரிக்காவிலிருந்து  உலகின் பல பாகங்களுக்குப் பயணம் செய்து அவர்கள் பல்வேறு வகையில் ஒத்த இனங்களாக, ஆசியாவில் நியண்டர்தால்களைப் போல் பரிணாம வளர்ச்சி பெற்றார்கள். இன்றைக்கு மூன்று இலட்சம் வருடங்களுக்கு முன் வரை ஹோமோ சேபியன்ஸ் அல்லது இன்றைய நவீன மனிதன் தோன்றியிருக்கவில்லை.

க்ளிக், க்ளிக், பயோ க்ளிக் (Click, Click, Bio Click)

இந்தத் தருணத்தில் நம் இந்திய அறிவியலாளர்கள், தங்க நுண் துகளை, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுண்ணி பூஞ்சையுடன்  இணைத்து சாதனை செய்துள்ளார்கள். இது அளவில் சிறிய ஆற்றலில் பெரிதான ஒன்று. நான்கு அறிவியல் அமைப்புகள் இதை அமைப்பதில் பங்கேற்றன போடோலேன்ட் பல்கலை, கோவா பல்கலை,, ஸ்ரீ புஷ்பா கல்லூரி, தஞ்சாவூர், விலங்கு நோய்கள் அமைப்பு, போபால் ஆகியவற்றைச் சேர்ந்த பயோடெக்னாஜிஸ்ட் உருவாக்கிய இதற்கு ஜெர்மனி, சர்வதேச காப்புரிமை தந்திருக்கிறது.

காய்ச்சல் மரம் (சிங்கோனா)

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

நான் யார் யாரென்று சொல்லவில்லை

ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’. ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.

மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை

பெரும்பாலான தொழில்நுட்பங்கள் கடந்த பத்து-15 வருடங்களுக்குள் உருவாக்கப்பட்டவை, மெருகேற்றப்பட்டவை. அவற்றினை உருவாக்குவதற்கு, அதற்கு முன்பு சுமார் 30 வருட காலம் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியில் வாழ்க்கையைத் தொலைக்க ☺ பணமும், மனமும் கொண்ட நல்லுள்ளங்கள் தேவைப்பட்டிருக்கின்றன. அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகள்தான் தொழில்நுட்பத்திற்கும், முன்னேற்றத்திற்குமான அஸ்திவாரம்; இப்பொழுது புரிந்திருக்கும், இந்தியாவில் ஏன் இது போல் ஒரு புரட்டிப்போடும், புதுமையான தொழில்நுட்பம் கூட உருவாகவில்லையென்று. இங்கு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதி கொடுங்கள் என்று கேட்பது, ஒட்டகப் பாலில் டீ போடுங்க – என்று நாம் கேட்பது போல் பார்க்கப்படும்.

வலி

ஹுவா டுவோவுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் நிறைய பரிச்சயம் இருந்தது, பௌத்தத் துறவிகளோடு பழகி அந்த மருத்துவ முறையை அவர் கற்றுக் கொண்டிருந்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அவருடைய மருத்துவ முறைகள் சமகாலச் சீன மருத்துவத்தை விட ஒரு நூறாண்டு முன்னே சென்றிருந்தவையாக இருந்தன என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். சீனாவில் அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்துகளைப் பயன்படுத்திய முதல் மருத்துவர் என்று இவர் கருதப்படுகிறார்.

ஸார்ஸ் கோவிட்- 2ன் தோற்றம் எவ்விடம்?

கோவிட் போன்ற ஒரு நுண்ணுயிர் கிருமி ஒட்டகங்களைத் தொடர்ந்து தொற்றும்போது தங்கள் மரபணுக்களில் அதற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்கிறது.

எருக்கு

திருமண தோஷம் உள்ளவர்கள் முதலில் வாழைக்குத் தாலி கட்டுவதை போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது.

முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)

கோவிட்-19-ன் ஆரம்பக் காலக் கட்டங்களில் சீன விஞ்ஞானிகள், அந்தக் கிருமியின் மரபணுத் தொடர்ச்சிகளை, மரபணுத் தரவுகளில் சேர்த்தார்கள். சுவிஸ் நாட்டில் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அத் தரவுகளைக் கொண்டு அந்தக் கிருமியின் முழு மரபணுவையும் செயற்கையாக அமைத்து அதை உற்பத்தி செய்தார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்ன வென்றால், “முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis)”

தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயங்கும் நாட்டுப்புற அமெரிக்கர்கள்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் தாக்கம் குறைந்துவிட்ட பின்பும், தடுப்பூசி விகிதம் குறைவாக இருந்த அந்த தனித்த பகுதிகளில், செழித்து வரும் கொரோனா வைரஸ் அடுத்த சில மாதங்களுக்கு தொடர்ந்து மக்களுக்கு நோயையும் மரணத்தையும் தந்து கொண்டிருக்கும்.

மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை

மயக்கம் தெளியும் சமயம் இரு தரப்பினரின் காதிலும் கேட்கும்படி உண்மையான அறுவை சிகிச்சையில் என்ன செய்யப்பட்டதோ அதை மருத்துவர்களும் உதவி செய்த செவிலியர்களும் கூறுவர். போலி அறுவை சிகிச்சையும் நிஜ அறுவை சிகிச்சையும் ஒரே அளவு குணத்தை உண்டு பண்ணியது என்ற ஆச்சரியமான முடிவு இந்த ஆய்வின் மூலமாகத் தெரியவந்தது.

குங்குமப்பூவே!

கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் சிறு  நகர்களில், மகப்பேறு  மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகள்  அருகிலிருக்கும் சின்னச் சின்ன மருந்தகங்களில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமச்சிமிழ்  போன்ற  சிறு   பெட்டிகளில்  700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம்  குங்குமப்பூ வாங்கி செல்லுவதை  சாதாரணமாகக்  காணலாம். உண்மையில்  இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் “குங்குமப்பூவே!”

சூரிய ஒளியால் தோலில் நச்சுத்தன்மை ஏற்படுத்தும் மருந்துகள்

சூரிய ஒளியின் புற ஊதாக் கதிர்கள், குறிப்பாக (320-400) நானோ மீட்டர் அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர்கள்-A (UVA) தோல் செல்களில் உள்ள மூலக்கூறுகளால் உறிஞ்சப்படும்போது நச்சு வினைகளைத் தோல் செல்களில் உண்டாக்குகின்றன.

கருவாய் உயிராய்

என்னைப் பயமுறுத்த வேண்டாம் என்று ஒரு சிற்றுந்தில் என் கணவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுவந்தார். நாங்கள் இறங்கும் நேரம் ஐந்து தாதிகள் வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். என் தலையைத் தடவி அணைத்த அவர்கள் யாரும் தமிழ் பேசுபவர்கள் அல்லர். அரசு மருத்துமனை பற்றிய என் பிம்பம் முற்றிலும் உடைந்தது.

தடுப்பூசியும் முதியோரும்

எந்த வியாதியானாலும், அதன் தடுப்பூசிக்கான ஆராய்ச்சியின் முதல் கட்டம் சுண்டெலிகளிடம்தான் நடத்தப்படுகிறது. இச்சுண்டெலிகளின் வயது 12 வாரங்களுக்கு உட்பட்டதுதான். இது மனிதர்களின் வயதில், 20 அல்லது அதற்கும் குறைவானதாகும். வயதான மனிதர்களுக்கு ஈடான 18 மாத சுண்டெலிகளிடம் நடத்தப்படும் ஆராய்ச்சிகள் மிகக் குறைவே. ரீசஸ் குரங்குகளிடம் நடத்தப்படும் ஒரு சில ஆராய்ச்சிகளும் 3 லிருந்து 6 வயதான குரங்குகளையே உபயோகப்படுத்துகின்றன. இது இளம்பிராய வயதினருக்கு ஈடாகும்.

நீண்ட நேர உண்ணாமை

எலிகள் கிடைக்கும் மொத்த உணவையுமே நான்கு மணி நேரத்துக்குக்குள் உண்டுவிடும். மீதி 20 மணி நேரத்திற்கு எதையுமே உண்ணாது என்பதுதான். இதைத்தான் இப்போது “நீண்ட நேர உண்ணாமை“ என்று கூறுகிறோம். இது பல வகைப்பட்டது. அதைப் பிறகு பார்க்கலாம். இதனால் கிடைக்கும் உடல்நலப் பயன்கள் உடற்பளுக் குறைவினாலோ, பிராணவாயு அணுக்களின் தாக்கக் குறைவினாலோ அல்ல. ஆதி கால மனிதர்கள் நம்மைப்போல் 3 வேளை உண்டு வாழ்ந்தவர்கள் அல்லர். உணவு கிடைக்கும் நேரத்தைவிட உண்ணாமலிருந்த நேரமே அதிகம். அதனால் உயிரணுக்களிலும் அதன் மூலம் மற்ற உறுப்புகளிலும் ஏற்பட்ட மாற்றங்களின் பரிணாமத் தொடர்ச்சியே தற்கால மனிதர்களிடையே நீண்டநேர உண்ணாமையின் பயன்களுக்குக் காரணம் எனலாம்.

கவசக் கோன்மை

உலகெங்கிலும் அரசுகளும், அறிவியலாளர்களும், நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்களும் பரிந்துரைக்க, மனிதர்கள் கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அணிந்து நடமாடுகிறார்கள். அது மட்டுமே போதுமானதன்று. கடந்த இரு வாரங்களாகக் கவசம் அணிவது மக்களின் விருப்பம் சார்ந்து இருந்ததிலிருந்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது மக்களின் நடத்தையில் மாறுதலைக் கொண்டு வந்துள்ளது என்பதை “கவசக் கோன்மை”

அளவு மீறினால் பாலும் விஷமோ?

பால் உடற்பருமனை குறைக்க உதவும் என்பது பொதுவான அபிப்பிராயமாக இருந்தாலும் 29 ஆய்வுகளின் கூட்டாய்வு இதை ஆதரிக்கவில்லை. மேலும் முழுகொழுப்பு பால், மற்றும் பாலடைக்கட்டியிலிருந்து கொழுப்பு குறைந்த பாலிற்கு மாறுவதின் மூலம் பருமன் குறைவதாக தெரியவில்லை. ஆனால், தயிருக்கு மாற்றிக்கொண்டால் பருமன் அதிகமாவது குறைகிறது. பாலிற்கு பதில் தயிரை சேர்த்து கொள்வதால் பருமனாவது குறைவதோடு குடல்வாழ் நுண்ணுயிர்களுக்கும் இது சாதகமாக இருப்பதால் இதர ஆதாயங்களுக்கும் வழிவகுக்கிறது.

கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி

அமெரிக்காவோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் மருத்துவ கட்டமைப்புகள் மோசமான நிலையில் இருப்பது மிகவும் வருத்தமான நிதர்சனம். இந்தியாவில் எந்த மூலையில் ஒருவர் பாதிப்புக்குள்ளானாலும் அதை உறுதி செய்யும் பரிசோதனையைப் பூனாவில் இருக்கும் ஓர் ஆய்வகத்தில்தான் செய்ய முடியும் என்கிறார்கள். மத்திய அரசும், மாநில அரசுகளும் நிலமையைச் சமாளிக்க முழுவீச்சில் தயாராகிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டிருக்கின்றனர்.

தற்கொலை பற்றிய ஆய்வு முடிவுகள்

உலகளவில் 40% கயிற்றையும் 20% பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். மிக அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தடை செய்ததினால் ஸ்ரீலங்காவில் தற்கொலை எண்ணிக்கை குறைந்துள்ளது. உயரத்திலிருந்து குதித்தும், சிலமருந்துகளை அளவுக்கு மீறி உட்கொண்டும் தற்கொலை செய்துகொள்ளும் நபர்களும் அதிகமாயுள்ளனர். உயரமான கட்டமைப்புகளைச் சுற்றிப் பெரியதடுப்புகளை அமைப்பதின் மூலம் இவ்வழி பயன்படுவதைக் குறைக்கலாம்.