பொங்கல் சென்னை டெஸ்களும் தமிழ் வர்ணனையும் வருடம் முழுவதற்குமான எதிர்பார்ப்பை உண்டாக்கும். ஆனந்த விகடனில் பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னால், வருகைதரும் மற்றும் இந்திய அணி வீரர்களின் போட்டோக்கள் வரும். வீட்டில் வாங்கக் காசு தரமாட்டார்கள். ஆனாலும் அதை அடைவதற்கு வேறு வழிகள் இருந்தன. கிரிக்கெட் ஆர்வமில்லாத, விகடன் தொடர்ந்து வாங்கும் யாரவது ஒரு அக்காவை நச்சரித்து அதைக் கைப்பற்றிவிடுவேன் (அக்கா, சிவசங்கரி,லக்ஷ்மி, சுஜாதா, போன்றவர்களின் தொடர்கதைகளைக் கிழித்தெடுத்துக்கொண்டு, ‘ஒழிந்துபோ’ என்று கொடுப்பாள் ). முழுத் தொடர் (ஐந்து டெஸ்ட் மேட்சுகள்) ஸ்கோர் கார்ட்டை நோட்டுப்புத்தகத்தில் எழுதிவைப்பேன். அந்தக் காலங்களில் எங்கள் ஊரில் நான்தான் ஸ்கோரர், புள்ளிவிபர நிபுணன், கிரிக்கெட் வரலாற்றாளன், எல்லாம் (விளையாடுவது?? ஓரளவிற்கு ஆஃப் ஸிபின் பௌலிங்கும், சந்தீப் பாட்டிலைப் போன்ற ஸ்கொயர் ட்ரைவும் வரும்). தமிழ்நாட்டுச் சிற்றூர்களின் எல்லா சிறுவர்களையும் போலவே பந்துவீச்சுக்கு வெங்கட்ராகவனும், மட்டையாளர்களில் விஸ்வநாத்தும் ஆதர்சம்.
Category: அனுபவக் கட்டுரை
காசி தமிழ் சங்கமம் பேரானந்த அனுபவம்
அழகான கங்கையில் சூரிய உதயத்தை பார்த்தபடி முன்னோர்களை நினைத்து குளித்து வழிபட்டோம். அங்கிருந்து காஞ்சி சங்கர மடத்தில் தேநீர், பிஸ்கட் அளித்தனர் அங்கு வெங்கட்ரமண கனபாடிகளைப் பார்த்து பேசி அறிமுகம் செய்து கொண்டோம். பாரதி நான்கு வருடங்கள் மூன்று மாதங்கள் வாழ்ந்த சிவமடம் கிருஷ்ண சிவன்- குப்பம்மாள் இல்லம் சென்றோம். அங்கு விரைவில் ஒரு நூலகமும் பாரதி சிலையும் அமைவதற்காக கட்டிட வேலைகள் நடந்து வருகின்றன. கே. வி. கிருஷ்ணன் அவர்களின் மகன், மகள் ஆகியோரை பார்த்துப் பேசினேன். கோவில் அருகில் உள்ள பாரதி சிலையை தற்போது நாட்டுக்கோட்டை நகரத்தார் பராமரித்து வருகிறார்கள்.
தினந்தோறும் சித்திரைத் திருவிழா: ஹரித்வார்
“எலே இந்த வழியாத்தான் போகணுமாம்” என்று யாரோ தமிழில் பேசியது காதில் விழுந்தது. நடுத்தர மற்றும் வயதான தாத்தா பாட்டிகள் ஒரு இருபது பேர் போல நம் மக்கள் வந்திருந்தார்கள். ரோப் கார் ஏறுமிடத்திற்கு வரிசையில் நின்று ஏறி விட்டோம். பழனியில் ரோப் காரில் சென்று வந்த அடுத்த நாள் அங்கு நடந்த விபத்துப் பற்றி செய்திகளில் பார்த்தது கண்முன்னே வந்து சென்றதால் கொஞ்சம் பயமாக இருந்தது எனக்கு. கீழே பார்த்தால் பசுமையான காடு. பறவைகளின் இன்னிசை கீதம் மலைகளில் எதிரொலிக்க, மலை முகடுகளைத் தழுவிச் சென்று கொண்டிருந்தது மழைமேகங்கள். கண்ணுக்கு குளிர்ச்சியாக அழகான அருவிகள் என்று இயற்கைக்காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. கோடைக்காலத்தில் எப்படி இருக்குமோ தெரியாது. மழையில் குளிர்த்த மரங்களும் மனிதர்களும் நகரமும் புத்துணர்ச்சியாய் காண்பவர்களையும் தொற்றுக் கொள்கிறது!
டாக்டரும், முனைவரும்
திருமணம் முடிந்து கல்லூரி வேலையை ராஜினாமா செய்துவிட்டு வெளிநாடு செல்ல தயாராகிக் கொண்டிருந்த சில நாட்களில் அந்த கிராமத்து புகுந்த வீட்டில் புதுப்பெண்ணான என்னை கும்பல் கும்பலாக வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாளில் என் மாமியார் அவர் வயதில் இருந்த இரு பெண்களுடன் வந்தார். அவர்கள் என்னருகில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள் அவர்களில் ஒருவரைக்காட்டி என் மாமியார் என்னிடம் ’’இவளுக்கு ரெண்டு நாளா காய்ச்சலடிக்குது’’ என்றார்.நான் ஆதுரமாக அவர் கையை பற்றிக்கொண்டு ’’அப்படியா நல்ல ஓய்வில் இருந்து உடம்பை பார்த்துக்குங்க’’ என்றதும் என் மாமியாருக்கு வந்ததே கோபம், ’’ஆமா, இதை சொல்லத்தான் நீ இருக்கியா? ஒரு ஊசி போடு சரியா போகும்’’ என்றர். எனக்கு தூக்கிவாரி போட்டது.’’’ஊசியா என்னத்தை சொல்லறீங்க?”’ என்றேன்.
கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி?
நானும் அப்படித்தான் 2018 -ல், நினைத்தேன். இன்னும் சில ஆண்டுகளில், நம்முடைய வண்ணப்படங்களை உலகெங்கும் தரவிறக்கம் செய்து, இந்தத் தொழிலில் நாம் பெரிதாக கவனம் செலுத்தலாமே! குறைந்தபட்சம், விலையுயர்ந்த லென்சுகள் மற்றும் காமிரா உபகரணங்களை வாங்கலாமே! இப்படி கனவுகளோடு ஆரம்பித்ததுதான் என் வண்ணப்பட வியாபாரப் பயணம். நடுவில் தெரியாமல் இருந்த பல விஷயங்கள் பற்றியதே இக்கட்டுரைத் தொடர்.
பாப்பாத்தி என்னும் பரமேஸ்வரி
வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.
துவாரகையில் இருந்து மீரா
நான் இதே துவாரகையில் கிரிதாரியுடன் கலந்தேன். எத்தனை உயிரோட்டத்துடன் அவன் கோயில் அமைந்திருக்கிறது! கடல் மட்டத்திலிருந்து நாற்பதடி உயரத்தில் கோமதி ஆற்றங்கரையில் மேற்குத் திசை நோக்கி எழுந்துள்ள இந்தக் கோயில் முதலில் கண்ணனின் பேரனால், கண்ணன் வசித்த ‘ஹரி நிவாசை’ கோயிலாக்கிக் கட்டப்பட்டது. ராப்டி தேவியின் (முதல் கட்டுரையில் வந்த பெண்) கணவரைப் போரில் வென்ற முகம்மது பெகேடா தான் இந்தக் கோயிலையும் இடித்து அழித்தார்.
கண்ணுக்குள் நூறு நிலவா… இது ஒரு கனவா…
வெள்ளெழுத்து என்பதற்கு சாளேஸ்வரம் என்பது போல் இவற்றிற்கு நமது மூத்தோர் பரிபாஷையில் என்னென்ன பெயர்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். மருத்துவர்களை பார்ப்பதற்காக காத்திருந்தபோது எதிரே அகலத் திரையில் கண் மருத்துவம் பற்றி, கண்களில் எத்தனை விதமான நோய்கள் வருகிறது, அவை ஒவ்வொன்றையும் கையாளும் சிறப்பு மருத்துவர் யார் யார் என விவரித்து ஒரு காணொளி ஓடிக்கொண்டிருந்தது. பொதுவாக இன்று மருத்துவத்தில் உடலின் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கென தனியாக படித்த சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் கண்ணில் பலவகையான நோய்களும், அதற்கென தனித்தனியாக சிறப்பு மருத்துவர்களும் இருப்பதை இந்த மருத்துவமனை செய்திகளிலிருந்து தெரிந்து கொண்டேன்.
சிவன் ஆடிய களம்
எண்பதுகளின் முற்பகுதியில் இந்திய கிராமங்களுக்குள் டிவி நுழையாத காலம். நகரத்தில் வசதியான சில வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை டிவி இருந்தன. வேகமாய் பெருகிய ஜனத்தொகையும் வேலையில்லா திண்டாட்டமும் சமூகத்தின் பிரதான பிரச்னையானதால், கிரிக்கெட் பற்றிய புரிதலோ விவாதங்களோ மக்களிடம் அப்போது இருக்கவில்லை
வெயில்
அந்தி வெயில் பிடிக்காமல் போனதற்கு பல காரணங்கள் இருந்தாலும் மிகவும் வெறுக்கும் ஒரு காரணம், அம்மச்சி இறந்த அன்று, அம்மச்சியை குளிப்பாட்டி, கையில் கடைசியாக வெற்றிலை பாக்கு கொடுத்து, எடுத்துக்கொண்டு சென்றபோது, மாலை வெயில் லேசாக கண்கூசும் படி அடித்ததே. மாலையில் பொழுது சாயும் போது அடிக்கும் அந்த கடைசி கண் கூசும் வெயிலை பார்த்தாலே அம்மச்சி பாடையுடன் சென்றது தெளிவாக படமாக ஓடும். அந்த வெயில் ஒரு தவிப்பையே இன்று வரை தருகிறது.
வாழ்ந்த இரங்கல்கள்
உனக்கெல்லாம் நல்ல சாவே வராது என்கிற சாபம் மிக பிரபலம். இறப்பை விடக் கொடியது அது நிகழும் விதம். உறவினர் பேருந்து விபத்தில் இறந்த பொழுது அவருடன் இறந்தவர்கள் எட்டு பேர். உரு தெரியாத அளவிற்கு கோரமான விபத்து அது. தகவல் தெரிவிக்கப்பட்ட போது அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்தோம். வாழ்வில் அரசு மருத்துவமனைக்கு செல்லாத அந்த உறவினர் சவக்கிடங்கில் எந்த நிலையில் இருக்கிறாரோ என்று நினைக்கும் போதே மனம் நொந்தது. உடலை அடையாளம் காட்ட ஒருவரை அழைத்தார்கள். சாக அழைத்தது போல் அனைவரும் பின்வாங்கினர்.
ஆபரேஷன் அணில்
” என்ன தேடுகிறீர்கள்” என்று அவர் கேட்க, இவர் “அணில் ஒன்று மேலே வர உதவ முயல்கிறோம்” என்றார். அவர் சொன்ன அந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு சிறு உயிரை இவ்வளவு மதிக்கிறாரா மனுசன் என்று நினைத்தேன்.
“பரவாயில்லை, வாளி கொண்டு முயன்றிருக்கிறீர்கள், அணிலுக்கு வாளிக்குள் ஏற தெரியதல்லவா” என்று அந்த அமெரிக்கர் கயிற்றின் நீளம், வாளியின் உயரம், தண்ணீர் கிடந்த ஆழம் இவற்றை தனக்குள்ளே பேசியவாறே அனுமானம் செய்துகொண்டு அதி பயங்கர மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கும் தீவிரத்துடன் எங்கள் இருவரையும் பார்த்தார்.
தடக் குறிப்புகள் -2
“நீ ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்பா, மகனே. மர லாரிகள் இந்தச் சாலையில் போகிறதே அவங்கல்லாம் உன் மேலே வண்டியை ஏத்திக் கொல்றதுக்குத் தயங்க மாட்டாங்க. நெடுஞ்சாலை 98 இல், ரெண்டு வருஷம் முன்னே ஒரு சைக்கிள்காரர் இப்படித்தான் செத்தார், அப்ப என்ன நடந்ததுன்னு எனக்குச் சரியாத் தெரியாது, ஆனால்-”
நான் அவரைத் தடுத்தேன், என்ன நடந்ததுன்னு எனக்குச் சொல்லாதீங்க, என்றேன்.
“ஆனா, அது நெஜம்மா நடந்தது.”
இந்த சாலைகள் வழியே நான் சைகிள் ஓட்டிக் கொண்டு போகிற போது, அப்போது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்து கொள்வதில் எனக்குச் சிறிதும் ஈடுபாடு இல்லை என்று சொன்னேன்.
தீண்டா நதி
மனிதர்களில் தான் எத்தனை வகை! அதிலும் ஒரு சமோசாவை மனித மனம் எப்படியெல்லாம் வித்தியாசமாக சாப்பிட நினைக்கிறது! என் அருகில் இருந்தவர் சமோசாவின் தோல்பகுதிகளை தனியே எடுத்துவிட்டு மசாலாவை மட்டும் சாப்பிடும் ரகத்தைச் சேர்ந்தவர். அதன் பொருட்டு தோலுக்கும் மசாலாவுக்குமான பிரிவினைவாத முயற்சியில் அவர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, வழிப்போக்கர் ஒருவர் “ஜெயிந்திபுரம் எப்படி போறது” என்று அவரிடம் கேட்டபடி வந்தார். கிரைம் பிராஞ்ச் பக்கம் கைகாட்டி, “இப்படியே நேரா போங்க ஒரு சாக்கடை வரும் அதை ஒட்டின தண்டவாளத்தை தாண்டி லெப்ட்ல போனா வந்துரும்” என்றார். அவர் எதை சாக்கடை என்று சொன்னார் என்று அறிந்த நான் கொதித்தெழ வேண்டும்தான்.
ரசிக’மணி’கள்
கான கலாதரர் மதுரை மணி ஐயர். கர்நாடக சங்கீதத்தில் ஈடுபாடு இல்லாதவர்களுக்குக் கூட இந்தப் பெயர் தெரிந்திருக்கும். கர்நாடக சங்கீதத் துறையில் பல விசேஷமான பட்டங்களுண்டு. அந்தப் பட்டங்கள் பெரும்பாலும் ஒன்றுக்கும் மேலான கலைஞர்களை கௌரவிக்கப் பயன்பட்டிருக்கும். ஆனால் ‘கான கலாதரர்’ என்கிற பட்டம் மணி ஐயருக்கு மட்டுமே “ரசிக’மணி’கள்”
தேர்தல் திருவிழா
தேர்தல் பணிக்கு வந்த நான் உள்ளிட்ட பல பெண்கள் அலைபேசியில் வீட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தோம். ’’அரைமணிநேரம் மோட்டாரை போடு, அப்பாவுக்கு பரிமாறிடு, வாசற்கதவை நல்லா பூட்டிக்கோ, சாமி விளக்கேற்று,’’ என்றெல்லாம்.
ஒரு இளம் தாய் தன் கணவரிடம்’’ ஏங்க, பாப்பா உந்தி உந்தி கட்டிலிலிருந்து நகர்ந்து ஃபேனுக்குள்ள கையை விட்டுருவா,கொஞ்சம் பாத்துக்கங்க ’’என்ற பின்னர் தாழ்ந்த குரலில்’ “ இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதீங்க. பாப்பா பாவம்,’’ என்றார்.
வாழ்க்கை, காக்கை, ஹிட்ச்காக்
நகுல சகதேவர்களுக்கும், ஆக்டேவியா பட்லருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
இவரும் ஓரளவு நாடுகடத்தப்பட்டு, அகதி போல வாழ்வில் பெரும்பகுதியைக் கழித்த ஆஃப்ரிக்க இனப் பெண்மணி என்பது ஒரு ஒற்றுமைக் குணமாக இருக்குமோ?
ஆனால் தான் பட்ட துன்பங்களின் சாரத்தை யோசிக்கும் ஆக்டேவியா பட்லருக்கு, மனிதரில் ஒரு சாராருக்குப் பிறரின் துன்பத்தைச் சிறிதும் உணர்ந்து பார்க்கும் திறன் இல்லை என்பது நன்கு புரிந்திருக்க வேண்டும். அதற்கு எதிராக சிலருக்கு சுற்றிலும் இருப்பவர்களின் எல்லா மனத் துயரங்களும் (சந்தோஷங்களும்தான்) உடனே புரிவதோடு அவற்றைத் தம்முடைய உணர்வுகளே போலப் புரிந்து கொள்ளும், உணரும் திறன் கிட்டினால் என்ன ஆகும் என்பதுதான் அவர் கற்பனை.
கோவிட்-19 கால மனநலமும் இனநலமும்
தீநுண்மித் தொற்று காலத்தைப் பொருத்தவரை, அதுவரை என்ன மன நலனில் மூத்தோர் இருந்தார்களோ, அதைக் காப்பாற்றிக்கொள்ளவே அரும்பாடுபட வேண்டியதாக இருக்கிறது.