கலாஸ்ஸோவின் டியெபோலோ பிங்க்: ஒளியின் நாடகம்

This entry is part 3 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

“கலையெனத் தோற்றமளிக்காத மெய்யான கலை என்றதைக் கூறலாம். அதன் மறைமைக்கு மேல் எதையுமே ஒருவன் கற்றறியத் தேவையில்லை.” “மறைமை” நமக்கு பரிச்சயமான ஒரு கலாஸ்ஸோ வார்த்தை… டியெபோலோவின் படைப்புகளில் ஒரு வகைமையான ஸ்கெர்ச்சி-ஐ (The Scherzi, ஸ்கெர்ஸோவின் பன்மை, ஜோக் அல்லது சேட்டை என்ற அர்த்தம் கொண்டது) அறிமுகம் செய்து வைக்கும் ஒரு விசிடிங் கார்டை போலக் கையாளப்படுகிறது. ஸ்கெர்ச்சியும் கப்ரிச்சியும் (மனம் போன போக்கில் என்று பொருட்படும் …

அம்ருதா ஷேர்-கில்: கவனம் பெறாத ஓவியர்

சமீப காலம் வரை நியு யார்க் டைம்ஸில் பெண் சாதனையாளர்களைக் குறித்து அஞ்சலிகள் அதிகம் வெளியாகவில்லை. அதை நிவர்த்திக்கும் பொருட்டு, அப்பொழுது தவறவிட்டவர்களை இப்பொழுது நினைவு கோருகிறார்கள். அந்த வரிசையில் அம்ருதா ஷேர்-கில் இடம்பெற்றிருக்கிறார். அவரின் ஓவியங்களை இங்கு பார்க்கலாம்.

ஓவியம் வரைய – மைக்ரோசாஃப்ட் எக்செல்

73 வயதில் டட்சுவோ ஒரியுச்சி ஓவியம் வரைந்து தன் ஓய்வுக் காலத்தைக் கழிக்க நினைத்தார். கடைக்குச் சென்று தூரிகைகள் வாங்குவதற்கு பதில் மைக்ரோசாப்ட் எக்ஸெல் நிரலியைத் திறந்தார். வண்ணங்கள் தீட்டி தன் படைப்பை, அட்டவணைச்செயலி கொண்டு உருவாக்குவதை இங்கே காணலாம்:

ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி

கட்ஸுஷிகா ஹொகுசாய் (Katsushika Hokusai – 葛飾 北斎) 1760 முதல் 1849 வரை வாழ்ந்த ஜப்பானிய ஓவியர். அவரின் இறுதி முப்பதாண்டுகளில் வரைந்த சித்திரங்களின் கண்காட்சியை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் கவனப்படுத்துகிறது. அவரின் அந்திமக்காலத்தில் கீழ்க்கண்டவாறு சொல்லியிருக்கிறார்: ”சொர்க்கம் மட்டும் இன்னுமொரு பத்தாண்டுகளுக்கு என்னை வாழ வைத்தால்…” என்று “ஓவியர் ஹொகுஸாய் கண்காட்சி”

தடம் சொல்லும் கதைகள் – 14

பழைய கலைப் பொருளில் வேலை செய்யும்போது அதன் ஒரிஜினல் தன்மை கெடாமல் சீரமைப்பது மிக அவசியம்,” என்கிறார் புனரமைப்பு மற்றும் அரும்பொருள் காட்சியகம் துறையில் பேராசிரியராக இருக்கும் டாக்டர் பட்நாகர். “எங்கள் மாணவர்களுக்கு முதலில் நான் சொல்வது, பழுதுகளை மட்டும் முதலில் சரி செய்ய வேண்டும் என்பதுதான். ஒரு அழகிய சிலையில் அல்லது ஓவியத்தில் இருக்கும் ஓட்டைகள், கறைகள் இவை அந்தப் பொருளின் அழகை கெடுக்கின்றன. இப்படிச் சரி செய்யும்போது ஒரிஜினல் அழகு கெடாமல் இருக்கிறதா என்று பார்ப்பது மிக முக்கியம். நாங்கள் போடும் ஒட்டுகள் வெளியே தெரியாமலும் இருக்க வேண்டும்.

மேற்கத்திய பெண் ஓவியர்கள்

வார்த்தைகளால் சொல்லி விட முடியுமென்றால், வரைவதற்கான அவசியமே இருக்காதே! – எட்வர்டு ஹாப்பர் [1882-1967] இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் பெண் கலைஞர்கள் என்று தனித்து அறிமுகம் செய்ய வேண்டுமா? தற்கால விஷயங்களை மகளிர் எவ்வாறு கையாளுகிறார்கள்? மில்லியன்கள் புரளும் ஓவியச் சந்தையில் ஆண் ஓவியர்களோடு ஒப்பிட்டால், பெண் ஓவியர்களின் “மேற்கத்திய பெண் ஓவியர்கள்”

சித்திரத்தைப் பின்தொடர்தல்: பஹாடி கலைப் பாரம்பரியத்தின் கதை

முழு இந்தியாவிலுமே அஜந்தாவிற்கு முன் இந்திய ஓவியங்களைப் பற்றி வெறும் இலக்கியக் குறிப்புகளே உள்ளன, சான்றுகளோ எச்சங்களோ இல்லை. அஜந்தாவிற்குப் பிறகு சுவற்றோவியங்கள் இந்தியா முழுவதும் பரவினாலும் சட்டென மறைந்து புதிய வடிவங்களில் பல்வேறு பிராந்தியங்களில் உருமாறித் தலைகாட்ட ஆரம்பித்தன. அதில் ஒரு தொடர்ச்சியைத் தேடினால் முதலில் கிடைப்பது நான்காம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை வங்காளத்தில் வழங்கி வந்த பாலர் பாணி பௌத்த ஓலைச் சுவடிகள். அஜந்தாவின் அழகியலைச் சுருக்கி சுவடிக்குள் பொருத்தும் அளவுக்கு வடிவங்கள் எளிமைப் படுத்தப் பட்டு விட்டன. அதன் பிறகு மேற்கு மாவட்டங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தான் அதிக அளவில் ஏட்டோவியங்கள் தலை காட்டுகின்றன. எட்டாம் நூற்றாண்டு தொட்டே குஜராத்துடன் வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர் அறிமுகப்படுத்திய காகிதம் அப்பிராந்தியத்தின் ஓவிய மலர்ச்சிக்குக் காரணியாயிற்று.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் -இறுதிப் பகுதி

Futurist உத்தியில் ஒரு உருவத்தின் தொடரசைவு என்பது கித்தானில் அதன் வேகம் வெளிப்படும் விதத்தில் ஓவியமாயிற்று. Vorticism அதிலிருந்து மேலும் பயணப்பட்டு அறிமுகமற்ற இருண்மை மிகுந்த ஒரு சூழலில் பார்வையாளனைக் கொண்டு சென்று செருகியது. Futurist இயக்கம் இயந்திரப் பயன் பாட்டால் நிகழவிருக்கும் வருங்கால நன்மைகளென்று கணித்தவற்றில் மனித சக்தியின் மெத்தனம் என்பது நீக்கப்பட்டு மனித இனம் புதிய எல்லைகளை தொடும் என்பது முக்கியமானது.

பொங்கல் வாழ்த்தும், ஓவியர் கே.மாதவனும்

ஓவியர் கே.மாதவன் தமிழ்நாட்டின் மிக முக்கியமான சினிமா, நாடக பின்னதி, பேனர், பத்திரிகை, காலண்டர் ஆர்ட்டிஸ்ட். கே.மாதவன் பொங்கல் வாழ்த்து அட்டைகளின் வண்ண அழகும் தூரிகை வீச்சும், அனாயசமான அவரின் வேகமும், அலாதியான பாணியும், எவரையும் ஈர்க்கும். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் அவருடைய படைப்புகள் மிகுதியாக வெளிவந்து ரசனைத் தன்மையையும் ஊட்டின.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 25

‘ப்லூம்ஸ்பரி’ இயக்கம் பெரும்பாலும் ஒரு குடும்பத்தையே சுற்றியிருந்தது. உறுப்பினர் பலரும் அக்குடும்பத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்தனர். அவரவர் தேர்ந்தெடுத்தத் துறையில் பின்னர் அவர்கள் பெரும் புகழ் பெற்றாலும் தொடக்கத்தில் அங்கு நிலவிய உறவு என்பது சமுதாய ஒழுக்கங்களுக்கு ஒவ்வாததான, எப்போதும் கண்டனங்களுக்கு உட்பட்டதாகவே இருந்தது. ஓரினச் சேர்க்கையும், கட்டுப்பாடில்லாத படுக்கைப் பகிர்வும் அவர்களிடையே இயல்பானதாக இருந்தது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 24

என்றாலும் காலப்போக்கில் இந்த இயக்கத்தில் கலைஞனின் படைப்புத் திறனுக்கு முக்கியத்துவம் கூடிவிட்டது. அதனால் பொருள்களின் விலை கூடி, பொது மக்களுக்காக என்னும் நோக்கம் அடிபட்டுப் போயிற்று. செல்வந்தர் மட்டுமே அவற்றை வாங்க முடிந்தது. கலைஞர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து போயிற்று. அதன்பின்னர் இந்த இயக்கம் ‘ஏஸ்தடிக் ஸ்டைல்’ (Aesthetic style) என்னும் புதிய பெயருடன் தொடர்ந்தது. அவ்வமயம் பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் பிரபலமாக இருந்த ‘ ஆர்ட் நோவோ’ (Art nouveau) என்னும் இயக்கத்துடன் அது பெரிதும் ஒத்துப் போயிற்று.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 23

ஓவியர்கள் தங்கள் ஓவியங்களில் உருவங்களைத் தத்ரூபமாக -இயற்கைக்கு வெகு அண்மையான நுணுக்கங்களுடன்- படைத்தனர். ஓவியங்களில் அனைத்துப் பொருட்களும் (உருவங்கள் / வடிவங்கள்) ஒரே விதமான அக்கறையுடனும், தெளிவுடனும் தீட்டப்பட்டன. முன்னர் ஓவியத்தின் கீழ்பகுதியில் பெரும்பாலும் உருவங்கள் நிழலில் தெரியும் தெளிவில்லாதவிதமாகவே படைக்கப்பட்டன. அதை மாற்றி அவற்றையும் தெளிவாகத் தெரியும் விதமாக ஒளிரும் வண்ணங்கள் கொண்டு அமைத்தனர்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 22

முதலாம் உலகப் போருக்குப்பின்பு ஜெர்மன் நாட்டில் ‘ஓடொ டிக்ஸ்’, ‘ஜார்ஜ் க்ரோட்ஸ்’ (Otto Dix, George Grosz) என்ற இரு ஓவியர்களால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதை எக்ஸ்ப்ரெஷன் (Experssion) பாணியின் போலி (Pseudo- Expressionist) என்று அடையாளப் படுத்தினர் அன்றையக் கலை திறனாய்வாளர். கடுமையான சமூக விமர்சனம், குறை கூறி வெறுக்கும் அணுகு முறை, தத்துவார்த்த நிலைப்பாடு, இவற்றுடன் தத்ரூபப் பாணி கலந்த ஒரு புதிய உத்தியாக அவர்கள் படைப்புகள் அமைந்தன. இந்த இயக்கத்தில் இரண்டு முக்கிய வழி அணுகல்கள் கவனம் பெற்றன.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 21

சமகாலக் கட்டிடக்கலை ஜெர்மனியில் 20ஆம் நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் ஒரு புதிய பொலிவைப் பெறத் தொடங்கியது. வைமா(ர்) (Weimar) நகரில் 1919இல் நிறுவப்பட்ட பாவ்ஹவ்ஸ் (Bauhaus) பள்ளியின் தாக்கம் வலுவானதாக இருந்தது. லூட்விக் மீஸ் வான் டெர் ரோஹ் (Ludwig Mies Van der Rohe) என்னும் கட்டிடக் கலைஞரின் வழிகாட்டுதலுடன் பள்ளியின் பாணி உலகின் மூலைகளுக்கும் பரவியது.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – கட்டுரைத் தொடர்

1909 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டில் மூனிச் (Munich) நகரில் ‘புதிய கலைஞர் குழுமம்’ (New Artist Assiociation) என்னும் பெயரில் ஒரு ஓவியர் குழு தோன்றியது. ‘வாஸ்லி கண்டின்ஸ்கி’ (Wassily Kandinsky) என்னும் ஓவியர் அதற்குத் தலைவராய் இருந்தார். ஓவியர் ‘பால் க்லீ’ (Paul Klee) யும் அதில் ஒரு உறுப்பினர். அந்தக் குழுவின் இலட்சியம் வெறும் உணர்வு சார்ந்த கருப் பொருளை மையமாகக் கொண்ட ஓவியங்களைவிடவும் மற்ற தளங்களில் இயங்கும் விதமாகப் படைப்பதுதான்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 19

1906 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தினர் ஓவியம் பற்றின தங்களின் நிலைப் பாட்டை ஒரு பிரகடனத்தின் மூலம் அறிவித்தனர். அதில் “கலப்படமற்ற படைப்புத் திறன் கூடிய, தெளிவும் நேர்மையும் கொண்ட எந்த ஒரு படைப்பாளியும் எங்கள் இயக்கத்தில் ஒருவர் என்றே கருதுகிறோம்.” என்று வலியுறுத்தினார்கள். வரையறுக்கப்படாத படைப்புத் திறன், ஆழ் மனதின் மர்மங்களை நேரிடையாக வெளிக் கொணரும் உத்தி, எந்தவொரு பாணியையும் பின்பற்றாத அணுகுமுறை ஆகியவை அவர்களது பொதுத்தன்மையாக இருந்தது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 18

வடக்கு ஐரோப்பியப் பகுதிகளில் ‘பாஃவ்’ (Fauves) களின் வண்ண அணுகு முறை வெற்றியடைந்து புதிய உணர்வுகளாகவும், ஆழ்மன உளைச்சல்களாகவும் விரிவடைந்தன. எக்ஸ்ப்ரஷனிசம் (Expressionism) என்று பொதுவாக அறியப் பட்ட அது ஒரே காலகட்டத்தில் பல ஐரோப்பிய நாடுகளில் வளரத் தொடங்கியது. அந்தப் படைப்புகளில் வண்ணங்கள் குறியீடுகளாகவும், (Symbolic Colours) இயற்கைக்கு ஒவ்வாத கற்பனை உருவத் தோற்றங்களும் (Imagery) மேலோங்கி இருந்தன.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 17

1930 களில் ஐரோப்பிய நாடுகளில் வேற்று நாட்டுக் குடிமகன் என்பவனை அச்சத்துடன் வெறுக்கும் மனோபாவம் தோன்றி வளர்ந்தது. பிரான்ஸ் நாட்டிலும் பாரிஸ் பாணி ஓவியர்களிடம் முன்னர் காட்டப்பட்ட அன்பும், சகிப்புத் தன்மையும் மறைந்து போயிற்று. தங்கள் நாட்டின் கலை மரபைக் குலைக்கும் விதமாக அந்த ஓவியர்கள் செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டனர். முன்னர் அவர்தம் படைப்புகளைப் போற்றி, உதவிகள் செய்தவர் இப்போது அவர்களிடமிருந்து விலகிச் சென்றனர்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 16

இக்கலைஞர்கள் உலகை ஒரு பயன்பாட்டுப் பொருளாகவே நோக்கினர். அதிலிருந்து தமக்குத் தேவையான பகுதியைத் தேர்ந்தெடுத்து அவற்றைத் தமது படைப்புகளில் பொருத்தி ஓவியங்கள் தீட்டினர். வாழ்க்கை, கலை இரண்டையும் அருகருகே கொணரும் முயற்சிதான் அது. தங்களுக்குள் இருக்கும் தாம் சார்ந்த சிந்தனைகளை மீறி ‘ஒன்றிணைந்த சிந்தனை’ என்னும் குறிக்கோளை முன் நிறுத்தி வேற்றுமைகளிடையே ஒற்றுமை என்பதாக இயங்கினர். கலை விமர்சகர் ‘பியெர் ரெஸ்டனி’ இதை, “விளம்பரம், தொழில், நகரவாழ்க்கை கியவற்றின் கவிதுவம் கூடிய மீள் சுழற்சி” கூறினார்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 15

எந்தக் கலையும் இரு பகுதிகளை உள்ளடக்கியது. ஒன்று, இணைத்தல் அல்லது கூட்டுதல்; மற்றது பிரித்தல் அல்லது கழித்தல். இதில் இணைந்த கலைஞர்கள் படைப்பை எளிமைப் படுத்துதல் என்னும் வகையில் இசை, ஓவியம், சிற்பம் போன்றவற்றில் புதிய உத்திகளைப் புகுத்தி நவீனப் படைப்பு களை அறிமுகப்படுத்தினர். கவிதையில் இடைவெளிகளைப் புகுத்தி வரிவடிவங் களை நீக்கி புதிய வடிவம் கொண்ட கவிதை படைப்பது என்று இப்பாணி வளர்ந்தது. அக்கவிதைகள் குழுவாகப் பாடப்பட்டன (Choral Groups). பின்னர், இப்படைப்புதளம் திரைப்படத் துறையிலும் நுழைந்தது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 14

பெண்ணியவாதிகள் ஸர்ரியலிஸ இயக்கத்தைப் பற்றி விமர்சிக்கையில் அடிப்படையில் அது ஒரு ஆணாதிக்க சிந்தனை இழை ஓடிய இயக்கம் என்னும் எதிர் கருத்தை முன் வைத்தனர். ஸர்ரியலிஸ குழு உறுப்பினர்களும் மற்ற எல்லா ஆண்களையும் போலவே பெண்ணைத் தேவையற்றுப் போற்றுவதும், பெண்களை உடல்ரீதியாக அணுகுவதும், பெண் எப்போதும் ஆணின் காம உணர்வுடன் கூடிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஜீவன் என்பதாகத்தான் இயங்கினர், என்று கடுமையாகச் சாடியபோதிலும் இயக்கத்தில் சில பெண்கவிஞர்களும் பெண் ஓவியர்களும் இருக்கத்தான் செய்தனர்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 13

க்யூபிசம் பாணியில் அறிவு ஜீவி பார்வை கூடிய, வண்ணங்கள் விலக்கப்பட்ட ஓவியங்கள்தான் படைக்கப்பட்டன. ஆனால் ஓர்ஃபிஸம் பாணியில் மிளிரும் வண்ணங்கள் கொண்ட விதத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. கவிதைக்கும் இசைக்கும் அதிபதியான ஆர்பியஸ் (Orpheus) என்னும் கிரேக்க புராண நாயகனிடம் ஈர்ப்புக் கொண்ட அவர்கள் தமது படைப்புகளில் அதன் அனுபவத்தைக் கொணர்ந்து, வரண்டு இருந்த க்யூபிசம் பாணியில் உயிரூட்ட முனைந்தனர்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 12

ரொமோன்டிஸம் (Romanticisim) என்னும்சிந்தனையிலிருந்து விரிவடைந்தது தான் ஸிம்போலிஸம் (Symbolism) சிந்தனையும் செயற்பாடும். அது இலக்கியத்தில் தொடங்கி ஓவியம், சிற்பம் போன்ற காட்சிவழிக் கலைகளிலும் பரவியது. ஆனால், இரண்டும் பயணித்த பாதை ஒன்றல்ல. படைப்பில் இயற்கையை பிரதி பலிப்பது (Naturalism), தத்ரூப அணுகல் (Realism) போன்றவற்றுக்கு எதிர் விளைவாகத் தோன்றிய ஒரு நிகழ்வு அது. ஸிம்போலிஸம் மனித வாழ்க்கையின் யதார்த்தத் தன்மையை ஒளிவு மறைவு இல்லாமல் தோற்றப்படுத்த முயன்றது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 11

1905 இல் குழுவில் இயற்கைவாதிகளுக்கும் (Naturalists) மாற்றம் வேண்டியோருக்கும் (Stylists) தொடர்ந்து இருந்துவந்த கருத்து இடைவெளி இட்டு நிரப்ப முடியாததாகிவிட்டது. ஓவியர்கள் குஸ்டோவ் க்ளிம்ட், போயெம் (Boehm), ஹாஃப்மான் (Hoffmann) போன்றோர் அவ்வியக்கத்திலிருந்து விலகி விட்டனர். ‘முழுவதுமான கலை இயக்கம்’ (Total work of Art) என்னும் கோட்பாடு பின்பற்றப்படவில்லை என்பதே அதன் காரணம்.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 10

18/19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மேலைநாடுகளின் வாழ்க்கை முறையில், அது சார்ந்த நம்பிக்கைகளில் ஒரு புதிய சிந்தனையை உட்புகுத்தியது ரொமான்டிஸிசம் (Romanticism) என்னும் கலை அணுகல். மதம் சார்ந்த சமூக ஒழுக்கம் முன் நிறுத்தியிருந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், அவற்றுக்கான அளவு கோல் மதிப்பீடுகள் ஆகியவற்றிற்கு எதிரான சிந்தனையை ரொமான்டிஸிசம் பரிந்துரைத்தது. தனிமனித உணர்வின் சிந்தனை வெளிப்பாடு என்பது உயர்வானதாகப் போற்றப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 9

கட்டிடங்களில் நுணுக்கமும் சிக்கலும் கூடிய வடிவங்களை படைக்க பரோக் பாணிதான் பொருந்தி வந்தது. ரொகோகோ பாணியின் நுழைவால் அத்துடன் கீழை நாட்டுப் பாணி, இசைவுப் பொருத்தமில்லாத வடிவக் கட்டு மானம் உள்ளிட்ட பல உத்திகளின் தாக்கம் மேலோங்கியது. ஜெர்மனி, போஹிமியோ, ஆஸ்திரியா போன்ற நாடுகளின் கத்தோலிக கிருஸ்துவர் வசித்த பகுதிகளில் இப்புதிய பாணி விரும்பி ஏற்கப்பட்டது. முன்பு இருந்த பரோக் பாணியுடன் கலந்து ஒரு புதிய கலைப்பாணி தோன்றியது.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 8

தனது சமகால பெண்ணியப் படைப்பாளிகளில் சிலரைப் போலவே இவரும் உடையற்ற தனது உடலையே படைப்புக்கருவாகவும், கித்தானாகவும் பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் சமுதாயத்தில் பெண்ணெனப்படுபவளின் முன்னரே முடிவு செய்யப்பட்ட அடையாளத்தை கேள்விக்குறியாக்கி முறியடிக்கிறார். சமூகத்தில் தடை செய்யப்பட்ட விஷயங்களைப் பற்றி தனது எதிர் கருத்துக்களை வெளியிட ஒருபோதும் இவர் அஞ்சியது இல்லை.

20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-7

மிக அண்மைக் காலமாகப் பெண்ணியவாதிகள் தனக்கும் தனதுடலுக்கும் உள்ள உறவை வெளிப்படுத்துவதான ஓவியம்-சிற்பங்களைப் படைக்கிறார்கள். அவற்றைப் பெண் என்பவள் இறைவனால் ஆணுக்காகப் படைக்கப்பட்ட அழகான கவர்ச்சி மிக்க போகப்பொருள் என்பன போன்ற கற்பனைகளைத் தகர்க்கவேண்டியே படைக்கிறார்கள். இனி பெண்ணின் பார்வையில் சித்தரிக்கப்படத் தேவையில்லை என்னும் கருத்தில் உறுதியாக உள்ளனர். ஒரு பெண்ணுக்கு ஏற்படும் உடல், மனம் சார்ந்த வலிகளைச் சொல்கிறார்கள். சமுதாயத்தின்மேல் தங்கள் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள். ஆண் என்பவன் அவர்களிடத்தில் காண மறுக்கும் சில விஷயங்களை படைப்பில் கொணர்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 6

எழுபதுகளில் இவ்வகைக் கலைஞர்கள் தங்களை அச்சமின்றி வெளிப் படுத்திக் கொண்டனர். “மகிழ்ச்சியே எல்லாம்” என உரத்துக் கூறிய ஆண் கலைஞர்கள் பெண் கலைஞர்களிடமிருந்து மிகவும் மாறுபட்டிருந்தனர். 1980களின் தொடக்கத்திலிருந்து இவர்களின் படைப்புவெளிப்பாடு அதிகரித்தது. ஆனால், அத்துடனேயே மற்றொன்றும் பரவலாகப் பேசப்பட்டது. அதுதான் AIDS என்னும் ஆட்கொல்லி நோய்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 5

Lianozovo என்பது மாஸ்கோ நகரத்தின் எல்லைப்புறத்தில் அமந்துள்ள ஒரு கிராமம். கலைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் அங்குதான் வசித்தனர். கிராமத்தின் பெயரை தமது குழுவுக்கானதாக அமைத்துக்கொண்டு அவர்கள் மிக வீரியமாகச் செயற்பட்டனர். குழுவில் பலர் அரூபப் பாணி ஓவியங்களைப் படைத்தனர். 1957 இல் அரசின் ‘Thaw’ கொள்கை ருஷ்யாவின் தொன்மையான கலை உத்திகளையும், மேலை நாட்டு புதிய கலைசார்ந்த சோதனைகளையும் பற்றி இளைய தலைமுறை அறிய உதவியது.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 4

சூப்பர்மாட்டிஸம் என்னும் புதிய பாணி தொடர்பற்ற ஒரு வழியல்ல. மாறும் உலக ரீதியான கலைத்தளங்களுக்கு ஏற்ப அது தோற்றம் கண்டது. குழுவிலிருந்து பலர் ஊர் மாறிச் சென்றனர். சிலர் வேறுபாணிக்கு மாறினர். எல் லிஸ்சிட்சி, இலியா சாஷ்னிக் போன்றவர் தமது வாழ்நாள் முழுவதும் இந்தப் பாணியை விட்டு விலகாமல் ஓவியங்களைத் தொடர்ந்து படைத்தனர்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-3

தொன்மையான கிராமியக் கலைகள், அரங்கம், இலக்கியம் – குறிப்பாக கவிதை – ஓவியம் என்று பல கலைத் தளங்களில் விரைவாகப் பரவிய நவீன சிந்தனைத் தாக்கம் புதிய பாதையில் பயணிக்க உகந்த களமாக அப்போது 20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால ருஷ்யா அமைந்தது. குறியீட்டு ஓவியர்களுக்குப் பின்னர் (Icon Painters) அங்கு அலுப்பூட்டும் அகடமிக் (Academic) வழிதான் பின்பற்றப்பட்டது. வரவிருக்கும் 1817-இன் புரட்சியை முன்னரே அறிந்தது போல கலையியக்கம் செயற்படத் தொடங்கியது.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 2

கலையும் கைவினையும் அங்கு ஒருங் கிணைந்து வளரத்தொடங்கின. அது, இங்கிலாந்தில் நிகழ்ந்த கலை கைவினை சார்ந்த எழுச்சி (Arts and Crafts Movement)உடன் ஒப்புநோக்குதற்குறியது. அங்கு பல தொழிற்கூடங்கள் நிற்மாணிக்கப்பட்டு, கைவினைக்கலைகள், பீங்கான் பண்டங்கள் உருவாக்கல், பட்டு நெசவு போன்றவற்றில் ருஷ்யாவின் தொன்மையான கருப்பொருள்களும், கற்பனையும் இடம் பெற்றன.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்

ரஷ்ய நாட்டின் ஏறக்குறைய அனைத்து கலை இயக்கங்களும் சங்கத்துடன் இணைக்கப்பட்டன. யுக்ரேன் (Ukraine), லாட்வியா (Latvia), அர்மேனியா (Armenia) பகுதி ஓவியர்களும் இயக்கத்தில் இணைந்தனர். சங்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஆட்சிக்குத் தலைவலி கொடுத்ததால், அதை ஒடுக்கவும் அடக்கவும் ஆட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

கலர்க் கனவுகள்

அனுமாருக்கு பார்டர் எல்லாம் போட்டு கெட்டி அட்டையில் ஒட்டி அதை பெருமாள் அறையில் மாட்டினேன். பாட்டி ஏதோ வேண்டிக்கொண்டு காலெண்டர் அனுமாருக்கு வடையை மாலைகோத்து சாத்தினாள். வடையை நாங்கள் சாப்பிட்டோம். அதில் இருந்த எண்ணையை அனுமார் சாப்பிட்டார். வடையில் இருந்த எண்ணெய் படத்தில் இறங்கியது. ஒரு சமயம் கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் கொடுத்த செந்தூரத்தை அந்த காலெண்டர் அனுமார் மீது தடவ புதிதாக அந்த அனுமாருக்கு ஒரு தேஜஸ் கிடைத்து, ஆஞ்சநேயர் ஆகிவிட்டார். பல வருடங்களாக இருந்த அந்தப் படம் வெள்ளை அடிக்கும் போது எங்கோ போய்விட்டது. ரொம்ப நாள் மலையைச் சுமந்தவருக்கும் ரெஸ்ட் வேண்டாமா?

தூரிகைக்கலை

ஓவியத்தையும் தூரிகைக்கலையையும் ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் என்று வருணிப்பர் சீனர். அவ்வந்த காலத்துக் கலைஞர் உருவாக்கிய முக்கிய பாணியிலிருந்தே படைப்பின் காலத்தைச் சொல்லிவிடக் கூடிய தூரிகைக் கலைஞர்கள் சீனாவிலும் சீனாவுக்கு வெளியிலும் இன்றும் உளர். சீனத்திலோ அரசர் முதல் ஆண்டி வரை பலரும் தூரிகை ஓவியங்களைக் காலங்காலமாக சேகரித்துப் பாதுகாத்திருக்கிறார்கள். சீனச் சமூகத்தில் வீடு, அறைகள், பெரிய கட்டங்கள், நீதிமன்றம், கைவிசிறிகள், சுவர்கள், நுழைவாயில்கள், அருங்காட்சியகம், அலுவலகம், நினைவுச் சின்னங்கள், கல்லறைகள், ஆலயங்கள் என்று எங்கெங்கு காணினும் தூரிகைக்கலையின் சுவடுகள் வாழ்த்து, முதுமொழிகள், அறிஞர் பொன்மொழிகள், கவிதை, பாடல், ஈரடிக்கவிதை, கடிதம் போன்ற பல்வேறு வடிவில் மிளிரும்.

நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள்

நவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் வரலாறு நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம்.ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும்.