மாடலென்களும் டீயும் அல்லது ப்ரூஸ்டின் “In Search of Lost Time”

சரி,செர்ச்சில் இன்னமும் குதிப்பதற்குத் தயங்கும் வாசகருக்கு வருவோம். அதன் மூவாயிரத்து சொச்சம் பக்கங்களே அவரை முதலில் மாய்ப்பில் ஆழ்துகிறது. ஒருக்கால் கால் நனைப்பதற்காக, அதன் ஹாதார்ன் மற்றும் லைலாக் பூக்கள் அடர்ந்த பாதைகளில் பயணித்தபடி செர்ச்சின் முதல் நாவலான The Way by Swann’s-ஐ மட்டும் படித்துவிட்டு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சப்புக்கட்டிவிட்டு ஓடிவிடலாம் என்று அவர் நினைக்கலாம். அவர் மட்டுமே அப்படி நினைக்கவில்லை, அதே கவலைதான் தயங்கும் கட்டுரையாளனுக்கும். கடந்த சில ஆண்டுகளாகப் பல சிறுபத்திரிகை நண்பர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளையும் மீறி அவன் இன்னமும், சுருக்கமுடியா ப்ரூஸ்டைச் சுருக்கமாக அறிமுகப்படுத்தும் கட்டுரை(களை) முயன்று பார்க்கலாமா வேண்டாமா என்று யோசித்தபடி மதில்மேல் அம்ர்ந்திருக்கிறான்.

நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு….

இதோ 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையைப் படித்தப்போதும், இப்போது எழுதிய கதையைப் படித்த போதும் எனக்கு என்ன தோன்றுகிறது.  முதலில் ஆச்சரியம்.  முதல் கதையைப் படித்தப்போது அவருடைய தனித்துவம் தெளிவாகத் தெரிகிறது.  கதையில் அவர் பயன் படுத்திய வார்த்தைப் பிரயோகம் அபாரமாக இருக்கிறது.  கதையில் அவர் கொண்டுவரும் மௌனம் குறைவாக இருக்கிறது.

மயிலன் சின்னப்பன்

This entry is part 59 of 72 in the series நூறு நூல்கள்

மருத்துவத்தில் குறிப்பிட்ட துறையின் வல்லுந‌ரான சார்வாகன் பல கதைகளை எழுதி இருந்தாலும், துறைசார் கதைகளை அவர் எழுதவில்லை.  பொதுவாகவே தமிழில் மருத்துவர்கள் இலக்கியம் எழுதுவது குறைவு,  தொழில் குறித்து எழுதுவது அரிது. மாறாக முதல் நாவல் மட்டுமன்றி,  மூன்று தொகுப்பும் சேர்த்து ஐந்து சிறுகதைகளும் முழுவதும் மருத்துவப் பின்னணியில் எழுதியிருக்கிறார் மயிலன் ஜி சின்னப்பன்.

உயரும் : சுரேஷ் பிரதீப்

This entry is part 60 of 72 in the series நூறு நூல்கள்

திருமணமாக வேண்டிய வயதில், படித்துக்கொண்டோ அல்லது வேலையிலோ இருக்கும் மணமாகாத இளம்பெண்கள்  தோழிகளின் திருமணத்திற்கும் அவர்களின் குழந்தைகளைக் காணவும் சென்றிருக்கையில்.போக வேண்டுமென்னும் ஆர்வமும், போகலாமா, வேண்டாமாவென்னும் போராட்டமும், அங்கிருக்கும் பெரியவர்கள் என்ன கேள்வி கேட்பார்களோ என்னும் பதட்டமுமாக இருப்பது இயல்பு

மொக்குகள் கட்டவிழும் அற்புத தருணங்கள்

This entry is part 62 of 72 in the series நூறு நூல்கள்

ஷெர்லாக் ஹோம்ஸின் தீவிர வாசிப்பின் பின்னணியில் சில குற்றப் புனைவுகளையும் சமைக்கத் தவறுவதில்லை காலத்துகள்.  ஆனால் அதற்கான களம், பின்புலம் என்றெல்லாம் மெனக்கெடாமல், ஒருவித அங்கத நடையில் எழுதி திருப்தியடைந்து கொள்கிறார்.  இடையே, இலக்கிய அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று ஏங்கும் எழுத்தாளனும் இடம்பெறத் தவறுவதில்லை. ஃபோர்ஹேவின் (Jorge Louis Borges)  பாதிப்பில், தன் குறுநாவலில் எழுதும் கனவின் பாதிப்பில், அதிலிருந்து வெளிப்பட்டு ஒரு சிறுகதையை எழுதிவிட்டுப் போகிறார்

சீர்மையின் நுதல் விழி – சித்ரனின் சிறுகதைகள் முன்வைத்து

This entry is part 63 of 72 in the series நூறு நூல்கள்

சித்ரனின் கதைகள் அறிமுக எழுத்தாளர்களுக்கான எந்த தடையையோ தடுமாற்றத்தையோ பெரிய அளவில் எதிர்கொள்ளவில்லை. அவரது தொடக்கக்கால கதைகளில் சில நெருடலான/ பொருத்தமற்ற உவமானங்கள் வெளிப்படுகிறது. உதாரணமாக “செதில்களால் நெய்யப்பட்ட சட்டையை உரிக்கும் அரவமாய் எனது வெறுமையை என்னிலிருந்து அகற்ற அண்ணா நகர் பூங்காவிற்கு கிளம்பினேன்.” “கூட்டத்தால் கைவிடப்பட்ட கழுதைப்புலி ஒரு வலிமையான இரையை தாக்க வழியில்லாது வெறித்திருப்பதைப் போல் அவளை கவனித்தவாறிருந்தேன்” (தூண்டில்). இரண்டு மூன்று கதைகளுக்கு பிறகு இவ்வகையான பயன்பாடும் மறைந்து நேர்த்தி

உலகில் ஒருவன் – தொப்புள்கொடி அறாத குழந்தை

This entry is part 69 of 72 in the series நூறு நூல்கள்

சிறுவனின் பார்வையில் இருந்து பெரியவர்களைப் பற்றி, பெரியவர்களின் வாழ்வைப்பற்றி பெரிதும் பேசும் இக்கதையை வாசிக்கும் நாம் பெரியவர்களின் பார்வையில் சிறுவனாகவும், சிறுவனின் பார்வையில் பெரியவர்களாகவும் தோற்றம்கொள்ளும் மாற்றமும் மாயமும் நாவல் முழுவதும் நிகழ்துகொண்டே இருப்பது , வாசிப்புக்கு மட்டுமல்ல வாழ்வுக்கும் புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.

இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்

This entry is part 2 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) ” இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.

”பிராமணர்களிடமிருந்து கற்றுக் கொள்ள இன்னும் நிறைய இருக்கில்ல”

This entry is part 3 of 10 in the series கி.ரா. - அ.ரா.

நாங்கள் செய்யும் தலித் நாடகங்கள் பற்றிக் கேட்கத் தொடங்கினார். இதெல்லாம் தமிழ்நாட்ல இப்பத்தானே பேசத் தொடங்கிறோம். இலங்கையிலெ எப்பையோ ஆரம்ப்பிச்சுப் பேசிட்டாங்க. மல்லிகையின்னு ஒரு பத்திரிகை; அதன் ஆசிரிய டொமினிக் ஜீவாதான் அதில் முன்னோடி. அப்புறம் கே.டேனியல். அவர்களோடு நட்புடன் இருந்து பேசிய தளையசிங்கம் என அரைமணி நேரம் தொடர்ந்தார். தலித் இலக்கியம், தலித் நாடகம் என்ற சொல்லாட்சி மட்டும் தான் நம்முடையது. தொடக்கமும் செயல்பாடுகளும் அங்கதான்

சுசித்ரா பட்டாச்சாரியா – சி.எஸ்.லக்ஷ்மி: உரையாடல்

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் எப்படி வெற்றி பெற்றுவருகிறார்கள், ஆண் ஆதிக்கத்தை எப்படிக் கடந்துவருகிறார்கள் என்பதைப் பற்றிய குறிப்பு அதில் வெளியாகி இருந்தது. கவிதை வாசிப்பதில் பிரதீப் கோஷும் ஜகந்நாத் கோஷும் மிகப் பிரபலமானவர்கள், ஆனால் பிரதிபுலி கங்கோபாத்யாய் அவர்களை முந்திவிட்டார் என்று அவர்கள் எழுதியிருக்கிறார்கள். அதேபோல் இலக்கியத்தில் சுசித்ரா பட்டாச்சாரியாவின் புகழ், சுநீல் கங்கோபாத்யாயின் புகழுக்கு எந்த அளவும் குறைவானதில்லை. கல்கட்டா நோட்புக்கில் எழுதியிருக்கிறார்கள். அதைப் பார்த்து நான் மிகுந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.

நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி

This entry is part 8 of 13 in the series வங்கம்

‘வந்தே மாதரம்’ ஒரு சொல் – ஆம், ஒரே ஒரு சொல் – ஒரு தேசத்தின் விடுதலைப் போரில் முக்கிய இடம் பிடிக்க முடியுமா? ஒரு சொல் அந்நியர்களை விரட்டும் போர்க் கருவியாக இருக்க முடியுமா? ஒரு சொல் அது கேட்பவர்களின் மனத்தில் சுதந்திரத் தாகத்தையும் வீரத்தையும் உண்டாக்குமா “நாட்டிற்கு உழைத்த நமது நல்லவர்கள்: பங்கிம் சந்திர சாட்டர்ஜி”

வங்க இலக்கியங்கள்

This entry is part 9 of 13 in the series வங்கம்

வங்க மொழி நூல்களில் அவசியம் வாசிக்கப்படவேண்டியவை பற்றிய சுருக்கமான அறிமுகம் இங்கே தரப்பட்டுள்ளது. முக்கியமான எழுத்தாளர்களும் அவர்களின் படைப்புகளும் இங்கே கிடைக்கும். உஷா வை. தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898 – 1971) தாராசங்கர் பந்தோபாத்யாய் (1898-1971) எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். அவர் இந்திய சுதந்திர இயக்கத்திலும் அதற்குப் பிற்பட்ட “வங்க இலக்கியங்கள்”

என்றும் புதிய புதுமையான தாகூரின் நித்திய ஒளி!

தாகூர் விரிவாகச் சொல்கிறார்: “நம்முடைய ஆன்மாவின் வளர்ச்சி என்பது கச்சிதமான ஒரு கவிதையைப் போன்றது. அது எல்லையற்ற கருத்துருக்களைக் கொண்டிருக்கிறது; இது ஒருமுறை உணரப்படும்போது, அனைத்து இயக்கங்களையும் அர்த்தமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்குகிறது.”

ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம்

லார்கின் படைப்புகளில் இரு நிலையான சரடுகளைக் காண முடிகிறது, அவற்றுக்கு இடையிலான முரணியக்கம், அவரது கவிதைகளுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது: ஹார்டிய “இங்கேயே இப்போதே” என்ற இருப்பும், யேட்ஸ்சிய காலாதீதத்தன்மை என்ற இரண்டும் அவரது முதிர்ந்த கவிதைகளிலும்கூட தொடர்ந்து தென்படுகின்றன.

ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம்

ஹாசர்டின் உரைநடை, பழமொழிகளைப்போலச் சுருங்கச் சொல்வதாகவும், ரத்தினக் கற்களை வெட்டுவதுபோலக் கூர்மையான விளிம்புகளோடும் இருப்பது – அது இத்தகைய குறிப்புகளிலிருந்து உருப்பெற்றது. அக்குறிப்புகள் எங்கோ கேட்டவை, அல்லது கனவாகப் பெறப்பட்டவை, பிறகு எழுதி வைக்கப்பட்டவையாக இருந்தன.

கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்

சொல்வனம் இதழில் கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வரும் கமல தேவியின் மூன்றாவது தொகுப்பு வெளியாகி இருக்கிறது. சொல்வனம் சார்பாக எங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது பயணத்தில் சிறு பங்கினை ஆற்றிய சொல்வனம் பெருமை கொள்ளும் தருணம் இது! மந்திரப்பெட்டியின் உரிமையாளர் கமலதேவி நோய்மை அனுபவங்களை சித்தரிப்பதற்காகவே “அற்புத உலகில் “கமலதேவி: மூன்றாவது தாெகுப்புக் கதைகள்”

மானுடத்தைத் துப்பறிபவன்

ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது. பெரு நாவல்களை இடைநிறுத்தாது வாசிக்கும்போது சில மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறேன். நம் அத்தனை அன்றாடச் செயல்களுக்கும் பின்னணி இசையாக, நாவல் அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கும். புலன்கள் விழித்துக்கொண்டு துல்லியமாகும். நிகழ்வுகளை, அனுபவங்களை நாவலுடன் பொருத்திப் பார்க்க மனம் துடிக்கும். இப்போது “மானுடத்தைத் துப்பறிபவன்”

டாக்டர் முக்தேவி பாரதி – ஓர் அறிமுகம்

இலக்கிய உலகில் தற்போது காணப்படும் பெண்ணீயம், தலித் படைப்புகள், இடதுசாரி இலக்கியம், வலதுசாரி இலக்கியம் போன்ற அனைத்து வாதங்கள், இயங்கள், பிரிவுகள் பற்றி அறிந்திருந்தாலும் அவை எதிலும் சேராமல் மனிதாபிமானத்தோடு கூடிய படைப்புகளே தன்னுடையவை என்ற அவர் கூற்று, அவருடைய சிறு கதைகள், நாவல்கள், கவிதை, கட்டுரை நூல்கள், பத்திகள், விமரிசனக் கட்டுரைகள் போன்ற அனைத்திலும் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. எத்தகைய படைப்பாயினும் தனக்கான முத்திரையோடு வாசகர்களை சென்றடைவது அவருடைய தனித்திறமை.

என் நோக்கில் சுரா

‘தமிழ்இனி – 2000’ நிகழ்வில் நாவல்களைப் பற்றி நான் பேசியபோது ‘ஜே.ஜே.’ நாவலைப் பற்றிய என் பழைய கருத்தையே முன்வைத்தேன். என் பேச்சு முடிந்த பிறகு என்னைச் சந்தித்த சுரா, “நானும் இனிமேல் எல்லோரையும் கிழிகிழியென்று கிழிக்கப்போகிறேன்’’ என்றார். “உங்களை யாராவது தடுத்தார்களா என்ன?’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன். சுரா வழக்கமாக அப்படிப் பேசக்கூடிய நபர் அல்ல. விவாதித்தும் எழுதியும் தீர்த்துக்கொள்வாரே ஒழிய இப்படி வெடிப்பவர் அல்ல. நிகழ்ச்சி முடிந்த பிறகு கடைசிநாள் நான் என் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தபோது, அங்கே சுரா நின்றுகொண்டிருந்தார்.

சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை

இக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் …
இன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.

அம்பையின் சிறுகதைகள்

‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ தொகுப்பில் இந்த ஆணாதிக்க எதிர்ப்பு, ரசனையற்ற ஆண்களைச் சித்தரித்து உவகை கொள்ளும் போக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டு,பாம்பு தன் சட்டையை உரிப்பது போல் உரித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறார் அம்பை.பொதுவாக எந்த எழுத்தாளரும் செல்ல விரும்பாத பகுதி இது. ஒரே மாதிரி எழுதினால் தான் ‘இமேஜ்’ அடிபடாமல் இருக்கும், சுந்தர ராமசாமி,எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற வெகு சிலரே தங்களை அடிக்கடிச் சட்டையுரித்துக் கொள்பவர்கள். இந்தச் சட்டையுரிப்பில், தனது பழைய இமேஜைப் பற்றிக் கவலைப்படாமல்,அம்பையும் இறங்கியுள்ளது பாராட்டுதலுக்குரியது. ‘அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு’ கதைகள் எல்லாமே …

ஜோஆன் டிடியன்

ஜோஆன் டிடியன் (Joan Didion) என்னும் எழுத்தாளரை, திரைக்கதாசிரியரை, பத்தியாளரை உங்களுக்குத் தெரியுமா? கீழே ஒரு சுருக் அறிமுகம்:

கஞ்சனம்

நய்பாலின் தனிமை என் எண்ணங்களுக்கு ஏற்றதாக இருந்தது. எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பதும், நேர்த்தியோடு செயல்படுவதும், முடிவை நோக்கி பயணித்து எடுத்த காரியத்தை சாதிப்பதும் எனக்கு அவரிடம் சிறப்பு ஈடுபாட்டைக் கொணர்ந்தது. “இந்த கொடூர உலகத்தில் எவ்வாறு நம் குழந்தைகளை நாம் பெற்றுக் கொள்ள நினைக்கிறோம்?” என்பது போன்ற கேள்விகள், என்னை துணுக்குற வைத்தாலும், வேறு எவருக்கும் இப்படி வெளிப்படையாக கேட்பதில்லையே என்றும் யோசிக்க வைத்தது.

நய்பாலும் நோபலும்

அக்காலத்தில் நைபாலை வாசிப்பதன் மாயம் இதுதான். அவரது பார்வைகள் மற்றும் கருத்துகளுடனும் நான் எப்போதும் மாறுபட்டேன்: ஒப்புக்கொள்ள முடியாத அளவு வலிக்கிறது என்று சொல்லத்தக்க உண்மைகளின் அடிப்படையில் அமைந்தவை என்பதால் சில; கண்டனத்துக்குரியவை என்று சில; குறிப்பாய், இஸ்லாமிய உலகு குறித்த அவரது எழுத்தில். ஆனால், வேறு யாரும் பொருட்படுத்தத் தக்கது என்று கருதாத விஷயங்களை அவர் எழுதிக் கொண்டிருந்தார்; அனுபவத்தின் புதிய பரிமாணங்களை அகழ்ந்தெடுப்பதற்கான சொற்களை அவர் கண்டடைந்திருந்தார்.

மறக்கப்பட்ட ரஷ்ய கிளாசிக் நாவல்- அபுலோமாஃப் (Oblomov)

பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய நாவல்கள் ஏறத்தாழ எல்லாமே கள்ளக் காதலுடன் விளையாடி, அல்லது, அதற்கு பலியாகும் பெண்கள் நிறைந்தவை என்றால், ஓல்கா விரக்தியோடு விளையாடும் பெண். வாழ்க்கைதான் என்ன? அதன் நோக்கம் என்ன? அதை எவ்வாறு வாழ்வது? அவளிடம் அரசியல் பிரக்ஞை இல்லை- அவள் குண்டு வீசும் அரசின்மைவாதியாகப் போவதில்லை. அவளைச் செலுத்துவது அறிவோ கலையோ அல்ல – அவள் ஒரு George Sand அல்ல. சமூக இலட்சியங்கள் கொண்ட பெண்ணின் நேர் எதிர் அவள்.

பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?

ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.

யாதும் ஊரே, யாவரும் கதை மாந்தர்

“மகா பாரதத்தில் போர்க் காட்சிகளைக் காணவியலா திருதராட்டினனுக்கு சஞ்சயன் போல,” பல நாடுகளுக்கும் போக வாய்ப்பில்லாதவர்களுக்கு, தான் வசித்த நாடுகளில் தாம் கண்டதையும், அனுபவித்ததையும் சுவையான கதைகளாக காட்சிப் படுத்திக் கொண்டே போகிறார். ஒரு கதை சொல்லியாய் இருப்பது மற்ற படைப்புத் தொழில்களை விட சிரமம் வாய்ந்தது. ஒவ்வொரு கதையும் மற்றவர் தொடாத ஒரு விசயமாகவும், புதிய மொழியாகவும் இருக்கவேண்டும். இச்சிரமத்தை வென்று 140-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல கட்டுரைகள், சில நாவல்கள், மற்றும் உலக எழுத்தாளர்களிடம் சுவையான நேர்காணல்கள் என்று 60-ஆண்டுகளில் இவர் தொட்டிருக்கும் தளங்கள் இதுவரை வேறு எவருக்கும் வாய்க்காதது. அவற்றிலிருந்து சிலவற்றை இங்கே சில நிமிடங்களில் சொல்ல முயல்வது…

தீதின் உணவுச் சங்கிலி: ஒடிய மொழிப் புத்தக அறிமுகம்

நாவலின் ஆழம் அதன் கூறுமொழியால் வருவது. கதைசொல்லி எல்லாம் தெரிந்தவர். நடப்பது அத்தனையையும் ஒவ்வொரு காட்சியாக தன் கருத்துக்களோடு விவரிக்கிறார். ஆனால் என்ன நடக்கிறதோ, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதது போல் பட்டுக்கொள்ளாமல் கதை சொல்கிறார். இது நம் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பது ஒன்று என்றால், இந்த நடுநிலைமை நம்மை உறுத்தவும் செய்கிறது. கதைசொல்லியின் நகைமுரண் பார்வையும் கச்சிதமான நகைச்சுவை கூடிய அவரது கருத்துக்களும் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அபத்தங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ஜார்ஜ் பெரெக்கின் நாவல்கள் – அல்லது இருட்டுக்கடை அல்வாவில் பார்த் (பகுதி 1)

மேற்கோளுக்கு உரியவர் யாரென்று சொல்லாமல், அதை எழுதியது யார் என்பதை நீங்கள் ஊகித்திருப்பது அரிது. திரு. கே. மார்க்ஸ் என்ற ஒருவர்தான் அது. இரண்டு நாவல்கள் கொண்ட இந்தப் புத்தகத்தின் ஒரு பகுதியை அந்த மேற்கோள் முடிவுக்குக் கொண்டு வரும் போல் தெரிகிறது (பழைய புத்தகக் கடையில் வாங்கிய ஹார்வில் பிரஸ் பதிப்பு இது என்பது ஒரு உபதகவல்). ‘திங்க்ஸ்’ மற்றும் அடுத்த பக்கத்தில் துவங்கவிருக்கும் ‘தி மேன் அஸ்லீப்’ (‘Things’ and ‘The Man Asleep’) ஆகிய இரண்டுக்கும் இடையில் புரிந்து கொள்ளப்படக் காத்திருக்கும் குறி போல் அந்த மேற்கோள் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது.

வில்லியம் காஸின் ஐம்பது இலக்கியத் தூண்கள் – (பாகம் நான்கு)

கல்லூரி முதல் வருடம் வரையிலும் நான் ஸ்டைனைப் படித்திருக்கவில்லை என்றாலும் தயாராக இருந்தேன். எந்த உரைநடையுமே என்னை இவ்வளவு பலமாகத் தாக்கியதில்லை. .. புத்தகத்தின் மையக்கதையான ‘மெலங்க்தா’ – வைப் படித்துவிட்டு அவர் எழுதியதனைத்தையும் எப்படி தீவிரமாக கவனிக்காமல் இருக்கமுடியும்? அதைப் படிக்கையில் எனக்கேற்பட்ட கிளர்ச்சி கிட்டத்தட்ட காய்ச்சலையே வரவழைத்து விட்டது. அதிகாலை ஒரு மணிக்கு அதைப் படித்து முடித்தவுடன் (அதைப் படிப்பதற்கே நினைத்திராத நான், வசீகரத்தால் ஏமாற்றப்பட்டு அதனுள்ளிழுக்கப்பட்டேன்) மீண்டும் முதலிலிருந்து படிக்கத் தொடங்கினேன்…. என் இலக்கியப்பணி மணந்து கொள்ளப்போகும் பெண்ணை நான் கண்டுபிடித்துவிட்டேன் என்பதையும் அறிந்து கொண்டேன். அதன் விளைவாக என் மணிப்பர்ஸ் எப்போதுமே மூன்று பெரும் முகங்களை சுமந்திருக்கிறது: வெர்ஜீனியா உல்ஃப், கொலெட் மற்றும் கெர்ட்ரூட் ஸ்டைனின் முகங்கள். ஒரு சினிமா படைவீரன் திரைப்பட பதுங்கு குழியில் கேட்பது போல் நீங்களும் கேட்பீர்களானால் அவற்றை வெளியே எடுத்து உங்களுக்கும் காண்பிப்பேன்.

அகவெளியில் உலவும் குரல் – மௌனி

காலம் அவள் உருவில் அந்த சந்நிதியில் சமைந்து நின்றுவிட்டது”, “கொத்து விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும், அதன் பிரகாரத்தில் நடமாடும் பக்தர்களுக்கும், அவர்கள் நிழலுக்கும் வித்தியாசம் காணக்கூடாத நினைப்பைக் கொடுக்கும் அச்சந்நிதானம், எந்த உண்மையை உணர்த்த ஏற்பட்டது? நாம் சாயைகள்தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?” என்ற வரிகளில் நம் இருப்பை தெளித்து வைத்து ஆட்டும் அப்பாலான சக்தி என்பதான மரபான கோணம்கூட கதைக்கு அற்புதமாகப் பொருந்தி பெரும் மனக்கிளர்ச்சிக்கும் விடை காண முடியாத அவஸ்தைக்கும் உள்ளாக்குகிறது.

சாதாரண சொற்களைக் கொண்டு அசாதாரணமான, திகைப்பிற்குரிய சந்திப்பை நிகழ்த்துவதுதான் மௌனியின் எழுத்துக்கலையாக இருக்கிறது. காரண காரியங்களால் நிரூபிக்க முடியாத ஒரு உலகு கைக்குச் சிக்காமல் இயங்குவதைக் காட்டுகிறார். “மாறி மாறித்தானோ, நான் என்னுடைய என்பதெல்லாம் மறுப்பில் மறுதலையாக உண்மையெனத் தோன்றும்”, “இருளில் உடலை விட்டகன்ற நிழல், ஒளி கண்டவுடன் சரியெனத்தானா, பிரிந்த தன்னுடல் எனக்கண்டு மறுபடியும் உடலுடன் ஒட்டிக் கொள்கிறது? சுசிலா பெயரெனத் தன்னைக் களைந்து கொண்டதில், சேகரன் மனைவி சுசீலா எனவா மனதில் உருக்கொண்டாள்?” (‘பிரக்ஞை வெளியில்’).

பிறந்த நாள்

“இன்று மலையாளச் சிறுகதைகள் ஆங்கில மொழிக்கு மட்டுமின்றி பல உலக மொழிகளுக்கும் போட்டியாக இருக்கின்றன. ஏன் அவைகளை நீங்கள் படிக்கக் கூடாது?” என்றேன்.

ஓ, அவர்கள் சிலவற்றைப் படித்திருக்கின்றனர்.

“பெரும்பான்மையான சிறுகதைகள் வறுமையைப் பற்றிப் பேசுகின்றன. ஏன் அது மாதிரியாக எழுதவேண்டும்?”

நான் எதுவும் சொல்லவில்லை.

“எல்லாக் கதைகளையும் படிக்கும் ஒருவர் உலகில் ஏதோ தவறாக உள்ளது என்று தான் நினைக்க முடியும்,” தங்க பிரேம் அணிந்த நாகரிகமான இளைஞன் சொன்னான்.

இந்த உலகில் என்ன தவறு இருக்கிறது?பெற்றோர்கள் மாதாமாதம் பணம் அனுப்புகின்றனர். அதை வைத்துக் கொண்டு இளையவர்கள் படிப்பது, சிகரெட், டீ,காப்பி, ஐஸ்கிரீம், சினிமா, குட்டிக்குரா பவுடர், வாஸ்லைன், விலையுயர்வான ஆடைகள், நல்ல சாப்பாடு, மேகவெட்டை போன்றவைகளுக்கு செலவழிக்கின்றனர். அவர்கள் தான் எதிர்கால சந்ததியினர். எதிர்கால ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள்! இந்த உலகத்தில் என்ன தவறு இருக்கிறது?

புதரை அடுக்கும் கலை

ஆகவே, இறுதிச் சடங்கு நடக்கும் இடத்தில் ஆன்டி உரை மேசையின் பின்னே நின்று டானியைப் பற்றிப் பேசினார்….ஆன்டி அந்த விதிகளைப் பேசினார்: “உங்கள் அண்டை வீட்டுக்காரருக்கு உதவி தேவையாக இருக்கையில், போய் உதவுங்கள். அண்டை வீட்டுக்காரர்கள் சேர்ந்து வேலை செய்கையில், எல்லாரும் முடிக்கும் வரை, யாரும் முடித்து விட்டதாக ஆகாது.” ….
அந்த நாளையின் மற்றும் அவரது நீண்ட வருடங்களின் களைப்பும் அவரை முழுக்காட்டுகையில், அவருடைய பாட்டனார் காட்லெட் தன் ஞானத்தின் வெற்றியையும், அதன் சோகத்தையும் ஒரே வாக்கியத்தில், “கடவுளே ஆமாம், ஒரு மனிதன் ஒரு நாளில் எத்தனை செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்.” என்று அவரிடம் சொன்னதை ஒரு மாலையில் சில சமயம் அவர் நினைவு கூர்வார். 

பிறழ்வச்சத்தின் ஆரங்கள்: டலிலோவின் ஹோம் ரன்

“நீங்கள் பாஸ்டன் வந்து எத்தனை காலம் ஆகிறது?”: அப்போதுதான் அறிமுகமாகிப் பழகிக் கொண்டிருப்பவர்கள் பொதுவாய்ப் பேசிக்கொண்டிருக்கும்போது எப்போதும் கேட்கும் தவிர்க்க முடியாத இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல நான் சிறிது அவகாசம் எடுத்துக் கொள்ளும் கட்டத்தை நெருங்கி விட்டது என் ஆயுள். ஆம், எனக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது, நான் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தும் பல நாட்களாகிவிட்டன.

அமெரிக்கத்தனங்கள் பலவற்றின் அறிமுகங்கள் போலவே என் ஷ்லாக்பல்வுஸ்ட்ஸைன் ஞானோதயமும் (Schlagballewusstsein, பேஸ்பால்-ஓர்மை, ஜான் அப்டைக் உருவாக்கிய சொல்) பாஸ்டன் ரெட் சாக்ஸ்களுக்கும் நியூ யார்க் யான்கீஸ்களுக்கும் இடையே அமெரிக்கன் லீக் சாம்பியன்ஷிப் சீரிஸில் கடும் போட்டி நிலவிய அந்தப் பித்தேறிய ஆண்டுகளின் பாஸ்டன் நகரில்தான் தோன்றியது. 1999ஆம் ஆண்டு ஏழாவது ஆட்டத்தின் எட்டாவது இன்னிங்ஸில் ரெட் சாக்ஸ் எதிர்பாராத வகையில் பிட்டுக்கொண்டபோது துவங்கி (யான்கீஸ் அந்த ஆண்டு பதினொன்றாவது ஆட்டத்தின் பிற்பகுதியில் தொடரை வென்றார்கள்), அடுத்த ஆண்டு மூன்று ஆட்டங்கள் பின்தங்கி இருந்த ரெட் சாக்ஸ் அதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பரபரப்பான வெற்றிகள் பெற்று முன்னிலையடைந்தபோது வலுப்பெற்று, விமோசனமே கிடையாது என்று நினைத்துக் கொண்டிருந்த “பாம்பினோவின் சாபம்” முடிவுக்கு வரும் வகையில் 2004ஆம் ஆண்டு இறுதியில் வர்ல்ட் சீரிஸ் வென்றபோது உச்சம் தொட்டது. அவை வீரம் சொறிந்த நாட்கள், யான்கீஸ், ரெட் சாக்ஸ் அணிகளுக்கிடையே நிலவிய பகைமையை விவரிக்க ஒரு நவீன ஹோமர் பிறந்து வர வேண்டும்.

க்ரேஸ் பேலி – பெரும் கலக்கங்கள்

அவர் புழங்கிய ஆர்வலர் வட்டங்களில், அவர் சந்தித்திருந்த பெண்ணியவாதிகளில் சில இளைஞர்களைப் போல அல்லாது, பேலி தாய் என்னும் நிலையை நசுக்கும் அமைப்பாக ஒரு போதும் பார்த்ததில்லை. குழந்தை வளர்ப்பு என்பதை அவர் ஒரு வகை வேலை என்று புரிந்து கொண்டிருந்தார் – சலிப்பூட்டுவது, ஓய்ச்சலைக் கொணர்வது, நன்றியேதும் கொணராதது, இதை அவருடைய பல கதைகள் வெளிப்படுத்துகின்றன….இருப்பினும், குழந்தைகளைப் பராமரிப்பது என்பது கொணர்ந்த உணர்ச்சிகளையும், மனத் தெளிவுகளையும் அவர் பெரிதும் விரும்பினார். அவருடைய புனைவுகளில், குழந்தை வளர்ப்பின் எழிலையும், சாதாரணத் தன்மையையும் எல்லாம் கவனித்தபடியே, அதைப் பெருமையுள்ளதாகவே சித்திரித்தார். தாய் எனும் நிலை, பேலியைப் பொறுத்து, ஒரு கலவையான ஆசீர்வதிப்பு, மகிழ்ச்சியும் பெரும் சினமும் துக்கமும் கலந்து கிட்டும் ஒரு அனுபவம். அது உலக வாழ்வில் குறைகள் கொண்ட, ஆனால் இறுதியில் பயனளிக்கும் இன்னொரு வழி.

போகிற போக்கில் மகத்துவங்களை உண்டாக்கியவர்- தி. ஜானகிராமன்

தமிழ்ச் சிறுகதைத் துறைக்குப் பெரும் பங்காற்றியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நூற்றாண்டுக் காலத்தில் இவ்விலக்கிய வகைமைக்குப் பங்காற்றியவர்கள் நூறு பேருக்குள்ளாகத்தான் இருப்பர். அதில் ஆளுமையுள்ளவர்களாக புதுமைப்பித்தன், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ஆ. மாதவன் ஆகிய நால்வரை மட்டுமே குறிப்பிட முடியும். அசோகமித்திரனிடம் படைப்பெழுச்சி மிக்க தருணங்கள் இல்லை. மன நெருக்கடியில் விளைந்த அனுபவசாரம் அதிகக் கதைகளில் இருப்பதால் இவரை முக்கியமான சிறுகதையாளர் ஆக்குகிறது. இளம் எழுத்தாளர்களில் இரண்டுபேரை மட்டுமே சொல்ல முடியும். கறாரான இத்தன்மையில் தி. ஜானகிராமன் நிராகரிக்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கிறார். தமிழன் துரதிருஷ்டம் அவரின் நாவல்கள் பேசப்பட்ட அளவு சிறுகதைகள் பேசப்படவில்லை. அதிலும் ஒரு பாதகம் தி. ஜானகிராமன் நாவல் கலையின் உச்சத்தைத் தொட்டவரல்ல. அவருடைய அபரிமிதமான சாதனை சிறுகதைத் துறையிலேயே நிகழ்ந்திருக்கிறது.

ஐம்பதுகளில் எழுதப்பட்ட சிறுகதைகளை வைத்துப் பார்க்கும்போது தி. ஜானகிராமனிடம் வெளிப்பட்ட கலையின் மகாசக்தியான உற்றுநோக்கல் திறன் வேறொருவரிடமும் வெளிப்படவில்லை. சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் புதுமைப்பித்தன் பாணியைக் கைக்கொண்டனர். கருத்துலகு மீதான விமர்சனம்தான் மார்க்சியம் என்ற சித்தாந்தத்தின் பொதுத்தன்மைகளை…

அதிர்ஷ்டசாலிகள்

விரைவுச் சாலையில் மழையில் மாட்டிக் கொண்ட போது
நேரம் மாலை ஆறு பதினைந்து
நில், முதல் கியருக்கு மாறு, மீண்டும் நில்
நாங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பணியிலிருப்பவர்கள்

பியானோ ஆசிரியரின் கண்மணி

என்னுடைய கதைகளில் கொள்ளை கொள்ளையாக உணர்வுகள் வரும். எல்லாவித உணர்ச்சிகளும் சத்தியமானவை. ஒவ்வொரு விநோதமாக ஆராய்ந்து விதந்து கூறுகிறேன். மற்ற நிஜங்களுக்கு கதையில் ரொம்ப இடம் தர மாட்டேன். உண்மை சம்பவங்களை விட விசித்திரங்களை குடைந்து எழுத்தில் கொணர்கிறேன். அதனால்தான் பெண்களைக் குறித்து எழுதுகிறேன். நான் பெண் இல்லை. அவர்கள் எண்ணங்கள் எப்படிப்பட்டவை என்பது தெரியாது. இது என்னை உற்சாகம் கொள்ளவைக்கிறது. அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று சிந்திக்கிறேன். என்னால் அவர்களாக முடியாது. அதனால் ஆர்வத்துடன் அந்த அனுபவத்திற்குள் நுழைந்து ஆராய்கிறேன்.

குவெம்புவின் படைப்புலகம்

This entry is part 18 of 72 in the series நூறு நூல்கள்

”பிறைச்சந்திரன்” என்றொரு கவிதை. அதில் ஒரு சிறுவன் தன் தாயைப் பார்த்துத் தனக்குத் தெரிந்த உவமையைக் கொண்டு,

”கடவுளின் பெப்பர்மெண்டா அம்மா
வானில் சுழலும் சந்திரன்”

என்று எளிமையாகக் கேட்கிறான். அம்மா பதில் சொல்கிறாள்.

”நீயும் கடவுளின் குழந்தையானால்
உனக்கும் தருவான் கண்ணே”

இளமூதாக்களும் கழிவுநீரும்: சால் பெல்லோவின் கலை

அன்புள்ள திரு பெல்லோ அவர்களுக்கு,

நீங்கள் நேசிக்கும் நியூ இங்கிலாந்தை இப்போது குளிர்காலம் நெருங்கி விட்டது. “சென்ற வேனிலின் இலைகள்” அளிக்கும் கசப்பும் இனிப்பும் கூடிய அழகு ஒரு புறம் இருந்தாலும், இந்தக் குளிர்காலம் ஒளியற்றதாக இருக்கும் போலிருக்கிறது. இவ்வாண்டின் கோடையில் நான் ஒரு பெருந்தீனிக்காரி போல், நீங்கள் எழுதிய ஏறத்தாழ எல்லாவற்றையும் வாசித்தேன் (மீண்டும் மீண்டும் வாசித்தேன்). ராவல்ஸ்டீன் போலவே நானும் அவற்றின் நுண்மையான இசையில் “எண்ணங்கள் கரைந்து போக” என்னை இழந்தேன். சிந்தனைகள் சுள்ளிகளாய் முறித்துத் தெறித்துச் சுடர் விட்டுக் கனலாய்த் தகிக்கும் ஓர் உள்ளத்தின் வெம்மையில் குளிர் காய்வது போன்ற அனுபவமாய் என் வாசிப்பு இருந்தது. நான் உங்கள் தீவிர வாசகி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமா!

நகர்ப்புற அமெரிக்கா குறித்த உங்கள் வர்ணனைகள் அற்புதம், ஒரு லேசர் போல் குவியும் உங்கள் பார்வையில் புலப்படும் புற விவரணைகள் அத்தனையும் (நவீன இலக்கியத்தில் இவற்றுக்கு இணையான வேறொன்று இல்லை) அந்த மடிசஞ்சி நபகோவ், டிக்கன்ஸ் போன்றவர்களுக்கு மட்டுமே உரித்தென்று வைத்திருந்த தண்டுவடச் சிலிர்ப்புக்குத் தக்கவை (மரக்கால் கெர்ஸ்பாக், “ஒரு பரிசல்காரன் போல் நளினமாய் வளைந்து நிமிர்கிறான்” என்பது நினைவுக்கு வருகிறது, ஆனால் அண்மையில் எனக்கு மூர்க்கம் மிகுந்த ஒரு “நிதர்சன-படிப்பினை” அனுபவம் ஏற்பட்டது.

தமிழர் முகங்கள் : எனக்கோர் அறிமுகம்

“சீக்கிய வீரனைப் போல் முண்டாசு கட்டியிருந்தார்;வற்றி உலர்ந்த உடம்புதான்;வாடிப் போன கன்னங்கள்தான்; எனினும் மார்பை முன்னே தள்ளித் தலை நிமிர்த்தி ஒரு வெற்றி வீரனைப் போல் உள்ளே நடந்து வந்தார். எந்த போர் வீரனுக்குத்தான் அவ்வளவு காம்பீர்யம் இருக்கமுடியும்? நீண்டு நிமிர்ந்த மூக்கும், அடர்ந்த புருவங்களும், உருண்ட கண்களும் அவற்றின் கூர்மையான வீரப்பார்வையும், பரந்த நெற்றியும், அதன் நடுவிலே குங்குமப் பொட்டும் அந்த வீரம் செறிந்த முகத்தை வசீகரமாக்கிவிட்டன. பித்தான் இல்லாத கிழிந்த ஷர்ட்டு மேலே அல்பாகா கோட்டு ;அதற்கு ஒரே பித்தான்; கோட்டும் காலம் கண்டதுதான். ஆனால் அவ்வளவு வறுமையாலும் அவிக்க முடியாத ஒரு பெருமை-ஒரு பெருமிதம்-ஒரு மாட்சி ஒளி வீசியது அந்த முகத்திலும்,கண்களிலும்-மெல்லிய மேகத்திரைக்குள்ளே ஒளிந்து கொண்ட சந்திர பிம்பம் போலே .

அம்ரிதா ப்ரீத்தம் – பஞ்சாபிக் கவிதாயினி

தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார். கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை. மொழியாக்கம்…

முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்

தமிழில் இருக்கிற மிக முக்கியமான படைப்பாளியாக அவரைக் கருதுவதற்கு என்ன காரணம் என்றால், பாரதி சொன்ன மாதிரி எட்டுத்திக்குகளில் இருக்கும் கலைச் செல்வங்களை அவர் தமிழுக்கு கொண்டு வந்து சேர்க்கிறார். இந்த இரண்டாவது வகைக் கதைகள் பல்வேறு வெளிநாடுகளில் நடக்கிற கதைகள். அது காபூலாக இருக்கலாம். இஸ்லாமாபாத்தாக இருக்கலாம். டொராண்டோவாக இருக்கலாம். ஆனால் இந்தக் கதைகளிலெல்லாம் தமிழ்ப்பாத்திரங்கள் இடம் பெறுவார்கள். கதைசொல்லியோ, கதையிலுள்ள பிரதானப் பாத்திரங்களோ தமிழராக இருப்பார்கள். இது அவரது இரண்டாவது உலகம். அவரது பெரும்பாலான படைப்புக்களை இரண்டாவது வகைக்குள்ளே கொண்டு வந்துவிடலாம்.

மூன்றாவது வகைக் கதைகளும் வெளிநாடுகளில் நடக்கிற கதைகள்தாம். வெளிநாட்டு மண்ணில் வெளிநாட்டு கலாசாரப் பின்புலத்தில் நடைபெறும் கதைகள். ஆனால் இந்தக் கதைகளிலே ஒரு தமிழ் கதாபாத்திரமும் இராது. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்கள் இடம் பெறும் தமிழ்க் கதைகளாக அவை இருக்கும். இரண்டாவது வகைக் கதைகளில் தமிழ்ப் பாத்திரங்கள் எனும் ஒரு சின்னப் பாலம் இருக்கிறது. இதில் அதுவும் இல்லை. முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கதாபாத்திரங்களை வைத்து நமக்கு முற்றிலும் அந்நியமான சூழலில் நிகழும் கதைகளை தமிழ் வாசகனுக்கு நெருக்கமான குரலில் அவரால் சிறப்பாகச் சொல்ல முடிகிறது. இந்தக் கதைகளின் வழி மனித மனத்தினுடைய ஆசாபாசங்கள் அடிப்படையிலே ஒன்று என்பதாக எடுத்துக் கொள்ளலாம். கலாசார வேறுபாடுகளை அவர் கொண்டு வந்து சேர்க்கிறார் என்றும் எடுத்துக்கொள்ளலாம். இந்தச் சிரமமான வேலையை அவர் லாவகமாகச் செய்து கொண்டிருக்கிறார்.

களம் புதிது, கதை புதிது, கதையாடலும் புதிது

பணியின் நிமித்தம் உலகம் முழுதும் சுற்றும் வாய்ப்பு பெற்றவர்கள் எழுதும் திறன் அற்றவர்களாக இருப்பார்கள். அதே போல், எழுதும் திறமை பெற்றவர்கள் இது போல் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் சென்று வாழும் வாய்ப்பு கிடைக்காதவர்களாக இருப்பார்கள். ஆனால்,முத்துலிங்கத்துக்கு இந்த இரண்டுமே வாய்த்திருக்கிறது. அது அவருக்குக் கிடைத்த வரம் என்று தோன்றுகிறது.

அ .முத்துலிங்கம் படைப்புகள்

நான் பல்வேறு கால கட்டங்களில் மீண்டும் மீண்டும் திரும்பிச் சென்று படிக்கும் ஒரு கதை ‘பூமாதேவி’. தனது ஒவ்வொரு பருவத்திலும், அமெரிக்க பண்பாட்டு சூழலில் தனக்கான உலகை மகள் கட்டமைத்துக்கொண்டிருக்கும் காலத்திலெல்லாம் அதனை விலகி நின்று ஆச்சரியத்துடன் பார்க்கமுடிந்த தந்தையால், புராணங்களை அமெரிக்க நடைமுறை வாழ்க்கையின் உதாரணத்திலிருந்து தன்னால் இனிமேல் தன மகளுக்கு புரியவைக்க முடியாது என்று உணரும் நொடியில் அவளை இழந்துவிட்டதாக நினைக்கிறார். தனது மண் சார்ந்த, பண்பாடு சார்ந்த புராணம் அடுத்ததலைமுறைக்கு தொடர்பில்லாமல் போவது ஒரு நீண்ட நெடிய பண்பாட்டு சங்கிலியில் ஒரு தொடர்ச்சியை தன்னால் ஏற்படுத்தமுடியாமல் போனதால் ஏற்பட்ட இயலாமையின் வலியல்லவா அது?

அ.முத்துலிங்கம்: காலம் வழங்கிய கொடை

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம். நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.

ஆறாம் நிலத்தின் அடையாளம்

அவரது சிறுகதைகளை வாசித்தபிறகு ஏற்படும் உணர்வுக் கொப்பளிப்பில் பலமுறை அவருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்.சிலமுறை லேசாக பகடி செய்ததுமுண்டு.ஒரு மூத்த எழுத்தாளரை பகடி செய்யும் துணிவையும் சுதந்திரத்தையும் தந்தது எது? என பலமுறை ஆச்சர்யமடைந்திருக்கிறேன். அது அவரது படைப்பு மொழியும் அது தந்த நெருக்கமும் என பின்னாளில் உணர்ந்துகொண்டேன்.ஒரு வாசகனாக அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது வாசகர்களின் கடிதங்களுக்கும் தாமதமின்றி உடனுக்குடன் பதில் எழுத்துவதைக் கூறுவேன். உண்மையில் வேறு எந்த மூத்த எழுத்தாளர்களும் அவர் அளவிற்கு வாசகர்களுடன் இணங்கி உரையாடுவார்களா என்பது சந்தேகமே.

அ முத்துலிங்கம்: நேர்காணல்

எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் முந்தைய பதிவுகள்: அ. முத்துலிங்கம் நேர்காணல் வாசகர் தேவை : அறிவியல் மறந்துவிட்டீர்களா? : வெ.சா. அஞ்சலி கடவுளை ஆச்சரியப்படுத்து : சிறுகதை வெளிச்சம்: சிறுகதை ஆச்சரியம்: சிறுகதை ஆற்றேன் அடியேன் : இலக்கியம் பற்கள் சாபம்: அனுபவம் கடவுளின் காதுகளுக்கு பாகிஸ்தானில் பறந்த “அ முத்துலிங்கம்: நேர்காணல்”

குமாஸ்தா எழுத்தாளர்களுக்கான இலக்கியம்

2016ஆம் ஆண்டு அரபு இலக்கியத்துக்கான நக்விப் மஹ்ஃபூஸ் பதக்கம் எகிப்திய எழுத்தாளர் ஏடல் இஸ்மாட் (Adel Esmat) அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தினரால் வழங்கப்படுவது. ஆங்கில மொழியாக்கம் செய்யப்படாத சமகால அரபு மொழி நாவல்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. ‘யூசுஃப் டாட்ரஸின் கதைகள்’ (Hikayât Yûsuf Tadrus- The Tales of Yusuf Tadrus) என்ற நாவலுக்காக விருது பெற்ற இஸ்மாட்டின் ஏற்புரை

தோல்விக்கு மருந்து: எண் 76

அன்பார்ந்த எழுத்தாளர்களே.
உங்களுக்கு நான் எண் 76 ஐக் கொடுக்கிறேன். எதையும் 76 தடவைகளாவது முயன்று பார்க்காதவரை கைவிடாமல் இருக்க உங்களை ஊக்குவிக்கிறேன், அது வேலைக்கு விண்ணப்பிப்பதானாலும் சரி, ஒரு படைப்பைத் திருத்தி எழுதுவதானாலும் சரி அல்லது வெளியே அனுப்பி வைப்பதானாலும் சரி. தன்னை இழந்தும், சலியாத உறுதியோடும் எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுக்கிறேன்.