அதிரியன் நினைவுகள் -17

This entry is part 17 of 22 in the series அதிரியன் நினைவுகள்

நமது வணிகர்கள் சில சமயங்களில் சிறந்த புவியியலாளர்களாகவும்,  சிறந்த வானியலாளர்களாகவும், நன்கு  கற்றறிந்த இயற்கை ஆர்வலர்களாகவும் இருக்கின்றனர். அதுபோல  மனிதர்களைப் புரிந்து நடக்கும் மனிதர் கூட்டத்தில் வங்கியாளர்களையும் நாம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இப்படியான தனித் திறமைகள் எங்கிருந்தாலும் அவற்றை நான் பயபடுத்திக்கொள்வேன். ஆக்ரமிப்புகளுக்கு அல்லது அத்துமீறல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த  சக்தியையும் திரட்டிப் போராடியுள்ளேன். கப்பல் உரிமையாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஆதரவு காரணமாக வெளி நாடுகளுடனான கட்டுப்பாடுகள் தளர்ந்து பரிவர்த்தனை பெருகியது

அதிரியன் நினைவுகள் – 16

This entry is part 16 of 22 in the series அதிரியன் நினைவுகள்

வெயில் காயும் நேரத்தில், வீதியொன்றின் திருப்பத்தில் நின்று கிரேக்கர்களின் மலைக்கோட்டையைக் காணும்போதெல்லாம், மிகக் கச்சித்தமாகவும் நேர்த்தியாகவும் அதனுள் கட்டி எழுப்பப்பட்ட   நகரம்  ஒரு பூத்த மலர்போலவும், அந்நகரத்துடன் இணைந்திருக்கும் மலை தண்டுடன் கூடிய புல்லிவட்டம் போலவும் தோற்றம் தரும். இழப்பீடற்ற அச் செடியை வரையறுக்க ‘ பூரணம்’ என்ற வார்த்தைமட்டுமே பொருத்தமானது. அப்பழுக்கற்ற  அவ்வடிவம் பெருவெளியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், கால அளவின் ஒரு குறிப்பிட்டத் தருணத்தில்…

எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும்

நண்பர் “காத்திருப்பு அறையில்” கவிதை தனக்குப் புரியவில்லை என்று பகிரங்கமாகவே ஒத்துக்கொண்டிருந்ததை. அதன்பின் சிறிது நேரத்திற்கு அக்கவிதையைப் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். உள்ளே / வெளியே குறித்து, சுயத்தை முதன்முதலில் அடையாளம் கண்டு கொள்ளும் தருணம், கவிதையின் தரவு முரண்பாடுகள், முதல் வாசிப்பைக் காட்டிலும் அதை சுவாரசியமாக்கிய பிஷப்பின் சில சரிதைத் தகவல்கள் என்றெல்லாம் பேசிவிட்டு

அந்நியனின் அடிச்சுவட்டில்

என் இலக்கிய அறிமுகம் ஆல்பெர் கம்யு (Albert Camus) மூலமாகவே நடந்தது என்பதின் சாத்தியக் குறைவை (அபத்தத்தை?) நினைத்துக்கொள்கையில் எப்போதுமே சிரித்துக்கொள்கிறேன். சிக்கலில்லாத பதின் பருவத்தை கிரிக்கெட் விளையாடிக்கொண்டும், தமிழ் வாரப் பத்திரிகைகளின் விரசமான பகுதிகளைப் படித்துக்கொண்டும் கழித்திருக்கையில் அப்பாவின் உறவினர் ஒருவர் எங்கள் இல்லத்திற்கு வார இறுதிகளில் “அந்நியனின் அடிச்சுவட்டில்”

அதிரியன் நினைவுகள் – 6

This entry is part 6 of 22 in the series அதிரியன் நினைவுகள்

இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.

முது மது (நாட்படு தேறல்)

சாண்ட்ரா விழுங்குவதற்குச் சில கணங்கள் எடுத்துக் கொண்டாள். “இல்லைதான், உங்களிடம் இருப்பது ஜனங்களே பிரச்சினைகளாக இருந்தாலும்,  அவர்கள் தங்கள் பிரச்சினைகளிலிருந்து ஓடிப் போக வழி செய்வது.”..டாக்டர் கோல் அசைவின்றி அமர்ந்திருந்தார், … “ஆமாம், அது ஒரு பெரும் பங்கு இதிலெல்லாம். நாம் ஒரு பெரிய சிக்கலை உருவாக்கி விட்டு, அதன் விளைவுகளைச் சந்திக்காமல் அவற்றிலிருந்து பறந்து போய் விட முடியாது. கடிகாரத்தைத் திரும்பி வைத்து, நிஜ வாழ்வில் ஏற்பட்ட சேதங்களை மற்ற மனிதர்கள் மீது சுமத்த முடியாது. நீ இதைச் சரியாகப் பிடித்து விட்டாய்.”

மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?

எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன்.

அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ்

டி.எஸ்.எலியட் போன்ற பெரும் ஆளுமைகளின் கலையில் முன்னேற்றம் போன்ற பரிணாமங்களை வரையறுப்பது சற்று முட்டாள்தனமாகவே இருக்கலாம்; ஏனெனில் அவரது ஆரம்ப காலப் படைப்புகளிலேயே ப்ரூஃப்ராக் போன்ற படைப்பும், அவரது மத்திய காலப் படைப்புகளில் பாழ்நிலம், ஆஷ் வெட்னஸ்டே போன்ற பெரும் படைப்புகளும் இடம்பெற்றிருப்பதால் . இக்கவிதைகள் அனைத்தையுமே நாம் இத்தொடரின் முந்தைய பகுதிகளில் பேசிவிட்டோம். அவற்றுக்குப் பின்வந்த ஃபோர் குவார்டெட்ஸ் கவிதை உண்மையில் நான்கு நீள் கவிதைகளாலான ஒரு கதம்பக் கவிதை. நான்கு கவிதைகளுமே ஐந்து அசைவுகளாகக் கட்டமைக்கப் பட்டிருக்கிறன.

பாழ்மையினூடே மகோன்னதத்திற்கு: எலியட்டின் பாழ் நிலம்

ஆனால் ஒரு விஷயத்தில் நாம் கவிதையோடு உடன்பட வேண்டும், அதன் நாயகன் நிச்சயமாக அவன் நிலங்களை ஒழுங்குபடுத்தி செப்பனிட வேண்டும் (set his lands in order). ஆனால் அன்பை, நிதர்சனத்தைக் காட்டிலும் ஆதர்சமானதொருநிலையில் உயிர்த்தெழுப்புவதற்காக, அதை இறக்க அனுமதிக்கும் மனநிலையைப் பராமரிப்பது கடினம். இதனால்தான் லண்டன் ப்ரிட்ஜ் வீழவிருக்கும் நிமித்தங்களுடன், வறண்ட சமவெளி பின்னே விரிந்துகிடக்கும் சூழலில் அவன் இன்னமும் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆயினும், வறண்ட எண்ணங்களைக் காட்டிலும் மேலான ஏதோவொன்று ஈட்டப்பட்டு, இடிபடுகளுக்கு எதிராக இங்கு கரைசேர்க்கப்பட்டிருக்கிறது.

மகோன்னதத்திற்கான ஆயத்தம்: டி.எஸ்.எலியட்டின் ஆரம்பகாலக் கவிதைகள் – 2

அதன் விருப்புறுதியில்லாது தடுமாறும் நாயகன், மிகெலாஞ்சலோவைப் பற்றி கதைத்தபடியே வந்துபோகும் பெண்கள் சூழ்ந்திருக்கும் வரவேற்பறையைத் தவிர்ப்பதற்காகப் புறவுலகு தரிசனங்களை (மலிவான ஹோட்டல்கள், மரத்தூள் பரப்பப்பட்டிருக்கும் உணவகங்கள், நயவஞ்சகமான தெருக்கள், மஞ்சள் மூடுபனி / புகை போக்கிக் கரி படிந்திருக்கும் பூனை போன்றவற்றை) வலுக்கட்டாயமாக நினைத்துப் பார்க்கிறான். மேலும் அப் புறவுலகு ரொமாண்டிசிஸ்ட்களின் வழக்கமான, pathetic fallacy இல்லாது, அதாவது கவிஞரின் உணர்வுகள் கவிதையின் பொருட்களின் மீது திணிக்கப்படாமல் (Art thou pale for weariness… wandering companionless? என்று ஷெல்லியின் பிரசித்தி பெற்ற கவிதையொன்று நிலவைக் கேட்கிறது) நமக்கு அளிக்கப்படுகிறது

மகோன்னதத்திற்கான ஆயத்தம்

சார்பற்ற புறநிலைத் தன்மைக்கானதொரு பயிற்சியே இங்கு முயற்சிக்கப்படுகிறது. ஆனால் வறண்ட இம்மூளைப் பயற்சியை உயர்பிப்பதற்குத் தேவையான உணர்வின் உத்வேகம் இல்லாததால் இக்ககவிதைகள் வாழ்க்கையை அணுகுவதற்கான ஓர் முறைமையாக மாறாது லாஃபோர்கேயை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையாக எஞ்சிவிடுகின்றன. ஏன் ஹியூமரெஸ்க்? என்றால் விண்டம் லூவிஸ்சின் தார் (Tarr) நாவலை எலியட் விமரிசிக்கையில் நகைச்சுவை என்பது “அழகை அகோரத்திலிருந்து பாதுக்காப்பதற்கும் தன்னையே முட்டாள்தனத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் மனது மேற்கொள்ளும் ஓர் நுண்ணுணர்வுமிக்க இயல்பான உள்ளார்ந்த முயற்சி” என்று கூறியதே அதற்கான சரியான பதிலாக இருக்க முடியும். உன்னதத்திற்கான விழைவை நகைமுரண் முகமூடிகளைக் கொண்டு அடியறுக்கும் போக்கை  நாம் கவிஞர் இசையின் கவிதைகளிலும் காண்கிறோம். உதாரணமாக…

உனக்காக உறைபனியில்

அரசவையில் உள்ளோர் மற்றும் உடலுழைப்பு அவ்வளவாகத் தேவைப்படாத பணியைச் செய்து வந்தவர்கள் முழுக்கை கொண்ட உடையையும் விவசாயம், தச்சுவேலை போன்ற பணிபுரிவோர் அரைக்கை ஆடைகளையும் போர்வீரர்கள் போன்ற சண்டையிடுவோர் கைப்பகுதி அற்ற ஆடைகளையும் செய்தொழில் வசதிக்காக அணிந்தனர். அரசவையில் இருந்த முழுக்கை ஆடையோர்க்கு அவர்களின் கைப்பகுதியின் தூய்மை முக்கியத்துவம் பெற்றது. அழுக்காகும் வாய்ப்புகள் குறைவு என்பதால் தனக்கு விதிக்கப்படாத ஒரு பணியைச் செய்தாலொழியக் கைப்பகுதியின் தூய்மை கெடாது எனக் கருதப்பட்டது.

ஜப்பானியப் பழங்குறுநூறு

பழந்தமிழரின் வாழ்வைக்கூறும் நம் இலக்கியங்களைப் போலவே ஜப்பானிய மொழியிலும் இலக்கியங்கள் உள்ளன. நம்மைப் போலவே, புலவர்கள் மட்டுமின்றிப் புரவலர்களும் பாடல்கள் இயற்றியிருக்கிறார்கள். கி.பி. 7ம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரை ஜப்பானை ஆண்ட பல அரசர்களும் அரசியரும் நிலப்பிரபுக்களும் மதகுருக்களும் இயற்றிய பாடல்களில் சிறந்த 100 பாடல்களைத் தேர்ந்தெடுத்து ஃபுஜிவாரா வம்சத்தைச் சேர்ந்த சதாய்யே என்ற மன்னர் கி.பி. 1235ல் 百人一首 (Hyaku nin isshu – Verses from Hundred people) என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார். இவர் இயற்றிய ஒரு பாடலும் 97வது பாடலாக இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது.

எரியும் காடுகள் – 1

This entry is part 1 of 4 in the series எரியும் காடுகள்

நான் அங்கே இருந்து மூன்று வாரங்கள் ஆனபின்னரே அவர் அந்தத் தீவைப் பற்றிச் சொன்னார், என் கணக்கில் நாங்கள் உரையாடியதில் அது மூன்றாவது அல்லது நான்காவது தடவையாக இருக்கும். முதல் சில நாட்களுக்கு அவர் என்னை அணுகாமல் என் போக்கில் இருக்க விட்டார். அந்த ஓய்வு வாசஸ்தலத்தில் (அப்படி ஒரு வர்ணிப்பு பழைய காலத்து அர்த்தத்தில்தான் அந்த இடத்துக்குப் பொருந்தும். அது எங்கோ மலைகளடர்ந்த, எட்டாக்கையான ஒரு பிரதேசத்தில் இருக்கும், பாசி படர்ந்த, பழைய சிறுகுடில்களின் தொகுப்பாக இருந்தது) நான் சேர்ந்தபோது குளிராக, இருண்ட, மிக நேரமாகி விட்ட பின்மாலைப் பொழுதாக இருந்தது.

இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்

This entry is part 2 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) ” இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை

என் காதலியின் கண்கள்
சூரியக் கதிர்களாய் ஒளிர்வதில்லை.
அவளின் இதழ்
பவளத்தின் சிவப்பிறகு ஒப்பில்லை..
பழுப்பு நிறமாயிருக்கும் அவள் மார்பகங்களை
வெண்பனியென்று எப்படிக் கூறுவது?

அவனும் நானும்

தமிழில்: சஞ்ஜெயன் சண்முகநாதன் அவனுக்கு முன்பாகவே நான் விழித்துவிடடேன். இமைகளை சிமிட்டி அரை வெளிச்சத்திற்கு கண்களை உடனடியாக பழக்கப்படுத்தி கொண்டேன். தலையை மெதுவாக உயர்த்தி என் பக்கத்தில் அசைவற்று கிடைக்கும் அந்த பெருத்த வெள்ளை உடலை நோடடம் விடடேன். நான் செய்யும் அளவு உடற்பயிசியை அவனும் செய்தால் இந்த எக்ஸ்ட்ரா “அவனும் நானும்”

விரோதிகள்

“ இது ஒரு வேதனைமிக்க சூழ்நிலை! நமக்குப்பிடித்தமானவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடுவார்கள் என்ற அபாயத்தில் இருக்கும்போது அவர்களை நாம் நேசிப்பதைப்போல நாம் அவர்களை ஒருபோதும் அதிகமாக நேசிப்பதே இல்லை.”
ஆற்றுக்குக் குறுக்காக வண்டி சென்று கொண்டிருந்தது. தெறித்த தண்ணீரால் தான் பயப்படுவதைப்போல அப்படியும் இப்படியுமாக நெளிந்தான் அபாஜின்.
“கொஞ்சம் பார்— என்னை விட்டுவிடேன்…” என்று பரிதாபமாகச் சொன்னார் கிரிலோவ்.

பேய் வீடு

இப்போது அவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள்,” பென்சிலை விளிம்பில் நிறுத்தியபடி யாராவது நிச்சயமாய்க் கூறலாம். அதன் பிறகு, வாசித்த அலுப்பில் எழுந்து தானே பார்த்துக் கொள்ளலாம். வீடு காலியாகக் கிடந்தது, கதவு எல்லாம் திறந்தபடி, ஜன்னல்கள்’ ஆ’வென்றபடி. காட்டுப் புறாக்கள் மகிழ்வுடன் கலகலக்கும்.

மகத்தான மங்கை

நான் அப்படியொன்றும் அழகியல்ல
நாகரிக யுவதிகளைப் போல
அளவெடுத்த அங்கங்கள் வாய்த்தவளல்ல
எனும் மெய்யுரைத்தால்,
நான் பொய்யுரைக்கிறேன் என்றே புறந்தள்ளுகிறார்.

ஃபிலிப் லார்கின்: சாதாரண உன்னதம்

லார்கின் படைப்புகளில் இரு நிலையான சரடுகளைக் காண முடிகிறது, அவற்றுக்கு இடையிலான முரணியக்கம், அவரது கவிதைகளுக்கு ஒரு தனிச்சுவை அளிக்கிறது: ஹார்டிய “இங்கேயே இப்போதே” என்ற இருப்பும், யேட்ஸ்சிய காலாதீதத்தன்மை என்ற இரண்டும் அவரது முதிர்ந்த கவிதைகளிலும்கூட தொடர்ந்து தென்படுகின்றன.

ஷெர்லி ஹாஸர்ட் (1931-2016) – ஓர் அறிமுகம்

ஹாசர்டின் உரைநடை, பழமொழிகளைப்போலச் சுருங்கச் சொல்வதாகவும், ரத்தினக் கற்களை வெட்டுவதுபோலக் கூர்மையான விளிம்புகளோடும் இருப்பது – அது இத்தகைய குறிப்புகளிலிருந்து உருப்பெற்றது. அக்குறிப்புகள் எங்கோ கேட்டவை, அல்லது கனவாகப் பெறப்பட்டவை, பிறகு எழுதி வைக்கப்பட்டவையாக இருந்தன.

அமிழ்தல்

அக்கா, முன்பு நீ தேடிக்கொண்டிருந்த சுட்டுப் பெயர்; உன் புத்தியிலிருந்து மறைந்துவிட்டதாகத் தோன்றுகின்றவற்றில் அதுவும் ஒன்று. நீ வார்த்தைகளைப் பெறப் போராடுகிறாய்; ஆனால் அந்த அமிழ்த்தி உனக்குக் கொடுப்பவை எல்லாம் நடுவாந்திரமாக, தொடர்பறுந்த வகைச் சுட்டுப் பெயர்களாகவே உள்ளன, அவற்றில் ஒன்று உனக்கு உள்ளுணர்வால் உடனே தெரிகிறது, தவறான சொல் என்று – அதை வெளிதேசத்தவரும், அன்னியரும்தான் இந்த மாதிரிச் சூழல்களில் பயன்படுத்துவார்கள். “அக்கா,” நீ அந்தச் சுட்டுப்பெயரை, இறுதியில், திரும்பச் சொல்கிறாய், ஏனெனில் உனக்கு வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

பலகை அடித்த ஜன்னல்

மர்லாக், மர வீட்டைக் கட்டி முடித்தபின், வலிமையுடன் மரங்களைக் கோடரியால் வெட்டி வீழ்த்திப் பயிரிடும் நிலத்தை உருவாக்கிக் கொண்டான்- துணைக் கருவியாகத் துப்பாக்கியும் வைத்திருந்தான். அப்போது அவன் இளமையும் கட்டுடலும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்பும் கொண்டிருந்தான். கிழக்கு தேசத்திலிருந்து வந்தபோதே அவ்வூர் வழக்கப்படி அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டது.

பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்

“என் புத்தகங்களும் குழந்தைகளும் மட்டுமே என் தேசம்” – ரொபெர்த்தோ பொலான்யோ  “கவிதைகள் படிப்பதற்கு ஒரு காலம், முஷ்டி மடக்குவதற்கு ஒரு காலம் உண்டு,” – சாவெஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் ரொபெர்த்தோ பொலான்யோ “ஆக, அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேர்மையும் நாம் மிகவும் நேசிப்பவையும், எல்லாம் நம்மைக் கைவிடுகின்றன. “பொலான்யோவை வாசித்தல் அல்லது மடையுடைத்த மலப்புயல்”

பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே?

வாசகர்கள் பொலான்யோ பற்றிய இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை மேம்போக்காகவாவது பார்த்துவிடுவது உத்தமம், அவரது வாழ்க்கை குறிப்புகளில் சிலவற்றைப் பற்றிய விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ளவும் பொலான்யோவின் புனைவில் உள்ள கிறுக்குத்தனத்தின் முறைமையைப் புரிந்து கொள்ளவும் அது உதவக்கூடும். மேலும், ‘சாவேஜ் டிடெக்டிவ்ஸ்‘ பற்றிய இந்தக் கட்டுரையை ‘துப்பறியும் கதை’ “பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் அல்லது ஜன்னலுக்கு வெளியே?”

மானுடத்தைத் துப்பறிபவன்

ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது. பெரு நாவல்களை இடைநிறுத்தாது வாசிக்கும்போது சில மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறேன். நம் அத்தனை அன்றாடச் செயல்களுக்கும் பின்னணி இசையாக, நாவல் அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கும். புலன்கள் விழித்துக்கொண்டு துல்லியமாகும். நிகழ்வுகளை, அனுபவங்களை நாவலுடன் பொருத்திப் பார்க்க மனம் துடிக்கும். இப்போது “மானுடத்தைத் துப்பறிபவன்”

2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல்

இந்த நாவலின் ஐந்து பகுதிகளில் எந்தவொன்றும் ‘முடிவுற்ற’ உணர்வைத் தருவதில்லை. ஒவ்வொரு பகுதியின் முடிவும் பக்கங்களின் முடிவாகவே உள்ளது. இந்த அம்சம் நாவலின் ‘கதைத் தன்மையை’க் கேள்விக்கு உள்ளாக்குகிறது. பாத்திரங்களின் மனவார்ப்பில் தோன்றும் மாற்றங்கள் காடசிச் சித்திரிப்புகள் வழியாகத் துல்லியமாகச் சொல்லப்படுவதால் இந்தக் கதையின்மை ஒரு சிக்கலாகத் தோன்றுவதில்லை. உதாரணமாக, The part about criticsல் பென்னோ வான் ஆர்கிம்போல்டி என்ற தன்னுடைய அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ளாத ஜெர்மன் எழுத்தாளரைத் தேடும், நான்கு விமர்சகர்களுக்கு இடையேயான உறவைச் சொல்லலாம்.

கவிஞர் ரொபெர்த்தோ பொலான்யோ

என்னிடமிருந்து ஒருபோதும் போய்விடாதே.
எனது காலடிகளையும் எனது மகன் லாட்டரோவின் காலடிகளையும்
நீ கவனித்துக் கொள்
மீண்டும் ஒருமுறை எனது முதுகெலும்பின்மீது
உனது விரல் நுனிகளை உணர்வதற்கு என்னை அனுமதி

சென்சினி

இச்சிறிய எழுத்துலகம் ஆபத்தானது, அதே நேரத்தில் அபத்தமானது என்று எழுதியிருந்தார். கூடுதலாக அவர் சொன்னார், ஒருவரின் கதை ஒரே நீதிபதி முன் இருமுறை வந்தாலும் அதில் ஆபத்து குறைவுதான். ஏனென்றால், அவர்கள் வரும் கதைகளைப் பொதுவாகப் படிப்பதில்லை அல்லது மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலும் “குதிரை வீரர்கள்” கதையும், “கவலைகள் இல்லை” கதையும் வெவ்வேறு அல்ல என்பதை யார்தான் சொல்லக்கூடும், தலைப்புகளிலேயே அதன் தனித்தன்மைகள் தெளிவாக உறைந்திருக்கும்போது? ஒற்றுமைகள் உண்டு, அதிக ஒற்றுமைகள் உண்டுதான், ஆனாலும் அவை வெவ்வேறு.

கிளாரா

ரொபெர்த்தோ பொலானோ (Roberto Bolaño) தமிழில் : சிஜோ அட்லாண்டா அவள் பெரிய மார்பகங்களும், மெலிந்த கால்களும், நீலக் கண்களும் உடையவள். அவளை அப்படி நினைவுகூரத்தான் எனக்குப் பிடித்திருந்தது. ஏன் என்று தெரியாமல் அவள்மேல் பைத்தியக்காரத்தனமான காதலில் விழுந்தேன். துவக்கத்தில், அதாவது முதல் சில நாள்கள், முதல் சில “கிளாரா”

வில்லியம் பர்ன்ஸ்

ரொபெர்த்தோ பொலான்யோ (தமிழாக்கம் : ஆகாசஜன்) கலிஃபோர்னியாவில் இருக்கிற வெண்டுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், இந்தக் கதையை என் நண்பன் பாஞ்சொ மொங்கேவிடம் சொன்னான். சொனோராவில் சாண்டா தெரேசாவில் போலீஸ்காரனாய் இருக்கிற பாஞ்சொ மொங்கே, அதை என்னிடம் சொன்னான். அந்த வட அமெரிக்கன் எதற்கும் கோபப்படாதவன், எதற்கும் அலட்டிக் “வில்லியம் பர்ன்ஸ்”

தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு

ஓசையற்ற வாக்கியங்களை நினைவுகள் சன்னமாக ஒலிக்கிறது-பொலான்யோ குத்தெதிர் கோணங்கள் இது புத்தகம் வெளியான போது வந்த அறிமுக விமர்சனம்: “பொலான்யோவின் எல்லாவிதமான கிறுக்கல்களும் அச்சாகிறது. எனவே, ஜிகினா தோரணம் போன்ற இந்த 56 ஒட்டுகளை, ஒன்றாகக் கோர்த்து “வெளிறிய நீலம்” என்னும் தலைப்பில் பிரதியாக்கி இருக்கிறார்கள். 1980களின் பார்சிலோனாவில் “தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு”

ரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்

நான் நன்றாக, ஆழமாக தூங்கினேன்; கனவு கண்டிருந்தேன் என்றால், என் கனவுகளை மறந்து விடும் மனப் பக்குவமும் எனக்கிருந்தது. தாமதமாக எழுந்தேன்- இது ஒரு பழக்கமாக ஆரம்பித்திருக்கிறது-, குளித்து முடித்தபின் டிபன் சாப்பிட ராவூலின் கபேக்குப் போனேன். காத்திருக்கும் நேரத்தில், யாரோ டேபிளில் விட்டுப் போயிருந்த காலை தினசரியை “ரொபெர்த்தோ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள்”

பேரழிவின் நுகத்தடி

இறந்தவர்களின் வார்த்தைகளோடு உயிரோடிருப்பவரின் சொற்கள் ஒன்றாகக் கலக்கின்றன. தங்கள் முன்னோர்களின் மொழியை சற்றேனும் அகழ்ந்து எடுத்து கவிஞர்கள் கவிதைகளை எழுதுகிறார்கள். கசிந்தோ, கலந்தோ, அவர்களின் மொழியுடன் தன் மொழி இணைவதை அவர் இவ்வாறு சொல்கிறார் : “வண்டுகள், பூச்சிகள், கிருமிகள், களைகள் அறியா வண்ணம் நுழைந்து தங்கள் வேலையைத் தொடர்வது போல் என் மொழி அமைந்துவிடுகிறது.”

விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி

விருந்தாளி ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது.யானையை விட சிறியதுஎலியை விடப் பெரியது. முதல் அடி என் சகோதரி மீது அடுத்து என் தந்தைக்கு ஒரு உதைபின் என் தாயை தள்ளிவிட்டது.நான் வெறி கொண்டவனானேன்.  ரோவரை கிச்சு கிச்சு மூட்டியது.பூனையை பயங்காட்டியது.கழுத்துப் பட்டையை கிழித்தது.தொப்பியை முரட்டுத்தனமாய் நசுக்கியது. தலையில் தேனை மெழுகியது.குளியல் தொட்டியில் கற்களை நிரப்பியது.கோபத்தில் கத்தும்போது  காலணியையும் காலுறைகளையும் களவாடியது. அப்படித்தான் “விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி”

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 2 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

இலக்கியத் துறை எனும் போர்வையில் “அரசியல் பொருத்தப்பாட்டையே” முன்மொழிந்து கொண்டிருப்பவை எல்லாம் காலாவதியாகி புறந்தள்ளப்படும் என்றே தோன்றுகிறது. இவையெல்லாமே சிற்றலைகள்தான். மிஞ்சிப் போனால் ஐந்து வருடங்களுக்குத் தாக்குப் பிடிக்கும். இலக்கியத் துறையில் காலடி வைத்த நாளிலிருந்து பல நவீனப் பகட்டுகள் தோன்றி மறைவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாற்பது வருடங்களுக்குப் பிறகு தற்காலிகமான மேம்போக்குச் சிற்றலையை ஆழ்ந்த நீரோட்டத்திடமிருந்தும், அசலான மாற்றத்திடமிருந்தும் இனம் பிரிக்க முடிகிறது.

வெள்ளைப் புள்ளி

“நுரையீரல்களைப் பார்,” அப்பா சொன்னார். “ஆரோக்கியமான நுரையீரல்கள் நெகிழக் கூடியவை. நாம் மூச்சை இழுக்கும்போது, அவை விரியும், விடும்போது சுருங்கும். சில நோய்கள் தாக்கினால் அவை இந்த நெகிழும் குணத்தை இழந்து விடுகின்றன. அவை அளவுக்கு அதிகமாக உப்பும். இங்கே இதயம் எத்தனை குறுகித் தெரிகிறது பார். தட்டையாக, கீழே போய்விட்ட உதர விதானத் திரையைப் பார்க்கலாம். இங்கே நுரையீரல்கள் ரொம்பப் பெரிசாகவும், ரொம்பக் கருப்பாகவும் இருக்கின்றன. நான் சொன்னேனில்லையா, காற்று இங்கே சிறைப்பட்டிருக்கிறதென்று. இங்கே ரத்தத்தில் போதுமான அளவு பிராண வாயு இல்லை. இந்த நபருக்குக் காற்றடைப்பு நோய் இருக்கிறது.”

விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 1 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

ஐந்தாறு வயது குழந்தைக்கு உரித்தான வகையில், ஹார்வர்டிலோ யேலிலோ கவிதை பேராசிரியராகப் போகிறேன் என்று பதிலளித்தேன். இதில் என்ன வேடிக்கை என்றால் மூன்று வருடங்களுக்கு முன் ஒரே சமயத்தில் ஹார்வர்டில் சார்ல்ஸ் எலியட் நார்ட்டன் கவிதை பேராசிரியராகவும் யேலில் மனித கலைகளுக்கான ஸ்டெர்லிங் பேராசிரியராகவும் பணியாற்றினேன் என்பதுதான். இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் என் துறை பெருமளவில் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கிறது.

செக் நாட்டு கவிதைகள்- ஹோலுப், ப்ரிலட்ஸ்கி

அருமை மூக்கு
கால் கட்டை விரலுக்கிடையில்
திணிக்கப்பட்டிருந்தால்
உன் காலையல்லவா
நீ முகரவேண்டும்!

ஒரு பயணம்

“அவருக்குப் போன வாரம் இன்னொரு முறை ரத்த அடைப்பு வந்தது,” அவள் சொன்னாள், ஆனால் அது ஏனோ நிஜமில்லை, பொய் என்பது போலவும், ஏதோ அவனுக்கு அதிர்ச்சி கொடுத்துத் தன்னோடு பேசவைக்கவென்று அவள் அதைச் சும்மா சொல்கிறாள் என்பது போலவும் இருந்தது. ஆனாலும் அவன் பேசவில்லை; தன் சிகரெட்டை வலுவாக அவன் உறிஞ்சுவது அவளுக்குக் கேட்டது.

காற்றிலடித்துப் போகப்பட்ட பெண்

தன் செயல்களையும், சிந்தனைகளையும் தன்னாலேயே நிரப்பி இருக்கிறாள்; உள்ளீடு உள்ளதோ, கனமானதோ, அர்த்தமுள்ளதோ எதுவும் அங்கே நுழைய இடமே இல்லை.

பேத்திகள்

ரஷ்யாவின் பதினான்காவது பணக்காரனாக ஆகும் வயதில்லை ஆலியெக் வோரனோவுக்கு. முப்பத்தி ஐந்து வயதுதான் ஆகி இருந்தது. நிக்கல் கூட்டமைப்பு ஏலத்தில் விற்பனைக்கு விடப்பட்ட போது, அவன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், விலை போன அதிகாரிகள், குற்றக்கும்பல் தலைவர்கள் போன்றாரிடம் இருந்து திரட்டிய நிதியை வைத்து அதை வாங்கினான். அந்த ஏலம் நான்கரை வினாடிகள்தான் நீடித்தது. 250,100,000 டாலர்கள் கொடுத்து வாங்கினான். ஏலத்தைத் துவக்கப் பயன்படும் முதல் விலையை விட 100 டாலர்கள்தான் கூடுதலாகக் கொடுத்தான். வருடந்தோறும் பல பிலியன் டாலர்கள் வருமானமாகக் காட்டும் ஒரு நிறுவனம் எப்படி இருநூற்றைம்பது மிலியன் டாலர்களுக்கு விற்கப்பட முடியும்?

பதிலி செய்தலும் நிஜமும்

மதங்கள் கடவுளிடம் சரணடையச் சொல்வதன் காரணமே இந்த சமத்துவத்துக்கான பெருவிழைவுதான். அப்படிப்பட்ட பேரறிவு, பெருங்கருணை, பேருரு, பேராளுமையிடம்தான் அனைவரையும் ஏற்று, அனைவருடனும் ஒரே சமயம் பகிர்ந்து, அனைவருக்கும் குரல் கொடுக்க வாய்ப்பு கொடுத்து, அனைவரும் உண்டு, அனைவரையும் உண்டு, அனைவரும் ஜீரணித்து, அனைவரையும் ஜீரணித்து ஒன்றாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய பேராளுமைக்கு கால, இட நெருக்கடிகள் ஏதும் இல்லை. முப்பரிமாணம் கூட இல்லை, எப்பரிமாணமும் அதை அடைக்க முடியாத பேராளுமை என்று கடவுளை உருவகித்த காரணமும் அதுவே ஆக இருக்க முடியும்.

ஸீபால்டை வாசித்தல் அல்லது தொடர்படுத்தல்களின் கிறுகிறுப்பு

“பெலிண்டாவின் உலகப் பயணம்” என்ற கதையில் சிறுமியொருவள் தன் பொம்மையைத் தொலைத்து விடுகிறாள். அது தன் பொம்மைத் தோழனால் உலகப் பயணம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருக்கிறது என்று அச்சிறுமியை அவள் குடும்ப நண்பரொருவர் (ஹெர் காஃப்கா) நம்ப வைக்கிறார். அதன்பின் உலகின் வெவ்வேறு இடங்களிலிருந்து அப்பொம்மை எழுதுவது போல் காஃப்கா சிறுமிக்குக் கடிதம் எழுதுகிறார். மீண்டும் இலக்கியச் செயல்பாடு ஒரு தனிநபர் நெருக்கடிக்கான தீர்வாக முன்வைக்கப் படுகிறது.

பிரதிபலிக்கும் வளையங்கள்-ஸீபால்டின் ‘The Rings of Saturn’ குறித்து சில எண்ணங்கள்

ஸீபால்டின் “பிரதி மேய்தல்கள்” இயல்பாகவே சற்று முரண்பாடானவை. ஒரு வகையில், அவை நிர்ணயிக்கப்பட்ட தொடக்கத்திலிருந்து முன்னதாகவே அறியப்பட்ட முடிவிற்கு நேர்க்கோட்டில் விரையும் வழமையான கதையாடலிலிருந்து மாறுபடுவதற்கான முயற்சிகள். ஆனால் இலக்கிய, வரலாற்று நாயகர்களின் நினைவுகள் மற்றும் கதைகளிலிருந்து காலம்காலமாக வரலாற்றிலும் இயற்கையிலும் “மீண்டும் மீண்டும்” பரவலாக நிகழும் அழிவின் “நிரந்தரத்தையே” இம்மேய்தல்களில் அகழ்ந்தெடுக்கிறார். அந்நிரந்தரமோ அவரது அக/புற உலகு மேய்தல்களை அர்த்தமற்றதாக்கி விடுகிறது.

வேடன்

கிறுக்குத்தனம் அடங்க மறுத்துத் தன் தலையை மீண்டும் மீண்டும் உயர்த்தும்போதெல்லாம் அக்கணமே அதை இரக்கமில்லாமல் அடக்குபவர்கள் ஸீபால்டின் பாத்திரங்கள். வாழ்வுடன் உறவு பூணுதல் என்ற விஷயத்தை அவர்கள் மிகவும் எச்சரிக்கையாய்த் தவிர்க்கிறார்கள் என்பதால் அவர்கள் ஒரு நோய்மையாய், ஒரு சுயவாதையாய், சோக உணர்வுடன் இணக்கம் பாராட்டுகிறார்கள், அது அவர்களை ஆட்கொள்வதற்கு எளிதில் இணங்கி விடுகிறார்கள். ஸீபால்டின் படைப்பில் தான்தோன்றித்தனமான கணப்பித்துக்கும் இருண்மையான யதார்த்தத்துக்கும் இடையில் ஓர் ஊசலாட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது.

டபில்யூ.ஜீ. ஸீபால்ட்: ஒரு சிறப்புக் குறிப்பு

ஸீபால்ட் எழுதத் தொடங்கியபோது அவருக்கு வயது நாற்பத்தி ஐந்து. “என் வேலை கடினமாகவும் என் விழிப்பு நேரம் அனைத்தையும் கோருவதாகவும் அமைந்திருந்ததால் எழுதுவதற்கான நேரம் எனக்கு கிடைக்கவே இல்லை.” ஒரு கருப்பொருளிலிருந்து மற்றொன்றிற்கு ஒழுங்குமுறையின்றி தாவுவது போல் தோற்றம் தரும் அவர் படைப்புகளின் அனிச்சையான தொடர்புபடுத்தல்கள் மனநலச் சிகிச்சையின் வழிமுறைகளை நினைவுறுத்தியதால் அவர் அம்மாதிரியான சிகிச்சைகளை எப்போதாவது முயற்சித்ததுண்டா என்று கேட்டேன். “அதிலெல்லாம் ஈடுபடுவதற்கான நேரம் அமையவில்லை. மற்றவர்களின் மனநலச் சிகிச்சை வரலாறுகளைப் படிப்பதுதான் எனக்கு சிகிச்சையாக இருந்திருக்கிறது.”

ஆவி வேட்டைக்காரர்

நான் இன்னும் ஜெர்மன் மொழியில்தான் எழுதுகிறேன், ஆமாம். வெகு சில பேர்களே இரு மொழிகளில் எழுதுகிறார்கள், பல மொழிகளில் திறமை படைத்திருந்த நபொகாவ் போன்ற ஒருவர் கூடத்தான். ரஷ்ய மொழியை விட்டு விட்டு இங்கிலிஷுக்கு நகர்ந்த நபொகாவ் இங்கிலிஷோடு தங்கி விட்டார். மொழி பெயர்ப்புகளுக்கு ரஷ்யனைப் பயன்படுத்தினார் என்ற போதும், அந்த மொழி பெயர்ப்பைச் செய்த பிறகு அந்த மொழியில் அவர் எழுதவில்லை, எனக்குத் தெரிந்த வரையில். நபொகாவ் செய்ததைப் போல வேற்று மொழிக்கு நகர்வது மிக, மிக ஆபத்து நிறைந்த வேலை என்று நான் சொல்வேன், மிகத் துன்பமானதும் கூட. இது வரை அந்த முடிவை எடுப்பதை நான் தவிர்க்க முயன்றிருக்கிறேன்.

ஆஸ்டர்லிட்ஸ் நாவலை முன்வைத்து

இக்கட்டுரை இதழ்-198 இலிருந்து இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது.
…வாசகர்களும் விமர்சகளும் ஸேபால்டை தூக்கிப் பிடித்துக் கொண்டாடுவது இருக்கட்டும். நான் ஏன் இன்று அவரை ரசிக்கிறேன்? அவரின் கதை எவ்வாறு என்னோடு மறக்கமுடியாதவாறு உறைக்கவைக்குமாறு உரையாடுகிறது?….