சீனாவின் முன்னாள் அதிபர் தெங்-சியோ-பிங், “நடுவண் கிழக்கு நாடுகளிடம் எண்ணெய், சீனாவிடம் அரிதான கனிமங்கள் – இவை உலக ஆதிக்கத்திற்கு முக்கியம்,” என 1987ஆம் ஆண்டிலேயே வலியுறுத்தியுள்ளார். மற்ற நாடுகளின் – முக்கியமாக அமெரிக்காவின் பலம் – அதன் பலவீனம் – அது எப்படி தனக்குள் இரகசியத் தகவல் பரிமாற்றம் செய்துவருகிறது என்பதை உளவறியச் சீனா விரும்புகிறது. “எதிரியின் பலம்-பலவீனத்தை அறிவதே ஒரு படைத்தலைவனின் தலையாய கடமை; அப்படி அறிபவர்தான் எதிரியை வெற்றிகொள்கிறார்,” என்று ‘போர்க்கலை’ எழுதியுள்ள சீனப் பேரறிஞர் சுன்-சூவின் அறிவுரையை அது பின்பற்றி…
Category: உலக அரசியல்
மாற்றாரை மாற்றழிக்க
ஓனிடா டி வியின் விளம்பர வாசகம் ‘அக்கம் பக்கத்தோர் பொறாமை கொள்வார்கள்; உடமையாளருக்கோ மகிழ்ச்சி’ நம் அருமை நண்பன் சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் நமக்குத் தொல்லை தந்து கொண்டேயிருக்கிறது. அதனுடைய வேவுக் கப்பல் இந்தியப்பெருங்கடலில், நமது கால் சுண்டு விரலான ஸ்ரீலங்காவை கடன்களாலும், வணிகத்தாலும் கட்டுப்படுத்தி, நயவஞ்சகமாக அதன் “மாற்றாரை மாற்றழிக்க”
ஆப்கானிஸ்தானின் தொடரும் துயரங்கள்
இரண்டாம் உலகப் போரைத் தவிர்த்து அமெரிக்கா நடத்திய அத்தனை போர்களும் தோல்வியிலேயே முடிவடைந்திருக்கின்றன. அது வடகொரியாவாக இருந்தாலும் சரி அல்லது வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான் என அத்தனை போர்களிலும் அமெரிக்கா தோல்வியுடனேயே திரும்பியிருக்கிறது. வடகொரியாவில் போரை நடத்திக் கொண்டிருந்த அமெரிக்க ஜெனரல் வடகொரியர்களால் பிடிக்கப்பட்டு சிறைக்கைதியாக இரண்டு வருடம் இருந்த அவமானமும் அதில் அடக்கம்….மற்றபடி அமெரிக்கா சென்றவிடமெல்லாம் துரதிருஷ்டவசமாகத் தோல்வியைத் தழுவியிருக்கிறது.
பரோபகாரம் – நாட்டுக்கு நாடு
தனி குடிமக்கள், நிறுவனங்கள், மஹா கோடீஸ்வரர்கள் போன்றவர்களை எல்லாம் தாண்டி, ஒரு நாடு இன்னொரு நாட்டிற்கு உதவுவது உருப்படியான செயல்முறையா? அந்த உதவிகளால் நாடுகள் பெரிதாக முன்னேறுகின்றனவா அல்லது அந்த உதவும் கரங்களையே நம்பி உருப்படாமல் போகின்றனவா என்றொரு பூதாகாரமான கேள்வி பரோபகார திட்டங்களை அலசும் வட்டங்களில் உலாவிக்கொண்டே இருக்கும்.
பலம் மிக்க குற்றக் கூட்டம்- இத்தாலியில்
அவர்கள் கொலை செய்தார்கள், அதிகாரிகளை நேரே பகைப்பதில்லை. ஒத்துப் போகும் பொதுப் புள்ளியில் அவர்கள் நிறுவனத்திடமும் பொது மக்களிடமும் உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள். (அஸ்ஸாமின் தேயிலைத் தோட்டங்களில் தொழில் முனையும் பெரு நிறுவனங்கள் வன்முறையாளர்களுக்குக் கப்பம் செலுத்தியதும் முன்னர் ஜம்மு- காஷ்மீரத்தில் செயல்பட்ட வங்கிகள் ‘வாடிக்கையாளரை அறிவோம்’ மற்றும் ‘பெருந்தொகை வரவை ரிசர்வ் வங்கிக்குத் தெரியப்படுத்தக் கூடாது’ என்பது போன்ற மிரட்டல்களை எதிர் கொண்டதையும் குத்து மதிப்பாக நாம் அறிவோம்.) இப்படித்தான் ஊட்டம் பெறுகிறார்கள். இதாலியின் பொருளாதாரத்திலும், அதன் அரசியலிலும் இவர்கள் ஆற்றல் மிக்க சக்தி.
இடிபாடுகளைக் களைதல்- லெபனானின் எதிர்காலம்
1998-ல் புதிய கல்விப் பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும், வரலாறு என்னவோ 1943-ல் நின்றுவிட்டது. மாற்றங்களில், அராபிய இலக்கியங்களின் இடத்தை மோசமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உலக இலக்கியங்கள் எடுத்துக்கொண்டன; புதிய தத்துவப் புத்தகம், ‘செய்ய வேண்டும்’ என்ற வார்த்தகளோடு (ஒரு முழு அத்தியாயம் புனிதப்படுத்தும் ஆசைகளைக் கைக்கொள்ள அறிவுறுத்தி) மேலும் குடிமைப் பண்புகள் என்று ஒரு புதுப் பாடத் திட்டமும் இடம் பெற்றன. வரலாறு, உள்நாட்டுப் போர்களுக்கு முந்தைய காலகட்டத்துடன் நின்றதென்றால், மகிழ்வான எதிர்காலத்திற்குக் குதித்தோடியது குடிமைக் கல்வி.
சுவீடன் ஒரு சோஷலிச நாடா?
இதனால் நாட்டின் பொருளாதாரம் முன்னேறியது. செல்வமும் பெருகியது. இதைச் சீரழிக்காமல் விநியோகிப்பதிலும் அக்கறையுள்ளவர்களாக இருந்ததால், நாட்டின் செல்வம் மேலும் கூடியது. உள்நாட்டு வர்த்தகங்களும், மற்றைய நாடுகளோடு மோத வேண்டியிருந்ததால், தக்க சீரமைப்புகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் ஆர்வம் காட்டியதால், தோளோடு தோள் நின்றன. தொழிற்சங்கங்களும், விவசாயம், கப்பல் கட்டுதல், துணி நெய்தல் போன்ற வெள்ளை யானைகளை மூட்டை கட்ட அனுமதித்தன. மிகவும் ஏழை நாடாயிருந்த சுவீடன், கிரிப்பேன்ஸ்டெட் ஏற்படுத்திய இம்மாற்றங்களால், அவர் அரசாங்கத்திலிருந்து விலகிய நூறு வருடங்களுக்குப்பின் மிகப் பணக்கார நாடாகவும், சுதந்திர நாடாகவும் மாறியது.
இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்
காசிமெ சுலைமானி, ஈரானில் கொண்டாடப்பட்ட மூத்த ராணுவத் தளபதி. அந்நாட்டின் பெருந்தலைவர் அயதுல்லா அலி ஹோமேய்னிக்கு அடுத்த நிலையில் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டு மத்திய கிழக்கிலும் தனிப்பெரும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டவர். அமெரிக்காவிற்கு எதிராக நடக்கும் போரில் ஈடுபட்டு வந்த ஈரானின் ராணுவப் பிரிவின் அங்கமாக விளங்கும் குத்ஸ் “இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்”
அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்
அதிபர் பதவியிலிருக்கும் ஒருவர் தன்னுடைய பதவிக்கோ நாட்டு மக்களுக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, லஞ்சம், ஊழல், பெருங்குற்றங்கள் அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் குற்றச்சாட்டுக்களையும் அதன் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைப் பிரதிநிதிகளுக்கு உண்டு. செனட் விசாரணையும் முடிந்து குற்றங்கள் நிரூபணம் ஆகும் வரை அதிபர் பதவியிலிருப்பவர் ஆட்சியில் தொடர முடியும்.
கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்
உக்ரெயின் நாட்டு அதிபரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பேசிக் கொண்டார்கள். அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்தார். அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் “கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்”
சீனாவின் அடாவடிகளும் இந்தியாவின் சுணங்கலும் (குளக்கரை)
இந்திய அதிகாரிகள் இந்தியாவின் பெருங்கொள்ளையரைக் கைது செய்ய உதவுமாறு இண்டர்போலை அணுகிய போது இண்டர்போல் அந்த கோரிக்கைகளை அலசிப் பார்த்து அவற்றில் குறை உள்ளது என்றும் தன் அதிகாரிகளால் அந்தக் கோரிக்கைகளை ஏற்கவியலாது என்றும் தெரிவித்ததாகச் சில மாதங்கள் முன்பு செய்திகள் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். சில கொள்ளையர்கள் இந்திய அதிகாரிகள், அரசியலாளர்களின் உதவியால் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இன்று வரை எந்தக் குற்றவாளியையும் இந்தியா திருப்பிக் கொண்டு வந்ததில்லை.
சீனாவின் செயல்களுக்கும் இந்தியாவின் கையறு நிலைக்கும் என்னவொரு வேறுபாடு?
குடிபுகல் சிக்கல்கள் – சாத்தியமான தீர்வுகள் (குடிபுகல் – பாகம் 1)
குறிப்பிட்ட ஒரு தேசம் அல்லது சமூகத்தில் உள்ள ஒரு சமயக் குழு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அதனுடன் போட்டியிடும் பிற சமூகக் குழுக்கள் தம்மை அச்சுறுத்துவதாக அவை எளிதில் கருதக்கூடும். அப்படிப்பட்ட அச்சங்கள் நியாயமாய் இருப்பதற்கான போதிய வரலாற்றுச் சான்றுகள் கூட இருக்கவே செய்கின்றன. அமெரிக்காவில் கணிசமான அளவில் வாழும் பெரும்பான்மை எண்ணிக்கை கொண்ட கிறித்துவர்கள் தம் உரிமைகளும் விழுமியங்களும் எப்போதும் ஆபத்தில் இருப்பதாய் உணர்கிறார்கள். நூற்று இருபது லட்சம் பேர் கொண்ட இந்தியாவில் எண்பது சதவிகிதத்தினர் இந்துக்கள். ஆனால் அவர்களில் பலர் தம் சமயம் ஆபத்தில் இருப்பதாய் நினைப்பதோடு எதிர்த்து நின்றுதான் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாய் நம்புகிறார்கள். இது போலவே உலகில் வேறு பகுதிகளில் உள்ள யூதர்கள், முஸ்லிம்கள், மற்றும் பிறர், தம் தேசத்தில் பெரும்பான்மையினராய் இருந்தாலும் பிறரது அச்சுறுத்தலை உணர்கிறார்கள்.
பாசிசத்தை நிறுத்த முடியாமல் போவது எப்போது?
ஹிட்லரின் முக்கியத்துவத்தை துவக்கத்திலேயே கணக்கில் கொள்ளத் தவறிய தன்னையும் தன் சமகால அறிவுஜீவிகளையும் ஸ்வைக் தன் சுயசரிதையில் மன்னிக்கவில்லை. “எழுத்தாளர்களில் சிலர் ஹிட்லரின் புத்தகத்தை சிரத்தையெடுத்து வாசித்திருந்தாலும் அவர்கள் அவரது செயல்திட்டத்தை எதிர்கொள்வதற்கு மாறாய் அதன் உயிரற்ற உரைநடையின் பகட்டைக் கேலி செய்தனர்,” என்று அவர் எழுதினர். அவர்கள் அவரையும் பொருட்படுத்தவில்லை, அவர் சொல்லின் நேர்ப்பொருளையும் எதிர்கொள்ளவில்லை. 1930களிலும்கூட, “முக்கியமான ஜனநாயக செய்தித்தாள்கள், தம் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு மாறாய், ஒவ்வொரு நாளும் அந்த இயக்கம்… கணப்பொழுதில் அழிந்து விடுவது தவிர்க்க முடியாதது,” என்று உறுதியளித்தன. தம் ரசனை மற்றும் உயர்கல்வி அளித்த ஆணவத்தால், அறிவுஜீவி வர்க்கங்கள் “கண்ணுக்குத் தெரியாத சூத்ரதாரிகள்” தயவால் – தன்னலமிக்க குழுக்களும், தனி மனிதர்களும், தனித்து நிற்கும் கவர்ச்சி மிகுந்த இந்தத் தலைமையைத் தம் விருப்பத்துக்குப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டிருந்ததால் – கல்வியறிவற்ற இந்த “சாராயக்கடை கலவரக்காரன்”, அதற்குள் மிகப்பெரிய அளவில் ஆதரவு பெற்றுவிட்டதை சீரணித்துக் கொள்ள முடியாதவர்களாய் இருந்தார்கள்.
குளக்கரை
இந்தக் கைதிகளைப் பயன்படுத்தி பல தொழில்கள் நடைபெறுகின்றன, அவற்றிலிருந்து லாபமும் ஈட்டப்படுகிறது. இந்தச் சிறைகளில் அடைப்பட்டுக்கிடப்பவர்கள், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருக்கின்றனர். இதுவும் அரசு பாரபட்சமாக ஒரு இனத்தவர்களுக்குக் கொடுமைகள் இழைத்து, அவர்கள் மூலம் லாபம் ஈட்டும் வழிமுறையாக உள்ளது. இப்படிக் கறுப்பினத்தவர்களுக்கு அநீதி இழைப்பதுபோல் செயல்படும் அரசு, அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் தனிமைப்படுத்தவே விழைகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.
தீமை, சட்டங்களுக்குள்
தீமை என்றால் என்னவென்பதும் அது எப்படி இருக்கும் என்பதும் நமக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். போதுமான முன்னுதாரணங்களை வரலாறு, அண்மைய வரலாறும் இன்றைய வரலாறும்கூட, அளிக்கிறது. ஆனால் இன்று நாம் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சித்தரிக்க, அதன் மீது மீண்டும் ஒரு முறை நாம் நம் பார்வையைச் செலுத்துவது பயனுள்ளதாய் இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது- பார்ப்பது என்ற சொல்லை உள்ளபடியே அதன் நேரடிப் பொருளில் இங்கு பயன்படுத்துகிறேன்.
தீமை என்பது குறித்த சிந்தனை தொன்மையானது, சமயங்கள் எல்லாவற்றின் முதல் சில அடிப்படை விதிகளில் தீமையை எவ்வாறு எதிர்ப்பது என்பது அடக்கம்.
இங்கு நாம் ரான் ஹவீவ் எடுத்துள்ள இந்த ஒளிப்படத்தைப் பார்க்கலாம்: நாம் எதைக் காண்கிறோம்?
மகரந்தம்
டாலர் இருந்தாலே போதும். 130 நாடுகளில் விசா இல்லாமல் பயணம் செய்ய உதவும் கடவுச்சீட்டைப் (பாஸ்போர்ட்) பெறலாம். செயிண்ட் கிட்ஸ் போன்ற கரிபியன் தீவுகள் தம் நாட்டின் கடவுச் சீட்டுகளை விற்கின்றன. மால்டா, மாண்டெநெக்ரோ போன்ற யூரோப்பியச் சிறு நகர அரசுகளும் இதில் இறங்கியுள்ளன. அமெரிக்காவே அரை மிலியன் டாலர் முதலீட்டுக்கு குடியிருக்க வழி செய்கிறதாம். இராக்கியர்கள், லிபியர்கள், சீனர்கள், மாஸ்கோவியர்கள் இன்னும் பற்பல நாடுகளின் மக்களுக்கு உதவும் மசை. அமெரிக்கர்கள் கூடப் பல நாடுகளில் நுழைய இந்த மாற்று கடவுச் சீட்டுகளைப் பயன்படுத்துகிறார்களாம். குஷ்னரும் சீன பிலியனேர்களும் இந்தத் திட்டத்தைத்தான்…
சமூக ஊடகங்களும் அநாதைகளாக்கும் ஆர்ப்பாட்டங்களும்
2010ஆம் ஆண்டு. துனிசியாவில் மொகமது பவசிசி என்ற சாலை வியாபாரி கடன் வாங்கிக் கொள்முதல் செய்த பொருட்களுடன், வழக்கமாய் வியாபாரம் செய்யும் இடத்துக்கு வந்தார். காவல்துறைக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் லஞ்சம் கொடுக்க அன்று அவரிடம் பணமிருக்கவில்லை. இதுவே அவரது விதியைத் தீர்மானித்தது. அவரது கைவண்டியில் இருந்த சாமான்கள் காவல் துறையினரால் வீதியில் வீசப்பட்டன, அவரது எடைபார்க்கும் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. அவர் தாக்கப்பட்டார், காறித் துப்பி அவமானப்படுத்தப்பட்டார். அதன் பின் தன் எடை பார்க்கும் கருவியை திரும்பப் பெற அவர் மேற்கொண்ட முயற்சிகள் பலனிக்கவில்லை. அரசு அலுவலர்கள் யாரும் அவரைப் பார்க்கவோ, அவரது புகாருக்கு செவி சாய்க்கவோ தயாராக இல்லை. இதனால் மனமொடிந்த மொகமது அரசு அலுவலகம் முன், சாலையில் தன் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டு இறந்தார். அரபிய வசந்தத்தின் முதல் பொறி அது.
மகரந்தம்
தபால் ஓட்டுக்கள் என்ற உடன் ஓட்டுக்கள் எண்ணும் நாளில் முதலில் எண்ணப்படுபவை அவை என்பதுதான் நம் நினைவுக்கு வரும். அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகணத்தில் இப்படித் தபால் மூலம் ஓட்டளிப்போர் வீடுகளில்த், அரசியல் பேசத் தடைவிதிக்கும் சட்டமுன்வரைவு ஒன்று பிரச்சனையைக் கிளப்பியுள்ளது. டெக்ஸாஸ் செனேட்டில் மெஜாரிட்டி மூலம் நிறைவேற்றபட்ட இந்த முன்வரைவு தற்போது டெக்ஸாஸ் பிரதிநிதிகளின் சபைக்குச் சென்றுள்ளது.
எண்பதுகளின் சீனா
ஆயினும் இந்தப் புரட்சியை அடக்கியது அதன் உள்ளிருந்த முரண்களல்ல, முரட்டுத்தனமான ராணுவ நடவடிக்கைதான். சீனாவின் சந்தைச் சீர்திருத்தங்களையும், அதிகரித்து வரும் பன்னாட்டு நல்லுறவுகளையும் பாதிப்பதற்குப் பதிலாக, இந்த கொடுமையான வன்முறை, அதைத் தூண்டிவிட்டதில் கட்சி ஆற்றிய பங்கிற்கு அங்கீகாரத்தை அளித்தது. சீனாவின் வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரத்திற்கு எதிராக இந்தப் போராட்டம் பார்க்கப்பட்டது. நிலைத்தன்மை எல்லாவற்றிலும் உயர்ந்தது என்று டெங் குறிப்பிட்டிருந்தார்.
இறுதி வரை உறுதி குலையாத லியு ஷியாவ்போ
சீனாவில் சட்டபூர்வமாய் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்தக் கோரி போராடிய லி ஷியாபோ சிறைக்காவலில் மரித்தார். அவர் புதைக்கப்பட்ட இடம் ஒரு நினைவகமாய் மாறலாம் என்று அஞ்சி சீன அரசு அவரது உடலை எரித்து அதன் சாம்பலைக் கடலில் வீசியது- இத்தனைக்கும் லி ஷியாபோ சீன மக்களில் வேறு சிலருக்கே அறிமுகமானவர். அவரது மரணத்தைத் தொடர்ந்து நியூ யார்க்கர் இதழில் எவென் ஆஸ்நோஸ் எழுதியுள்ள அஞ்சலியின் தமிழாக்கம் அளிக்கப்படுகிறது.
குளக்கரை
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடகத்தில் அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது.
குளக்கரை
உலகுக்கு அற போதனை செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடையேதும் இல்லையாம். 13, 14 வயதினர் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவும் சில நேரம் 14 வயதுப் பெண்கள் அவர்கள் வயதைப் போல இரட்டை மடங்கு மூத்த ஆண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்களாம். அதோடு முடிந்ததா கதை, ஒரு (வயதால் மூத்த) ஆண், சிறுமியை வன்புணர்வு செய்து அவள் கர்ப்பமானால், அவளை அந்த ஆண் திருமணம் செய்து கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம். இதைப் பற்றிப் பலமான விவாதங்கள் சட்ட சபைகளில் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன. கிருஸ்தவம் இந்தியாவில் மேலோங்கி வரும் இந்நாளில் இந்து சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சிக்க அவர்களுக்குப் பிரச்சாரத்துக்கு நிதி உதவியைக் கொட்டும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று. இப்படி ஒரு மாநிலமான டெக்சாஸில் மட்டும் கடந்த 14 வருடங்களில் 40,000 சிறு பிராயத்தினர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தணிக்கைமுறை எப்படி வேலை செய்கிறது
எந்த எதிர்ப்பும் இல்லாமல் தம்மைத் தாமே தணிக்கை செய்து கொள்பவர்கள் பல வகைப்பட்ட அறச்சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்கள் எப்போதுமே எதற்கும் பலியானதில்லை. அவ்வப்போது கண்ணீரைக் துடைத்துக் கொள்வது போல் நாடகமாடினாலும் எப்போதும் பலியாகவும் மாட்டார்கள். அவர்கள் தம் அடிமைத்தனத்தை ஒவ்வொரு முறை வெளிப்படுத்தும்போதும் சர்வாதிகாரிகளின் இதயத்தைக் குளிர்விக்கிறார்கள். எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீமை செய்கிறார்கள். முதுகெலும்பு இல்லாமல் நடந்து கொள்பவர்களின் நிலைப்பாடு காலப்போக்கில் மக்களிடையே பரவுகிறது. இதுவே நம் சமூகம் அற வீழ்ச்சி அடையவும் அடிப்படை காரணமாகிறது.
நாம் ஏன் போரிடுகிறோம்
போரால் உருக்குலைந்த சிரியாவின் அலெப்போ நகரம் “போர்கள் அதீதமான அளவில் செய்யப்படுகின்ற மதுபானக்கடைச் சண்டைகள் அல்ல’ என்று எழுதுகிறார் பார்பரா ஏரென்ரிக். ஃபாரின் அஃபைர்ஸ் மாகஸீன் என்ற இதழில், ஃப்ரான்ஸிஸ் புகுயாமா போர்களுக்கு ஆண்களே முக்கியக் காரணம் என்றும் “ஆக்கிரமிப்பு, வன்முறை, போர், சமூக அடுக்குகளில் ஆதிக்கம் செலுத்துவதற்கான “நாம் ஏன் போரிடுகிறோம்”
கரிக்கும் பாதையின் இனிக்கும் ஆரஞ்சுகள்
தடைகளுக்கு ஆதரவாகப் பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள், கடினமான சூழலில் தீர்வுகளைக் கண்டெடுக்கும் கட்டாயத்தால்தான் பாலெஸ்டீனிய சினிமா இவ்வளவு நன்றாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். அனைத்துமே கடினமாக இருப்பதால் என்ன செய்கிறோம் ஏன் செய்கிறோம் என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது. இக்கடினங்களை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை, ஏனெனில் இரண்டே வாரங்களில் ஐம்பது வயதாகியது போல் களைத்து விடுகிறது. இது இரானியச் சினிமா போலதான், சற்று வித்தியாசமான விதத்தில். அங்கே சென்சார் தடைகளை மீற மாற்றுவழிகள் தேவைப்படுகின்றன. அவ்வழிகளைப் பயன்படுத்த அவர்கள் இன்னமும் நுண்மையாக கற்பனை செய்ய வேண்டியிருக்கிறது. அதிகாரிகளை வெல்ல எப்போதுமே அவர்கள் ஜாக்கிரதையாகவும் சாமர்த்தியமாகவும் இருக்க வேண்டியிருக்கிறது. பாலெஸ்டீனிலும் இது மாதிரியான ஒரு…
திபெத் எப்படி நசுக்கப்படுகிறது- தலாய் லாமாவின் வாழ்நாளிலேயே
திபெத்தில் எதிர்ப்பாளர்களை வெளி உலகில் அர்த்த புஷ்டியோடு ஆதரிக்கும் ஒரு குரலாக ஓஸரின் குரல் இருக்கிறது. அதே போல, தனக்கு மிக்க ஆபத்து வரும் என்ற போதும், சீனாவின் ஒரே நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான லியு ஷியாஓபோ வை சிலாகித்துப் பேசி இருக்கிறார். ஒருக்கால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார அடுக்கில் இவருக்கு இருக்கும் யாரோ சில சக்தி வாய்ந்த ஆதரவாளர்களால்தான் இவர் சிறையில் அடைக்கப்படாமல் தப்பி இருக்கிறாரோ என்னவோ.
இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?
பொருளாதார வளர்ச்சி என்றால் மண்டை காய வைக்கும் கணிதமும் பொருளியல் அளவாக்கங்களும் கொண்டு விளக்குவார்கள். இவர் சரித்திரமும் சேர்த்துக் கொண்டு சீனாவின் 19ஆம் நூற்றாண்டின் பட்டு ஏற்றுமதியையும் 20ஆம் நூற்றாண்டின் வங்கி வளர்ச்சியையும் ஆராய்கிறார்: தொடர்புள்ள கட்டுரை: What would count as an explanation of the “இவ்வளவு பெரிய சீனா எப்படி ஒரே நாடாக இருக்கிறது?”
ட்ரம்பியம் ஆளத் துவங்குகிறது
பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்படுகிறதா என்று தனக்குத் தெரியாது ஆனால் அதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அதன் விளைவுகள் தீவிரமாகவே இருக்க வாய்ப்பிருப்பதால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னவர், பருவநிலை மாற்றம் குறித்த தவறான கருத்துக்களை எக்ஸான் மொபில் பரப்புவதாக டிம் கெயின் கேட்ட கேள்விக்குப்பதிலளிக்க முடியாமல் தடுமாறவும் செய்தார்!
உம்பர்த்தோ எக்கோ பேட்டி
தி பிராக் சிமத்தேரி புத்தகத்தை 2010ல் உம்பர்த்தோ எக்கோ ஆங்கிலத்தில் வெளியிடுகிறார். அந்தப் புத்தகம் மதவெறி, பொல்லாங்கு சொல்லுதல், செமித்திக் இனவெறுப்பு., ஐயவுணர்வு, யூதப்பகைமை, பொய்யாவணம் புனைதல் போன்ற விஷயங்களை ஐரோப்பியச் சூழலில் இத்தாலியில் நடந்த அரசியல் விஷயங்களைக் கொண்டு புனையப்பட்ட நாவல். அது குறித்த பேட்டி:
மகரந்தம்
2016 என்பது உலகம் பூராவுமே கடும் வெப்பம் நிறைந்த வருடமாக இருந்ததாக உலக தட்ப வெப்ப மானிகளைக் கவனிக்கும் அமைப்புகள் சொல்கின்றன. அமெரிக்காவில் பொதுவாக மேற்குக்கரை மாநிலங்களில் சிலவற்றில் நல்ல உஷ்ணம் உள்ள இடங்கள் நிறைய உண்டு. கலிஃபோர்னியா என்னும் மாநிலம் கடந்த சில வருடங்களாக மழை இல்லாது, குளிர் காலத்தில் உயர மலைகளில் பனியும் பொழியாததால் நீர்ப்பஞ்சத்தில் சிக்கி இருந்தது. அதுவும் தென் கலிஃபோர்னியா பகுதிகள் பாலைநிலங்களை விளை நிலங்களாகவும் வசிப்பிடங்களாகவும் ஆக்கிக் கட்டப்பட்ட பகுதிகள். இந்த இடங்களில் வெப்பமும் கூடுதலாக இருந்து, தண்ணீர்ப்பஞ்சமும் இருந்தால் எப்படி இருந்திருக்கும்? ஆனால் 2016 இன் இறுதியில் கலிஃபோர்னியாவில் நல்ல மழை. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில அணைகள் உடைப்பேடுத்துப் பெரும் நிலப்பகுதிகள் ஆபத்தில் சிக்கும் என்றெல்லாம் பயப்படும் அளவு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த நல்ல திருப்பம் அதிகம் நாள் தாக்குப் பிடிக்காது, மறுபடி கோடை வந்து விடும். கடும் வெப்பம் தாக்கும்
குளக்கரை
எப்படி செஞ்சீனாவின் எழுச்சியில் உலகம் தாய்வானை அலட்சியம் செய்வதோடு, அந்தத் தீவுகள் ஒரு நாடாக இருப்பது கூட சாத்தியம் இல்லை என்று கருதவும் துவங்கி இருக்கிறது என்று வருத்தப்படுகிறார். தாய்வானின் மீது பற்பல நாட்டினர் தொடுத்த தாக்குதல்கள், படையெடுப்புகள் எப்படி அந்த வரலாற்றை மறுபடி மறுபடி அழித்து எழுதின என்றும் சுட்டுகிறார். குறுந்தேசியம், பெருந்தேசியம், பன்னாட்டியம், உலக ஏகாதிபத்தியம் ஆகியனவற்றின் இழுபறிப் போர்களில் சிக்கி மடிபவர் சாதாரணர் என்பதையும் அங்கீகரிக்கிறார். இவரது கட்டுரைக்கு ஒரு மாற்றாக வாசகர்கள் எழுதிய பதில்கள் அமைகின்றன. அவற்றில் இருவர் மிகச் சரியாகவே தாய்வானியர் என்று இன்று கருதப்படுவோரே அத்தீவுகளில் நெடுங்காலமாக வசித்து வந்த பழங்குடியினரை அழித்து ஒடுக்கித்தான் ஆட்சி செய்யத் துவங்கினர், அம்மக்களின் விடுவிப்பையும், அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கும் உரிமைகள் கொடுப்பதையும் கருதிப் பேசாத தாய்வானிய வரலாற்று விவரிப்பு முழுமை பெறாதது என்று சுட்டுகிறார்கள்.
சர்வாதிகாரம் வேரூன்றும்போது
ஒரு தேசத்தின் வாழ்வில், குறிப்பாக எப்போது, சர்வாதிகாரம் வேர் கொள்கிறது? அது அரிதாகவே கணப்போதில் நிகழ்கிறது; அந்திப் பொழுதைப் போல் அது வந்தடைகிறது, துவக்கத்தில், கண்கள் பழகிக் கொள்கின்றன. சுயமரியாதைக்கான நாட்டம் ஷ்யு ஹொங்சியை அரசியலுக்கு இழுத்தது. இரண்டாம் உலக யுத்த கால ஷாங்ஹாயில் ஏழ்மைக்குள் சரிந்து கொண்டிருந்த மத்திய வர்க்க குடும்பத்தில் ஒருவராய் வளர்ந்த ஷ்யு ஹொங்சி, ஜப்பானிய ஆக்கிரமிப்பையும் அதைத் தவிர்க்கத் தவறிய சீன…
கோட்பாட்டு மோதல்
தீவிரவாதத்தினால் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுதல் நிலவுகிறது. தொழில்நுட்ப மாற்றங்களினால் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கின்றனர். ஓரிடத்தில் இருந்து மற்றொரு பிரதேசத்திற்கு வரலாறு காணாத அளவிற்கு மக்கள் குடிபெயர்கின்றனர். இது இப்போது அல்ல. 1914ஆம் வருடம். உலகப் போர் மூள்கிறது. பொருளாதார சித்தாந்தங்களை எல்லோரும் குறைகூற ஆரம்பிக்கின்றனர். அரசாங்கத்திற்கு முழு அதிகாரமும் “கோட்பாட்டு மோதல்”
ஆடு பாம்பே! – அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
அதிபர் தன்னிச்சையாகவா எல்லா முடிவையும் எடுப்பார், அவருக்கு தகுந்த ஆலோசனை சொல்லி வழிநடத்தும் வட்டம் இருக்காதா என கேட்கும் நல்லவர்களும் இருக்கிறார்கள். ட்ரம்பின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோ ட்ரம்பை விட ஆபத்தானவர்கள்… கருவை சுய அபார்ஷன் செய்து கொண்ட பூர்வி படேல் என்ற இந்திய வம்சாவளி பெண் 20 ஆண்டு சிறை தண்டனை தரப்பட்டார். Pro-life என்று வேறு பெயரில் அழைத்தாலும் அதன் வேர் கிறித்துவ அடிப்படைவாதம்தான். பர்தா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதங்களை கிண்டல் செய்துகொண்டே கருக்கலைப்பு போன்றவற்றை தீவிரமாக நம்பும் பாசாங்குத்தனமும் புதிய நிர்வாகத்தின் செயல்திட்டங்களில் இருக்கிறது.
க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் (பகுதி – 2)
அடுத்த நாள் எங்களோடு ஹோட்டலில் உட்கார்ந்து காலைஉணவு சாப்பிட, எங்களோடு வந்திருந்த க்யூப மொழிபெயர்ப்பாளரை அழைத்தோம். அவரும் ஹோட்டலுக்கு வந்தார். ஆனால் ஹோட்டல் அதிகாரிகள் அவர் க்யூபன் என அறிந்ததும் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்! நாங்கள் குறுக்கிட்டுப் பேசியும் பிரயோஜனமில்லை. அவர் வெளியேறி வேறெங்கோ போய் சாப்பிடுமாறு ஆயிற்று. க்யூபாவின் வெளிஉலகுக்குத் தெரியாத ரகசி்ய முகங்களில் இதுவும் ஒன்று. ஹோல்கின் நகரில் அநேக சிறு பூங்காக்கள், அறிவியல், சரித்திர மியூசியங்கள் உள்ளன. சிறிய விமான நிலையமும் இந்நகரில் இருக்கிறது.
மதப் போர்கள்
2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம், அல் கைதாவிலிருந்து உடைந்து போன ஒரு குழு, குறிப்பிடும்படியான வகையில் கொடூரமான குழு எனலாம், இந்தக் குறிக்கோளை அடைந்தது, ஆனால் தன் மூலக்குழுவைப் பகைத்துக் கொள்ளவும் செய்தது. ஈராக்- சிரியாவின் எல்லைப் பகுதியின் இருபக்கங்களிலும் பெரும் நிலப்பரப்பை வென்று கைப்பற்றிய, இஸ்லாமிச அரசு என்ற இந்தக் குழு, தன் தலைவரான அபு பக்ர் அல்- பாக்தாதி இனிமேல் காலிஃப் இப்ரஹிம் என்று அறியப்படுவார் என அறிவித்தது…. இந்தப் புது காலிஃபும் அவரது சகாக்களும் இறுதித் தீர்ப்பு வரும் நாளுக்காகத் தயாரிப்புகளில் இறங்கி இருக்கிறார்மள். அது உடனே வரவிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள், இந்த நாளில் மார்க்கத்திலிருந்து தவறியவர்களும், சிலை வணக்கம் செய்வாரும் உலகிலிருந்து அழிக்கப்பட்டு உலகு சுத்திகரிக்கப்படும் என்றும் நம்புகிறார்கள்.
க்யூபா – ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம்
ஹவானா வியெஹாவின் பிரதான சாலையோரமாக மரங்களின் நிழலில் 2007- ல் ரவீந்திரநாத் தாகூரின் மார்பளவுச்சிலை ஒன்று இந்திய அரசினால் நிறுவப்பட்டது. அந்த முக்கிய நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். இந்திய கலாச்சார உறவுக் கழகத்தினால் (ICCR), இந்தியாவிலிருந்து கூபாவுக்கென பிரத்யேகமாக அனுப்பப்பட்டது அது. எழுத்தாளர்கள், ஓவியர்கள், மற்றும் கலைஞர்களை மதிக்கும் பிரதேசம் லத்தீன் அமெரிக்கா. கூபா அதற்கு விதிவிலக்கல்ல. தாகூர் சிலை திறப்பு விழாவின்போது, பழைய ஹவானாவில் உள்ள ` காஸா த லா ஏஷியா` எனப்படும் `ஏஷியா ஹவுஸ்(ஸ்பானிஷில் Casa de la Asia) பள்ளிக்குழந்தைகளை வைத்து தாகூரின் நாடகம் ஒன்றின் ஒரு அத்தியாயத்தை, எங்களுக்கு நடத்திக் காண்பித்தது. பள்ளிக்குழந்தைகள் உற்சாகமாக அதில் நடித்தது எங்களுக்கு சிலிர்ப்பூட்டிய விஷயம். கூப்ர்களுக்குப் பிடித்த உலக அரசியல் தலைவர்களில் மஹாத்மா காந்தியும் ஒருவர்.
போர்க்கள நடிப்பு
பத்திரிகையாளருக்கு அழகு என்பது நேரடியாகக் களத்தில் இறங்கி, சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து உரையாடி, இரு பக்கமும் சென்று, தன் சொந்தக் கண்ணால் கண்டதை தத்ரூபமாக விவரிப்பது. ஆனால், வருங்காலத்தில் அதற்கு தேவை இராது. உங்கள் கண்ணில் ஒரு கருவியை அணிந்துகொண்டால், எங்கே போக வேண்டுமோ, அங்கே போகலாம். எவருடன் பேச “போர்க்கள நடிப்பு”
அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுதி எனும் சகுனியும்
நவீன யுகத்தில் மத்திய கிழக்கு என்றுமே அமைதிப் பூங்காவாக இருந்ததில்லை. ஆனால், இன்றைய நிலைமை போல் படு மோசமான நிலை எப்போதுமே இல்லை. ஈராக்கிலும், லிபியாவிலும் சிரியாவிலும், யேமனிலும் உள்நாட்டுப் போர், முழுவீச்சில் கொழுந்துவிட்டெரிகிறது. எகிப்திலும், தெற்கு சூடானிலும், துருக்கியிலும் ஆங்காங்கே கலவரங்களும் கிளர்ச்சிகளும் முளைத்து தழைத்தோங்கி வளர்கின்றன. சென்ற பல ஆண்டுகளில் வந்து போன, உள்நாட்டு கலகங்களின் எச்சங்கள் இன்றைய அள்விலும் அல்ஜீரியாவிலும், ஜோர்டானிலும், லெபனானிலும், சவூதி அரேபியாவிலும், டூனிஸியாவிலும் ஸ்திரமின்மையை நிரூபித்து அஸ்திவாரத்தை ஆட்டிக் கொண்டிருக்கின்றன. ஈரானிற்கும் சவுதி அரேபியாவிற்கும் நடுவில்…
அசிங்க அரசியலின் வெற்றி
ஆரம்பித்ததிலிருந்து ட்ரம்ப் ஒரு கோமாளியாகத்தான் பார்க்கப்பட்டார். அவர் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும், எதிராளியைத் தாக்கும் முறைகளும், அரசியல் பண்பாடு அறவே அற்ற, முன்யோசனை இல்லாத கருத்துக்களும் இந்தியாவுக்குப் புதிது அல்ல. நம் அரசியல்வாதிகள் நம்மை அதற்குப் பழக்கியிருக்கிறார்கள். ஆனால் மேற்குலகில் அரசியல் சாக்கடை இருந்தாலும் பொதுவில் நாகரீகம் இருக்கும். ஆனால் ட்ரம்ப் அதைப் பறக்கவிட்டு தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பாணியில் பிரச்சாரம் செய்தார். அவர் கடசியினரே அவரை ஓரம் கட்டினர். ஆனால் மர்மமான முறையில் எல்லா முக்கியமான கட்சி உள்தேர்தல்களில் ட்ரம்ப் முதலிடம் வந்தார். வேறு வழியே இல்லாமல் குடியரசுக் கட்சி அவரை அதிபர் வேட்பாளராக்கியது. எப்படி இந்த வெற்றி சாத்தியமானது?
இதற்குத்தானா ஆசைப்பட்டது அமெரிக்கா?
மைனாரிட்டி இன மக்கள், பெண்கள், இளம்வாக்காளர்கள், கறுப்பர்களை குறிவைத்து அவர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஹிலரி பேசி வந்ததை வெள்ளை இன மக்கள் குறிப்பாக ஆண் வாக்காளர்கள் ரசிக்கவில்லை என்பதை இந்த தேர்தல் முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன…செனட் மற்றும் காங்கிரஸில் மெஜாரிட்டி பெற்றிருக்கும் ட்ரம்ப் கட்சியினர் நீதித்துறையையும் தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து விட்டால் அரசியல் சட்டங்களையும் தங்கள் விருப்பப்படி மாற்ற இயலும். அப்படியொரு நிலைப்பாட்டை எடுத்தால் அவர்களை தடுக்கும் சக்தி ஜனநாயகக் கட்சிக்கு இல்லை என்பதும் கவலைதரும் செய்தி.
கடவுளின் வெண்கல கரமும், நீல நிற ஜீன்ஸ்களும்
ஸ்வெட்லான அலேக்சிவிச் சென்ற காலத்து சோவியத்தில் வளர்ந்தவர். தன்னை ஒரு ‘சோவோக்’ என்றே கருதுகிறார். ”அவருடைய பல்குரல் எழுத்துக்கு, நம் காலத்து வேதனைகளுக்கும் துணிவுக்குமான சின்னமாக” 2015 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் அவருடைய ‘Second Hand Time – Last of the Soviets’ எனும் நூலுக்காக கிடைத்திருக்கிறது. 1991- 2013 வரையிலான காலகட்டங்களில் ஸ்வெட்லானா பல்வேறு சோவியத் மனிதர்களை சந்தித்தபடி இருக்கிறார். இந்நூல் அவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பு.
விவாதங்களின் அரசியல் ; இரண்டாம் பட்சமான தகுதியும் தரமும்
முப்பது வருடங்களுக்கும் மேலாக அரசியலில் தன் கணவருக்கு பக்கபலமாய் இருந்த அனுபவம், பில் கிளிண்ட்டனின் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு நேரடி அரசியலில் இறங்கி செனட்டராக, வெளியுறவுத்துறை செயலராக பணியாற்றிய நிர்வாக அனுபவம் பெற்றவர். அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளர் என்கிற கூடுதல் சிறப்புத்தகுதியுடையவர் என்பதால் அவரை சரியான வகையில் எதிர்கொள்ளும் ஒரு வலுவான வேட்பாளரை தாங்கள் தேர்ந்தெடுக்கவில்லையோ என்கிற ஏமாற்றமும், ஆதங்கமும் தற்போது குடியரசு கட்சியினரிடையே வெளிப்படையாகவே எதிரொலிக்கத் துவங்கிய சூழலில் ஹிலரி-ட்ரம்ப் இடையேயான இரண்டாவது விவாதம் செயிண்ட் லூயிஸில் நடந்தேறியது.
அகதிக் கடத்தல்
மேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள நாடுகளில் இருந்தும் யூரோப்பில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது என்றும் அதன் விளைவுகளைப் பற்றியும் சொல்வனத்தின் முந்தைய இதழ்களில் படித்திருக்கிறோம். யூரோப் வளமிக்க வாழ்க்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக அகதிகளாக இம்மக்கள் குடியேறுகின்றனர். பிரிட்டன் போன்ற சில நாடுகள் யூரோப்பிய யூனியனிலிருந்து தனியாக செல்லும் நிலைமைக்கும் இந்த அகதிகள் பிரச்சனை பெரும் காரணமாக இருந்ததைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எல்லாவற்றையும் காசாக்கி ஆதாயம் தேடும் சிலர் இந்த ‘வாய்ப்பையும்’ பயன்படுத்தி இந்த நாடோடிகளுக்கு உதவுகின்றனர். போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்று பெரிய அளவில் வளர்ந்து வரும்…
சவுதி அரேபியாவின் ஏற்றுமதி
கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை. 1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால். 2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால். 3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால். 4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால். 5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!
குளக்கரை
உலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா? ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது
குளக்கரை
அறுபதுகளிலும், எழுபதுகளிலும் பாஸ்பேட் வளம் மிக்க நிலமாக இருந்த காலங்களில் அத்தீவின் மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். அது காலியான பின் நௌரூ தன் வருமானத்திற்காக வரி ஏய்ப்பதற்கும், ஹவாலா பணம் மோசடி செய்வதற்கும் ஒரு இடமாக தன்னை மாற்றிக் கொண்டது. இப்போது ஆஸ்திரேலியா, அவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகைக்காக தன்னுடைய அகதி சிறைச்சாலையை நௌரூவில் கட்டமைத்து அவர்களைக் கொண்டே நடத்துகிறது. அவுஸ்த்ரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகுகளில் வரும் அகதிகளையும், விசா இருந்தும் குற்றங்களுக்காக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட காத்திருப்பவர்களையும் தன் நாட்டு சிறைகளில், தன் சட்டத்தின் மேற்பார்வையில் வைக்காமல் நௌரூவின் சிறைக்குள் அனுப்பி விடுகிறது. அந்த சிறை மதில்களுக்குள் நடக்கும் கொடுமை…
நீளும் சாலைகள், பயணங்களும்தான்…
இந்த நூற்றாண்டின் அமெரிக்கப் பெண்கள் பலரும் நன்கு படித்து ஆண்களுக்கு நிகராக நல்ல பதவியிலும், பொறுப்பிலும் இருக்கிறார்கள். அரசியல், கல்வி, கலை, விளையாட்டுத்துறை, மருத்துவம், நீதித்துறை , விண்வெளி ஆராய்ச்சி, பொறியியல், விவசாயம் என்று அனைத்துத்துறையிலும் பெண்கள் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தாலும் கூட கடந்த நூற்றாண்டுகளின் நாலாம் தரத்திலிருந்து இரண்டாம் தரத்திற்குத்தான் உயர்ந்திருக்கிறார்களோ என எண்ணிடக்கூடிய வகையில்தான் நிதர்சனங்கள் இருக்கின்றன. பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டிய பல சட்டங்கள் இன்றும் ஆண்களுக்குச் சாதகமாகவே இருந்து வருவதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
குளக்கரை
தென் சீன கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்ததாக அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீன கடலின் செயற்கை தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.
கச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்
பத்தாயிரம் இந்தியர்கள் இருநூறு நாள்களாக சம்பளமின்றி வேலை செய்கிறார்கள். அதுவும் இவர்கள் எல்லோரும் கை நிறைய ஊதியம் வாங்கும் கணினி நிரலாளர்களோ, எண்ணெய் நிறுவனங்களை மேய்க்கும் மேலாளர்களோ, வங்கிகளில் வர்த்தகம் நிர்வகிக்கும் கணக்கர்களோ இல்லை. தினக்கூலியாக குப்ப்பை அப்புறப்படுத்துவதில் இருந்து கட்டுமானப்பணியில் (Over 800 Saudi companies are ‘ignoring summer midday work ban’ – Al Arabiya English) சுட்டெரிக்கும் வெயிலில் உடலுழைப்பைக் கடுமையாகக் கோரும் ஊழியர்கள்.
இவர்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தினால்,உலகிற்கு தெரியப்படுத்தினால் என்னவாகும்?