புரூரவஸ் எனில் நீர் கொண்ட மேகம், அதிக முழக்கம் செய்வது. நீர் ஆவியாகி மேகங்களாகும்போது மழையின் அறிகுறியாக இடிமுழக்கம் எழும். ஊர்வசி எனும் பெயர் மின்சாரம் பாய்வது போன்ற மின்னல் எனவும் பொருள்படும். ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள பாடலின்படி ஊர்வசி என்பது இடையிடையே தோன்றிமறையும் மின்னல் எனப் பொருள் கொள்ளப்படும்.
Category: மொழிபெயர்ப்பு இலக்கியம்
இறுதி சல்யூட்
தங்கள் கிராமத்தைப் பற்றியும், இருவரும் சேர்ந்து விளையாடிய குழந்தைப் பருவ விளையாட்டுக்கள் பற்றியும், பள்ளியில் பரிமாறிக் கொண்ட கதைகள் பற்றியும், 6/9 ஜாட் ரெஜிமெண்ட் பற்றி, அதன் தலைமை அதிகாரிகள் பற்றியும், விசித்திரமான பல நகரங்களில் அவர்கள் இருவரும் ஒன்றாகப் போய் உறவு கொள்ள நேர்ந்த விசித்திரமான பெண்கள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தான். இடையில் கடுமையான வலியால் பேசுவதை நிறுத்தி உரக்கக் கதறினான்.
ஸ்வர்ண சீதா என்ற நாவல்
சுவர்ண சீதா நாவலில் அனுமன் அந்த வேலையைத் தொடருவதாகவும் பாறைகளின் மேல் எழுதி கடலில் பாதுகாப்பாக வைப்பதாதாகவும் கூறப்படுகிறது. ஹனுமத்ராமாயணம் என்று ஒன்று இருப்பதாகவும், அனுமான் ராமனை அருகிலிருந்து பார்த்தவர் என்பதால் ராமனுடைய வாழ்க்கையை மலைப் பாறைகளின் மீது எழுதினார் என்றும் வால்மீகி ராமாயணத்திற்கு போட்டியாக இருக்கக் கூடாது என்று அதைக் கடலில் போட்டார் என்றும் உலக வழக்குச் செய்தி ஒன்று உள்ளது
மோகனவம்சி என்ற நாவல்
ராதா, தபதி, சந்திரிகா அனைவரும் கிருஷ்ணனின் பௌதீகமான சிந்தனை, கானம், சௌந்தர்யம் ஆகியவற்றில் களித்திருப்பவர்களே. அவர்களுக்குத் திருமணம் ஆகி சம்சாரம் இருந்தது. வயதில் கிருஷ்ணரை விடப் பெரியவர்கள். கிருஷ்ணருக்கும் அவர்கள் மீது சமமான அன்பு. உண்மையில் அவனுடைய பார்வையில் பெண்களனைவரும் வேறு வேறு பெயர்களோடு பௌதீகமாக மாறுபட்டு தென்படும் பெண்மையும் வேறுபட்ட தோற்றங்களே.
இது துளசிவனம் என்ற நாவல்
தவறு செய்வதால் கூட பாரதப் பெண்கள் வணக்கத்தை பெற முடியும் என்கிறார் லதா. கணவனாலோ, இன்னொருவராலோ அல்லது தனக்குத்தானாகவோ தப்பான அடி எடுத்து வைத்த பெண்ணின் கண்ணிலிருந்து பச்சாதாபத்தோடும் துயரத்தோடும் ஒரு சொட்டு கண்ணீர் கீழே விழுந்தால் அந்தக் கண்ணீரால் துளசிச் செடிகள் பெருகி வளரும் என்கிறார்.
‘ஊர்வசியின் களிப்பு- புரூரவஸின் சலிப்பு’
இரு காதலர்களின் பிரிவு அவர்கள் உள்ளங்களிலும் வாழ்விலும் ஏற்படுத்தும் வெறுமை, தனிமை, வாழ்க்கையின் மீதான வெறுப்பு, சலிப்பு, பற்றின்மை என அனைத்தும் இத்தனை நுட்பமாக, பொறுமையாக வேறெந்தக் கவிஞனாலும் விவரிக்கப்பட்டுள்ளதா என நான் அறியேன். முன்பே கூறியபடி, கம்பன் அழகாக சீதை, இராமன் இவர்களின் தாபத்தையும், சேக்கிழார் பெருமான்
மிகிலிந்தேமிடி? (என்ன மிச்சம்?) என்ற நாவல்
அழகே செல்வமாகக் கொண்டவள் என்ற சிறப்பு இருந்தாலும் சமுதாயத்தில் தாழ்வாக பார்க்கப்படுகின்ற குலத்தில் பிறந்தவள் என்ற தாழ்வு மனப்பான்மை அவளைப் பின்தொடர்ந்து கொண்டே இருந்தது. பிறருக்கு போகமளிக்கும் குலத்தில் பிறந்த பெண் திருமணம் செய்து கொண்டாலும் ஒரு ஆணையே நம்பிக்கொண்டு வாழ்ந்தாலும் அவளுடைய கற்பு எப்போதும் சந்தேகப்படத் தக்கது என்று எண்ணும் சமுதாயத்தில் வித்யா திருமணம் செய்து கொள்வதை அவளுடைய தாய் விரும்பவில்லை. பெண் அனாவசியமாக கஷ்டங்களில் சிக்க கூடாது என்பது தாயின் அபிப்பிராயம்.
ராகஜலதி என்ற நாவல்
உப்புப் படகை விட்டு படிப்பதற்காக ராஜமுந்திரி சென்றபோது சூரியாவோடு சேர்ந்து அவனுடைய அறையில் தங்கினான். சூரியாவின் தாய் கனகாங்கியின் ஆதரவைப் பெற்றான். சூரியா தன் தாயை ஏன் வெறுக்கிறான் என்று அவள் மூலமாகவே தெரிந்து கொண்டான். அவனுடைய வாழ்க்கை அதுவரைதான். திருமணமான மீனாட்சியுடனான சூரியாவின் சிநேகம், அவளோடு வீட்டை விட்டு வெளியே போவதில் தொடங்கி, சூரியாவின் வாழ்க்கையில் வந்த மாற்றங்களின் கதையாக வளர்ந்த இந்த நாவலின் கதையம்சத்தில் மீனாட்சியின் தம்பி நடராஜனின் வாழ்க்கைப் பரிணாமங்கள் முக்கியமான பகுதியை நிரப்புகின்றன. ஆரணிக்கு சூரியாவிடம் சந்தேகமில்லாத நட்பு இருந்ததால் அவன் பார்த்தோ அல்லது அவன் கூறிக் கேட்டோ அறிந்த விவரங்களோடு சூரியாவைப் பற்றி கூற முடியும். கூறினான் கூட
மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதி
அவர் இந்தியத் தீவுக் கூட்டங்களுக்கு பயணம் செய்தார்; அவரையும் சேர்த்து அவருடன் வந்த சில கடலோடிகள், போர்னியோ தீவின் உட்பகுதிக்கு உல்லாசமாகச் சென்றனர். அவரும், அவரது நண்பரும் அங்கே ஒரு ஓராங்-ஓட்டானைப் பிடித்தனர். அந்த நண்பர் இறந்து போனார்; இந்தக் குரங்கு இவரது ஏகபோக உடைமையாகியது. வழிப்படுத்த முடியாத முரட்டுத் தனங்கள் நிறைந்த அந்த விலங்கை பல இடர்களுக்கிடையில், பாரிசில், தன் வீட்டில் பாதுகாப்பாக பூட்டி வைத்தார். அண்டை அயலார் சற்று விலக்கமாகப் பார்க்கக்கூடும் என்பதால் தனியாகவே வைத்திருந்தார்.
உறுதி
அவர்கள் ஒருவரையொருவர் முடிவும் முதலும் இல்லாது எப்போதும் கேவலப்படுத்திக்கொண்டு எவ்வளவு தீவிரமாக வெறுத்துக்கொண்டு இருந்தார்கள் என்றால், இரண்டு பக்கத்தவர்களும் அவரவர் பெயர்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று வெகுகாலம் முன்பே முடிவுசெய்து இருந்தார்கள். ஆனால் ஏன் மாற்றிக்கொண்டிருக்கவில்லை என்றால், அவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும் என்று இவர்களும் இவர்கள் முதலில் மாற்றிக்கொள்ளட்டும் என்று அவர்களும் காத்துக்கொண்டிருந்தார்கள். அப்படியாக அந்த இரண்டு குடும்பத்தாருக்கும் இன்னும் அப்பண்ணன் என்ற பெயரே ஒட்டிக்கொண்டு இருந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு இன்னொரு குடும்பம் என்றால் அசிங்கம், அருவருப்பு.
மார்க் தெரு கொலைகள்- பகுதி 4
‘அதுதான் சாட்சியம்; என்ற டூபான், ஆனால், அது சாட்சியத்தின் விசித்திரமில்லை, நீங்கள் குறிப்பான, தனித்துத் தெரியும் ஒன்றை கவனிக்கவில்லை. காரணங்கள், சாதாரணத் தளத்திலிருந்து மேம்பட்டு முக்கியங்களைக் காட்டும் என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளவேயில்லை. இருந்தும், சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். முரட்டுக் குரலில் ஒத்த கருத்தினைச் சொன்ன சாட்சியங்கள் அந்த’ க்றீச்’ குரலைப் பற்றி சொன்னவை-அவர்கள் ஒத்துப் போகாமலில்லை-ஆயின், அதிலுள்ள விசித்திர வர்ணனைகளை எண்ணிப் பாருங்கள்- இத்தாலியர், ஆங்கிலேயர், ஸ்பானியர், ஒல்லாந்தர் அனைவருமே, அது ஒரு அயல் தேசத்தவரின் குரல் என்று சொன்னார்களல்லவா?
தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம்
1962 லேயே கட்டி ஆஞ்சநேய சர்மா என்பவர் லதாவின் இலக்கியம் பற்றி ‘சாஹிதீ லதா’ என்ற புத்தகம் எழுதினார் என்றால் இலக்கிய துறையில் பிரவேசித்து ஏழெட்டு ஆண்டுகள் ஆவதற்கு முன்பே லதா எத்தனை தூரம் வாசகர் உலகத்தை கவர்ந்திருந்தார் என்பது தெரிகிறது. அதற்குக் காரணமான மூலசக்தி தன் காலத்துப் பெண் எழுத்தாளர்களை விட மாறுபட்டு அவருக்கு கிடைத்த பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் என்று கூறவேண்டும். அதுவே அவருடைய நாவல்களை சமகாலத்து பெண் நாவல்களை விட மாறுபட்டவையாக நிலைநிறுத்தின.
அதிரியன் நினைவுகள் -15
தங்கள் உயிருக்கு இனி ஆபத்தில்லை என்பதால் மகிழ்ச்சியுற்ற ஒவ்வொருவரும் இறந்தவர்களை விரைவாக மறந்தார்கள். எனது இரக்கக் குணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது, காரணம் ஒவ்வொருநாளும் வன்போக்கு என்கிற எனது இயல்பான குணத்திலிருந்து விலகி, விருப்பத்துடனும் ஆர்வத்துடனும் மென்போக்கை நான் கடைப்பிடிப்பது அவ்வளவு எளிதானதல்ல என்பதை புரிந்துகொண்டிருந்தார்கள். எனது எளிமையைப் பாராட்டிய அதேவேளை, அதற்கென்று ஒரு கணக்கீடு இருப்பதாகவும் நினைத்தார்கள். இறந்த மன்னர் திராயானுடைய பெரும்பாலான நற்பண்புகள் அடக்கமானவை; என்னுடையவையோ பலரையும் மிகுந்த வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தன; கூடுதலாக பலரும் எனது குற்றத்தில் ஒருவித செய் நேர்த்தியைப் பார்த்தனர்.
தென்னேட்டி ஹேமலதா
ஒன்பதாம் வயதிலேயே அதாவது 1944 ல் தென்னேட்டி அச்சுதராவு என்பவரோடு திருமணம் நடந்தது. அப்போதிலிருந்து இவர் தென்னேட்டி ஹேமலதா என்று அழைக்கப்பட்டார். 18 வயதில் 1952ல் ரேடியோவில் பணிபுரியும் நிமித்தம் உத்தியோக வாழ்க்கையை ஆரம்பித்ததோடு ரேடியோவில் நடிகை, நாடக எழுத்தாளர் என்று பல துறைகளில் நுழைந்தார். (ஏபி ஆனந்த் இன்டர்வியூ யூ ட்யூப்).சுமார் அதே நேரத்தில் நாவல்கள் கூட எழுதத் தொடங்கினார். 1982ல் ‘நிடுதவோலு’ மாலதிக்குக் கடிதம் எழுதிய போது லதா எழுதிய நாவல்களின் எண்ணிக்கை நூறு. 1997 ல் லதா காலமானார். அந்த பதினைந்து ஆண்டுகளில் லதா மேலும் சில நாவல்கள் எழுதி இருப்பார் என்று கூறுகிறார் எழுத்தாளரும் இலக்கிய விமரிசகருமான மாலதி. (Eminent scholars and other essays in Telugu literature 2012 e- book edition 2011).
மாணாக்கன்
“அவர்கள் யேசுவை முதன்மை மதகுருவின் முன்னிலையில் கேள்விகள் கேட்கத் துவங்கினர். அந்த சமயத்தில் முற்றத்தில் வேலைக்காரர்கள் குளிர் காய்வதற்காக நெருப்பு மூட்டினர். அவர்களுக்கு அருகில் நின்றிருந்த பீட்டரும் கைகளை நீட்டி குளிர் காய்ந்தார். அப்போது, அங்கிருந்த ஓர் பெண்மணி, பீட்டரைக் கண்டு “இவரும் யேசுவுடன் இருந்தார்” என்றார். அதாவது, பீட்டரையும் இழுத்து சென்று கேள்வி கேட்க வேண்டும் என்று அர்த்தத்தில் கூறினாள்.
காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்
இந்திரா என்றால் கூட பயம்தான். தன் விருப்பு வெறுப்புகளை அவளிடம் அவனால் கூற முடியாது. அவனுக்குப் படிக்க வேண்டிய வேலை இருந்தாலும் அவள் வா என்றால் அவளிடம் இருக்கும் அச்சத்தால் அவள் பின்னால் செல்வான். கல்யாணியோடு அவனுடைய சினேகம் பற்றியும், காதல் விவகாரம் பற்றியும் விமர்சனம் செய்த சக மாணவியிடம் தகராறு செய்கிறான். அதாவது உலகத்திற்குத் தன்னை எப்போதும் நல்லவனாகவே காட்டிக் கொள்ள வேண்டும் என்ற குணம் அது. உண்மையில் அவனுக்கு என்ன வேண்டுமோ அவனுக்கே தெரியாது.
உள்ளும் வெளியும் பாகம் -2
எல்லாம் உடம்புகளைப் பற்றியவை, உன் கதகதப்பான, மென்மையான உடல், என்றன அவை, உடல் என்ற சொல்லுக்கு தடிப்பான ஒலி இருந்தது, பிறகு ‘காதல்’, வேறென்னவிருக்க முடியும், அதே போன்ற தொண்டையின் ஆழத்திலிருந்து வரும் ஒலிப்போடு, ‘ஐ லஹ்ஹ்வ் யெர் பஹ்ர்டி’, அதனால் கடைசியில் அவள் அதை அணைத்தாள். லவ் எனும்போது அவர்கள் பாலுறவைச் சொன்னார்கள் என்றால் சரிதான், போகட்டும், ஆனால் காதல் என்றால் என்ன என்று யாருக்குமே ஏதும் தெரிவதில்லை. ஆனால் நாம் காதலிக்கும் ஒன்றுக்கான சொல், ஒரு சவத்தை வருணிக்கும் அதே சொல்லாக இருக்கையில், நாம் காதலிப்பது ஒரு சவம் என்பது போல ஒலிக்கிறது
மார்க் தெரு கொலைகள் – 1
பகுத்தாயும் திறன் (analytical ability) இருக்குமிடமும், அதன் அங்கம் பற்றியும் அத்தனைத் தெளிவாக அறிய முடியாவிடினும், மண்டை ஓடு மற்றும் மூளைத் திறன் அறிவியல் (Phrenological Science) எடுத்து வைக்கும் சில அடிகள், இருத்தலியலை நம்பச் செய்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. இந்த பகுப்பாய்வுத் திறனை விளக்க முடியலாம், சிந்தனைகளின் அங்கமென வரையறை செய்வது கடினம்; முந்தைய மெய்யியலாளர்கள் சொன்ன இலட்சியத்தின் முக்கிய அங்கமாக இதைக் கொள்ளாவிடினும், இது இயல்பில் அமைந்துள்ள பழைய திறன் எனச் சொல்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன
உள்ளும் வெளியும்
கே ஃபாரஸ்ட் ஒரு நாள் அம்மாவுடன் அமர்ந்திருக்க வந்தாள், அன்று ஹாம்பிள்டனின் அங்காடிக்கு ஜில்லியால் போக முடிந்தது, அப்போது பில்லி வைஸ்லரின் பட்டறை வழியே போனாள், அவரிடம், பொழுது போக்காக ஏதும் பொருள் செய்ய, என்ன வகைக் களிமண்ணை வாங்கலாம் என்று கேட்டாள். நம்ப முடியாதபடி கனமாக இருந்த சிறு காகிதப் பையை பில் அவளிடம் கொடுத்தார், அதில் உலர்ந்த சன்னமான பொடி மண் இருந்தது. களிமண்ணுக்கான இரண்டு கத்திகளையும், ஒரு பழைய சுழல் மேடையையும் கொடுத்தார், அவள் எது செய்தாலும் அதை அவருடைய சூளையில் சுட்டுக் கொள்ளலாம் என்றார், அவர் அதை ‘சுளை’ என்று உச்சரித்ததை அவள் கவனித்தாள், ஆனால் தடிமனான உருக்களின் உள்புறத்தைச் சுரண்டி வெறும் இடமாக்க வேண்டும், இல்லையேல் அவை சூளையின் வெப்பத்தில் வெடித்துச் சிதறும் என்றும் சொல்லிக் கொடுத்தார்
காலாதீத வ்யக்துலு என்ற நாவல் – டாக்டர். பி. ஸ்ரீதேவி
அதாவது வீடு என்பது உறவோடும் பொறுப்போடும் கட்டிவைக்கும் ஒரு கட்டடம் என்றுதானே பொருள்? வீடு ஒரு பெண்ணுக்கு மறுபெயராக உள்ளது. இல்லத்திற்கு விளக்கு இல்லாள். இல்லத்தைப் பார்த்து இல்லாளைப் பார் போன்ற கூற்றுகள் எல்லாம் வீட்டை நடத்துபவளும் வீட்டுக்கு முக்கியத் தூணாக நிற்பவளும் பெண்தான் என்பதைக் குறிக்கின்றன. இவற்றைக் கணக்கில் கொண்டு ‘காலாதீத வ்யக்துலு’ நாவல் குடும்பத்தை பற்றி என்ன சொல்ல வருகிறது என்று பார்க்கும்போது ஆர்வமூட்டும் அம்சங்கள் புரிகின்றன.
காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன் டாக்டர் பி. ஸ்ரீதேவி எழுதிய ஒரே ஒரு நாவல் ‘காலாதீத வ்யக்துலு’ – (காலத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள்). ஆனாலும் அந்த ஒரு நாவலே இலக்கிய வரலாற்றில் அவர் பெயரை நிலைநாட்டி விட்டது. 1929 செப்டம்பர் 21ம் தேதி அனகாபல்லியில் பிறந்த ஸ்ரீதேவி மருத்துவப் “காலாதீத வ்யக்துலு – டாக்டர். பி. ஸ்ரீதேவி “
அதிரியன் நினைவுகள் – 11
எனது கணிப்புகள் பொய்த்துவிடும் போலிருந்தன. யூத மற்றும் அரேபிய தரப்ப்பினர் போருக்கு விரோதமாக இருந்தனர்; மாகாணச் செலவதர்களான பெரும் நிலவுடமையாளர்கள் தங்கள் பகுதியைத் துருப்புக்கள் கடந்து செல்வதால் ஏற்படும் செலவினங்களால் எரிச்சலுற்றனர்; படையெடுப்பு காரணமாக விதிக்கப்பட்ட புதிய வரிகளை நகரங்களால் சமாளிக்க முடியவில்லை. பேரரசர் திரும்பிய மறுகணம், இவை அனைத்தையும் தெரிவிக்கின்றவகையில் பேரழிவு ஒன்று நிகழ்ந்தது: டிசம்பர் மாத நடுநிசியொன்றில் ஏற்பட்ட நிலநடுக்கம், அந்தியோக்கியாவின் கால்வாசிப் பகுதியை ஒரு சில நிமிடங்களில் நாசமாக்கியது. ஒர் உத்திரமொன்று விழுந்ததில் திராயான் காயமுற்றிருந்தார், இருந்தபோதும் பேரிடரில் காயமுற்ற பிறருக்கு உதவுவதில் அவர் காட்டிய ஆர்வம் போற்றுதலுக்குரிய அபாரமான செயல். மன்னருடன் இருந்தவர்களில் சிலரும் விபத்தில் மாண்டிருந்தனர்
ஒரு துண்டு வெயில்
நம்முடைய இறந்த காலத்தின் மடிப்புகளை வெங்காயத்தோல் போல ஒவ்வொன்றாக உரித்துப் போட. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் – எல்லோரும் தத்தம் பங்கை வசூலித்துக்கொண்டு போக வருவார்கள். தாய்- தந்தை, கணவர், நண்பர்கள். எல்லா தோல்களும் அவர்களிடம். ஒரு உபயோகமும் இல்லாத, காய்ந்து போன கடைசி குச்சி உங்கள் கையில் மிஞ்சும். மரணத்திற்குப் பிறகு அதை எரிப்பார்கள் அல்லது மண்ணில் புதைப்பார்கள். மனிதன் தனியாகத்தான் இறக்கிறான் என்று எல்லாரும் சொல்கிறார்கள். நான் இதை ஏற்பதில்லை. அவனுக்குள்ளிருந்த, அவன் சண்டையிட்ட அல்லது அன்பு செலுத்திய அத்தனை பேரோடும் சேர்ந்து தான் அவன் இறக்கிறான்
வட்டிகொண்ட விசாலாக்ஷி-2
பாப்பாயம்மாவோடு சிறைக்குச் சென்ற மற்றொரு பெண் சிட்டம்மா. இவள் திருமணமானவள். கணவன் சொத்தையெல்லாம் அழித்தபின் வேறு வழியில்லாததால் பிறந்து வீட்டிற்கு வந்தாள். வீட்டைத் தாண்டி வெளியில் சென்றறியாத சிட்டம்மா, ராட்டினம் நூற்க வேண்டும் என்று கூறிய காந்தியின் அழைப்பை ஏற்றாள். சம்சாரம் இல்லாத பெண்ணாக, தாய் கொடுக்கும் வேதனையையும் உலகத்தின் பரிதாப பார்வைகளையும் தாங்க முடியாமல் மூச்சு விடக் கூட முடியாத நிலையை அனுபவிக்கையில். சிறைக்குச் செல்லத் துணிந்த பாப்பாயம்மாவை ஆதரிசமாக ஏற்று தானும் சிறைக்குச் செல்வதற்கு தயாரானாள். சிறைக்கும் சென்றாள். அதன் பின்பு ஹரிஜன சேவை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டாள். ஹரிஜன குடியிருப்பகளுக்குச் சென்று வந்தபின் குளிக்கக் கூட மாட்டாயா என்று தாய் லபோ திபோ என்று அடித்துக் கொண்டு கூறிய சொற்களை பழங்காலம் என்று எடுத்தெறிந்து பேசக் கூடிய அறிவு வளர்ச்சி அவளிடம் தென்படுகிறது.
பிரசவ வரிகள்
படுக்கையருகே உள்ள சிறு மேஜைமீது உலர்ந்த கண்ணாடிக் கோப்பை இருந்தது, இரண்டு வறண்ட ரொட்டித் துண்டுகள் இருந்தன. அவள் தன் உதடுகளை உறிஞ்சினாள் – தடித்து, வெடித்திருக்கும் கீழ் உதடு முதலில், பிறகு மேல் உதடு – தன் கோரைப்பற்களால் அவற்றைப் பிடித்து மெலிதான உலர்ந்த தோலை உரிக்கிறாள். அவள் நாறிக் கொண்டிருக்கிறாள் – வேறெப்படி இருக்கும், அவளுடைய இரவாடைகளின் கீழேயிருந்து உடல் மாமிசத்தின் வாடை மேலெழுந்து வருகிறது, பாதங்களில் அழுக்கு படலமாக ஒட்டியிருக்கிறது. படுக்கையின் மேல் விரிப்புக்குக் கீழே, அரிப்பெடுக்கிற ஒரு குதிகாலை இன்னொரு காலின் நுனிவிரல்களால் சொரிகிறாள், அழுக்கு அவள் கால் நகங்களின் அடியில் சுருள்கிறது.
வட்டிகொண்ட விசாலாட்சி
மதராஸில் இருந்தால் ஆந்திர தேசத்தில் உள்ள முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிகழ்ச்சிகளுக்கு அவர் செல்லும் வாய்ப்புகள் இருக்காது என்று அவர் கருதினார். அதுவே உண்மையாயிற்று. பரம்புரம் என்ற ஊரில் நடந்த இலக்கிய பாடசாலைக்குச் செல்ல வேண்டும் என்று சாப்பிடாமல் இருந்து பிடிவாதம் பிடித்தாலும் கூட விசாலாட்சி நினைத்ததை சாதிக்க இயலாமல் போனார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து வெற்றிகரமாக அவரை வெளியேற்ற முடிந்ததாக கணவர் மகிழ்ந்தார். தனக்கு விருப்பமான சாகித்ய சங்கத்தில் பணி செய்யும் சுதந்திரதத்தை தன்னிடமிருந்து பிடுங்கி கட்டுப்படுத்திய கணவர் மீது அதிருப்தியில் இருந்த விசாலாட்சி உரைநடை இலக்கியத்தின் மீது பார்வையைத் திருப்பினார். 1951ல் இருந்து கதைகளும் நாவல்களும் எழுதத் தொடங்கினார். சொந்த அனுபவங்களை பெண்களின் கோணத்தில் பார்த்து அன்றைய இயக்கங்களையும் போராட்டங்களையும் மதிப்பிட்டு அவர் படைத்த கதைக்கருக்கள் அதற்கு முன்பு யாரும் எழுதாதவை.
வயோதிகம்
யுஸெல்கோவ் அறைக்குள் அங்கும் இங்கும் நடந்தான்; கொஞ்ச நேரம் சிந்தனை செய்துவிட்டு ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சென்று சந்திப்பதென சலிப்பாக முடிவெடுத்துக் கொண்டான். உணவகத்தை விட்டு வெளியே வந்து கிர்பிட்சினி தெருவை நோக்கி இலக்கற்ற மெது நடையில் அவன் சென்ற போது நண்பகலாகியிருந்தது. ஷாப்கினை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தான்; அவனை அடையாளம் கண்டுகொள்ளவே சிரமமாக இருந்தது. நல்ல உடலுடனும் துடுக்குத்தனமானவனாகவும் குடிபோதையேறிய முகத்துடனும் திறமை மிக்க ஒரு வழக்கறிஞனாக நடந்து திரிந்த ஷாப்கின் தற்போது அமைதியான, நரைத்த தலையுடன் அடங்கி ஒடுங்கிய ஒரு கிழவனாக மாறிப்போயிருந்தான்.
சபிக்கப்பட்ட வீடு
வைக்கோம், “என் வாழ்க்கையில் இவ்வளவு உறுதியாக இதுவரை இருந்ததே இல்லை, என் நண்பரே” என்று பதிலுரைத்தான். “நான் முன்னமே சொன்னேன், மறுபடியும் சொல்கிறேன், வாடகையை குறைக்கத்தான்போகிறேன்”.
ஐயா நீங்கள் சரிவர புரிந்து கொள்ளவில்லை என நினைக்கிறேன். நீங்கள் இதற்காக இம்மாலையே வருந்துவீர்கள். வாடகைதாரர்களின் வாடகையை குறைப்பதா? இதுவரை கேள்விப்பட்டிராதது ஐயா. வாடகைதாரர்கள் இதைப்பற்றி அறிந்தால் என்ன நினைப்பார்கள்? நம் அயல் குடியிருப்பாளர்கள் நம்மைப் பற்றி என்ன சொல்வார்கள்? நிஜமாகவே…
அதிரியன் நினைவுகள் – 6
இப்படியொரு எண்ணத்திற்கு நான் தள்ளப்பட புதிய அனுபவங்களில் எனக்கிருந்த ரசனையும் ஈடுபாடும் காரணமாகும், விளைவாக காட்டுமிராண்டிகள், மிலேச்சர்கள் போன்றவர்களிடமும் விரும்பிப் பழகினேன். இப்பெரிய பிரதேசம் தன்யூபு மற்றும் போரிஸ்தீனஸ் நதிகளின் முகத்துவாரங்களுக்கு இடையில் அமைந்த ஒரு முக்கோண நிலப்பரப்பு, இதன் மூன்று பக்கங்களில் இரண்டு எனக்கு நன்கு பரிச்சயமானவை. நிலத்தை ஊடுருவிய கடலின் கரையோரங்களில் பிறந்து, இயற்கையாக அமைந்த இப்பகுதியின் தூய்மை, வறட்சி, குன்றுகள், தீபகற்பத்தையொத்த நிலப்பகுதிகள் அனைத்தையும் நன்கறிந்த நமக்கு, உலகின் அதிசயிக்கத் தக்க பிராந்தியங்களில் இதுவுமொன்று என்கிற எண்ணத்தை இப்பகுதி தரும்.
ஹ்ருதய நேத்ரி மற்றும் சதாப்தி சூரீடு
மாலதி சந்தூர் சொந்தமாக நாவல்களை எழுதியதோடு கூட சுவாதி பத்திரிகையில் பாத்தகெரடாலு என்ற தலைப்பின் கீழ் முன்னூற்றைம்பது ஆங்கில நாவல்களை அறிமுகம் செய்துள்ளார். அவை முன்னர் பாத்தகெரடாலு என்ற பெயரோடே பிரசுரமாயின. அது இப்போது 160 உள்நாட்டு வெளிநாட்டு மொழி நாவல்களின் அறிமுகம் – நவலா மஞ்சரி என்ற பெயரில் ஆறு தொகுதிகளாகக் கிடைக்கிறது. உலக நாவல் இலக்கியத்தை தெலுங்கு வாசகர்களுக்கு அத்தனை சரளமாகவும் சுந்தரமாகவும் அறிமுகம் செய்த மாலதி சந்தூரின் முயற்சி அசாதாரணமானது.
மித்ரோ மர்ஜானி 6
தனவந்திக்கு சர்தாரியின் நினைவு வரவே, ஒரு நொடியில் அவளுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது. அவன் தான் கண்டிப்பாக எதையோ சொல்லி இவளை காயப்படுத்தி இருப்பான்! அன்று கணவனின் அறையில் கேள்வி பதிலாகவும் விசாரணையாகவும் நடந்த நிகழ்ச்சி, ஒரு வேளை தினமும் தொடர்கிறதோ? தன்வந்தி கனிவான குரலில், “மகளே எனக்கு எல்லாம் புரிகிறது. எல்லாவற்றுக்கும் என் புத்தி கெட்ட மகன்தான் காரணம். சின்னச்சின்ன விஷயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி, சண்டை போட்டு, முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருப்பான்!” என்றாள்.இதைக் கேட்ட மித்ரோ, கண்களில் கோபம் கொப்பளிக்க, அடிபட்ட சிங்கம் போல கர்ஜித்தாள்.”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதால் ஒரு பயனும் இல்லை. அம்மாவும் மகனும் சேர்ந்து, என் தோலைச் சீவி, என்னைக் கண்டதுண்டமாக வெட்டி ஊறுகாய் போட்டு விடுவது தானே” என்றாள்.
கிருஷ்ணவேணி மற்றும் சத்யோகம்
மகன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த போது அவள் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகப் போகிறாள் என்று நினைத்த அவனுக்கு அவளுடைய நடத்தை இயற்கைக்கு விரோதமாக தோன்றுவது இயல்பு. இங்கு பிரசாதின் கண்ணோட்டம் சாதாரண ஆணின் பார்வையை முன்வைக்கிறது. அது ஆண்களின் கண்ணோட்டம் என்று மாலதி சந்தூருக்குத் தெரியும். அதற்கு மாறாக பெண்கள் நடந்து கொண்டால் ஆணாதிக்கம் அடிபட்டு போகும் என்று கூட அவருக்கு தெரியும். அதனை அவர் பிரசாதின் வாய்வழியே விமரிசனம், சுய பரிசோதனை என்ற விதமாக, மூர்த்தியோடு நடந்த உரையாடலில் ஒரு பகுதியாகக் காட்டுகிறார். கற்பு, தாய்மை என்னும் மாயத் திரைகளை கிழித்துக் கொண்டு பெண்கள் சைதன்யம் உள்ளவர்களாகும் இந்த காலத்திற்கு தகுந்தாற்போல் ஆண்களும் தம் அதிகார, அகங்கார இயல்புகளை விட்டு விட வேண்டும் என்ற எச்சரிக்கை அதில் தெரிகிறது.
அதிரியன் நினைவுகள் – 4
என் தந்தை, ஏலியஸ் அஃபர் அத்ரியானுஸ்(Aelius Afer Hadrianus) நல்லொழுக்கங்கள் நிறைந்த மனிதர். தேசம், அரசாங்கம் என அவர் உழைத்தபோதும், பலனடைந்தவரில்லை. செனெட் அவையில், அவர் குரல் எடுபட்டதில்லை. வழக்கமாக நம்முடைய ஆதிக்கத்தின் கீழிருக்கும் ஆப்ரிக்க பகுதி நிர்வாகிகள் செல்வத்தில் கொழிப்பதுண்டு, ஆனால் இவர் அங்கும் எதையும் சம்பாதித்தவரில்லை. திரும்பிய பின் இங்கும் ஸ்பெயின் நாட்டில் நமது கைவசமிருந்த இட்டாலிகா (Italica) நகராட்சியில் ஓயாமல் உள்ளூர் சர்ச்சைகளைத் தீர்த்துவைத்து சோர்வுற்றதுதான் அவர் கண்ட பலன். இலட்சியங்களற்ற மனிதர், வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் பெரிதாக அனுபவித்தவரில்லை. பெரும்பாலான மனிதர்களைப்போலவே ஆண்டுதோறும் மேலும்மேலும் நிறமிழந்து, இறுதியில் அற்பவிஷயங்களில் வெறித்தனமாக ஒரு முறைமையைக் கையாண்டு தம்மை சிறுமைபடுத்திக்கொண்டார்.
மாலதி சந்தூர், ரேணுகா தேவி
மாலதி சந்தூருக்கும் அவ்விதமாக பெண் வாசகர்கள் மிக அதிகம். 1952 லேயே பிரமதாவனம் என்ற பெயரோடு ஆந்திரபிரபா பத்திரிக்கையில் வெளிவந்த மாலதி சந்தூரின் பத்திக்காகக் காத்திருந்த பெண் வாசகர்கள் மிகப் பலர். அந்த நாட்களில் குக்கிராமங்களில் வசித்த பெண்கள் கூட அந்த பத்திரிகையை தபால் மூலம் வரவழைத்துக் கொண்டார்கள் என்றால், மாலதி சந்தூர் போன்ற பெண் எழுத்தாளர்கள் பெண் வாசகர்களை எத்தனை ஏற்படுத்திக் கொண்டார் என்பது புரிகிறது. பல வெளிநாட்டு மொழி நாவல்களை தெலுங்கு மக்களுக்கு அறிமுகம் செய்து எழுதிய கதைகள் ‘பாத்த கெரடாலு’ (பழைய அலைகள்) என்ற பெயரோடு பிரசுரமாயின.
யார் ஐரிஷ்காரர் ?
இப்போதெல்லாம் என்னோட அழகான பொண்ணு அத்தனை களைச்சுப் போய் வரா, அவ அந்த நாற்காலியில உட்கார்ந்ததுமே தூங்கிப் போயிடறா. ஜானுக்கு மறுபடியும் வேலை போயிடுத்து, ஆனா அவங்க என் உதவியைக் கேட்கறத்தை விட்டுட்டு, இன்னொரு ஆயாவை குழந்தையைப் பாத்துக்கற வேலைக்கு அமர்த்தி இருக்காங்க, அவங்களுக்கு அது கட்டுப்படி ஆகாதுன்னு இருந்தாலும் பரவாயில்லையாம். வேற எப்படி இருக்கும், அந்தப் புது ஆயா ரொம்ப வாலிபம்தான், குழந்தையோட ஓடி ஆடித் திரிய முடியறது.
மல்லாதி வசுந்தராதேவி எழுதிய நாவல் தஞ்சாவூர் பதனம்
அவர் எழுதிய த்ரி வர்ண பதாகை என்ற நாவல் சமூக சீர்திருத்ததில் ஆர்வம் கொண்ட இளம் பெண்கள் இருவரில் ஒருவர் முஸ்லிமையும் ஒருவர் ஹரிஜனனையும் திருமணம் செய்து கொள்வதும் அவர்களுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டச் சம்பவங்களையும் கதைப் பொருளாக கொண்டது. அவர்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு நடத்திய விதம், மேலும் இரு இளம் பெண்கள் குல மதத்துக்கு அப்பாற்பட்டு திருமணம் செய்து கொள்வதற்கு ஊக்கமளித்ததாக கதையை நடத்தியுள்ளார் ஆசிரியை
நாடு கடத்தப்பட்ட லூலூ
அவள் எதிர்காலம் இங்கே (அமெரிக்காவில்) இருக்கிறது: இயற்கை நூலாடைகளுக்குப் புகலிடமான நாட்டில் அகதியாக இருக்க வேண்டி வந்திருக்கிறது. சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்ட பின் ஹாங்காங் நல்லபடியாகத்தான் இருக்கும் என்று சில ஜனங்கள் நம்பினார்கள், ஆனால் ஷுஷுகுடும்பத்தினர் அப்படி நினைக்கவில்லை. நீங்க பார்த்துகிட்டே இருங்க, நாம எல்லாரும் அருமையான அமெரிக்கப் புறநகர் ஒன்றில் போய் நிற்கப் போகிறோம், என்று அவர்கள் கணித்தார்கள் – லூலுவையும் அந்த ‘நாம எல்லாரும்’ என்பதில் சேர்த்துத்தான் சொன்னார்கள், அதெப்படி இருந்தாலும் ஆர்னி மற்றும் டங்கனின் அம்மாவுக்கு என்னவோ, லூலு நல்ல மனைவியாக அமைவாளா என்பதில் ஐயம் இருந்தது.
அதிரியன் நினைவுகள் -3
அனைவரையும் போலவே எனது பணியிலும் மனிதர் இருப்பை மதிப்பிட மூன்று வழிமுறைகள். முதலாவது சுயபரிசோதனை, இது மிகவும் கடினமானது மட்டுமல்ல ஆபத்தும் இதில் அதிகம், இருந்தும் பயனுள்ள வழிமுறை. இரண்டாவது மனிதர்களை அவதானிப்பது. பொதுவில் மனிதர்கள் மொத்தபேரும் அவ்வப்போது இரகசியங்களை பொத்திவைப்பதில் கெட்டிக்க்காரர்கள் என்பதோடு தங்களிடம் அவை கணிசமாக உள்ளதென்பதை பிறர் நம்பவேண்டும் என்பதுபோல அவர்கள் நடத்தையும் இருக்கும். மனிதர் இருப்பை அளவிட நான் கையாளும் மூன்றாவது வழிமுறை புத்தகங்கள், வாசிக்கிறபோது, தீர்க்கதரிசனமாக சொல்லப்படும் வரிகளுக்கிடையில் உணரப்படும் பிழைகளும் எனக்கு முக்கியம். சரித்திர ஆசிரியர்களின் எழுத்துகள் கவிஞர்கள் எழுத்துக்ளைபோல பெரிதாகக் கொண்டாடக்கூடியவை அல்ல.
அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்
சாரதா விஜயம் வரலாற்று நாவல். 14 ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சங்கம வம்சத்தைச் சேர்ந்தவரான ஹரிஹராயரின் வாரிசுகள் ஆட்சி செய்த காலத்தில் பாமினி அரசர்களோடு நடந்த போர்கள், அரசாங்க விரிவாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்த நாவலின் கதையம்சம் நடக்கிறது. வரலாற்றுப்படி பார்த்தால் தேவராய விஜயம் என்று இருக்க வேண்டிய நாவலின் பெயர் சாரதா விஜயம் என்றுள்ளதால் இந்த நாவலின் கதை முழுமையாக கற்பனை என்பது தெளிவு .
மித்ரோ மர்ஜானி – 1
எங்கள் குடும்பத்திற்காக உன்னை பெற்றெடுத்துத் தந்த உன் பெற்றோர் பாராட்டுக்குரியவர்கள். பெரும் புண்ணியம் தேடிக்கொண்டவர்கள்” என்றாள். பிறகு, மருமகளின் கையை வாஞ்சையுடன் தடவி ” மருமகளே, மித்ரோவின் விவகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் உன் கடைசி ஓரகத்தி யின் நடத்தை ஏன் இப்படி இருக்கிறது? மனதுக்குள்ளேயே சுருங்கிப் போகிறேன். வந்த எல்லா நல்ல சம்பந்தங்களையும்களையும் விட்டுவிட்டடு, எப்படி இங்கே போய் மாட்டிக் கொண்டேன்? அந்த இடம் அவ்வளவு சரியில்லை என்று சொந்தக்காரர்கள் அரசல் புரசலாக சொன்னார்கள். நான்தான் அவர்கள் வீட்டு ஆடம்பரத்தையும் பகட்டையும் பார்த்து மதி மயங்கிப் போனேன்.
மொழிபெயர்ப்பினாலான பயனென்கொல்?
எனக்கு நேரடியாகச் சந்தோஷம் கொடுக்கும் எழுத்தாளர்கள் சிலர் உண்டு. சில எழுத்தாளர்கள் என்னை யோசிக்கச் செய்வார்கள், அல்லது நல்ல விதமாக என்னைத் தொந்தரவு செய்வார்கள், அல்லது அவர்களின் பாத்திரங்களுக்காக என்னைக் கவலைப்படச் செய்வார்கள். லாஃபெர்ட்டி இவை எல்லாவற்றையுமே செய்தார், அவற்றை எல்லாம் மிகவும் நன்றாகவும் செய்தார். ஆனால் அவர் அதற்கு மேலும் ஏதோ செய்தார். ஒரு லாஃபெர்ட்டி கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது நான் சந்தோஷத்தால் புன்னகைக்கத் துவங்குகிறேன்.
தொள்ளாயிரம் பாட்டிகள்
ஆர். ஏ. லாஃபெர்ட்டி, இந்த எளிய, சுவையான கனியை, அண்ட வெளிக் கொள்ளைக்காரரும், அத்தனை எளிமையானவரல்லாதவருமான மையப்பாத்திரத்தின் முன்னால் தொங்க விடுகிறார். பாத்திரத்தின் பெயர், சேரன் ஸ்வைஸ்குட். சேரன் என்னவோ தான் ஒரு ‘ஸ்பெஷல் ஆஸ்பெக்ட்ஸ்” ஆள் என்று நினைக்கிறார். அதாவது மேன்ப்ரேக்கர் (மனிதரை உடைப்பவன்) என்றோ பாரல்ஹௌஸ் (பீப்பாய் வீடு) என்று முரட்டுத் தனமான பெயர்களைக் கொண்ட தன் சகபாடிகளைப் போல அல்லாது, தான் பண்பட்டவன் என்றும் நினைக்கிறார். அவர்களோ அத்தகைய பெயர்கள், அடித்துப் பிடுங்கவோ, கொள்ளை அடிக்கவோ உதவுகின்றன என்று நினைக்கிறார்கள். ‘சேரன் ஸ்வைஸ்குட்’ என்ற பெயரோ, அதிசயமான…. கிடைப்பதற்கரிய பொருட்களைத் தேடிப் பிடிப்பவரான ஒருவருக்குப் பொருத்தமான பெயராக இருக்கும்.
மந்தமான செவ்வாய்க் கிழமை இரவு
“லாஃபெர்ட்டி” கதை ஒன்றை முதல் முறையாகப் படித்த தருணத்தை நினைத்துப் பாருங்கள். அது “லாண்ட் ஆஃப் த க்ரேட் ஹார்ஸஸ்” ஆக இருக்கலாம், அது ஜிப்ஸிகளின் வேர் மூலத்தை விளக்குகிறது, புதுப் பாதை ஒன்றை வகுத்துக் கொடுத்ததும், ஹார்லன் எல்லிஸனால் பதிப்பிக்கப்பட்டதுமான ‘டேஞ்சரஸ் விஷன்ஸ்’ புத்தகத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. ஒருகால் நெபுலா பரிசை வென்ற கதைகளின் தொகுப்பு ஒன்றில்“யுரேமாஸ் டாம்” கதையை நீங்கள் படித்திருக்கலாம். அல்லது வீணான நிலையில் உள்ள பழைய புத்தகக் கடை ஒன்றில், இஃப் பத்திரிகையின் பழைய பிரதி ஒன்றை அகழ்ந்தெடுத்து, அதில் பிரசுரமான “பூமர் ஃப்ளாட்ஸ்” கதையைக் கண்டிருக்கலாம். அந்தக் கதையில் பிரபலமான மூன்று அறிவியலாளர்கள், டெக்ஸஸ் மாநிலத்தின் வளர்ச்சி பெற்றிராத ஒரு மூலைக்குப் பயணம் போகிறார்கள்,
ஏ பெண்ணே 9
போதும். என்னை ரொம்பவும் புகழ்ந்து ஆகாசத்தில் ஏற்றி விடாதே பெண்ணே! நான் நிச்சயம் உங்களுக்கெல்லாம் அம்மா தான், அதே சமயம் நான் உங்களிடமிருந்து வேறுபட்டவளும் கூட. நான் நானாக இருக்கிறேன். நான் நீயல்ல, நீயும் நானல்ல.அம்மா, தயவுசெய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்!
ஒப்புதல் (l’Aveu)
அங்கே, மேட்டுப்பாங்கான பகுதியில், படை வீரர்கள் போல வரிசை வரிசையாக பசுமாடுகள். அவை நிலத்தில் படுத்தவண்ணமும், நின்றவண்ணமும் அவ்வப்போது சூரியனின் கூசச் செய்யும் ஒளிகாரணமாக தங்கள் பெரிய கண்களைச் சிமிட்டியபடி மிகப்பெரிய ஏரிபோன்று பரந்துகிடந்த மணப்புற்களை மேய்வதும் அசைபோடுவதுமாக இருக்கின்றன.
பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக
இந்திய தேசிய பிரிவினையின் போதும், அதற்குப் பிறகும், மக்கள் அனுபவித்த துயரை, பல எழுத்தாளர்கள், நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைகள் வாயிலாக வெளிப்படுத்தினர். இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை “அம்ருத் மஹோத்ஸவ்” ஆக கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், நம் முன்னால் இருந்த சவால்களையும், அதில் நாம் கண்டடைந்த “பிரிவினைத் துயர்: பன்மொழி இந்திய இலக்கியங்கள் வாயிலாக”
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – பாகம் 2
“நீண்ட இழை மேபிள் (மரம்),” என்றார் ஸோர்கின், சுட்டியபடி. “பழைய ஸிட்கா ஸ்ப்ரூஸ் (மரம்). வார்ப்பு இரும்பு. நிக்கல். பதினெட்டு அடுக்குகள் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கின்றன, பார். அது யூரியா ரெஸின் ஒட்டுப் பசை. இதற்கு முன்னால் ஒரு காலத்தில் இதுவே மிருகத் தோல்களிலிருந்து காய்ச்சிய ஊன்பசையாக இருந்தது.”
அவர் கம்பிகளின் மேல் தன் கையைத் தடவினார். “எஃகிரும்பு. கூடவே செப்புக் கம்பியில் சுற்றிய எஃகிரும்பு.”
“இப்ப இங்கே பார்,” என்றார் அவர். “இது அத்தனை சிறப்பு. காஷ்மீர் (கம்பளம்).” அவனுடைய வியப்பைப் பார்த்து அவர் சிரித்தார். “ஆமாம், காஷ்மீர். திருப்பு முனைகளுக்கு அதைப் பயன்படுத்துகிறார்கள்.”
பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1
காய்கறிகளை வெட்ட உதவும் ஒரு சிறு பலகையையும், சீவுவதற்குப் பயன்படும் கத்தி ஒன்றையும் வெளியே எடுத்தார். சாக்லெட்டின் மீது கத்தியால அழுத்தி வெட்டுமுன்னர், கத்தியை இப்படியும் அப்படியும் நகர்த்தி அலைத்தார், பிறகு ஓரிடத்தில் இலேசாகப் பொருத்தினார். எதனுள்ளும் என்ன இருக்கிறது என்று தெரியாமல் அதைத் தன் வாய்க்குள் போடுவது அவருக்கு ஏற்காது. கத்தி இறங்கி, சாக்லேட்டுக்குள் காரமெல் இருப்பதைக் காட்டியது. ஒரு பாதித் துண்டை எடுத்து அதைத் தின்றார். அதைத் தின்னும்போதே, சிலர் அந்த சாக்லேட்டுக்குள் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளாமலே அந்த சாக்லேட் முழுவதையும் குருட்டுத்தனமாக வாயிலிட்டுத் தின்று விடுவார்கள் என்று நினைக்கவும் அவர் உடலில் நடுக்கம் பரவியது.
அலெக்சாந்தர்
அதொரு சிறிய ஊர். ஒவ்வொருநாளும் எஜமானியும் அலெக்சாந்தருமாக ஆற்றை நோக்கிச் செல்கிறபோது எதிர்ப்படும் மனிதர்கள், இருவருக்கும் மரியாதை நிமித்தம் வணக்கம் கூறுவதுண்டு. அம்மரியாதையை வீட்டு எஜமானிக்குக் கொடுப்பதில் சிறிதும் குறையாமல், சக்கர நாற்காலியைத் தள்ளும் பெண்மணியின் பணியாளுக்கும் கொடுப்பதாக நீங்கள் நம்பலாம், காரணம் அவரும் வயதானவர், முன்னாள் ராணுவவீரர் வேறு, போதாதற்கு திருச்சபை மனிதர்களுக்குரிய வெண்ணிறத் தாடியுடன் இருக்கிறார், நல்ல வேலைக்காரர் எனவும் ஊரில் அறியப்பட்டிருந்தார்.
கயோட்டீ கதைகள்
“வெறும் கதைகள். நீ, நான், எல்லாரும், நாமெல்லாம் கதைகளின் ஒரு கூட்டம், அந்தக் கதைகள் என்னவாக இருக்கின்றனவோ அதெல்லாம்தான் நாமாக இருக்கிறோம். பழங்குடிகளைப் போலவேதான் வெள்ளையருக்கும். ஒரு பழங்குடிச் சமூகத்துக்கும், நகரத்துக்கும், நாட்டுக்கும், உலகத்துக்குமே இதேதான் பொது. இந்தக் கதைகள் எல்லாமாகச் சேர்ந்து, எப்படிப் பின்னிச் சேர்கின்றனவோ அதெல்லாம்தான் நாம் யார், என்ன, எங்கே எப்படி இருக்கிறோம்னு சொல்லுதுங்க.”
“மறக்கிறத விட்டுட்டு நினைவுபடுத்திக்க ஆரம்பிக்கணும் நாமெல்லாம். இது வேணும், அது வேணுமின்னு கேட்கறதை நிறுத்தணும், நமக்கு வேணுமுன்னு நாம நினைக்கிறதை ஜனங்க நமக்குக் கொடுப்பாங்கன்னு காத்திருக்கறதை நிறுத்தணும். நமக்குத் தேவையானதெல்லாம் கதைங்கதான்.