இந்தியத் தொன்மத்தின் மனவெளியில்

This entry is part 2 of 3 in the series ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ

அனைத்திற்கும் முன்னே வருவது “மனஸ்”. அதற்கோ தான் இருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாது. ஆதித்தருணத்தின் கடவுள், அதற்கு முதலில் பெயர் கூட கிடையாது, வெறும் “பிரஜைகளுக்கெல்லாம் அதிபதி” என்ற பட்டம் மட்டுமே. ஆனால் இதைக்கூட இந்திரன் பிற்காலத்தில் அதனிடம் “உங்களைப் போல் நான் ஆவதெப்படி” என்று கேட்கையில்தான் அது உணர்ந்து கொள்கிறது.
“ஆனால் நான் யார் (க)” என்ற கேள்வியுடன் பிரஜாபதி பதிலளிகிறார்.
“அதேதான், தாங்கள் தங்களை எவ்வாறு அழைத்துக் கொள்கிறீர்களோ அதுதான் நீங்கள், நீங்கள்தான் யார் (க) ” இந்திரன் பதிலளிக்கிறான். ஆக, பிரஜாபதி “க” வாகிறார்.

தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?

ஓ! நாட்டின் வளர்ச்சி முதல் தேவை!. மற்றவையெல்லாம் பிறகுதான் என்றால் நான் கேட்கிறேன்! பாகுபாடுகளை நிவர்த்திப்பது எவ்வாறு வளர்ச்சியைத் தடைசெய்யும்? சமுதாயத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பாகுபாடுகளை நிவர்த்தி செய்வதும் வளர்ச்சியோடு சேர்ந்ததுதானே.

திருக்கோயில்களில் நவக்கிரகங்களின் அமைப்பு

கோள்களை வழிபடுவது பழைய மரபாயினும் கோள்கள் ஒன்பதையும் ஒருங்கே பீடமேற்றி, ஒன்றாக வழிபடும் முறைமை பிற்கால சோழர்கள் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்து ஆலயங்களில், குறிப்பாக சிவாலயங்களில் நவக்கிரக சன்னதிகள் பல்வேறு நிலைகளில், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவாக, வைதீக மற்றும் ஆகம விதிப்படி இரு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகள் அமைக்கப்படுகிறது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி முதலான ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாகச் சுற்றுகின்றன…

பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்

எம்பெருமான் நாராயணன் இப்பூவுலகில் வந்துதித்த போதில் அவரின் திருப்பாதங்கள் முதன் முதல் பட்ட இடம் திருவேங்கடம்தான். அத்தகு தெய்வத் தன்மை பொருந்திய திருவேங்கடத்தை ஆழ்வார் பெருமக்கள் பலர் மங்களாசாசனம் செய்து அனுபவித்திருக்கின்றனர். மூவாழ்வார்களில் முதலாம் ஆழ்வாரான பொய்கையாழ்வார் தம் முதல் திருவந்தாதியில் பல இடங்களில் திருவேங்கடத்தைப் போற்றிப் பாடி “பொய்கையாழ்வார் அனுபவித்த திருவேங்கடம்”

மண் உறும் முரசு இனம் மழையின் ஆர்ப்பு உற

இப்பாடலில் கம்பர் கோசல நாட்டின் அமைச்சர்களின் சிறப்பைக் கூறுகிறார். ஒரு நாடு என்பது மன்னனால் மட்டுமே ஆனது அல்ல. ஆக்கபூர்வமாக இயங்கும் ஒரு நாட்டில் அரசு, அமைச்சு, படை, வணிகம், வேளாண்மை ஆகியவை சிறப்பாக இருக்கும். அவ்வாறான நாட்டில் ஓர் அரசின் பணி வாணிகம் செழிக்கவும் குற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருக்கும். அவ்வாறான நிலையில் அமைச்சுப் பணி அதற்கென சில தன்மைகளைக் கொண்டதாக இருக்கும். கோசல நாட்டின் அமைச்சர்கள் தலைமுறைகளாக அப்பணியைச் செய்து வருபவர்கள். அமைச்சுப் பணியின் அடிப்படைகளை – மனநிலைகளை தந்தையிடமிருந்து பாட்டனிடமிருந்து பெற்றவர்கள். அப்பணியின் நுணுக்கங்களும் விபரங்களும் சிறு வயது முதல் கேட்டு அறிந்தவர்கள்.

அருளிச்செயல்களில் அணைகட்டுதல்

பாசுரத்தின் நான்கு அடிகளும் ‘வெற்பு’ என்னும் ஒரே எதுகை பெற்று வரும். வெற்பு என்பது மலையைக் குறிக்கும். இப்பாசுரத்தில் மந்தர மலையை எடுத்துக் கடலைக் கலக்கியதும், வானரர்களைக் கொண்டு மலைகளை எடுத்து தெற்குக் கடலிலே அணைகட்டியதும், மலையாலே சூழப்பட்ட இலங்கையின் அரணை அழித்ததும், கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்ததும் சொல்லப்படுகின்றன.

”வெற்பெடுத்து வேலைநீர் கலக்கினாய், அதன்றியும்
வெற்பெடுத்து வேலைநீர் வரம்புகட்டி வேலை சூழ்

தொழில்நுட்ப மயக்கங்களும் நவீனத்துவத்தின் முடிவும் – மைக்கேல் சகசாஸ்

சார்லஸ் டைலர் கனடாவைச் சேர்ந்த தத்துவவியலாளர். இவரது ‘எ செக்யூலர் ஏஜ்’ என்ற புத்தகம், சமயம் மற்றும் சமயசார்பின்மை பற்றி பேசுகிறது. சமய நம்பிக்கை வலுவிழப்பதால் சமயசார்பின்மை வளர்வதில்லை, மாறாய் தன்னைத் தவிர பிறிதொன்றுக்கு இடமளிக்காத மானுட நேயமே அதன் வளர்ச்சியின் அடிப்படையாய் இருக்கிறது, என்றார் அவர். இக்கருத்து, கட்டுரையில் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது…..பல பரிமாணங்களும் நுட்பங்களும் கொண்ட அவரது வாதத்தின் ஒரு சிறு பகுதியை இங்கு பயன்படுத்திக் கொள்ளவே அவர் எழுதிய ‘எ செக்யூலர் ஏஜ்’ நூலைச் சுட்டுகிறேன். வசீகரமிழத்தல் (disenchantment) குறித்த அவரது புரிதல் முக்கியமானது.

நவீனத்துக்கு முற்பட்ட சமூக இயல்புகளில் மாயங்கள் நிறைந்த உலகம் (enchanted world) என்ற பார்வையும் ஒன்று. அதைக் கடந்த பின்னரே, டைலரின் பொருளில் சமயச்சார்பற்ற உலகம் ஒன்று தோன்ற முடியும்.

அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து

அருண்  ஷௌரியின் வாழ்வு துயர் தோய்ந்தது. அவரது மகன், cerebral palsyயாலும் மனைவி Parkinson’s Diseaseஆலும் அவதிப்படுகின்றனர். செரிப்ரல் பால்ஸி, உடல் இயக்கங்களை மெல்ல மெல்லச் சீரழிக்கிறது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் மூளையின் செயல்பாட்டை மெல்லச் சீர்குலைக்கிறது. இரண்டுமே தொடர்ந்து முற்றி, முடிவில் மரணத்துக்கு இட்டுச் செல்லும் நோய்மை நிலைகள். “அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து”

தேரிகாதா- மூத்த பெளத்தப் பெண் துறவிகளின் கவிதைகள்

துறவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி வித்தியாசம் இருக்க முடியும்? ஏன் மெய்மை தேடும் பயணத்தில் ஓர் ஆண் பெண்ணை இடைஞ்சலாகக் கருத வேண்டும்?. ஏன் பட்டினத்தார் போன்ற துறவிக்கே ’கண் காட்டும் வேசியர் தம் கண் வலையில் சிக்கி மிக அங்காடி நாய் போல் நெஞ்சம் அலைய’ வேண்டும்? ஏன் ஏக நாதனின் இறையடி இறைஞ்ச போக மாதரைப் போற்றுதல் ஒழிய வேண்டும்? காமம் கடைசி வரை தெரு நாயாய்த் துரத்தும் போலும். ஏன் பின் காமத்தை வெல்லும் தன் இயலாமையாய்ப் பாடாமல் பெண் மேல் ஏற்றி பழித்துப் பாட வேண்டும்? மனம் கடந்து மெய்மை தேடும் பயணத்தில் ஆணென்ன? பெண்ணென்ன? பட்டினத்தார் பெருந் துறவி. ‘பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப் பிள்ளையைப் போல் ஆரும் துறக்கை அரிது’ என்பார் தாயுமானவர். பெண்ணைப் பெண்ணென்பதற்காகப் பழிப்பது பட்டினத்தார் நோக்கமாக இருக்க முடியுமா?

மதப் போர்கள்

2014 ஆம் ஆண்டில் ஜூன் மாதம், அல் கைதாவிலிருந்து உடைந்து போன ஒரு குழு, குறிப்பிடும்படியான வகையில் கொடூரமான குழு எனலாம், இந்தக் குறிக்கோளை அடைந்தது, ஆனால் தன் மூலக்குழுவைப் பகைத்துக் கொள்ளவும் செய்தது. ஈராக்- சிரியாவின் எல்லைப் பகுதியின் இருபக்கங்களிலும் பெரும் நிலப்பரப்பை வென்று கைப்பற்றிய, இஸ்லாமிச அரசு என்ற இந்தக் குழு, தன் தலைவரான அபு பக்ர் அல்- பாக்தாதி இனிமேல் காலிஃப் இப்ரஹிம் என்று அறியப்படுவார் என அறிவித்தது…. இந்தப் புது காலிஃபும் அவரது சகாக்களும் இறுதித் தீர்ப்பு வரும் நாளுக்காகத் தயாரிப்புகளில் இறங்கி இருக்கிறார்மள். அது உடனே வரவிருக்கிறது என்று இவர்கள் நம்புகிறார்கள், இந்த நாளில் மார்க்கத்திலிருந்து தவறியவர்களும், சிலை வணக்கம் செய்வாரும் உலகிலிருந்து அழிக்கப்பட்டு உலகு சுத்திகரிக்கப்படும் என்றும் நம்புகிறார்கள்.

கானமழை பொழிகின்றான்…

வாசிப்பில் ஆழ்ந்தவனின் சிவந்தகண்கள் தன் இசையில் இணைந்து இயைந்து மயங்கிக் கிறங்கிக் கோணி எங்கோ நோக்குகின்றன; சிவந்தவாய் குழலை ஊதுவதற்காகக் காற்றை உறிஞ்சுகிறது; புருவங்கள் வளைந்து காண்கின்றன. அவற்றில் வாசிப்பின் மும்முரத்தால் சிறுவியர்வை படர்ந்திருக்கிறது. இப்படி ஒரு குழலூதுபவனைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். இத்துணை மும்முரமாக ஒருவன் குழல் இசைத்தால் என்னவாகும்? பிரபஞ்சமே தன் சுழற்சியை மறந்துநிற்கும். பறவைகள் குஞ்சுகளுக்கு உணவளிப்பதனையும் மறந்து, தமது கூடுகளைத்துறந்து வந்து காட்டில் பரவிக்கிடக்கின்றன. மேய்ச்சலுக்கு வந்த மாடுகள் தமது கால்களைப்பரப்பிக் கொண்டும், தலையைத் தாழ்த்திக்கொண்டும் காதுகளைக்கூட அசைக்காமல் அந்த இசையைக் கேட்டபடிக்கு நின்றனவாம்.

கன்றின்பின் போக்கினேன் எல்லே பாவமே!

‘மைபோல நிறம்கொண்டவன் என் பிள்ளை. இந்த ஆயர்குலத்துக்கே அவன் கொழுந்தாக விளங்குபவன். அவனை அழகாக நீராட்டி, அவன் விருப்பப்படி வீடுவீடாகச் சென்று குறும்புகள்செய்து விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருக்க எனக்கு ஆகவில்லையோ? கம்சனை அழித்த வீரக்கழல் அணிந்த அந்தத் திருவடிகள் நடந்து நடந்து வலிக்குமே! மாடுகளை ஓட்டி ஓட்டிக் களைத்திடுமே! இவ்வாறு சிறிதும் சிந்தியாமல் அவனை கன்றுகாலிகள் பின் அவன் கெஞ்சினான் என்று அனுப்பிவிட்டேனே! ஏன்தான் இப்படிச் செய்தேனோ? சிறுகுழந்தையை இவ்வாறு அனுப்பியது நான் செய்த பாவமே,’ என மனம்பதைக்கிறாள் அவள். கம்சனை அழித்த செயல் ஆய்ப்பாடியினின்று கண்ணன் சென்றபிறகே நிகழ்ந்தது. யசோதைக்கு இப்போது இதனைப்பற்றித் தெரிந்திருக்க வழியில்லை. பெரியாழ்வாரின் ஆர்வத்தில் எழுந்த பாடல்கள் இவை; அவ்வாறே படித்துப் பொருள்கொள்ள வேண்டும்

அறிவியலும் மதமும் – கிறீத்துவத்தை முன்வைத்து

பைபிள் தீர்க்கமான அறிவியல் எதையும் முன்வைக்கவில்லை. அதன் கதைகளிலிருந்தும் பாடல்கள்/கவிதைகளிலிருந்தும் எடுக்கப்பட்ட வரிகளிலிருந்து, அவை அரிஸ்டாட்டிலின் அறிவியலுடன் இயைந்தவையாக இருந்தமையால், புவிமையக் கொள்கை (Geocentirc Model5) கிறீத்துவ அறிவியல் கொள்கையாக உருவாக்கப்பட்டது. அரிஸ்டாட்டிலின் புவிமையக் கொள்கைக்கு முதல் பொருட்படுத்தத் தகுந்த மாற்றுக் கொள்கை கிறீத்துவத்தின் உள்ளிருந்தே எழுந்தது. சூரிய மைய வானியல் கொள்கையை (Heliocentrism6) முன்வைத்த கோப்பர்நிக்கஸ் ஒரு கத்தோலிக்க மதப்பணியாளர். அந்த காலத்துக்கு அது பெரும் புரட்சிகர கோட்பாடாக இருந்தது. அன்றைய அறிவியலையும் பொது நம்பிக்கைகளையும் மத நம்பிக்கைகளையும் அது புரட்டிப்போட்டது. அரிஸ்டாட்டிலிய‌ அறிவியலறிஞர்கள் பலராலும் நிராகரிக்கப்பட்டது. வெளியிடப்பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகுகூட 15 அறிவியல் அறிஞர்களே சூரியமையக் கொள்கையை ஆதரித்தனர், பின்பற்றினர் என்கின்றனர் வரலாற்றாய்வாளர்கள். அவற்றில் இருவரின் விதிமீது கிறீத்துவம் தீர்ப்பெழுதியது.

அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!

யசோதையின் கூற்றாகத் திருவெள்ளறையில் உறையும் பிரானைப்பாடுகிறார் பெரியாழ்வார். ‘சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை,’ என்றும், ‘மதிள்திரு வெள்ளறை’ என்றும், ‘முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை,’ என்றும் அவ்வூரைப் புகழ்கிறார். …“காடுகளிலிருந்து நாவல்பழங்களைக் கொண்டுவந்து விற்ற ஒருபெண்ணிடம் அவ்வளைகளைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக நாவல்பழங்களை வாங்கித்தின்கிறான். நான் அந்தப்பெண் கையில் என் மகளின் வளைகளைப் பார்த்து, ஏனடா கிருஷ்ணா என் மகளின் வளையைக்கொடுத்தாய் எனக்கேட்டால்…

கன்று மேய்க்க ஒரு கோல் கொண்டுவா!

மலர்களில் மிக உயர்ந்தவை என மனிதர்கள் கொண்டாடும் சிலவகை மலர்களைக் குழந்தைக்குச் சூட்டி அழகுபார்க்க எண்ணுகிறாள் அன்னை. அவன் தன்னுடைய அழைப்புக்கும் ஆசைகாட்டுவதற்கும் மயங்கிவருவான் என எதிர்பார்ப்பது எதனால்? குழந்தை வளரும்பொழுதில், “இப்பொருள் உயர்ந்தது; இது அழகுமிக்கது; இது உனக்கு நல்லது,” என்பதெல்லாம் தாய் கூறித்தான் குழந்தை அறிந்துகொள்கின்றது. இல்லாவிடில், தெருவோரச் செடியில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான அந்திமந்தாரையும், அரிதாகக் கிட்டும் செண்பகமலரும் அவனுக்கு ஒன்றுதான். தாய் கூறித்தான் இம்மலர்கள் உயர்ந்தவை, மணமிக்கவை, மிக அரியவை, விலைமதிப்பற்றவை என அறிந்துகொள்கிறான். அவளும் இவற்றையெல்லாம் கூறி அவனை ஆசையாக அழைத்துத் தன் உள்ளப்படி அவன் நடந்துகொள்ளுமாறு செய்கிறாள்!
‘மேகங்கள் போலக் கருத்தநிறம் கொண்டு, அவற்றின் குளிர்ந்த தன்மையையும் உடையவன் நீயல்லவோ குழந்தாய்! ஏழுலகும் உய்ய எங்கள் ஆய்ப்பாடியில் வந்து பிறந்தாய். உனக்கு மணம்மிக்க மல்லிகைப்பூவைச் சூட்டுவேன், வருவாயாக,” என அன்போடு விளிக்கிறாள்.

கிருஷ்ணனுக்குப் பன்னிரு நாமங்கள்

அன்னை யசோதைக்கும் தன் செல்லக்குழந்தை கிருஷ்ணனின் காதுகளில் துளையிட்டு, மற்றச் சிறுவர்களைப்போல் அழகழகான காதணிகளை அணிவித்துப் பார்க்க ஆசை இராதா? பெரியாழ்வாரின் திருவாய்மொழியாக நாம் இங்கு காணப்போவது வெகுசுவாரசியமான இந்த நிகழ்ச்சியைத்தான்! யசோதையின் ஒருதலைக்கூற்றாகப் (monologue) பாசுரங்களாக்கி இந்தக் காதுகுத்தும் நிகழ்ச்சியைக் கதைப்போக்கில் அளித்துள்ள அழகும் நயமும் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுவிடுகின்றன. இதில் இன்னும் ஒரு அழகான விஷயம் என்னவென்றால் திருமாலடியார்கள் உயர்வாகக்கருதும் கிருஷ்ணனின் பன்னிரு திருநாமங்களைக் கொண்டு இப்பாடல்களை அமைத்துள்ளதுதான்!

மாமதீ! மகிழ்ந்தோடி வா!

பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத்தமிழ் நூல்களில் ஏழாம் பருவமான அம்புலிப்பருவத்தில் இத்தகைய உபாயங்களால் அம்புலியை அழைப்பது அழகுறப் பாடப்பட்டது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் இந்த உபாயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன. இவை இலக்கிய இன்பத்தை, அதன் சுவையை மேலும் இனிதாக்குகின்றன……

கொடும்பாலையில் மறுபடி துளிர்க்கும் ஜோராஸ்ட்ரியனியம்

உலகின் இரு பெரும் செமிதிய மதங்கள் சகிப்புத்தன்மை அற்றவை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். அவற்றில் ஒன்று, இப்போது காருண்யம் என்பதே உலகுக்குத் தான் அளித்த கொடைதான் என்று பாவலா செய்து உலகரங்கில் தொடர்ந்து பெரும் நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. அத்தகைய பிம்பம் நிலவத் தேவையான ஊடகப் பிரச்சாரங்கள், உலகைக் கொள்ளை அடித்துக் கொழுத்த செல்வந்த நாடுகளான யூரோப்பிய நாடுகளின் உதவியுடன் ஆசிய ஆஃப்ரிக்க நாடுகளில் பாகனியத்தைப் பூண்டோடு அழிக்கத் தன் பிரச்சாரகர்கள் மூலம் பொய்களே நிறைந்த பிரச்சாரங்கள் என்று எல்லா வகை முயற்சிகளையும் செய்து வருகிறது. இன்னொன்று துவக்கத்திலிருந்தே கத்தியை, பெருங்கொலைகளை, ஆக்கிரமிப்பை, போரை, வன்முறையை நம்பி உலகெங்கும் பரவி இருக்கிறது, இன்றும் அதே வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது, வெற்றி பெற்ற போர்த்தந்திரத்தை எதற்காகக் கைவிட வேண்டும் இல்லையா?

பாடுதும் காண் அம்மானை-2

பழங்காலந் தொட்டு வாய்மொழி இலக்கியமாகவே இருந்த இந்தப் பழமையான அம்மானை விளையாட்டை கி. பி. 2ம் நூற்றாண்டில் முதன்முதலாக எழுத்தில்- சிலப்பதிகாரத்தில் பதிவு செய்தவர் இளங்கோவடிகள் என்கிறது தமிழ் விக்கிபீடியா. சிலப்பதிகாரத்தில் வாழ்த்துக் காதையில் இளங்கோவடிகள் ‘அம்மானை வரி’ என நான்கு பாடல்களைப் பாடியுள்ளார். இவை சோழ வம்சாவளி வழிவந்த மன்னர்களின் பெருமையை விளக்கிக் கூறி, அத்தகையதொரு சோழ மன்னனை அடைய விழையும் பெண்களின் விருப்பமாகப் பாடப்படுகின்றன.

பாடுதும் காண் அம்மானை!

அடுத்த பெண் இதற்கான மறுமொழியைத் தயாராக வைத்திருக்க வேண்டும்!! அவளும் சளைக்காமல் உடனே, “அழகான வில்லும் யானைத்தோல் போர்வையும் உடல் மாதின் அங்கமும் ஆனாலும், அடியே! ஆராய்ந்து பார்த்தால் அவர் எடுப்பது பிச்சை அல்லவோ, அம்மானை,” என்று ஏளனமாகக் கேட்டபடி அம்மானையை வீசுகிறாள்.

வெண்முரசு – ஒரு பார்வை

எத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்). ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளை பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது.

'சச் நாமா'

தஹார் ஒருநாள் தனது நாட்டிலிருக்கும் ஒரு அற்புதமான சோதிடரைக் குறித்து கேள்விப்படுகிறான். அவரைக் காண தனது பட்டத்து யானையின் மீதேறிச் செல்கிறான் தஹார். அவரது எதிர்காலத்தைக் கணித்த சோதிடர், தஹாருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறுகிறார். அதே சமயம் அவரது சகோதரியால் அவருக்கு உண்டாகக் கூடிய ஆபத்துக்களைக் குறித்தும் தஹாருக்கு விளக்கிச் சொல்கிறார். எதிர்வரும் காலத்தில் யார் தஹாரின் சகோதரியை மணக்கிறார்களோ அவரால் தஹாருக்கு பேராபத்து நிகழவிருப்பதாகவும், அவனே தஹாரைக் கொன்றுவிட்டு இந்த நாட்டை ஆள்வான் என்கிறார் சோதிடர்.

ஆயிரம் தெய்வங்கள்

இந்திய புராண வழக்கில் மகாபாரதம் எப்படியோ அப்படியே ஹோமரின் இலியத் – ஒடிஸ்ஸே. ஏறத்தாழ இலியமும் பாரதமும் கொண்டுள்ள ஒருமித்த கருத்துகள் வியப்பாக உள்ளன. பாரதப் போரின் தொடர்ச்சியாக ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் கதைகளில் உள்ள ஆன்மிக வாசனையை ஒடிஸ்ஸேயின் தொடர்ச்சியில் காண்பதரிது. சோகரசங்களில் ஒற்றுமை காணப்படும். பாரதப் “ஆயிரம் தெய்வங்கள்”

ஆயிரம் தெய்வங்கள் – ஈராஸ் – சைக்கே காதல்

கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த தெய்வக்கதை மற்ற கிரேக்க புராணங்களிலிருந்து மாறுபட்டு விளங்குகிறது. அபூலியஸ் பிளாட்டோவின் சீடர். பிளாட்டோவை ஒரு பகுத்தறிவாளராகக் கருத இயலாது. அவர் புறப்பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் உயர்ந்த குறிக்கோள்வாதி என்றாலும், உயர்ந்த குறிக்கோளின் உன்னத நிலையை அழியாத ஆன்மாவாக ஏற்றுக் கொண்டவர். மேலோட்டமாகப் பார்த்தால் பிளாட்டோவோ, அபூலியஸோ கண்ணால் பார்க்க முடியாத இரவுப் பிராணியுடன் மானுடப் பெண் உறவு கொள்ள முடியும் என்பது அறிவுக்குப் பொருந்தாது என்றாலும் சில உண்மைகளை மனித உணர்வுகளுடன் வெளிப்படுத்த தெய்வங்களைக் கையாள்கின்றனர்.

ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க சோகக்கதை ஆடிப்பஸ்

தம் வளர்ப்புப் பெற்றோர்கள்தான் தன் தாய் தந்தையர் என்று நம்பி வளர்ந்து ஆளாகிறான் ஆடிப்பஸ். ஆனால் ஒரு குடும்பத் தகராறில் அவனது பிறப்பின் ரகசியம் வெளிப்பட்டு விடுகிறது. ஆடிப்பஸ் தன் பெற்றோரைத் தேடிச் செல்கிறான். கொரிந்த் நாட்டை விட்டு வெளியேறும் ஆடிப்பஸ் ஒரு நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு பல கிராமங்கள் நகரங்கள் தேசங்கள் என்று தன் தேடலைத் தொடர்கிறான். தன் பயணங்களில் டெல்ஃபி என்ற ஊர் வந்து, அங்கு அருள்வாக்கு கேட்கும்போது “விரைவில் நீ உன் தந்தையைக் கொன்று தாயைத் தாரமாக்கிக் கொள்வாய்” என்று பதில் வந்தது.

ஆயிரம் தெய்வங்கள் – ஓடிஸ்ஸஸ் ஊர் திரும்பிய கதை

கிரேக்க ஓடிஸ்ஸஸ் லத்தீன் வழக்கில் யூலிஸ்ஸஸ் ஆயிற்று. ஆங்கில கவிஞர், டென்னிஸனா எபைரனா என்று சரியாக நினைவுக்கு வரவில்லை, யூலிஸ்ஸஸ் ட்ராயிலிருந்து ஊர் திரும்பும்போது ஃபாசி என்ற தீவில் போதை மயக்கத்தில் சிக்கிக்கொண்ட விவரத்தை மையமாக வைத்து ‘லோட்டஸ் ஈட்டர்ஸ்’ என்ற கவிதை எழுதியிருக்கிறார். நயமான கவிதை. இலியத் போர் முடிவுற்றபின் ட்ராயிலிருந்து ஓடிஸ்ஸஸ் தன் சொந்த தேசமான இதாகாவுக்குத் திரும்பிய கதை இலியத் காவியத்தின் தொடர்ச்சியாகக் கருதப்படுகிறது.

ஆயிரம் தெய்வங்கள் – மரக்குதிரையும் ட்ரோஜன் படுகொலையும்

ட்ராய் வெற்றிக்குப்பின் கிரேக்க வீரர்கள் கப்பல்களில் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தனர். கப்பல்கள் யூபோயோ தீவுக்கு வந்தபோது நாப்னையஸ் நள்ளிரவில் தன் நண்பர்களுடன் கப்பல்களைத் தீயிட்டுக் கொளுத்தினான். அவற்றில் இருந்த கிரேக்க வீரர்களும் எரிந்து சாம்பலாயினர். ஆனால் மெனலாஸ், அகமெம்னான், ஒடிஸ்ஸஸ் மூவரும் ட்ராயில் தங்கிவிட்டதால் உயிர்தப்பினர். அவர்களை விதி வேறுவிதமாக தண்டித்தது.

ஆயிரம் தெய்வங்கள் – இலியத் – ஒடிஸ்ஸே

ஸீயஸ் மனம் குளிரும்படி ஸீயஸ்ஸுக்கு யாகம் நடத்தினார். நிறைய பலிகளை வழங்கினார். ஸீயஸ் மனம் மகிழ்ந்து நல்ல சகுனங்களைத் தோற்றுவித்தார். யாகம் நிகழ்ந்தபோது, ஹோம குண்டத்திலிருந்து ஒரு சர்ப்பம் வெளிவந்து அருகில் உள்ள மரத்தில் மேல் சென்று தாய்ப் பறவையையும் அதன் ஏழு குஞ்சுப் பறவைகளையும் உண்டுவிட்டு கீழிறங்கி கல்லாய் மாறியது. இதற்கு விளக்கம் அளித்த கல்காஸ், இலியத் முற்றுகை பத்தாண்டுகள் நிகழும் என்றும், ட்ரோஜன்கல் மடிவர் என்றும் இறுதி வெற்றி கிரேக்கர்களுக்கே என்றார்.

ஆயிரம் தெய்வங்கள் – ஜேசன்

பாம்புப் பற்களை உழுத வயலில் விதைத்ததும் நாகாசூரர்கள் மண்ணிலிருந்து வெளிப்பட்டு ஜேசனைத் தாக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ஜேசன் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து நின்று கற்களைக் கொண்டு திருப்பித் தாக்கினான். தாக்குதல் எங்கிருந்து நடைபெறுகிறது என்று குழப்பமடைந்த நாகாசூரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு மரணமடைந்தனர்.

ஆயிரம் தெய்வங்கள் – ஜேசனும் ஆர்கோஸ் வீரர்களும்

கிரேக்க இலக்கியத்தில் வீர சாகசக் கதைகளில் ஜேசனும் ஆர்கோநாட்ஸும் மிகவும் சுவை நிரம்பியது. ஹெலன் ஆஃப் ட்ராய் போல் ஜேசன் அண்ட் த ஆர்கோநாட்ஸ் என்றொரு ஹாலிவுட் திரைப்படம் அந்த நாளில் வந்திருக்கிறது.அயோல்கஸ் நகரை ஆண்டு வந்த ஏசன் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான். க்ரீத்தியாவுக்கும் டைரோவுக்கும் பிறந்த ஏசனின் தாய்மீது மோகம் கொண்ட பாசிடான், பீலியஸ் என்ற மகனையும் டைரோவுக்கு வழங்கினான். பீலியஸ் தன் அண்ணனைக் கொன்று அவனது அரசைக் கைப்பற்றி ஏசனின் மகனான ஜேசனை அனாதையாக்கினான்.

ஆயிரம் தெய்வங்கள் – தேசீயஸ்

ஹீராக்ளீஸ் தெய்வத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளதோ அதே அளவு வலிமையும் வல்லமையும் உள்ள தேசீயஸ் ஏதேன்ஸின் ஹீராக்ளீஸ் என்று அழைக்கப்படுகிறான். தேசீயஸ் ஜனனத்தைப் பற்றிய மாறுபட்ட கதைகள் உண்டு.

ஆயிரம் தெய்வங்கள் – 21

ஹீராக்ளீசின் தங்க வேட்டை சுயநலத்துக்கு இல்லையென்றாலும் இதில் பெற்ற வெற்றியின் முடிவு இருபதாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட ‘மேக்கென்னாஸ் கோல்டு’ போன்ற பல ஹாலிவுட் படங்களுக்குரிய கதைக்கருவை வழங்கியுள்ளதாகவே கவனிக்கலாம். நீரியஸ் காட்டிய பாதை அப்படிப்பட்டது.

ஆயிரம் தெய்வங்கள் – கிரேக்க இந்திரன்

டி.டி. கொஸாம்பி, ஏ எல் பாஷ்யம் போன்ற வரலாற்று அறிஞர்கள் யதுகுல வீரனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுடைய சாகசங்களும் ஹீராக்ளீஸின் சாகசங்களும் ஒப்பிடத்தக்கவை என்று கூறினாலும் ஜனனக்கதை வேறுபடுகிறது. ஹீராக்ளீஸ் முதல் நிலை தெய்வமல்ல. சக்தி குறைவான தெய்வமே.

ஆயிரம் தெய்வங்கள் – ஹேடஸின் நரக சாம்ராஜ்ஜியம்

இறந்தவர்களின் ஆன்மாக்கள் ஹேடஸ் நரக சாம்ராஜ்ஜியத்தில் நீதி விசாரணைக்கு ஆளாகின்றன. மூன்று நீதிபதிகள் கொண்ட டிரிப்யூனல் – அதாவது மைனாஸ், அயாக்கஸ், ராடமைந்தஸ் ஆகிய மூவரும் தீர்ப்பு வழங்கும் உரிமை உள்ளவர்கள். வரலாற்றில் ராடமைந்தஸ் பெயரில் கோட் ஆப் க்ரீட்டன் லாஸ் என்று புராதன கிரேக்க நகர அரசுகளில் நீதி பரிபாலனச் சட்டங்களாகச் செயல்பட்டன.

ஆயிரம் தெய்வங்கள் – 18

பாசிடான் ஸீயஸ்ஸின் அண்ணன். மண்ணுலகையும் விண்ணுலகையும் ஸீயஸ் ஆண்டான். ஆழி சூழ் உலகைப் பாசிடோன் ஆண்டான். சமுத்திரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு அவன் பெற்ற விதிப்பயன். சிறுவனாயிருந்தபோது அவன் டெல்சைனஸ் பொறுப்பில் விடப்பட்டான். டெல்சைனஸ் உலோகங்களை வளைத்து ஆயுதங்களைச் செய்வதில் வல்லவன்.டெல்சைனஸின் தங்கை ஹலியாவைப் பாசிடான் மணந்துகொண்டு ஆறு புதல்வர்களையும் ஒரு புதல்வியையும் பெற்றுக் கொண்டான். அப்புதல்வியின் பெயர் ரோடஸ். அதே பெயரில் அவன் நினைவாக கிரேக்கத் தீவு உண்டு.

ஆயிரம் தெய்வங்கள் 17

இலியத் போரில் சாகசம் புரிந்த பெண் வீராங்கனைகளில் அமேசான் அரக்கியர் பிரபலமானவர்கள். இவர்களின் வீரத்திற்குக் காரணம் ஆர்ட்டமிஸ் மீது கொண்ட அளவுகடந்த பக்தியே. அன்றைய ஆசியாமைனரில் எஃப்சஸ் என்ற இடத்தில் இவர்கள் ஆர்ட்டமிசுக்குக் கோவில் கட்டி வழிபட்டனர். பின்னர் ரோமானியர்களால் வெல்லப்பட்ட பின்னர் ஆர்ட்டமிஸ் தெய்வத்தை ரோமானியர்கள் டயானா என்ற தெய்வமாக அடையாளப்படுத்தி வணங்கினர்.

ஆயிரம் தெய்வங்கள் – 16

ஸீயஸ் லெட்டாவுக்கு வழங்கிய தெய்வக்குழந்தையே அப்போல்லோ. கர்ப்பவதியான லேட்டாவுக்கு ஹீரா வழங்கிய துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. பூமியில் குழந்தையை விழச்செய்ய ஒரு துளி இடத்தைக்கூட ஹீரா வழங்கவில்லை. பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக குவாயில் தீவில் தலைமறைவாய் வாழ்ந்து இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

ஆயிரம் தெய்வங்கள் – 15

கிரேக்க தெய்வங்களில் மிகவும் சக்திவாய்ந்த தாய் தெய்வம் ஹீரா. இவர் ஸீயஸ்ஸின் சட்டப்பூர்வ மனைவி. நிறைய அதிகாரம் உள்ளவள். ஸீயஸ்ஸின் தங்கை முறை என்றாலும் கிரேக்க நாடோடி வழக்கிலும், பிராந்தியத் திரவிழாக்களிலும், ஹோமரின் இலியத்திலும் ஸீயஸ் ஹீரா திருமணம் தெய்வத் திருமணமாகப் போற்றப்படுகிறது.

ஆயிரம் தெய்வங்கள் – 14

மனிதர்களுக்கு தண்டனையை வழங்க ஒரு உத்தியை யோசித்த ஸீயஸ், மோகினியைப் படைக்க முடிவுசெய்தார். புரோமீத்தியாசுக்கு வழங்கப்பட்ட தண்டனை தோல்வியானதால் மோகினியாட்டம் யோசிக்கப்பட்டது. ஹெஃபெஸ்ட்சையும் எத்தீனாவையும் அழைத்து ஒரு அழகான பெண்ணைப் படைத்தார். அந்த அழகியைப் பார்த்த மாத்திரத்தில் தெய்வங்கள் அவளை அடைவதற்குப் போட்டி போட்டுப் பரிசுகளை வழங்குவார்கள். அப்பரிசுகளில் ஒன்று பண்டோராபெட்டி. அந்த அழகியும் பண்டோரா என்று அழைக்கப்பட்டாள்.

ஆயிரம் தெய்வங்கள் – 13

ஒலிம்பிக் யுத்தம் முடிவுக்கு வந்தபின் சைக்ளோபன் ஸீயஸ் வசம் வஜ்ராயுதம் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அதைப் பயன்படுத்தினால் நினைத்த இடத்தில் மழை, புயல், இடிமுழக்கம் செய்யும். ஸீயஸ் தரப்பில் போரிட்ட அண்ணன் ஹேடசுக்கு சைக்ளோப்ஸ் ஒரு மாயக்கவசத்தைப் பரிசாக வழங்கினார். அதை அணிந்ததால் அடுத்தவர் கண்ணுக்குத் தெரியமாட்டார். அண்ணன் பாசி டோனுக்கு ஒரு வகை சூலாயுதத்தை வழங்கினார். அந்த சூலாயுதம் எப்படிப்பட்ட பகைவரையும் தோற்றோடவைக்கும்.

ஆயிரம் தெய்வங்கள் – 12

உலக வரலாற்றில் நதிப்புற நாகரிகங்கள் – எகிப்து – மெசப்பட்டோமியா – சிந்து போன்றவை – செல்வாக்கிழந்த பின்னர் மத்திய தரைக்கடல் தீவுகளில் புதிய நாகரிகங்கள் வேர்விட்டன. இவற்றில் கிரேக்க – ரோம நாகரிகங்கள் படைத்த தெய்வங்கள் பற்பல. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய கிரேக்க நாகரிகம் “ஜனநாயகம்” என்ற கருத்தை வழங்கயதைப் போல் ரோமின் வழங்கல், குடியரசு. எனினும் கிரேக்கர்களின் வழங்கலில் கலை, தத்துவம், விஞ்ஞானம் போன்ற பல்கலைக்கழகப் படிப்புகள் சிறப்பானவை. தென்கிழக்கு ஐரோப்பாவில் மத்திய தரைக்கடலில் சங்கமமாகும் ஒரு குறுகிய குறிஞ்சி நிலப்பகுதியில் வளர்ந்த கிரேக்கக் கலாச்சாரமே மேலை நாடுகளின் கலாச்சாரங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

ஆயிரம் தெய்வங்கள் -11

கி.மு. 1000-1100 காலகட்டத்தில் செமிட்டிக் மொழி சிரியாவில் லிபி- அகரவரிசை எழுத்துகளாயிருந்தன. கி.பி. 1929-இல் பிரஞ்சுக்கார அகழ்வராய்ச்சிக்குழு ரஸ்வும்ரா என்ற இடத்தில் தோண்டியபோது புராதன உகாரித் நகரைக் கண்டுபிடித்தனர்.

இந்த அகழ்வாராய்ச்சியின் சிறப்பு எதுவெனில் அங்கு கண்டெடுக்கப்பட்ட கியூனிபார்ம் கல்வெட்டுகள் மூலம் செமிட்டிக் அகரவரிசை புலனாவதுடன் செமிட்டிக் தெய்வீக உறவு பற்றிய புதிர்களுக்கு விளக்கம் கிடைத்தது

ஆயிரம் தெய்வங்கள்-10

எந்த தெய்வம் முதல் தெய்வம் என்பதில் போரும் சண்டையும் தெய்வங்களையும் விட்டுவைக்கவில்லை. எந்த தெய்வம் பெரிது? என்ற கேள்விக்கு சரியான விடை இல்லையென்றாலும் மெசப்பட்டோமியாவிலும் பின்னர் பாரசீகத்திலும் நிகழ்ந்த போட்டிக்கு இந்தியாவில் தீர்வு காணப்பட்டது.

ஆயிரம் தெய்வங்கள் – 9

கில்காமேஷ் என்ற புராதன செமிட்டிக் இலக்கியம் 12 களிமண் பலகைகளில் அக்கேடிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஆசிரிய மன்னர் அஷ்டர் பனிப்பால் (கி.மு. 668-627) அரண்மனைப் பொக்கிஷமாக இது கண்டுபிடிக்கப்பட்டது. இதை ஒரு புராதன முதல் நாவல் என்று பழைமை ஆங்கில இலக்கியவாதிகள் மதிப்பிட்டுள்ளனர்.

ஆயிரம் தெய்வங்கள் – 8

“மெஸப்பட்டேமியா” என்பது பல நாடுகளைக் குறிக்கும். அதில் சுமேரியாவும் அடக்கம். சுமர் திரிந்து சுமேரியாவாயிற்று. எரக் பின்னர் ஈராக் ஆனது எரிது, லகாஷ், உர் ஆகியவை சுமேரிய நகரங்கள். இந்த நகரங்களில் தொழப்பட்ட தெய்வங்கள் வேளாண்மைக்கும், நீர் மேலாண்மைக்கும் எடுத்துக்காட்டுகள். சுமேரியாவின் தனிச்சிறப்பு. உலகிலேயே முதல் விவசாயப் பண்பாடு என்று வரலாற்று அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட பெருமையாகும்.

ஆயிரம் தெய்வங்கள் – 7

ஈரானிய புராண மரபுப்படி மித்ரா ஒரு அவதாரம். மீண்டும் உலகைப் புத்துயிர் பெறச் செய்யவே கடவுளுக்குக் காவலனாயிருந்த காளையை கடவுள் விருப்பப்படி கொன்றதாக மரபு. சிரோஷீடனும், இறப்பின் தெய்வமான ரஷ்ணுவுடனும் கூட்டாட்சி செய்த மித்ரா, அங்கும் ஒளியின் கடவுள். பகல் தெய்வம். இந்திய சூரியனைப்போல் வெள்ளைக் குதிரை ரதத்தில் பவனி வருபவர். போர் தெய்வமும் மித்ரனே. அகுராவுடன் சேர்த்து உயர்நிலையில் பூஜிக்கப்பட்ட மித்ரா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். பொய்மையை எதிர்த்துப் போராடுபவன்.

ஆயிரம் தெய்வங்கள் – 6

பாரசீக ஈரானிய தெய்வக்கதைகளை நுணுகி ஆராய்வோமெனில் தமிழ்நாட்டில் எவற்றையெல்லாம், யாரையெல்லாம் ஆரியம் என்றும் ஆரியர் என்றும் அறியப்பட்டுள்ளதோ அவை அனைத்துமே தவறு என்று எண்ணத்தோன்றும். பண்டைய உலக வரலாற்றின்படி ஆரியர்களின் தளமாயிருந்தது பாரசீகம். பாரசீகப் பேரரசர்கள் டரீயஸ், செர்சஸ் காலத்தில் இந்தியாவின் வடமேற்குப்பகுதி பாரசீக ஆட்சிக்கு உட்பட்டிருக்கலாம்.

ஆயிரம் தெய்வங்கள் – 5

அன்று இலக்கியவாதியாக வாழ்ந்தேன். வரலாறை நேசித்தேன். மக்களை அறிய பூகோளமும் வரலாறும் அறிவது நன்று என்று அவற்றையும் கற்றேன். இன்று இயற்கை விவசாயியாக வாழ்கிறேன். இயற்கை விவசாயத்தில் பள்ளிக்கூடம் கூட நடத்துகிறேன். ”வேதம்” என்ற சொல்லை அடிக்கடி நான் பயன்படுத்துவதைக் கண்டு இயற்கை விவசாயத்தில் என்னை குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு வேளாள சிஷ்யர், திடீரென்று ”ஐயா நீங்கள் பிராமணரா?” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார்.

ஆயிரம் தெய்வங்கள் – பகுதி 2

சொர்க்க லோகத்தைக் கண்டுபிடித்த எகிப்திய மதமாகட்டும், கிரேக்க மதமாகட்டும் மன்னர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் தருகிறது. கடவுள் மன்னனை தண்டிப்பதில்லை. மன்னனே கடவுள். இப்படிப்பட்ட அகங்காரத்தைத் தட்டிக்கேட்டதால் தகராறு வந்தது. தவறு செய்தால் மன்னனுக்கும் தண்டனை உண்டு. ஆண்டவனின் ராஜ்ஜியத்தில் ஏழை பணக்காரன் இல்லை. இப்படியெல்லாம் பேசியதால் ஏசுவுக்கு தண்டனை கிடைத்தது.

ஆயிரம் தெய்வங்கள்

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் சொர்க்கம் – நரகம் என்ற கருத்துகள் வந்தன. இக்கருத்து எல்லா நாகரிகங்களுக்கும் பொது. இறப்பை ஏற்காதவர்கள் இன்றும் உள்ளனர். அன்றும் உள்ளனர். பனிக்கட்டிக்காலத்தில் மதத்தின் மூலவேர் லாஸ்கோ ஓவியத்தில் தென்பட்டது. மிருக வழிபாட்டின் தொடக்கம்.
வேதகால ஆரியர்கள் கடாவெட்டி யாகம் செய்தார்கள். தானியங்களை அக்னிக்கு அதாவது தீயிலிட்டார்கள். இதெல்லாம் ஏன்?