எஸ்.பி.பி. என்னும் H2O

இசையறிவும் திரையிசையின் நுணுக்கங்களும் அறிந்த எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் இருக்க, எஸ்.பி.பி குறித்து சொல்வனத்திற்காக எழுத என்னை அழைத்திருக்கிறார்கள். என்றாலும் ஒரு பாமர ரசிகனாக சமீபத்தில் மறைந்த எஸ்.பி.பி குறித்த என் மனப்பதிவுகளை எழுத முயல்கிறேன். என்னைப் போன்ற பல பாமர ரசிகர்களின் பிரதிநிதித்துவப் பதிவாகவும் இது அமையக்கூடும் “எஸ்.பி.பி. என்னும் H2O”

இசைபட வாழ்வோம்- 2

This entry is part 2 of 2 in the series இசைபட வாழ்வோம்

“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”

இசைபட வாழ்வோம்

This entry is part 1 of 2 in the series இசைபட வாழ்வோம்

“எம்.எஸ்.வி. காலத்தில் ஆங்காங்கே பெரிய குழுவிசை, அதாவது orchestra அதிகமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ராஜா காலத்தில், விஸ்வரூபம் எடுத்து, ஸ்டூடியோக்கள் நிரம்பி வழிந்தன. இன்று, வாத்திய இசை என்பது திரையிசையில் மிகவும் குறைந்து போய்விட்டது. ராஜாவும் ரஹ்மானும் மேற்கத்திய வாத்தியக் குழுக்களுடன் உறவு வைத்திருந்தாலும், இந்தியத் திரையிசையில் அதிக வாய்ப்புகள் இல்லை என்றாகிவிட்டது”

இசை வேளாளர்கள்

அரசு நூலகங்களில் இருந்து எதிர்பாராத வகையில் சில பொக்கிஷங்கள் கிடைப்பதுண்டு. அந்த வகையில் சில காலம் முன்பு எனக்குக் கிடைத்தது இசை அறிஞர் தஞ்சாவூர் பி.எம். சுந்தரம் எழுதிய  “மங்கல இசை மன்னர்கள்”. 19 ஆம் நூற்றாண்டின்பிற்பகுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நாகஸ்வர மற்றும் தவில் கலைஞர்களைப் பற்றிய “இசை வேளாளர்கள்”

வீணையும் மீசையும்

வீணையைத் தவில் போலவும், தவிலை மிருதங்கம் போலவும், வாய்ப்பாட்டை நாகஸ்வரம் போலவும் வாசிக்கிறவர்கள் சிலர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஒரு பிரபல வைணிகர் பல துறைகளில் தேர்ந்தவர். ஆனால் அவர் வீணையைக் கேட்கும்போது மீசை முளைத்த பெண் பிள்ளையைப் பார்ப்பது போலிருக்கிறது. ஆண்களுக்குச் சரிநிகர்தான் பெண்களும். அவர்களும் குதிரை ஏறலாம். ஆனால் மீசை முளைத்தாலோ வளர்ந்தாலோ நமக்கு அருவருப்பு வருகிறது; பயம் கூட உண்டாகிறது.

இசையில்லாத இசை

அன்று ஒரே மேடையில் ஒருவர் குழல் ஊதினார். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டிய மரபில் ஒருவர் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்தார். இருவரும் ஒரே தினுசான இசைப் பயிற்சி உடையவர்கள். ஸ்வாராளி, ஜண்டை வரிசை, அலங்காரம் என்று தொடங்கி பால பாடம், முன்னேற்ற பாடம், விசேஷ பாடம் எல்லாம் இருவருக்கும் நடந்திருக்கின்றன. இருவரும் தத்தம் வாத்யங்களை உழைப்போடு பயின்றிருக்கிறார்கள். ஆனால் ஒருவரது வாத்யம் இசைக் கருவி போலவும், இன்னொருவரது வாத்யம் ஆயுதம் போலவும் ஒலிக்கிறது. ஒன்று இசையாகவும் இன்னொன்று இசை ஊடின ஓசையாகவும் கேட்கிறது, ஏன்?

சபாஷ்… சரியான போட்டி

இரண்டாம் உலக யுத்தத்துக்கு ஐரோப்பா தயாராகிக் கொண்டிருந்த நாட்களில்தான் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் இசை மற்றும் நாட்டியம் சில புதிய இயந்திர சாதனங்களால் தேர்ந்த அல்லது பயிற்சி பெற்ற ரசிகர்கள் மட்டுமல்லாமல் அணைத்து மக்களும் பகிர்ந்து கொள்ளக் கூடியதொரு சூழ்நிலையை உருவாக்கியது. பேசும் படம், இடைத் தட்டு, வானொலி ஆகிய சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களைவிடப் பாரம்பரியக் கலாசார வெளிப்பாடுகளை அதிகம் நம்பியிருந்தன. ஒரு சிறிய டீக்கடையானாலும் அங்கு ஒரு கிராமபோன் நாள் முழுவதும் ஒலித்துக் கண்டிருக்கும்.

அழிந்து போன நந்தவனம்

திமிறி நாயனத்தின் ஒத்துச்சத்தமே – அதன் எச்சான ஒலி – மிக அருகில் நின்று கேட்க ராஜரத்தினம் சங்கடப்படுவதாக நான் உணர்ந்தது, கோவில்பட்டியில் அவர் வாசிக்க வந்த ஒரு திருவிழா ஊர்வலத்தின் போதுதான். ஒத்துவாசிப்பவனை, தள்ளிப் போய் நில் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இது நடந்து பல நாட்களுக்குப் பிறகு ராஜரத்தினம் பல வகைப்பட்ட நாயனங்களை வைத்து வாசிப்பதாகக் கேள்விப்பட்டேன்.

மீரா பென்னும் பீத்தோவனும்

காந்திஜியைப் பற்றியே இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது என்றால், அவரது சிஷ்யையான மீரா பென்னைப் பற்றி வேறு எப்படி நினைக்கத் தோன்றும்? ஆனால் கடற்படை அதிகாரியின் மகளான மீரா பென்னுக்கு சாஸ்திரீய சங்கீதத்தில் அபாரமான ஆசை இருந்திருக்கிறது என்றால் நம்பத்தான் முடியுமா? இளமையில் பியானோ கற்றிருக்கிறார். பீதோவன் படைப்புகளின் பைத்தியமாகவே இருந்திருக்கிறார். பீதோவன் வாழ்ந்த வியென்னா, பான் நகரங்களுக்குப் போய் அவர் நடாடிய தெருக்களில், அவர் ஏறிய, இறங்கிய குன்றுகளில், காடுகளில் எல்லாம் மீரா பென்னும் திரிந்திருக்கிறார். அவரைப் பற்றி என்ன புத்தக கிடைத்தாலும் படித்திருக்கிறார்.

அருங்குணச் செல்வன் காருகுறிச்சி

அருணாசலம் நாகஸ்வரம் வாசிப்பது போலவே வாய்ப்பாட்டும் அற்புதமாகப் பாடுவார். பாடும்போது ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாட்டையோ, ராகத்தையோ நிறுத்தி, “இந்த இடத்தில் எங்கள் வாத்தியார் அற்புதமாக வாசிப்பார். அவர் வாசித்துக் கேட்க வேண்டும்” என்று பரவசத்தோடும், பக்தியோடும் சொல்வார். ஒரு ராகத்தைப் பாடி முடிக்கும் முன் ஐந்தாறு தடவைகள் இவ்வாறு கூறிக் குருவின் மேதாவிலாசத்துக்குப் புகழ்மாலை சூட்டி வணங்குவார். குருவே அருணாசலத்துக்கு உயிரும், தெய்வமும் என்று சொல்லி விடலாம்.

பர்வீன் சுல்தானாவின் ஆட்டோகிராஃப்

1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது. அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது.

அந்த கிராமபோன் வாசனை

கர்நாடக சங்கீதத்தில் மணி ஐயர் அந்தக் காலத்துத் தென்தூல்கர் என்று சொல்லவேண்டும். ‘சரசசாமதான’, ‘நாத தனுமனிசம்’, ‘துன்மார்க்கசரா’, ‘எப்போ வருவாரோ’ போன்ற கிருதிகளை அவர் பாடும் விதமே தனி. தன் குரலின் எல்லைகளை அதிகப்படுத்தாமல் மிகத் திறமையாகப் பயன்படுத்திக்கொண்டு அவசரமாக ராகம் பல்லவி அனுபல்லவி பாடிவிட்டுச் சரணத்துக்குக் குறிப்பாக, கல்பனாஸ்வரங்களுக்கு விரைவார். ஸ்வரங்களை அப்படியே நம் மேல் வர்ஷிப்பார். அதன் உற்சாகம் அரங்கம் பூராவும் நிரம்பும். மதுரை மணி ஐயர் கச்சேரியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர் கச்சேரிகளையும் கேட்க ஆரம்பித்தேன். ராகங்களைக் கண்டுபிடிக்கவும் ஆரம்பித்தேன்.