ஒரு லிட்டர் நீரில் செய்ய வேண்டிய வேலையை மூன்று லிட்டர் நீரை வாஷ்பேசின் குழாய் மூலம் செலவழிக்கிறோம். உதாரணமாகப் பல் துலக்கி வாய் கொப்பளிப்பது. இந்தச் செயலுக்கு இவ்வளவு நீரைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதில்லை. முதலில் பெற்றோர்களிடம் அந்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். நிலத்தடி நீரைப் பெறுவதற்கு எவ்வளவு மின்சாரம் செலவானாலும், மின் கட்டணம் செலுத்துவதற்குத் தயாராகவே இருக்கிறார்கள். தொலை தூரங்களிலிருந்து ஐநூறு லிட்டர், ஆயிரம் லிட்டர் கேன்களில் கொண்டு வரப்படும் நீருக்குப் பணம் செலவழிக்கத் தயாராகவே இருக்கிறார்கள்.
Category: இயற்கை விவசாயம்
வளம் – வாழ்வு – வளர்ச்சி
தற்சார்பு விவசாயம் வளர வேண்டும். ரசாயன உரப்பயன்பாட்டை நிறுத்திவிட்டு இயற்கை இடுபொருட்களை விவசாயிகள் அவரவர் தோட்டங்களில் இயற்கை இடுபொருள் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். உபரி உரங்களை முழுக்க முழுக்க அரசுத்துறை உற்பத்தி செய்து யூரியா, பாஸ்பேட், பொட்டாசியம் என்று தனியார் வழங்கலுக்கு மாற்றாக பாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற பாக்டீரியா காளான் உரங்களை திரவ வடிவிலோ கரிப்பொடி கலந்தோ விநியோகிக்கலாம்.
உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 8
இன்று ஆடு மாடு வளர்ப்பை விடக் கோழி வளர்ப்பே பெருகிவிட்டது. பெரிய பெரிய கூண்டுகளில் குஞ்சுகளை 10,000, 20,000 என்று வாங்கி எடை உயர்ந்த கோழிகளாக வளர்க்க அக்குஞ்சுகள் மீதே ஆண்டிபயாடிக் பூச்சி மருந்துக்கலவையை மழை போல தெளிக்கப்படுகிறது. கோழிகள் எடை கூடியதும் விற்பனைக்கு வரும். கொதிக்கும் நீரில் கோழியை அமிழ்த்தி இறகுகள் நீக்கப்பட்டு முழுக்கோழி உரித்த நிலையிலும் கிடைக்கும். துண்டுகளாகவும் கிடைக்கும்.
உங்கள் கேள்விக்கு என் பதில்கள் – 7
தூரத்தில் பனங்காடு தெரிந்தது. இரண்டு பர்லாங்கு நடந்தால் ஊர் வந்துவிடும். சித்துக்காடு சாலை வந்தபோது இருட்டி விட்டது. பனங்காட்டைத் தாண்டி அக்ரகாரம் செல்ல வேண்டும். நடுவில் ஒற்றையடிப் பாதை. பனங்காட்டைத் தாண்டி விட்டால் பயமில்லை. கொள்ளிவாய்ப் பிசாசு நடமாடுவதாக வேறு பேச்சு. யாராவது அரிக்கேன் விளக்கோடு நடந்தால் அது பிசாசாகதான் தெரியும். “ராமா, ராமா, ராமா,” என்று ஜெபித்தால் பிசாசு ஓடிவிடும் என்று அம்மா சொல்லிக் கொடுத்திருந்தார். அதுதான் வழி.
உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 5
குப்பியில் அடைத்து திரவ வடிவில் விற்கப்படும் நுண்ணுயிரிகளின் ஆற்றல் கேள்விக்குரியவை. வர்த்தகரீதியில் ஏதோ ஒரு பிராண்ட் பெயரில், சக்தி, சமந்தா, சத்தியம், ஆச்சி, பேச்சி என்று விற்கப்படுகின்றன. உள்ளே இருக்கும் நுண்ணுயிரிகள் பற்றிய விபரம் இருக்காது. ரசாயன நுண்ணூட்டங்களான போரான், தாமிரம், துத்தநாகம் போன்றவை கலக்கப்பட்டிருக்கலாம். எந்தப் பயிருக்கு எந்த நுண்ணுயிரி தேவை என்ற விபரம் இல்லாமல் இருக்கும். பணம் உள்ளவர்கள் விளம்பரத்தை நம்பி வாங்கிச் செல்லலாம்.
உங்கள் கேள்விக்கு என்ன பதில் – 4
அபினி விஷயம் இன்னும் விஸ்தாரமானது. சுருங்கக் கூறினால், கஞ்சாவுடன் ஒப்பிட்டால் அபினி சித்த-ஆயுர்வேத-யுனானி மட்டுமல்ல அலோபதியிலும் பயன்படும் அற்புத மூலிகை. இதன் விஞ்ஞான பெயர் பபாவர்சோம்னிஃபெரம். ‘சோம்னி’ என்ற லத்தீன் சொல்லுக்கும் ‘சோம’ எனும் சம்ஸ்க்ருத சொல்லுக்கும் தொடர்பு இருக்கலாம். “சோமபானம்” என்பது அபினியா? கஞ்சாவா? இதற்கு ரிஷிகள்தான் பதில் சொல்லவேண்டும். அபினிஸ் செடியில் விளைவது போஸ்த்தக்காய். போஸ்த்தக்காய் முற்றினால் கசகசா விதைகள் கிட்டும். கசக்சா இந்திய சமையல் ருசிக்கு அரும்பங்கு ஆற்றுகிறது. கசகசா இல்லாமல் குருமா செய்ய முடியாது. கசகசாவும் மருந்து. லாகிரி வஸ்து அல்ல.
உன் கேள்விக்கென்ன பதில்? – 3
பாட்டிமார் சொல்லும் கதைகளிலும் அம்புலிமாமா பஞ்சதந்திர கதைகளிலும் ராஜா ராணி கருப்பு வெள்ளை திரைப்படங்களிலும் காணப்படும் காடுகள் ஊர்க்காடுகள். அந்தக்காலத்தில் இரு ஊர்களுக்கிடையே பல மைல் இடைவெளி இருக்கும், பெரிய பெரிய காடுகள் இருந்திருக்கும். இப்போது இடைவெளி குறைந்து குடியிருப்புகள் பெருகி விட்டன. ஆகவே ஒரு பஞ்சாயத்துக் கிராமம் குறைந்தபட்சம் ஐந்து ஏக்கர் நிலத்தில் ஊர்த்தலைவர் பொறுப்பின்கீழ் காடு வளர்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.
உன் கேள்விக்கென்ன பதில் – 2
பாம்புகளுக்கு எலி, தவளை, மூஞ்சூறு முதலானவை முக்கிய உணவுகள். பூனை வளர்க்கலாம், ஆனால் பூனைகளைப் பார்த்தால் பாம்புகள் ஓடிவிடும். ஏனெனில் பூனை எலிகளை மட்டுமல்ல, பாம்புகளையும் பிடிக்கும். எனவே அந்தக் காலத்தில் வயல்வெளிகளில் ஏராளமான பாம்புகள் இந்த வேலையைச் செய்து வந்தன. மனிதர்கள் பாம்பை அடித்துக் கொல்லாதவரை பாம்புகள் இந்த வேலையைச் செய்கின்றன.
உன் கேள்விக்கு என்ன பதில்?
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டிய இயற்கை விவசாயிகளும் ஆர்வலர்களும் என்னிடம் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் – அவற்றுக்கு நான் வழங்கிய பதில்கள் ஆக்கம் தரக்கூடியவை மட்டுமல்ல, சுவாரசியம் நிறைந்தவையும்கூட. சில கேள்விகள் பத்திரிக்கைகளில் வந்தவை, பிற தொலைபேசிமூலம் கூறப்பட்ட பதில்கள்.
மதுவின் பல்கலைக்கழகம்
“பேரின்பம் என்பது வனிதையரின் அழகல்ல. ஏராளமான மரங்களுடன்கூடிய வனம் தருவதே இன்பம். பெண்கள் தம் அழகில் கர்வம் கொண்டு இன்ப உணர்வில் ஏங்கும்போது இன்பத்தை அள்ளித்தரும் இன்ப ஊற்றான வனம் நீண்ட தடாகங்களைக் கொண்டு அதில் தாமரை மலர, வண்டுகள் ரீங்காரமிட மரங்களுடன் வாழ்வதே பேரின்பம்”,
மண்புழு மன்னர்
உடுமலைக்கு அருகில் சுண்டைக்காய்ப் பாளையம் உள்ளது. அங்கு சுண்டைக்காய் கிடைக்காது, செல்வராஜ் நாயுடு கிடைப்பார். தமிழ்நாட்டின் தலைசிறந்த இயற்கை விவசாயிகள் பத்து பேரைக் குறிப்பிட வேண்டுமென்றால் அப்பட்டியலில் இவர் நிச்சயம் இடம் பெறக்கூடியவர்.
சாதனை மன்னர் கரும்பாழ்வார்
இந்த படிக்காத பட்டிக்காட்டு விஞ்ஞானி, ஒரு கிலோ சர்க்கரை எடுக்க 1800 லிட்டர் தண்ணீர் போதும் என்று புள்ளிவிவரம் தந்துவிட்டு, வேளாண்துறை யோசனைப்படி ரசாயனக் கரும்பு விவசாயி ஒரு கிலோ சர்க்கரைக்கு 22000 லிட்டர் தண்ணீர் செலவழிப்பதாகக் கூறும் இவர், இந்த முறையில் தண்ணீர் 8 சதவிகிதம் மட்டுமே போதும் என்கிறார்! நீர்ச்சிக்கன வழிகாட்டியாக நிற்கும் இவரைப் பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் பல விவசாயிகள் கரும்புப் பயிருக்குச் சொட்டு நீர் விட்டுவிட்டனர்..
புளியங்குடிப் பெரியாழ்வார்
நான் இயற்கை விவசாய முன்னோடிகள் பலரையும் பத்திரிக்கைகளில் பேட்டி எடுத்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்கு மறக்க முடியாத தாக்கத்தை இவர் ஏற்படுத்தியுள்ளார். நம்மாழ்வாரை விட வயதில் மூத்தவர். எண்பது பிராயத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் மாபெரும் சிந்தனையாளர். தொழில்ரீதியாக இவர் ஒரு பள்ளி ஆசிரியர். உலக அறிவு மிக்கவர். மகாத்மா காந்தி வகுத்தளித்த ஆதாரக்கல்விப் பயிற்சி ஆசிரியராக இருந்ததால் காந்திஜியின் நிர்மாணத்திட்டங்களில் ஆர்வம் நிரம்பியவர். என்னுடன் இருபதாண்டுத் தொடர்புடைய கோமதிநாயகத்தைப் புளியங்குடியில் நான் பல முறை சந்தித்த அனுபவம் உண்டு. முதல் தடவையாக நான் தினமணி சார்பாகப் பேட்டி எடுக்க எண்ணியபோது முழுமையாக ஒரு நாள் வழங்கியதுடன் முதல் நாள் இரவு அவர் வீட்டு விருந்தினராகத் தங்கியபோது அவர் குடும்பத்தில் ஒருவனாகவே எண்ணி உபசரித்ததை மறப்பதற்கில்லை.
அரியன்னூர் கலசப்பாக்க அற்புதங்கள்
ஜெயச்சந்திரன் பெருமையாகக் கூறும் விஷயம் அரியன்னூர் ஆல மரங்கள். அரியன்னூரின் தனிச்சிறப்பு பறவைகளால் உருவாக்கப்படும் பல்லுயிர்ப் பெருக்கத்தால் ஏரிகளில் நீர் வற்றுவதில்லை. எல்லாம் திறந்தவெளிக் கிணறுகளே. அந்த ஊரில் யார்ம ஆழ்துளை கிணறு இறக்காமல் மழை நீர் செமிப்பால் கிணறுகள் ரீசார்ஜ் ஆகின்றன. இவர் தலைவராயிருந்தபோது அரியன்னூர் உயிர்ச்சூழல் கிராமமாக அறிவிக்கப்பட்டு மாநில அரசு பாராட்டு பெற்றுள்ளது.
முகுந்தன் – முரளி: புலியின் வாரிசுகள்
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு நம்மாழ்வார் செங்கற்பட்டு ஏரியின் எதிர்வாயிலில் ’கார்ட்’ என்கிற தொண்டு நிறுவனத்தில் ஒரு சக்தியாக இயங்கி வந்த காலகட்டத்தில் ஓர் இயற்கை விவசாயக் கருத்தரங்கை நடத்தினார். பசுமைப்புரட்சியின் கரிய விளைவுகளைப் பற்றி அங்கு எனக்குப் பேச வாய்ப்பு வழங்குமுன், என் சரியானபடி இயற்கை விவசாயிகளிடையே அறிமுகமும் செய்தார் அதுதான் எனது முதல் மேடைப்பேச்சு.
பயின்ற பாடங்கள் – சுந்தரராமன், சித்தர்
சரியான தடம் புரியாமல் தத்தளித்து வந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் சன் டி.வி. “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சியில் எனது பேட்டியைக் கண்டு கவனமாகக் கேட்டார். இயற்கை விவசாயத்தின் தேவையையும் எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்றும் சற்று விவரமாகப் பேசினேன். ஒரு மணி நேர நிகழ்ச்சி என்பதால் நிறைய பேசும் வாய்ப்பு இருந்தது. பேட்டி முடிந்த மறுகணமே என்னைத் தேடி வந்து சந்திக்க ஆர்வமாக இருந்தார்.
வாழ்வியல் ரகசியங்கள்
“நாம் வாழும் இந்த உலகத்தில் நல்ல கருத்துகளைக் கூறும் தலைவர்களுக்கும் அணிகளுக்கும் பஞ்சமே இல்லை. ஒப்பற்ற ஒரே லட்சியத்தை நோக்கி, இணையாத இரு கோடுகளாக இயக்கங்கள் செல்வதைக் கவனிக்க முடிகிறது. ஒன்றாக இயங்கத் தயக்கம் காட்டுவதும் புரிகிறது. ஒருங்கிணைந்து செயலாற்றி ஒரு வலைப்பின்னலை உருவாக்கி சாதனை செய்வது அவசியம். இயற்கை விவசாயத்தில் மாறுபட்ட சிந்தனையுள்ளவர்களை ஒருங்கிணைத்துச் செல்ல இந்த நூல் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த நூல் காலத்தால் அழியாத ஒரு கருத்துப் பெட்டகமாகவும் விளங்குகிறது. இயற்கை விவசாயத்திற்குப் பாடுபட்டு வரும் முன்னோடிகளுக்கும் ஒப்புதலை இந்த நூல் வழங்குவதும் ஒரு சிறப்பு. “
இயற்கை வேளாண்மைக் களஞ்சியம் – ஆர். எஸ். நாராயணன்
நம்மாழ்வாரை நான் சந்தித்தபோது எனக்கு தாடி இல்லை. நான் வேட்டியும் அணிவது இல்லை. அரசு அலுவலர் பாணியில் பேண்ட், ஷர்ட், கிராப்புத் தலை வைத்திருந்த என்னோடு நம்மாழ்வார் நட்பு பாராட்டினார். அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களிலும் நடத்தும் மாநாடுகளிலும் என்னை முதல் பேச்சாளராகப் பேச அனுமதித்தார். அவர் ஏன் சிகை வளர்க்கிறார், தாடி வைத்துள்ளார் என்று எனக்குத் தெரியாது.
சுரபாலரின் விருட்சாயுர்வேதம்
நிலத்தின் அடிப்படை வேற்றுமைகள் மூன்று. சதுப்பு நிலம், வறட்சி நிலம், சாதாரண நிலம் என்று பிரித்துள்ள சுரபாலர் மண்ணின் நிறம் மற்றும் ருசியைப் பொருத்து 12 வகைகள் என்கிறார். முவ்வகை நிலத்துக்கு ஏற்றாற்போல் மொத்தம் 36 வகைப்பட்டதாக மண்வளத்தைப் பிரிக்க முடிகிறது. மண்ணின் ஆறு நிறங்களாவன : கருப்பு, வெள்ளை, வெளிர், கரிநிறத்துக் கருமை, செம்மை, மஞ்சள். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியவை மண்ணின் குணங்கள்.
மண்புழு உறவு – நம் வழி வேளாண்மை
ஒரு காலகட்டத்தில் நன்கு வளர்ந்த ஒரு மண்புழு ஒரு ரூபாய் என்ற விலைக்கு விற்கப்பட்டது. எனக்கு இந்த விவரமெல்லாம் தெரியாது. எல்லாருக்கும் இலவசமாக வழங்கினேன். 2001-ல் சத்தியமங்கலம் சுந்தரராமன் என் வீட்டுக்கு வந்தார். என்னிடமிருந்து புழுக்களைப் பெற்றுக் கொண்டு யாருக்கும் புழுக்களை இலவசமாக வழங்காதீர்கள், அவர்கள் அதன் மதிப்பும் தெரியாமல் வளர்க்கவும் தெரியாமல் அவற்றை சாகடித்து விடலாம் என்றுகூறி எனக்கு பணம் தர முன்வந்தார்.
குளோரியா பண்ணை
பூச்சி மருந்து என்பது உயிரைக் குடிக்கும் விஷம் என்பதும் அதைத் தேவையில்லாமல் பயிர் மீது தெளிக்கும்போது பயிர் மட்டுமல்ல, மண், விண் எல்லாமே விஷமாகி அதன் தாக்கம் தாய்ப்பால் வரை சென்று இன்று தமிழ்நாட்டில் வரும் புற்றுநோய் மிகுந்துள்ளதே சாட்சியாக உள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் இருந்தும் இறந்தும் வருகின்றனர்.
பசுமை நிறைந்த நினைவுகளே…
இப்போது தொடங்குவது எனது பசுமை நினைவுகளுடன் கூடிய பல பசுமை பயணங்கள். 1990ஆம் ஆண்டிற்கு முன்னும் பின்னுமான ஒரு காலகட்டம். அப்போது நான் சென்னையில் பணிபுரிந்து வந்தேன். நான் வேளாண்மை சார்ந்த பொருளியல் துறை சம்பந்தமான கட்டுரைகளை தினமணி பத்திரிக்கையில் 1980லிருந்து வழங்கிக் கொண்டிருந்த நேரம். பி.பி.எஸ்.டி என்று சொல்லப்பட்ட, “தேசபக்தி மாணவர்கள் மக்கள் இயக்க அறக்கட்டளை” என்ற அமைப்பில் உறுப்பினரான திரு முகுந்தன் என்பவர் ஒரு நாள் வீடு தேடி வந்தார்.
புண்ணாக்கிய மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம்
கி.பி.2012-ல் வாழும் நாம் மண்ணை நேசிப்பதனை மறந்து மண்ணை மாசுகளால் புண்ணாக்கி விட்டோம். ரசாயனங்களைக் கொட்டி மலடாக்கிவிட்டோம். விஷ உணவை உற்பத்தி செய்து விஷத்தை உண்டு உடலும் மனமும் விஷமான மனிதனுக்கு வாழ்க்கைப் பார்வையும் போய் கருத்துக்குருடன் ஆகிவிட்டான். விஷமான மனிதர்கள் வாழ்கைப் பார்வை இல்லாததால்தான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றனர். செலவு குறைந்த இயற்கை விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டுச் செலவை உயர்த்தும் ரசாயனத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கபட்டு வருகிறது.
நல வாழ்வுக்கு விவசாயம்
முற்காலத்தில் நோய் என்றால் தொற்றும் தன்மையுள்ள பிளேக், அம்மை, க்ஷய ரோகம் ஆகியவற்றுக்கு மட்டுமே அஞ்ச வேண்டியிருந்தது. அவற்றுக்கெல்லாம் கூட மருந்துண்டு. ஆனால் தொற்றிக் கொள்ளாத நோய்கள் இன்னும் பயங்கரமானவை. இவை 19, 20 ஆம் நூற்றாண்டில்தான் அதாவது விவசாயத்தில் ரசாயனப் பயன்பாட்டுக்குப்பின் தோன்றியவை.