மிளகு அத்தியாயம்  நாற்பத்தொன்பது 

போன மாதம் பிரார்த்தனை மண்டபத்தை பெரும்பான்மை வைதீக மதத்தினர் அடித்து நொறுக்கி தீர்த்தங்கரரின் நாசியை உடைத்தார்கள். நாம் மௌனமாக இருந்தோம். போன வாரம் புதியதாகக் கட்டப்படும் வசதி முழுக்கக் கட்டாமலிருக்கும்போதே மாமிசத் தாக்குதலை எதிர்கொண்டது. நான்கு தீர்த்தங்கர் சிலாரூபங்கள் மேலும் பசுமாமிசம் விழுந்து தரையில் படிந்து துர்நாற்றத்தைக் கிளப்பி உள்ளே வந்தவர்களை விரட்டுகிறது. அரண்மனைக்கு மிளகு விற்பது தான் குறிக்கோள். போர்த்துகல்லுக்கு எவ்வளவு மிளகு விற்பனையாகுமோ அவ்வளவுக்கு அரசாங்கமும் செழிக்கும்.

ஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது?

தாகூர் பிரம்ம சமாஜத்தின் வாரிசு. இம்மார்க்கம், உபநிடத சித்தாந்தத்தை மட்டுமே துணையாகக் கொண்டுள்ள, பலருக்குப் புலப்படாத ஹிந்துயிச வழி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டது. பல்வேறு வண்ணங்களை உடைய கடவுள்களை கொண்ட பக்தி மார்க்க ஹிந்துயிசத்தை பார்த்து முகம் சுளிக்கக் கூடியது அந்த சமாஜம். எனவே தாகூர் யாரந்த இறைவன் என நேரடியாகக் கூறவில்லை. ஆனால், எண்ணிலடங்காக் காலமாக, மனித வரலாற்றில் யாத்திரீகர்களை அவர்களது பயணத்தில் முன் நடத்திச் செல்லும் நித்தியத் தேரோட்டி யாரென்பதை எவருமே சந்தேகமின்றி அனுமானம் செய்ய இயலும். அர்ஜுனனுக்கு தேரோட்டியாக இருந்து கீதோபதேசம் செய்த கண்ணனையே தாகூர் இங்கு குறிப்பிடுகிறார்.

வாழ்வும் தாழ்வும்

அவர் காட்டிய இடத்தில் சுவரின் மேல்பூச்சு இடிந்து விழுந்திருந்தது. உள் சுவரில் சில சித்திரங்கள் காணப்பட்டன. அப்ஸர ஸ்திரீகள் இருவர் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய சலங்கை சப்தம் என் காதில் ஒலித்தது. (சிறிது சந்தேகப்பட்டுத் திரும்பிப் பார்த்தபோது, எங்களுடன் வந்தவர்களில் ஒருவர் தமது பையில் பணம் இருக்கிறதா என்று குலுக்கிப் பார்த்துக் கொண்டார் என்று தெரிந்தது.) நடன மாதர்களுக்கு எதிரில் சிவபெருமான் புலித்தோல் மீது யோகாசனத்தில் வீற்றிருந்தார். அவருக்குப் பின்னால் பூதகணங்கள். அருகில் படுத்திருக்கும் நந்தி. சற்றுத் தூரத்தில் ரிஷிகள் பக்திபரவசமாய் நிற்கும் காட்சி.

கலைச்செல்வி – நேர்காணல்

காந்திக்கும் அவரது மூத்த மகன் ஹரிலாலுக்குமிடையே நிலவிய முரண்பட்ட உறவுமுறை குறித்தும் சிறுகதை எழுதும் ஆர்வம் வந்தது. ஆனால் அதற்கான தகவல்கள் போதாத நிலையில் பல நுால்களை தரவிறக்கியும் மொழி பெயர்த்தும் வாசிக்கத் தொடங்கினேன். அது எழுத்தாக வெளிப்பட்டபோது சிறுகதைக்குள் அடங்கவியலாததாக இருந்தது. நாவலாக எழுதத் தொடங்கினேன். அதற்கு காலமும் நேரமும் கைக் கொடுத்தது என்பேன்.

மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்

ஓரியண்டலிஸ்ட் என்ற வார்த்தை 1800களில், ஆங்கிலத்தை விட இந்திய மொழிகள்தான் இந்தியர்களின் கல்விக்கும் நவீனப்படுத்துவதற்கும் உகந்தது என கருத்து தெரிவித்த பிரிட்டிஷ் நிர்வாகிகளைத்தான் முதலில் குறிப்பிட்டது. ஹிந்து தேசியவாதிகளிடையே, காலனியத்திற்கு பின் வந்த மார்க்சிஸ்ட்கள் கருதுவது போல், ஓரியண்டலிசம் என்ற வார்த்தை அசிங்கமானதாக கருதப்படுகிறது

சொல்லாத கதைகள்

கலா ஷஹானியைப்  போன்று மானிட மதிப்பீடுகளில் அளப்பரிய நம்பிக்கை கொண்டோருக்கு நாட்டிற்காக, அதன் விடுதலைக்காகப் போராடியதும் தான் வரித்துக் கொண் ட மதிப்பீடுகள் சார்ந்து வாழ்வதும்  அரசியல் செயல்பாடல்ல; மாறாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்து அவர்களின் ஆளுமையையும் வாழ்க்கை முறையையும் உருவாக்கிய ஓர் ஆன்மீகத் தேடல். அவர்கள் சுய லாபத்தையோ அங்கீகாரத்தையோ கருதாமல் தேசத்திற்குத் தொண்டாற்றுவதையு ம் சில மதிப்பீடுகளுக்காக வாழ்வதையுமே இலட்சியமாகக் கொண்டவர்கள்.

மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்

‘மகாத்மா காந்தியின் பெருமை அவர் நடத்திய தீரமான போராட்டங்களைக் காட்டிலும் அவர் வாழ்ந்த தூய்மையான வாழ்க்கையிலேயே தான் இருக்கிறது’ என்பார் முன்னாள் இந்திய குடியரசு தலைவர் சர்.எஸ்.ராதாகிருஷ்ணன். அந்த அளவுக்கு அவரது சிந்தனை, சொல், செயல் அனைத்தும்  தூய்மையானதாக இருந்தது. பிரச்சனைகளை அவர் அணுகிய விதம்-அவற்றிற்கு தீர்வு காண “மகாத்மாவின் மேலாடை துறவு: முன்னரும் பின்னரும்”

ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை

ஔரங்கசீப்பின் குற்ற உணர்வை வேறு மாதிரியாகக் காண்பிப்பதற்காக ஆட்ரி ட்ருஷ்கி செய்ததைப்போல் உண்மைக்குப் புறம்பான சுண்ணாம்புப் பூச்சை நான் செய்ய வேண்டிய அவசியமில்லை. காசி விசுவநாதர் கோயில், கிருஷ்ண ஜென்மபூமி மற்றும் ஆயிரக்கணக்கான கோவில்களை அழித்து அச்சிதிலங்ககளின்மேல் எழுப்பிய மசூதிகள் இன்றும் அவனது உருவ வழிபாட்டு எதிர்ப்புக்குச் சாட்சியாக நிற்கின்றன.

பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?

மன்னர்கள் இரண்டுவகையிலாக நினைவு கூறப்படுகிறார்கள். முதலாவதாக, பல இராச்சியங்களை வென்று பெரும் நிலப்பரப்பை தன் குடைக்கீழ் கொண்டு, பன்னெடுங்காலம் ஆண்டவர்கள். இரண்டாவதாக, குறைந்த காலமே, குறுகிய நிலப்பரப்பையே ஆண்டாலும் கல்வியிலும், அருங்கலைகளிலும் பல தலைமுறைகளாகத் தொடரும் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றவர்கள். கரிகாற் பெருவளத்தான், முதலாம் இராசராசன், முதலாம் “பெருமன்னர்கள் காலம் பொற்காலமா?”

இந்தியாவுடன் பேசுவது

A Selection of English Language Broadcasts to India. Edited and with an Introduction by George Orwell. – நூலில் இருந்து சில புகைப்படங்கள்

மிளகு

சென்னபைரதேவி நாற்பத்து நான்கு வருஷங்களாக அரசாங்கம் நடத்தி வந்தாலும், ஆட்சியிலும் வாழ்க்கையிலும் சகல வெற்றியும் பெற்ற ஒரு அரசியாக இருந்தாலும், ஒரு கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று விருப்பம் ஏனோ தோன்றியதில்லை. பெண்ணாகப் பிறந்தவள் பதினாறு வயதில் மண மண்டபத்தில் அக்னி வளர்த்துக் கைப்பிடிக்கக் காத்திருப்பவனோடு புது வாழ்க்கை தொடங்குவது எங்கும் வழக்கமாக இருக்க, சென்னா பதினாறு வயதில் அரசாள ஆரம்பித்து விட்டாள்.

தமிழ் மொழியின் தொன்மை: ஒரு கண்ணோட்டம்

ரிக்வேதத்தில் காணப் படும் “சப்த சிந்து” நிலவியல் ஐயத்திற்கிடமின்றி துல்லியமாக சிந்துவெளி அகழாய்வு இடங்களையும் முத்திரைகள் கண்டெடுக்கப் பட்டுள்ள நிலப் பகுதிகளையும் விவரிக்கிறது. Satellite Imaging மூலம் ரிக்வேதம் கூறிய சரஸ்வதி நதி ஓடிய வறண்ட படுகையும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த நிலவியல் குறித்த பிரக்ஞை தொடர்ந்து மகாபாரதம், புராணங்கள் வரையும் அதற்கப்பாலும் நீடிக்கிறது. ஆனால், தமிழில் உள்ள எந்தத் தொல் நூலிலும் சிந்து நதி, சரஸ்வதி நதிப் பகுதிகளின் நிலவியலுடன் மிக remote ஆகத் தொடர்புறுத்தக் கூடிய மிகச்சிறு குறிப்பு கூட இல்லை.

காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!!

கல்யாணம் அவர்கள் இறப்பதற்கு சுமார் 10, 15 நாட்களுக்கு முன்பு என்னை தொலைபேசியில் அழைத்து ”இன்னும் இரண்டு நாட்களில் நான் இறந்து விடுவேன். நீங்கள் எப்போ வீட்டிற்கு வருவேள்?” என்று கேட்ட போது ”நான் நிச்சயம் வருகிறேன். நீங்கள் அப்படி ஒன்றும் இறக்க மாட்டீர்கள். ஒரு வாரம் கழித்து “காந்தியை நேசித்தவர்! காந்தியை சுவாசித்தவர்!!”

வங்காள வரலாறு

This entry is part 11 of 13 in the series வங்கம்

750-1144 பாலா (Pala) வம்சத்து அரசினர் பல காலம் வங்காளத்தை ஆண்டனர். தர்மபாலா (770-810), தேவபாலா (810-850) ஆண்ட கால கட்டத்தில் அவர்களின் ஆட்சிப்பகுதி மேற்கில் மைய கங்கை பள்ளத்தாக்கிலிருந்து கிழக்கில் அஸ்ஸாம் வரை விரிந்தது. மஹாயான பௌத்தம், தாந்திரிகத்தை நோக்கி நகர்ந்தது. தர்மபாலா, பகர்பூரில் (Paharpur) சோமபுரா மஹாவிஹாரைக் கட்டினார். வங்காள தேசத்தில், ராஜ்ஷாஹி (Rajshahi) என்ற இடத்திலும் இந்த மஹாவிஹாரைக் கட்டியவர்

சர்ச்சில் இந்தியாவை எப்படிப் பட்டினிபோட்டார்!

கடும் பஞ்சம் ஏற்பட்டதற்கு, யுத்த அரங்குகளில் பயன்படுத்தவும் பிரிட்டனின் நுகர்வுக்காகவும் இந்தியாவிலிருந்து மிகப் பெரும் அளவிலான உணவு ஏற்றுமதி செய்யப்பட்டதே காரணம் என்று முகர்ஜி குறிப்பிடுகிறார். பஞ்சம் ஏற்பட்டிருந்தும் இந்தியா 1943 வருடம் ஜனவரியிலிருந்து ஜூலை வரையிலான காலகட்டத்தில் மட்டும் 70,000 டன் அரிசியை ஏற்றுமதி செய்தது. அந்த உணவு கிட்டத்தட்ட 4 லட்சம் மக்களை ஒரு முழு ஆண்டுக்கு உயிருடன் வைத்திருக்கும்.

ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?

பிற மத ஸ்தாபகர்களைப்போல் இயேசுவும் தம்மைத் தீர்க்கதரிசியாகவும் கடவுளின் வாக்குறுதியை மக்களுக்கு அறிவிப்பவராகவும் நினைத்தவர். நான் மறுபடியும் உங்கள் ஆயுட்காலம் முடிவதற்குள்ளேயே இறந்துபின் திரும்புவேன் என பலமுறை கேட்போரிடம் கூறியுள்ளார். நடந்தது என்ன? 2000 வருடங்கள் கழிந்தபின்னும் திரும்பிவரவில்லை.

ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?

எல்லா மதங்களும் சரிசமமானவையே; ராம், ரஹீம், அல்லா இவர்கள் எல்லாம் ஒருவரே; ஈஸ்வரன், அல்லா என்பவை ஒரு கடவுளின் பெயர்களே என்று சொல்லிக்கொண்டிருந்த, 1947க்குமுன் கிழக்கு வங்காளத்தில் வசித்த ராமகிருஷ்ண இயக்கத்தின் சந்நியாசிகளும் மற்ற ஹிந்து மத சந்நியாசிகளும் எங்கு குடிபெயந்தார்கள் என்ற கேள்வியையும் ரே எழுப்புகிறார்.

கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் திராவிடப் பேரறிஞர்களால் சொல்லப்படுவது இது: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழன் கல்வியறிவு பெற்று உலகம் முழுவதற்கும் பாடம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். தமிழ்நாட்டில் பிராமணர்கள் நுழைந்து தமிழர் கல்வித் திறனைச் சீர் குலைத்தனர். பிராமணர் அல்லாதாரை படிக்கவிடாமல் தடுத்தனர். இன்றும் பல்வகைச் சூழ்ச்சிகளைச் செய்து “கல்வியும் தமிழ் பிராமணர்களும் – பத்தொன்பதாம் நூற்றாண்டு”

விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை

எனும் இயக்கத்திலிருந்து பிரிந்து யுகாந்தர் எனும் இயக்கத்தை நிறுவி செயல்பட்டார். மேடம் பிகாஜி ருஸ்தம் காமா, எம். பி. டி. ஆச்சார்யா மற்றும் பலர் பாரிஸ் இந்தியர் சங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சாவர்க்கர், வ. வே. சு. ஐயர், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோர் அபினவ் பாரத் சமீதி எனும் இயக்கத்தின் கீழ் செயல்பட்டனர். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, தர்மராஜய்யர், வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை மற்றும் பலர் பாரத மாதா சங்கம் எனும் அமைப்பினை உருவாக்கிச் செயல்பட்டு வந்தனர். தென்காசியில் தொடங்கப்பட்ட பாரத மாதா சங்கமே தென்தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலும் கடைசியுமான புரட்சிகர ….விடுதலை இயக்கம் ஆகும்.

கண்ணீரின் குருதியின் சுவை

1770 ல் முதல் வங்கப்பஞ்சம். கம்பெனி உழியர்கள் அரிசிச் சந்தையையும் வளைத்துபோட்டனர். அதிகப் பணம் கொடுப்பவர்களுக்கு அரிசியை விற்றனர். குறிப்பிட்டவிலை நிர்ணயமெல்லாம் இல்லை. அந்தநிலையிலும் உப்புவரி முழுமையாக வசூலிக்கப்பட்டது. மக்களில் மூன்றில் ஒருபங்கு ஆட்கள் உணவில்லாமல் மரித்தனர்.

சிலப்பதிகாரத்தின் காலம்

சிலப்பதிகாரம் ஒரு முழுமையான கட்டுக்கதை என்று சொல்லிவிட இயலாது. சிலப்பதிகாரக் கதைக்கு அடிப்படையான சில நிகழ்வுகள் உண்மையில் நிகழ்ந்தேறி இருக்கவேண்டும். பூம்புகாரைச் சேர்ந்த கண்ணகி என்ற வணிகர் குலப்பெண் ஒட்டுமொத்தத் தமிழ்ப் பெண் இனத்தின் அடையாளமாக உருவாகி இருக்கிறாள். கற்பின் அடையாளமாகவும், பத்தினித் தன்மையின் அடையாளமாகவும் அவளை முன்னிறுத்துகிற காவியமே சிலப்பதிகாரம் ஆகும்.

தமிழகமும் இராமாயணத் தொடர்பு நம்பிக்கைகளும்

இராமன் தான் பாரதத்தின் அடையாளம். பாரத பண்பாட்டின் திருக்கோலம். பாரதம் புகட்டும் ஒழுக்கநெறியின் சிகரம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாக பாரத நாட்டவர்களால் போற்றப்படுகிறது. இராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன. இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும், அகநானுறு 70ஆம் பாடலும் நினைவூட்டுகின்றன. பல்லவர்கால பக்தி இயக்கத்தினபோது மாலடியார்கள் மாலவன் மீதான பக்தியைப் பரப்ப இராமகதையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். இராமகாதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள்தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- அவர்கள் காணும் இயற்கை வடிவங்களில் நாள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிரொலியின் நாதமே இக்கட்டுரையில் உணரப்படுகிறது.

தெலுங்குச் சோழர்கள்

தென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்பிடப்படும் போது போகிற போக்கில் தெலுங்குச் சோழர்களும் இடம்பெறுவதே வழக்கம். இவர்கள் சோழர்களின் வம்சாவளியினர் என்பது தெரிந்த செய்தியாக இருந்தாலும், இவர்களுடைய ஆட்சி எந்தக் காலத்தில் ஆந்திராவில் உருவானது? சோழர்களுக்கும் இவர்களுக்குமான உறவுமுறை எத்தகையது என்பது பற்றியெல்லாம் அதிகம் ஆராயப்படவில்லை.

தெலுங்குச் சோழர்களின் தோற்றத்தைப் பற்றியே பல விதமான கருத்துகள் உள்ளன. சோழர்கள் என்று இவர்கள் தங்களைக் கூறிக்கொள்வதினால் தமிழகச் சோழர்களின் வம்சாவளி என்று பெரும்பாலானோர் கருதினாலும், சிலர் இவர்களை ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்த பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும், சிலர் சாளுக்கியர்கள் வழிவந்தவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால், இவர்கள் சோழர்கள் வம்சாவளியினர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களும் அடங்கும். சோழன் என்பதின் தெலுங்கு வடிவம்தான் சோடன் என்பது.

பல பிரிவுகளாக ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலும் இந்த வரிகளோடுதான் துவங்குகின்றன:

எம். எல். – அத்தியாயம் 7

அவர் “எய்ட் டாக்குமெண்ட்ஸ்” என்ற பேரில் பிரசுரங்களை எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவை எல்லாம் ஆயுதப் புரட்சியைத் தூண்டுபவை. ஒருவேளை அந்தப் பிரசுரங்களை அவர் தன்னுடன் எடுத்து வந்திருக்கலாம் என்றார். அந்த ரெவியு கூட்டத்தில் சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், யூனியன் லீடர்களையும் கண்காணிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

நீலக்கடல் – பிரெஞ்சு இந்தியக் காலனி – மொர்ரீஸியஸ்

நாட்குறிப்பு எழுதி தன் எழுத்தின் மூலம் புதுவை பிரஞ்சு ஆட்சிக்கு நீங்காத இடம் தந்த துய்ப்பளே துபாஷி ஆனந்தரங்கப்பிள்ளை பாத்திரத்தை இரு எழுத்தாளர்களும் வெவ்வேறு வரலாற்றுப் பார்வையில் அணுகியுள்ளனர். மானுடம் வெல்லும் பிரபஞ்சன் ஆனந்தரங்கப்பிள்ளையை தனது காலத்தின் விதிகளுக்கேற்ப பிரெஞ்சு கவர்னரிடம் விசுவாசமாக நடந்துகொள்பவராக மட்டுமல்லாது புதுவை ஹிந்துக்கள் மீது பரிவு கொண்டவராகவும் சித்திரிக்கிறார். நாகரத்தினம் கிருஷ்ணாவின் நீலக்கடலைப் பொருத்தவரை ஆனந்தரங்கப்பிள்ளை பிரெஞ்சு அராஜகத்துக்கு ஊமைச்சாட்சியாக நின்ற மற்றொரு உயர்மட்ட ஹிந்துவாக சித்திரிக்கிறார். பிள்ளை ஒரு நேரடியான கதாபாத்திரமாக வராவிட்டாலும், மொர்ரீஸியஸ் தீவிலுள்ள தமிழரின் நிலையையும் அடிமை வாழ்வையும் ஆட்டிவைக்கும் பாவைகளாக விளங்கும் பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் அச்சாணியாக உயர்மட்ட வணிகர்களைக் குறிப்பிடுகிறார்.

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு

தமிழக வரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான்… பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.

முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் குறித்திருக்கும்.

மருது பாண்டியரின் கனவு

இந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பொருத்தவரை, முதல் சுதந்தரப் போர் என்று நம்மாலும் சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் அழைக்கப்படும் 1857ம் ஆண்டுக் கிளர்ச்சியே விடுதலைக்காக நடந்த முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னால், விடுதலைக்காக இப்படி ஒரு கூட்டு முயற்சியை தென்னகத்தில் மேற்கொண்டவர், மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது. போரின் ஒரு கட்டத்தில் இதற்கான பிரகடனத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விடுதலைப் போரின் பல கட்டங்களில் நாம் பார்க்கும் துரோகமும், சதிச்செயல்களும் இந்த ஒரு முயற்சியையும் முறியடித்துவிட்டன என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி
‘மூத்தது மோழை இளையது காளை’ என்ற பிரபலமான தமிழ்ப் பழமொழி, மருது சகோதரர்களில் பெரிய மருதுவிற்குப் பொருந்தி வராவிட்டாலும், இளையவரான சின்ன மருதுவிற்கு பொருந்துகிறது என்பது பல வரலாற்று ஆவணங்களாலும் தெளிவாக விளங்குகிறது. அவர் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும் …

யுகசந்தியில் இந்தியா

இந்திய மக்கள், தற்போதைய அரசாங்கம் அதிவேக வளர்ச்சியை கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும்போது பொறுமை குறைவாக இருப்பது வழக்கம்தான். அதேவேளையில், எதிர்கட்சிகளும், ஊடகங்களும் இணைந்து குறுகிய காலத்திலேயே மிக அதிக திசைதிருப்பல்களை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றன. தற்போதைய அரசும் அதன் பெரும்பான்மையான சமூக மற்றும் பராம்பரியப் பெருமையும் கொண்ட தலைவர்களும், இந்தியா உலகுக்கே முன்னோடியாக, வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். காலனியாதிக்கத்துக்கு முன்பிருந்த இந்தியாவின் நெடிய பாரம்பரியம் அச்சிந்தனையை உறுதியாக்குகிறது. இந்தியா அத்தகைய ஒரு நிலையை அடைய வழிகாட்டியாக மாற, இந்தியா பெறும் மாற்றத்தைக் கண்டாகவேண்டும். எத்துறையை எடுத்தாலும், பொருளாதாரம் முதல் சமூக வளர்ச்சி வரை இந்தியா ஒரு யுகசந்தியில் நிற்கிறது.

காந்தியின் கருத்துலகு – சில பரிமாணங்கள்

…காந்தியைக் குறித்து இரண்டு விஷயங்கள் புரிகின்றன: ஒன்று, அவரின் தெளிவான சிந்தனை. மிகுந்த சிந்தனைக்கும் ஆராய்ச்சிக்கும் பிறகு காந்தி பரிந்துரைக்கும் ஒரு வழியை எந்த வித சிந்தனை முயற்சியுமில்லாமல் பெரும்பாலோர் பின்பற்ற முன்வந்து கஷ்டப்பட்டிருக்கிறார்கள். ….இரண்டாவது, அவரின் பகுத்தறிவு. … காந்தி சொன்னார் என்பதற்காக செய்யாமல் – ஏன் எதற்கு என்று கேள்விகேட்டுப் புரிந்துகொண்டு உங்களுக்கும் முழுச்சம்மதம் என்றால் மட்டுமே செய்யவேண்டும் என்கிறார்… ஒரேயொருவரிகூட தேவையில்லாமல் எழுதியிருப்பதாக உணரமுடியாதது காந்தியின் விவர துல்லியத்தோடு கூடிய எழுத்துநடை. எதையும் எளிமையாக யாரும் அளந்துகொள்ளும் வகையில் செய்துவிடுவதில் காந்தி அதிசமர்த்தர்.

மணி பத்மம் – ஆபிரகாம் எராலி

இதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது, இந்த மேற்கத்திய நாகரிகங்களுடன் இந்தியாவுக்கு இருந்த வணிக உறவுகள் இந்தியாவில் கொண்டு குவித்த செல்வ வளம். வர்த்தகம் உலகமயமாகும் போக்குக்கு இன்றும் இந்தியாவில் எதிர்ப்புகள் இருக்கின்றன. அந்தப் பின்னணியில் பார்க்கும்போது, அன்றைய அறியப்பட்ட உலகத்துடன் இந்தியா தொடர்ந்து வணிக உறவுகள் கொண்டிருந்ததால்தான் இந்தியாவில் எல்லா துறைகளிலும் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது என்றும், அது கிட்டத்தட்ட ஒரு ஆயிரம் ஆண்டுகள் நீடித்திருந்தது என்றும் ஒரு முடிவுக்கு எராலி வருவது வியப்புக்குரிய செயல். ஆனால் அதில் பிழை இல்லை என்றே தோன்றுமளவுக்கு அவர் அதை தர்க்க ரீதியாக நிறுவுகிறார்.

நெஞ்சில் குடியிருக்கும் காந்தி – மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர்’

தான் மிகவும் நம்பியவர்கள் தன்னை திட்டமிட்டு ஏமாற்றுவது காந்திக்கு மிகவும் வேதனையளிப்பதை நேரிடையாகவே பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார் மிலி. தெரியாமல் செய்யப்பட்டது எனச் சொல்லப்படும் பொய்க்காரணத்தை ஒருபோதும் காந்தி ஏற்றுக்கொள்வதில்லை. தன்னைச் சுற்றியிருப்பவர்களிடம் காந்தியின் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக இருந்ததாலேயே, அவர் அடைந்த ஏமாற்றங்களும் அதிக அளவில் இருக்கின்றன என்பது மிலியின் கருத்து. ஆனால் காந்திக்கு அக்கருத்தை ஏற்றுக்கொள்வதில் மிகவும் தயக்கம் இருக்கிறது. ஒருமுறை தான் ஏமாற்றப்பட்டதை வேதனையுடன் காந்தி விவரித்த சமயத்தில் அவரை அமைதிப்படுத்தும் விதமாக ‘ஒருவேளை அவள் தெரியாமல் அதைச் செய்திருக்கலாம்’ என்று மிலி சொன்னபோது அதை ஒரு பேச்சுக்காகக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் காந்தி. ஒரு தீங்கை தெரிந்தே செய்பவர்களுக்கு திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தான் செய்யும் செயல் தவறென்றே தெரியாமல் தீங்கு செய்பவர் நல்லவராக மாற வாய்ப்பே இல்லை. ஒருவருக்கு நல்லது கெட்டது தெரியவில்லை என்றால், நன்மையையும் தீமையையும் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை என்றால், அவருக்கு தனக்குள் இருக்கும் கடவுளைத் தெரியவில்லை என்று பொருளாகிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கும் மேய்ச்சல் நில விலங்குகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று தொடர்ந்து சொல்கிறார் காந்தி.

எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு

90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.

திருவரங்கன் உலா

This entry is part 35 of 48 in the series நூறு நூல்கள்

இந்த சரித்திர ஆவணங்களின் பின்னணியில் வேணுகோபாலனின் ‘உலா’ தமிழில் எழுதப்பட்ட முக்கியமான ஒரு நாவலாகத் தோன்றியது. சாண்டில்யன் கதைகள் போன்று கற்பனைக் கதாபாத்திரங்களைக் கொண்டு வேயப்பட்ட கதை எனினும் ‘உலா’ கற்பனை உலகில் நிகழ்கிற கதை அல்ல. பதினான்காம் நூற்றாண்டில் ஸ்ரீரங்கத்தில் உண்மையாகவே நடந்த ஒரு நிகழ்ச்சியிலிருந்து தொடங்கும் இந்த அவலக் கதையானது பல சரித்திரச் சான்றுகளுடனேயே பயணிக்கிறது.

சித்திரத்தைப் பின்தொடர்தல்: பஹாடி கலைப் பாரம்பரியத்தின் கதை

முழு இந்தியாவிலுமே அஜந்தாவிற்கு முன் இந்திய ஓவியங்களைப் பற்றி வெறும் இலக்கியக் குறிப்புகளே உள்ளன, சான்றுகளோ எச்சங்களோ இல்லை. அஜந்தாவிற்குப் பிறகு சுவற்றோவியங்கள் இந்தியா முழுவதும் பரவினாலும் சட்டென மறைந்து புதிய வடிவங்களில் பல்வேறு பிராந்தியங்களில் உருமாறித் தலைகாட்ட ஆரம்பித்தன. அதில் ஒரு தொடர்ச்சியைத் தேடினால் முதலில் கிடைப்பது நான்காம் நூற்றாண்டிலிருந்து எட்டாம் நூற்றாண்டு வரை வங்காளத்தில் வழங்கி வந்த பாலர் பாணி பௌத்த ஓலைச் சுவடிகள். அஜந்தாவின் அழகியலைச் சுருக்கி சுவடிக்குள் பொருத்தும் அளவுக்கு வடிவங்கள் எளிமைப் படுத்தப் பட்டு விட்டன. அதன் பிறகு மேற்கு மாவட்டங்களான குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தான் அதிக அளவில் ஏட்டோவியங்கள் தலை காட்டுகின்றன. எட்டாம் நூற்றாண்டு தொட்டே குஜராத்துடன் வணிகத்தில் ஈடுபட்ட அரேபியர் அறிமுகப்படுத்திய காகிதம் அப்பிராந்தியத்தின் ஓவிய மலர்ச்சிக்குக் காரணியாயிற்று.

கண்ணீரால் காத்த பயிர்

இரண்டாம் உலகப்போரில் இந்திய ராணுவம் பங்கேற்க காங்கிரஸின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் பிரிட்டனிற்கு போர் நேரத்தில் இந்திய உள்நாட்டு எழுச்சியையும் சமாளிக்க வேண்டியதாயிற்று. 1940-இல் வின்ஸ்டன் சர்ச்சில் இங்கிலாந்து பிரதமமந்திரியானதைத் தொடர்ந்து பயிற்சியும் திறமையும் மிக்க இந்திய ராணுவத்தினரை இந்தியாவிலிருந்து அகற்றுவது காலனி அரசுக்கு முக்கியக் கடமையானது. உள்நாட்டில் அவர்களில் ஒரு பகுதியினர் தமக்கு எதிராகத்திரும்பினால் கூட இந்தியாவைத் தக்க வைக்க முடியாது என்பது மட்டுமல்ல, உலகப் போரின் தோல்வியில் இருந்து இங்கிலாந்தே தப்ப முடியாது என்பதும் சர்ச்சிலுக்கு தெரிந்திருந்தது. ஏனெனில் இங்கிலாந்தின் போர்முனைகளுக்குத் தேவையான மணற்சாக்கு மூட்டைகளிலிருந்து, அரிசி, கோதுமை, உணவுப்பொருட்கள், ராணுவத் தளவாடங்கள் என்று அத்தனை போர்க்காலப்பொருட்களுக்குமான உற்பத்தி மற்றும் வினியோகத்துக்கான ஆதார கேந்திரமாக இந்தியா விளங்கியது.

காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் காலனியாதிக்கக் கண்ணோட்டத்திற்கு எல்லிஸின் நிர்வாக நடவடிக்கைகள் உகந்தவையாக இல்லை. குறிப்பாக இந்திய நாட்டு மண்ணின் மரபுகள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை நீடிக்கச் செய்கின்ற வகையிலான நடவடிக்கைகளும் கல்விக் கொள்கைகளும் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகத்தின் தலைமை இடமாகிய கல்கத்தாவில் இருந்த இயக்குநர் குழுவுக்கும் எல்லிஸுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தின.

திராவிட-ஹரப்பன் தொடர்பு? ஆய்வுமுறைச் சிக்கல்கள்

சிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது. “ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.