மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?

மனித உடலுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்களை வளர்த்து அறுவடை செய்யப் பண்ணைகள் இருக்கும். இவை முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இயங்கும். நாமக்கல்லில் ஒரு கிட்னி பண்ணை, நாகப்பட்டினத்தில் இதயப் பண்ணை. இப்போதே மனிதக் கருக்களிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரிக்க சீனா போன்ற நாடுகளில் சந்துக்கு சந்து ஆராய்ச்சி சாலைகள் உள்ளன. அவர்களிடம் ஃப்ரிஜ்ஜில் ஆயிரக் கணக்கில் உறைய வைத்த மனிதக் கருக்கள் இருப்பதால், முதலீடு செய்ய அமெரிக்க சேட்டுகள் பண மூட்டையுடன் அலைகிறார்கள்.

சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள் (பகுதி 2)

திராவிட மொழி – குறிப்பாகக் கன்னடமும் தமிழும் ஹரப்பன் மொழியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு கருதுதற்கு ஏதுவாக இருப்பனவற்றுள் ஒன்று, எட்டு என்ற எண் ஹரப்பன் நாகரிகத்தில் அடிப்படை எண்ணாக இருப்பதும் ‘எண்’ என்ற தமிழ் – கன்னடச் சொல், எட்டு எட்டாக எண்ணும் முறையே தொடக்கத்தில் நிலவிய முறை என்பதை உணர்த்துவதும் ஆகும். மற்றொன்று தானியங்களுள் ஒரு வகையின் பெயரும், திங்களைக் (சந்திரனையும், மாதத்தையும்) குறிக்கும் பெயரும் (நெல், நிலா என்பன) தொடர்புடைய பெயர்களாக இருப்பது.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: காலியாகும் குடியிருப்புகள், கணையமும் ஷவர் குளியலும், இருவர், விலங்குகளின் கணிதத் திறன்

நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள் – 2

துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் அறிமுகம் ஆகுமுன் மவுரி நீண்ட தடிகளையும் குறுந்தடிகளையும்(Clubs) போராயுதங்களாகப் பயன்படுத்தினான். மரத்தாலும் பச்சைக் கற்களாலும் (Jade) ஆன இந்த ஆயுதங்கள் ஆபத்தில்லாதவை போலத் தோன்றினாலும், மவுரியின் கைகளில் பயங்கரமாகச் செயல்பட்டன. வில், அம்பு மவுரி அறியாதவை. வில்லம்புகளுக்கு உரிய மூலப்பொருள்க்ள் இங்குக் கிடைப்பனவாக இருந்தும் இந்தப் போர்க்கருவியைப் பற்றி மவுரி அறியாது இருந்தது கவனிக்கத் தக்கது.

தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்

ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.

நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள்

நவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் வரலாறு நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம்.ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும்.

பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்- தாய்-சீஜி

தாய்-சீஜிக்கு இரு வடிவங்களுண்டு. அவரொரு தேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் என்பது முதலாவது, வெற்றிகரமான எழுத்தாளர் என்பது இரண்டாவது. முதலாவது துறையில் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டது ஏராளம், குறிப்பாக சீன அரசிடமிருந்து. ‘எனது மனத்துயரம் சீனா’ (Chine ma douleur) என்ற திரைப்படத்திற்காக சீன அரசாங்கம் அவரை நாடு கடத்தியது. அப்படத்தில் வரும் இளைஞன் செய்த குற்றம் அரசால் தடை செய்யப்பட்டிருந்த இசைத் தட்டொன்றை தனது வீட்டில் வைத்திருந்ததும், அதைப் போட்டுக் கேட்டதும்.

அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

ஒரு நாள் அந்த குழந்தை இரவில் என் அம்மாவிடம் பேசவேண்டுமென்று அழுதபோது அதை எடுத்துக்கொண்டு திருமதி ஸெட்டியே வந்திருந்தாள். ஒரு அரை மணிநேரம் இருந்துவிட்டு குழந்தை போனது. இத்தனைக்கும் அம்மாவிற்கு அதனோடு பேசவே தெரியாது. அம்மை தமிழும், மலையாளமும் கலந்து பேசுவாள். அது ஏதோ இந்தியில் கனைக்கும். ஆனாலும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்படியே அந்த சின்ன வானரம் அம்மா மடியிலேயே தூங்கிப்போயிற்று.

வாசகர் எதிர்வினை

இன்றைய சலிப்பின் காரணம், எதையெல்லாம் படிக்கிறோமோ அவற்றிலெல்லாம் நம் பங்கு இருப்பதாய் எண்ணுகிற ஒரு மாயையே. அது தான் எல்லாவற்றையம் மேய்ந்து பார்க்கச்சொல்கிறது.

கடைசி வெற்றி

கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த சிறந்த இங்கிலாந்து எழுத்தாளரான J.G.பல்லார்ட் எழுதிய கடைசிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது: ”…அவளுடைய இந்த அவமதிப்பால் கோவப்பட்டு, வேகமாக சுவற்றைத் தள்ளினேன். அதுவோ லேசில் பிடி கொடுக்கவில்லை. ஆனால் கைகளை விலக்கிய பின்னரே கவனித்தேன். சுவற்றின் மேல்பரப்பில் உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்கு மத்தியில் மெலிதான ஒரு விரிசல்! ஆர்வமாக மீண்டும் தள்ளினேன். விரிசல் பிளவாக அகண்டது. நத்தை வேகத்தில் நகரத் தொடங்கிய பிளவு, பின் புலி போல மேல் நோக்கி பாய்ந்தது. மூன்று அடிகள் நீண்டு, அலங்காரப் பூச்சுகளை எல்லாம் தாண்டி, முதல் மாடியில் உள்ள தடுப்புக் கம்பியை நெருங்கியது.”

நடந்துகொண்டே நாவலைச் சொல்பவன்

புத்தகம் படிக்கிறபோது ஒவ்வொரு பக்கமாகக் கிழித்துப் போட்டுக்கொண்டே வருவான். புதிதாகப் பார்ப்பவர்கள் அவனுக்கு மனச்சிதைவு நோய் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை. கிழித்துப் போட்ட பக்கங்கள் எல்லாம் அவன் மனதில் அச்சாகிவிட்டது என்று அர்த்தம். எத்தனை வருடங்களுக்குப் பிறகு கேட்டாலும் ஒரு வரி தவறாமல் சொல்வான். அதற்காகப் புத்தகத்தைக் கிழித்துப் போட வேண்டுமா? என்று யாரும் அவனை இதுவரை கேட்டதில்லை.