‘லைட்ஸ் ஆப்’ – ரா.கி.ரங்கராஜன்

எழுத்தாளர், சாதனையாளர் ரா.கி.ரங்கராஜன் இன்று (18-08-2012) காலமானார். இந்த தருணத்தில் சொல்வனம் ஆசிரியர் குழு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது: பல முறை அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தாலும் ஒரே ஒரு முறைதான் அவரை நேரில் சந்தித்திருக்கிறேன். அந்த முதல் சந்திப்பிலேயே அவரிடம் பல நாள் பேசியது போன்ற உணர்வு. 80+ வயதிலும் மூன்று மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

இளையராஜாவின் ரசிகர்கள்

எண்பதுகளின் திரையிசை என்னும் தலைப்பு மனதைக் கவர, ‘நீயா நானா’ பார்க்க ஆரம்பித்தேன். எண்பதுகளின் திரையிசை என்றால் அது பெரும்பாலும் இளையராஜாவின் திரையிசைதான் என்பதுக்கேற்ப, இளையராஜாவின் ரசிக, ரசிகைகள் பலரும் கலந்து கொண்டு பேசினர். பெரும்பாலோர், தங்கள் உள்ளம் கவர்ந்த, அப்போதைய பிரபலமான பாடல்களை சுருதி விலகாமல் பேசிக் காண்பித்தனர்.

நீரில் கரையாத கறைகள்

ஒரு கட்டத்தில் அம்மா தெரிந்தவர்களின் வீடுகளுக்கு பாத்திரம் தேய்க்கப் போனது, ஒரே வாரம் தான், அதற்குள் அப்பாவுக்கு உடல்நிலை சரியாகி அவர் விண்ணப்பித்திருந்த வேலையும் கிடைத்தது, வீட்டு வேலைக்கு சென்று வந்த ஒரு நாளில் அம்மா யாரிடமும் பேசாமல் சாமி விளக்கைப் பார்த்துக்கொண்டே அழுதது என மறையாமல் நினைவில் உறைந்து விட்ட காட்சிகள் மெல்ல நகரும் சலனப்படம் போல் அழிக்கவொட்டாமல், மறக்கவொட்டாமல் மீண்டும் தோன்ற…

லூலூ

ஃபேய்ஃபேய் என்ற அவ்வீட்டுப் பூனையுடன் சீக்கிரமே நட்பு கொண்டது லூலூ. முதலில், ஃபேய்ஃபேய்க்கு லூலூவைக் கண்டாலே பயமாக இருந்தது. என்னைச் சீண்டாதே என்று சொல்வது போல முதுகை வளைத்து உர்ரென்று முறைத்துக் கொண்டே பின்னால் சென்றது. அக்குடும்பத்தின் அனைத்தையுமே தான் தான் பாதுகாக்க வேண்டும் என்று அதற்கு எண்ணம். அது பூனையிடம் கைகுலுக்க முன்நீட்டியதும் குழந்தைகள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நண்பன் தான் என்று சீக்கிரமே ஃபேய்ஃபேய் புரிந்து கொண்டது. இனி சேர்ந்து இணக்கமாக இருப்போம் என்று சொல்வதைப் போல ஒன்றையொன்று முகர்ந்து கொண்டன.

மைகெல் கானலி

கானலியின் நாவல்களில் உள்ள ஒரு சிறப்பம்சம், சட்டச் செயல்முறைகள் (legal process), விசாரணை நடைமுறைகள் பற்றிய விவரிப்புகள். பொதுவாக குற்றப் புனைவுகள் விசாரணை, அதன் இறுதியில் குற்றவாளி கைது என்று முடியும். ஆனால் இவர் நாவல்களில் நாம் அதிகம் அறியாத விசாரணை நடைமுறைகள் பற்றி குறிப்புகள் இருக்கும். உதாரணமாக சம்பவ புத்தகம் (incident book ). இந்த புத்தகம் விசாரணை அதிகாரி வைத்திருப்பது, இதில் குற்றம் முதலில் அவர் கவனத்துக்கு வந்தது முதல், விசாரணையின் ஒவ்வொரு அடியையும் குறித்து வைப்பார். அதே போல் குற்றவாளி கைது செய்யப்பட்ட பின் நடக்கும் விசாரணை பற்றியும் துல்லிய விவரிப்பு இருக்கும்.

துருவ நட்சத்திரம் – பழநி சுப்ரமணிய பிள்ளை – மதிப்புரை

பழநி சுப்ரமண்யத்தின் இடதுகை பழக்கத்தில் தொடங்குகிறது நூலின் தனி ஆவர்தனக் கச்சேரி. கற்பனைச் சித்தரிப்பாய் சென்ற நூற்றாண்டின் முப்பது நாற்பதுகளில் கோலோச்சியிருந்த செம்பை வைத்தியநாத பாகவதருக்கும், உடன் வாசித்துவந்த வயலின் வித்வான் மைசூர் சௌடய்யாவிற்கும், இடது கை மிருதங்க வித்வானான சுப்ரமண்யத்தை மேடையேற்றுவதில் இருந்த கருத்து வேறுபாடுகளையும் (மிருதங்கம் நன்கு ஒலிக்க மேடையில் இடம்மாற்றி உட்கார வேண்டும்), செம்பையின் ஆதரவையும், சௌடய்யாவின் மனமாற்றத்தையும், வரலாற்று சம்பவத்தை சிறுகதை வடிவில் அருமையாய் விவரிக்கிறது.

மகரந்தம்

சீனாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டாலும் பணக்காரர்களாக இருந்தால், சிறையைப் பார்க்கத் தேவை இல்லையாம். அட, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் நிறையவே ஒற்றுமை இருக்கும் போலிருக்கிறதே என்கிறீர்களா? இங்கு ஏதோ ஓரிரண்டு தினங்கள் கண் துடைப்பாகவாவது சிறைக்குப் போவார்கள். அதை மகத்தான தியாகம், பகுத்தறிவு இயக்கத்திற்காகப் பலியானோம் என்று புரளியும் செய்வார்கள். அங்கு அதெல்லாம் கூடத் தேவை இல்லையாம். ஆனால் யாரையோ சிறைக்கு அனுப்பியே தீர வேண்டும் என்பதால், தமக்குப் பதிலாக இன்னொரு நபரைச் சிறைக்கு அனுப்பி வைப்பார்களாம் பணம் குவித்தவர்கள்.

கவிதைகள்

நான் எப்போதும் பேசியே பார்த்திராத
குணசேகரின் தங்கச்சிக்குள்
அம்மன் வந்துவிட
பக்கத்திலிருந்த மாரியின் நாத்திகம்
கரகத்தின் உச்சியில்
உட்கார்ந்திருந்த
பொய்க்கிளிபோலவே
எந்த மத்தளத்தின் கொட்டிற்கோ
அசைந்ததாய்த் தெரிந்தது!

பாதசாரிகளின் புகைப்படங்கள்

நேஷனல் ஜியோகிரபிக் நிறுவனம் பயணப் படுவோரின் புகைப்பட போட்டி ஒன்றை நடத்தி அதன் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. பிரமிக்க வைக்கும், லயிக்க வைக்கும் காட்சிகள். இங்கே பார்க்கலாம்.

பகத்சிங்கின் மரணம் – மறைக்கப்பட்ட உண்மைகள்

பிரிட்டிஷ் அதிகாரிகளின் உதவியுடன் ‘ஆபரேஷன் ட்ரோஜான் ஹார்ஸ்’ என்னும் ரகசியத் திட்டம் வகுத்து சாண்டர்ஸின் உறவினர்கள் தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டனர் என்று அந்நூலில் விளக்கப்பட்டிருக்கிறது. பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் கழுத்து மட்டும் முறிக்கப்படும் வரை தூக்கிலடப்பட்டு அரைமயக்கத்தில் இருந்தவர்களை இறந்துவிட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டது.

நம்பிக்கை

காசியில் கங்கை புரண்டதைப் பார்க்கவும் பாட்டியின் கண்களில் நீர். எதோ இத்தனைக் காலம் பிரிந்த ஒருவரைப் போல்.. பேசவேயில்லை. அங்கும் ஒரு படகுக்காரன். அவன் தான் விளக்கியவாறே வந்தான். சார் இங்கே காக்க கத்தாது, பூ மணக்காது, பொணம் வாடையடிக்காது. கொஞ்சம் காட் லே குளிக்கலாம் மத்த இடம் எல்லாம் பொணம் எரிக்கத்தான் என்று தொடர்ந்தான். படகில் சென்றவாறே பார்த்த போது அவன் கூறுவதின் நிதர்சனம் தெரிந்தது.

வி.எஸ்.நரசிம்மனின் சங்கம இசை

பிரபல வயலின் கலைஞர் வி.எஸ்.நரசிம்மன் தனது குழுவினருடன் கர்நாடக இசையில் அமைந்த ‘மோக்‌ஷமு..’ என்ற பாடலை மேற்கத்திய Quartet பாணியில் இசைக்கிறார். மனதை லயிக்க செய்யும் கலை வடிவம்.

ஜெஃப் டையருடன் ஒரு நேர்காணல்

“நான் பற்பல பொருள்களைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரி கட்டமைப்பையே பயன்படுத்தியிருந்தால், அதெல்லாம் ஒரு தூசுக்குச் சமமாகி விடும்..”

செம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்

புத்தம் புதியதாய்த் தோன்றினால்தான் சிருஷ்டி. சிருஷ்டி என்றால் அது முன்னர் இல்லாதது. புதியது. புதியது என்கையில் நிச்சயமாக அது பழையது இல்லை என்றாகிறது. அதே யுகயுகாந்திரமாய் உதிக்கும் சூரியன்தான். இன்று புதிதாய் உதிக்கிறது. அதே 20,30, 60,80, 90, 100 வயது உடல்தான். இன்று புதிதாய்க் கண் விழிக்கிறது. இக்கணம். அதில் இடமும் காலமும் எனவே நானும் இல்லை. அதுவே செம்மை. அதை வாழவொட்டாமல் மனம் தடுக்கிறது.

அகிம்சையின் வெற்றி

வன்முறையைத் தவிர்க்கும் அமைதிவழி எதிர்ப்புகள், குடிமக்கள் சமுதாயத்தின் எழுச்சிகள், ஒத்துழையாமை இயக்கங்கள் ஆகியன வரலாற்றில் என்ன பங்கு வகித்திருக்கின்றன, என்ன மாறுதல்களைக் கொணர்ந்திருக்கின்றன என்பனவெல்லாம் முறையான சோதனைக்கோ, ஆய்வுக்கோ ஆட்படுத்தப்படவில்லை. மாறாக ஆயுதப் புரட்சிகளெல்லாம் இறுதியில் வெல்கின்றன என்பது போன்ற ஒரு கருத்து சகஜமாக வன்முறை எழுச்சிகளையே அரசியலாகக் கொண்டவர்களிடமும் இருப்பதை நாம் எங்கும் காண்கிறோம். அது தற்செயல் இல்லை.

க.நா.சு – கனவும் காரியங்களும்

இது க.நா.சு பிறந்த நூற்றாண்டு தருணம். இத்தருணத்தில் தமிழ் இலக்கிய சூழலில் அவரது பங்களிப்பு குறித்த ஒரு முழுமையான பார்வையை அளிக்க முயல்கிறது இந்தக் கட்டுரை : கோட்பாட்டு அடிப்படையிலான, பல்கலைக் கழகங்கள் சார்ந்த விமர்சன மரபிலிருந்து விலகி, ரசனை அடிப்படையிலான தனித்துவமிக்க விமர்சன மரபை உருவாக்கியது க.நா.சுவின் முக்கியமான பங்களிப்பாகும். தமிழ் நவீன இலக்கியத்தின் இன்றைய நிலையிலிருந்து பின்னோக்கிச் செல்லும்போது, படைப்பிலக்கியம், விமர்சனம், பத்திரிக்கைகள் என அதன் எல்லாத் தளங்களிலும் க.நா.சு என்று அறியப்படுகிற கந்தாடை நாராயணன் சுப்பிரமணியத்தின் அழுத்தமான பங்களிப்பை நம்மால் அடையாளம் காணமுடியும்.

மஹாபலியின் வருகை

அறையின் மரத்தடுப்புகளில் பொருத்தபட்டிருந்த கண்ணாடி பேனல்களின் வழியாக கிளையின் ஊழியர்கள் மற்றும் பல கஸ்டமர்களின் முகங்கள் தெரிந்தன. சில முகங்களில் வியப்பு, சில முகங்களில் வருத்தம், சில முகங்களில் கோபம் என்று மாறுபட்ட உணர்ச்சி வெளிப்பாடுகள். இவற்றில் எது தன்னை மையப்புள்ளியாக கொண்டது என்று பாலுவிற்கு புரியவில்லை. ஆனால், இனம் புரியாத ஒரு வித அச்ச உணர்வு முதன் முறையாகத் தோன்றியது. இது நாள் வரை இருந்த கலக்கம், அழுத்தம், குழப்பம் எல்லாம் இந்த அச்ச உணர்வின் முன்னோடிகளோ!

சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே – இறுதி பாகம்

பல்வேறு துறைகள் சக்தியை பலவாறும் உபயோகிக்கப்படுகின்றன. அதே போல, இயற்கை வளங்களும் பல வகைகளில் உபயோகிக்கப் படுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு காகிதத் தொழிற்சாலை என்று வைத்துக் கொண்டால், அதன் நீர், மின்சாரம், மரம் மற்றும் வெப்ப உபயோகம் ஒரு வகையில் இருக்கும். ஆனால், ஒரு அலுமினியத் தொழிலில், மரம் தயாரிப்பில் உபயோகிக்க மாட்டார்கள். ஏராளமான கனி வளம் மற்றும் மின்சாரம் உபயோகிக்கப் படும். எப்படி, அலுமினியத் தொழிலையும், காகிதத் தொழிலையும் ஒரே முறையில் அளவிடுவது? அத்துடன், இந்திய காகிதத் துறைக்கும், ஸ்வீடன் நாட்டு காகிதத் தொழிலையும் எப்படி அளவிடுவது?

ஜன்னல்கள்

காரின் ஏ சி யை அணைக்க வேண்டாம் என்று சொன்னேன். சீட்டில் சாய்ந்து கண்ணை மூடி கிடந்தேன். யாரோ என்னப் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரக்ஞை! கண்ணைத் திறந்தால், நேற்று சந்தித்த கிழவனும் கிழவியும் கார் ஜன்னலுக்கு வெகு அருகில் நின்று கண் மூடிக் கிடந்த என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சாப்ளின் – பகுதி 2

நவீனத்துவம் துவங்கிய பொழுதிலிருந்து மனிதர் துரிதத்தையும் வேண்டி நிற்கிறார். நவீனத்துவத்தின் கடைக்கால்களான கருத்தியல்கள் உலகெங்கும் பரவி, தேர்ந்த விசாரணையற்று அனைத்து நிலங்களிலும் நடைமுறைப்படுத்தப் படுவதன் விளைவு, படைப்பூக்கம் என்பது வளர்வதன் கதியை விட, அழிப்பின் கதி கூடுதலாக உள்ளது. விளைவு, செம்மை என்றும்போல் தொலை வானாகவே இருக்கிறது மானுடருக்கு.

உணவின்றி வாடுமா உலகு?

உணவு உற்பத்தியில் வளர்ச்சி காணும்போது தூய நீரின் பயன்பாடும் அதிகரிக்கிறது. ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவற்றின் மூலம் பெறப்படும் நீரில் 70 விழுக்காடு விவசாயத்திற்கு உபயோகிக்கப்படுகிறது. உற்பத்தியினைப் பெருக்குவதாயின் அதற்குத் தேவையான நீரின் அளவும் அதிகரிக்கவே செய்யும். எனவே நீரின் தேவை சுமார் 80 முதல் 90 விழுக்காடுவரை உயரலாம் என எதிர்பார்க்கிறார்கள். இதனால் இன்று உயிர்ப்புடன் ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளில் பல வற்றிச் செயலற்றுப் போகும்.