ஆயிரம் தெய்வங்கள் – ஜேசன்

பாம்புப் பற்களை உழுத வயலில் விதைத்ததும் நாகாசூரர்கள் மண்ணிலிருந்து வெளிப்பட்டு ஜேசனைத் தாக்கத் தொடங்கினர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய ஜேசன் ஒரு புதரின் மறைவில் ஒளிந்து நின்று கற்களைக் கொண்டு திருப்பித் தாக்கினான். தாக்குதல் எங்கிருந்து நடைபெறுகிறது என்று குழப்பமடைந்த நாகாசூரர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு மரணமடைந்தனர்.

கடன்பட்டார் நெஞ்சம்

ஒரு முறை மிகவும் நெருக்கடியான ஒரு சமயத்தில், நான் ஐநூறு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்து நிற்க.. என் மனைவி ஒரு வார்த்தைக் கூட கூறாமல், என்னைக் கண் கலங்க பார்த்த பார்வை, இன்னும் எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

மகரந்தம்

நாய்களின் மோப்ப சக்தியை கேன்ஸர் போன்ற வியாதிகளை கண்டுபிடிப்பதற்கும் உபயோகப்படுத்தலாம் என்று இன்றைய மருத்துவம் சொல்கிறது. ஆடிஸம், ஆஸ்பெர்ஜெர் போன்ற நோய்குறித்தொகுதிகள் உள்ளவர்களுக்கு நாய்களின் அண்மை அமைதியைக் கொடுக்கும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டு இன்று அத்தகையவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளில் லேப்ரடார் போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன

ஃப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் – புள்ளியியல் பகுப்பாய்வின் முன்னோடி

ப்ளோரென்ஸ் நைட்டிங்கேல் என்றவுடன் பொதுவாக எல்லோர் நினைவில் வருவது “விளக்குடன் ஒரு மங்கை” மற்றும் செவிலியாக அவர் சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு. அனேகமாக நாம் அறியாத அவருடைய இந்த புள்ளியில் துறைத் திறமை மீது சிறிது ஒளி பாய்ச்சிப் பார்ப்போம்.

கவிதைகள்

அவன் பழத்தை கையில் எடுப்பதும்
வாயில் வைத்துக் கடிப்பதுமாக அக் காட்சி
குயிலின் கனவில் தோன்றிற்று
மறு நாள் அதிகாலை
தான் கண்ட கனவை விபரமாக கூறுகிறது குயில்
குயில் கூவுகிறது என்று எல்லோரும் ஏன் சொல்கிறீர்கள்

பிரிட்டன் – 2012

அத்தனை ஆரவாரமான, இசைக்கும் விளக்குகளுக்கும் நடுவினிலே சன்னமாய் அவரிடம் போய் “ஸார், ரிசஷன், ரிசஷன்னு சொல்றாங்களே அது பத்தி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க ஆசை. எதற்கு வம்பு. பிரிட்டிஷ் துப்பறியும் புத்தங்களின்படி அங்கும் பக்கத்திலிருக்கும் கிரின், ஜேம்ஸ், ஹைட் பார்க்குகள் முழுக்கவும் MI5/6 துறை அதிகாரிகள் இருப்பார்கள். அந்த பார்க்குகளிலும் லண்டன் ட்யூப்புகளிலும் ரகசிய, சங்கேத வார்த்தைகளை, பெட்டிகளை மாற்றிக் கொண்டிருப்பார்கள். நாம் ஏன் அவர்களுக்கு வேலை வைக்க வேண்டும்…

வாசகர் மறுவினை

சென்ற இதழில் பிரகாஷ் சங்கரன் எழுதியிருந்த கட்டுரை மிக உபயோகமுள்ளதாக இருந்தது. அறிவியல் ரீதியாக துல்லியமான தகவல்கள் மட்டுமல்ல, இந்த மருத்துவ தொழில்நுட்பத்தின் சமூகத் தாக்கம், பக்க விளைவுகள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவற்றை அலசியதும் நன்று.

இசையில்லாத இசை

அன்று ஒரே மேடையில் ஒருவர் குழல் ஊதினார். சல்யன் கர்ணனுக்குத் தேரோட்டிய மரபில் ஒருவர் அவருக்குப் பக்க வாத்தியம் வாசித்தார். இருவரும் ஒரே தினுசான இசைப் பயிற்சி உடையவர்கள். ஸ்வாராளி, ஜண்டை வரிசை, அலங்காரம் என்று தொடங்கி பால பாடம், முன்னேற்ற பாடம், விசேஷ பாடம் எல்லாம் இருவருக்கும் நடந்திருக்கின்றன. இருவரும் தத்தம் வாத்யங்களை உழைப்போடு பயின்றிருக்கிறார்கள். ஆனால் ஒருவரது வாத்யம் இசைக் கருவி போலவும், இன்னொருவரது வாத்யம் ஆயுதம் போலவும் ஒலிக்கிறது. ஒன்று இசையாகவும் இன்னொன்று இசை ஊடின ஓசையாகவும் கேட்கிறது, ஏன்?

லொக்கேஷன்

திரைப்படம் எடுப்பது தொடர்பான எத்தனையோ வேலைகளில் முக்கியமானதும், சற்று சிரமமானதும் என்றால், அது லொக்கேஷன் பார்ப்பதுதான். அவுட்டோர் எனப்படும் வெளிப்புறக் காட்சிகளுக்கான இடங்களைத் தேர்வு செய்வது என்பது ஒரு சுவாரஸ்ய அலைச்சல். ‘வாத்தியார்’ பாலுமகேந்திராவின் படங்களுக்காக லொக்கேஷன் பார்ப்பதில் தொடங்கிய பயணம், பிறகு நண்பர்களின் படங்களுக்காகத் தொடர்ந்தது. நண்பர்களுக்காக சுற்றியது போக, சென்ற மாதம் எனக்காக, எனது திரைப்படத்துக்கான வெளிப்புற இடங்களை தேர்வு செய்வதற்காக ‘லொக்கேஷன்’ பார்க்கச் சென்றிருந்தேன். மணப்பாடுக்குள் எங்கள் கார் நுழையும் போது, மின்சாரம் இல்லாமல் ஊரே இருளில் மூழ்கியிருந்தது. தெருக்களில் தத்தம் வீட்டு வாசல்களில் நாற்காலி போட்டு மணப்பாடுவாசிகள் உட்கார்ந்திருந்தனர். சட்டென்று வேறெந்த லோகத்துக்குள்ளோ பிரவேசிப்பது போல இருந்தது. பாலு ஒரு விளிம்புக்கு அழைத்துச் சென்றார். ‘அங்கெ பாருங்க. அந்த ஏரியாலதான் மணிஸார் செட் போட்டிருந்தாரு’. ஏற்கனவே இருந்த இருட்டுக்குள் மேலும் இருட்டாக இருந்தது. ‘அருமையா இருக்கு பாலு’ என்றேன். ‘இந்த வியூ பாருங்க. இங்கெதான் நான் ஷூட் பண்ணினேன்’ என்று வேறொரு கும்மிருட்டை காண்பித்தார். ‘அய்ய்யோ! இது அதவிட பிரமாதங்க’ என்றேன்.

சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 15

வாழை இலை, புன்னை இலை, புரசு இலை, குருக்கத்தி இலை, மாவிலை, பலா இலை, தென்னை இலை, பன்னீர் இலை ஆகியவற்றில் உணவு உண்ணலாம் என்கிறார் புலவர். புன்னை மரம் சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்தவன் நான். அதில் எங்கள் பக்கம் எவரும் உண்டதில்லை இன்றுவரை. மாவிலை, பலா இலை தொன்னை பிடித்துக் கஞ்சி குடித்ததுண்டு. குருக்கத்தி மரம் என்னால் இனங்காண முடியவில்லை. கேட்டதோடு சரி.

வார்த்தையும், செம்மையும்

படைப்பாளி! அப்பாடி எவ்வளவு பெரிய வார்த்தை. நாம் அதிக பட்சம் துணையிருக்கலாம், கவனத்தைக் குவிக்கலாம், ஒளி பாய்ச்சலாம் அவ்வளவுதான். ஒரு விவசாயி எழுதுகிறவர்களை விட சிறந்த படைப்பாளி. அவன் கூட படைப்பாளி இல்லை. ஒரு படைப்பை ஃபெசிலிடேட் செய்கிறவன். படைப்பு எழ, நிகழ உறுதுணையாய் உதவுகிறவன். படைப்பாளி என்ன, எழுத்தாளன் என்பதே பெரிய வார்த்தை. எழுத்தை உபயோகிப்பவர் அல்லது பயன்பாட்டாளர்தான் பலரும்.

பைரவன்

அவன் மனம் நாய்களைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தது. இந்தப் பயம் தனக்கு எப்படி வந்தது என்று யோசித்தான். அவனின் ஆழ்மனம் முதலில் அந்த இடது முழங்கால் நாய்க்கடி கதையை அவனிடமே சொன்னது. கொஞ்சம் வெறுப்பாய்த் தனக்குள் புன்னகைத்துவிட்டு உண்மையான காரணத்தைத் தன் நினைவுகளில் தேடினான். சரி வர ஒன்றுமே புலப்படவில்லை. அறியாத வயதில் வெகு சாதாரணமாய் என்றோ ஒரு நாள், “சரி நாளையிலிருந்து நாம் நாய்களுக்குப் பயப்படுவோம்” என்று முடிவெடுத்து அதன்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது!

யந்திர மொழிபின் மாந்திரிக பயன்பாடுகள்

மனிதனை எழுத்து தனிமைப்படுத்துகிறது என்று சொல்கிறார் டேவிட் அப்ராம் – வாய்மொழி சமூகங்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகின் அங்கங்களாகத் தம்மை உணர்கின்றன, அங்கு ஒவ்வொரு இலையும் இலைகளை ஊடுருவி விழுந்தசையும் ஒவ்வொரு ஒளிக் கீற்றும் பொருள் பொதிந்தவையாக விவரிக்கப்படுகின்றன. இந்த உலகம் ரகசியங்களற்ற உலகம் – இது கணத்துக்குக் கணம் தன்னைப் புதிதாய் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையை மனிதன் இவ்வகையில் நேரடியாக அறிவும் தருணங்கள் இலக்கியப் படைப்புகள் பலவற்றில் எழுச்சிமிகு மொழியில் விவரிக்கப்படுகின்றன. எழுத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட இத்தகைய அனுபவங்கள் நமக்கும் அன்னியமானவையல்ல.

ஒரு முடிவை மாற்ற எத்தனை பேர் தேவை?

பொதுவாகவே நம் அனைவருக்கும் மனச்சாய்வுகள் உண்டு என்பதையும் ஒரே பண்பாட்டைச் சேர்ந்த அறிவியலர்கள் தம் பண்பாட்டையொட்டிய மனச்சாய்வுகளைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் மனச்சாய்வுகளின் இயல்பை அறிந்தவர்களும்கூட அதற்கு பலியாகின்றனர் என்பதையும் இணையத்தில் அண்மையில் வாசிக்கக் கிடைத்த சில கட்டுரைகள் சுட்டுகின்றன. மொத்தத்தில், பல பண்பாடுகள் கொண்டதாக மானுட இனம் இருப்பதே அறிவியலையும் சிறப்பிக்கிறது.